இலங்கையில் ஒரே நாளில் இளம் பெண்ணும் இளைஞனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

மன்னாரில்..

இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நேற்று (17.08.2023) காலை மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதான டிலக்‌ஷன் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதே நேரம் மன்னார் நறுவலிக்குளம் மாதிரிகிரமத்தை சேர்ந்த றெஜினோல்ட் வாசுகி என்ற 22 வயதான யுவதி நேற்று இரவு தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ஒரே நாளில் இரு தற்கொலை மரணங்கள் மன்னார் மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதை காட்டுகின்றது.

இம் மாத ஆரம்பத்தில் யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மடு பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரின் உடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு : கடந்த 24 மணிநேரத்தில் 4 மரணங்கள்!!

வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த வாகனம் திருத்தும் தொழில் புரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ரூபன் என்பவர் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இன்று (18.08.2023) பிற்பகல் அவரது மனைவி வெளியில் சென்று திரும்பிய வேளை கணவரான ரூபன் தூக்கில் சடலமாக கிடந்ததை அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கிய பின் பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கடந்த 24 மணி நேரத்தில் வவுனியாவில் விபத்தில் ஒருவரும் , நீரில் மூழ்கி இரு சிறுவர்களும், தற்சமயம் குறித்த குடும்பஸ்தருமாக 4பேர் ஆகாலமரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நீரில் மூழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் சடலங்களும் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம்!!

வவுனியாவில் வலயமட்ட விளையாட்டுப் போட்டியின் போது நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் சடலங்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று (18.08) அடக்கம் செய்யப்பட்டது.

வவுனியா வலயமட்ட விளையாட்டுப் போட்டியானது பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்ற போது மைதானத்தின் அருகில் இருந்த நீர் குழியில் விழுந்த வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்கள் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரு மாணவர்களின் சடலம் பட்டாணிச்சூர் பள்ளியில் அஞ்சலிக்காக வைகப்பட்டு பட்டாணிச்சூர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுத்தீன், வலயக் கல்வித் திணைக்களத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,

உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்துடன், பலரதும் கண்ணீருக்கு மத்தியில் இருவரது சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பள்ளியில் சுருண்டு விழுந்து மாணவி உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை!!

அவிநாசியில்..

அரசு பள்ளியில், காலையில் நடைப்பெற்ற இறை வழிபாட்டில் கலந்து கொண்ட 9ம் வகுப்பு மாணவி, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கபில்தேவ் என்ற மகனும் கந்தேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் கபில்தேவ் 11ம் வகுப்பும் கந்தேஸ்வரி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கந்தேஸ்வரிக்கு காலில் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

காலை வழக்கம் போல கந்தேஸ்வரி பள்ளிக்கு சென்று, பள்ளியில் காலை நடைபெற்ற இறை வழிபாட்டில் கலந்து கொண்ட போது திடீரென கந்தேஸ்வரி மயங்கி விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கந்தேஸ்வரியை அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்ததில் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறியதை அடுத்து, உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு வந்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இளம் மனைவி தற்கொலை… மரணத்தில் மர்மம் இருப்பதாக மாமியார் வீட்டை சூறையாடிய உறவினர்கள்!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சிநாதன் மகள் கவுசல்யா. இவருக்கு வயது 27. இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தில் வசித்து வரும் ராமச்சந்திரன் மகன் ராஜாராமுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 2ம் தேதி கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான கௌசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ராஜாராம் குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

கௌசல்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடக்கம் செய்தவற்காக கவுசல்யாவின் உடலை உறவினர்கள் கீழ் ஆதனூருக்கு கொண்டு வந்தனர்.

அப்போது அவரது உடலை கணவர் ராஜாராமின் வீட்டின் முன்பு வைத்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கவுசல்யாவை கொன்று விட்டதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர் .

மேலும் ராஜாராமின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த டி.வி., மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு, ஜன்னல் என அனைத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதுபற்றி குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதன் பிறகு கௌசல்யாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, கவுசல்யாவின் உடலை அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு கடந்த காதல்.. தென்னாப்பிரிக்க பெண்ணை திருமணம் செய்த தமிழ் இளைஞன்!!

தமிழகத்தில்..

தமிழக இளைஞர் ஒருவர், தென்னாப்பிரிக்க பெண்ணை காதலித்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரைச் சேர்ந்த தம்பதி செல்லத்துரை மற்றும் சின்ன பொண்ணு. இவர்களுக்கு குட்டிமார்க்ஸ் என்ற மகன் உள்ளார்.

இவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு தென்னாப்பிரிக்க நாட்டின் எத்தியோபியா நகரில் உள்ள அர்பா மினாச் அரசு பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அப்போது, அதே பல்கலைக்கழகத்தில் எத்தியோப்பியா நாட்டின் அடமா நகரரைச் சேர்ந்த அக்லிலுகிஸான் என்பவரின் மகளான மென்பரே அக்லிலு என்பவர் துணை பேராசிரியையாக பணியாற்றினார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இரு வீட்டின் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

ஆப்பிரிக்க மணப்பெண் மென்பரே அக்லிலு சேலை அணிந்து மாலை மாற்றி தமிழக இளைஞரை கரம் பிடித்தார். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. இவர்களது திருமணத்தில் கலந்த கொள்ள மணப்பெண்ணின் வீட்டாருக்கு விசா கிடைக்காததால் அவர்களால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

பள்ளியில் சுருண்டு விழுந்து 9ம் வகுப்பு மாணவி பலியான சோகம்!!

அவிநாசியில்..

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கபில்தேவ் என்ற மகனும் கந்தேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

அருகில் உள்ள தனியார் பள்ளியில் கபில்தேவ் 11ம் வகுப்பும் கந்தேஸ்வரி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கந்தேஸ்வரிக்கு காலில் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல கந்தேஸ்வரி பள்ளிக்கு சென்று பள்ளியில் காலை நடைபெற்ற இறை வழிபாட்டில் கலந்துகொண்டபோது திடீரென கந்தேஸ்வரி மயங்கி விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கந்தேஸ்வரியை அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்ததில் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறியதை அடுத்து, உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு வந்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வவுனியா இரட்டைக் கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனங்கள் சிஐடியால் மீட்பு!!

வவுனியாவை அதிரவைத்த இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாகனங்கள் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,

தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபருக்கு சொந்தமானதும், குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படும் வாகனங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது டிப்பர், பட்டா ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை (16.08) மீட்கப்பட்டுள்ளன.

குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரணை பிரிவினரின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மொடில் ரஞ்சலமரகே ஆலோசனைக்கு அமைவாக செயற்பட்டுவரும் பொலிஸ் பரிசோதகர் இக்பால்,

பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ் கான்ஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து கைப்பற்றிய வாகனங்களை நீதவான் முன்னிலையில் மன்றுக்கு முற்படுத்தியுள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று (17.08.2023) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களிற்குள்ளாகினார்.

விபத்து தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

தாய் பேசாததால் தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் : யாழில் நடந்த சோகம்!!

யாழில்..

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தாய் பேசவில்லை என்ற காரணத்தினால் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளா சம்பவம் பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த இளம் குடும்பஸ்தரும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் அவருடன் கடந்த சில நாட்கள் பேசவில்லை.

இதனால் மனமுடைந்த நபர் கடந்த 14ஆம் திகதி எலிப்பாசனம் அருந்தியுள்ளார்.இந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இவ்வாறான நிலையில், நேற்றையதினம் (15-08-2023) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 41 வயதான தங்கராசா சதீஷ் என தெரியவந்துள்ளது.இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 8 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றும் உள்ளது.இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

யாழில் திடீரென காணாமல்போன இளைஞன்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கடந்த 11ஆம் திகதி வீட்டிலிருந்து மதிய உணவினை உட்கொண்டு விட்டு சென்ற பின்னரே குறித்த 27 வயதான தம்பிப்பிள்ளை விதுசன் எனும் மனநலம் குன்றிய இளைஞர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.மேலும், குறித்த இளைஞன் மாயமான அன்று 14 ஆம் வட்டாரத்தில் கட்டப்பட்டிருந்த தெப்பம் ஒன்றும் காணாமல் போயுள்ளது.

குறித்த தெப்பத்தில் இளைஞர் தீவினை விட்டு வெளியேறியிருக்ககூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில், இது தொடர்பில் கடற்படை ஏனைய பொலிஸ் நிலையங்கள் என அனைத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைப்பவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்கும்படியும் நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு சென்று சாதிக்கும் இலங்கை தமிழ் சிறுமியின் கண்ணீர் வரவழைக்கும் பதிவு!!

அசானி கனகராஜ்..

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் சீசன் 3 யில் மேடையில் நேற்றைய தினம் இலங்கை சிறுமி அசானி கனகராஜ் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கான அடையாளத்தினை ஏற்படுத்தி கொண்டார்.சரிகமப நிகழ்ச்சியின் 3 வது சீசன் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வார நிகழ்ச்சியின் இடையில் சரிகமப மேடையில் கேட்ட ஒரு குரல் ஒட்டுமொத்த மலையக மக்களின் அடையாளமாக நின்றது.பாடல் நிகழ்ச்சிக்கு தேர்வான அசானி பணப் பிரச்சினையால் இந்தியா சென்றடைய தாமதமாகிவிட்டது.இந்த நிழ்ச்சிக்கு தாமதமாக சென்ற இலங்கை சிறுமி அசானி ஏமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது என்பதற்காக, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு வாய்ப்பை வழங்கியது.

