உலகின் மிக உயர்ந்த கட்டடத்தை அமைக்கும் மற்றுமொரு அரபு நாடு!!

டுபாயில்..

உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான கட்டடம் ஒன்று சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும்போது அது டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான கட்டடமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சவூதி அரேபியாவின் மையத்தில் ஜெட்டாஹ் டவர் அல்லது கிங்டம் டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உயர்ந்த கட்டடம் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளது. இதன் உயரம் 1000 மீட்டர் (1 கி.மீ / சுமார் 3,281 அடி) இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஈர்ப்பை மையமாக வைத்து கட்டப்பட்டுவரும் ஜெட்டாஹ் டவர், உணவகம், தங்கும் விடுதிகள், ஆடம்பர குடியிருப்புகள், அலுவலகங்கள் என பலவற்றை உள்ளடக்கியதாக கட்டப்பட்டு வருகிறது. டுபாயில் கடந்த 2004ஆம் ஆண்டு புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் முடியும்போது உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்றது.

828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபா, உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமான கட்டடமாக மாறியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டுபாயின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடம், எண்ணெய் உற்பத்திக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையில் அதிக இலாபம் கொடுக்கும் இடமாக மாறியுள்ளது.

மகள், மருமகன், பேத்தியை நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்ட தந்தை!!

பீகாரில்..

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவ்டொலியா கிராமத்தில் வசித்து வருபவர் பப்பு சிங். இவருக்கு திராஜ் சிங் என்ற மகனும், சாந்தினி குமாரி என்ற மகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் வசித்து வந்த சந்தன்குமாரும் காதலித்து வந்தனர். காதலுக்கு பப்பு சிங் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களின் எதிர்ப்பையும் மீறி சந்தன்குமாரும் சாந்தினியும் திருமணம் செய்து கொண்டனர்.

ஊருக்கு வெளியே இருவரும் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்தனர். இவர்களுக்கு ரோஷ்னி குமாரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில், சந்தன்குமாரும், சாந்தினி குமாரியும் தங்கள் குழந்தையுடன் நேற்று மாலை 5 மணியளவில் நவ்டொலியா கிராமத்திற்கு வந்திருந்தனர். இதனை பார்த்த சாந்தினியின் தந்தை அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

ஆத்திரம் அடங்காத பப்புசிங் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் மகள், மருமகன், பேத்தி 3 பேர் மீது தாக்குதல் நடத்தியதால் சற்று நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். திராஜ் சிங், துப்பாக்கியால் சகோதரி சாந்தினி குமாரி, அவரின் கணவன் சந்தன்குமார், மகள் ரோஷ்னி குமாரி மீதும் சுடத் தொடங்கினார்.

இதனால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். பப்பு சிங் மற்றும் அவரது மகன் திராஜ் சிங்கும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார், விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவான 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

4 வயது மகனை கொன்ற பெண் அதிகாரி : சிக்கிய முக்கிய ஆதாரம்!!

கர்நாடகாவில்..

4 வயது மகனை கொலை செய்த பெண் சிஇஓ அதிகாரி சுசனா சேத் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து முக்கியமான ஆதாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுசனா சேத்(Suchana Seth, 39) என்ற பெண் சிஇஓ அதிகாரி சமீபத்தில் கோவாவில் கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை கோவாவில் உள்ள தனியார் ஹோட்டல் அறைக்கு தன் 4 வயது மகனுடன் சென்ற சுசனா சேத், இரு தினங்களுக்கு பிறகு ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு சென்றுள்ளார். ஆனால் அவருடன் அவரது 4 வயது மகன் செல்லவில்லை என்பதால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் சுசனா சேத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவர் வைத்து இருந்த சூட்கேஸில் 4 வயது மகன் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுசனா சேத் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் கொலை விசாரணை நடத்தி வரும் நிலையில், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தை தலையணையிலோ அல்லது துணியிலோ அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தையின் கழுத்தை நெரித்ததற்கான காயங்களோ அல்லது குழந்தை போராடியதற்கான அடையாளங்களோ உடலில் இல்லை என்றும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சுசனா தங்கிருந்த ஹோட்டல் அறையை சோதனையிட்ட பொலிஸார், அங்கு இருந்த 2 காலியான இருமல் பாட்டில்களை கண்டெடுத்துள்ளனர். எனவே இருமல் கொடுத்து குழந்தை மயங்கியதும் கழுத்தை நெரித்து சுசனா கொன்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சுசனா தங்கியிருந்த அறையில் இருந்து ஹோட்டல் ஊழியர்கள் ரத்தக்கறையுடன் டவல் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டை சேர்ந்த தன் கணவர் வெங்கட்ராமன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்த சுசனா சேத், கணவனை பழிவாங்கும் விதமாக தனது 4 வயது மகனை கொலை செய்து உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ரீல்ஸ் செய்யாதே, கண்டித்த கணவன்: ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி!!

