களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் அரச வைத்தியசாலையில் ஒன்டான்செட்ரான் தடுப்பூசி விஷமானதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு அவரது பெற்றோரும் உறவினர்களும் நீதி கோரியுள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக IDH வைத்தியசாலைக்கு சந்தமினி சென்றிருந்தார்.
அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் படுக்கைகள் இல்லாததால் அறைக்குள் அனுமதிக்கவில்லை.
பின்னர், நோயாளி வெளியேறத் தயாராகும் போது அவர் மயக்கமடைந்தார். பின்னர் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சந்தமினி திவ்யாஞ்சலி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மத்திய வித்யாலயா தேசியப் பாடசாலையில் கல்வி கற்றவராகும். அவர் உயிரிழக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இறந்த பெண்ணுக்கு நீதி வழங்கவும், இதுபோன்ற ஒழுங்கற்ற செயல்களால் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிகாரிகளை கடுமையாக வலியுறுத்துகின்றனர்.
மோசமான காலநிலை காரணமாக கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி இன்று (17.12.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் கால் ஒன்று மண்ணுக்குள் புதைந்து இருப்பதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயணித்த வேன் மற்றும் லொறி
இந்த நடவடிக்கையானது நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு, அந்த கால் பகுதி மரபணு (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண்சரிவில் சிக்கிய 27 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், 21 பேரை இதுவரை காணவில்லை எனவும் மண் சரிவு ஏற்பட்ட நேரத்தில் வீதியில் பயணித்த வேன் மற்றும் லொறி ஒன்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலையை விட மறுத்த மனைவியை ஆத்திரத்தில், பெங்களூருவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கடித்தே கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இத்தனை பயங்கர முடிவுக்கு வந்தது அக்கம் பக்கத்தினரை உறைய வைத்துள்ளது.
மனைவியைக் கொன்ற பிறகு, அந்த ஹோட்டல் உரிமையாளரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை மற்றும் தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
போர்ச்சுகல் நாட்டுக்கு புலம்பெயர முயன்ற ஒரு இந்திய தம்பதியரும், அவர்களுடைய மூன்று வயதுக் குழந்தையும் லிபியா நாட்டில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Mehsana மாவட்டத்தில் அமைந்துள்ள Badalpura கிராமத்தைச் சேர்ந்த கிஸ்மத்சிங் (Kismatsingh Chavda),
அவரது மனைவியான ஹீனாபென் (Heenaben) மற்றும் தம்பதியரின் மகளான தேவன்ஷி என்னும் மூன்று வயது சிறுமி ஆகியோரே கடத்தப்பட்டுள்ளதாக, (Devanshi). Mehsana மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
லிபியா நாட்டில் அவர்களைக் கடத்தி வைத்துள்ள கும்பல், அவர்களிடம் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிஸ்மத்தின் சகோதரர் போர்ச்சுகல் நாட்டில் வாழும் நிலையில், அங்கு புலம்பெயர கிஸ்மத் குடும்பம் முடிவு செய்துள்ளது.
கிஸ்மத் குடும்பம், நவம்பர் மாதம் 29ஆம் திகதி குஜராத்திலிருந்து துபாய்க்கும், பின் துபாயிலிருந்து லிபியாவுக்கும் சென்ற நிலையில், Benghazi என்னுமிடத்தில் அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.
குஜராத் அரசுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் இந்த கடத்தல் தொடர்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக Mehsana மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரை கொன்று உடலை மகன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் அம்பேஷ் என்ற பொறியாளர் தனது வீட்டை எதிர்த்து மாற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அம்பேஷ் திருமணத்தை அவரது பெற்றோர்கள் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவில்லை, அத்துடன் உடனடியாக அந்த பெண்ணை விவாகரத்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் குடும்ப தகராறு அதிகரித்துள்ளது, இறுதியில் விவாகரத்து சம்மதித்த அந்த பெண் ஜீவனாம்சமாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார்.
இந்த பணத்தை திரட்டுவதற்காக அம்பேஷ் தந்தையிடம் உதவி கோரியுள்ளார்.
