குருநாகல் – கொஹிலகெதர பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 15 வயது சிறுமியின் வீட்டிற்கே சென்று 17 வயது சிறுவன் பலமுறை பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞன் அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வந்து, வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.
கடுமையான பாலியல் வன்புணர்வுற்கு ஆளான சிறுமி கசிப்பு என்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், அவரது அத்தையும் போதைப்பொருள் பாவனையாளர் எனவும், இதன் காரணமாகவே சிறுமி போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமியை குருநாகல் போதனா வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.
சிறுவனின் இந்தச் செயற்பாடுகளை சிறுமியின் வீட்டில் வசித்த பாட்டியும் அவரது சகோதரியும் கண்டதையடுத்து, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த நிலையில் சிறுமி வீட்டில் சிறுவன் விட்டு சென்ற ஆடைகளை விசாரணைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் சகோதரிகள் இருவர் ஹொட்டல் தொழிலில் பிரபல்யமடைந்து வருகிறார்கள். இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்து, கொழும்பில் வளர்ந்த வசந்தினி, தர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகளே லண்டனில் ஹொட்டல் துறையில் சாதித்து வருகின்றனர்.
இவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை விரும்பி, 2011ஆம் ஆண்டு தங்கள் மற்ற சகோதரிகளுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள். லண்டனில் பல இடங்களுக்குச் சென்று பார்த்தும் இலங்கை உணவு கிடைக்காததால், சகோதரிகளுக்கு லண்டனில் இலங்கை உணவகம் அமைக்க யோசனை தோன்றியுள்ளது.அதன் விளைவாக கறபிஞ்சா என்ற உணவகத்தை நிறுவியுள்ளனர்.
வசந்தினி, தர்ஷினி சகோதரிகளுக்கு தங்கள் தாயிடம் கற்ற தமிழர்களின் உணவு செய்முறையையும், தங்களை கவனித்துக்கொண்ட பெண்ணிடம் கற்ற சிங்களவர்களின் உணவு செய்முறையையும் உபயோகித்து முதலில் ஒரு உணவகம் ஆரம்பித்த சகோதரிகள், பின்னர் நான்கு உணவகங்களை அமைத்துள்ளனர்.
தங்கள் தாயைப் போலவே, உணவகத்துக்குத் தேவையான மசாலா பொடிகளையெல்லாம் தாங்களே தயார் செய்து, அப்படியே வீட்டுச் சுவையில் உணவுகளை தயாரித்து வழங்குகிறார்கள்.லண்டனில் வாழும் இலங்கையர்களும் தங்கள் ஊர் உணவை சுவைக்க ஓர் வாய்ப்பாக உள்ளது.
கொழும்பில் கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு – மருதானையில் நேற்று(31.09.2023) பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.சிறுமியின் சடலம் கொழும்பு பொரளை சிறுவர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விருத்தாசலத்தில் மனைவி சமைக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் தலையணையால் அமுக்கி மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முல்லை நகரை சேர்ந்தவர்கள் மூர்த்தி – அனுசியா தம்பதி. இவர்களது மூத்த மகள் புதுச்சேரியிலும், இளைய மகள் கோயம்புத்தூரிலும் இன்ஜினியரிங் படித்து வருகின்றனர.
வெளிநாட்டில் ஹோட்டல் நடத்தி வந்த மூர்த்தி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தில் சொந்த வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். மூர்த்திக்கும் அவரது மனைவி அனுசியாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுது வழக்கம். அனுசியாவுக்கு அவ்வப்போது மனநலம் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு அவர் மாத்திரைகள் சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
வெளியூரில் படிக்கும் இரு பெண் பிள்ளைகளும் ஆயுதபூஜை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் மூர்த்தியின் வீட்டின் வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசியுள்ளது.
புதுச்சேரியில் படிக்கும் மூத்த மகள் பவித்ரா வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளார் அப்பொழுது வீட்டின் உள்ளே கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. படுக்கையறைக்கு சென்று பார்த்தபோது அவரது தாய் அனுசியா அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் கூச்சலிட்டு அழுததும், அருகே இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்துள்ளனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அனுசியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுசியாவின் கணவர் மூர்த்தியை விருத்தாசலம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி சமைக்க மறுத்ததால் அனுசியாவுக்கும், மூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சமையல் செய்யாமல் படுக்கையறை கட்டிலில் அனுசியா படுத்து இருந்ததால் மூர்த்தி மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். அப்போது தலையணையை எடுத்து மனைவி அனுசியாவின் முகத்தில் அமுக்கி அவரை கொலை செய்ததாக மூர்த்தி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மனைவியை கொலை செய்து விட்டு அவரது உடலுடன் ஒரே வீட்டில் 4 நாட்கள் வசித்து இருக்கிறார் மூர்த்தி. போலீசார் சென்றபோதும் எந்த சலனமும் இல்லாமல் அவரது வேலைகளை செய்து கொண்டு இருந்துள்ளார் மூர்த்தி.
