மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ஆம் வருடத்தில் பயிலும் 22 வயதான மாணவியே உயிரை மாய்த்துள்ளார்.
உயிரிழந்த மாணவி மட்டக்களப்பு பழுகாமம் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் என கூறப்படுகின்றது.மாணவியின் குடும்பம் கண்டியில் வசித்து வந்த நிலையில் , பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து படிப்பை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையிலையே இந்த விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் எரிவாயு விலையை அதிகரிக்க நேரிட்டதாக தெரிவித்த அதிகாரி, லிட்ரோ எரிவாயு நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் தற்போது எரிவாயு விலையை உயர்த்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
லிட்டர் எரிவாயு விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் (05.11.2023) ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
லிட்ரோ நிறுவனம் கடந்த (05.10.2023) ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அதிகரிப்புடன் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3,470 ரூபாவாக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கொழும்பு, கிருலப்பனையில் தனது சகோதரனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்ட சகோதரனின் சடலத்தை பார்க்க சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொலை செய்த சந்தேக நபர் மரண வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார். கிருலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் அமில சந்தருவன் என்ற 29 வயதுடைய நபரே கடந்த 16ஆம் திகதி அவரது மூத்த சகோதரரால் கொலை செய்யப்பட்டார்.
முச்சக்கரவண்டியில் தமது பிள்ளையை முன்பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த மூத்த சகோதரன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.சொத்துப் பிரச்சினையால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது, கொலைக் குற்றத்திற்காக மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சகோதரன், தன்னால் கொல்லப்பட்ட சகோதரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வீட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
தம்பியின் போதை பொருள் பழக்கத்தால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தான் தவறுதலாக கொலை செய்துவிட்டதாகவும் சந்தேக நபரான சகோதரன் கதறி அழுதுள்ளார்.
ஒரே பெண்ணை, நண்பர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தனது நண்பனைக் கொலைச் செய்து, காவல் நிலையத்திற்கு தூக்கிச் சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் வேதாந்த் ராஜா. 18 வயதாகும் வேதாந்த், தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வேதாந்தின் தந்தை நியூசிலாந்தில் தொழிலதிபராக உள்ளார்.
வேதாந்த் ராஜாவின் நண்பர் ஸ்வப்னில் பிரஜாபதி. 22 வயதான இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இவரது தந்தை ஹஸ்முக் பிரஜாபதி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள சோலா காவல் நிலையத்திற்கு சென்ற வேதாந்த் ராஜா, வெளியே நிற்கும் காரில் தனது நண்பனின் உடல் இருப்பதாகவும், அவரை பலமுறை கத்தியால் குத்தி கொலைச் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக காரில் சென்று பார்த்த போது, அதில் ஸ்வப்னில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டனர். உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், வேதாந்த் ராஜாவைக் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக இருவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்துள்ளதும் தெரிய வந்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம் சனிக்கிழமை ஸ்வப்னிலுக்கு போன் செய்து அழைத்த வேதாந்த் ராஜா, விஸ்வர்கர்மா மேம்பாலம் அருகே அவரை வரவழைத்து கொன்றது தெரியவந்தது. தான் காதலித்த பெண்ணையே நண்பரும் காதலித்ததால் ஆத்திரமடைந்த இளைஞரின் செயல் அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏலூர்பட்டியை அடுத்துள்ள குண்டுமணிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் வேதாச்சலம். இவர் மர வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா.
இவர்களுக்கு 8வயதில் சிந்துஜா , 6 வயதில் சஹானா என இரு மகள்கள். இருவரும் குண்டுமணிப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் சிந்துஜா 3ம் வகுப்பும் சஹானா 1ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் 14-ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாட சென்ற சஹானா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடினார்கள். பின்பு குண்டுமணிப்பட்டியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட கடந்த வெள்ளிக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் 12 அடி ஆழத்தில் குழித்தோண்டப்பட்டு உள்ளது.