பெற்றோரை கொன்று ஆற்றில் வீசிய மகன்
ஆனால் ரூ.5 லட்சம் தந்து உதவ தந்தை மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் சமையலறையில் இருந்த அரவை கல்லை எடுத்து தாய் பபிதா(60)வை முதலில் தாக்கியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை ஷியாம் பகதூரையும்(62) அதே கல்லால் அடித்து கொன்றுள்ளார். மேலும் தன்னுடைய தவறை மறைக்க வீட்டில் கேரேஜில் இருந்த வாளை(Saw) கொண்டு பெற்றோர் இருவரையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் கட்டில் அதிகாலை நேரத்தில் ஆற்றில் வீசியுள்ளார்.
பின்னர் சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெற்றோர் கோபத்தில் வீட்டை விட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சகோதரி வந்தனா பொலிஸாரில் புகார் அளிக்கவே, அம்பேஷிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் இறுதியில் இருவரையும் அடித்து கொன்ற விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த பகுதியில் மீட்பு பணிகளின் போது இராணுவ மீட்பு படையினர் 30 இலட்சம் பணம் மற்றும் 50 இலட்சம் ரூபாபெறுமதியானநகைகளையும் மீட்டுள்ளனர் .
டித்வா ப்ய்ரலால் இலங்கையில் ஏற்பட்ட மணசரிவில் வீடு முற்றாக அழிந்திருந்த நிலையில் இடிபாடுகளை சீரமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வீடொன்று மண்ணில் புதைத்து அழிவடைந்த நிலையில் , புதைந்திருந்த புதைந்திருந்த பணம் , நகை மீட்கப்பட்டு பாதுகாப்பாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் இன்று (18.12.2025) இடம்பெற்றுள்ளது.
எனினும் இளைஞன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள நிலையில் இளைஞன் அமரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்தது.
யாழ் நகரிலிருந்து பருத்தித்துறைக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தின் போது குறித்த வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின் நித்திரை தூக்கத்தால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (18) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,700 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இத்தாலியிலுள்ள தேசிய பூங்காவில் பழமையான டைனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
210 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்ததாக நம்பப்படும் இந்த கடைனோசரின் கால்தடங்களை நோக்கும் போது சிறிய தலை, நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான நகங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது.
தாவர உண்ணி டைனோசர் வகையைச் சேர்ந்தவை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இனம் புரோ-சௌரோபாட் (prosauropods) என்று அழைக்கப்படுகிறது. கால்தடங்கள், விரல் மற்றும் நகத்தின் அடையாளங்கள் தெளிவாக தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டெல்வியோ தேசிய பூங்காவில் (Stelvio national park) உள்ள ஒரு மலைச் சரிவில் இந்த கால்தடங்கள் கடந்த செப்டெம்பரில் அந்தப் பகுதியைப் பார்வையிட்ட ஒரு புகைப்படக் கலைஞரால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுமார் 10 மீட்டர் உடல் நீளம் கொண்ட “ப்ரோ-சௌரோபாட்” (prosauropods) டைனோசர்கள், நீண்ட பயணங்களின் போது சோர்வைப் போக்க தங்கள் பின்னங்கால்களைப் நடக்கவும், மலைகளில் ஓய்வெடுக்கவும் பயன்படுத்தியதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டைனோசர்கள் அழிந்து போவதற்கு முன்பு 160 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.
பலாங்கொட பகுதியில் தந்தையை கொலை செய்து ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட, ஹந்தகிரியவை பகுதியை சேர்ந்த 70 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதற்கமைய கொல்லப்பட்டவர் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்து கிடந்ததாகவும், வீட்டிலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சகோதரியின் வீட்டிற்கு வந்த நபர், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டிலிருந்து ஆவணங்களைத் திருடியதாகவும், சந்தேக நபர் உயிரிழந்தவரின் மகன் எனவும் பெண் ஒருவர் வெலிகெபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 40 வயதான மகனை கைது செய்துள்ளனர்.
சடலம் பலாங்கொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகெபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டியின் உடுதும்பர பகுதியில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று பதிவாகி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு நிறுவனம் எச்சரித்துள்ளது.