மூர்த்தியை கைது செய்த விருத்தாசலம் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மனைவியை கொலை செய்து அவரது உடல் அழுகும் வரை ஒரே வீட்டிலேயே கணவன் வசித்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் வானகம் பகுதியில் இயற்கை விவசாயி பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது கல்லூரி சார்பாக மாணவர்களை இன்டன்ஷிப் அனுப்புவது வழக்கம்.
அந்த வகையில் ராஜ்கமல் கல்லூரி சார்பாக இன்டன்ஷிப் வந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த வைசாலி என்பவருடன் நட்பு ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்த நிலையில் காதலாக மாறியது.
கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சாதிமறுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திட சுயமரியாதை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதனால் இவர்கள் காதல் குறித்து வீட்டில் பேசிய நிலையில் இரு வீட்டார் தரப்பிலும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
சேலம் சுப்பராயன் சாலையில் உள்ள பாரதியார் சிலை முன்பு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் உறுதிமொழி ஏற்றனர்.
பல லட்ச ரூபாய் செலவு செய்து திருமண முடிக்கும் இன்றைய காலகட்டத்தில் சில லட்சியங்களோடு சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியின் செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பெற்ற மகனை விற்பனை செய்ய தயாரான பெற்றோரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்றப்படுத்தியுள்ளது.இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோரே இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியில்லாத உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற தந்தை, காந்தி பூங்கா அருகே “என் மகன் விற்பனைக்கு” என்ற பதாகையை கழுத்தில் மாட்டிக் கொண்டு நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு சுமார் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை கடன் இருக்கும் நிலையில், கடன் அளித்தவர்கள் இவர்களுக்கு விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.இதனால் வழி தெரியாமல் திணறிய அலிகார் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது மகனை விற்கும் விபரீத முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இந்த தலைமுறையினர், தீராத மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிற போதும், அரசோ, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களோ, பெற்றோர்களோ இது குறித்து பெரியளவில் அக்கறை எடுத்துக் கொள்ளாமலேயே ஒரு தலைமுறையை சீரழித்து வருகிறோம்.
பணம் சம்பாதிப்பது குறித்தும், சந்திரயான் போன்று அறிவியல் வளர்ச்சி குறித்தும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்தும் கவலைப்படுகிற நாம், வரும் சந்ததியினரின் எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கறைக் கொள்வதில்லை.
வெகு இயல்பாய், தவறை உணர்ந்து, திருந்தி, கடந்து சென்ற தலைமுறை இப்போது கிடையாது. செல்போன் தராதது, தொலைக்காட்சியைப் பார்க்க அனுமதிக்காதது என்று எடுத்ததற்கெல்லாம் மன அழுத்தத்தில் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்.
சென்னையில் வீட்டு வேலை செய்யவில்லை என தனது தாய் கண்டித்ததால், கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி சத்திரம் ஏழாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் அதே பகுதியில் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி.
இவர்களுக்கு சிந்து(21)என்ற மகள் இருந்தார். இளம்பெண் சிந்து, செயின்ட் தாமஸ் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் எந்த வேலைகளையும் செய்வதில்லை என சிந்துவை அவரது தாயார் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போன்று நேற்றும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த சிந்துவை அவரது தாய் சுமதி, அடித்ததாக தெரிகிறது. இந்நிலையில், மதியம் சுமதி ரேஷன் கடைக்குப் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அவர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி விட்டு, வீட்டிற்கு திரும்பிய போது, மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிந்துவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிந்துவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் டி.பி சத்திரம் போலீஸார்.
சிந்துவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, சிந்துவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு முன்பு சிந்து எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.
அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சிந்து தற்கொலை குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகில் உள்ள அனைவரும் குறைந்த வேலை மற்றும் நல்ல வருமானத்துடன் வேலை பெற விரும்புகிறார்கள். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்து பட்டப் படிப்புகளை படித்து வருகின்றனர்.அதன் பிறகும் இன்டர்ன்ஷிப் செய்துவிட்டு எங்காவது சென்று வழக்கமான வேலையில் சேருகிறார்கள். இருப்பினும், பணம் சம்பாதிப்பதற்கு நிறைய நேரமும் அர்ப்பணிப்பும் தேவை.
இது தனியாக சாத்தியம், ஆனால் குடும்பத்துடன் வேலை செய்ய எல்லா நேரத்தையும் ஒதுக்குவது கடினம். குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் கடினமாகிறது.ஆனால் பட்டம் கூட படிக்காமல் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஆண்டுக்கு 50 லட்சம் மதிப்பிற்குரிய வேலையைச் செய்கிறார். இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், அவள் வாரத்திற்கு 6 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறாள்.
ரோமா நோரிஸ் (Roma Norris) என்ற 40 வயதான பிரித்தானிய பெண் பணம் சம்பாதிக்க ஒரு தனித்துவமான வழியைத் தேர்ந்தெடுத்தார். அவர் தனது புகைப்படங்கள் எதையும் விற்கவில்லை, சமூக ஊடகங்களில் பிரபலமானவர் கூட இல்லை, அவர் வேறு எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை.
ஆனால், வாரத்தில் 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்வதன் மூலம் ஒரு வருடத்தில் 50 லட்சம் ரூபாய் எளிதாக சம்பாதிக்கிறார். அதே சமயம் முழு நேரத்தையும் தன் குடும்பத்திற்காக ஒதுக்குகிறார்.
உண்மையில், ரோமா 17 ஆண்டுகளாக பெற்றோருக்குரிய ஆலோசகராக இருந்து வருகிறார். புதிய பெற்றோருக்கு நல்ல பயிற்சி அளிக்கிறார். அவர் ஒரு மணி நேரத்தில் £290 (ரூ. 29000) வரை சம்பாதிக்கிறார்.
ஒரு பெற்றோருக்குரிய ஆலோசகராக, அவர் புதிய பெற்றோருக்கு தங்கள் குழந்தையை எப்படி தூங்க வைப்பது, நல்ல புத்திசாலித்தனத்துடன் அவர்களை வளர்ப்பது எப்படி, சத்தான உணவை அவர்களுக்கு எப்படி ஊட்டுவது, அவர்களுடன் எப்படி நன்றாக தொடர்புகொள்வது போன்றவற்றை கற்றுக்கொடுக்கிறார்.இது தவிர தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதிலும் பயிற்சி அளிக்கிறார்.
புதிதாகப் பெற்றெடுத்த தம்பதிகள் அடிக்கடி பல பிரச்சனைகளுடன் அவர்களிடம் வருகிறார்கள். இன்னும் பலர் அவருடன் ஆன்லைனில் ஆலோசனை செய்கிறார்கள்.ஒரு வகையில், ரோமா இரண்டு முறை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியவர்.
வாழ்க்கையில் இரண்டு டிகிரி படிக்க நினைத்தாலும் சில காரணங்களால் அவரால் அதை முடிக்க முடியவில்லை. இப்போது பணம் சம்பாதிக்க எந்த பட்டமும் இல்லை, ஆனால் ரோமா தேர்ந்தெடுத்த பாதையால் மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
ரஷ்யாவில் 53 வயது பெண் தனது 22 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அனாதைகளை தத்தெடுப்பது புனிதமான செயலாகவே கருதப்படுகிறது. உலகில் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து சொந்த குழந்தைகளாக வளர்த்து, படிப்பை கற்றுக்கொடுத்து திறமையானவர்களாக மாற்றுபவர்கள் உலகில் ஏராளம்.
ஆனால் ரஷ்யாவில் வெளிவந்த ஒரு கதை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை அறிந்தாலும் மக்களால் நம்ப முடியவில்லை. ஏனெனில் இங்கு ஒரு பெண் தனது வளர்ப்பு மகனையே திருமணம் செய்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு தற்போது 53 வயது. ஆனால் அந்த பெண் மணந்த ஆணுக்கு 22 வயது. அதாவது இருவருக்குமான வயது வித்தியாசம் 31 ஆண்டுகள். அந்தப் பெண் டாடர்ஸ்தானைச் சேர்ந்தவர்.