இந்த குழியில் நேற்று முன்தினம் பெய்த மழை நீர் தேங்கி குழி தெரியாமல் இருந்து வந்தது இந்த குழியின் விளையாடிக் கொண்டிருந்த சஹானா எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டார்.
குழி ஆழமாக இருந்ததாலும் மழை நீர் தேங்கி இருந்ததால் குழியின் நீரில் சஹானா மூழ்கி விட்டார். உடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சஹானாவை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சஹானாவை பரிசோதித்த மருத்துவர் சஹானா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்.
அங்கன்வாடி அமைக்க தோண்டப்பட்ட குழியில் குழந்தை விழுந்து இறந்தது முழுக்க எந்தவிதமான தடுப்புக்களும் அபாய வாசகம் அடங்கிய அட்டைகளும் வைக்கவில்லை.
அங்கன்வாடி மையம் கட்ட காண்ட்ராக்ட் எடுத்தவரே முழு பொறுப்பு என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கன்வாடி அமைக்க தோண்டப்பட்ட குழுவின் மிக அருகில் குழந்தைகள் மையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் அதிகம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தடுப்புகள் வைத்திருந்தால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்ப்பட முடியாத நிலமைக்கு எதிர்ப்புதெரிவித்தும், வடக்கு கிழக்கில் முன்னெடுக்குப்பட்டும் பௌத்த மயமாக்கல், செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியாவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.
அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிககுறைவாக காணப்பட்டது.
இதேவேளை அரச பேருந்துச்சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்துச்சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்றுவருகின்றமையால் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்தது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதேவேளை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து சட்டத்தரணிகளும் விலகியிருந்தனர்.
மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான நெடுங்கேணி, செட்டிகுளம், கனகராயன்குளம் உட்பட ஏனைய உப நகரங்களின் வழமையான செயற்ப்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன்,வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், முஸ்லீம் மக்கள், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
4 வயது மகளுடன் தந்தை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கட்டக்குடியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (34).
இவரது மனைவி இவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றிருந்த மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பால்ராஜ் அழைத்திருக்கிறார். அதற்கு அவரது மனைவி வர மறுத்துள்ளார். இதனால் இருவரிடையே மீண்டும் சண்டை முற்றியுள்ளது.
இதனையடுத்து தன்னை கணவன் கொலை செய்ய முயற்சிப்பதாக பால்ராஜ் மனைவி இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பால்ராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்த பால்ராஜ் விரக்தியில் காணப்பட்டார். துக்கத்தில் இருந்த பால்ராஜ் அவரது நான்கு வயது மகள் நிரஞ்சனாவுடன் நேற்று மாலை குளிக்க செல்வதாக கூறிவிட்டு ஊரில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார்.
அவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை இருவரது உடல்களும் குளத்தில் மிதப்பதை கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இறந்த நிலையில் இருந்த சடலைத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக மாவட்டம், திருப்பத்தூரில் கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்த தாய் மாமன், மாணவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். இந்த பெண்ணின் தாய் மாமான் சரண்ராஜ் (35) புகைப்பட கலைஞராகவும், ஓட்டுநராகவும் வேலை செய்து வந்தார்.
இவர், தனது அக்கா மகளை ஒரு தலையாக காதலித்து வந்தார். இது பற்றி தனது அக்காவிடம் கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், 17 வயது குறைவான தனது மகளை திருமணம் செய்துவைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அவரது பெற்றோர் வேலைக்கு சென்றிருப்பதை அறிந்த சரண்ராஜ் இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஆனால், கல்லூரி மாணவி அதை மறுக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதன்பிறகு, பெண்ணின் உடலுக்கு அருகில், தானும் செத்துப்போவதாக கூறி கடிதம் ஒன்றை வைத்துவிட்டு செல்போனை வீசிவிட்டு சென்றுள்ளார்.