பீகாரில்..

ரீல்ஸ் செய்ததை கண்டித்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வர் குமார். இவர் கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி ராணி குமாரி. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கொல்கத்தாவில் வேலை செய்து வந்த மகேஷ்வர் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாருக்கு வந்திருந்தார்.

இவரது மனைவி ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று ரீல்ஸ் செய்யும் போது கணவர் மகேஷ்வர்குமார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தொடர்ந்ததால், மனைவி ராணி குமாரி ஆத்திரத்தில் கணவர் மகேஷ்குமாரின் கழுத்தை நெரித்தார்.

இதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். பின்னர், மகேஷ்வர் குமாரின் சகோதரர் கொல்கத்தாவில் இருந்து இரவு போன் செய்கிறார். அப்போது, ​​வேறொருவர் போனில் பேசியதால் சந்தேகமடைந்த மகேஷ்வர்குமாரின் அண்ணன்,

தந்தையிடம் நேரில் சென்று பார்க்கச் சொன்னார். இதையடுத்து, மகேஷ்வர் குமாரின் தந்தையும் சென்று பார்த்தபோது, ​​சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த மகேஷ்வர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி ராணி குமாரி மற்றும் அவரது தாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு திரும்பிய மனைவி : கணவர் எடுத்த விபரீத முடிவு!!

கிண்ணியாவில்..

கிண்ணியா – ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் (10.01) காலை 6.30 மணியளவில் டைனமைன்ட் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். சம்பவத்தில் பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய உனைதீன் ரபாய்தீன் என்பவரே உயிர் இழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைட்டுக்குச் சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். மனைவி நாட்டுக்கு வந்து ஐந்து நாட்களேயான நிலையில் , இருவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், வாய் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவி தனது கணவனுடன் அன்புடன் வாழ விருப்பமில்லை என்ன கூறியுள்ளார். இதன் காரணமாக மனம் சோர்வடைந்த கணவன் நேற்று முன்தினம் (10) காலை 6.30க்கு தனது இடுப்பில் வெடிக்கும் டைனமைன்ட் வெடிப்பொருளைக் கட்டிக் கொண்டு வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மனைவி உடலை அடக்கம் செய்த போது மயங்கி விழுந்து கணவர் உயிரிழப்பு!!

கேரளவில்..

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மனைவி இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கணவரும் உயிரிழந்தார். காக்காம் மிஸ்ரியா மன்சிலில் ரஷீதா (60) மயங்கி விழுந்து இறந்த சில மணி நேரங்களில், அவரது கணவர் முகமது குஞ்சுவும் (65) மயங்கி விழுந்து இறந்தார். நேற்று இரவு ஒன்பது மணியளவில் ரஷீதா மயங்கி விழுந்தார்.

ரஷீதாவை வந்தனம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ரஷீதாவின் மரணத்திற்குப் பிறகு கணவர் முஹம்மது கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இன்று காலை ரஷீதாவின் உடல் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டபோது, ​​ முகமது மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து, முகமதுவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மனைவி உடலை அடக்கம் செய்யும் போது கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 வயது மகனை கொன்று சூட்கேஸில் வைத்து பயணித்த பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

இந்தியாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண் அதிகாரி ஒருவர், தனது 4 வயது மகனை சூட்கேசில் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசனா சேத் (39).

தன் கணவருடனான கருத்து வேறுபட்டதால் சுசனா சேத் அவரை பிரிந்து, தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை கோவாவிற்கு மகனுடன் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஹொட்டலில் அவர் தங்கினார். நேற்று காலை சுசனா ஹொட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால் அவருடன் மகன் வெளியேறவில்லை.

