பெண் ஒருவர் தன்னை கடித்த கட்டு விரியன் பாம்பை கொன்று சடலமாக மருததுவமனைக்கு எடுத்து வந்தது அதிர்ச்சியளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகு ராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிந்துள்ளார்.
அப்பொழுது கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கடித்த நிலையில், கூச்சலிட்டுள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு கணவர் சரணவன் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.
தற்போது குறித்த பெண்ணிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம் அருகே நர்சிங் மாணவி, காதலனுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவருடைய மகன் அருண் (வயது 22).
கடந்த 6 ஆண்டுகளாக மதுராந்தகத்தில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வந்தார். மதுராந்தகம் அருகே உள்ள புதுமாம்பாக்கத்தில் ஜனனி பிரகாஷ் என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.
மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி. இவருடைய மகள் ஜனனி (17). தனியார் கல்லூரி யில் நர்சிங் படித்து வந்தார். அருண் ஜனனி இருவரும் காதலித்து வந்த தாக கூறப்படுகிறது.
இவரது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தியடைந்த அருண், தான் தங்கி இருந்த வீட்டில் காதலி ஜனனியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருண், ஜனனி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கு தை பார்த்த வீட்டின் உரிமையாளர் மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் இருவரது உட லையும் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக மதுராந்தகம் மருத்துவமனைக்கு அரசு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் அதிகாரி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநில அரசின் சுரங்க மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குனராக பிரதிமா என்ற பெண் அதிகாரி பதவி வகித்து வந்தார். 45 – வயதான பிரதிமா, தனது கணவர் மற்றும் மகனுடன் பெங்களூர் நகரம் சுப்ரமணியபோரா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 8 வருடங்களாக அங்கு வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு பிரதிமாவின் கணவரும் மகனும் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதிக்கு சென்றுள்ளனர். வீட்டில் பிரதிமா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
நேற்று இரவு, பிரதிமாவின் சகோதரர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கிறார். பலமுறை முயற்சித்தும் பிரதிமா போனை எடுக்கவில்லை. இதனால், பதறிப்போன சகோதரர் இன்று காலை பிரதிமாவை காண நேரடியாக அவரது வீட்டிற்கே வந்தார்.
அப்போது உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்த நிலையில், பிரதிமா கிடந்தார். அவரது சடலத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து சகோதரர் உடனடியாக காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தடயவியல் துறையினரும் பிரதிமாவின் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை இந்த கொலை சம்பவம் அதிர வைத்துள்ளது. இது குறித்து பெங்களூர் நகர தெற்கு டிவிஷன் டிசிபி ராகுல் குமார் ஷகாபுர்வத் கூறுகையில், “வழக்கம் போல நேற்று இரவு 8 மணிக்கு பிரதிமா வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரை வீட்டில் கார் டிரைவர் டிராப் செய்து விட்டு போயுள்ளார். நேற்று இரவு பிரதீமாவுக்கு போன் செய்து பார்த்த அவரது சகோதர் இன்று காலையும் போன் பண்ணி பார்த்துள்ளார். ஆனால், பிரதிமா பதில் எதுவும் அளிக்காதாதால் விட்டிற்கு வந்துள்ளார்.
அப்போதுதான் பிரதிமா கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மர்ம கொலை சம்பவத்தில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பது குறித்து தெரியவந்ததும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்” என்றார். கர்நாடகாவில் பெண் உயரதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் (48) ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி ராதா (39). இவர்களுக்கு மனோஜ் மற்றும் தீபக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கோதண்டம் ராதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் இன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு கொள்வது அவர்களின் குடும்பத்தினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கோதண்டத்தின் மனைவியான ராதாவின் உடன்பிறந்த அக்காள் ராஜம்மாள் என்பவரது மகன்கள் ஜஸ்வந்த் (30) கோகுல் (28) ஆகிய இருவரும் கோதண்டத்தினை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.
கோதண்டம் ஆட்டோ ஓட்டி வந்த பொழுது கடைக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி எதிரே ஜஸ்வந்த் மற்றும் கோகுல் கோதண்டத்தின் ஆட்டோ மீது காரை வேகமாக மோதியுள்ளனர். ஆட்டோ மற்றும் கார் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான காரில் இருந்து வெளியே வந்த ஜஸ்வந்த் மற்றும் கோகுல் தாங்கள் வைத்திருந்த அறிவாளால் கோதண்டத்தினை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் கோதண்டம் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் கோத்தகிரி காவல்துறையில் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கோதண்டத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை சம்பவத்தை அரங்கேற்றிய ஜஸ்வந்த் மற்றும் கோகுல் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோதண்டத்தின் மனைவியான ராதாவையும் காவல்துறையின் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
கொலையாளிகள் இருவரையும் கோத்தகிரி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இரண்டு இளைஞர்களும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் அரங்கேறிய கொலை சம்பவம் கோத்தகிரி பகுதியையே உலுக்கியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு இன்று (05.11) விஜயம் மேற்கொண்டு சீனாவின் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வரவேற்றதுடன், அவருடைய தலைமையில் சீன அரசாங்கத்தால் வடக்கு மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்ட்டது.