இதனையடுத்து, ‘ராசாவே உன்ன நம்பி ஒரு ரோசாப்பூ’ என்ற பாடலை பாடி முடித்ததும் நடுவர்கள் வெறும் வானொலி பாட்டை கேட்டு இப்படி பாடுவது என்பதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். பாடலை பற்றி கூறும் முன்பு உங்களை பற்றி கூறுங்கள் என்று கோரினார்கள்.

”சிறுவயதில் இருந்தே பாடுவதற்கு எனக்கு மிகவும் விருப்பம். எனது பெற்றோர் நான் பாடும் போது உயர்ந்த இடத்திற்கு வருவேன் என்று அடிக்கடி கூறுவார்கள். எனக்கு 14 வயது, நான் 9ம் வகுப்பில் படிக்கிறேன். நான் மேடையில் பாடுவது இது தான் முதல் முறை” என்று தன்னை அறிமுகப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி மேடையில் பேசிய அசானியின் தந்தை கனகராஜ் பணப்பிரச்சினை இருந்தது. இதனால் முதலில் வாய்ப்பை மறுத்து விட்டேன். பிறகு ஊர் மக்கள் பணம் சேர்த்து தங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தியாவை வந்தடைய இலங்கை காசுப்படி ஒரு இலட்சம் பணம் தேவைப்பட்டது. தோட்ட தொழிலாளியான நான் அதை சம்பாரிக்க 2 ஆண்டு சென்று இருக்கும். மேலும், கடல் தாண்டி சாதிக்க உதவி அத்தனை உறவுகளுக்கும் நன்றி கூறினார்.

இதனை கேட்ட நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, அபிராமி ஆகியோர் சரிகமப மேடையை நம்பி வந்த சிறுமி ஒரு போதும் ஏமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது என்று இன்னும் 2 வாரங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனாவும் அசானிக்காக கண்ணீர் சிந்தியதுடன் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அசானிக்கு செய்த உதவிக்காக நன்றி தெரிவித்தார்.

கனடாவில் உயிரிழந்த யாழ் வல்வெட்டித்துறை சேர்ந்த இளைஞன்!!

வல்வெட்டித்துறையில்..

கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த வடமராட்சி வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் 16 வது மாடியிலிருந்து கீழே இருந்த அந்த நாட்டவரும் மீது குதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ரகுபதி ஆனந்த் என்ற இளைஞரும் அந்த நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் கர்ப்பப்பை குழாய் வெடித்து இளம் ஆசிரியை பலியான சோகம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் புலோலியில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் நேற்றைய தினம்(16) உயிரிழந்துள்ளார். புலோலியைச் சேர்ந்த 30 வயதுடைய அனுசன் துளசி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். திடீர் வயிற்று வலியினால் துடிதுடித்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனையின் போது , கர்ப்பப்பை குழாயினுள் கரு தங்கியமையின் காரணமாக கர்ப்பப்பை குழாய் வெடித்தே மரணம் சம்பவித்ததாக வைத்தியர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சிறுவன் ஒருவர் சர்ப்பம் தீண்டி உயிர்ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்(15.08.2023) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் எனும் பாலகனே உயிரிழந்துள்ளார்.

சர்ப்பம் தீண்டியவுடன், சிறுவன் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுவனை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து, உறவினர்கள் பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் குழியில் விழுந்து மாணவர் இருவர் மரணம் : பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல்!!

வவுனியா வலயமட்ட விளையாட்டு போட்டிகள் வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது.

மைதானத்தில் மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இடம்பெற்றபோது மைதானத்தின் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.

மாணவர்கள் விழுந்ததை அவதானித்தவர்கள் கடமை இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர் அவ்விடத்திற்கு வருகை தந்து பல்கலைக்கழக மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோருடன் இணைந்து குறிந்த மாணவர்களை மீட்டுள்ளனர்.

மீட்க்கப்பட்ட இரு மாணவர்களையும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்கு முன்பே இறந்துள்ளார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவத்தை அறிந்து பல்கலைக் கழகத்திற்கு சென்ற வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அவ்விடத்தில் பல்கலைகழக மாணவர்கள் குவிந்திருத்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.

பல்கலைகழக மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் துணைவேந்தரை பாதுகாப்பாக பல்கலைகழகத்திற்கு அழைந்து சென்றதுடன், பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தார்.

குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14,15 மாணவர்களே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.