இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அரங்கேறியது.
மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர்.
அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மேலும், அவருக்கு அடையாளப்பூர்வமாக ஈமச்சடங்குகளை செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, மாவினால் செய்யப்பட்ட கவிதாவின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
மயானத்தை அடைந்த பிறகு, குடும்பத்தினர் சிதையை தயார் செய்தனர். அனைத்து சடங்குகளும் பாரம்பரிய முறைப்படி செய்யப்பட, இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாக, உருவ பொம்மைக்குத் தீ வைக்கப்பட்டது.
இதுகுறித்து கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை ராம்பாபு குஷ்வாஹா, தனது மகளின் முடிவால் குடும்பம் முற்றிலும் உடைந்துவிட்டது என்றும், இது தனது வாழ்வின் மிகவும் வேதனையான தருணம் என்றும் கூறினார்.
உருவ பொம்மையை இறுதி ஊர்வலமாக கொண்டுசென்று தீ மூட்டிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று (22.12.2025) காலை இடம்பெற்றது.
மாவட்டசெயலகம், வவுனியா பிரதேசசெயலகம், தெற்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
நடமாடும் சேவையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைத்தல், காலம் கடந்த பிறப்பு இறப்பு பதிவு, மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள், ஜனாதிபதி செயலகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள், ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள், போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு உட்பட பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க உத்தியோகபூர்வமாக, நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.
குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி நடவடிக்கைகள் தை மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தகவல் தொடர்பாடல் தொழில்நுடபவியலாளர் (Computer Application Assistant, Information and Communication Technology Technician), நீர்க்குழாய் பொருத்துநர் (Plumber), சிகையலங்காரவினைஞர் (Hair Dresser), கணினி பட வரைஞர்(Graphic Designer),
ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பவியலாளர்(Dress Maker/Tailor), மோட்டார் வண்டி திருத்துனர்(Motorcycle Technician), மர கைவினைஞர்(Wood Craftsman), மின்னியலாளர்(Electrician) ஆகிய பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இத்துறைகளில் தமது திறன்களை வளர்த்துக்கொள்ள ஆர்வமுடைய மாணவர்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ள Google படிவத்தை நிரப்பி எமது நிலையங்களுடாக தொழிற்பயிற்சியினை பெற்றுக்கொள்ள முடியும். https://forms.gle/4BRWFAnLEqsXLZxA9
மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள தொடர்பு இலக்கங்கள் மூலம் எம்மை தொடர்வு கொள்ளவும்.
0242221617, 0768304770, 0770720157, 0710318982
வவுனியா வீரபுரம் பகுதியில் இன்று (21.12.2025) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் உட்பட சிலர் இன்று மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம் பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் மீது அந்த பகுதியை சேர்ந்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் சாவடைந்துள்ளார். சம்பவத்தில் தவசிகுளம் பகுதியை சேர்ந்த யோ.அபிசாந் வயது 19 என்ற இளைஞரே சாவடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் 37 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதன்போது கணவனை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது கழுத்து பகுதியில் கத்தியால் அவர் குத்தி மயக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் மேலதிக சிகிசசைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டதுடன், தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், வீட்டு வாடகை வசூலிக்கச் சென்ற வீட்டின் உரிமையாளரான பெண் மாயமானார்.
அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் கொடுத்த தகவலின்பேரில் பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்க, அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது!
உத்தரப்பிரதேசத்திலுள்ள் Ghaziabad என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த தீப்ஷிகா ஷர்மா என்னும் பெண், தனது வீடு ஒன்றை ஒரு தம்பதியருக்கு மாதம் 18,000 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
பிப்ரவரி மாதம் அந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்த ஜெய் குப்தா (37), ஆக்ரிதி குப்தா (32) தம்பதியர், கடந்த ஐந்து மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமையன்று, வீட்டு வாடகை வசூலிப்பதற்காக, தனது வீட்டில் வேலை செய்யும் மின்னி என்னும் பெண்ணை அழைத்துக்கொண்டு குப்தா தம்பதியர் வீட்டுக்குச் சென்றுள்ளார் தீப்ஷிகா.
