மகன் மற்றும் மகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி : காரணம் என்ன?

விவசாயம் இந்தியாவின் முக்கிய தொழிலாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் பெரியளவில் வருமானம் ஈட்டுவதில்லை.

இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விவசாயி ஒருவர், விவசாய செலவுகளை கட்டுப்படுத்த தனது மகன் மற்றும் மகளை ஏரில் பூட்டி களை எடுத்துள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டத்தின் மம்மு சிட்டுபள்ளே கிராமத்தை சேர்ந்த விவசாயி பண்டி சந்திரசேகர் ரெட்டி என்பவருக்கு 9.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், 3 ஏக்கர் நிலத்தில் கெமோமில் (Chamomile) பயிரிட்டுள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவருக்கு கூலிக்கு ஆட்களை வைத்து நிலத்தை உழுவது அதிக செலவாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு களையெடுக்க ரூ.3,000 ஆகும் என கூறப்படுகிறது.

இந்த செலவுகளை கட்டுப்படுத்த, தனது மகள் மற்றும் மகனை ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார். அவரது மகன் பட்டப்படிப்பும், மகள் இடைநிலை பட்டப்படிப்பும் படித்து வருவதாக கூறப்படுகிறது.

பயிர் அறுவடை செய்யப்படும் போது நிலைமை எப்படி இருக்கும் என தெரியாது. நல்ல விலை கிடைக்கும் என்றும், செலவுகளை சமாளிக்க முடியாமல் இதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் பெண் மரணம் : மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!!

இலங்கை தனியார் மருத்துவமனையில் நடந்த பயங்கரம் – இளம் பெண் ஒருவர் மரணம் காலியில் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாயின் மரணம் மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் காலி, உலுவிடகவை சேர்ந்த 46 வயதான செவ்வந்தி இல்லன்பெருமா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மூன்று சிறப்பு தடயவியல் மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவால் விசாரணை மேற்கொண்டு, மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு, காலி நீதவான் இசுரு நெத்திகுமார, கராபிட்டிய மருத்துவமனை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒரு பெண் மருத்துவ நிபுணர் அவருக்கு கருப்பை நீர்க்கட்டி இருப்பதைக் கண்டறிந்து அதை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளி வீட்டிற்குச் சென்று ஒரு நாள் கழித்து மீண்டும் நோய்வாய்ப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் சீழ் நிறைந்திருப்பதாகக் கூறி மீண்டும் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நோயாளிக்கு கே.சி.எல் தடுப்பூசி கொடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. 2 தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் நோயாளி ஆபத்தான நிலைக்குள்ளானார்.

இந்நிலையில் மருத்துவமனையின் வதிவிட மருத்துவரும் மற்ற இரண்டு மருத்துவர்களும் நோயாளியை பரிசோதித்தனர், ஆனால் நிலை மோசமாக இருந்ததால், நோயாளி உடனடியாக கராபிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நேரத்தில், அவரது இதயம் துடிப்பு நின்ற போதிலும் மருத்துவ சிகிச்சையால், அவரது உயிர் காப்பாற்றப்பட்டது, ஆனால் அவரது மூளை செயல்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

எனினும் அவரது கை அழுகியதால், அவரது உயிரை காப்பாற்ற கையை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் நீண்ட போராட்டத்தின் பின்னர் கடந்த 23ஆம் திகதி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் நடந்த அநீதி குறித்து இறந்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பந்தயத்தால் பறிபோன இளைஞனின் உயிர் : இரவில் நடந்த அசம்பாவிதம்!!

