வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில்..

சுற்றுலா வீசாவின் மூலம் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலைக்காக செல்வது சட்டவிரோதமானது என்றும் இதுபற்றி எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொழிலுக்காக செல்வோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவு செய்ததன் பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது கட்டாயமானதாகும்.

மானில் தொழிலுக்காக சென்று மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட ஒருவர் ஏழு இலட்சம் ரூபா செலவில் சுற்றுலா விசாவில் அங்கு சென்றிருந்தமையும் தெரிய வந்துள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

நண்பன் வெளிநாடு செல்வதற்காக உயிரை தியாகம் செய்த மற்றுமொரு நண்பன்.. இலங்கையில் நடந்த சோகம்!!

மாத்தளையில்..

மாத்தளையில் கடன் பணம் தொடர்பில் நண்பர்கள் இருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தனது உற்ற நண்பர் சைப்ரஸ் நாட்டில் தொழிலுக்கு செல்வதற்காக வேறு ஒரு நபரிடம் பெற்றுக் கொடுத்த கடன் பணத்தை மீள கேட்ட போது அதனை வழங்க முடியாத இளைஞன் உயிரை மாய்த்துள்ளர்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர் பணம் வழங்காதமையினால் கோபத்தில் மற்ற நண்பரை திட்டியதால் மற்றுமொரு நண்பரும் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை ஹிக்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தனது நண்பரின் வெளிநாட்டில் பணிபுரியும் கனவை நிறைவேற்றுவதற்காக கடன் பெற்று கொடுத்தள்ளார்.

வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் தனது நண்பருக்காக 3 இலட்சம் ரூபா கடனாக பெற்றுக் கொடுத்துள்ளார். அதனை மீண்டும் பணத்தைக் கேட்டபோது, ​​பணத்தைத் திருப்பித் தர முடியாததால் உயிரை மாய்த்துள்ளார். அதற்கு உதவிய நண்பரும் பணம் வழங்க முடியாமல் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றில் அசத்தும் இலங்கையர்: குவியும் பாராட்டுக்கள்!!

துபாயில்..

துபாயில் இலங்கையரொருவர் மைனஸ் டிகிரி செல்சியஸில் குளிரூட்டப்பட்ட ஐஸ் சிற்பங்களை வடிவமைத்து பலரது பாராட்டுக்களை பெற்று வருகின்றார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட மார்க் ரணசிங்கே என்பவரே இவ்வாறு பாராட்டுக்களை பெற்று வருகின்றார். விசேட நிகழ்ச்சிகளில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் ஐஸ் சிற்பங்களை, துபாயில் உள்ள தனது ஸ்டூடியோவில் வைத்து வடிவமைத்து கொடுத்து வருகின்றார்.

மைனஸ் டிகிரியில் குளிரூட்டப்பட்ட அறையில் குளிர்கால ஆடைகள் அணிந்தபடி அவர் ஐஸ் சிற்பம் வடிப்பதை காண பலரும் ஆர்வமுடன் அவரது ஸ்டூடியோவிற்கு படையெடுப்பதாகவும் கூறப்படுகின்றது.

யாழில் மாதா சொரூபத்தில் இருந்து இரத்தம் வடியும் அற்புதம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.குறித்த பகுதியில் வசிக்கும் ஸ்ரீகரன் சாந்தகுமாரி என்பவரது வீட்டில் இருக்கும் மாதாவின் உருவச் சிலையில் இருந்தே இவ்வாறு இரத்தம் வழிகின்றது.

கடந்த 6ம் திகதி முதல் இன்றுவரை இரத்தம் இடையிடையே வழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.மேலும், கடந்த 26ம் திகதி பிரான்ஸில் இருந்து இவர்களின் மகள் ஜெயசித்ராவினால் குறித்த மாதாவின் உருவச் சிலை கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் வீட்டில் தரம் 5 ல் கல்வி கற்கும் 10 வயதுடைய ஆர்த்தி எனும் சிறுமிக்கு, மாதா கொண்டு வருவதற்கு முன்னர் கண்ணில் இருந்து இரத்தம் வடிந்துள்ளது.

இதுதொடர்பாக வைத்திய உதவிய நாடிய போதிலும் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளாக தெரிவிக்கின்றனர். தற்போதும் சிறுமியின் கண்ணில் இடையிடையே இரத்தம் வழிந்து வருகின்றது.