மேலும், அவர் தங்கியிருந்த அறையை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்தபோது ரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சுசனா வெளியேறும் போது அவரது மகன் உடன் இல்லாததை ஹொட்டல் நிர்வாகத்தினர் உறுதி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த ஹொட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் ஹொட்டலுக்கு விரைந்த பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணையை தொடங்கினர். சுசனா சேதத்தை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொலிஸார், மகன் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நண்பர் வீட்டில் விட்டு சென்றதாக கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய முகவரியில் சென்று விசாரித்தபோது அது போலி என தெரிய வந்தது. இதனால் சுசனா பயணித்த டாக்சி ஓட்டுநரை பொலிஸார் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது அவரது காரில் சிறுவன் இல்லை என தெரிய வந்ததால், ஜமங்கலா காவல் நிலையத்திற்கு காரை கொண்டுவருமாறு பொலிஸார் கூறியுள்ளனர். அதன்படி ஓட்டுநரும் காவல் நிலையம் வர, காரினை பொலிஸார் சோதனை செய்தபோது சூட்கேசில் சுசனா சேத்தின் மகன் பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது தான் சுசனா சேத் தன் மகனை கொன்று, சூட்கேசில் அடைத்து வைத்தது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், சுசனா சேத் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் இன்ஸ்டா மோகம் : ரீல்ஸ் போடுவதைக் கண்டித்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

பீகாரில்..

இன்ஸ்டா ரீல்ஸ் பதிவிடுவதைக் கண்டித்த கணவனை, இளம்பெண் ஒருவர் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கொலைசெய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலம், கோடாபந்த்பூர் பகுதி அருகில் இருக்கும் பெகுசராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி குமாரி. இவருக்குக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்வர் என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் பதிவேற்றியிருக்கிறார். அதை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத மகேஷ்வர், ஒருகட்டத்தில் தன் மனைவி அதிலேயே அதிக நேரம் செலவிடுவதைக் கண்டு கோபமடைந்திருக்கிறார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், ராணி குமாரி, தனது அம்மா வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

சில நாள்களுக்குப் பிறகு ராணி குமாரியைப் பார்க்க மகேஷ்வர் சென்றிருக்கிறார். ஆனால், அப்போதும் ராணி குமாரி ரீஸ்ல் செய்து பதிவேற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியிருக்கிறது. இந்த கோபத்தில், ராணி குமாரியும், அவரின் தாயாரும் சேர்ந்து மகேஷ்வரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார்கள்.

அதே தினம், யதார்த்தமாக மகேஷ்வரின் அண்ணன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது, வேறு ஒருவர் பேசியிருக்கிறார். இதனால், உடனே பெகுசராய் சென்ற மகேஷ்வரின் அண்ணனுக்கு அவரின் சடலத்தைக் காண்பித்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, இது தொடர்பாகக் காவல் நிலையத்துக்குத் தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, உடலைக் கைப்பற்றி, ராணி குமாரியையும், அவரின் தாயாரையும் கைதுசெய்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2024 பாபா வங்கா கணிப்பு தவறவில்லை : அடுத்தடுத்து இடம்பெற்ற சம்பவங்களால் அதிர்ச்சி!!

பாபா வங்கா..

2024 தொடர்பில் கண் தெரியாத தீர்க்கதரிசி பல்கேரிய பாபா வங்கா கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளமை உலக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 இலபல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது பல்கேரிய பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்.பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா.

இவர் 1996லேயே இறந்துவிட்டார். பிறகு ஏன் இவரின் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்று கேட்கிறார்களா? இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். இவருக்கு 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது.

அந்த சம்பவத்தின் பின்னரே அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி உள்ளார். கடவுள் தனக்கு கொடுத்த சக்தி இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை பாபா வங்கா எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார்.

அவரது கணிப்புக்கள் இதுவரை உலகின் பல முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக 9/11ல் அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்களை பாபா வங்கா கணித்து உள்ளாராம்.

இந்த நிலையில் 2024ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து அட்டாக் செய்யும்.

இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளாராம். அதோடு சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர், கொலை செய்யப்படுவார். அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியது என்று தெரிவித்துள்ளார் . அதாவது புடின் மரணம் பற்றி கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் பெயரிடப்படாத “பெரிய நாடு” உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும் . அதை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பா முழுவதும் வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நாடாகும் என்றுள்ளார். 2024 இல் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள உள்ளோம். இதற்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்க வேண்டும்.

கடன் அளவுகள் உயரும் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர். புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் இருக்கும்.. உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய போர் ஒன்று நடக்கும்.