இங்கு இந்த வித்தியாசமான திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்ததும் மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இணையத்தில் நெட்டிசன்கள் கடமையான விமர்சனங்களை வீசியுள்ளனர்.
அந்தப் பெண் டாடர்ஸ்தானைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் Aisylu Chizhevskaya Mingalim. ஐசிலு 8 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுவன் டேனியலை அனாதை இல்லங்களில் இசை கற்பிக்கும் போது சந்தித்தார்.
அவர் டேனியலின் ஆர்வத்தை அங்கீகரித்து அவருக்கு இசை கற்பித்தார்.இந்த நேரத்தில், டேனியல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றார். அவருக்கு 14 வயதாக இருந்தபோது அவர் ஐசிலுவால் தத்தெடுக்கப்பட்டார்.
அவர்கள் அன்றிலிருந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர், ஆனால் இருவரும் அக்டோபர் 20 அன்று ஒருவரையொருவர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
டேனியலுடனான தனது உறவு குறித்து நீண்ட நாட்களாக வதந்திகள் பரவி வருவதாகவும், எனவே இந்த திருமணத்தின் மூலம் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் ஐசுலு தெரிவித்துள்ளார். ஐசிலுவும் அவரது வளர்ப்பு மகனும் கடந்த வாரம் கசானில் உள்ள ஒரு உணவகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தின் காரணமாக, குழந்தைகள் நல அதிகாரிகள் இப்போது ஐசிலுவின் மற்ற ஐந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை (ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்கள்) கைப்பற்றியுள்ளனர்.
ஐசிலு இந்த முடிவைக் கண்டித்துள்ளார், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களின் உயிரியல் உறவினர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஐசிலு அந்த ஐந்து குழந்தைகளை மீண்டும் தன் பராமரிப்பில் வைத்திருக்க விரும்புகிறார். அவர் தனது குடும்பத்துடன் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு செல்ல நினைக்கிறார்.
அங்கு அவரது குடும்பம் இன்னும் ‘சுதந்திரமாக’ வாழ முடியும் என்று நம்புகிறார். ஐசிலுவிற்கு முந்தைய திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் விவரிக்கப்படவில்லை.
சென்னை திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
ஸ்ரீநிதி (வயது 19) என்ற மகளும் உள்ளார். அவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் உமா எழுந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள மற்றொரு அறையில் மகள் ஸ்ரீநிதி தாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த திருவேற்காடு போலீசார், ஸ்ரீநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி ஸ்ரீநிதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாணவி ஸ்ரீநிதியின் பெற்றோர், திருவேற்காடு போலிஸ் நிலையம் அருகே நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஏற்கனவே திருவேற்காடு, சிவசங்கர் நகர் பகுதியில் வினோத்-ரேவதி தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தோம். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக ரேவதியிடம் இருந்து 2 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து பணம் வாங்கினேன்.
இதற்கிடையில் அந்த வீட்டை காலி செய்துவிட்டு, இந்த வீட்டுக்கு குடியேறி வந்துவிட்டோம். இந்தநிலையில் வினோத், தனது மனைவியிடம் இருந்து நாங்கள் 7 பவுன் நகை வாங்கிவிட்டு திருப்பி தரமறுப்பதாக திருவேற்காடு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலிசார் எங்களை குடும்பத்தோடு போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இந்த புகாரில் தனது குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விடுவார்களோ?என்ற அச்சத்தில் எனது மகள் ஸ்ரீநிதி இருந்து வந்தாள். அதில் ஏற்பட்ட மனஉளைச்சலில்தான் அவள் தற்கொலை செய்திருக்கலாம்.
தற்கொலைக்கு முன்பாக எங்கள் தரப்பு நியாயத்தை போலிஸ் அதிகாரி ஒருவரிடம் எனது மகள் செல்போனில் தெரிவித்தாள். எனது மகள் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
எனது மகள் பேசிய போலிஸ் அதிகாரி யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும். எனது மகள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உடல் நலக்குறைவால் மனைவி இறந்து விட்ட நிலையில் அவரது அழுகிய உடலுடன் கணவர் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (59). இவருக்கு, அனுசியா என்ற மனைவியும், கல்லூரியில் படித்துவரும் இரு மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி உடன் மூர்த்தி பேசிக் கொள்வதில்லை என கூறப்படுகிறது.
