காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி – ஹூனுவல பிரதேசத்தில் வசிக்கும் பதினொரு வயதுடைய நிமான்சா சத்சராணி காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்ட நிலையில் தற்போது கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை கவலையுடன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தில் ஒரே பிள்ளை என்றும் ஐந்தாம் தரத்தில் படித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மொரத்தோட்டையில் உள்ள தனியார் மருந்தகமொன்றில் வைத்தியர் வழங்கிய மருந்தில் விஷம் கலந்ததால் தனது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனவும் சிறுமியின் தந்தை கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில்,கடந்த ஏப்ரல் 5ம் திகதி மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அதன்பின் கடந்த 6ம் திகதி காலை அங்குள்ள தனியார் மருந்தகத்தில் இருந்த மருத்துவரிடம் காண்பித்து மருந்து வழங்கப்பட்டது.ஆனால் மறுநாள் ஏப்ரல் 7ஆம் திகதி காலையிலேயே மகளின் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தென்பட்டன. கண்கள் மூடியிருந்தன.

உடல் சோர்வடைந்து காணப்பட்டது அதன்படி, மகள் அதே மருத்துவரிடம் திரும்பியபோது, ​​மகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளதாக மருத்துவர் கூறினார்.மருந்துக் கடையில் எடுக்க வேண்டிய மருந்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு, ஒரு வாரத்தில் குளிக்கச் சொன்னார். ஆனால் மறுநாள் ஏப்ரல் 8ஆம் திகதி மகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ன்றதாகவும் தந்தை கூறியுள்ளார்.

அங்கு மகளுக்கு மருந்தில் விஷம் கலந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.ஏப்ரல் 8ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு மேல் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் மகளுக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடம்பில் இருந்த காயங்கள் ஓரளவு ஆறின.ஆனால் பார்வை கிடைக்கவில்லை எனவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார். அதேவேளை மருந்தகத்தில் சிறுமிக்கு முதலில் மருந்து வழங்கிய மருத்துவர் , அரச மருத்துவமனையில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இலங்கையில் போதையில் பாடசாலைக்கு சென்ற மாணவியால் அதிர்ச்சி!!

கெகிராவ..

மது அருந்தி விட்டு போதையில் பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகப்பட்ட பொலிஸார், மாணவியை விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாணவி மது அருந்தி உள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்து பொலிஸார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று , பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது பாடசாலையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரனை நடத்திய போது மாணவியின் தாத்தா தான் தன்னை மது பழக்கத்திற்கு அடிமையாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு மாணவி மது போதையில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கெகிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நடனம் ஆடிய கல்லூரி மாணவி திடீர் மரணம்!!

தெலங்கானாவில்..

சமீபகாலமாக சின்னஞ்சிறு வயதில் மாரடைப்பு ஏற்படுவதும், அதனால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து பலி,திருமண மேடையில் சரிந்து பலி, நடனம் ஆடிய போது உயிரிழப்பு என திடீர் உயிரிழப்புக்கள் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் கல்லூரி மாணவி நடனம் ஆடிய போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் அரசு ஆதர்ஷ் கல்லூரியில் நடன நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அதே பகுதியில் வசித்து வரும் குண்டு அஞ்சையா மற்றும் சாரதாலா தம்பதியின் 16 வயது மகள் பிரதீப்தி சிங் சக மாணவர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். திடீரென மாணவி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி கொடுத்தனர்.

ஆனால் மாணவிக்கு மூச்சு பேச்சு இல்லை. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அந்த மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாணவிக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பெற்றோரிடம் அறிவுறுத்தி இருந்தும் மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் மாணவிக்கான அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டு வந்த நிலையில் தான் மாணவி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து இதய நோய் மருத்துவர் ”இதய நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடலை வருத்தி செய்யும் எந்த வேலைகளையும் செய்ய அனுமதிக்கவேண்டாம். அவை அவர்களின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம். மேலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்”எனவும் அறிவுறுத்தியுள்ளார்

தென்னிலங்கையில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆசிரியை!!

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடசாலை மாணவர்களை வெளியில் சுற்றுலா அழைத்துசெல்வது வழமை.பல்வேறு விடயங்களை மாணவர்கள் அறிந்துகொள்வதற்காக கல்விச்சுற்றுலாக்கள் அழைத்து செல்லப்படுகின்றன.