திருகோணமலையில் தந்தையும் மகளும் புகையிரத்தில் பாய்ந்து தற்கொலை!!

திருகோணமலையில்..

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் தபால் தொடருந்தில் பாய்ந்து தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியானது.இந்த சம்பவம் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்திலே ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் மனைவியின் தவறான செயற்பாட்டினை அறிந்த 38 வயது தந்தை தனது 6 வயது மகளுடன் ரயிலில் குதித்து உயிரை மாய்த்துள்ளனர்.24 வயதான திருவேந்திரன் மற்றும் மகள் பாத்திமா ஹனா ஆகியோரே விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில் மனைவி தனது திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து ஏற்பட்ட கோபத்தில் தனது மகளுடன் தந்தை உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழந்த சோகம்!!

களனியில்..

களனி பல்கலைக்கழக மாணவரொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு (07.09.2023) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதென கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும்,

கரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் அகில இந்திரசேன (22 வயது) என்ற மாணவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருமணமாகி 4 மாதத்தில் நேர்ந்த சோகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொலை : கணவரும் விபத்தில் பலி!!

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தின் அதிலாபாத் பங்கர்குடா பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் . இவருக்கும் தீபாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி உள்ளது. திருமணம் முடிந்து இருவரும் அருண் வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அருணுக்கு அவரது மனைவி தீபா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலிப்பாரோ என தினம் தினம் சந்தேகப்பட தொடங்கினார். இதனால் மேலும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. தீபா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.

இந்த சம்பவம் குறித்து தீபா தனது பெற்றோருக்கு தெரிவித்து அழுதபோது எல்லாம், அவர்கள் தீபாவை சமாதான படுத்தி வந்துள்ளனர். இதனால் அருண் மேலும் தீபாவை சித்திரவதை செய்துள்ளார்.

பெற்றோர் வீட்டுக்கு சென்ற தீபாவை 1 வாரத்திற்கு பிறகு அருணின் தாயார் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தார். அருணின் கொடுமைகள் நின்றபாடில்லை. கணவன் – மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த அருண், தனது மனைவி தீபாவை அடித்து சுவற்றில் மோதியுள்ளார். இதனால் தீபா மயங்கி சரிந்தார். ஆத்திரம் அடங்காத அருண், வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தீபாவை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

இதன் பிறகு போலீசில் சரணடைய பைக்கில் சென்றார். அப்போது வேகமாக சென்ற அவர் எதிரே வந்த லாரி ஒன்றில் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த அருண், மனைவி தீபா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை கொலை செய்து போலீசில் சரணடைய சென்றபோது விபத்தில் சிக்கி கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய இளைஞன்!!

நீலகிரியில்..

நீலகிரியில் காதலித்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடததி வருகின்றனர்.

உதகை அருகே உள்ள எடக்காடு பாதகண்டியை சேர்ந்தவர்கள் ராமநாதன், கல்யாணி தம்பதியினர். இவர்களின் இரண்டு மகள்களுள் ஒருவர் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகளான விசித்ரா பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

அவருக்கு பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி, அவரது வீட்டின் பின் புறம் இருந்த குடிநீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கபட்டார். அது குறித்த தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாரா? குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்து யாராவது உடலை தொட்டியில் வீசினார்காளா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் மஞ்சூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் விசித்திராவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை தண்ணீர் தொட்டியில் வீசியது தெரிய வந்ததுள்ளது.

அதனைத் தொடர்ந்து மஞ்சூர் காவல்துறையினர் அவரை கைது, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின் கொலை செய்த ஜெயசீலனை சிறையில் அடைத்தனர்.

மேலும் ஜெயசீலன் கூலி வேலை செய்து வருவதும், இருவருக்கும் எடக்காடு பள்ளியில் ஒன்றாக படித்த போது அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டுள்ளதும், நண்பர்களாக பழகிய இருவரும் காதலித்து வந்ததும் தெரிய வந்ததுள்ளது.

அதனை தொடர்ந்து ஜெயசீலனின் நடவடிக்கைகள் விசித்ராவுக்கு பிடிக்காததால் ஜெயசீலனுடன் பழகுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து விசித்ராவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.03) நடைபெற்றுள்ளது.