அதுமட்டுமல்லாது இதே வருடம் நாம் ஏலியன்களை காண்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளன. ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் சுனாமி ஏற்பட்டது. ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வந்தது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் புகுந்தது.

சுனாமி எச்சரிக்கையை அடுத்து கடல் நீர் அலை அலையாக புகுந்தது. ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் இணையத்தை உலுக்கி உள்ளன.

10 அடி உயரமுள்ள வேற்றுகிரக ஏலியன் ஒன்று மியாமி ஷாப்பிங் மாலில் சுற்றித் திரிந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் , நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதேவேளை வேற்று கிரக வாசிகளின் வருகையும் , ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும் பாபா வாங்கா கணிப்பை உறுத்தியாக்கியுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் உலக் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

தேனி மாவட்டத்தில்..

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பம். இவரது கணவர் ரவிமுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு சந்தியா என்ற மகள் உள்ளார். கல்லூரியில் படித்து வந்தார். ஆனால், தேனியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் புஷ்பத்தின் வீடு சேதமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினர். இதையும் மீறி புஷ்பமும் அவரது மகள் சந்தியாவும் சேதமடைந்த வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது வீட்டின் சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தன. இதில் மாணவி சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாய் புஷ்பம் பத்திரமாக உயிர் பிழைத்தார். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சந்தியாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்து மனைவி, குழந்தைகள் கொலை!!

கிருஷ்ணகிரியில்..

குழந்தைகள் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தட்டக்கல் கிராமம் நாகரசம்பட்டி என்.நகரைச் சேர்ந்த கூடலரசு மகன் சிவலிங்கம் (32). இவருக்கும், தர்மபுரி லிட்டேராம்பட்டி பகுதியை சேர்ந்த ஜனனிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு திவான் ராஜ் என்ற மகனும் நிவந்திகா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் ஜனனிக்கும், காளரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஜனனி ஆவேசத்துடன் தனது தாய் வீட்டிற்கு சென்றார். அதன்பிறகு உறவினர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி ஜனனியை அழைத்து வந்து கடலரசு குடும்பம் நடத்தினார்.

இந்நிலையில், கடந்த மாதம் திருமணத்தையொட்டி, குடும்பத்துடன் பெரிய மலை தீர்த்தம் கோவிலுக்கு சென்றனர். அப்போது திடீரென கடலரசு மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து மனைவி ஜனனியின் வாயில் ஊற்றினார். தட்டிக் கூச்சலிட்டபடி ஓடினான். அருகிலிருந்த 2 குழந்தைகளின் வாயில் விஷத்தை ஊற்றிய அவரும் அதை குடித்து மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கூடலரசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில், அவர் குணமடைந்தார். இதற்கிடையே நாகரசம்பட்டி போலீசார் அவர் மீது கொலைவழக்கு பதிவு செய்த நிலையில், 32 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் கூடலரசுவை கைது செய்தனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

பட்டுக்கோட்டையில்..

பட்டுக்கோட்டை அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண், ஆணவக் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரின் மகன் நவீன் (19).

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் படிப்பை முடித்த இருவரும், திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளனர். இரு வாரங்களுக்கு முன்பு நண்பர்கள் முன்னிலையில் நவீனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வாட்ஸ்அப் குரூப்பில் பரவியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பல்லடம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஐஸ்வர்யாவின் உறவினர்கள் போலீஸ் தரப்பில் பேசி, ஐஸ்வர்யாவை மட்டும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவை அவரின் உறவினர்கள் அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்றும், வாட்ஸ்அப்பில் பரவியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மர்மான முறையில் உயிரிழந்த ஐஸ்வர்யாவின் உடலை, உறவினர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுக்காமல், எரித்துள்ளனர். பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஐஸ்வர்யா ஆணவக் கொலைசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் பூவாளூர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சிலரிடம் பேசினோம். “நவீனும், ஐஸ்வர்யாவும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக ஐஸ்வர்யா பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த சமயத்தில் நவீன் பெற்றோரிடம் `உன் மகன் என் மகளுடன் பழகக் கூடாது. மீறினால் என்ன நடக்கும் என்றே தெரியாது’ எனப் பிரச்னை செய்தனர். அதன் பிறகும் யாருக்கும் தெரியாமல் இருவரது காதல் தொடர்ந்தது. படிப்பு முடிந்த பிறகு, இருவரும் திருப்பூரில் வெவ்வேறு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.

