திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், செட்டியபட்டியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர் யாரேனும் உயிரிழந்து விட்டா, அவர்களை அங்குள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகை ஓரமுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த இடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை .இதனால் மக்கள் மிகுந்த கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வழியில் நீரோடையும் குறுக்கே இருப்பதால் அதில் இறங்கியே உடலை சுமந்து செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என தற்போதுள்ள திமுக ஊராட்சி மன்ற தலைவர் மாதவி காமராஜ் மற்றும் இதற்கு முன் இருந்த பல ஊராட்சி தலைவர்களிடமும் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் அழகம்மாள் நேற்று மரணம் அடைந்தார். அழகம்மாளை அடக்கம் செய்வதற்காக, சடலத்தை எடுத்துச் சென்றனர். அப்போது அவரது. உறவினர்கள் சந்தனவர்தினி ஆற்றுப் படுகையில் உள்ள குளத்தில் இடுப்பளவு தண்ணீரில் அழகம்மாளின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
விரைவில் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்ல முடியாத நிலையை மாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு நாள் முதல்வர் போல் சீனாவில் ஒரு நாள் திருமணம் ட்ரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதிலும் பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக இருந்து வருவது சீனா தான். அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும் புது வகையான கலாச்சார நடைமுறை தற்போது சீனாவில் பரவி வருகிறது.
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒரு நாள் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறை தான். ஏழ்மை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்கள், திடீரென உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களின் சடலங்களைப் புதைக்க முடியாது.
இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் பாவங்கள் ஏற்படும். இந்த பாவம் பல தலைமுறைகளுக்கும் தொடரும் என்பது அந்நாட்டு மக்கள் நம்பிக்கை. இதன் காரணமாக, இறந்த பின்பும் தங்கள் மூதாதையருடன் ஒன்று சேர வேண்டும் என்றால் அனைத்து ஆண்களுக்கும் கட்டாயம் திருமணமாகி இருக்க வேண்டியது அவசியம்.
இம்முறையில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களுக்கு திருமணம் நடந்து விட்டதை மூதாதையர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களின் குடும்ப கல்லறைக்கு செல்வார்கள். உள்ளூர் பெண்கள் இப்படி ஒருநாள் திருமணம் செய்ய தயங்குவதால், வெளியூரில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்கள் பணத்திற்காக வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள் .
இதற்கு தனிப்பட்ட திருமண தரகரும் உண்டு. திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இது போன்ற ஒருநாள் திருமணங்களை செய்து கொள்ள முன்வருகிறார்கள்.
இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானவை கிடையாது. சடங்கிற்காக மட்டுமே செய்யப்படுகின்றன. திருமணம் முடிந்த மறுநாள் நீ யாரோ, நான் யாரோ என பிரிந்து சென்று விடுகின்றனர்.
மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பிள்ளைக்கு தாயான மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய சின்னத்தம்பி சுபாஸ்ஜினி அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின் 14.08.2023 அன்று உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து அவரது சிசுவும் உயிரிழந்துள்ளது. முறையாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மருத்துவ கிளினிக்கு சென்று வந்த தாயின் சிசுவின் மரணத்திற்கான காரணம் என்ன?
ஒரு வாரம் வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருந்த தாயை கவனிக்க நேரமில்லாத தனியார் வைத்தியசாலையில் பிசியானது தான் இந்த மரணத்திற்கான காரணமா? என்ற பதிவு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் வசித்து வருபவர் பிரேம் ராஜ் சிங்.இவருக்கு வயது 47. இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் எப்போதும் தனது பேண்ட் பாக்கெட்டில் ஐபோன் வைத்திருப்பது வாடிக்கையான செயல். திடீரென அவரது போன் சூடாவதை அவர் உணர்ந்தார்.
மேலும் சில நிமிடங்கள் கழித்து போனிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. அவர் பையில் இருந்து எடுக்கும் முன் ஐபோன் பயங்கர ஒலியுடன் வெடித்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் பிரேம்ராஜ் சிங்கின் இடது தொடை மற்றும் கட்டைவிரலில் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிங் ” திடீரென என் பாக்கெட்டிலிருந்த ஐபோன் சூடானது. உடனே வெளியே எடுத்த போது ஒரு பெரிய ஒலியுடன் வெடித்து விட்டது. ஐபோன் 2 துண்டுகளாக உடைந்துவிட்டது” எனக் கூறினார். இச்சம்பவம் அலிகாரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மன்னாரில் இளம் பெண்ணின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் தாயான இளம் பெண் கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவனால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாகிய காரணத்தினால் மனவிரக்தி அடைந்த நிலையில் தற்கொலைக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
றெஜினோல்ட் வாசுகி என்ற 22 வயதான தாயே அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் மன்னார் நறுவிலிக்குளம் மாதிரி கிராமத்தில் நேற்று முன்தினம் (17.08.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக மரண விசாரனை மூலம் தெரியவருகின்றது.