கண்டி-கட்டுகஸ்தோட்டை வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்குரணை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கட்டுகஸ்தொடை வீதியில் அதிவேகமாக பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, கான்கிரீட் பாதுகாப்பு கம்பத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் 18 வயதுடைய அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களைப் பயன்படுத்தி இரவு நேர பந்தயங்கள் சிறிது காலமாக நடைபெற்று வருவதாகவும் பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், இத்தகைய பந்தயங்கள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் சீன வர்த்தகரை கடத்தி 60 ஆயிரம் டொலர் கொள்ளை!!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (22) இரவு சீன வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சீன பிரஜைகள் அடங்கிய கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்டவர் கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு நாள் முழுவதும் கட்டிடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், சந்தேக நபர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தன்னை வீதியோரம் விட்டுவிட்டு தப்பி சென்றதாகவும் பாதிக்கப்பட்ட சீன வர்த்தகர் சனிக்கிழமை (23) கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சீன வர்த்தகர் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் , சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடொன்றில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : தவிக்கும் குடும்பத்தினர்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. திடீர் சுகயீனமுற்ற நிலையில் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் 39 என்ற பெண்ணே கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பெண்ணின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

முச்சக்கரவண்டி – கெப் வாகனம் மோதி விபத்து : நால்வர் காயம்!!

வாதுவை, பொஹத்தரமுல்ல வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி மற்றும் கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இளைஞனை துரத்தித் துரத்தி சுட்டுக் கொன்ற கும்பல் : இரகசிய தகவலால் சிக்கிய சந்தேகநபர்கள்!!

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நேற்று (24) அதிகாலை நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த இளைஞன் பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, இந்த குற்றச் செயலுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுகளை கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி தப்பிச் செல்ல பயன்படுத்திய முச்சக்கரவண்டி பிலியந்தலையில் உள்ள போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செல்வச் சந்நிதியில் 108 ஜோடிகளுக்கு திருமணம் : வாழ்வளிக்கும் சிங்கப்பூர் தம்பதி!!

அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வ சந்நிதியில் வறுமையில் உள்ள திருமணாகாத 108 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதி, திருமணம் செய்துவைக்க முன்வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின், நிதியுதவியில், 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது .

தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

திருமணம் இடம்பெறவுள்ள 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம்.

இந்நிலையில் அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி , அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் இன்றும் கடும் வெப்பம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வானிலை ஆய்வு திணைக்களம், வெப்ப வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு – மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, வெயிலில் நீண்ட நேரம் செயற்படுவதும், வெளிப்புற நடவடிக்கைகளும் சோர்வை ஏற்படுத்தும். அத்துடன், தொடர்ந்து வெயிலில் செயற்படுவது, வெப்பப் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியில் சென்றவரை மோதிய வாகனம் : ஒருவர் பலி!!

வவுனியா கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் நேற்று (24.08.2025) மதியம் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கென்ரர்ரக வாகனம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த முத்து ராமலிங்கம் வயது 61 என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார். விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒன்லைன்னில் 45000 ரூபா பொருளை வாங்கிய இளைஞன் கைது!!

அம்பாறை – சம்மாந்துறையில் ஒன்லைன் ஊடாக 45,000 ரூபா பெறுமதியான பொருளை ஓர்டர் செய்து அதற்கான பணத்தினை வழங்காமல் தப்பியோடி இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் ஒன்லைன் ஊடாக ஓர்டர் செய்யப்பட்ட பொருளுக்கு பணம் வழங்காமல் தப்பியோடி உள்ளார் என நேற்று முன் தினம் புதன்கிழமை (20.08) பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை நேற்று (21) கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து ஒன்லைன் ஊடாக ஓ ர்டர் செய்யப்பட்டு பணம் வழங்காமல் கொண்டு சென்ற பொருளையும் சம்மாந்துறை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

யாழில் உறக்கம் வராததால் வயோதிபப் பெண் விபரீத முடிவு : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

யாழில் உறக்கமின்மை காரணமாக மூதாட்டி ஒருவர் இன்று (23.08.2025) காலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75) என்பவரே தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூதாட்டி உறக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

சந்தேகநபர் ஒருவர் சுட்டுப் படுகொலை!!

