இலங்கைக்கு சுற்றுலா வந்த சீனப் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!!

கொழும்பில்..

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே தொடருந்தில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவரை ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மூன்று இளைஞர்கள் அவரது கையடக்க தொலைபேசியை திருடுவதற்காக தடியால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் சீன பெண்ணின் தொலைபேசியில் பதிவாகியுள்ளதுடன் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.லியு குயின் என்ற சீனப் பெண், தனது கணவர் மற்றும் மகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, வீதி வழிகாட்டி ஒருவருடன் எல்ல தொடருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

நாவலப்பிட்டி, இங்குருஓயா தொடருந்து நிலையத்தை அடையவிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.எவ்வாறாயினும், நாவலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இங்குருஓயா பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் எனவும், அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், சீனப் பெண் பொலிஸாருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் பதிவு பின்வருமாறு, ‘நானும் எனது குடும்பத்தினரும் இலங்கையை மிகவும் நேசிக்கிறோம்.

அவ்வப்போது நடக்கும் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் இலங்கை பற்றிய எனது நல்ல எண்ணங்களை பாதிக்க விடமாட்டேன். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு என்றென்றும் நிலைத்திருக்கும்’ என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாரதியின் கவனக்குறைவால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

மந்துரங்குளியவில்..

மந்துரங்குளிய நகருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது லொறி ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புத்தளம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சுரேந்திர அனுருத்திக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் நோக்கி பயணித்த போது, ​​புத்தளத்திலிருந்து பயணித்த மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அனுருத்திக ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பில் லொறியின் சாரதி மந்துரங்குளிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் மாயம்!!

திஷாந்தன்..

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கை வம்சாவளியை சேர்ந்த 18 வயதுடைய திஷாந்தன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியிலிருந்து காணாமல்போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த இளைஞன் கடைசியாக காரில் பயணித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் 19 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் கொடூர தாக்குதலில் பலி!!

யாழில்..

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி யுவதியொருவரை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மரியதாஸ் ஜெயதாஸ் என்ற 55 வயதுடைய நபர் ஒருவருடன் குறித்த 19 வயது யுவதிக்கு ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதியளித்ததால், இருவரும் நேற்றைய தினம் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். அதன்போது குடும்பஸ்தர் கிராம மக்களால் நையப்புடைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.இதன்போது கடும் தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பிவைத்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது கடும் தாக்குதலுக்குள்ளான யுவதியும் தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் தேடும் இலங்கையர்!!

இந்திரஜித் மஹிலால் டி சில்வா..

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றதா என்பதனை ஆய்வு எக்ஸோமார்ஸ் ரோவரின் தொழில்நுட்ப தலைவராக இலங்கை பொறியாளர் இந்திரஜித் மஹிலால் டி சில்வா பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.

அவர் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் எக்ஸமார்ஸ் என்ற ரோபோ ரோவரின் தொழில்நுட்ப துறையின் தலைவராக பணியாற்றுகிறார்.

எக்ஸோமர்ஸ் ரோவரை ஒருங்கிணைத்து பரிசோதிப்பதே அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும். “நான் இந்த திட்டத்தின் தலைமை தொழில்துறை பொறியாளராக பணிபுரிகிறேன்.எக்ஸோமார்ஸ் ரோவரை ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்யும் பணியை நான் பெற்றுள்ளேன்” ன மஹிலால் டி சில்வா பிபிசி சேவையிடம் தெரிவித்தார்.

1976 ஆம் ஆண்டு பிறந்த மஹிலால் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மூன்று பாடசாலைகளில் பயின்றார். கொழும்பு இசிபதன வித்தியாலயம், கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் நுகேகொட லைசியம் சர்வதேச பாடசாலை என்பனவற்றில் அவர் கல்வி பயின்றுள்ளார்.

எனது பாடசாலை நாட்கள் எனது தொழில்முறை மற்றும் கல்வி வெற்றியின் பிரதிபலிப்பாகும். நான் படித்து 19 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் அணியில் உறுப்பினராக பணியாற்றினேன். இந்த வெற்றிக்கு எனது தாயும் தந்தையும் முக்கிய செல்வாக்கு செலுத்தினர்.

வாழ்க்கையைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையையும், என்னை நம்புவது எப்படி என்பதையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள்தான்” என மஹிலால் டி சில்வா நினைவு கூர்ந்தார்.அவர் 1999 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக பிரித்தானியாவில் குடிபெயர்ந்தார். லண்டனில் உள்ள கின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்ட எக்ஸமார்ஸ் ரோவர் திட்டத்தின் முக்கிய நோக்கம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதாகும்.ஐரோப்பாவிலிருந்து செவ்வாய்க்கு செல்லும் முதல் ரோவர் இதுவாகும். ஆனால் ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக இங்கு நடவடிக்கைகள் சற்று தடைபட்டுள்ளன.