மின்னி, கீழே தீப்ஷிகாவின் நாயுடன் நிற்க, தீப்ஷிகா ஐந்தாவது தளத்திலுள்ள குப்தா தம்பதியர் குடியிருக்கும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் தீப்ஷிகா திரும்பி வராததால் குழப்பமடைந்த மின்னி, அலுவலகம் சென்றிருந்த தீப்ஷிகாவின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர் வந்து தேடியும் தீப்ஷிகாவைக் காணாததால் பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
கடைசியாக தீப்ஷிகா, குப்தா தம்பதியர் வீட்டுக்குச் சென்றதாக மின்னி கூறியதைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் வீட்டை சோதனையிட, ஒரு கட்டிலுக்கடியில் சூட்கேஸ் ஒன்றிற்குள் தீப்ஷிகாவின் உயிரற்ற உடல் மறைத்துவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
விசாரணையில், ஆறு மாதங்களுக்கு முன் தனது பிஸினஸ் நஷ்டமடைந்ததால் தன் நிறுவனத்தை மூடிவிட்டதாக தெரிவித்த ஜெய் குப்தா, தீப்ஷிகா தொடர்ந்து பலமுறை வந்து வீட்டு வாடகை கேட்டதாகவும், புதன்கிழமை, அது தொடர்பில் வாக்குவாதம் ஏற்படவே கோபத்தில் தாங்கள் அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் தீப்ஷிகாவை குக்கர் ஒன்றால் தலையில் தாக்க, தன் மனைவி துப்பட்டாவால் அவரது கழுத்தை நெறித்ததாக தெரிவித்துள்ளார் ஜெய் குப்தா.
அவரது உடலை ஒரு சூட்கேசில் வைத்து இரவு எங்காவது கொண்டு போட்டுவிடலாம் என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், மின்னி கொடுத்த தகவலால் பொலிசார் உடனடியாக வீட்டுக்கு வர, தாங்கள் சிக்கிக்கொண்டதாக தெரிவித்துள்ளார் ஜெய் குப்தா.
ஜெய் குப்தாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீப்ஷிகாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
களுத்துறை – பதுரலிய, அகலவத்த திரிவனகெட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (19) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகலவத்தையிலிருந்து பதுரலிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி எதிர்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பதுரலிய பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவனே நடுரோட்டில் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ் என்பவரும், கரங்கோட்டா கிராமத்தைச் சேர்ந்த அனுஷா (20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர் பச்சைக்கொடி காட்டவே, கடந்த மார்ச் 12-ம் தேதி இருவருக்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், மூன்றே மாதங்களில் வரதட்சணைப் பிசாசு புகுந்தது. தனது மனைவி அனுஷாவிடம் கூடுதல் பணம் மற்றும் நகை கேட்டுப் பரமேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாகக் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுஷாவைப் பரமேஷ் கடுமையாகத் தாக்கியுள்ளார். தனது மகள் சித்திரவதை செய்யப்படுவதை அறிந்த அனுஷாவின் தாயார், மகளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல சாய்புரி கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, மாமியாரிடம் நைசாகப் பேசிச் சமாதானம் செய்த பரமேஷ், “இனி இதுபோல நடக்காது” என்று கூறி அனுஷாவைத் தன்னுடனேயே இருக்கச் சம்மதிக்க வைத்துள்ளார்.
ஆனால், தாயார் சென்ற சில நிமிடங்களிலேயே பரமேஷின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டது. வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அனுஷாவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பரமேஷ்,
ஆத்திரத்தில் அங்கிருந்த ஒரு பெரிய உருட்டுக் கட்டையை எடுத்து அனுஷாவைச் சரமாரியாகத் தாக்கினார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. இதில் பலத்த காயமடைந்த அனுஷா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அனுஷா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மனைவியைக் கொன்றுவிட்டுத் தலைமறைவான பரமேஷ் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அனுஷாவைப் பரமேஷ் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உலுக்கியுள்ளது.
