பணம் கொடுத்தால் தான் மனைவி கிடைப்பார்.. சீனாவின் சர்ச்சைக்குரிய திருமண பாரம்பரியம்!!

சீனாவில்..

திருமணம் என்பது இருவர் மற்றும் அவர்களின் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். நமது திருமணங்களில் மணமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆனால் சீனாவில் உள்ள ஒரு கிராமத்திலப்படி அல்ல, மாறாக இங்கு ஒரு விசித்திரமான வழக்கம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த கிராமத்தில் மணமகன் மணமகளை சந்திக்க விரும்பினால், அவர் ஒரு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மணமக்கள் ஊர்வலத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஜோவில் உள்ள ஒரு கிராமத்தில் மணமகன் ஒருவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. மணமகளை சந்திக்க செல்லும் வழியில், அவரது திருமண காரை கிராம மக்கள் அனைவரும் தடுத்து நிறுத்தினர்.

இச்சம்பவம் அக்டோபர் 20ம் திகதி நடந்தது. அங்குள்ள நிலவரத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது குறித்து சவுத் சைனா மார்னிங் போஸ்ட் கட்டுரை வெளியிட்டது. சீனாவில் இன்று வரை தொடரும் சர்ச்சைக்குரிய திருமண வழக்கங்கள் புதிய விவாதத்தை கிளப்பி வருகின்றன. திருமண விழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அவர்கள் அனைவரும் மணமகனிடம் பணம் மற்றும் சிகரெட் கேட்டனர். கொடுக்க முடியாவிட்டால் மணமகளை சந்திக்க மறுத்துவிட்டார். இவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமவாசிகளின் விருப்பங்களை மணமகன் நிறைவேற்ற வேண்டும்
உள்ளூர் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள வயதான கிராமவாசிகளின் விருப்பங்களை மணமகன் குடும்பத்தினர் நிறைவேற்றுவது வழக்கம்.

இது சர்க்கரை அல்லது சிகரெட் வழங்குவதில் இருந்து சிவப்பு உறைகளை (Red Envelope) வழங்குவது வரை சென்றது. அதாவது பணம் கோருவது. அங்குள்ள பாரம்பரியத்தின் படி, மணமகன் கிராம மக்களை திருப்திப்படுத்தத் தவறினால், மணமகளை சந்திப்பதில் தாமதம் ஏற்படலாம்.

ஒரு சந்தர்ப்பத்தில் திருமணத்தை முற்றிலுமாக நிராகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மணமகனின் பாதையைத் தடுக்கும் இந்த முறை மாண்டரின் மொழியில் புல்வெளி மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் “கதவைத் தடுப்பது” என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மணமகன் தனது காதலியை திருமணம் செய்ய எவ்வளவு தயாராக இருக்கிறார் என்பதை சோதிப்பதே இதன் முக்கிய நோக்கம். ஆனால் இந்த முறை தவறானது மற்றும் பணம் தேவைப்படுவதற்கு வழிவகுத்தது.

மற்ற புதுமையான வழிகளில் மணமகளின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கும். மணமகனைக் கிண்டல் செய்யவும், நடனத் திறமையைக் காட்டவும் கவிதைகள் சொல்லவும், பாடல்களைப் பாடவும் நண்பர்கள் மணமகனைச் சொல்வார்கள்.

ஆனால் அதைத் தவிர்க்க.. “அங்கு நிறைய பேர் இருந்தால், மணமகன் வீட்டார் ஒவ்வொரு சிவப்பு கவரிலும் பணத்தை போடுகிறார்கள். இது ஒரு தீய பழக்கம் என்றும், மணமகன் குடும்ப உறுப்பினர்களை கொள்ளையடிக்கும் தீய பழக்கம் உருவாக வழிவகுத்துள்ளது என்றும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

சீனாவில் உள்ள மற்ற சர்ச்சைக்குரிய திருமண பழக்கவழக்கங்கள் உள்ளன, அவற்றில் மணமகள் பாரம்பரிய திருமண ஆடையை அணிந்து, மணமகனைச் சந்திப்பதற்கு முன்பு வெறுங்காலுடன் பல மணி நேரம் அமர்ந்து சபதம் எடுப்பதும் அடங்கும்.

பேருந்தில் ஆபத்தான பயணத்தில் மாணவர்கள் : நடுரோட்டில் நடத்துனரை கிழித்து தொங்கவிட்ட சிங்கப்பெண்!!

சென்னையில்..

சென்னையில் அரச பேருந்துகளில் பாடசாலை மாணவர்கள் உயிர் ஆபத்தான பயணங்களில் ஈடுபட்டுவருகின்றதாக பலரும் குற்றச்சட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வாறு பேருந்து ஒன்றில் ஆபத்தான பயணத்தில் மாணவர்கள் சென்றுகொண்டிருந்த போது, நடு ரோட்டில் பேருந்தை வழிமறித்த பெண் ஒருவர் பேருந்து நடத்தினர் கடும் வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார்.

