தென்னிந்திய தொலைக்காட்சியில் பலரையும் கண்கலங்க வைத்த ஈழத்துச் சிறுமி!!

இலங்கையில்..

இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி ஒட்டுமொத்த உலக வாழ் தமிழர்களின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழினை சேர்ந்த சிறுமி கில்மிசா இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி “கண்டா வரச்சொல்லுங்கள்” என்ற பாடலை பாடி அரங்கத்தினையே உருக வைத்துள்ளார்.ஈழப்போரில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி 30 வருடகால ஈழ யுத்த வலியை உலகளவில் சிறுமி கில்மிசா கொண்டு சேர்த்துள்ளார்.

இதனை தொடர்ந்து இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பலருக்காகவும் 2 நிமிடம் பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.குறித்த சிறுமிக்கு சினிமாவில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பினையும் இந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் வழங்கியுள்ளதுடன், பாடலாசிரியர் சினேகன் பல உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் 162 நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளுக்கு மீண்டும் ஒருமுறை மதிப்பளிக்கும் வகையில் சிறுமியின் பாடல் அமைந்துள்ளதாகவும் பாடகர் சினேகன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈழத்தில் கில்மிசாவை போன்று பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது தந்தையர்கள்,தாய்மார்கள்,மாமாக்களை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் உறவுகளாகவே உள்ளனர் என கவிஞர் தீபச்செல்வனும்யுத்த கால வரலாற்றினை இதன்போது பகிர்ந்துள்ளார்.

உயிர் தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

நுவரெலியாவில்..

நுவரெலியாவில் குளவி தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவர் ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.நுவரெலியா, பம்பரகலை பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி தாக்கியதில் இருந்து தப்பிக்க மேலும் மூவருடன் ஓடும் போது குறித்த மாணவன் பாறையில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் என தெரியவந்துள்ளது.

நுவரெலியா பொலிஸார் நுவரெலியா மாநகர தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் குளவி கொட்டுக்கு இலக்காகி சுருண்டு விழுந்த மாணவனை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் திருமணமாகி இரு வாரங்களில் நடந்த விபத்து : கணவன் ஸ்தலத்தில் பலி : மனைவி வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணத்தில்..

கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விபத்துக்குள்ளான தம்பதி திருமணம் செய்து இரண்டு வாரங்கள் என தெரியவந்துள்ளது.கோர விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ9 வீதியில் செம்மணி வளைவிற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளும், தண்ணீர் பவுசரும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.திருமணம் செய்து 2 வாரங்களான நிலையில் உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் 31 வயதான மனோஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கொக்குவில் கிழக்கை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபானம் அருந்திவிட்டு பாடசாலைக்கு சமுகமளித்த மாணவி!!

கெக்கிறாவயில்..

கெக்கிறாவயில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.இது தொடர்பில் எவரேனும் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இருப்பின் அது தொடர்பான சந்தேகநபரை கைது செய்யுமாறும் கெக்கிறாவ நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமி தொடர்பில் விசேட சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.

கெக்கிறாவ கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு சமூகமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் அவர் பயிலும் பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் மதுபானம் அருந்தி விட்டு சிறுமி பாடசாலைக்கு சமுகமளித்துள்ளதை கண்டறிந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் அச் சிறுமியின் தாத்தாவினால் அவர் மதுபானம் அருந்துவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தங்க நகைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கம்..

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(21.08.2023) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 612,158 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,600 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 158,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 151,200 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 குழந்தைகள் துடிதுடித்து பலியான சோகம்.. கதறித் துடித்த பெற்றோர்!!

சென்னையில்..

இனி வரப்போறது மழைக்காலம் தான். மழையோட கொசுவும் வந்து நம்மை வச்சு செய்யப்போகுது. ஆனால் மக்களே கொசுவை விரட்டி விடுறதல கவனமா இருங்க. கொசு விரட்டி பானத்தை நைட் முழுசும் போட்டுவிட்டு தூங்க போயிடுவோம். இதனால் சில விபரீதங்களும் ஏற்படலாம்.

சென்னை மணலி அடுத்துள்ள மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் வசித்து வருபவர் உடையார். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு பிரியதரிதா, சங்கீதா ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உடையார், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் கே.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செல்வி, தனது கணவருக்கு துணையாக மருத்துவமனையில் தங்கியுள்ள நிலையில், மகள்களை அவரது தாயார் சந்தானலட்சுமி கவனித்து வந்தார். இரவு உடையாரின் மகள்கள் மற்றும் அவரது தங்கை மகள் பவித்ரா பாட்டியுடன் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது வீட்டில் கொசு விரட்டுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கொசுவிரட்டி தீப்பற்றி உருகி, அருகில் இருந்த அட்டைப்பெட்டிகளில் பட்டு தீ பரவியது. தொடர்ந்து வீடு முழுவதும் புகை சூழ்ந்து நச்சுவாயு வெளியேறிய நிலையில், 3 சிறுமிகளும், மூதாட்டியும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை உடையாரின் சகோதரி அவர்களை எழுப்ப சென்றபோது வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மாதவரம் பால் பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுமிகள் 3 பேரும், மூதாட்டியும் உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில்..