இது குறித்து தகவல் ஜெயசீலன் தெரியவந்ததை அடுத்து, செல்போன் மூலம் விசித்ராவை தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் விசித்ரா அவருடைய அழைப்பை எடுக்காததால் நேரில் சென்ற ஜெயசீலன், விசித்ராவிடம் தனியாக பேச பாதகண்டிக்கு சென்றுள்ளார். அப்போது தன்னை திருமணம் கொள்ள மறுக்கும் காரணம் குறித்து கேட்டதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜெயசீலன் அருகில் இருந்த கயிறை எடுத்து விசித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் விசித்திராவின் உடலை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை.. தாய் கண்டித்ததால் நடந்த விபரீதம்!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவரது மனைவி தீபா. மகள் தீபா. வயது 19.இவர் மகேந்திராசிட்டியில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் திடீரென அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இளம்பெண் உடல் மிதந்ததை கண்ட கிராம மக்கள் காவல்நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த இளம்பெண் விசாரணை குறித்த தகவலில் அது தீபா என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா அடிக்கடி ஆண் நண்பருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

இது குறித்து அவரது தாய் அவரை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி தாய் – மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த தீபிகா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

இதன்பிறகு தீபிகா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அல்லது யாராவது அவரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை குழவிக் கல்லால் அடித்து கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை ஜெ.ஜெ.காலனி பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரது மனைவி நித்திய காமாட்சி இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்வந்த், நிவாஸ்ரீ , புவிஅட்சரா என 3 குழந்தைகள் முறையே 7, 5, 3 வயது தான்.

சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் பால்ராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஊர்முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இருந்த போதிலும் மனைவி மீதான கோபம் தணியவே இல்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நித்திய காமாட்சி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் இருந்த நெருப்பு கனல்களை அள்ளி அவரது முதுகில் பால்ராஜ் போட்டுவிட்டார்.

தீக்காயம் அடைந்த அவரை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.இதன் பிறகு குழந்தைகளுக்காக என நித்திய காமாட்சியின் பெற்றோர் சமாதானம் செய்து வைத்தனர். இதே மோதல் நேற்று இரவும் நீடித்தது. கணவன் – மனைவிக்கு இடையே தகராறு, வாய்ச்சண்டை என இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன்பிறகு நித்திய காமாட்சி படுத்து தூங்கினார்.

தூங்கிக்கொண்டிருந்த நித்திய காமாட்சி தலையில் தலையணையை வைத்து குழவிக் கல்லால் அடித்து கொலை செய்தா. அதன் பிறகு பயத்தில் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி நிலையில் கிடந்தனர்.

அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து நித்திய காமாட்சியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவரது குடும்பத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நித்திய காமாட்சி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் பால்ராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நித்திய காமாட்சியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு கொத்தனார் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தாய் உயிரிழந்தது தெரியாத 3 குழந்தைகளும் நின்று கொண்டிருந்தது காண்பவர் கண்களில் நீரை வரவழைத்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

காதலியை சராமாரியாக குத்தி கொலை செய்த காதலன்.. கதறித் துடித்த பெற்றோர்!!

திருப்பூரில்..

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவரது மகள் சத்தியஸ்ரீ. இவர் திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோட்டில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சத்தியஸ்ரீக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியில் வசித்து வரும் நரேந்திரனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, நரேந்திரனும் சத்தியஸ்ரீயும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலில், காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், நரேந்திரனுக்கும் சத்தியஸ்ரீக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நண்பர்கள் நரேந்திரன் சத்தியஸ்ரீயின் சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இருந்தபோதிலும், இவர்களுடைய 3 ஆண்டுகால பழக்கத்தில் பல்வேறு சர்ச்சைகள் மோதல்கள் இருந்தன. கடந்த சில நாட்களாக நரேந்திரனுக்கும் சத்தியஸ்ரீக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில், சத்தியஸ்ரீ நரேந்திரனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதனால் விரக்தியடைந்த நரேந்திரன், சத்தியஸ்ரீ செல்லும் இடமெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார். ஆனால், சத்தியஸ்ரீ அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

