மிக இளவயது நீதிபதியாக தெரிவான தமிழர் : பலரும் வாழ்த்து!!

வடமாகாணத்தில்..

வடமாகாணம் மன்னார் மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் நீதிபதியாக மன்னாரை சேர்ந்த அர்ஜுன் வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வில்வரட்ணம் அரியரட்ணம் – அர்ஜுன் எனும் தமிழரே இவ்வாறு பதவியேற்கவுள்ளார்.

புனித சவேரியார் பாடசாலையின் மாணவரான இவர் 34 வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். மன்னார் வரலாற்றில் ஓர் இளம் நீதிபதியாக அர்ஜுன் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். அதேவேளை தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்நிலையில் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அர்ஜுன் அகில இலங்கை ரீதியில் இவர் 14 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் மன்னாரில் தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

இலங்கை கல்வி முறையில் மாற்றம் : 17 வயதில் உயர்தரப் பரீட்சை : கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

இலங்கையில்..

10 ஆம் தரத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒரு மாணவர் 17 வயதில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 4 வயதைப் பூர்த்தி செய்த ஒரு குழந்தை நிச்சயமாக முன்பள்ளிக் கல்வியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சவுதியில் பணிக்காக சென்ற இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

சவுதியில்..

சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற வீட்டுப் பணிப்பெண் ஒருவர் மிக மோசமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். மத்துகம பிரதேசத்தை சேர்ந்த ராமச்சந்திரன் தர்ஷனி என்ற 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுள்ளார்.

இன்று அதிகாலை 04.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.“கடந்த 9ஆம் மாதம் 17ஆம் திகதி அரேபியாவில் உள்ள மதீனாவில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றேன்.

ஏற்கனவே அங்கு பணியாற்றிய பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரது பைகள் அந்த வீட்டில் இருந்ததனை கண்டேன். அந்த வீட்டின் உரிமையாளரான பெண் எப்போதும் என்னை அடிப்பது, திட்டுவது, தீயில் சுடுவது போன்று சித்திரவதைகளை செய்தார்.ஒரு முறை கீழே விழுந்து விட்டேன். அதனால் என்னால் வேலை செய்ய முடியவில்லை என கூறினேன்.

என்னை சலவை இயந்திர அறைக்கு இழுத்துச் சென்று அடித்து, தரையில் வீசினார். இரண்டு ஆணிகள் மற்றும் இரும்பு உருண்டையைக் கொடுத்து குடிக்குமாறு கூறினார்கள். குடிக்கவில்லை என்றால் என் தங்க நகைகளை திருடியதாக கூறி பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவதாக மிரட்டினார்கள்.

நான் குடித்துவிட்டேன் அப்போது என் தொண்டையில் ஒரு ஆணி சிக்கிக் கொண்டது என்னால் சுவாசிக்க முடியவில்லை. இது குறித்து இலங்கையில் உள்ள முகவர் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினேன். ​​அங்கிருந்த பெண் என்னை திட்டிவிட்டு, அந்த வீட்டிலேயே வேலை செய்யுமாறு கூறினார்” என நாடு திரும்பிய பெண் குறிப்பிட்டுள்ளார்.

தர்ஷனியை அழைத்துச் செல்வதற்காக அவரது கணவர் மாரிமுத்து நிலந்த குமார கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் தேங்காய் உடைக்கும் தொழில் செய்து வருகிறார்.“எங்கள் வீட்டிற்கு அருகில் சவூதி அரேபியா தூதரகத்தில் பணிபுரியும் ஒருவர் இருக்கிறார். நான் அவரிடம் சென்று இதைப் பற்றி சொன்னேன். அவர் தர்ஷனியை விரைவாக அழைத்து வர உதவினார்.” என கணவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலையில் நேர்ந்த துயரம் : புதைந்து போன பகுதி : ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

பேராதனையில்..

பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் கடையிலிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21.11.2023) இரவு பெய்த அடை மழை காரணமாக கொழும்பு செல்லும் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மண்மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

அருகில் இருந்த 4 கடைகள் மண்மேட்டின் கீழ் புதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த இடத்திற்கு அருகில் உள்ள அறையில் தங்கியிருந்த பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன நபரை கண்டுபிடிக்க மின்சார சபை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, இன்று (22.11.2023) அதிகாலை காணாமல் போனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. எப்படியிருப்பினும் இந்த மண் மேடு சரிந்ததால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கணவன் – மனைவியின் மோசமான செயல்!!

மில்லனியவில்..

ஹொரண – மில்லனிய பிரதேசத்தில் இளம் விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு அவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த தங்க நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்ற கணவன் – மனைவி தம்பதிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை விற்பனை செய்து அந்த பணத்தில் சுற்றுலா பயணம் சென்றதும் தெரியவந்துள்ளது. இளம் விற்பனை ஊக்குவிப்பு உத்தியோகத்தர் ஒருவரை வெறிச்சோடிய வீடொன்றுக்கு இந்த தம்பதி அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை தாக்கி அவரிடம் இருந்த தங்கப் பொருட்களையும் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாலி கட்டிய கையோடு மாட்டுவண்டியில் ஊர்வலம் சென்ற புதுமணத் தம்பதி!!

கோவையில்..

கோவை அருகே மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதியின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை அடுத்த ஈச்சனாரி பகுதியில் கோயில்களில், நேற்று (நவ.19) முகூர்த்த தினத்தை முன்னிட்டு பல திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த பவதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.பின்னர் திருமணம் முடித்த புதுமண தம்பதிகள், மாட்டு வண்டியில் அமர்ந்தபடி செட்டிபாளையத்தில் உள்ள மணமகன் ஆனந்த் வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது, கல்யாண கோலத்தில் மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியினரை, சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனை வீடியோவாக எடுத்தும் இணையதளத்தில் வெளியிட்டனர். இந்நிலையில், புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் செல்லும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெற்றோர்களின் கவலையீனத்தால் ஒரே நாளில் ஒரே விதத்தில் அடுத்தடுத்து 2 சிறுவர்கள் மரணம்!!

வேலூரில்..

வேலூர் மாவட்டம், ராஜாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர், பாட்டி வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சரளாவுக்கு சொந்தமான நிலத்தில் முருகேசன் நிலத்தை உழுது கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் கிஷோர் தானும் டிராக்டரில் அமர வேண்டும் என அடம்பிடித்துள்ளான். இதனால் ஓட்டுனர், கிஷோரையும் டிராக்டரில் அமர வைத்துக் கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்தார். ஒரு இடத்தில் முருகேசன் டிராக்டரை இயக்கும் போது நிலைதடுமாறி சிறுவன் கிஷோர் கீழே விழுந்தான்.

இதனை கவனிக்காத டிரைவர் எப்போதும் போல டிராக்டரை வைத்து நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது நிலத்தை உழுவதற்கான ரோட்டாவேட்டரில் சிக்கிய கிஷோரின் உடல் பாகங்கள் சிதறியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான்.

இதனை அறிந்ததும் ஓட்டுனர் முருகேசன் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கிஷோரின் சிதறிய உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதே போல் மற்றொரு சம்பவம் திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் . இவரது மகன் 36 வயது சதீஷ்குமார்.

வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகன் மாதவ் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

சதீஷ்குமாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று மாலை சதீஷ்குமார் தனது விவசாய நிலத்தை உழுது சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது மகன் மாதவ், தந்தைக்கு உதவியாக நிலத்திற்கு சென்றார்.

சதீஷ்குமார் நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்த போது, அதன் மீது அமர்ந்திருந்த சிறுவன் மாதவ் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், டிராக்டர் பின்புறத்தில் உள்ள ரோலர் இயந்திரத்தில் சிக்கிய சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனை கண்ட சதீஷ்குமார் கதறி துடித்த காட்சி காண்பவர்களை கலங்க செய்தது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாதவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மகளின் திருமணத்திற்கு ஆசையாக சேர்த்த 2 லட்சம் : கரையான்கள் அரித்ததால் தவிக்கும் விவசாயி!!