தகவரிலறிந்த நாட்றம்பள்ளி பொலிசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தாய்மாமன் சரண்ராஜை பொலிசார் தேடி வந்தனர். அவர், ஒரு டீக்கடையில் இருப்பதை கண்ட பொலிசார் கைது செய்தனர். அப்போது, தான் விஷம் குடித்துவிட்டதாக சரண்ராஜ் கூறியதால், மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சரண்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கு முன்னதாக சரண்ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், வாழும் போது ஒன்றாக வாழ முடியவில்லை, செத்த பிறகாவது ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், எனது உடலை என் அக்கா மகளோடு சேர்த்து புதைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
திருகோணமலை நகரில் உள்ள பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார்.
இந்நிலையில் சாப்பிட பார்சலை பிரித்தவருக்கு அதில் மட்டத்தேள் இருந்தமையை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தொடர்ப்பு பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.
உடனடியாக குறித்த பிரபல உயர்தர சைவஹோட்டலிற்கு விரைந்த பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை திருகோணமலை நகரில் குறித்த சைவ ஹோட்டல் மிக பிரபலம் என கூறப்படும் நிலையில், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் உணவுகளை சமைப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேரவில் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி இல்லாமையால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற இத் துயர சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதேசமே வேரவில் பிரதேசமாகும். அம்மக்களின் வைத்திய தேவைகளை மிக நீண்ட ஆண்டுகளாக முன்னெடுக்கும் பிரதேச வைத்தியசாலைக்கு கடந்த 3 வருடங்களாக நோயாளர் காவு வண்டி இல்லை.
அதற்கு பதிலாக பொருத்தமற்ற வாகனம் ஒன்று தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இடம்பெற்ற போது, வாகன வசதி ஏதும் இல்லாமையால் விபத்துக்குள்ளான நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியாது போனது.
அதனால் 1990 வாகனத்தின் உதவியுடன் அழைத்து சென்றபோதிலும் விபத்தில் சிக்கிய குடும்பஸ்தரின் உயிர் இடைநடுவில் பிரிந்ததாக உறவினர்க?ள் வேதனை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இந்நிலையில் இவ்வாறான இழப்புக்களை இனியும் அனுமதிக்காதிருக்க எமது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி ஒன்றை வழங்க வேண்டும். கற்பிணி பெண்களிற்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டி ஏற்பட்டால் மிக மோசமான சம்பவங்களும் நடைபெறும் அபாயம் உள்ளது.
நாம் தொடர்ந்தும் அச்சத்துடன் இருக்கின்றோம் எனவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.மேலும் சம்பவத்தில் உயிரிழந்த சிதம்பரநாதன் வர்மக்குமாரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன் தினம்(17) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகேகொடை நாவல வீதியில், கால் மசாஜ் என பதாகை வெளியிட்டு பெண்கள் விற்பனை செய்யப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.அங்கு நீண்ட காலமாக பிரபலங்களுக்கும் – கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் பெண்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் 14 பெண்களும் அவர்களது முகாமையாளரும் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.பெண்கள் மற்றும் மேலாளரை கைது செய்ததை அடுத்து, அந்த இடத்தை சோதனை செய்ததில், கருத்தடை உறைகள் உட்பட பாலியல் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இணையதளத்தில் விளம்பரம் செய்து, ஆயுர்வேத கால் மசாஜ் செய்ய அழைப்பேற்படுத்திய பின்னர் வரும் நபர்களிடம், அதிக விலைக்கு பெண்கள் விபச்சாரத்துக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண்களை அந்த இடத்திற்கு மேலதிகமாக வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தில் வெவ்வேறு வயது வரம்புக்கு ஏற்ப 7,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரையிலான விலையில் பெண்கள் பணத்துக்கு விற்கப்படுகின்றது.அந்த இடத்தில் சேவையைப் பெற்றால் அறைக்கான வாடகை கட்டணமும் செலுத்த வேண்டும்.