அம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் கொஸ்கொட பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 31 ஆம் திகதி கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவமொதர கடலாமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அறை ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அந்த மத்திய நிலையத்தின் உரிமையாளரின் மகனே இவ்வாறு கொலை செய்யப்பட்டதுடன் அவர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான துப்பாக்கிதாரி சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவகம பகுதியில் மறைந்து இருக்கின்றார் என்று கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய,

காலி பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரப் படையினர் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சம்பவ இடத்துச் சென்று விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது சந்தேகநபர் பொலிஸார் மீது கைக்குண்டு ஒன்றை வீசியுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படை உத்தியோகத்தர்
இதையடுத்துப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது பொலிஸ் விசேட அதிரடிப் படை உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த பெருவளை கோசல என அழைக்கப்படும் தொன்கோசல என்பவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வணிக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறும் விற்பனையாளர்கள் மீது தண்ணீர் குளிர்விக்கப்பட்டதா அல்லது வேறு வர்த்தக நாமத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டதை என்பதை பொருட்படுத்தாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்தா சமரக்கோன் தெரிவித்தள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை
சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வணிகங்களுக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிகமாக போத்தல் குடிநீரை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறும் செயல் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதற்கு இணங்காத எந்தவொரு விற்பனையாளர்களுக்கும் எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை : 100இற்கும் மேற்பட்டோர் கைது!!

பிரித்தானியாவில் நோட்டிங் ஹில் திருவிழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானோரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் நோட்டிங் ஹில் (Notting Hill Carnival) திருவிழாவில், வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதை இருப்பதை தடுக்கும் முயற்சியாக பொலிஸார் நூற்றுக்கணக்கானோரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“உளவுத்துறை அடிப்படையிலான தலையீடுகள்” என்ற நடவடிக்கையின் கீழ் பிரித்தானியா கிட்டத்தட்ட 100 பேரை கைது செய்துள்ளது. [

அதில் 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், 11 துப்பாக்கிகள், 40க்கும் மேற்பட்ட கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் கண்காணிப்பு நிபந்தனைகள் மற்றும் பொலிஸ் பிணை ஆகியவற்றின் கீழ் 266 பேர் வைக்கப்பட்டுள்ளனர். இவர் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த நோட்டிங் ஹில் திருவிழாவில் 4 இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகின. இவற்றில் 2 நபர்கள் தனித்தனி தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

மேலும் 18 பொலிஸார் வரை தாக்கப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இத்தகைய வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவே இந்த ஆண்டு பொலிஸார் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மகனின் வெறிச்செயலால் அதிர்ந்த கிராமம் : சாக்கு மூட்டைகளில் கிடைத்த தந்தை, சித்தியின் உடல் பாகங்கள்!!

சேலம் அருகே தந்தை, சித்தியை தலை துண்டித்து படுகொலை செய்து, உடல் பாகங்களை 3 மூட்டைகளில் கட்டி 2 ஏரியில் வீசிய மகனை பிடித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ் (23) என்ற மகன் உள்ளார்.

கடந்த 4 ஆண்டுக்கு முன் பழனிசாமியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மனைவி ஜெயந்தி, பிரிந்து சேலத்திற்கு வந்து தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து பழனிசாமி, இரண்டாவதாக ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருடன் முதல் கணவரின் 18 வயது மகளும் வசித்துள்ளார்.

கடந்த 5 நாட்களாக பழனிசாமி, ஜெயலட்சுமியின் நடமாட்டம் இல்லை. இருவரும் வெளியூர் சென்று விட்டதாக ஆகாஷ் கூறியிருக்கிறார். சந்தேகம் அடைந்த உறவினர்கள், மகுடஞ்சாவடி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார், ஆகாசை பிடித்து விசாரித்த போது, தந்தை பழனிசாமி, சித்தி ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் தலையை துண்டித்து படுகொலை செய்து, உடல் பாகங்களை 3 சாக்கு மூட்டைகளில் கட்டி 2 ஏரியில் வீசிவிட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஏரிக்குள் இருந்து துண்டாடப்பட்ட உடற்பாகங்களை பொலிஸார், மீட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.