எக்ஸமார்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சுமார் 2 மீட்டர் ஆழம் தோண்டி மண் மாதிரிகளை எடுக்கப் போவதாகவும், மண் மாதிரிகளில் உயிரினங்கள் உள்ளதா அல்லது படிமமாக்கப்பட்ட நுண்ணுயிரிகள் உள்ளதா என்று சோதிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 வயது பிரபல மோட்டார் பந்தய வீரர் விபத்தில் பலியான சோகம்!!

ஸ்ரேயாஸ் ஹரீஷ்..

13 வயசு தான். அத்தனைக் கனவுகளும் நொடிப் பொழுதில் கருகி போனது. நேற்று இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த13 வயசு இளம் பைக் ரேஸ் சாம்பியன் ஸ்ரேயாஸ் ஹரீஷ், விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ரேஸ் கோர்ஸ் மைதானம் ஒன்றில் வார இறுதிகளில் கார், பைக் ரேஸ் போட்டிகள் நடைப்பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மோட்டார் சைக்கிள் பந்தயம் இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெங்களூரைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரீஷ் பங்கேற்றார். மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் மூன்றாவது சுற்றில் ஹரீஷ் திடீரென எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில், ஸ்ரேயாஸ் ஹரீஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக போட்டிக் குழுவினர் ஸ்ரேயாஸ் ஹரீஷை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரேயாஸ் ஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரேயாஸ் ஹரீஷின் திடீர் மரணத்தையடுத்து, பைக் ரேஸ் பந்தயம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தொங்கியபடி கிடந்த கைபேசி சார்ஜர் வயர்.. 8 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

கர்நாடகாவில்..

வழக்கம் போல சந்தோஷ் கல்குட்கர் தனது செல்போனை சார்ஜில் போட்டுள்ளார். அது சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்து விட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்யாமலே சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்தது.

சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் ப்ளக் பாயிண்டில் சொருகப்பட்டிருந்த சார்ஜரின் வயரை வாயில் வைத்து கடித்த 8 மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதமே ஆன சானித்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வழக்கம் போல சந்தோஷ் கல்குட்கர் தனது செல்போனை சார்ஜில் போட்டுள்ளார். அது சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்து விட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்யாமலே சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்தது.

அப்போது சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வாயில் வைத்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் சானித்யா மூச்சு பேச்சின்றி கிடந்த குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினர்.

8 மாத குழந்தை உள்பட 2 மகள்கள் கொலை.. கணவன், மனைவி தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

பெங்களூரில்..

பெங்களூரில் தங்களது 8 மாத கைக்குழந்தை உள்பட 2 மகள்களையும் கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூரு.. இங்கு வசிப்பவர் வசித்து வருபவர் வீர்அர்ஜூன விஜய். இவருக்கு வயது 31. இவர் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர். தொழிலுக்காக பெங்களூர் வந்தவர் இங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டார். இவரது மனைவி ஹேமாவதி. அவருக்கு வயது 29.

இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு 6 வயதும், மற்றொரு குழந்தைக்கு 8 மாதமுமே ஆகிறது. விஜய் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் பெங்களூரில் உள்ள கடுகொடியில் உள்ள சாய் கார்டன் அபார்ட்மெண்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக விஜய்யின் வீட்டில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உள்ளே விஜய், அவரது மனைவி ஹேமாவதி, அவரது இரண்டு குழந்தைகள் என நான்கு பேரும் சடலமாக கிடந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், உடனடியாக அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏ.என்.ஐ.யில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, விஜய் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது மகள்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், விஜய் தன்னுடைய மனைவியை முதலில் கொலை செய்துவிட்டு ஒருநாளுக்கு பிறகு தன்னுடைய 2 மகள்களையும் கொலை செய்தார் என்றும், அதன்பின்பு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த மரணங்கள் தொடர்பாக போலீசார் விஜய் மற்றும் ஹேமாவதி இருவரது செல்போன்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த விஜய்க்கு கடன் தொல்லை ஏதும் இல்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த மரணங்கள் கொலையா? தற்கொலையா? விஜய் – ஹேமாவதி இணைந்துதான் குழந்தைகளை கொன்றனரா? ஹேமாவதி, 2 குழந்தைகள் என 3 பேரையும் விஜய்தான் கொலை செய்தாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெங்களூர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமண விளம்பரம் கொடுத்து 57 வயது பெண் செய்த செயல் : பொலிஸார் அதிரடி!!

கண்டியில்..