இந்த சம்பவம் மன்னார் மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதை காட்டுகின்றது.
இம் மாத ஆரம்பத்தில் யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மடு பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரின் உடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் -நாவற்குழி சந்தியில் இன்று (19.08.2023) விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பவுசர் வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகின்றது.
இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
துபாய் செல்வந்தரை மணந்து கொண்ட பிரித்தானிய பெண்மணி தனது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சவுதி அல் நடக்(Soudi Al Nadak, 26) என்ற இளம்பெண்ணுக்கும், துபாய் செல்வந்தரான அவரது கணவர் ஜமால் அல் நடக்-கிற்கும்(Jamal Al Nadak, 32) 3 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.
7 வருடங்களுக்கு முன்பு இருவரும் துபாயில் படித்து கொண்டு இருந்த போது நட்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். செல்வந்தரை மணந்து கொண்டதால் பிரித்தானிய பெண்ணான சவுதி அல் நடக் ஆடம்பர சொகுசு வாழ்க்கையை தினம் தினம் அனுபவிக்கிறார்.
மேலும் தனது ஆடம்பர சொகுசு வாழ்க்கை குறித்து சமூக ஊடகத்திலும் சவுதி அல் நடக் பகிரும் நிலையில் அவரை இணைய வாசிகள் “தங்க வெட்டி”(gold-digger) என கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காக சில முக்கியமான விதிமுறைகளை கணவன்-மனைவியாக தாங்கள் பின்பற்றுவதாக இணையதள பதிவு ஒன்றில் சவுதி அல் நடக் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர் பாலினத்தினருடன் எத்தகைய நட்புறவும் வைத்து கொள்ள கூடாது, அனைத்து கடவுசொல்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும், தங்கள் இருப்பிடம் குறித்த GPS லொக்கேஷனை இருவரும் தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் தாங்கள் இருவரும் திறந்த உரையாடலை எப்போதும் நடத்துவதாகவும், நான் எப்போது அடக்கமான ஆடைகளை மட்டுமே அணிவதாகவும் சவுதி அல் நடக் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக ஊடகங்களில் பதிவுகளை பகிரும் போது ஜமால் மற்றும் அவரது குடும்பத்திற்கான மரியாதையை சீர்குழைக்காத வகையில் மிகவும் கவனமாக பதிவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழி. ஆனால் சொர்க்கத்தையே திருமணத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என இளையதலைமுறையின் மோகம் திரும்பியுள்ளது.
அந்த வகையில் திருமணத்திற்கு முன் ப்ரீ வெட்டிங் சூட் என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழிக்கும் பலதரப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை எடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு திருமண முறைகள் இருந்தாலும் அவரவர் கலாச்சார முறைப்படி நடத்திக் கொள்கின்றனர்.
சைவ, அசைவ விருந்து, பாட்டுக் கச்சேரி, அந்தாக்ஷரி, நடனம், நாட்டியம் என கேளிக்கை கொண்டாட்டங்கள் திருமணத்தில் . அதே நேரத்தில் ஃப்ரீ வெட்டிங் எனப்படும் திருமணத்திற்கு முந்தையை போட்டோ வெட்டிங் சூட்கள் பெரும் பாய்ச்சலுடன் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
தற்போது வைரலாகும் ஒரு போட்டோ ஷூட்டில் மணமகனுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் மணமகள், செயற்கை மழையை பெய்ய வைத்து அதில் மணமக்கள் முழுமையாக நனைய வைத்து புகைப்படம், வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையான புகைப்படங்கள், வீடியோக்கள் உயரமான மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை சூழல் நிறைந்த வனப்பகுதிகள், கடல்களில் கூட இப்படியான ஆபத்தான போட்டோஷுட்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கேரளாவில் சமீபத்தில் அரைகுறை ஆடைகளுடன் மணமகள் மற்றும் மணமகன் ஆகிய இருவரும் திருமணத்துக்கு முன்பு ஃப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வீடியோவில் மணமகனின் வாயோட வாய் வச்சு சிகரெட் புகையை மணமகள் உறிஞ்சி அதனை மணமகள் வெளியிடுகிறார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
சிகரெட் புகைக்கு எதிராக உலகம் முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், மணமகனின் சிகரெட் புகையை மணமகள் வாய் வைத்து உறிஞ்சுவது அவரது உடல் நலத்திற்கும் கேடானது என நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நடனம் ஆடிய போதே மரணம், விளையாடிக் கொண்டிருந்த போதே மரணம், பள்ளி மாணவன் மயங்கி சரிந்து மரணம், மணமேடையில் மரணம் என இளவயது மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிகழ்வுகள் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா நெரியா பகுதியில் வசித்து வருபவர் 19 வயது சுமா.