ஆந்திராவில்..

இந்திய மாநிலம், ஆந்திராவில் மகளின் திருமணத்திற்காக இரும்பு பெட்டியில் சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை கரையான்கள் அரித்ததால் விவசாயி வேதனை அடைந்துள்ளார்.

ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஆதி மூலம் லக்ஷ்மணா. இவர் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்துவதற்காக சேர்த்த பணத்தை இரும்பு பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், திருமணத்திற்காக எவ்வளவு பணம் சேர்த்து வைத்துள்ளோம் என்பதை பார்ப்பதற்காக இரும்பு பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது தான் விவசாயிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அதாவது, பணம் சேர்த்து வைத்திருந்த பெட்டியில் கரையான்கள் தென்பட்டன. அவர், அந்த பெட்டியை தலைகீழாக கவிழ்த்து பார்த்த போது, அவர் சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்ச ரூபாய் மொத்த பணமும் கரையான்கள் கடித்து துண்டு துண்டாக்கின.

அதை பார்த்தவுடன் என்ன செய்வதென்று தெரியாத விவசாயி, நான் எனது அறியாமையின் காரணமாக இப்படி செய்து நஷ்டம் அடைந்து விட்டேன். என் மகளின் திருமணத்திற்கு அரசு தான் உதவி செய்ய வேண்டும் என ஆதி மூலம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

பேசிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த மருத்துவர்!!

உத்தரப்பிரதேசத்தில்..

சமீபகாலமாக இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடிக் கொண்டிருந்த போது மரணம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மரணம், மணமேடையில் மயங்கி விழுந்து மரணம், பள்ளியில் விளையாடிய போது மரணம், கல்லூரியில் மாணவன் பேசிய போது மரணம் என அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு இத்தகைய திடீர் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், வேலைப்பளு என என்ன வகையான காரணம் கூறினாலும் இத்தகைய மரணங்களை ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மருத்துவர், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் ஒருவர் நண்பர்களுடன் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வாயுப்பிரச்சனையாக இருக்கலாம் என நினைத்து மருத்துவர் அபிஷேக் அசிடிடிட்டி மருந்து சாப்பிட்டுள்ளார்.

மருந்து சாப்பிட்ட பிறகும் வலி குறையாததால் நண்பரின் பைக்கில் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபிஷேக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாரடைப்பால் 28 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!!

வெளியான 2023 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மக்கள் வங்கி கிளை முகாமையாளர் ம.கலிஸ்ரஸ் தலமையில் இன்று (21.11.2023)காலை இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில் மாவட்டத்தில் முதல்நிலையினை பெற்ற மாணவர்களான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் செல்வன் நவரத்னம் சகாணன் (184),

வவுனியா ஆசிகுளம் அ.த.க பாடசாலை மாணவன் செல்வன் ரவீந்திரதாசன் ஷாரோன் (184) ஆகிய இரு மாணவர்களுக்கும் வவுனியா மக்கள் வங்கி கிளையினர் பதக்கம் அணிவித்து பரிசில் பொதிகளும் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் வவுனியா மக்கள் வங்கி கிளை வியாபார மேம்பாட்டு உத்தியோகத்தர் ச.ஐணாங்கணன் மற்றும் கிளை உத்தியோகத்தர் தி.தக்க்ஷன், பாடசாலை பிரதி அதிபர்கள், வகுப்பாசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தனிமையில் இருப்பது 15 சிகரெட் புகைப்பதற்கு சமம் : அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட WHO!!

தனிமையில்..

தனிமையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்பை, ஒரு நாளில் 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புடன் ஒப்பிட்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தனிமையில் இருப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறி வருகிறது.

