சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி.. பள்ளியில் நேர்ந்த சோகம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று. இந்த பள்ளியில் நவம்பர் 16ம் தேதி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

உணவு தயாரானதும் சாம்பார் பாத்திரத்தை பணியாளர்கள், மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு எடுத்து வந்து வைத்தனர். அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவிகளில், 2ம் வகுப்பு சிறுமி எதிர்பாராதவிதமாக கொதிக்கும் சாம்பாரில் விழுந்துவிட்டார்.

இவருடைய பெயர் மகந்தம்மா சிவப்பா . விழுந்ததும் கதறித்துடித்த சிறுமிக்கு 50 சதவீதம் அளவிற்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக மகந்தம்மாவை பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

முதலுதவி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் விடுமுறையில் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லாலாபி நடாஃப் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜூ ஜவான் இருவரையும் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.

இவர்களுடன் பள்ளியின் தலைமை சமையலர் கஸ்தூர்பாய் தலக்கேறி என்பவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் சிறுமி சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மூன்றே நாளில் காதலனுடன் திருமணம்… மணமகள் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் அசோக்குமார். இதே ஊரில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் ஒன்றாக படித்ததுடன் புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.

அத்துடன் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஐஸ்வர்யா பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே போல, சாதி வேறுபாடு காரணமாக அசோக்குமார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ முடியாது என ஐஸ்வர்யாவிடம் அவரது பெற்றோர் கூறிவந்தனர்.

ஆனால், அசோக்குமாரை தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதம் பிடித்து பெற்றோரிடம் சம்மதம் வாங்கியுள்ளார். இந்நிலையில், அசோக்குமாருக்கும், ஐஸ்வர்யாவுக்கும நவம்பர் 23ம் தேதி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் ஐஸ்வர்யா கலந்து கொண்டார்.

இந்நிலையில் அசோக்குமார் வீட்டில் ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை சுப்பிரமணிக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யாவின் தந்தை கதறித் துடித்தார். சாதிப் பிரச்சினைக் காரணமாக தனது மகள் கொல்லப்பட்டதாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பெற்றோர் உட்பட அவரது குடும்பத்தினர் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மணமகன் குடும்பத்தினர் நிபந்தனை விதித்திருந்தனர். ஐஸ்வர்யாவின் ஆசை நிராசையாகக் கூடாது என்பதற்காக அதை ஏற்ற அவரது பெற்றோர், மணமகன் வீட்டிற்கு அவரது மகளை மட்டும் அனுப்பிவிட்டனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் திட்டமிட்டு ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்று முடிந்து 2 மணி நேரம் கழித்தே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஐஸ்வர்யாவின் தந்தை கூறியுள்ளர்.

எனது மகள் தற்கொலை செய்யும் அளவிற்கு பலஹீனமானவள் கிடையாது என அவரது தந்தை கதறி துடித்தார். ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதையடுத்து அசோக்குமாரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற 3 நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் ஒட்டிய பெண்… காதலனின் தந்தையிடம் பேசிய பேரம்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இளைஞனின் முகநூல் நட்பின் விளைவு, தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக போஸ்டர் ஒட்டிய பொள்ளாச்சி பெண் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருவையா. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ ஏற்றுமதி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரோஷன் பட்டதாரி இளைஞர் ஆவர்.

ரோஷனுக்கு பொள்ளாச்சி அருகே வடக்கு பாளையத்தை சேர்ந்த உஷா என்ற பெண் முகநூல் மூலம் அறிமுகமானார். இந்த நட்பு பல மாதங்கள் சாட்டிங் மூலம் தொடர்ந்து உள்ளது.

தனது நட்பை உஷா காதலாக மாற்றுவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளார். அவரின் போக்கு பிடிக்காமல் ரோஷன் தனது முகநூல் பக்கத்தை முடக்கி விட்டு போன் நம்பரையும் பிளாக் செய்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து. நட்பை தொடர முடியாத உஷா. பல்வேறு செல்போன் நம்பர்களில் இருந்து பேசி ரோசனை தொடர்ந்து தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

கடைசியில் பொள்ளாச்சியில் இருந்து தனது உறவினர் கிருஷ்ணவேணி என்பவர் உடன் கொங்கப்பட்டிக்கு வந்துள்ளார். அந்த கிராமத்தில் இருந்த சிவஞானம் என்பவரிடம் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக சொல்லி பிரச்சினையை பேசி தீர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

