அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.கணவனும் மனைவியும் இன்று (21) அவர்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோகரன் தேவதர்சன் மற்றும் மற்றும் 23 வயதுடைய நிலுயா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.இருவரும் 3 வருடத்திற்கு முன் திருமணமாகி இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தம்பதி உயிரிழந்த காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் இளம் கணவ – மனைவி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் செளந்தர்யா (23). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. தற்போது இவருக்கு 9 மாதத்தில் குழந்தை இருக்கும் நிலையில், குடும்பத்துடன் இன்று காலை கர்நாடகா மாநிலம் பெங்களுரு சென்றுள்ளனர்.
சென்னையில் இருந்து பேருந்து மூலம் பெங்களூரு சென்ற அவர்கள், பேருந்தில் இருந்து இறங்கி நடந்து கொண்டிருந்தனர். அப்போது குழந்தையை செளந்தர்யா தனது கையில் வைத்திருந்தார். இந்த சூழலில் ஹோபார்ம் பகுதியில் இருந்து சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது கணவர் முன்னே செல்ல, மனைவி குழந்தையை வைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில் சாலையில் அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை செளந்தர்யா அறியாமல் மிதித்து விட்டார்.
இதில் செளந்தர்யா மற்றும் அவரது கையில் வைத்திருந்த 9 மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் கருகி பலியானர். அதிகாலை சுமார் 5 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தை கண்டு கணவர் சாலையிலேயே கதறி அழுதுள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து காவல்துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அஜாக்கிரதையாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது, கணவன் கண் முன்னே மனைவி, 9 மாத குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள 7 வியாபார நிலையங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றயதினம் இரவு இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வன்னிப் பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக உள்ள வியாபார நிலையங்களின் கதவுகளை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
இது தொடர்பில் வியாபாரநிலைய உரிமையாளர்கள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சீசீடீவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் 50ஆயிரம் ரூபாய் வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை தாங்கமுடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா நடத்தி வந்தது.
இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில் அரையிறுதிப்போட்டியில் விளையாடிய 4 அணிகளில் இருந்து 2 அணிகள் வெற்றிப்பெற்று இறுதிபோட்டிக்கு தேர்வாகியிருந்தனர்.
அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை வென்றது. இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களையும் நிலைகுழைய செய்தது.
இதனால் உயிர் பறிபோன சம்பவம் தான் இந்தியாவின் திருப்பதி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. திருப்பதி அருகே துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி குமார் என்பவருக்கே இது நிகழ்ந்துள்ளது. இவர் நேற்றைய தினம் தனது வீட்டில் இருந்து இறுதி போட்டியை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்தியா துடுப்பாட்டதுடன் ஆரம்பித்தது. கப்பு நமக்குதான் என பல ரசிகர்கள் உறுதியாக நம்பியதை போல ஜோதிகுமாரும் ஆர்வத்துடன் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். போட்டியாது மாற மாற வேதனையில் இருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர்.
பதறியடித்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் ப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் சம்பவ தினத்தன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தவேளை கொள்ளையர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
வீதியில் யாரும் அற்றவேளை பெண்ணை வழிமறித்த கொள்ளையர்கள் அவர் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்காததால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
யாழில் வழிப்பறி கொள்ளைசம்பவம் அதிகரித்துள்ள நிலையில், நகை அணியாததற்காய் பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெல்லம்பிட்டி, வேரகொட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மாணவியின் உடல் பலரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாடசாலை அதிபர் மண்டியிட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியதுடன் மாணவியின் உயிரிழப்புக்கு மன்னிப்பு கோரிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க வைத்துள்ளது.பாடசாலை ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பல்லரும் மாணவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதேசவாசிகள் அதிபரை தாக்கியதில் அதிபரின் வலது கண் சேதமடைந்துள்ளதுடன், கண்ணில் ப்லாஸ்டர் காணப்பட்டது.
இந்நிலையில் கண்ணீருடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதிபர்,பாடசாலையின் 3 மாடிக் கட்டிடத்தின் பாதுகாப்பற்ற கூரை ஓடுகள் உடைந்து கிடப்பதைப் பார்த்த போது தண்ணீர் குழாய் அமைப்பின் பாதுகாப்பின்மையை நான் காணவில்லை.
வாரம் இருமுறை கழுவி சுத்தம் செய்கிறேன். மாணவியின் உயிரைக் காக்க முடியவில்லை என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.அதோடு மாணவியின் இழப்புக்கு தன்னை மன்னிக்குமாறும் அவர் இதன்போது கண்னீருடன் கேட்டுக்கொண்டமை அங்கிருந்தவர்களைன் கண்களையும் குளமாக்கியது.தனது பிறந்தநாளில் ஆறு வயது மாணவி பாடசாலை சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், குறித்த உயிரிழப்பானது இயற்கையானது இல்லையென கூறப்பட்டதோடு, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் இன்று(20) நண்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உள்படுத்தப்பட்ட நிலையிலே இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த, இளைஞன் உயிரிழக்கும் முன்னர் வைத்தியசாலையில் வைத்து தனக்கு சிறைச்சாலையில் நேர்ந்த கொடூரங்கள் தொடர்பில் காணொளி ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(19.11.2023) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருக்கிறார்கள். உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் காணொளி ஒன்றின் ஊடாக தனக்கு பல்வேறு சித்திரவதைகள் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளியில், “என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெட்ரோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.
