மட்டக்களப்பு-வாழைச்சேனை, புனாணை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று (24.08.2023) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ஆங்கிலப் பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 25 வயதுடைய ஓட்டமாவடி 3ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த எஸ்.எச்.எம்.அஸாம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி கல்விக் கோட்ட ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப் பாட ஆசிரியரான இவர், ரிதிதென்னையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மற்றையவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த இளம் ஆசிரியரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400 ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார்.அந்நாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த ஜெனிட்டா டெலிகா என்ற இலங்கைப் பெண்ணே இன்று (24.08.2023) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜெனிட்டா டெலிகா என்ற 46 வயதான காலி – கோனாபினுவில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு மிகப் பெரிய சம்பளப் பாக்கியை பெற்றுக் கொண்டு நாடு திரும்பினார்.இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக குவைத்தில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
அந்த நாட்டில் பாடசாலை ஆசிரியையான பெண் ஒருவரின் வீட்டில் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இவர் ஆசிரியையான எஜமானியால் பலத்த துன்புறுத்தலுக்கு உள்ளாகினார். ‘அந்த வீட்டின் உரிமையாளரான பெண் எப்போதும் என்னை அடிப்பார். ‘எனக்கு மாத சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை’. என ஜெனிடா டெலிகா கூறுகிறார்.
இதுபற்றி அம்மாவிடம் தெரிவித்தேன். அதன்படி, கடந்த (02.02.2022) அன்று அம்மா கொழும்பு வந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு இது தொடர்பில் முறையிடப்பட்டதனையடுத்து இலங்கை தூதரக அதிகாரிகள் அந்நாட்டுப் பொலிஸாருக்கு இதனை அறிவித்திருந்தனர்.
அப்போதும் குறித்த வீட்டிலேயே ஜெனிடா டெலிகா பணி புரிந்து வந்ததால் வீட்டின் உரிமையாளரை அந்நாட்டு பொலிஸார் அழைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.அந்த வீட்டில் 3 வருடங்களும் 8 மாதங்களும் பணியாற்றிய ஜெனிடாவுக்கு ஒரு வருடமும் 3 மாதத்துக்குமான சம்பளமே வழங்கப்பட்டது.
பின்னர், இலங்கை தூதரக அதிகாரிகள் இந்த முறைப்பாட்டை அப்பகுதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, மீதமுள்ள சம்பள பாக்கியை வழங்குவதற்கு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதுவரை ஜெனிட்டா டெலிகா இலங்கை தூதரகத்துடன் இணைந்த வரவேற்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் தனக்கான பாக்கிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கை வந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (24-08-2023) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.புதன்கிழமை (23-08-2023) இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இதற்கமைய இன்று (24.08.2023) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பேருந்தில இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த தீ விபத்து காரணமாக பேருந்து முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இளம் மனைவி கொலையில் 5 மாதங்களின் பின்னர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி அலவத்துகொட எல்லக்கடை பிரதேசத்தில் வசித்து வந்த இருபத்தியாறு வயது பெண்ணை கொன்று வீட்டிற்கு அருகில் ஒரு வயல் சேற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மனைவி கொலை சம்பவம் தொடர்பில் , அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்ட போலீசார் , படுகொலைச் சம்பவம் இடம்பெற்று ஐந்து மாதங்களின் பின்னர், உண்மைகளின் அடிப்படையில் கொலையுண்ட பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் நேற்று (22) கைது செய்துள்ளனர்.
வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நபர்கள் அவ் வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள் வீசி தாக்கியதுடன், வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர். இச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர்களான கணவன், மனைவி ஆகிய இருவரும் மரணமடைந்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பிரதான சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையிலும், ஒருவர் அனுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த பிரதான சந்தேக சந்தேக நபர் தொலைபேசி பாவித்துள்ளமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இன்று (24.08) அதிகாலை சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேக நபரிடம் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி ஊடாக 3292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கு ஒன்றரை மணித்தியாலப்படி 35 தடவைகள் அழைப்பு எடுத்து கதைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
களுத்துறை – அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தையை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் சிறைச்சாலையினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேக நபரின் சடலம் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.வரகாகொட சல்கஸ்வத்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சந்தேகநபர் அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் வசித்த 24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத குழந்தையான தஸ்மி திலன்யாவை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு உணவு உண்பது என்பது கடிமான விடயம்.விண்வெளி வீரர்களுக்கு அதிகளவில் உலர் பழங்கள், பெரும்பாலும் திரவ நிலையிலான உணவு வகைகளே இதுவரைக்காலமும் வழங்கப்படுகிறது.