மன நலன் மற்றும் உடல் நலன் ஆகிய இரண்டிற்கும் நீண்டகால விளைவுகளை தனிமை ஏற்படுத்துகிறது.மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தற்கொலை போன்ற மனநலப் பிரச்சனைகள் தனிமையால் விளைகின்றன. அதோடு உடல் நலம் சார்ந்தவற்றில் இதயநோய், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் அகால மரணம் போன்ற ஆபத்துகள் காத்திருக்கின்றன.

இந்நிலையில் உடல் மற்றும் மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அப்பால், தனிமையில் இருப்பது சமூகத்திலிருந்து துண்டித்துக்கொள்ளவும், உறவுகளிடமிருந்து விலகுவதற்கும் காரணமாகி விடுகிறது. இதன் காரணமாக ​​உலக சுகாதார நிறுவனம், தனிமையை ஒரு தீவிர உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக அங்கீகரித்துள்ளது.

அதோடு தனிமை மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க, தேசம் தழுவிய உத்திகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் தனது உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. உடல் உழைப்பின்மை, மிகை பருமன் ஆகியவை இந்த தனிமையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பாக விளைகின்றன.

இவற்றுக்கு அப்பால் சமூக தொடர்பு இல்லாததால் தனியான பாதிப்புகளுக்கும் இவர்கள் ஆளாகிறார்கள். அதுமட்டுமல்லாது தனிமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை எதிர்கொள்ள, சிறப்பு ஆணையம் ஒன்றினை தொடங்கவும் உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

’தனிமையின் தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான முதல் உலகளாவிய முயற்சி’ என்று உலக சுகாதார நிறுவனம் இதனை வர்ணிக்கிறது. மேலும், தனிமையில் இருக்கும் சக மனிதர்களை மீட்க உதவுமாறு, உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பினையும் உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ளது.

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞன் : மரணத்திலும் பலரை காப்பாற்றிய செயல்!!

இலங்கையில்..

கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனால் 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.மூளைச்சாவு அடைந்த பல்கலைக்கழக மாணவரின் இரு சிறுநீரகங்கள், இதயம், கணையம், கல்லீரல், கண்கள் ஆகியவற்றை வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் உள்ள ஐந்து நோயாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பார்வையற்ற இருவருக்கு ஒளி வழங்குவதற்காக அவரது கண்கள் இலங்கை கண் மருத்துவ சங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வேயங்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இந்த தியாகத்தை செய்துவிட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது தோல், இரத்த நாளங்கள் மற்றும் முழங்கால் எலும்புகள் உட்பட பல உடல் உறுப்புகள் அவரது பெற்றோரின் ஒப்புதலின் பேரில் நோயாளிகளுக்கு மாற்று சிகிச்சைக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்!!

ஜப்பானில்..

ஜப்பானில் இலங்கை இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் இலங்கையை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பாவி இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையை சேர்ந்த 26 வயதான ஷாலிந்த என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 15ஆம் திகதி இலங்கையை சேர்ந்த குழுவொன்றுடன் ஏற்பட்ட மோதலையடுத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் ஜப்பானில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். கடுமையான குடும்ப வறுமையில் சிக்கி தவித்த ஷாலிந்தவின் பெற்றோர் கடனிற்கு பணம் பெற்று மகனை ஜப்பானிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

75 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவுப் பெண்!!

முல்லைத்தீவில்..

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு – முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார்.

1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.மேலும் 800m ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.

சித்தங்கேணி இளைஞர் விவகாரம் : சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!!

வட்டுக்கோட்டையில்..

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன், பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்ற கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழை உலுக்கிய இளைஞனின் மரணம் : மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம்!!

யாழில்..

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சம்பவத்தினால் மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் உயிரிழந்தமை தொடர்பில் ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸார் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கடமையில் இருந்தார்கள் என்ற ரீதியில் அவர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்ட காணொளியில் பொலிஸ் நிலையத்தில் தனக்கு இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து கூறியிருந்தார்.

இந்த காணொளியை பார்வையிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்ற நிலையில் இளைஞர் உயிரிழந்த பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.