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 314.83 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 315.31 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை 330.31 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 330.82 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 312.75 மற்றும் 328 ரூபாவாக மாறாமல் உள்ளது.

மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 317 மற்றும் 328 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் வீதியில் கிடந்த பெருந்தொகை தங்கம், சொத்துப் பத்திரங்கள் : தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மாத்தறையில்..

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயிலில் கிடந்த பையை சோதனையிட்டதில் 50 லட்சம் ரூபாய்வுக்கும் அதிகமான பெறுமதியான நகைகள் உள்ளிட்ட பொருட்கள் ரயில் பாதுகாப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கட்டுகஸ்தோட்டை குஹாகொட பகுதியைச் சேர்ந்த லக்சிறி சம்பத் மற்றும் அவரது மனைவி ஹிருணி நிமாஷா ஆகியோர் ரயிலில் பையை மறந்து சென்றுள்ளனர்.தம்பதியினர் கண்டியிலிருந்து அவரது வீட்டிற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் கண்டிக்கு இந்த ரயிலில் வந்துள்ளனர்.

ரயிலில் அமர்ந்திருந்த போது அவர்களது பயணப் பைகள் சில இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டு கோட்டையிலிருந்து இறங்கும் போது பையை எடுக்க மறந்து விட்டனர்.இந்நிலையில் மாத்தறை ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் அலுவலகத்தின் சோதனையின் போது, ​​பாதுகாப்பு அதிகாரிகள் பையை கண்டுபிடித்து மாளிகாவத்தை ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பையில், 3 பவுன் தங்க நெக்லஸ், பிரேஸ்லட், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன், 35 லட்சம் ரூபாய் சேமிப்பு சான்றிதழ், வங்கி புத்தகங்கள், கார் உரிமம் உள்ளிட்ட தங்க பொருட்கள் இருந்தன.ரயில் பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் காமினி திஸாநாயக்கவின் தலையீட்டில் இந்த பையின் உரிமையாளரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பையில் இருந்த வங்கிப் புத்தகத்தின் முகவரியைக் கண்டுபிடித்த உதவிப் பாதுகாப்பு அதிகாரியால் தங்கம் உள்ளிட்ட பொருட்களை உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தென்னிலங்கையில் நடந்த கோர விபத்து.. தாயும் மகளும் பரிதாபமாக பலி!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரம் – விலாச்சி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதான பெண்ணும், 9 வயதான அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.ஜெயந்தி சுற்றுவட்டத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண் ராஜாங்கனை 10ம் ராஹுல் வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.மதவாச்சியை சேர்ந்த 37 வயதுடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இலங்கையில் விபரீதமாக முடிந்த காதலர்களின் முதல் சந்திப்பு : தீயில் அழிந்த 3 ஏக்கர் காட்டுப் பகுதி!!

இலங்கையின் குருநாகல் பகுதியில் உள்ள அத்துகல காட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் காதல் ஜோடி ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் குருநாகல் காட்டுப்பகுதியில் உள்ள புத்தர் சிலையை தரிசிப்பதற்காக காதல் ஜோடி ஒன்று அதுகல மலை உச்சிக்கு நேற்று காலை சென்றுள்ளனர்.

இந்த காதல் ஜோடிக்கு இது முதல் சந்திப்பு என கூறப்படும் நிலையில், இளைஞனின் சட்டை பையில் தீப்பெட்டி இருப்பதை பார்த்த இளம்பெண் அது குறித்து கேட்டுள்ளார்.

மேலும் அதிலிருந்த இரண்டு தீ குச்சிகளை கொளுத்தி இளம்பெண் காட்டுப் பகுதிக்குள் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அதுகல மலையின் காட்டுப் பகுதியில் தீ பரவியதை தொடர்ந்து காதல் ஜோடி அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

இதையடுத்து காதல் ஜோடியை மடக்கி பிடித்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

மாநகர சபை ஊழியர்களின் உதவியுடன் பொலிஸார் காட்டுத் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த காட்டுத்தீ விபத்தில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் பகுதி அழிவடைந்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தடுப்பூசியால் பதிவான மற்றுமொரு மரணம் : அதிர்ச்சியில் பெற்றோர்!!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவனே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் சிறுவனின் உடல்நிலையில் பல பிரச்சினைகளை ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

களனி திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய தெனுஜ சஸ்மிர நாணயக்கார என்ற சிறுவன், கடந்த 9ஆம் திகதி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் 6 நாட்களாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் குணமடையவில்லை.

அவரது நோயைக் கண்டறிய முடியவில்லை என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் அவரை ஒரு இயந்திரத்துடன் இணைக்க முயன்றுள்ளனர், ஆனால் சுயநினைவு திரும்பாத தெனுஜ, துரதிர்ஷ்டவசமாக தீவிர சிகிச்சை பிரிவில் இறந்துள்ளார்.