அதுமட்டுமல்லாது பேருந்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட மாணவர்களையும் அப்பெண் கடுமையாக கட்டித்ததுடன் மாணவர்களுக்கு தர்ம அடியும் கொடுத்துள்ளார்.

சென்னையை அடுத்த குற்றத்தூர் செல்லும் பேருந்திலேயே மாணவர் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மாணவர்களை நடத்துனரையும் கண்டித்த சிங்கப்பெண்னுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

உணவு சமைக்காததால் ஆத்திரம்.. மனைவியை குத்திக் கொலை செய்த கொடூர கணவன்!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கன்னியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வெங்கடேசன்(30), இவரது மனைவி அனிதா(28), இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசன் சென்ட்ரிங் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வெங்கடேசன் நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் மனைவி அனிதா உணவு சமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றியது. வாக்குவாதம் மாலை வரை நீடித்த நிலையில் சுமார் 4:00 மணியளவில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது மனைவி அனிதாவின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதில் அனிதா ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.

பின்னர் வெங்கடேசன் அருகே இருந்தவர்கள் உதவியுடன் மனைவியை திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த வெங்கடேசனை தேடிவந்த நிலையில் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு சமைக்கவில்லை என்பதால் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் புதுமணத் தம்பதி வெட்டிக்கொலை… காதல் திருமணம் செய்த 3வது நாளில் நடந்த கொடூரம்!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்பவர் மாரி செல்வம். இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி அன்று, தூத்துக்குடி திருவிக நகரைச் சார்ந்த கார்த்திகா என்பவரை காதல் திருமணம் செய்து உள்ளார். அன்று மாலை கார்த்திகாவின் உறவினர்கள் வந்து சத்தம் போட்டு சென்றுள்ளனர்.

பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி இவர் கல்யாணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி திருவிக நகரில் இவர் வசித்து வரும் வீட்டிற்கு வந்த ஒரு மர்ம கும்பல், கணவன் – மனைவி இருவரையும் சாரா மரியாக வெட்டி கழுத்தறுத்தை கொலை செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், ஓடி வர அங்கிருந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது. பின்னர், அருகில் இருந்தவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் நகர காவல் துறை கண்காணிப்பாளர் சத்தியராஜ், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, இந்த சம்பவத்தை செய்தது பெண் வீட்டார் என்ற முதற்கட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடலில் மாற்றங்களைச் செய்து மனித பூனையாக உருமாறிய இளம்பெண்.!!

இத்தாலியில்..

உலகில் வினோதமான ஆசைகளுடன் பலர் வலம் வருகிறார்கள். பெரும்பாலான மனிதர்கள், உண்பதற்கும், உறங்குவதற்குமாக சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ வாழ்க்கையைக் கொண்டாடாமல் அடுத்தடுத்த தலை முறையினருக்கும் சொத்து சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஆகப் பெரும் லட்சியமாக கொண்டிருப்பார்கள்.

உலகின் எங்கோ ஓர் மூலையில், எந்த விதமான அவசரமும் இல்லாமல் வாழ்வை அவர்களுக்குப் பிடித்தது போல கொண்டாடித் தீர்ப்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

அப்படியானதொரு இத்தாலி நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மனித பூனையாக மாறவேண்டும் என்பதற்காக தன் உடலில் மாற்றங்கள் செய்துள்ளார். இத்தாலியைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் சியாரா டெல்அபேட் தனது உருவத்தை மாற்றியுள்ள சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

22 வயது நிரம்பிய சியாரா டெல்அபேட், மனித பூனையாக மாறவேண்டும் என்பதற்காக தன் உடலில் 20 இடங்களில் மாற்றங்கள் செய்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களை உருவாக்கி டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்களை ஏராளமானோர் பார்த்துள்ளனர்.

உடலில் துளைகள் போடுவது, பச்சை குத்துவது என உடல் அமைப்பை மாற்றுவதற்கான அவரது ஆர்வம் 11 வயதில் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடலில் சுமார் 72 துளைகள் உள்ளன.

துளையிடப்பட்ட மூக்கு மற்றும் மேல் உதடு பிளவுபட்ட நாக்கு போன்றவை அவரது உடல் மாற்றங்களில் அடங்கும். இவ்வளவு செய்தும் அவர் இன்னும் முழு பூனையாக மாறவில்லை. முழு பூனை போன்ற தோற்றத்தை அடைவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்கிறார் சியாரா.