அந்தவகையில் தென்னிலங்கை பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களுடன் சென்ற அந்த ஆசிரியை பிள்ளைகளின் தலையில் வெய்யில் படாமல் இருப்பதற்காக தனது சேலைத் தலைப்பால் அவர்களை மூடி அழைத்துசெல்கின்றார்.

கோழிகள் தங்கள் குஞ்சுகளை சிறகுள்ள மறைத்து காப்பது போல மழை வெய்யில் காலங்களில் பொதுவாக அம்மாக்களே இவ்வாறு பிள்ளைகளை அழைது செல்வதனை நாம் கண்டிருக்கின்றோம். இந்நிலையில் ஆசியை ஒருவர் இவ்வாறு மாணவர்களை தனது சேலைத் தலைப்பால் மூடி அழைத்துசென்ற சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்!!

மரக்கறிகள்..

சந்தையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும், அதன் பயனை நுகர்வோர் பெறவில்லை என தெரியவந்துள்ளது.பல சில்லறை வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

ஒரு கிலோ பாகற்காய் மொத்த விலை 200 ரூபாயாக இருந்தாலும், சில சில்லறை கடைகளில் பாகற்காய் கிலோ 480 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்பட்டது.ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விலை 140 ரூபாவாக இருந்தாலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோவின் விற்பனை விலை 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சமீப நாட்களாக சில்லறை சந்தையில் மற்ற வகை காய்கறிகளும் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.இடைத்தரகர்கள் ஊடாக வியாபாரம் செய்வதால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவியை உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்த ஆசிரியர் கைது!!

பொகவந்தலாவையில்..

பொகவந்தலாவையில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியை தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இக் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை (15) மாணவியை அழைத்துள்ளார்.

அவ்வாறே மாணவியும் சென்ற போதே ஆசிரியர் அம்மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.வைத்திய பரிசோதனைக்காக மாணவி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா பாடசாலையில் அழையா விருந்தாளியால் பதற்றம்!!

வவுனியாவில்..

வவுனியா வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16) காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த காட்டுயானையைக் காட்டுக்குள் விரட்டியதாக கூற்ரப்படுகின்றது. எனினும் அந்த யானையானது அக் கிராமத்தினை அண்டிய பகுதியிலேயே தொடர்ந்து சுற்றிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுரோட்டில் நின்று காதலியுடன் தொலைபேசியில் பேசியவர் அதிரடியாக கைது!!

கண்டியில்..

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் தன்னுடைய காதலிக்கு கோல் எடுத்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.நன்றாக கசிப்பு அருந்திவிட்டே காதலியையும் அவளுடைய சகோதர்களையும் காதலன் நடுசாமத்தில் திட்டிக்கொண்டிருந்துள்ளார்.

பொலிஸார் இரவு ரோந்து சென்று கொண்டிருந்தபோது , ​​கண்டி மாவில்மட பிரதேசத்தில் வீதியோரத்தில் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதிருந்த ஒருவர் கடுமையான தூசன வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருப்பதை பொலிஸ் அதிகாரிகள் கண்டுள்ளனர்.கசிப்பை குடித்துக்கொண்டே தொலைபேசியில் திட்டிக்கொண்டிருந்ததை பொலிஸ் அதிகாரிகள் அவதானித்தனர்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவரிடம் விசாரித்த போது, இரவில் தனது காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது அளவுக்கு அதிகமாக கசிப்பு குடித்ததால் , காதலியின் சகோதரர்கள் அவரை அடித்து உதைத்ததாகவும் தெரியவந்தது.அதன்பின், முச்சக்கரவண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு, காதலிக்கு போன் செய்து, காதலியையும் , அவரது சகோதரர்களையும் திட்டியதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்த போத்தலில் 750 மில்லி லீற்றர் கசிப்பு எஞ்சியிருந்ததுடன் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குளத்தில் தவறி விழுந்து மாணவனின் தாய் உட்பட 4 பேர் பலியான சோகம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகலகுண்டே அருகே மல்லசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமி. இவரது மகன் ரஞ்சித் . இந்த சிறுவன் துமகூரு மாவட்டம் கியாதசந்திரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தகங்கா மடத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

அவனுடன் சேர்ந்து சங்கர் மற்றும் ஹர்ஷத் ஆகிய 2 மாணவர்களும் படித்து வந்தார்கள். ஒரே வகுப்பில் படித்ததால் 3 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த 3 மாணவர்களும் மடத்திற்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி படித்தார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் லட்சுமி தனது மகனை பார்க்க பெங்களூருவில் இருந்து துமகூருவுக்கு சென்றார். சித்தகங்கா மடத்திற்கு சென்ற அவர் தனது மகன் ரஞ்சித்தை பார்த்து பேசினார்.

