ஹோமாகமவில் பாம்பு கடித்ததில் பதினொரு வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம, கொடகம சுபாரதி மகாமத்திய வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பனாகொட சமகி மாவத்தையில் வசித்து வந்த சமன்மாலி என்ற 11 வயது மாணவிக்கே இத் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவி தனது மைத்துனியுடன் கடைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் பாம்பு கடித்துள்ளது.பின்னர் அவருடைய தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வரை தனக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி இருந்ததாக சிறுமி கூறியுள்ளார்.
இதனை அடுத்து சிறுமியின் தாய் பாம்பு கடித்ததை அறியாமல் குழந்தைக்கு இரைப்பை அழற்சி இருக்கலாம் என நினைத்து மருந்து கொடுத்துள்ளார்.
அப்போது சிறுமி வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஹமாஸ் – இஸ்ரேல் போரில் காணாமல் போன இலங்கைப் பெண்ணான அனுலா ஜயதிலக்க உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது கடந்த 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் களனி பகுதியைச் சேர்ந்த அனுலா ஜயதிலக்க காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகளினால் இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு இன்று (17.10) அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுலா ஜயதிலக்கவின் பூதவுடலை எதிர்வரும் இரு தினங்களுக்குள் நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் ஹமாஸ் தரப்பினரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்த சுயாதீன விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் தனுஷ்க குணதிலக பாலியல், குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நவம்பர் 2022 இல் தனுஷ்கவுக்கு எதிராக இந்த கிரிக்கெட் தடையை விதித்தது.
எனினும், அவுஸ்திரேலியாவில் நடந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு தனுஷ்க குணதிலக அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பிரான்ஸ் செல்ல முயற்சித்தபோது பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே அந்நாட்டு இராணுவத்தினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த (07.10.2023) ஆம் திகதி பெலாரஸ் எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில் உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் கூறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுவே அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஷ்யா சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து பெலாரஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலாரஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்றுள்ளார்.
இதன்போது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து உதவி செய்ய யாரும் இல்லாத பட்சத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு (‘awake craniotomy’) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.(‘awake craniotomy’)எனும் குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை நோயாளிகள் சுயநினைவுடன் இருக்கும்போது மேற்கொள்ளமுடியும்.
அதேவேளை இந்த மருத்துவ குழுவினர் இவ்வாறான மூன்றாவது சிகிச்சையை மேற்கொண்டுள்ள நிலையில் முதலாவது சத்திரசிகிச்சையும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலேயே இடம்பெற்றது.
நோயாளியின் மூளையின் இடது பக்கத்தில் உள்ள கட்டியை பிரிப்பதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவர் குறைந்தபட்ச மயக்கநிலையிலேயே காணப்பட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
36 வயது சிற்பக்கலைஞரான நோயாளி சத்திரசிகிச்சை இடம்பெற்றவேளை ஓவியம் வரைந்துள்ளார், அதேசமயம் பேச்சு மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அவரது மூளையின் ஒரு பகுதியை தவிர்ப்பதற்காக அவரை ஓவியம் வரையுமாறு வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் நொச்சியாகமவை சேர்ந்த இந்த நோயாளி சத்திரசிகிச்சையின் பின்னர், எந்த வித பாதிப்பும் இல்லாமல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். நேற்று(16.10.2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுரேஸ்குமார் தனிகை வயது 17 லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் சடலத்தை மீட்டு
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர். அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
தன்னை திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக காதலி அனுப்பிய குறுந்தகவலால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நெளுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார்.
காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் இளைஞரின் தந்தை கண்டித்துள்ளார். பெண்ணுடன் கதைக்க வேண்டாம் என மகனை கண்டித்ததுடன், வயது வந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என பெண் வீட்டாரிடமும் கூறியுள்ளார். அது காதலிக்கு பிடிக்கவில்லை. தன்னை தவிர்த்து விட இப்படி நாடகம் ஆடுகிறார்கள் என சந்தேகித்தார்.
இதனால் தன்னை திருமணம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்யப்போவதாக பெண் தனது காதலனுக்கு தொலைபேசியூடாக தகவல் அனுப்பியுள்ளார்.இதனால் பீதியடைந்த இளைஞர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் உறவினரகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இதனை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார்.
ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடைசியாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் திகதி ஆறு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.அன்று மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு – காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் பெண் ஒருவர் பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.ராகமைப் பகுதியைச் சேரந்த பெண் ஒருவரே இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும்.
எனினும், இந்த ஆறு குழந்தைகளுக்கும் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரிவுக்கு பொறுப்பான சிறப்பு வைத்தியர் சமன்குமார குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழந்தைகளுள், ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த குழந்தைகள் அறுவரும் 400 தொடக்கம் 700 கிராம் எடையில் பிறந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து பராமரிப்பது வைத்தியர்களுக்கு சவாலான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழ் அசாதாரண சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான கிராம மக்கள் இரவில் பூமிக்குள் இருந்து பல்வேறு ஒலிகளை கேட்பதாக அறிவித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் நுவரெலியா கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளை நியமித்து நாளை முழு விசாரணை நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் நாளைய தினம் மேற்கொள்ளப்படும் ஆய்வுக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்ட இளைஞரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் போது காதலியை காப்பாற்றுவதற்காக குறித்த கனேடிய இளைஞர் உயிரை இழந்துள்ளார்.
சம்பவத்தின் போது 21 வயதான Netta Epstein மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும் Kfar Aza, kibbutz பகுதியில் பாதுகாப்பான அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.அப்போதே ஹமாஸ் துப்பாக்கிதாரி ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார்.
அந்த ஹமாஸ் ஆயுததாரி இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் கையெறி குண்டு ஒன்றை இவர்கள் மீது வீசியுள்ளார்.ஆனால் Netta Epstein, அந்த தாக்குதலில் இருந்து தமது காதலியை காப்பாற்றும் நோக்கில், அந்த கையெறி குண்டை தமது உடம்பில் வாங்கியுள்ளார்.
இதில் Irene Shavit என்ற அந்த இளம்பெண் உயிர் தப்பியதுடன், பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் Netta Epstein இன் தாயார், அங்குள்ள மக்கள் மீது ஹமாஸ் முன்னெடுத்துள்ள தாக்குதல் என்பது உண்மையில் படுகொலை என குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 7ம் திகதி தாமும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், ஆனால் இன்னொரு பகுதியில் ஒழிந்துகொண்டு தப்பியதாக தெரிவித்துள்ளார்.ஆனால் kibbutz பகுதியில் அன்றைய தினம் கொல்லப்பட்ட 70 பேர்களில் தமது தாயாரும், மகனும், இரு உறவினர்களும் சிக்கிக்கொண்டனர் எனவும் உறவினர் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் இஸ்ரேலில் பிறந்தாலும், அவரது பாட்டி காரணமாக கனேடிய குடியுரிமையும் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் Netta Epstein இஸ்ரேல் இராணுவத்தில் சேவையாற்றியும் வந்துள்ளார்.
பொதுவாக தற்போது இருப்பவர்கள் குளித்து விட்டு வந்தால் உடனடியாக பின் அல்லது Ear Buds போட்டு காதை நோண்டுவார்கள். இவ்வாறு நோண்டும் பொழுது காதுகளில் இருக்கும் சிறு செல்கள் சேதமடையும்.
அத்துடன் காதுகளில் Ear Buds களை உள்ளே விடும் பொழுது காதுகளில் இருக்கும் அழுக்குகள் மேலும் உட்ச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.
இது போன்று Ear Buds களினால் ஏற்படும் ஆபத்துக்களை சரிச் செய்து கொள்வதற்கு Ear Buds பாவணையை முற்றிலும் தடுக்க வேண்டும்.