குறிப்பாக, பூனை போன்ற கண்களுக்கான பிரத்யேக அறுவை சிகிச்சை, பற்களில் மாற்றம், வால் போன்ற அமைப்பு இணைத்தல், தேவைப்படும் இடங்களில் பச்சை குத்துதல் என அவரது பட்டியல் நீள்கிறது. இவ்வாறு செய்வதால் ஏற்படும் காயம் மற்றும் வலி தனக்கு பழகிவிட்டதாகவும், அது இனி பெரிய விஷயமில்லை என்றும் கூறுகிறார் சியாரா.

தொழிலதிபரும் அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை.. கதறியழும் பச்சிளம் குழந்தைகள்!!

நாமக்கல்லில்..

நாமக்கல் அடுத்த நலலிபாளையம் அருகே உள்ள சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவருக்கு திருமணமாகி மதுமிதா (28) என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். லாரி அதிபரான முருகேசன், நாமக்கல்லில் லாரி பட்டறையும் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் முருகேசனின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகேசனும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து நள்ளிபாளையம் காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இருவரும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றர்.

மனைவியை ஓட ஓட விரட்டி கொலை செய்த கணவன்!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சர்ச் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவருக்கு மீனா என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக ராஜ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீனா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு வந்த ராம்குமாருக்கும் மீனாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ராம்குமார் ஆத்திரத்தில் மீனாவை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.

இதனால் பயந்துபோன மீனா, வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். அவரை விடாமல் துரத்தி பின்தொடர்ந்து சென்ற ராம்குமார், மீனாவை கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மீனா ரத்த வெள்ளத்தில் சரித்துள்ளார்.

பின்னர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மீனா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ராம்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலைக்கு குடும்ப தகராறு தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய ராம்குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

மெத்தைக்கு பதில் சவப்பெட்டிக்குள் படுக்கும் இளம்பெண்… கூறும் விசித்திர காரணம்..!!

சவப்பெட்டியில்..

இளம்பெண் ஒருவர் தனது மன அமைதிக்காக மெத்தைக்கு பதில் சவ பெட்டியில் படுத்து உறங்கும் சுவாரசிய சம்பவத்தை இங்கு தெரிந்து கொள்வோம். லிஸ் என்ற பெண் ஒருவர் தனது படுக்கை அறைக்குள் 6 அடி நீளமான சவப்பெட்டியை மெத்தைக்கு பதிலாக பயன்படுத்தி, அதில் படுத்து உறங்கி வருகின்றார்.

குறித்த சவப்பெட்டிக்குள் படுத்து உறங்குவதைக் குறித்து அப்பெண் கூறுகையில், தினமும் இதில் படுத்து உறங்குவதால் தனது கவலைகள் அனைத்தும் மறந்து விடுகின்றது என்று இதில் படுக்கும் சௌகரியம் மெத்தையில் கிடைக்கவில்லை…

மேலும் இது தனக்கு அமைதியும், ஆறுதான உணர்வையும் அளிப்பதுடன், இந்த பெட்டிக்குள் இருக்கும் போது உலகின் மற்ற பகுதியிலிருந்து விலகி இருப்பது போன்று உணர்வதுடன், பாதுகாப்பான இடமாகவும் உணர்கின்றாராம். குறித்த பெண்ணின் இந்த வினோத பழக்கத்தை பார்த்த சிலர் சுவாரசியமாகவும், தனித்துவமாகவும் இருக்கின்றார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அன்று 1600 ரூபா சம்பளம்.. இன்று 9800 கோடிக்கு அதிபதி : தொழிலதிபரான இளம் பெண்ணின் கதை!!

ஹரியானாவில்…

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை இயற்கை முறையில் விற்பனை செய்து தொழில் துறையில் அசைக்க முடியாத இடத்தை அடைந்திருக்கிறார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்.

ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் நகரைச் சேர்ந்த கஸல், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை ஹரியானாவில் படித்த கஸல், 2010-ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பட்டப்படிப்பு முடித்தார்.

நவீன ஓவியம் மற்றும் வடிவமைப்பு கலை பற்றிய படிப்பையும் நியூயார்க் அகாடமியில் 2013-ல் நிறைவு செய்தார். 2008 முதல் 2010 வரை NIIT நிறுவனத்தில் கார்ப்பரேட் பயிற்றுனராக வேலை செய்த கஸல், பலருக்கும் கணினி மென்பொருள் மற்றும் நிரல்களை கற்றுக் கொடுத்தார்.

இந்த வேலைக்கு அவருக்கு கிடைத்த மாதச் சம்பளம் வெறும் ரூ.1,200 மட்டுமே. 2016-ம் ஆண்டு தனது கணவரோடு சேர்ந்து மாமா எர்த் (MamaEarth) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

சுற்றுச்சூழல் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இளம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்தார்.