மழை நிலைமை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதற்கமைய, கண்டி மாவட்டத்தில் உள்ள தொலுவ, உடுதும்பர, மடதும்பர மற்றும் மினிபே மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனே, ஹங்குரன்கெத்த, நில்தண்டஹின்ன மற்றும் மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதால், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வசந்த சேனாதீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த இடங்கள் நிலச்சரிவு அல்லது இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அந்த இடங்களைத் தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பதுளை, மடுல்சிம, பட்டவத்தை பகுதியில் கடந்த நவம்பர் 27ஆம் திகதி அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மண்ணில் புதைந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அன்றையதினம் கடுமையான குளிரில், தங்கள் பிள்ளைகளுடன் ஒரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், அதிகாலை 4.00 மணியளவில் ஒரு பெரிய மண் சரிவில் புதைந்துள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் ஆர். தியாகராஜா. அன்றைய தினம் தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வீட்டின் வரவேற்பு அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். இதன்போது அன்று நடந்த பெரிய சோகத்தைப் பற்றி அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
‘எனது மனைவி, மூன்று மகன்கள் மற்றும் நான் வரவேற்பு அறையில் உறங்கினோம். ஏனைய மூன்று மகள்கள், மகளின் இரண்டு பிள்ளைகள் மற்றும் எனது மருமகள் ஆகியோர் அறையில் உறங்கினர். மருமகளுக்கு குழந்தை பிறக்கவிருந்தது.
இந்த நிலையில் திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. நான் வெளியே ஓடியபோது, அதிகளவான தண்ணீர் வருவதினை கண்டேன். “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுகள்…” என்று மக்கள் கத்துவதைக்கேட்டேன், இருட்டில் எனக்கு எதுவும் தெரியவில்லை.
நான் திரும்பிப்பார்த்தபோது, ஒரு பெரிய பாறை வீட்டின் மீது மோதியது, வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. அறையில் உறங்கிக்கொண்டிருந்த அனைவரும் அதன் கீழ் புதைந்திருந்தனர்.
அவர்களைக் காப்பாற்றுமாறு முடிந்தவரை சத்தமாகக் கத்தினேன். ஆனால் யாரும் வர முடியவில்லை. எப்படியோ, காலையில், பாறைகள் மற்றும் மண் அகற்றப்பட்டு, பிள்ளைகள் வெளியே இழுக்கப்பட்டனர்.
இராணுவ வீரர்கள் கடினமாக உழைத்தனர். பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வழி இல்லை. அதற்குள், அனைத்து பிள்ளைகளும் ஏற்கனவே இறந்துவிட்டனர். எனது பிள்ளைகள் என் கண் முன்னே உயிரிழந்து விட்டனர். இந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை.”
19, 27 மற்றும் 28 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மகள்கள், ஒரு மகளின் 7 வயது மகள் மற்றும் இரண்டரை வயது மகன், அதே போல் 26 வயது மருமகள் ஆகியோர் இந்த பயங்கர மண் சரிவில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து நாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அது நாள் முழுவதும் வீட்டைச் சுற்றித் திரியும். எங்கள் பிள்ளைகள் இந்த நாயை மிகவும் நேசித்தார்கள். நாயும் அப்படித்தான்.
அது பேரப்பிள்ளைகளின் புத்தகங்களை பார்த்து குரைக்கிறது. என்னால் அதனை தாங்க முடியவில்லை. குடும்பத்தினர் உயிரிழந்ததில் இருந்து நாய் சாப்பிட வருவதில்லை. நான் நாயை சாப்பிடுமாறு கூறினாலும் அது வராது.
அதனால் நான் உணவை எடுத்துக்கொண்டு நாய் தங்கியிருக்கும் உடைந்த வீடு அமைந்துள்ள இடத்திற்கு வர வேண்டும். அது எனக்கு இன்னும் வருத்தமாக உள்ளதாக தியாகராஜா கூறினார்.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மின் சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
மாரவில தொழிற்பயிற்சி கல்லூரியில் ஆலோசகராகப் பணிபுரியும் சுஜித் ஹேரத் என்பவரே இந்த மகத்தான சேவையை செய்து வருகிறார். வெள்ளத்தால் சேதமடைந்த பல்வேறு வகையான மின் சாதனங்களை எந்த சேவைக் கட்டணமும் வசூலிக்காமல் திருத்திக் கொடுக்கிறார்.
ஏதேனும் குழு அல்லது தன்னார்வ அமைப்பு முன்வந்தால், கிராமம் கிராமமாகச் சென்று மாரவில தொழிற்பயிற்சி கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்களின் உதவியுடன் தனது சேவைகளை வழங்க முடியும் என்று சுஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வீடுகளில் உள்ள மின் சாதனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான் கற்றுக்கொண்டதைக் கொண்டு அவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.