பின்னர் மகனுக்காக கொண்டு வந்த சாப்பாடு, பிற உணவு பொருட்களை கொடுப்பதற்காக மடத்தின் அருகே உள்ள குளத்து பகுதிக்கு லட்சுமியும், ரஞ்சித்தும் சென்றார்கள். அப்போது ரஞ்சித்துடன், அவரது நண்பர்கள் சங்கரும், ஹர்ஷத்தும் சென்றனர்.

குளத்தின் அருகே அமர்ந்து அவர்கள் 4 பேரும் சாப்பிட்டனர். பின்னர் கை கழுவுவதற்காக ரஞ்சித் மட்டும் குளத்திற்கு சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக குளத்திற்குள் ரஞ்சித் தவறி விழுந்தான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் சங்கர், ஹர்ஷத் குளத்துக்குள் குதித்து ரஞ்சித்தை காப்பாற்ற முயன்றுள்ளனர்.அவர்களுக்கு நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி தனது மகனையும், நண்பர்களையும் மீட்க தண்ணீரில் குதித்துள்ளார். அவருக்கும் நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

அப்போது குளத்தின் அருகே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மற்றொரு நபர், அவர்கள் 4 பேரையும் மீட்க குளத்திற்குள் குதித்தார். அவர் ரஞ்சித்தை மட்டும் மீட்டு கரை சேர்த்தார். ஆனால் மற்ற 3 பேரையும் அவரால் மீட்க முடியவில்லை.

மேலும் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அங்கு வேறு யாரும் இல்லாததால் லட்சுமி, சங்கர், ஹர்ஷத் மற்றும் காப்பாற்ற வந்த நபர் என 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கியாதசந்திரா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் அங்கு விரைந்தார்.

அதே நேரத்தில் தீயணைப்பு படைவீரர்களும் விரைந்து வந்து குளத்தில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடலையும் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அந்த குளம் 35 அடி ஆழம் இருந்ததால், 4 பேரின் உடல்களும் உடனடியாக கிடைக்கவில்லை. நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில், குளத்துக்குள் தவறி விழுந்தவர்களை காப்பாற்ற முயன்று உயிரிழந்த நபர், யாதகிரியை சேர்ந்த மகாதேவப்பா என்பது தெரியவந்தது. மேலும் மகாதேவப்பாவின் மகன் பவன், சித்தகங்கா மடத்தில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

மகனுடன், குளத்தின் அருகே அமர்ந்திருந்த மகாதேவப்பா, சிறுவர்களை காப்பாற்ற முயன்று உயிரை பறிகொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கியாதசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொலை செய்த கொடூர கணவன்!!

உத்தரப்பிரதேத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிலதிபவர் ஒருவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை கண்டித்த கணவர் மனைவியின் இன்ஸ்டா கணக்கை அவரது கணவர் முடக்கியுள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் தகராறு இருந்து வந்தது. அத்துடன் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்குத் தெரியாமல் யாரிடமோ மனைவி பழகுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பூர்வாஞ்சல் விரைவு சாலையில் தொழிலதிபரின் கார் நேற்று நின்று கொண்டிருந்தது. பூட்டப்பட்ட காருக்குள் தொழிலதிபர் அழுது கொண்டிருந்தார். அவர் அருகில் அவரது 2 குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர்.

இது குறித்து அவரது 12 வயது மகள் “ காரில் வரும் போது தனது தாய்க்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த தந்தை, தாயின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டார்” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் தொழிலதிபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு தான் பிரச்சினையா வேறு ஏதும் பிரச்சினையா என தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

திருமணமான காதலனைக் கடத்தி சென்ற காதலி… 7 வருட காதலின் விபரீதம்!!

காதலி..