இதற்கிடையில், நரேந்திரனுக்கு தன் காதலியான சத்தியஸ்ரீ மீது ஏற்பட்டிருந்த கோபம், ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியது. அதன்படி, செப்டம்பர் 1ம் தேதி காலை 9 மணியளவில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் கிளம்பி வேலைக்கு வந்துள்ளார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நரேந்திரன் தன்னைக் காதலிக்கும்படி கூறினார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, சத்தியஸ்ரீயும் தான் வேலை செய்யும் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த நரேந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, மருத்துவமனைக்குள் புகுந்து சத்தியஸ்ரீ கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதையடுத்து, படுகாயமடைந்த சத்தியஸ்ரீ சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்ட நேரத்தில், நரேந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் . சத்தியஸ்ரீயை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சத்தியஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனர். மேலும், இதைக் கேட்ட சத்தியஸ்ரீயின் பெற்றோர் கண்ணீர்விட்டுக் கதறி அலறித் துடித்தனர். உயிருக்குப் போராடிய நரேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சத்தியஸ்ரீயின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நரேந்திரன் கழுத்தை அறுத்துக் கொண்டதால் அவரால் தற்போது பேச முடியவில்லை. அவர் பேசினால் தான் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்த தகவலை அறிய முடியும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

உப்புச் சத்து அதிகமாக இருந்தால் இது நடக்கும்.. கூகிள் தகவலை நம்பியதால் பலியான இளைஞன்!!

மதுரையில்..

தமிழக மாவட்டம் மதுரையில், உப்பு சத்து அதிகமாக இருந்தால் இறக்க நேரிடும் என்ற கூகுளின் தகவலை நம்பி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், பசுமலை அன்னை மீனாட்சிநகர் கோல்டன் சிட்டி 5 -வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர் பொறியியல் படிப்பு படித்துள்ளார். இவர், வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு, கடந்த 30 ஆம் திகதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிரபல தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உப்புச்சத்து அதிகமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

பின்னர், விஜயகுமார் இது பற்றி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விஜயகுமாரின் பெற்றோர் அவரை அடிக்கடி சமாதானபடுத்தியுள்ளனர். இதனையடுத்து, உப்புசத்து அதிகமாக இருந்தால் என்ன ஆகும் என்று விஜயகுமார் கூகுளில் தேடியுள்ளார்.

அப்போது, அதில் உப்புச்சத்து அதிகமாக இருந்தால் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும் என்று சில கருத்துக்கள் இருந்துள்ளது. அதை பார்த்த விஜயகுமார், மனவேதனையிலும், பயத்திலும் இருந்துள்ளார்.

இதனால், அவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயகுமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடனக் கலைஞரின் பிறப்புறுப்பை அறுத்த மர்மக்கும்பல்.. நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் புலாந்த்ஷர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று அங்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 25ம் தேதி ராம்பூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மீண்டும் புலாந்த்ஷரில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். திடீரென அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று சராமாரியாக இளைஞரைத் தாக்கத் தொடங்கியது. அத்துடன் அவருக்கு மயக்கமருந்தையும் வலுக்கட்டாயமாக் கொடுத்தது.

இளைஞர் மயக்கம் அடைந்த பின்பு, அவரது பிறப்புறுப்பை அக்கும்பல் அறுத்து உள்ளது. பின்னர், பாதிக்கப்பட்ட இளைஞர் மயக்க நிலையில் இருந்து சுயநினைவுக்கு திரும்புவதற்குள் அக்கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டது.

சுயநினைவு திரும்பியதும் அந்த இளைஞர், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், சவான்னி, அனிதா, முஷகன், ஷிவம், சிம்ரன் மற்றும் காயத்ரி ஆகிய 6 பேரை சந்தேகத்தின் பேரில் அடையாளம் கண்டுள்ளது.

மேலும் இது குறித்து சிவில் லைன் வட்டார அலுவலர் , “ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தும் இரு கும்பலுக்கு இடையே பகுதியைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது” என தெரிவித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்ற பின், தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இச்சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலம் மாயம் : அதிர்ச்சி சம்பவம்!!

வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து மரணமடைந்திருந்தார்.

குறித்த சிறுமியின் சடலம் மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்று இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்ற நிலையில் அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

தனியாக இருந்த விமான பணிப்பெண் கொலை.. கொலையாளியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி!!

