26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

ஜார்ஜியாவில்..

ஜார்ஜியா நாட்டில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜார்ஜியா நாட்டில் வசித்து வரும் ரஷ்யாவை சேர்ந்த 26 வயதுடைய கிறிஸ்டினா ஓஸ்டுர்க் என்ற இளம்பெண், 58 வயதுடைய காலிப் ஓஸ்டுர்க் என்ற ஆணுடன் திருமண உறவில் இருந்து வருகிறார்.

கோடிஸ்வரரான காலிப் ஓஸ்டுர்க் பல ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் மனைவி கிறிஸ்டினாவுக்கு 105 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு கணவர் காலிப் ஓஸ்டுர்க் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மனைவி கிறிஸ்டினா தற்போது தன்னுடைய 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். முதலில் பிறந்த குழந்தை மட்டுமே கிறிஸ்டினா-வின் நேரடி பிரசவத்தில் பிறந்தது.

அந்த குழந்தைக்கு தற்போது 9 வயது ஆகிறது. மற்ற 21 குழந்தைகளும் வாடகை தாய் முறையில் பெற்றெடுத்து கிறிஸ்டினா தற்போது 22 குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

அத்துடன் கிறிஸ்டினா தன்னுடைய 22 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், தனக்கு 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆசை, எனவே 100 குழந்தைகளை தாண்டி பெற்றுக் கொள்ளும் வரை இதனை நிறுத்த மாட்டேன் என கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்.. வீட்டுக்குள் நுழைந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அருகே கணவனுக்குத் தெரியாமல் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞரை வீட்டுக்கு வரவழைத்த பெண், அதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா (33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நதியா பதிவு செய்யும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (20) அவ்வப்போது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக பிரகதீஸ்வரன், தனது சொந்த வேலை காரணமாக திருப்பத்தூர் வருகிறேன் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து நதியா தனது கணவனுக்குத் தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு கடந்த 27 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் பிரகதீஸ்வரனை வரவழைத்து உள்ளார்.

அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ்வரன் நதியாவை பார்த்து கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் தங்க நகையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு நதியா தன்னுடைய தாலி செயின் மட்டும் தங்கம் என கூறியுள்ளார்.

அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நதியாவின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் பிரகதீஸ்வரன். இதனால் அதிர்ச்சி அடைந்த நதியா இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து நதியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று (அக் 31) பிரகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நதியாவின் மூன்றரை பவுன் தாலி செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தற்போது முடக்கியுள்ளார் நதியா. இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு வீட்டிற்கு வரவழைத்த வாலிபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த 16 வயதுச் சிறுமி!!

இந்தியாவில்..

இந்தியாவின் மும்பையை சேர்ந்த கிரிஷா என்ற 16 வயது சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார். மும்பை கண்டிவாலி பகுதியை சேர்ந்த கிரிஷா என்ற 16 வயது சிறுமி கிட்டத்தட்ட 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.

11ம் வகுப்பு படிக்கும் கிரிஷா முதலில் 16 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். ஆனால் 16 நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகும் கிரிஷாவின் உடலில் எந்தவொரு பாதிப்பு ஏற்படாததை தொடர்ந்து, அவரது ஆன்மீக குருவின் அறிவுரையின் அடிப்படையில் உண்ணாவிரதத்தை 31, 51, 71 என நாட்களை நீடித்துள்ளார்.

கடந்த ஜுலை 11ம் திகதி கிரிஷா தன்னுடைய உண்ணாவிரத்தை தொடங்கிய நிலையில், இறுதியில் 110 நாட்களுக்கு பிறகு நிறைவு செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

கிரிஷா இந்த உண்ணாவிரத்தால் 18 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் உண்ணாவிரதத்திற்கு பிறகு பேசிய கிரிஷா, மன உறுதி மற்றும் மன ஒருமைப்பாடு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை தன்னுடைய உண்ணாவிரதம் எடுத்துக் காட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

கிரிஷா தன்னுடைய உண்ணாவிரத காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 6:30 மணி வரை வெறும் சுடு தண்ணீரை மட்டுமே அருந்தியுள்ளார். கிரிஷாவின் இந்த சாதனையை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.

பிரபல திரைப்பட நடிகை எடுத்த விபரீத முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

கேரளத்தில்..

சமீபமாக மன அழுத்தம் காரணமாக நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. கேரளத்தில் பிரபல மலையாள திரைப்பட நடிகை ரெஞ்சுஷா மேனன் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மலையாள திரைப்பட ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய துவங்கிய ரெஞ்சுஷா மேனன், தன்னுடைய முயற்சியினால் மலையாள திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார்.