திருமணமான காதலனை முன்னாள் காதலி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திபன் (31).

இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், பிரியா என்ற 31 வயது பெண்னை கடந்த ஜுலை மாதம் திருமணம் செய்துள்ளார்.

இவரும் மென் பொறியாளராக வேலை பார்த்து வரும் நிலையில், நேற்றைய தினம் வழக்கம் போல் பார்த்திபன் வேலைக்கு புறப்பட்ட நிலையில், மர்ம கும்பல் ஒன்று அவரைக் கடத்திச் சென்றது.

மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்து தடுத்த தாயையும் கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளது. பின்பு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பொலிசார் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பார்த்திபனின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது காஞ்சிபுரத்தில் அடைத்து வைத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் 1 பெண் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்ததில் பார்த்திபனின் முன்னாள் காதலி சவுந்தர்யா என்பது தெரியவந்துள்ளது.

கல்லூரி படிக்கும் இருவரும் காதலித்து வந்த நிலையில், 7 வருட காதல் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் பார்த்திபன் நினைவாகவே இருந்த சவுந்தர்யா தனது தாயிடம் புலம்பி அழுதுள்ளார்.

இதனால் பார்த்திபனை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி தாலி கட்டி வைத்துள்ளனர். பொலிசார் காதலி சவுந்தர்யா அவருக்கு உதவியாக இருந்த தாய், தாய்மாமன், சித்தப்பா உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

2484 கோடி சொத்துக்களை விட்டு காதலனை கரம் பிடித்த இளம்பெண்!!

மலேசியாவில்..

மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங். இவருக்கு வயது 78. கூ கே பெங், மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் . அதாவது சொகுசு பிராண்டுகள் மற்றும் ஓட்டல்களில் பெரும் பங்குகளைக் கொண்ட பெரும் முதலீட்டு நிறுவனம். 2015ல் போர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44 வது இடத்தைப் பிடித்தவர்.

அவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் . இவருடைய மகள் ஏஞ்சலினா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்து வந்தார். தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களை கூறி ஏஞ்சலினாவின் காதலை அவரின் தந்தை ஏற்கவில்லை. இதன் காரணமாக பரம்பரை சொத்துகள் அனைத்தையும் உதறி விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்திருந்தார்.

ஏஞ்சலினாவும், ஜெடிடியாவும் 2008ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். ஏஞ்சலினா தனது பெற்றோரின் விவாகரத்தில் சாட்சிக்காக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார்.

தந்தை பணம் சம்பாதித்து கொண்டிருந்த போது தாய் தான் முழுவதுமாக குடும்பத்தை பார்த்துக் கொண்டதால் தனது ஆதரவாக ஏஞ்சலினா கருத்து தெரிவித்தார்.

வெகுவிரைவில் தாயும், தந்தையும் மீண்டும் ஒன்றாக சேர்வார்கள் எனக் கூறினார். ஏஞ்சலினாவின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இது குறித்து ஏஞ்சலினா கூறும்போது ”நாம் விரும்பினால் எப்போதும் பணம் சம்பாதிக்கலாம்.

ஆனால் அன்பு விலைமதிப்பற்றது. பணம் பல எதிர்மறை குணங்களுடன் வருகிறது. பிரச்சனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் அன்பு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும்” எனக் கூறியுள்ளார்.

தாயின் இறுதிச்சடங்கிற்கு சென்ற மகனும் விபத்தில் பலியான சோகம்!!

மத்தியபிரதேசத்தில்..

மத்தியபிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டம், ஜாத்ரி கிராமத்தில் ராணிதேவி தன்னுடைய மூத்த மற்றும் கடைசி மகனுடன் வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். ராணி தேவி, தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக மகன் ஸன்னியுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்.

வீட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தபோராவுக்கு அருகில் சென்ற போது எதிரே வந்த பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முதலுதவி அளித்த பிறகு மருத்துவர்கள் இருவரையும் 80 கிமீ தொலைவில் உள்ள ரேவா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். கொண்டு செல்லும் வழியிலேயே ராணி தேவி உயிரிழந்தார்.

இந்த தகவல் மற்றொரு மகன் சூரஜ்ஜுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சூரஜ் உடனே தாயின் முகத்தை பார்க்க அவருடைய நண்பர் அபிஷேக் சிங்குடன் ஒரு காரில் புறப்பட்டார்.