அவர் உஷாவிற்கு உதவ முன்வந்த நிலையில். திடீரென கொங்கபட்டி பகுதியில் நிலக்கோட்டையில் பூக்கடை வைத்திருக்கும் கொங்கு பட்டியைச் சேர்ந்த குருவையா மகன் ரோஷன் என்பவர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என்ற வாசகங்களுடன் ரோஷனும், உஷாவும் இணைந்து இருக்கும் போஸ்டர் அப்பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரோஷன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் உஷா தன் நண்பர்களுடன் இணைந்து குருவையாவை வழிமறித்து ரோஷன் விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க, ரூபாய் 5 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தன்னை பணம் கேட்டு மிரட்டியும், தன் மகன் மீது அவதூறு போஸ்டர் ஒட்டியதாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் குருவையா புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நிலக்கோட்டை போலீசார் முகநூல் பெண் பொள்ளாச்சி உஷா மற்றும் கிருஷ்ணவேணி, சிவஞானம் உட்பட மூன்று பேரை கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் உயிரிழந்த காதலன்… காதலி எடுத்த விபரீத முடிவு!!

தர்மபுரியில்..

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூர் கிராமத்தில் வசித்து வருபவர் அகில் பிரியா. இவர் கோவை தனியார் மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அவரது உறவினரான கட்டரசம்பட்டியில் வசித்து வரும் ஸ்டாலினும் காதலித்து வந்தனர்.

தீபாவளிக்கு அகில் பிரியா, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அகில் பிரியாபின்னர் பண்டிகை முடிந்ததும் கோவை செல்வதற்காக நவம்பர் 14ம் தேதி சென்றார். தன் காதலனைச் சந்திப்பதற்காக போன் செய்து சேலம் வரச் சொன்னார். அவர் தனது இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு வந்தார்.

அந்த சமயத்தில் சேலத்தில் ஒரு விபத்தில் சிக்கி ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த அகில்பிரியா சோகத்துடன் வீட்டில் இருந்து வந்தார்.

ஆம்புலன்ஸ்தன்னைப் பார்க்க வரும் போது காதலன் விபத்தில் இறந்த சோகத்தை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

அவரது உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகில் பிரியா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சொகுசுக் கார்களை தோற்கடித்த இந்திய எருமை மாடு.. விலை மதிப்பு பல லட்சங்களில்!!

ஹரியானாவில்..

இந்திய மாநிலம், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் எருமைமாட்டின் விலை சொகுசு காரை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், பிவானியில் உள்ள ஜூய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சஞ்சய். இவருக்கு 3 வயதான எருமை மாடு ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவர், தன்னுடைய எருமை மாட்டை மிகுந்த கவனமாக வளர்த்து வருகிறார்.

மேலும், இவர் இந்த எருமை மாட்டிற்கு தர்மா என பெயர் வைத்துள்ளார். தற்போது, ஒரு நாளைக்கு 15 லிட்டர் பால் கொடுக்கிறது. ஹரியானாவில் உள்ள மக்கள் சொகுசு கார்களை வைத்திருப்பதை மிக பெருமையாக எண்ணுவார்கள். ஆனால், சஞ்சயின் எருமைமாட்டின் விலையானது சொகுசு கார்களை தோற்கடித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்த எருமை மாட்டின் விலை ரூ.46 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டதாகவும், ஆனால், இதனை குறைந்தபட்சம் ரூ.61 லட்சத்திற்கு விற்பதாகவும் சஞ்சய் கூறியுள்ளார்.

மேலும், தர்மாவிற்கு ஒவ்வொரு நாளும் பசுந்தீவனம், தானியங்கள் மற்றும் 40 கிலோ கேரட் உணவாக அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பல அழகு பட்டங்களையும் தர்மா பெற்றுள்ளது. இவரை தவிர, டாக்டர் ஒருவர் அழகைப் பொறுத்தவரை எருமைகளின் ராணி தர்மா என்று கூறியுள்ளார்.

பதுளையில் மண்சரிவில் அகப்பட்ட இரண்டு யுவதிகளுக்கு நேர்ந்த சோகம்!!

பதுளையில்..

பதுளையில் மண்மேடு சரிந்தமையினால் இரண்டு யுவதிகள் உயிரிழந்துள்ளனர். உடுவர, ஹாலிஎல வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேற்று இடம்பெற்றது.

பெய்து வரும் கடுமையான மழை காரணமாக வீட்டின் மீது பின்புறமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

ஒருவர் கெந்தகொல்லபதன உடுவரை ஹாலிஎல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண், மற்றவர் நாபொலவத்த மத்திய வீடு ஹாலிஎல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மண் அகழ்வில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் கடையிலிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மண்மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.அருகில் இருந்த 4 கடைகள் மண்மேட்டின் கீழ் புதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாடொன்றில் இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

இத்தாலியில்..