திருமண விளம்பரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி 69 இலட்சம் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்த 57 வயதுடைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் நிட்டம்புவ தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த மோசடிக்கு இதற்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படும் 26 மற்றும் 32 வயதுடைய இருவர் சந்தேகத்தின் பேரில் இந்தப் பெண்ணுடன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கண்டி கண்ணொருவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேக நபர்கள் இருவரும் ஈரியகம மற்றும் முருத்தலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம் : நீதிவான் விடுத்த உத்தரவு!!

யாழில்..

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவியிடம் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இச் சம்பவம் கடந்த ஜூலை 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அந்த மாணவியால் பாடசாலை நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இதனை அந்த பாடசாலையின் நிர்வாகத்தினர் வெளியே தெரியாமல் மூடி மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊர்காவற்துறை மற்றும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சதாசிவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.அதனடிப்படையில் சதாசிவம் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் (04-08-2023) அந்த ஆசிரியரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து, நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குறித்த ஆசிரியருக்கு பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் செமன் மீன் சாப்பிடும் மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில்..

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு வகை செமன் மீன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.தேசிய நுகர்வோர் சங்கம் நடத்திய கூட்டமொன்றின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மனித பாவனைக்கு தகுதியற்ற இவ்வகை செமன் மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னணியின் நிதி முகாமையாளர் வசந்தகுமார ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் மீன் மனித பாவனைக்கு தகுதியற்றது என தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.நீதிமன்ற உத்தரவை மீறி இந்த வகை செமன் வேறு லேபிள்களில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகை செமன் மீன்களை தனியாகவும், டின்களை தனியாகவும் புதைக்க தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை வேறு லேபிளில் எப்படி சந்தைக்கு வந்தது என தெரியவில்லை.

இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் 28.03.2021ஆம் திகதி அன்று உற்பத்தி செய்யப்பட்டது. காலாவதி திகதி 28.03.2024 என பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் அதன் லேபிளும் மாற்றப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 6 பேர் அதிரடியாக கைது : கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்பு!!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று (07.08) தெரிவித்தனர்.

வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வீதிகளில் செல்வோரிடம் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்களால் கடந்த 6 மாதங்களாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

வவுனியாவின் நெளுக்குளம், பம்பைமடு, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் வீதிகளில் செல்வோரை வழிமறித்து சங்கிலி அறுக்கப்பட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும், தம்பனை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை வழிமறித்து சங்கிலி அறுக்கப்டபட்டதாக பறயனாலங்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்திருந்த நிலையில் பறையனாலங்குளம், தம்பனை பகுதியில் சங்கிலி அறுத்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் பீ.அம்பாவில வழிகாட்டுதலில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திருல்பெல தலைமையிலான பொலிசாரும்,

பறையனாலங்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கசூன இணைந்து முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சம்பவங்களை ஒரு குழு திட்டமிட்டு மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அக்குழுவைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த குற்றச் செயல்களை செய்ய பயன்படுத்திய கார் ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

தம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், குட்செட் வீதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒருவருமாக 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 6 பேரையும் நீதிமன்றில் முறைப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, பொலிசாரால் கைப்பற்றப்பட்ட காரில் வைத்தியசாலை சேவையில் பணியாற்றுவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சொக்லெட் விரல் விவகாரம் : இன்று அறிக்கை சமர்ப்பிப்பு!!

கொழும்பில்..

கொழும்பு – மஹியங்கனை வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லெட் ஒன்றில் காணப்பட்ட மனித விரல் தொடர்பில் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இன்று (07) அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி வைத்தியசாலையின் பெண் ஊழியர் ஒருவர் சொக்லெட்டை கொள்வனவு செய்து, அதில் ஒரு பகுதியை சாப்பிட்டு மீதியை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.

அதன் பின்னர் நேற்றுமுன்தினம் (05) மீண்டும் சாப்பிட்ட போது ஏதோ கடினமாக இருந்துள்ளதை அவதானித்துள்ளார். குறித்த சொக்லெட் “பழம் மற்றும் விதை” (Fruit & Nut) வகையைச் சேர்ந்தது என்பதால், அது உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நினைத்து கடிக்கும்போது அது கடிபடவவில்லை.