புவியீர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் உணவை சாப்பிடுவது என்பது மற்றொரு சவால். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள விண்வெளியில் சாப்பிடும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி வீரர் சுல்தான் அல்-நியாடி ஆறு மாதங்களாக விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். விண்வெளி பயணத்தின் போது அவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விண்வெளி வீரர்கள் எப்படி உணவு உண்கிறார்கள் என்பதை அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவில், அவர் தேன் தடவிய ரொட்டியை சாப்பிடுவதைக் காணலாம்.
வீடியோவைப் பகிரும் போது, அவர் அதன் தலைப்பில், ‘விண்வெளியில் தேனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்னிடம் எமிராட்டி தேன் மீதம் உள்ளது, அதை நான் அவ்வப்போது சாப்பிடுகிறேன். இதன் நன்மைகள் பல நிறைந்தது. இது விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது’ என பதிவிட்டுள்ளார்.
கானாவில் நடைபெற்ற 4ஆவது மிஸ் ரீன் சுற்றுலா (Miss Teen Tourism ) போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மிஸ் நெலுனி சௌந்தர்யா, இன்று புதன்கிழமை (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
20 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியானது கானாவின் அக்ரா நகரில் கடந்த முதலாம் திகதி முதல் 20 ஆம் வரை இடம்பெற்றது.
இந்த வெற்றியைப் பெற்ற மிஸ் நெலுனி சௌந்தர்யா துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் இன்று காலை 05.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பு வரவேற்பளிகப்பட்டது. அதேவேளை மிஸ் ரீன் சுற்றுலா போட்டியில் இலங்கை இந்த வெற்றியை முதன்முறையாக வென்றமை குறிப்பிடத்தக்கது.
மானிப்பாய்-சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் நேற்று(23.08.2023) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 23,24 வயதுடைய மானிப்பாயைச் சேர்ந்த சந்தேகநபர்களை கைது செய்ததுடன் வன்முறை சம்பவத்துக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் இரண்டு வாள்கள், இரும்புக் கம்பி ஒன்று என்பனவற்றையும் மீட்டுள்ளனர்.
ஏற்கனவே இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(24.08.2023) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் மேலும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரான கயானி தில்ருக்ஷியின் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தல் காரணமாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு கயானி என்ற பெண்ணின் வீடே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவின் மோசடி விசாரணை பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.2019 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் அவர் இந்த வீட்டைக் கட்டியுள்ளார்.கட்டப்பட்ட வீட்டின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீடு கட்டுவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்பதை தெரிவிக்க அந்த பெண்ணால் முடியாமல் போனதால் விசாரணை அதிகாரிகள் வீட்டை பறிமுதல் செய்துள்ளனர்.குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாண கலைஞர்களின் கூட்டு படைப்பாக வெளிவந்துள்ள ஆலங்குருவியே பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பல அரச தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான அருள்செல்வம் இயக்கியுள்ளார். இவரது ஏனைய படைப்புக்களை போலவே இந்த பாடலும் தனித்துவமான வரவேற்பினை பெற்றுவருகின்றது.
பாடலுக்கான இசையை ஸ்ரீவிஜய் ராகவன் கோர்த்துள்ளதுடன் பாடல் வரிகளையும் அவரே எழுதியுள்ளார் . அழகிய மயக்கும் மெட்டுக்கு பாடல்வரிகளை கோர்வையாக எழுதியுள்ளது சிறப்பானது
படப்பிடிப்பு தளம் யாழ்ப்பாணம்; கலாசார தன்மை மிளிரும் மண்ணை வெகு சிறப்பாக படம்பிடித்து அசத்தியுள்ளார் பன்முகத்திறமையாளர் அருள்செல்வம் பாடலை படத்தொகுப்பு செய்தவரும் அவர்தான், நடிகர்களான லஜந்தா குணாளன் , கிறிஸ்டினா கிரேஸ், சோபிதன், டருன் ஆகியோரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நமது மண் வாசனையுடன் இணைந்த இந்த பாடல் மற்றும்திறைமையான நம் கலைஞர்களின் அத்தனை முயற்சியும் வெற்றிபெற நமது வாழ்த்துகள்.
இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலி உடன் உல்லாசமாக இருந்து வரும் போலீஸ்காரர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க பெண் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் தெற்கு காந்தி கிராமம் பகுதியில் வசித்து வரும் லதா (32). இவர் சரவணன் (33) என்பவரை காதலித்து வந்தனர். கடந்த 2012ம் ஆண்டு பெண்ணின் தாயார் ஒப்புதலுடன் கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு காவல்துறையில் வேலை கிடைத்தது. காவலர் பயிற்சி முடிந்து, அவர் திருச்சியில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்த போது, அருகில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த சுபாஷினி (45 ) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
அப்போது முதல் ஆறு வருட காலமாக லதா, சரவணன் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பல்வேறு காவல்துறை அதிகாரிடம் புகார் அளித்து முறையாக நடவடிக்கை எடுக்காத நிலையில், கரூர் ஆயுதப்படையில் கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
தன்னை ஏமாற்றும் கணவர் ஒரு போலீஸ் என்பதால் காவல்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதோடு, ஆதரவற்று நிற்கதியாய் நிற்கும் தன்னை மிரட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என பாதிக்கப்பட்ட பெண் லதா கதறியுள்ளார்.