இத்தாலியில் தொடருந்து மோதி சம்பவ இடத்திலேயே இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இத்தாலியின் Voghera தொடருந்து நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்த போது இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ – பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ(46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தொடருந்து நடைமேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது,

அதிவேகமாக பயணித்த தொடருந்தின் வேகத்தினால் ஏற்பட்ட காற்றினால் தள்ளுப்பட்டதாக இத்தாலியில் வசிக்கும் எமில் ரொஹான் என்பவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 13 வயது பாடசாலை மாணவியை தகாத உறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை தகாத உறவிற்கு உட்படுத்திய இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடசாலை சென்ற குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த18ஆம் திகதி சிறுமியின் தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயாரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று முன்தினம் முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் சிறுமியையும் இளைஞனையும் கைது செய்துள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி தகாத உறவிற்கு உட்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை இளைஞனை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சுவிஸ்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான இலங்கைப் பெண்!!

சுவிசர்லாந்தில்..

சுவிசர்லாந்து நாடாளுமன்றத்திற்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன் இமாம் என்பவரை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்திருந்தார்.

பிரான்சிஸ்காவின் இந்த தேர்தல் வெற்றியானது இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.பிரான்ஸிஸ்காவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வந்த நிலையிலேயே தேசிய நாடாளுமன்றின் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

இலங்கையில் பிறந்த ரூமி தனது ஆறாவது வயதில் 1998ஆம் ஆண்டு பெற்றோருடன் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கான்டன் தேர்தலில் வெற்றி பெற்ற போது இலங்கை மக்கள் தம்மை கொண்டாடியதாகவும் தேசிய நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவானமை பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேண்தகு சுகாதார நலன் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தாம் செயற்பட போவதாக அவர் கூறியுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளில் ரூமி பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த பெண்ணிற்கு இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் அவரது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் இளம் தம்பதியினரின் தற்கொலைக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!!

அம்பாறையில்..

அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை, சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (21-11-2023) இடம்பெற்றுள்ளது. தற்போது, இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.கணவன் – மனைவி இருவருக்கும் கடன் தொல்லை அதிகம் இருந்தமையினால்,

அவற்றை திருப்பி தருமாறு கடன் கொடுத்தவர்கள் கேட்ட நிலையில் திருப்பி செலுத்த முடியாததால் இருவரும் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து : கிளிநொச்சியைச் சேர்ந்தவர் பலி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) காலை இடம் பெற்ற விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா சிவநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று (23) காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற பணியாளர்களை ஏற்றுகின்ற பேருந்து ஒன்று ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றுவதற்காக பின்னால் MAG மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி வரும் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

மாங்குளம் வெள்ளாங்குளம் பிரதான வீதியில் இருந்து அணிஞ்சியன்குளம் 2 ம் பகுதி ஸ்ரீ ஷீரடிசாய்பாபா இல்ல வீதிக்கு திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பேருந்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. பேருந்து எந்த சமிக்ஞைகளுமின்றி திடீரென திரும்பியதாகவும் இதனால் பேருந்துடன் மோதி தான் தூக்கி வீசப்பட்டதாகவும் மற்றயவர் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு இறந்ததாகவும் காயமடைந்தவர் தெரிவித்தார்

சம்பவத்தில் காயமடைந்த நபர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகருக்கு நேர்ந்த சோகம்!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கம்மன, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சானக திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாளாந்தம் மற்றும் மாதாந்தம் கடன் கொடுக்கும் தொழில் மற்றும் பல தொழில்களை நடத்தி வந்த இவரின் மனைவி சுமார் 07 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார். எனவே, தொழிலதிபர் தினமும் காலையில் பாடசாலை பேருந்தில் பிள்ளைகளை அழைத்துச் சென்று பாடசாலை முடிந்ததும் பிள்ளைகளை அழைத்து வர ஏற்பாடு செய்வதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதற்கமைய, நேற்று பிள்ளைகளை ஏற்றிச் செல்ல பேருந்து அருகில் வராததால் பிள்ளைககள் நடந்தே வீட்டிற்கு வந்தனர், வீடு திறந்திருந்ததால் தந்தையை தேடிய போது மூத்த பிள்ளை தந்தை தூக்கில் தொங்கியதை அவதானித்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். மண்ணிலிருந்து சாதனை : நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி!!

இலங்கையில்..

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தேர்வாகியுள்ளார். வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

யா/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். மாதுரி நிரோசன் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அகில இலங்கை ரீதியில் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில், மாதுரி நிரோசனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

பிரபல பாடசாலையில் மாணவர்களை லஞ்ச் ஷீட்​டை சாப்பிட வைத்த அதிபர் : நேர்ந்த சோகம்!!