அற்புததீவு, பாம்பே மார்ச், காரியஸ்தன், ஒன் வே டிக்கெட், சிட்டி ஆப் கார்ட் போன்ற மலையாள படங்களில் அவர் துணை நடிகை வேடங்களில் நடித்துள்ளார். திரையுலக அறிமுகம் காரணமாக அவருக்கு சின்ன திரையில் ஏராளமான வாய்ப்புகள் குவிய துவங்கியதில் அடுத்தடுத்து பல சீரியல்களில் அவர் நடித்து வந்தார். மேலும் சில சீரியல்களை அவர் தயாரித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 வயதான ரெஞ்சுஷா மேனன் சீரியல்கள் தயாரித்து வந்ததில், பண நெருக்கடியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெஞ்சுஷாவின் மரணம் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக யுவதியை கடத்திய இளைஞன் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி நேற்று அதிகாலை 1 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் திபுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உயிரைப் பறித்த முறைகேடான உறவு : கொலை செய்த மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

மாவனல்லையில்..

தனது சொந்த கணவரை திட்டமிட்டு கொலைசெய்த பெண்ணொருவரை மாவனல்லை பொலிஸார் தீவிர விசாரணைகளின் பின்னர் கைதுசெய்த்துள்ளனர். குறித்த பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கார் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி கணவனை கொன்ற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த நபரின் மனைவி, அவரது முறைகேடான கணவன் மற்றும் மற்றுமொரு நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் நேற்று (30.10.2023) உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி மாவனல்லை, கலதர பிரதேசத்தில் வீதிக்கு அருகில் காயங்களுடன் விழுந்து கிடந்த நபர் ஒருவர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.

இதனடிப்படையில், மரணம் தொடர்பில் கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய வளாகத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அங்கு அறிக்கை வழங்கப்பட்டது. அதன்படி, உயிரிழந்தவரின் மனைவி சடலத்தை பெற்று இறுதிக் கிரியைகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மூன்று மாதங்களாக மாவனல்லை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், உயிரிழந்தவரின் மனைவியின் தொலைபேசி பதிவுகளை ஆராய்ந்து இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இறந்தவரின் மனைவி தனது முறைகேடான கணவருடன் சேர்ந்து கார் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி அவரை கொலை செய்ய முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் 43 வயதான கெமுனு குமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

பின்னர், மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கொலையுடன் தொடர்புடைய மனைவியான 41 வயதுடைய பெண் மற்றும் அவரது முறைகேடான கணவர், ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி ஆகியோர், கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவர் பேசாமையினால் இலங்கையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

யக்கலமுல்லயில்..

யக்கலமுல்ல பிரதேசத்தில் வெளிநாட்டில் இருக்கும் பெண் ஒருவர் ஒருவாரமாக தன்னிடம் பேசுவதில்லை எனக்கூறி 40 அடி உயர மாமரத்தில் ஏறி உயிரை மாய்க்க முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். வட்ஸ்அப் மூலம் குறித்த பெண்ணிடம் பேச வைத்து அவரை மரத்திலிருந்து கீழே இறங்க வைத்து காப்பாற்ற பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

குவைத்தில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவருடன் அக்மீமன ஹியாரே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் இரகசிய தொடர்பு வைத்திருந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், சுமார் ஒரு வாரமாக இவருடன் பழகிய பெண் பேசாமல் இருந்துள்ளார்.

இதன் காரணமாக நாகியாதெனிய பிரதேசத்தில் உள்ள தோட்ட வீடுகளுக்கு அருகில் உள்ள நாற்பது அடி மாமரத்தின் கிளையில் கயிற்றை எடுத்து அமர்ந்து தற்கொலை செய்து கொள்வதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

தான் காதலிக்கும் பெண் தன்னிடம் பேசாமல் இருந்தால் வாழ்வதில் அர்த்தமில்லை என்று கூறியுள்ளார். இச்சம்பவம் யக்கலமுல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, யக்கலமுல்ல பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சந்தன ஹேவகே சம்பவ இடத்திற்குச் சென்றார்.

நிலைமையை ஆராய்ந்துவிட்டு, வெளிநாட்டில் இருந்தவரை தற்கொலை செய்யப்போகும் நபருடன் தொலைபேசியில் இணைத்து, மரத்தில் இருந்து தரையில் இறக்கி, பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர் இந்த நபரின் மனநிலையை பரிசோதிக்க மனநல மருத்துவரிடம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

யாழில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து!!

யாழில்..

யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை பயணிகள் பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று(31.10.2023) காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து பேருந்தில் சிக்கிய பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் அப்பகுதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பூநகரியில் இன்று இடம் பெற்ற விபத்து : மூவர் படுகாயம்!!

பூநகரியில்..

பூநகரி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் இன்று(30) இடம் பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று மதியம் 12மணியளவில் நாச்சிக்குடா சந்தியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஹோட்டலுக்கு முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளிளும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதாகவும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் காதலால் நேர்ந்த விபரீதம் : பெற்றோரே அவதானம்!!

முகநூல்..

முகநூல் மூலமாக அறிமுகமான 16 வயது பாடசாலை மாணவியுடன் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு காதலி மற்றும் அவரது 13 வயது சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக பண்ம் பெற்ற இளம் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்ஸப் மூலமாக தனது தொலைபேசியில் பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கில் வைப்பு செய்ய கட்டாயப்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வடக்கில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும், குளியாபிட்டிய பிரதேசத்தை 21 வயது இளம் இராணுவ சிப்பாய் என கூறப்படுகின்றது.கைதான சிப்பாய் 16 வயது சிறுமியுடன் முகநூல் மூலமாக காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் இதுவரை சந்தித்தது இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாயிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழில் தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கிய 10 வயது சிறுமி உயிரிழப்பு!!

யாழில்..

தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தண்ணீர் தாங்கி வீதி, குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது 10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சென் ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் தரம் 5இல் கல்வி கற்று வரும் குறித்த சிறுமி வீட்டில் இருந்தபோது கடந்த 21ஆம் திகதி காலை 5 மணியளவில் தலையில் விறைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கியுள்ளார். இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (29.) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.இதையடுத்து இடம்பெற்ற பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

திருமண வீட்டில் விருந்து சாப்பிட்ட யுவதிக்கு நேர்ந்த சோகம்!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் திருமண நிகழ்வில் இறைச்சி உட்பட பல வகையான உணவுகளை உட்கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். உணவு உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார்.திருமண விருந்தில் உணவுக்காக கிடைத்த இறைச்சி வகையை சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி குலேந்திர பிரேமதாச மேற்கொண்டார்.

மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா தபால் நிலைய ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!!

வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (30.10) மதியம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரியும், அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்தும் நாடு பூராகவும் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, ”20 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கு, வாழ்க்கைச் செலவை குறைத்திடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கு, மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தபால் நிலைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி இன்னகந்த பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.பெண் ஒருவர் நேற்று(29) தாக்குதலுக்கு உள்ளாகி தரையில் விழுந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அயகம பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காயமடைந்தவர் பொலிஸ் அதிகாரிகளினால் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.அயகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இனகந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.குடும்ப தகராறு காரணமாக தகாத உறவில் இருந்த கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை உட்பட மூவரை கொடூரமாக தாக்கிய நபர் : இளம் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

ஹிங்குரக்கொடயில்..

ஹிங்குரக்கொட பகுதியில் பெண் ஒருவர் நேற்று மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.யுதகனாவ பிரதேசத்தில் 27 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் அவரது ஒன்றரை மாத குழந்தையும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளது.குழந்தை தற்போது மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது. உயிரிழந்த பெண்ணின் தந்தையும் பெண்ணை தாக்கிய அதே மண்வெட்டியால் தாக்கப்பட்டமையினால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மேலதிக சிகிச்சைக்காக பொலநறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.பணம் காணாமல் போனமை தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த கொலை தொடர்பில் பதில் நீதவான் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஏ9 வீதியில் பாலத்திற்குள் பாய்ந்த சொகுசுக் கார்!!

வவுனியா- ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து சாந்தசோலை சந்திப் பகுதியில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (30.10) காலை இடம்பெற்ற நிலையில் சொகுசுக் காரில் பயணித்த இருவரும் மயிரிழையில் எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

வவுனியாவில் இருந்து கனகராயன்குளம் நோக்கி ஏ9 வீதியால் சென்ற சொகுசுக் கார் ஏ9 வீதி சாந்தசோலை சந்தியை அடைந்த போது அதே வழியில் சென்ற கனரக வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூண் ஒன்றை உடைத்துக் கொண்டு பாலத்திற்குள் பாய்ந்து விபத்துள்குள்ளானது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த சொகுசுக் காரை பாரம் தூக்கியின் உதவியுடன் மீட்டெடுத்தனர்.

விபத்தின் போது குறித்த சொகுசுக் காரில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த பிரித்தானிய குடியிரிமை பெற்ற ஒருவரும், பிறிதொரு இளைஞரும் பயணித்ததுடன், அவர்கள் எந்தவித பாதிப்புக்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.