இதனையடுத்து அந்தப் பகுதியை எடுத்து நீர் குழாயில் பிடித்துக் கழுவிய போது, அது மனித விரல் என தெரிந்ததை அடுத்து அப்பெண் உரக்கக் கத்தி அருவருப்பினால் அவர் வாந்தி எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சக ஊழியர்கள் நடந்ததை கேட்டு, வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இது பற்றி அறிவித்ததை அடுத்து, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு (MOH) அவர்கள் அறிவித்துள்ளனர். விசாரணையின் போது அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த விரலின் உரிய பகுதியையும், அதில் இருந்ததாக கூறப்படும் சொக்லெட் பொதியையும் அதனுடன் இணைந்த அனைத்து தொகுதியையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து இன்றையதினம் (07) சம்பவத்துடன் தொடர்புடைய சொக்லெட் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக மஹியங்கனை நீதிமன்றில் அறிக்கையிட்டு அதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்க மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொதுச் சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதேவேளை சொக்லெட்டில் மனித விரல் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு தயாரான நிலையில் விபத்துக்குள்ளான காதலர்களுக்கு நேர்ந்த கதி!!

பனாகொடயில்..

பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த காதலர்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இந்த விபத்தில் காதலி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காதலன் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலபேயில் வசிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன பிரதிநிதியான கோஷனி அலோக்யா என்ற 25 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலர்கள் இருவரும் பாதுக்க பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு கொடகமவில் இருந்து மாலம்பே நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இதன் போது பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீதி திருத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில், முன்னால் வந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றவுடன் இருவரும் அணிந்திருந்த ஹெல்மட்கள் கீழே விழுந்துள்ளன. இதனால் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் வலது கால், வலது கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய இந்த காதலர்கள் இருவரும் எதிர்வரும் ஒரிரு நாளில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள எதிர்பார்த்திருந்த இருவர் எனவும் தெரியவந்துள்ளது.நிச்சயதார்த்த தேவைக்காக திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் விபத்திற்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ஷ்டலாப சீட்டில் பணப்பரிசு பெற்றவருக்கு நேர்ந்த கொடுமை!!

அக்குறணையில்..

அதிர்ஷ்டலாப சீட்டில் ஏழரை கோடி ரூபா பணப்பரிசு பெற்ற நபரை கடத்தி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த நபரை கடத்தி சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வு பிரிவினர் இணைந்து கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட நபரை அவர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளனர்.

பணப் பரிசை வெற்றி பெற்ற, அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கடத்தப்பட்டு கம்பளையில் உள்ள வீடொன்றில் பத்து நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில்,”கடந்த மாதம் 27ஆம் திகதி தம்புள்ளையில் வைத்து என்னை காரில் கடத்தினார்கள். பின்னர் வீடொன்றில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கினார்கள்.கழிவறைக்கு செல்லும் போதும் இரண்டு பக்கமும் இரண்டு பேர் வருவார்கள். இவ்வாறு சுமார் 10 பேர் சேர்ந்து என்னை சித்திரவதை செய்தார்கள்.அதிர்ஷ்டலாப சீட்டில் வெற்றி பெற்ற பணம் எங்கே இருக்கிறது என்பதை காண்பிக்க சொன்னார்கள்.

குருநாகலைச் சேர்ந்த ஒரு கந்துவட்டிக்காரன் வந்து, இருபத்தி இரண்டு கோடி கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டான்.”என தெரிவித்துள்ளார்.மேலும் கடத்தல் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழ்ச் சிறுமிக்கு இந்திய தொலைக்காட்சியில் கிடைத்துள்ள அங்கீகாரம் : மெய்சிலிர்க்க வைக்கும் ஊர் மக்களின் செயல்!!

கண்டியில்..

இந்தியாவில் ஒலிபரப்பாகும் பிரபல பாடகர்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் இலங்கை, மலையகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கலந்து கொண்டுள்ளமை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கண்டி – புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த அசானி என்ற சிறுமி தனது பாடும் திறமையால் குறித்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னரும், தனது பாடசாலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகத் திறமையாக பாடல் பாடியுள்ளதுடன், அது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

இந்தநிலையில், சிறுமியின் திறமையை அறிந்து கொண்ட பாடசாலை சமூகம், சிறுமி வசிக்கும் பிரதேசத்தில் உள்ளவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து, சிறுமியின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகையிலும் உதவி புரிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஒலிபரப்பாகும் பிரபல போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் ஊர்மக்கள் உள்ளிட்டோர் இணைந்து பணம் திரட்டி சிறுமி அசானியை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இன்றையதினம் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் சிறுமி பாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அந்த பாடலைத் தொடர்ந்து நடுவர்களாக இருந்த பாடகர்கள் குழாம் அடுத்து வரும் இரு வாரங்களிலும் தொடர்ந்து பாடும் வாய்ப்பை சிறுமி அசானிக்கு வழங்கியுள்ளனர்.

இதேவேளை, சரியான வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் கிடைக்காமை காரணமாக தனது திறமையை வெளிப்படுத்த களம் தேடிக் கொண்டிருந்த சிறுமியை ஊர் மக்கள் இணைந்து கடல் தாண்டிச் சென்று பாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.