நேற்று கூட தனது கணவர் கள்ளக்காதலி சுபாஷினி தூண்டுதலின் பேரில், குடிபோதையில் வந்து கன்னத்தில், அடித்ததில், ஏற்கனவே ஆறு மாதங்களாக வலது பகுதியில் உள்ள காது கேட்காத நிலையில், தற்போது இரண்டு காதுகளும் கேட்கவில்லை என தெரிவித்தார்.
தனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வரும் லதா தனக்கு நியாயம் கேட்டு கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் கணவனை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தார்.
வாழ்க்கையை சீரழித்த தனது கணவர் சரவணன் ஒரு போலீஸ் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர். பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நியாயம் கேட்டு இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லதா புகார் அளித்துள்ளார்.
சந்தோசமாக இருந்த சரவணன் குடும்ப வாழ்வில் கள்ளக்காதல் என்ற சுனாமி புயல் வீசத் தொடங்கியது. இதனால், மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் குடும்பம் இன்று சின்னாபின்னமாக மாறிவிட்டது. இதனிடையே, லதாவும், கணவரின் கள்ளக்காதலியான சுபாஷினியும் உரையாடிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை மதுரவாயலை அடுத்துள்ளது புளியம்பேடு. இங்கு வசித்து வரும் ஹரி என்ற நபர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், 23 வயதில் பூவரசன் என்ற மகனும் உள்ளனர். இதில் மகன் பூவரசன், ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் நேற்றைய முன்தினம் தந்தை ஹரி வழக்கம்போல் தனது பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். எனவே இரவு நேரத்தில் தாய் மற்றும் மகன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
மறுநாள் காலையில் கணவர் ஹரி வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. மகன் மற்றும் மனைவிக்கு போன் செய்தும் அது எடுக்கப்படவில்லை.
இதனால் பயந்துபோன ஹரி, அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கே மகனும் மனைவியும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி, உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியோடு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்றார். அங்கே இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகன் பூவரசன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து மனைவி செல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது வீட்டில் இருந்து இரத்த கறையோடு இரும்பு கம்பியை மீட்டனர்.
பின்னர் மயக்க நிலையில் இருந்து கண் விழித்த செல்வியிடம் விசாரிக்கையில், தான்தான் தனது மகனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் செல்வி, கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததும், இதனாலே மகனை அடித்து கொன்றதும், கொலை செய்த பின்னர் தனது தலையில் தானே தாக்கி கொண்டதில் மயக்கம் அடைந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லிந்துலையில் இளம் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் தெப்பக்குளத்தில் குதித்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உயிரை மாய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் சடலம் இன்று (23.08.2023) காலை மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஒரு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது. குழந்தையின் சடலம் கிடைக்கப்பெறாததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு அவர் ஐந்து பக்கத்தில் கடிதமொன்றையும் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (23.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.86 ரூபாவாகவும், கொள்வனவு விலை 317.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.19 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 421.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 403.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அலவத்துகொட, உல்லேகடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண், ஐந்து மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 10ஆம் திகதி, பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, நெல் வயல் ஒன்றில் புதைத்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்ட அலவத்துகொட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அந்தப் பெண்ணின் கணவரை நேற்று கைது செய்துள்ளனர்.
தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.இக்கொலை தொடர்பில் கிடைத்த தடயங்களுக்கமைய, பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாயின் உதவியுடன் வீடொன்றில் இருந்த திருமணமான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இருந்த போதிலும், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய, மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆடைகள் அகற்றப்பட்டு உடல் வயலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் மரபணு மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்கமைய, அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.இதனால் விசாரணையை தவறாக வழிநடத்தும் வகையில் அவரது ஆடைகள் கழற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதவிர, சம்பவத்தன்று, அருகில் உள்ள மரண வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் சுமார் ஒரு மணித்தியாலம் காணாமல் போயிருந்த நிலையில், வீட்டின் சமையலறையில் இருந்த மின்விளக்கு எரியாமல் இருந்தது. அத்துடன் சம்பவத்தின் போது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் குறைக்காமல் இருந்தது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அதற்கமைய, கணவர் தொடர்பில் பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து சில மீற்றர் தூரத்தில் தான் நடத்தும் கடையை மூடிவிட்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்ற போது அவரது நடத்தையில் காணப்பட்ட மாற்றங்களும் அவரை சந்தேகிக்க வைத்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் கணவரான 27 வயதுடைய சந்தேக நபர் இன்று (23.08.2023) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.