இதன்போது சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சீன அரசாங்கத்தின் வவுனியா மாவட்டத்திற்கான நிவாரண உதவித் திட்டத்தை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா தெற்கு உள்ளடங்களாக 4 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 500 குடும்பங்களுக்கு சீனாவால் 7500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் முதல் கட்டமாக வழங்கப்படுகின்றது.
சீன பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த மக்களால் வழங்கப்படும் குறித்த உலர் உணவுப் பொருட்களை சீனா – இலங்கை பௌத்த நட்புறவுத் திட்டத்தின் கீழ் சீனத் தூதுவர் உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தார்.
இந்நிழ்வில் சீன தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி, வவுனியா உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்கள், சீனத் தூதுவராலய அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
50% கட்டணத்தை அதிகரிக்க பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு அவ்வாறான தீர்மானத்தை வழங்கவில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எஸ் சேனநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற அதிபர் சேவையின் தரம் iii க்கு 4672 புதிய அதிபர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், கல்வித்துறையில் தற்போதுள்ள வெற்றிடங்களை தொடர்ச்சியாகவும் முறையாகவும் பேணுவதற்கு அவற்றை நிரப்புவது அவசியமானது.
தற்போது கல்வி நிர்வாக சேவையில் 808 வெற்றிடங்கள் காணப்படுவதுடன் 50 வீதத்தை பூர்த்தி செய்வதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி 404 காலி பணியிடங்கள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
50% கட்டணத்தை அதிகரிக்க பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு அவ்வாறான தீர்மானத்தை எதனையும் வழங்கவில்லை எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,அடுத்த வருடத்திற்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கான தொடர்புடைய சாத்தியக்கூறு ஆய்வுகள் டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும். கல்வி சீர்திருத்தங்களுடன், திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து 1A, 1B மற்றும் 1C பாடசாலைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை செயல்படுத்தப்படும்.
அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் டிஜிட்டல் மயமாக்கல் முறையை பின்பற்ற வேண்டும். கல்வி சீர்திருத்த வேலைத்திட்டம் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கில் தமிழ் மக்களின் மீது முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளிற்கு எதிராக தமிழரசுக்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்துநிலையப் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடகிழக்கில் நில அபகரிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும், மயிலத்தமடு மேச்சல் தரையில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை உடனே நிறுத்து,
செட்டிகுளத்தில் கீழ் மல்வத்தோயா திட்டத்தின்மூலம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள குடியேற்றங்களை தடுத்து நிறுத்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை வழங்கு, இந்து ஆலயங்களை ஆக்கிரமிக்காதே, அவற்றில் விகாரைகளை அமைக்காதே,
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இஸ்ரேல் காஸா மோதலை சர்வதேசம் நிறுத்தவேண்டும் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
குறித்த ஆர்பாட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறீதரன், இரா.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், புதிய ஜனநாயக மாக்ஸ்சிக லெனினிச கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வெள்ளவத்தையில் கடற்கரையில் யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் (05.11.2023) காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் பொலிஸாருக்கு தகவலை தெரிவித்ததையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை மாவட்டம் – அளுத்கம பிரதேசத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை (04-11-2023) அளுத்கம – தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு 32 வயது மற்றும் அவரது கணவருக்கு 38 வயதாகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில், கணவன் அடித்துள்ளார்.பலத்த காயம் அடைந்த பெண் கீழே விழுந்ததை அடுத்து, கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.
உயிரிழந்த தம்பதிக்கு 12, 10 மற்றும் 6 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.இந்த சம்பவம் நடந்த போது கடைசி மகன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக நோய் காவு வண்டி ஒன்று வந்துள்ளது.
இருப்பினும், அவர் உயிரிழந்தமை தெரிந்து கொண்ட ஊழியர்கள் சடலத்தை எடுக்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் அளுத்கம பொலிஸார், களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதவானின் விசாரணையும் நடத்தப்பட உள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்துள்ளார்.பின்னர் இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.
தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மாணவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவியின் தாயும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்தபத்து முல்லை பிரதேசத்தை சேர்ந்த ஹிமாயா கருணாரத்ன என்ற மாணவியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த போது மோட்டார் சைக்கிள் வீதியின் நடுவில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்திசையில் வந்த பேருந்து மோதியதில் தாய் மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மகள் உயிரிழந்துள்ளார்.
புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவில் ஆடையகம் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்தார்.கடந்த 27ஆம் திகதி புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.குறித்த தீப்பரவலில் 23 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, தலவாக்கலை வட்டகொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று நேற்றையதினம் (03) திடீரென தாழிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பொலிகண்டி தெற்கு J/395 கிராமசேவையாளர் பிரிவில் வீரபத்திரர் ஆலயத்துக்கு அருகில் நேற்று காலை இச்சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து அருகிலுள்ள நிலங்கள், மதிலில் வெடிப்பு ஏற்பட்டது.தாழிறங்கிய கிணற்றிற்கு மிக அருகில் ஆலயமும், வீடும் காணப்படும் நிலையில் பிரதேச மக்களுக்கு, மேலும் ஏதாவது அனர்த்தம் நிகழுமோ என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக அப்பகுதி பொதுமக்களால் பருத்தித்துறை பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் அங்கு சென்ற பருத்தித்துறை பிரதேச சபையின் மேலதிக செயலாளர் கம்சநாதன் உள்ளிட்ட சபையின் அலுவலர்கள் அங்குள்ள நிலைமையை பார்வையிட்டு மேலும் அப்பகுதியில் அனர்த்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் உடனடியாக செயற்பட்டனர்.
நேற்றுக் காலை பிரதேச சபையின் வாகனங்களுடன் சென்ற பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு வரை கனரக வாகனங்கள் மூலம் மண்ணை கொண்டுவந்து கொட்டியும், மழை வெள்ளம் குறித்த பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் நோக்கில் உரப் பைகளில் மண்ணை இட்டு மண் தடுப்பணையை ஏற்படுத்தி மீண்டும் அனர்த்தம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
அதன் பின் நேற்றிரவு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உயர்மட்ட உத்தரவை அடுத்து மேற்படி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.அதேவேளை அப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் தாழிறங்கிய கிணற்றை தொடர்ந்து அருகிலுள்ள வீடு, கோயில் என்பனவும் தாழிறங்கும் பட்சத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக பருத்திதுறை பிரதேசசபைக்கு மக்கள் அறிவித்த நிலையில், பிரதேச சபை மேலதிக செயலாளரின் வழிகாட்டலில் பிரதேச சபை ஊழியர்கள் மட்டுமே முன்னின்று சீரமைக்கும் பணியில் இடுபட்டதாகவும் , அக்கறை செலுத்தக்கூடிய இத்துறைசார்ந்த அரச அதிகாரிகள் அப்பகுதிக்கு உடனடியாக செல்லவில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த பிரதேசமானது ஆலயம், வீடுகள் உள்ள பொதுமக்கள் நடமாடும் பகுதியாக உள்ளமையால் இப்படியான அனர்த்தங்கள் நிகழும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் துரிதமாக செயற்பட்டு நிலைமையை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அம்பாந்தோட்டை – சூரியவெவ நகரில் அமைந்துள்ள கடையொன்றின் மேல் மாடி படிக்கட்டில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அவரது கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அவரை விளக்கமிறயலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஓஷத மிகார மஹராச்சி நேற்று முன்தினம் மாலை உத்தரவிடப்பட்டுள்ளார். மருந்தகம் ஒன்றின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தை நலிந்த பிரசாத் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயான ரசிகா தமயந்தி என்பவர் என பொலிஸார் சுட்டிக்காட்டியள்ளனர்.கடந்த முதலாம் திகதி அதிகாலை 04 மணியளவில் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறி கணவரால் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபருக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்று வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சில காலமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறப்பதற்கு முந்தைய நாள் இரவு இருவருக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்துள்ளது.அதனடிப்படையில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் தாயார் கங்கணம் கமகே பிரேமாவதி மற்றும் அவரது சகோதரி லியனகமகே ரமணி ஆகியோரினால் சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சூரியவெவ பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறையில் இருவருக்கு இடையேயான இரகசியக் காதலை வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரும் சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே உயிரிழந்தவர் இந்த உறவை வெளிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசித்து வந்த 67 வயதான ரமோன் ஜயதிஸ்ஸ என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.