இவர் மங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுமா நீண்ட நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.
ஆகஸ்ட் 9ம் தேதி மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமா தனது வீட்டில் மயங்கி சரிந்து விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சுமாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்.
சுமா ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களில் குடகு, துமகூரு, மங்களூரு பகுதிகளில் 6 மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
அதே போல் பள்ளியில் பிரார்த்தனை பாடல் பாடிக் கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் உயிரிழப்புக்கள் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தபாலம் நாகேந்திரா காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். ஆதர்ஷா நகரை சேர்ந்த சூர்ய பிரகாஷ் ராவ் என்பவரை காதலித்து வந்து உள்ளார்.
அதே போல், சூர்ய பிரகாஷின் நண்பரான லெங்கா சாய் குமாரையும் சிறுமி காதலித்து வந்து உள்ளார். ஒருவருக்கு தெரியாமல், இன்னொருவரை காதலித்து வந்த சிறுமி, தன்னை மட்டுமே உயிருக்குயிராக நேசிப்பதாக அந்த இரு இளைஞர்களும் நினைத்துக் கொண்டனர்.
சாய்குமாரும், சூரியபிரகாஷூம் நண்பர்கள் என்றாலும், மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை. இது மாணவிக்கு இன்னும் வசதியாகிவிட்டது. இதனால், அவர் 2 வாலிபர்களுடனும் உல்லாசமாக சுற்றித்திரிந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, மாணவி, சாய்குமார் இருவரும் அந்த பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய போது, சாய்குமார் லாட்ஜ் அறையில் வைத்தே மாணவிக்கு தாலி கட்டி ரகசிய திருமணம் செய்துள்ளார். இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வீடுகளில் அலைப்பாயுதே பட பாணியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், சாய்குமார், மாணவிக்கு தாலி கட்டிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்ய பிரகாஷ், தன்னுடைய காதலிக்கு நண்பன் சாய்குமார் தாலி கட்டியதைப் பற்றி, நேரடியாகவே அந்த மாணவியிடம் கேட்டுள்ளார். வீடியோ வந்துவிட்டதால், அந்த மாணவியும் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சூரியபிரகாஷ், நேராக சாய்குமாரிடம் சென்று, மாணவி தன்னையும் காதலித்து நடித்தது பற்றி புட்டு புட்டு வைத்தார். இதைக்கேட்டு, அதிர்ந்து போன சாய்குமார் அதிர்ந்து போனார்.
இதைத் தொடர்ந்து, சூரிய பிரகாஷ் மற்றும் சாய் குமாரும் மாணவியின் வீட்டுக்கு சென்று, முக்கோண காதல் விவகாரத்திற்கு, ஒரு முடிவை சொல்லுமாறும் கேட்டுள்ளனர்.
இப்படி 2 காதலர்களும் வீட்டுக்கு தனது முகத்திறையை கிழித்து விட்டதால், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், போலீஸ் விசாரணை வரை சென்றதால் எங்கே நாம் மாட்டிக் கொள்வோமோ என்று சூரியபிரகாஷ் பயந்துவிட்டார். மேலும், தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ? என்று நினைத்து, ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மைனர் பெண்ணுக்கு தாலி கட்டியதாக சாய்குமார் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 2 பேரை காதலிப்பதாக 12-ம் வகுப்பு மாணவி நடித்து மோசடி செய்ததன் விளைவு, 2 உயிர்கள் பறிபோனதுடன், இளைஞர் ஒருவர் வாழ்க்கை தொலைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த முக்கோணக் காதலால் 3 குடும்பங்கள் தத்தளிப்பதை உணர்ந்து, இளைஞர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
பன்றியை சுட குறி வைத்தபோது தவறுதலாக 4 வயது சிறுமி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அடுத்துள்ளது லோவகோதுரு (Lovakothuru) என்ற கிராமம் உள்ளது. இங்கு பாலிவேல ராஜு – நாகலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு தன்யாஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களது பக்கத்து வீட்டில் அனந்தரபு சூரிய சந்திரா என்ற நபர் வசித்து வருகிறார்.
சூரிய சந்திரா என்ற இந்த நபர் பன்றிகள் வளர்த்து வருகிறார். இந்த சூழலில் இவரது பன்றி ஒன்று பன்றி குடிலில் இருந்து வெளியேறி திரும்பாமல் இருந்துள்ளது. அந்த பன்றியை சூர்யா பிடிக்க முயற்சித்தும் அது பிடிபடவில்லை.