அதனால்தான் இந்த சேவையை வழங்க முடிவு செய்தேன். ஏற்கனவே பல்வேறு மின் சாதனங்களை தான் இலவசமாக சரி செய்து கொடுத்துள்ளதாக சுஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகி வரும் காலநிலை மாற்றங்கள் எவரும் எதிர்பார்க்காத அளவு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இயற்கையின் கோர தாண்டவத்தில் மனித, சொத்து மற்றும் பொருளாதார சேதத்தை குறித்த நாடுகள் கடுமையாக எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில், பாபா வங்கா, உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் குறித்து மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் பேசுபொருளாகியுள்ளதுடன் அவரின் கணிப்பின் படி தான் அனைத்தும் நடக்கின்றனவா என அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
எனவே, ஆசியாவிற்கு பேரழிவுகள் ஏற்படும் என அவர் கணித்திருந்தமை, தற்போது வரை பதிவாகியுள்ள அனர்த்தங்கள் மாத்திரமா அல்லது மேலும் பல காத்திருக்கின்றனவா என்றும் ஒரு அச்சம் எழுகின்றது.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா பார்வையற்ற பெண்ணொருவர், எதிர்காலம் குறித்து பல நிகழ்வுகளை கணித்துள்ளதாகவும் அவரின் கணிப்புக்களில் ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, அவர் மேற்கொண்ட பல நிகழ்வுகள் அதேபோல நடக்காவிடினும் அதற்கு ஒத்த அல்லது தொடர்புடைய சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையே அவரின் கணிப்புக்களை ஆராய தூண்டுகின்றது.
அந்தவகையில், 1996 ஆம் ஆண்டு உயிர்நீத்த பார்வையற்ற பெண்ணொருவர் 2025ஆம் ஆண்டில் ஏற்பட போகும் பேரழிவுகளை கணித்தார் என கேட்கும் போது நமக்கு அவநம்பிக்கை ஏற்படும் அதேவேளை, சந்தேகத்தையும் எழுப்புகின்றது.
எனவே, அவரின் கணிப்பை ஆராயும் போது, குறித்த பெண், 2025ஆம் ஆண்டு ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஒரு மோசமான அழிவு ஏற்படும் என கணித்துள்ளார்.
அதன்படி, ஆசியாவில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து சுனாமி வரக்கூடும் அபாயம் உள்ளது என அவரின் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில், ஆசிய நாடான ஜப்பானில் ஒரு வாரத்திற்கு முன்னர் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியது. இதன்போது, கிட்டத்தட்ட 90,000 பேர் வெளியேற்றப்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நில அதிர்வு அபாயம் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.
அதேவேளை, குறித்த நிலநடுக்கத்தின் போது குறைந்தது 23–33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகளில் கூறப்பட்டன. அதேசமயம், இலங்கை மற்றுமு் இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய டிட்வா புயலும் பதிவாகியிருந்தது.
இலங்கை காலநிலை வரலாற்றிலேயே சுனாமிக்கு பிறகு மிகப் பாரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்திய ஒரு அனர்த்தமாக இது பதிவு செய்யப்பட்டது.
2004 ஏற்பட்ட சுனாமியை விடவும் அதிகமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்பு பணிக்கு கூட சிரமங்களை ஏற்படுத்திய ஒரு பேரழிவு இந்த டிட்வா புயல்.
இத்தகைய, அனர்த்தங்கள் பதிவாகியிருக்கும் நிலையிலேயே பாபா வங்கா ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என கணித்திருந்ததாக கூறப்படும் செய்தி பேசுபொருளாகியுள்ளது.
அத்துடன், மேலும், அவர் 5079 ஆம் ஆண்டு வரை நடக்க போகும் என மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்படுவதுடன் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 45 வயதுடைய நபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 39 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேற்படி இருவரும் தம்பதி என்று பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலும், காரின் பின் ஆசனங்களில் அமர்ந்து பயணித்த மேற்படி தம்பதியரின் உறவினர்கள் மூவர் (ஆண் ஒருவர், இரு பெண்கள்) காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.