சத்தீஸ்கரில்..

விமான பணிப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் கொலையாளியின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (Rupal Ogrey).

22 வயது இளம்பெண்ணான இவர் மும்பையின் ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்தார். பயிற்சி விமான பணிப்பெண்ணாக இருக்கும் இவர், மும்பையின் அந்தேரி பகுதியில் அமைந்துள்ள தனது சகோதரியின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இந்த சூழலில் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரியும், சகோதரியின் காதலரும் ஊருக்கு சென்றதால், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இரண்டு நாட்களாக அவர் போன் ஏதும் எடுக்காததால் அவரது சகோதரி தனது தோழிக்கு இது குறித்து கூறியுள்ளார். அதன்படி அந்த பெண் ரூபால் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து மாற்று சாவியை பயன்படுத்தி வீட்டை திறந்தனர். அப்போது அங்கே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இளம்பெண் ரூபால் ஓக்ரே சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் து அங்கிருக்கும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்கையில், அங்கு துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வரும் விக்ரம் அத்வால் என்பவர்தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சம்பவத்தன்று ப்புரவு தொழிலாளி விக்ரம் குப்பையை எடுக்கும் நோக்கத்தில் ரூபல் வீட்டு கதவை தட்டியபோது அவர் தனியே இருப்பது தெரியவந்தது. உடனே பாத்ரூம் பைப்பில் கசிவு இருப்பதாக கூறி வீட்டினுள் நுழைந்தவர், பாத்ரூமுக்குள், ரூபல் நுழைந்த போது அவரை பாலியல் வன்கொடுமை செய்ய விக்ரம் முயன்றுள்ளார்.

ஆனால், இதனை ரூபல் எதிர்த்து விக்ரமை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்ரம் தான் கொண்டுவந்த கத்தியால் ரூபலின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தனது உடை மற்றும் கத்தியில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மின்சாரம் தாக்கி பலி.. காப்பாற்ற சென்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

தேனியில்..

தேனி மாவட்டம் பெரியகுளம் பங்களாப்பட்டி, பெரியார் காலனியில் வசித்து வருபவர்கள் அரவிந்த். இவருடைய மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள். அரவிந்த், அதே பகுதியில் உள்ள நஞ்சாவரம் கண்மாய் மாட்டுக் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், மாடுகளுக்கு தீவனம் வைப்பதில் இரவு வரை திரும்பாததால் மனைவி பதட்டம் அடைந்தார். அரவிந்தின் அக்கா கணவர் செந்தில்குமார். அவரையும் அழைத்து கொண்டு அரவிந்தை தேடி மாட்டு கொட்டகைக்கு சென்றார். மாட்டு கொட்டகைக்கு சென்றதும் இருவரும் தனித்தனியாக பிரிந்துச் சென்று அரவிந்த்தை தேடினார்கள்.

செந்தில்குமார் கொட்டகை முழுவதும் தேடிப் பார்த்து விட்டு வந்த போது, உடன் வந்த ஹேமாவதியை காணவில்லை. இதனால் பதட்டம் அடைந்து மொபைல் மூலம் தனது உறவினா்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். அனைவரும் சேர்ந்து மாட்டு கொட்டகை அருகே உள்ள பகுதியில் தேடினர்.

அப்போது மாட்டு கொட்டகைக்கு அருகே உள்ள சகதியில் அரவிந்த், அவரது மனைவி ஹேமாவதி ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர். இதைப் பாா்த்ததும் பதறிப்போன செந்தில்குமார் அவர்களை தூக்க முற்பட்டார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கு சகதியில் அறுந்து கிடந்த மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக மின் இணைப்பை துண்டித்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானார் . அரவிந்த், ஹேமாவதி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர விசாரணையில் மாடுகள் கொட்டகையை விட்டு வெளியேறாமல் இருக்க கம்பிகளால் போடப்பட்டுள்ள வேலியில் மின்வயர் அறுந்து கிடந்துள்ளது. அதை கவனிக்காத அரவிந்த் அந்த வயரை மிதித்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

கணவரை தேடிச்சென்ற போது, அவர் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியில் ஹேமாவதி அவரை தூக்கச் சென்றுள்ளனர். அப்போது ஹேமாவதி மீதும் மின்சாரம் பாய்ந்து, அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.