இந்த சூழலில், தைராய்டு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அனுசியா படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். அது தெரியாமல் மூர்த்தி தனியறையிலேயே வசித்து வந்துள்ளார்.
இதனிடையே, வார விடுமுறைக்காக அவரது மூத்த மகள் நேற்று இரவு வீட்டிற்கு வந்த நிலையில், வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்து அனுசியாவை பார்க்க சென்றார்.
அப்போது, அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து விருத்தாசலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவி இறந்ததுகூட தெரியாமல் வீட்டிலேயே வசித்து வந்த மூர்த்தியை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.
பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் 5 நாட்கள் நாடகமாடியது தேனி பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. ஒரு சில மாதங்களிலேயே கர்ப்பமான அவர் பிரசவத்திற்காக தாய் வீடு உள்ள கம்பம் கிராமச்சாவடி பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் கடந்த மாதம் சினேகாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து வீடு திரும்பியவர் சினேகா தனது தாய், தந்தை மற்றும் பாட்டியோடு வசித்து வந்துள்ளார்.
தாய், தந்தை இருவரும் கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் பாட்டி சரசு என்பவர் துணைக்கு உடன் இருந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி காலையில் குளிக்க சென்றதாகவும் திரும்பி வந்த பார்த்த போது குழந்தையை யாரோ தூக்கு சென்றுவிட்டதாக சினேகா அலறி துடித்துள்ளார்.
இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சினேகாவின் வீட்டிற்கு சென்று விசாரித்த போது குழந்தையின் மீது இரண்டு துணிகள் போர்த்தப்பட்டிருந்ததாகவும், தற்போது ஒரு துணி மட்டுமே உள்ளது என்றும் மற்றொரு துணி வெளியே கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது அவ்வழியாக மர்ம நபர்கள் ஒரு சிலர் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததால் பரபரப்பு அதிகரித்தது. குழந்தையை யாரேனும் கடத்தி சென்று விட்டார்களோ என சந்தேகம் எழுந்ததையடுத்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் குடுகுடுப்பைக்காரர்கள் போல் சுற்றித்திரிந்த அனைவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். வழக்கில் எந்த வித முன்னேற்றமு் இல்லாத காரணத்தால் சினேகாவின் வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சோதனை செய்தபோது வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நீர் நிறைந்திருந்த பால் கேனிற்குள் குழந்தை சடலமாக கிடந்துள்ளது.
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குழந்தையை பால் கேனிற்குள் போட்டது யார் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். சினேகாவின் பாட்டி சரசு மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரை தொடர்ந்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் கடந்த 5 நாட்கள் நடந்த விசாரணைக்கு பின்னர் நேற்று குழந்தையை பால் கேனிற்குள் போட்டு கொலை செய்தது குழந்தையின் தாயான சினேகா தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
பாட்டியை கடைக்கு அனுப்பி வைத்து விட்டு குழந்தையை பால் கேனிற்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் குளிக்கச் சென்று நாடகமாடியது தெரிய வந்தது.
குழந்தையை கொலை செய்தது சினேகாவின் பாட்டி தான் என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை செய்து வந்த போது,சினேகா எதுவும் தெரியாத அப்பாவி போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனையடுத்து நேற்று இரவு சினேகாவை போலீசார் கைது செய்த நிலையில் அவர் எதற்காக குழந்தையை கொலை செய்தார்?என்ற கோணத்தில் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 423 ரூபாவாகும்
இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 356 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 431 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒசூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் கூறியும் நடவடிக்கை இல்லை எனக்கூறி தங்கை, அம்மா இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உங்கட்டி கிராமத்தை சேர்ந்த கிரி(21) என்னும் இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை விபத்தில் தலையில் காயமடைந்த கிரி கோமோ விற்கு ஆளாகி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, செப்டம்பர் மாதம் 7ம் தேதி உயிரிழந்தார். கிரிக்கும் வேறு நபருக்கு சண்டை இருந்ததால் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் தங்கை 12ம் வகுப்பு படித்து வந்த காவ்யா(17) அம்மா காமாட்சி(40) ஆகிய இருவரும் சூளகிரி போலிசில் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளை காண்பிக்குமாறு கூறியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கிரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பிய இவர்கள் இன்றும் சூளகிரி காவல் ஆய்வாளரை சந்தித்து வந்து, மனமுடைந்து போகினர். ஏற்கனவே தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது. என் அண்ணன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கடிதம் எழுதி வைத்துள்ள தங்கை காவ்யா.