காதலித்துத் திருமணம் செய்த பெண்ணையே வரதட்சணைக்காக அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு, புறக்கோட்டை, குணசிங்கபுர பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இரண்டு பஸ்களுக்கு மத்தியில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை (18.12.2025) இடம்பெற்றுள்ளது. விபத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மரங்களுக்கு அருகில் நிற்பதையோ பயணிப்பதையோ முடிந்த அளவு தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தம்புள்ளை கலேவெல பகுதியில் வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்தி நித்திரை கொண்ட சாரதியின் கையை அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த காணொளியில் வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்தி நித்திரை கொண்ட சாரதியை இளைஞன் ஒருவர் பெரிய தடி ஒன்றினால் நபர் ஒருவரை தாக்குவதுடன் இது தொடர்பில் முரண்படுகின்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பவத்தின் போது தாக்கப்பட்ட நபரின் கைகளில் பலமான காயம் ஏற்பட்டிருப்தையும் குறித்த நபர் வலியால் துடிப்பதையும் காணமுடிகின்றது.
சம்பவத்தின் போது தாக்குதலை ஏற்படுத்திய நபர் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்வதையும் குறித்த காணொளியில் காண முடிகின்றது.
சாதாரண விடயங்களுக்காக இது போன்று மிலேச்ச தனமாக தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா பத்தனை பகுதியில் தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிச் சென்ற இருவர் மீது லொறி மோதி இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
டயகம பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தேநீர் குடிப்பதற்காக பத்தனை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து இறங்கி சென்ற இளைஞன் உட்பட இருவர் மீது வேகமாக எதிர் திசையில் இருந்து பயணித்த லொறி மோதியதால் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாத்தாண்டிய பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மிகவும் கவனமாக இருக்கவும், தேவைப்படாவிட்டால் முற்றிலும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் துபாய் பொலிஸார் வலியுறுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில், கனமழை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்ததாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலீஜ் டைம்ஸின் அறிக்கையின்படி, மாறிவரும் வானிலை காரணமாக அபுதாபி சிவில் பாதுகாப்பும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கோரியுள்ளது.
அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், சமூக ஊடக தளமான X இல், மழை மற்றும் மூடுபனி நகர வானலையை மூடியதால், சின்னமான புர்ஜ் கலீஃபா கிட்டத்தட்ட முற்றிலும் அடர்ந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பதைக் காட்டும் காட்சிகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் கண்ணை இழுத்துப் பிடித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரத்தில், 2025ஆம் ஆண்டிற்கான ‘ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் கண்ணை இழுத்துப் பிடித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரத்தில்,
2025-ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் பின்லாந்து’ (Miss Finland) சாரா ஜாஃப்சே (Sarah Dzafce) தனது பட்டத்தை இழந்துள்ளார்.
இந்த விவகாரம் பின்லாந்து மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே பெரும் ராஜதந்திர விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மிஸ் பின்லாந்து பட்டத்தை வென்ற சாரா ஜாஃப்சே, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.
அதில் தனது கண்களை ஓரமாக இழுத்துப் பிடித்தபடி, “ஒரு சீனருடன் உணவு உண்கிறேன்” (eating with a Chinese) என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் ஆசிய சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகக் கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து விளக்கமளித்த சாரா, தனக்கு ஏற்பட்ட தலைவலியைப் போக்கவே கண்களை அப்படிச் செய்ததாகவும், அந்த வாசகத்தை தனது நண்பர் ஒருவர் தனக்குத் தெரியாமல் பதிவிட்டுவிட்டதாகவும் கூறினார்.
இருப்பினும், கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி அவர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மிஸ் பின்லாந்து அமைப்பு சாராவின் பட்டத்தைப் பறிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
“இந்தச் செயல் ஆசிய சமூகத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பெரும் மனவேதனையை அளித்துள்ளது. எந்த வடிவத்திலும் இனவெறி ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சாரா தனது பட்டத்தை இழந்த பிறகு, பின்லாந்தின் சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினர்.
அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் சாரா செய்த அதே செய்கையை (கண்களை இழுத்துப் பிடித்தபடி) மீண்டும் செய்து புகைப்படங்களை வெளியிட்டமை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது.
இந்தச் செயலால் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பின்லாந்து தூதரகத்தின் வாயிலாகத் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.
நிலைமை மோசமடைவதைக் கண்ட பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ (Petteri Orpo), ஜப்பான் மற்றும் தென் கொரிய மொழிகளில் அதிகாரப்பூர்வ மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார்.
அதில்:”இந்தச் செயல்கள் பின்லாந்தின் சமத்துவ விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை.” “அரசியல்வாதிகள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.”
“இனவெறிக்குத் தங்கள் நாட்டில் இடமில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் பின்லாந்து மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே பெரும் ராஜதந்திர விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மிஸ் பின்லாந்து பட்டத்தை வென்ற சாரா ஜாஃப்சே, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.
அதில் தனது கண்களை ஓரமாக இழுத்துப் பிடித்தபடி, “ஒரு சீனருடன் உணவு உண்கிறேன்” (eating with a Chinese) என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் ஆசிய சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகக் கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
மிஸ் பின்லாந்து அமைப்பு சாரா
இது குறித்து விளக்கமளித்த சாரா, தனக்கு ஏற்பட்ட தலைவலியைப் போக்கவே கண்களை அப்படிச் செய்ததாகவும், அந்த வாசகத்தை தனது நண்பர் ஒருவர் தனக்குத் தெரியாமல் பதிவிட்டுவிட்டதாகவும் கூறினார்.
இருப்பினும், கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி அவர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மிஸ் பின்லாந்து அமைப்பு சாராவின் பட்டத்தைப் பறிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
“இந்தச் செயல் ஆசிய சமூகத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பெரும் மனவேதனையை அளித்துள்ளது. எந்த வடிவத்திலும் இனவெறி ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சாரா தனது பட்டத்தை இழந்த பிறகு, பின்லாந்தின் சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினர்.
அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் சாரா செய்த அதே செய்கையை (கண்களை இழுத்துப் பிடித்தபடி) மீண்டும் செய்து புகைப்படங்களை வெளியிட்டமை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது.
இந்தச் செயலால் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பின்லாந்து தூதரகத்தின் வாயிலாகத் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.
நிலைமை மோசமடைவதைக் கண்ட பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ (Petteri Orpo), ஜப்பான் மற்றும் தென் கொரிய மொழிகளில் அதிகாரப்பூர்வ மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார்.
அதில்:”இந்தச் செயல்கள் பின்லாந்தின் சமத்துவ விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை.” “அரசியல்வாதிகள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.” “இனவெறிக்குத் தங்கள் நாட்டில் இடமில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் லொறியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று ( 20.12.2025) காலை 7:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பயணி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 21 வயது மதிக்கதக்க லிந்துலை கவ்லிணா பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பேருந்தின் சாரதி ஓய்வெடுக்க எதிர் திசையில் பேருந்தை நிறுத்தியபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்தில் பயணித்த இரு பயணிகள் பின்புற கதவிலிருந்து இறங்கி பிரதான வீதிக்கு வந்தபோது நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியாவுக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறியுடன் மோதுண்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியை பார்வையிடுவதற்காக சென்ற போதே குறித்த அனர்த்ததிற்கு முகம் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பேருந்து மற்றும் லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்தினை வலது பக்கத்தில் பாதுகாப்பின்றி நிறுத்தியமைக்காகவும், விபத்தினை தவிர்க்காமைக்காகவும் லொறி சாரதிக்கு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(20.12.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் கழிவுப் பொருட்களை ஏற்ற வந்த தனியாருக்கு சொந்தமான பவுசர் ஒன்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்றைய (20.12.2025) நிலவரத்தின் படி தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 378,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்க பவுண் ஒன்று 347,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,350 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,410 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.