நவீன், ஐஸ்வர்யாவின் பெயரை `ஐஸ்’ என ஆங்கிலத்தில் பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு ஐஸ்வராய் மேல் உயிரையே வைத்திருந்தான். இந்த நிலையில் இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது குறித்த தகவல் தெரிந்து, ஐஸ்வர்யாவின் உறவினர்கள் நவீன் அப்பாவிடம் `உன் மகனை நீ அழைத்துக் கொள், எங்கள் பிள்ளையை நாங்கள் அழைத்துச் செல்கிறோம்.

இதை வெளியே தெரியாமல் முடித்துக் கொள்வோம்’ என அவரையும் அழைத்துச் சென்று, இரண்டு பேரும் எங்கிருக்கிறார்கள் எனத் தேடியுள்ளனர். இதையடுத்து பல்லடம் காவல் நிலைய போலீஸார் நவீன், ஐஸ்வர்யா இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததுடன், ஐஸ்வர்யாவை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.

நவீனும் தனியாக ஊருக்கு வந்துவிட்டான். அடுத்த நாளே ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவரின் உடலை உறவினர்கள் எரித்துவிட்டனர். ஐஸ்வர்யாவின் உறவினர்கள் அவரை அடித்து சித்ரவதை செய்த வீடியோ ஒன்றும் வெளியானதாகத் தெரிகிறது. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதற்காக ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து ஆணவக் கொலைசெய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றனர். இது குறித்து நவீனிடம் பேசினோம். “ஐஸ்வர்யாவும் நானும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் காதலித்து வந்தோம். திருப்பூரில் வேலை செய்த இருவரும், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒரே அறையில் ஓன்றாக தங்கியிருந்தோம். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். ஐஸ்வர்யாவின் உறவினர்கள் எங்களை தேடி வந்த நிலையில், நாங்கள் வேறு இடத்துக்குச் சென்று விட்டோம். `நம்மைக் கொலைசெய்து விடுவார்கள்.

வா நாம் எங்காவது போய்விடலாம்’ என ஐஸ்வர்யா கூறினாள். அதற்குள் பல்லடம் காவல் நிலையத்திலிருந்து வந்த ஒரு போலீஸ்காரர், நாங்கள் இருக்கிற இடத்துக்கு வந்து, பென்ணை மட்டும் அழைத்தார். விட முடியாது நானும், கூட வருவேன் என்றேன். `உன்னை கொலைசெய்யக்கூட தயங்க மாட்டார்கள். அப்படி வெறியுடன் இருக்கிறார்கள்’ எனக் கூறிவிட்டு, பென்ணை அழைத்துச் சென்றார். நான் காவல் நிலைய வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். போலீஸிடம் பேசிய பிறகு ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றனர்.

நான் பைக்கிலேயே ஐஸ்வர்யா சென்ற காரைத் தொடர்ந்து வந்தேன். கார் ஐஸ்வர்யா ஊருக்குள் சென்ற பிறகுதான், நான் என் வீட்டுக்கு வந்தேன். மறுநாள் ஐஸ்வர்யாவைக் கொலைசெய்து விட்டதாகத் தகவல் வந்தது. உடனே பதறியடித்துக் கொண்டு ஓடினேன். என் அப்பாவும் நண்பர்களும் என்னைப் போகவிடாமல் தடுத்துவிட்டனர். போலீஸார் அழைத்தபோது, நான் போக மாட்டேன் எனச் சொன்னவளை, நான்தான் அனுப்பிவைத்தேன்.

அதன் பிறகு அவள் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் செய்துவிட்டனர்” என்றார்.இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், “ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

 

சபரிமலை யாத்திரைக்கு சென்ற யாழ் பக்தருக்கு விமானத்தில் நேர்ந்த கதி!!

யாழில்..

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையைச் சேர்ந்த ஒருவர் கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளார்.சபரிமலை யாத்திரைக்காக விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் 49 வயதுடைய மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விமானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும் அவரது உடல்நிலை மோசமானதால், இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் சென்னையில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி குறித்த நபரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல வந்த மோகனதாஸ் இறந்ததால், அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கொழும்பு பெண் கொலை : சந்தேக நபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

கொழும்பில்..

கொழும்பு – கஹதுடுவைக்கு அருகில் இளம் குடும்ப பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பெண்ணின் கொலைக்கு தகாத உறவே காரணம் என சந்தேக நபர வாக்குமூலம் அளைத்துள்ளதாக பொலிஸார் கூறொயுள்ளனர்.