எனது சாவிற்கு யாரும் காரணமில்லை, தற்போது அண்ணனுடன் நாங்கள் என மூன்று உயிர்கள் போன பின்பு இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா என்றும், என் அண்ணன் கிரி வாங்கி கொடுத்த Chain கழுத்தில் அணிந்துள்ளேன் நான் இறந்த பிறகும் அதை அகற்ற வேண்டாமென உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அம்மா, மகள் இருவரும் புடவையில் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சீதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சிலம்பரசன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் பிரதீபா அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
தாய் பொன்மணி பிரதீபா மற்றும் பக்கத்து வீட்டு சிறுமியை பள்ள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது கனகம்மாசத்திரம் வழியாக செல்லும் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அந்த நேரத்தில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் சிறுமி பிரதீபா மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிறுமி சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தாய் கண் முன்னே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
மகள் இறந்ததை கண்டு தாய் துடிதுடித்து கதறி அழுதார். இச்சம்பவம் காண்பவர்களை கண்கலங்க செய்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த குன்னவளம் கிராமத்தைச் சேர்ந்த மதன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமியின் உயிரிழப்பிற்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேகத்தடை அமைக்க உறுதி அளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெருமளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி பெண் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
ஒரு பெண் பிணமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா? என்று போலீசார் விசாரித்தனர்.
ஆனால் பெண் யார் என்ற விவரம் போலீசாருக்கு ஆரம்பம் முதலே தெரியவில்லை.. பெண்ணின் உடலை கேட்டு யாருமே வராத நிலையில், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் என வட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அந்த பெண் யார் என்று வந்தவாசி போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த 39 வயதாகும் ஜெயராமன் (வயது 39) என்பவர், சீர்காழி காவல் நிலையத்தில் தனது மனைவி நித்தியாவை (34) ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முதல் காணவில்லை என்று செப்டம்பர் மாதம் 13-ந் தேதி புகார் கொடுத்தார்..
அதன்பேரில் போலீசார் நித்தியாவின் புகைப்படத்தை வைத்து விசாரித்தனர்.. மேலும் அந்த புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தார்கள்.
இந்த நிலையில் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு நித்தியாவின் புகைப்படம் மெயிலில் வந்தது. அந்த புகைப்படமும் வெண்குன்றம் தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நித்தியாவின் சொந்த ஊர் வந்தவாசி என்றும், அவரது தாய் சாந்தி என்பதும் தெரிய வந்தது. ஏப்ரல் மாதமே இறந்த நித்யாவை ஆகஸ்ட் மாதம் முதல் காணவில்லை என்று கூறியதால் சந்தேகம் அடைந்த போலீஸார், அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்தார்கள்.
அதைத்தொடர்ந்து போலீஸார் நித்தியாவின் தாய் சாந்தி தொலைபேசியை ஜெயராமனுடன் பேச வைத்தனர். அப்போது அவர் வந்தவாசிக்கு வர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஜெயராமன் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் பஸ்சில் இறங்கும்போது போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசார் சந்தேகப்பட்டது போல் பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் அம்பலமானது. நித்யாவுக்கும் சீர்காழியில் வசித்து வந்த ஜெயராமனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.
ஜெயராமன் சீர்காழியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நித்யாவுக்கும் ஜெயராமனுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நித்தியா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவாராம்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி நித்தியா வீட்டை விட்டு வெளியே சென்றவர், அடுத்த நாளே அதாவது ஏப்ரல் 17-ந் தேதி ஜெயராமனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் வந்தவாசியில் இருக்கிறேன். என்னை வந்து அழைத்து செல்லுமாறு நித்யா கூறினாராம்.
இதையடுத்து ஜெயராமன் வந்தவாசிக்கு வந்ததும், நித்தியா அவரை அழைத்துக் கொண்டு தவளகிரி மலை கோவிலுக்கு போயிருக்கிறார். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெயராமன் நித்யாவை 1000 அடி உச்சயில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி உள்ளளார்.
பின்னர் மனைவியை காணவில்லை என்று சீர்காழி போலீசில் மூன்று மாதம் கழித்து புகார் அளித்துள்ளார் . காணவிலை புகார் கொடுத்த மாதம், சொன்ன விஷயமே எல்லாமே பொய்யாக இருந்தததால் சிக்கி உள்ளார் ஜெயராமன். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.