பின்னர் எனக்கு குடிக்க மதுபானம் தந்தார்கள். தாக்குதல்கள், சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள். பொலிஸாரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், இன்று மேற்கொள்ளப்படவுள்ள உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே குறித்த இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று(18.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது.தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்ற 66 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவரும் நிலையில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை நடந்த இடத்தில் யாழ். நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று (19)பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சீனி மற்றும் அரிசி கொள்வனவு செய்ய முயன்ற வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
2020ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கான விசேட சரக்கு வரியை 25 சதத்தில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வரி உயர்வால், பல வியாபாரிகள் சர்க்கரை விலையை உயர்த்தியதால், அதை கட்டுப்படுத்த அதிகபட்ச சில்லரை விலையை அரசாங்கம் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அதாவது ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 275 ரூபாவாகவும், ஒரு கிலோ கருப்பு சீனி 330 ரூபாவாகவும் உள்ளது.
புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகளிடம் தற்போதுள்ள சீனி தட்டுப்பாடு குறித்து கேட்டபோது, தங்களுக்கு சீனி கையிருப்பு விற்பனைக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால், வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.சந்தையில் சீனி தட்டுப்பாடு மட்டுமின்றி சம்பா, கீரி சம்பா அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இன்று சந்தைக்கு அரிசி வாங்க வந்த பல வாடிக்கையாளர்கள் அரிசி இல்லாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் சீனி மற்றும் அரிசி விற்பனை செய்பவர்களை கண்டறியும் சோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டிற்கான (2023) தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டி ( National Masters & Seniors Athletics) அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இலங்கை சார்பில் அகிலத்திருநாயகி கலந்துக்கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தராவார். இவர் தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டியில் ( National Masters & Seniors Athletics) போட்டியில் பங்கேற்று 02 தங்கம் மற்றும் ஒரு வெங்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
1500m ஓட்டப்போட்டி மற்றும் 5000m விரைவு நடைப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று 02 தங்கப் பதக்கங்களையும் 800m ஓட்டப் போட்டியில் வெங்கலப் பதக்கத்தையும் 5000m ஓட்டப் போட்டியில் பங்குப் பற்றி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – மன்னார் பாதையூடாக பயணித்த இரண்டு பேருந்துகள் இரண்டு, ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயற்சித்தமையினால் ஒரு பேருந்து நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்திற்கு அருகில் சென்று விபத்திற்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நேற்று(18) மாலை 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பேருந்தில் பயணித்த நூற்றுக்கணக்கானோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று மதியம் 3 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்து கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த மற்றைய தனியார் பேருந்து சாரதியின் செயற்பாட்டால் நிலைதடுமாறி உள்ளது.
பின்னால் வந்த சாரதி வேகமாக வாகனத்தை செலுத்தியதுடன் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வாகனத்தை செலுத்தி உள்ளார்.இதன் காரணமாக மன்னார் நோக்கி வந்த தனியார் பேருந்து நிலைதடுமாறி அருகில் உள்ள மரத்தில் மோதும் விதமாக சென்ற நிலையில் மரத்தை சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பேருந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ச்சியாக மன்னார் யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா வீதிகளில் பேருந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது பேருந்துகளை போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குருணாகலில் தனது 15 வயது காதலியை நண்பர்களுக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக காதலியை விற்ப்பனை செய்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபரின் 7 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குருணாகல், மாவத்தகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிப்பவராவார்.
இந்தச் சிறுமியின் தாயார் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்ததாகவும், சிறுமி தனது பாட்டியின் பாதுகாப்பில் வளர்க்கப்படுவதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் நீரேந்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தொடர்பில் இதுவரை எவ்வித அடையாளமும் காணப்படவில்லை என ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் தகவல் வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக அப்பகுதி மக்களால் கடந்த 14 ஆம் திகதி ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்தனர்.குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
யுவதிகள் காணாமல் போனமை தொடர்பில் வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த நான்கிற்கும் மேற்பட்டோர் சடலத்தை பார்வையிட்டுள்ள போதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இது குறித்த விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன் ஈச்சங்குளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
வவுனியா, ஓமந்தையில் பாரவூர்த்தியுடன் இ. போ. சபை பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (19.11) காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பாரவூர்த்தி ஓமந்தைப் பகுதியில் பயணித்த போது வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாரவூர்தியை செலுத்திய போது அதே வழியில் வந்த இ.போ.சபை பேரூந்து கட்டுப்பாட்டையிழந்து பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து பாரவூத்தி வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. இவ்விபத்தில் பாரவூர்த்தியில் பயணித்த சாரதி மற்றும் நடத்துனர் காயமடைந்ததுடன், பேருந்தில் பயணித்த பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய(19) இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது. இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணியின் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 107 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி, 241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.