இதன் பின்னர் சிறுவனின் நுரையீரல் சுருங்கிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்த சிறுவனுக்கு 3 தடுப்பூசிகளை மருத்துவர்கள் செலுத்தியதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரியவிடம் கேட்ட போது, ​​குறித்த சிறுவன் காச நோயினால் உயிரிழந்துள்ளதாகவும், வழங்கப்பட்ட தடுப்பூசி காரணம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து,

பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (20.08.2023) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றைச் சேர்ந்த செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது 31), கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது 29) ஆகிய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க கூட காசு இல்லை: மறைந்த நகைச்சுவை நடிகரின் மனைவி கதறல்!!

நடிகர் பவுன்ராஜ்..

மாரடைப்பினால் உயிரிழந்த பிரபல நடிகரின் பவுன்ராஜின் மனைவி தனது குழந்தைக்கு பிஸ்கட் கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கொமடி நடிகராக வலம்வந்தவர் தான் நடிகர் பவுன்ராஜ்.

மறைந்த நடிகர் பவுன்ராஜ் பொன்ராமின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவரை பிரபலமாக்கியது என்றால் ரஜினி முருகன் திரைப்படத்தில் உள்ள வாழைப்பழ கொமடி தான்.

இப்படத்தில், “மதுரைக்காரனுக்கு கையே கத்தி விரலே வீச்சிடா என்ற வசனத்தை பேசியிருந்தார்.இவர் கடந்த 2021ம் ஆண்டில் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் கூட வாங்க பணம் இல்லை என்று அவரது மனைவி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், கணவர் இறந்த பின்பு குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லை என்றும், வீட்டு வாடகையும் கொடுக்க முடியவில்லை என்று கண்ணீர் விட்டுள்ளார்.யூ

டியூபர் ஒருவர் தனது முகத்தை வெளியே காட்டாமல் ஹெல்மெட் அணிந்து உதவி செய்து வரும் நிலையில், அவரிடம் பவுன்ராஜின் மனைவி உதவி கேட்டுள்ளார்.தற்போது குறித்த நபர் செய்த உதவியால் சிறிய கடை ஒன்றினை வைத்து தங்களை பார்த்துக் கொள்வதாகவும், குறித்த நபருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

நான்கு ஏ சித்திகளை பெற்ற பல்கலைக்கழக மாணவனின் விபரீத முடிவு!!

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்றைய தினம் (19.08.2023) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்த மாணவன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கணிதப்பிரிவில் கற்கும் மாணவன் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னாள் காதலியை கிணற்றில் தள்ளி கொலை : காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

விருதுநகரில்..


விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்து ராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசீந்திரன். முதலில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் தற்போது டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீலாராணி . இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.இவரது மனைவி ஷீலா ராணி ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வந்தார்.

சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வரும் ஷேக் முகமதுயாசின் ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்பவர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் கிடையாது. 10 வருடங்களுக்கு முன்பு ஷீலாராணியும், சேக் முகமதுயாசினும் திருமணத்திற்கு முன்பாக சிவகாசி புது ரோட்டு தெருவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.

அப்போது முதல் இருவருக்கும் பழக்கம் தான். ஷேக் முகமது யாசின் வெளிநாட்டு வேலைக்கு சென்ற சமயத்தில் ஷீலாவுக்கு திருமணமாகிவிட்டது.மீண்டும் காதலை புதுப்பிக்கும் வகையில் இருவரும் தினசரி செல்போனில் பேச்சு தொடர்ந்தது. அதிகமாக கடன் இருந்து, பணத்தட்டுப்பாடு உள்ளதால் ஷீலா ராணியிடம், சேக் முகமதுயாசின் பண உதவி கேட்டுள்ளார்.

கடந்த 4 ம் தேதி வெள்ளிக்கிழமை ராதாகிருஷ்ணன் காலனி பகுதியில் ஒப்பனை பணிக்காக செல்வதாக கூறிவிட்டு ஷீலா ராணி சென்றுள்ளார். பணி முடிந்து ஷீலா ராணி வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சுசீந்திரன், தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் 5ம் தேதி சனிக்கிழமை புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர்.ஷேக்முகமது யாசின் அளித்த வாக்குமூலத்தில், சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு ஒப்பனை பணிக்காக வந்தஷீலா ராணியை தான் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசியதை ஒப்புக்கொண்டார்.

அவரை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு திருத்தங்கலிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும்,அங்கு பணம் கேட்டபோது தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ஷீலாராணியிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தங்கச் செயினை கேட்டுள்ளார் ஷீலா ராணி தர மறுத்ததால் செயினை பறித்துக் கொண்டு அவரை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞர் ஷேக்முகமது யாசின் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் தாக்குதல் : இரு பிள்ளைகளின் தந்தை பலி – சந்தேகநபர் கைது!!

வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று முன்தினம் (18.08) குறித்த நபர் மீது (உயிரிழந்த நபர்) மீது அங்கிருந்த இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (20.08) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய தங்கராசா பிரதீபன் என்ற நபர் உயிரிழந்துள்ளமையுடன் பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 32வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் சிசிரிவி உதவியுடன் மற்றைய சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையுடன் உயிரிழந்த நபரின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.