நாவலப்பிட்டியில்..

மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

பாதிப்பு உள்ளான மாணவர்கள் இருவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் கல்லூரியில் 11-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாளில் சுற்றிக்கொண்டு வந்துள்ளனர். அந்த வகுப்பில் 33 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதில் 07 மாணவர்கள் பகல் உணவுகளை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாள் பக்கங்களால் சுற்றிக் கொண்டு வந்துள்ளனர்.மதியம் சாப்பிட்டுவிட்டு லஞ்ச் ஷீட் மற்றும் செய்தித்தாள் பக்கங்களை ஏழு மாணவர்களும் தங்களுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ​​அவ்விடத்திற்கு வந்த அதிபர் அவற்றை வெளியே எடுத்து, சாப்பிடுமாறு கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் லஞ்ச் ஷீட் மற்றும் பத்திரிக்கைகளை தின்றுவிட்டனர். லஞ்ச் ஷீட்டில் மற்றும் செய்தித்தாள்களை சாப்பிட்ட ஏழு மாணவர்களில் ஒருவர் 21 ஆம் திகதியும் மற்றுமொரு மாணவன் 22 ஆம் திகதியும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் தந்தை, நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிங்கள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய தமிழ்ப் பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

இலங்கையில்..

இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண் தொடர்பில் தென்னிலங்கையின் சிங்கள ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக அதனை வெளியிட்டுள்ளன.வயதான காலத்தில் அபார திறமையை வெளிப்படுத்திய பெண்ணுக்கு சிங்கள மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிலிப்பின்ஸில் இளையோர் மற்றும் முதியோருக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 71 பெண் இரண்டு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த 71 வயதான திருமதி அகிலத்திருநாயகியை சிங்கள மக்கள் புகழ்ந்துள்ளனர்.அத்துடன் அரசியல்வாதிகள் மீது கடும் கோபத்தை வெளியிடும் வகையில் சிங்கள மக்கள் பதிவிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இவரை போன்று திறமையான இளைஞர், யுவதிகள் பலர் உள்ளனர். அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும் என பலரும் பதிவிட்டுள்ளனர்.இரண்டு செருப்பு கூட இல்லாமல் ஓடும் இவரை யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர் செருப்பு இல்லாமல் ஓடி பெற்ற தங்கம் மட்டும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரியும்.

விளையாட்டுத்துறை அமைச்சர் இருக்கிறார். அனுசரனையாளர்கள் உள்ளனர். ஆனால் வெற்றி பெற்றவர் நாடு திரும்பும் போது செல்பி எடுப்பதற்காக மட்டுமே அவர்கள் வருவார்கள்.குடும்பத்துடன் சவாரி செல்லும் அரசியல்வாதிகள் உள்ள நாட்டில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என ஒருவர் கூறியுள்ளார்.

இந்த பெண் மதிப்புமிக்க பொக்கிஷம். அவர் பதக்கம் வெல்லும் போதுதான் ஒவ்வொருவரும் அவரை வைத்து விளம்பரம் தேடுவார்கள். இந்த நிலைமை மிகவும் பரிதாபகரமானது என மேலும் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த வயதிலும் இலங்கைக்கு பெருமை சேர்ந்த அவருக்கு வாழ்த்துக்கள் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தங்க பதக்கங்களை வென்ற திருமதி அகிலத்திருநாயகிக்கு வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியால் அதிர்ச்சியில் அதிகாரிகள்!!

பொதி..

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பபட்ட ஆறு கோடியே அறுபத்து ஒன்பது இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பொறுமதியான போதைபொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பறப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து விமான அஞ்சல் பொதியாக கம்பஹா பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றுக்கு இந்தப் பொதி முகவரியிடப்பட்டிருந்தது.

பொதியில் இருந்து கொக்கேயின் மற்றும் மரிஜுவானா போதைப்பொருள் என்பன நேற்று செவ்வாய்க்கிழமை (21) கைப்பற்றப்பட்டுள்ளன. பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது 5 கிலோ 161 கிராம் மரிஜுவானா மற்றும் 511 கிராம் கொக்கேயின் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. உணவு பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் இவை கண்டுபிடிக்கப்பட்டன.

பொதி அனுபப்பட்ட முகவரியைச் சேர்ந்த பெண்ணின் அனுமதியுடன் பொதியை எடுத்துச் செல்ல வந்த கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரும் வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களைக் கஞ்சியப்படுத்தும் களஞ்சிய ஒன்றில் பணிபுரியும் அதிகாரி ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.