இவரின் நிறுவனம் மறுசுழற்சி செய்யும் வகையிலான பேக்கேஜ் மற்றும் இயற்கை மூலப்பொருள்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இவரது பொருட்கள் விலை குறைவாக இருப்பதோடு சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படாது மேலும் இவற்றில் எந்த நச்சுப்பொருளும் சேர்க்கப்படவில்லை.

தற்போது ஆரோக்கியம், குழந்தைகளுக்கான அழகு சாதனப் பொருட்கள் என 5 பொருட்களில் ஆரபித்த இவரின் நிறுவனம் தற்போது 500-க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

ஆசியாவிலேயே பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டது (MADE-SAFE) என்ற சான்றிதழை பெற்ற ஒரே நிறுவனம் mamaearth மட்டுமே. கஸலும் அவரது கணவர் வருனும் இந்த தொழில் தொடங்க முதலில் ரூ.25 லட்சம் முதலீடு செய்தனர். அது இப்போது ரூ.9,800 கோடியாக பெருகியுள்ளது.

வவுனியாவில் காஸா மீது நடத்தப்படும் தாக்குதலை உடன் நிறுத்து: கவனயீர்ப்புப் போராட்டம்!!

பாலஸ்தீன – காஸா மீது நடத்தப்படும் தாக்குதலை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (04.11) இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”சுதந்திர பாலஸ்தீனத்தை அழிக்காதே, அமெரிக்க, இஸ்ரேல் போர் – ஆக்கிரமிப்பு யுத்தம் வேண்டாம், பாலஸ்தீன குழந்தைகளை கொல்ல வேண்டாம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துப் பொருட்களை உடன் அனுப்பு,

அமெரிக்க ஆயுத வியாபாரிகளுக்கு பலஸ்தீன குழந்தைகள் தான் பரிசோதனைக் களமா?” என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு யுத்தம் போன்று பலஸ்தீனத்தில் அரபு மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனவழிப்பு யுத்தத்தை மேற் கொண்டுள்ளது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா தனது ஆயுதப் பரிசோதனைக் களமாக இந்த யுத்தத்தை பயன்படுத்தக் கூடாது. இந்த யுத்தத்தை உடன் நிறுத்த உலக நாடுகளும், ஐ.நாவும் கவனம் செலுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இதில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு : மக்களுக்கு விடப்பட்ட காேரிக்கை!!

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட உள்ளமையால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் பேராறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக பேராறு நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் நேற்று இரவு(03.11)திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, பேராறு நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள புதுக்குளம், சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம், மருதமடு, பாலமோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வாழ வழிதேடி இஸ்ரேல் சென்ற இலங்கையர் : பணயக்கைதியாக பிடிக்கப்பட்டு உயிரிழப்பு!!

இஸ்ரேல்..

மோதலில் ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைப்பிரஜையான சுஜித் பண்டார யட்டவர உயிரிழந்துள்ளதை இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்களின் இன்டர்போல் பிரிவினரே இதனை உறுதிசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சுஜித்பண்டார யட்டவரவின் பிள்ளைகளின் மரபணுவை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டவேளை இலங்கையர் ஒருவர் காணாமல்போயிருந்தார் .

அதனை தொடர்ந்து அடையாளம் காணப்படாத உடல் ஒன்றை சுஜித் பண்டாரவின் பிள்ளைகளின் மரபணுவுடன் ஒப்பிட்டு சோதனை செய்தவேளை அது இலங்கையரினது உடல் என்பது உறுதியானது.உயிரிழந்தவர் வென்னப்புவை சேர்ந்தவர் என்றும், கடந்த 2015 இல் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் சென்றிருந்தாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

கணவரின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் துண்டித்த மனைவி : இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!!

இலங்கையில்..

தனது கணவரான இராணுவ சிப்பாயின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மனைவி விளக்கம்றியலில் வைப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனைவியை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாக்குவெட்டி ஒன்றினால் கணவரின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த கணவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதித்து வைத்திய சோதனைகளை மேற்கொண்டு, எதிர்வரும் 17ஆம் திகதி வைத்தியர் சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்!!

கண்டியில்யில்..

கண்டி- குண்டசாலை தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றையதினம் (02.11.2023) இடம்பெற்றுள்ளது. மரக்கறி கடை ஒன்றின் மீதே இந்த மரம் விழுந்துள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த வான் மற்றும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கிறது லிட்ரோ எரிவாயு விலை : சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

லிட்ரோ..

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிகப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விலை அதிகரிப்பானது நாளை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பதிவான பாரிய தீ விபத்து : காயமடைந்த யுவதிக்கு நேர்ந்த சோகம்!!

கொழும்பில்..

கொழும்பு – புறக்கோட்டை, 2ம் குறுக்குதெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பாரிய தீ பரவலில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இந்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தினால் சுமார் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையிலேயே காயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சிக்கிய வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.