எனவே மற்றொரு பன்றி வளர்ப்பாளாரான வைரலா பத்ரி என்பவர் அந்த பன்றியை சுட்டு பிடிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் சூர்யாவும் ஒரு நாட்டு துப்பாக்கி பயன்படுத்துபவரை நியமித்துள்ளார். அந்த நபரும் பன்றியை குறிநோக்கி சுட்டு தள்ள காத்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த துப்பாக்கி நபர் துப்பாக்கியோடு பன்றியை சுட தயாராக இருந்தார். அந்த சமயத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி தன்யா வெளியே வந்து விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது இந்த நபர் துப்பாக்கியால் பன்றியை சுட்டபோது, குறி தவறி அந்த குண்டு சிறுமி தன்யா மீது பாய்ந்தது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் ஆரம்ப பிரிவு மைதானத்தில் நேற்று(17.08.2023) காலை பிரார்த்தனையுடன் ஆரம்ப பிரிவு அதிபரின் தலைமையில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவில் 40மாணவ தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு சின்னம் சூட்டப்பட்டனர்.
இந்நிகழ்வில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முதல்வர் லோகேஸ்வரன் பிரதம அதி்தியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பிரிவிற்கான பொறுப்பாசிரியர்கள், ஒழுக்காற்றுக் குழுவினர், பெற்றோர்கள் என பலரும் கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வாழ்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (18.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 316.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 244.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 421.18 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 402.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு இன்பருட்டி பகுதியில் இடம்பெற்ற நீச்சல்ப் போட்டியில் 56 வயதான பெண் ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இன்று (17.08.2023) இடம்பெற்ற ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டியில், மற்றுமொரு 40 வயது பெண் முதலாமிடத்தையும், 44 வயதுடைய பெண் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
வடமராட்சி – வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது.
இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது. இதன்போதே குறித்த பெண்கள் நீந்தி முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.
இதில் ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன. பருத்தித்துறை- தென்னியம்மன் முனையில் இருந்து இன்பசிட்டி வரை நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ மாகந்தன பிரதேசத்தில் 30 வயதுடைய ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.கெஸ்பேவ மாகந்தன விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இசுரு நெரஞ்சன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடனை அடைக்க முடியாத காரணத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழக்க நேரிட்டதாக உயிரிழந்த இளைஞனின் தாய் குறிப்பிட்டுள்ளார்.இசுரு கடந்த 15ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தனது பெற்றோருடன் உரையாடிவிட்டு வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது, இரவு உணவுக்கு வருமாறு தாய் இசுருவின் அறையை நோக்கிச் சென்ற போது, கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டார்.
மகன் தூங்கி விட்டதாக அம்மா நினைத்துள்ளார். மறுநாள் காலை தனது மகனின் அறைக்கு தேநீர் கொண்டு சென்றதாகவும், ஆனால் அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் தாய் பொலிஸாரிடம் கூறினார்.பின்னர், இசுருவின் தந்தை அறையின் முன் ஒரு கதிரையை வைத்து, கதவில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவரது மகன் படுக்கையில் இல்லை.
இது குறித்து பெற்றோர் அயலவர்களிடமும் தெரிவித்ததையடுத்து, அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, அறையில் இசுரு தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.இசுருவின் அறையை பொலிஸார் சோதனையிட்ட போது, தாய், தந்தை உட்பட உறவினர்களுக்கு எழுதிய 13 கடிதங்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இசுருவின் இறப்பதற்கு முன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில், “அம்மா, இந்த உலகத்தில் நான் நேசித்த ஒரே நபர் நீங்கள் என்று சொன்னால் தவறில்லை என்று நம்புகிறேன். ஏனென்றால் எனக்குத் தெரிந்தவர்களில் மரணத்தின் முன்னால் விட்டு செல்ல முடியாத ஒருவராக நீங்கள் மாத்திரமே இருக்கின்றீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இசுரு தனது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் “அப்பா நீங்கள் இப்போது சோகமாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் என்னை அதிகமாக நம்புனீர்கள்.முதலில் இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும். பிறப்பும் இறப்பும் இரண்டு வார்த்தைகள் என்றாலும் இரண்டின் விளைவும் ஒன்றுதான். அதாவது அவை இரண்டும் ஒன்றுதான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய கடித அட்டைகளை அதன் பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடம் ஒப்படைக்குமாறும் அவரது இறுதி உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். எனினும் இசுரு இரண்டு பேரிடம் 10 லட்சம் ரூபா கடனாக பெற்று பின்னர் 3 லட்சம் ரூபாவை திருப்பி செலுத்தியுள்ளார்.
பணத்தை கொடுத்தவர்கள் கொடுத்த தொகையை விட அதிக பணம் கேட்டதாகவும், கொடுக்க கடினமாக இருந்ததால் மகன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தாயார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் இசுரு உயிரை மாய்க்க முயன்றதாக இசுருவின் தந்தை தெரிவித்துள்ளார்.