குறித்த இடம் இரவு விடுதி போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கைகள் வசதியாக அமைக்கப்பட்டிருந்ததால், அரை இருண்ட மின்விளக்குகளை பொருத்தி மென்மையான இசை கேட்கும் வகையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பெண்ணை தேர்வு செய்யும் வகையில் வரிசையாக அமர வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 20 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இரத்தினபுரி, நுவரெலியா, ஹட்டன், பொகவந்தலாவை, நீர்கொழும்பு, அவிசாவளை, கேகாலை, குருநாகல் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்கள் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் வேலை செய்வதாக வீடுகளில் கூறிவிட்டு வந்து தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த இடத்தை சோதனையிட்ட போதும் பல சொகுசு கார்கள் அவ்விடத்திற்கு வந்து திரும்பிச் செல்வதைக் காணமுடிந்ததாக சோதனையை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் முகாமையாளரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக நுகேகொட பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொத்மலை – ஹதுனுவெவ பிரதேசத்தின் குடிநீர் கிடைக்கும் இடங்கள் திடீரென மர்மமான முறையில் வற்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தின் அடியில் கேட்கும் மர்மமான மற்றும் பயங்கரமான சத்தங்களால் இந்த நாட்களில் கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பழங்காலத்திலிருந்தே இந்தப் பகுதியில் அன்றாடம் உபயோகித்து வந்த நீர் நிலைகள் திடீரென வறண்டு போனது ஆச்சரியமாக உள்ளதென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் 4 நாட்கள் உறங்காமல் ஒரே இடத்தில் இரவு பகலாக கலந்துரையாடி தீர்வு காணவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கொத்மலை – ஹதுனுவெவ, வெத்தலாவ பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் தெரிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர், மழைக்காலத்தில் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளே இருந்து மிக பயங்கரமான சத்தம் கேட்டு அவதிப்படும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதி கட்டிட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகும்.
அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே தங்கள் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்தவொரு ஆபத்தான அல்லது பேரழிவு சூழ்நிலைக்கான ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. எனினும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் விரைவில் சிறப்பு விசாரணை நடத்தும் என அவர் குறிப்பி்டுள்ளார்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவளை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று (19.10.2023) காலை அடையாளம் தெரியாத முதயவர் ஒருவரது சடலம் பேருந்து நிலைய காவலர்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் 60வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும எனவும் இதுவரை யாரும் சடலத்திற்கு உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுடன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.நாளை(19)முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் நிறை கொண்ட டின் மீனின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய 650 ரூபாவாகும்.மேலும், 425 கிராம் நிறைகொண்ட உள்ளூர் டின் மீனின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 545 ரூபாவாகும்.
ஒரு கிலோ பச்சை பயறு 20 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.அத்துடன், கிலோ நெத்தலியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1090 ரூபாவாகும்.மேலும், கொத்தமல்லி ஒரு கிலோகிராமின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.
மூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ”சட்டமூலங்களுக்கு அமைவாக வருடத்தில் இரண்டு முறை மட்டுமே மின் கட்டணத்தை அதிகரிக்க முடியும். மின் உற்பத்திக்கான செலவீனங்கள் குறைந்திருக்கின்றது.
ஒரு வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை விடுப்பதானது சட்டவிரோத செயல். இந்த நடைமுறைக்கு அப்பால் மின் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது சட்டவிரோதமானது.
மின் கட்டண அதிகரிப்பிற்கான காரணங்களாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருக்கின்றது என்றும் மின் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கின்றது என்றும் மின்சார சபை கூறுகின்றது. மின்சார கேள்வி அதிகரிப்பு தொடர்பான அறிக்கைகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியிருந்தது. தற்போது வரையில் அது கிடைக்கப்பெறவில்லை.
எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீர் வளம் இருக்கின்றது. அதே நேரம் அணல் மின் உற்பத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலைகளும் உலக சந்தையில் குறைவடைந்துள்ளன.”என கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையில் நடைபெறும் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த போர் நிலமையானது வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்வை நேரடியாக பாதித்துள்ளது என்று விலைமதிப்பற்ற உலோக பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி இலங்கை சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 1 இலட்சத்து 73,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.