அந்த கார் சாட்னா மாவட்டம் ராம்பூர் பகேலன் பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கியது. டிரைவருடன் 3 பேரும் ரேவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சூரஜ் உயிரிழந்தார்.

தாய், மகன் இருவரது உடல்களும் ஜாத்ரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 12மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து தாயும் மகனும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

செல்போனில் மூழ்கிய மனைவி.. கணவன் செய்த கொடூரம்.. உடந்தையாக இருந்த மாமனார்!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவருக்கும் பூஜா என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

பூஜா ரீல்ஸ் பதிவிடுவது, ஷார்ட் பதிவிடுவது என சமூக வலைதளங்களில் அதிக நாட்டம் காட்டி வந்தார். இது ஒரு கட்டத்தில் கணவன் – மனைவிக்கு இடையே பிரச்னையை உண்டாக்கியது. மேலும் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் ஸ்ரீநாத் சந்தேகப்பட்டார்.

இந்த நிலையில் ஏன் செல்போனிலேயே அதிக நேரம் செலவழிக்கிறாய் என கேட்டு பூஜாவிடம் சில நாட்களுக்கு முன்பு சண்டையிட்டுள்ளார் ஸ்ரீநாத். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால், மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீநாத் ஒரு கட்டத்தில் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலை நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீநாத் நிமிஷாம்பா கோயிலுக்கு சென்று தங்கியுள்ளார்.

எனினும், மனைவியை கொன்ற குற்ற உணர்வு மேலோங்கவே போலீசில் சரணடைந்தார். அங்கு அவர் அளித்த வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனைவியின் உடலை அப்புறப்படுத்த தனது மாமனார்தான் உதவினார் என வாக்குமூலம் அளித்தார். மனைவியை கொலை செய்த பிறகு மாமனார் சேகரிடம் சென்ற ஸ்ரீநாத், தான் பூஜாவை கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, மகளை கொன்ற குற்ற உணர்வு இல்லாமல் உடலை அப்புறப்படுத்த மாமனாரும் உதவி செய்துள்ளார். அதன்படி, மோட்டார் சைக்கிளில் பூஜாவின் உடலை எடுத்துச் இருவரும், பெரிய கல்லைக் கட்டி அருகில் இருக்கும் ஆற்றில் இறக்கியுள்ளனர்.

ஸ்ரீநாத் மற்றும் சேகர் இருவரும் தற்போது அரகெரே காவல் நிலையத்தில் போலீஸ் கஸ்டடியில் உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மர்ம மரணம் : கணவன், மாமனாருக்கு போலீஸ் வலைவீச்சு!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருமணமாகி 4 வருடமான நிலையில் பட்டதாரி பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாமனார், கணவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரகாஷ். இவர் தனியார் ஓட்டுநராகவும், அவ்வப்போது எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார்.

இவருக்கும், தெற்கு தெரு ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரது மகள் ஷாலினி (பி ஏ) ஆகிய இருவருக்கும் நான்கு வருடத்திற்கு முன்பு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

பிரகாஷ், மனைவி ஷாலினி மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோருடன் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் கணவர் பிரகாஷ், மனைவி ஷாலினிக்கும் பிரச்சினை ஏற்பட்டு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷாலினி வீட்டில் பின்புறம் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினர் ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஷாலினி மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கணவர் பிரகாஷ், மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 2 வயதில் குழந்தை இருக்கும் நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு முறையும் தோல்வி : தந்தையும் மகனும் தற்கொலை செய்த சோகம்!!

சென்னையில்..

சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19) இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் 2 முறை தேர்வு எழுதியும் தோல்வியைடந்ததால் ஜெகதீஸ்வரன் மனமுடைந்தார்.

அதே சமயம் தன்னுடன் பயின்ற சில மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்ததும், இருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் செலுத்தி சேர்ந்ததும் தெரிய வந்ததால் ஜெகதீஸ்வரன் விரக்தியில் இருந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலிஸார் விசாரணைக்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மகனை இழந்த சோகத்தில் தந்தை செல்வமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் செல்வத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு தோல்வி விரக்தியில் மாணவன் உயிரிழந்த நிலையில், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.