அந்த வகையில் Ear Buds பாவணையை தடுக்க முடியாத பட்சத்தில் என்னென்ன பின்விளைவுகளை நாம் செய்ய வேண்டும் என்பதனை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
தெலுங்கானா மாநிலம் அசோக் நகரில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி பிரவலிகா . இவர் தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்காக தயாராகி வந்தார். இதற்காக பெருமுயற்சி செய்து வீட்டில் 2 ஆண்டுகளும், பின்னர் விடுதியில் தங்கி 2 ஆண்டுகளும் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியானது. பெரும் கவலையில் இருந்த பிரவலிகா, தன்னுடைய குடும்பத்திற்காக எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தில் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இதனையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
மாணவர்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் தற்கொலை குறிப்பு ஒன்றையும் கைப்பற்றி உள்ளனர். அதில், மேற்குறிப்பிட்ட விவரங்களை அந்த மாணவி தெரிவித்து உள்ளார். இதனால், ஆளும் அரசுக்கு எதிராக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து பாஜக எம்.பி. லட்சுமண் ” இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவதும், ஒத்தி வைக்கப்படுவதுமாக மாறி மாறி இருந்துள்ளது பல மாதங்களாக தேர்வுக்கு தயாராகி வந்த, பிரவலிகா தற்கொலை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
இதற்கு இரங்கல் தெரிவித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 48 மணிநேரத்திற்குள் சம்பவம் குறித்து ஒரு விரிவான அறிக்கையை அளிக்கும்படி முதன்மை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளார். தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறை மற்றும் வெளிநாட்டு பயணங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக மக்கள் சிறப்பு வரலாறு மற்றும் கலாச்சாரம் கொண்ட இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். அந்தவகையில், இங்கு ஒரு சிறப்பு இடத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த இடம் பெண்களின் அழகுக்கும் நீண்ட ஆயுளுக்கும் பெயர் பெற்றது. உலகின் பிற பகுதிகளில் வாழும் சராசரி மக்களை விட இங்குள்ள மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். அதுமட்டுமல்ல, இங்கு 80 வயது பாட்டி கூட இளம் பெண்ணாக இருப்பதுதான் ஆச்சரியம்.. அப்படிப்பட்ட இடத்தை நீல மண்டலம் என்பார்கள். அங்குள்ள மக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாகிஸ்தானில் உள்ள ஹன்சா பள்ளத்தாக்கு பெண்களைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆனால் இங்கு வாழும் பெண்கள் உலகின் மிக அழகான பெண்களாக கருதப்படுகிறார்கள்.
ஏனென்றால் இங்கு வயது முதிர்ந்த பெண்கள் கூட 20 வயதுப் பெண்களைப் போலவே இருப்பார்கள். அதுமட்டுமின்றி இக்கிராமப் பெண்களுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இங்குள்ள பெண்கள் 60 வயதிலும் தாயாகலாம்.
இந்த கிராமம் பாகிஸ்தானின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு 80 வருடங்கள் கடந்தாலும் பெண்களின் முகம் இளமையாகவே காட்சியளிக்கிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது மற்றொரு சிறப்பு.
ஹன்சா பள்ளத்தாக்கில் வாழும் மக்களின் நீண்ட ஆயுட்காலம் அவர்களின் உணவைப் பொறுத்தது. பாரம்பரிய முறையில் சமைத்த உணவு உண்ணப்படுகிறது. அவர்கள் தங்களுக்கான உணவுப்பொருட்களை தாங்களே வளர்த்துக் கொள்கிறார்கள்.
சாகுபடியின் போது ரசாயனங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதில்லை. இங்குள்ள மக்கள் மாதத்தில் பல நாட்கள் உணவு உண்பதில்லை, பழங்கள் மற்றும் பழச்சாறுகளை மட்டுமே சாப்பிடுவார்கள்.
ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்கள். ஒருபுறம் பெண்கள் முதுமையிலும் இளமையாகத் தெரிகிறார்கள். மறுபுறம், ஆண்கள் 90 வயதிலும் தந்தையாக முடியும். அவர்களது வாழ்க்கை முறையே அவர்களது நீண்ட ஆயுளின் ரகசியம்.
காலை 5 மணிக்கு எழுந்து விடுவார்கள். உடல் ரீதியாக உடற்பயிற்சி செய்தல். இங்குள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவார்கள். ஒன்று மதியம் 12 மணிக்கு, அதைத் தொடர்ந்து இரவு உணவு.
அவர்களின் உணவு முற்றிலும் இயற்கையானது. இதில் ரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை. பால், பழங்கள், வெண்ணெய் அனைத்தும் தூய்மையானவை. இந்த சமூகத்தில் தோட்டத்தில் பூச்சிக்கொல்லி தெளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள மக்கள் முக்கியமாக பார்லி, தினை, பக்வீட் மற்றும் கோதுமை சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு தவிர, பட்டாணி, கேரட், டர்னிப்ஸ் மற்றும் பால் போன்றவையும் அதிகம் உண்ணப்படுகிறது. இச்சமுதாய மக்கள் இறைச்சியை மிகக் குறைவாகவே உண்கின்றனர்.
சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே இறைச்சி சமைக்கப்படுகிறது. இது பல துண்டுகளாகவும் உண்ணப்படுகிறது. இந்த வகையான வாழ்க்கை முறையால், புற்றுநோய் போன்ற நோய்கள் அவர்களை ஒருபோதும் சென்றடையவில்லை.
இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புருஷோ என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் மொழி புருஷாஸ்கி. இந்த சமூகங்கள் அலெக்சாண்டரின் படையைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.
4ஆம் நூற்றாண்டில் இங்கு வந்தனர். இந்த சமூகம் முற்றிலும் முஸ்லீம்கள். இவர்களது செயற்பாடுகள் அனைத்தும் முஸ்லிம்களின் செயற்பாடுகளை ஒத்ததாகவே உள்ளது. பாகிஸ்தானில் உள்ள மற்ற சமூகங்களை விட இந்த சமூகம் அதிகம் படித்தது. ஹன்சா பள்ளத்தாக்கில் அவர்களின் மக்கள் தொகை சுமார் 87 ஆயிரம் மட்டுமே.
மேலும், ஹன்சா பள்ளத்தாக்கு காஷ்மீருக்கு அருகில் உள்ளது. இது பாகிஸ்தானின் அழகிய பள்ளத்தாக்கு பகுதி. டெல்லியில் இருந்து இங்கு செல்ல வேண்டுமானால் சுமார் 800 கி.மீ தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு செல்ல வேண்டும்.
உலகளவில் நீல மண்டலம் என்று அழைக்கப்படும் ஹன்சா பள்ளத்தாக்கு தனித்துவமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இங்குள்ள மக்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். இங்குள்ள மக்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் குறைவு.
இந்திய தலைநகர் டெல்லியில், பேச மறுத்த காதலியை 13 முறை கத்தியால் குத்திய காதலனை பொதுமக்கள் பொலிசில் பிடித்துக் கொடுத்தனர். டெல்லி லாடோ சாராய் பகுதியை சேர்ந்தவர் பிராக்சி.
இவர் கவுரவ் பால் என்ற இளைஞருடன் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளார். இந்த விஷயம் பிராக்சியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளதால், இளைஞருடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என்று கண்டித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கவுரவ் பாலுடன் பேசாமல் பிராக்சி தவிர்த்துள்ளார். இதனால், பிராக்சி மீது கவுரவ் கடும் கோபத்துடன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் கம்பெனி ஒன்றிற்கு இன்டெர்வியூ செல்வதற்காக பிராக்சி டாக்சியில் ஏறியுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த கவுரவ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஒரு கட்டத்திற்கு மேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து 13 இடங்களில் பிராக்சியை சரமாரியாக கவுரவ் குத்தினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தப்ப முயன்ற கவரவை பிடித்தனர். பின்னர், காயமடைந்த பிராக்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் கவுரவை கைது செய்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிராக்சி அபாயகட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல் மப்பில் இருந்த கணவர் நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு மகனை தூக்கி சென்றுள்ளார்.
வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்த கணவரை கண்டித்ததால் கர்ப்பிணி மனைவி என்று கூட பாராமல் உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). பெயிண்டர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான். நான்கு மாத கர்ப்பிணியாக நந்தினி இருந்து வந்தார்.
இந்நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் பகலிலேயே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கணவரை மனைவி மிரட்டி உள்ளார்.
புல் மப்பில் இருந்த கணவர் நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு மகனை தூக்கி சென்றுள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது தீக்காயத்தால் துடித்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக மாவட்டம், திருப்பூரில் விலை உயர்ந்த பைக் கேட்டு தாய் வாங்கித்தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி. இவரது கணவர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதில், மகன் சௌந்தர்ராஜன் (19) கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர் கடந்த சில நாள்களாக விலை உயர்ந்த கேடிஎம் பைக் வாங்கித்தர வேண்டுமென்று தாய் மற்றும் அக்காவிடம் அடிக்கடி கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை பல்லடம் உடுமலை சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.
உடனே, சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் பொலிசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.
அப்போது தான் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பது தெரியவந்தது. பைக் வாங்கித்தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.