பெண் கொலை குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடுகளில் இயங்கி வரும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரரின் சகோதரர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான எல்லாவல லியனகே டன்ஸ்டன் பிரசாத் பெரேரா, பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் ஆகியோர், செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, ​​ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

41 வயதான சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர் ஒருவர், செவ்வாய்க்கிழமை மாலை கஹதுடுவ இடைமாற்றுக்கு அருகில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடபில் கைதான சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி நான்கு பிள்ளைகளையும் அவரையும் வேறொரு நபருடன் விட்டுச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும், கூறப்படுகிறது.விசாரணைகளின்படி, அவர் கொலை செய்யப்பட்ட நாள் காலை முதல் அவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார். சந்தேக நபர் கொழும்பில் விசா ஆலோசனை அலுவலகம் ஒன்றையும் கட்டிட நிர்மாண நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று செவ்வாய்கிழமை மதியம் அவளை அழைத்துச் செல்லச் சென்ற போதும், அவர் தன்னுடன் வர மறுத்து முச்சக்கர வண்டியில் செல்ல முற்பட்டதால் ஆத்திரம் காரணமாக தனது காரில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து கழுத்தை அறுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் அவளைக் கொல்லும் நோக்கத்தில் தான் தாக்கவில்லை என்றும், பின்னர் அவர் இறந்துவிட்டதாகத் தெரிய வந்ததாகவும், பின்னர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதேவேளை கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு சந்தேகநபர் பல தடவைகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சந்தேகநபருக்கும் குறித்த பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு குறித்த பெண் தனது கணவருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை, கொலைச் சம்பவத்திற்காக சந்தேகநபர் வந்த காரை, சந்தேகநபரின் பெக்ககம வீட்டுக்கு முன்பாக நேற்று பிற்பகல் கஹதுடுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் கைதான சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வேலணையில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் நெதர்லாந்து மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் ஆய்வுத் தொடர்ச்சி 2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கருவிகள் மற்றும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஏராளமான தொல்பொருட்கள் காணப்படுகின்றன.இத்தகைய எச்சங்கள் இலங்கையில் தெற்கு கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மிக அண்மித்த சான்று மாந்தையில் கி.மு.1600க்கு முற்பட்டவை கிடைக்கப்பெற்றிருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த இவ் அகழ்வாராய்ச்சியில் இருந்து கிடைத்த தொல்பொருள் சான்றுகளின் காலப் பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தை இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்நோக்கி நகர்த்தியுள்ளது.

இந்த ஆராய்ச்சியை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளர் திலங்க சிறிவர்தன மற்றும் ‘Groningen Institute of Archaeology of the University of Groningen in the Netherlands’ நிறுவனத்துடன் இணைந்து இந்திகா ஜெயசேகர, ஜனினா நோனிஸ் அத்துடன் தொல்லியல் மற்றும் பாரம்பரிய கற்கைகள் நிறுவகத்தின் நதீரா திஸாநாயக்க மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் தொல்லியல் துறை மாணவர்களான டக்சினி, கனுஸ்டன், சுசாந்தி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாண பாடசாலை ஆசிரியை : அதிர்ச்சியில் மகன்!!

கொழும்பில்..

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெள்ளவத்தையில் பதிவாகியுள்ளது.இச்சம்பவம் நேற்று முன்தினம் (08-01-2024) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் வெள்ளவத்தை, தயா வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய பிரேமிலா ஞானகணேசன் என்ற ஆசிரியையே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து கல்லூரியின் ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஆசிரியை திருமணமான பெண் என்பதுடன் வர்த்தகரான அவரது கணவர் கடந்த 7ஆம் திகதி தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.சம்பவத்தன்று இவரது மகன் வீட்டில் க.பொத. உயர்தரப் பரீட்சைக்கு வீட்டில் படித்துக் கொண்டிருந்தாத தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் ஆசிரியை வீட்டிலிருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு 8ஆம் மாடிக்கு சென்றுள்ளதாகவும் அங்கிருந்து ஏறி கீழே குதித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவன் தனது தாயின் மரணத்தினால் மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்த போதிலும் நேற்று நடைபெற்ற பரீட்சையில் பங்கேற்கச் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரை மாய்த்துக் கொண்ட ஆசிரியை மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆசிரியை உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஜனக கொடிகார விசாரணைகளை மேற்கொண்டார்.