வீதியில் வைத்து இளம் பெண் மீது விரட்டி விரட்டி கொடூர தாக்குதல்.. சிசிரிவி கமராவில் சிக்கிய ஆதாரம்!!

பிலியந்தலையில்..

கூரிய ஆயுதத்தால் இளம் பெண் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (27.06.2023) அரவ்வல, சமகி மாவத்தை-பெலன்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 19 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். 40 வயதான சந்தேகநபர் குறித்த இளம் பெண்ணை தாக்கிய விதம் அருகில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலில் குறித்த இளம் பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்தியவா் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண்ணை அவா் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. யுவதியை தாக்கிய நபர் நேற்று மாலை தொலைபேசி கோபுரம் ஒன்றில் ஏறியிருந்த போது பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுதாபத்தால் நபர் ஒருவரை வீட்டில் தங்கவிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பில்..

பெண்ணின் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட நபரை தேடி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனா். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொள்ளையிட்ட சந்தேக நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தொலைபேசி கடைக்கு சென்றிருந்த சந்தேக நபர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.​​

அதோடு , தான் அனாதை இல்லத்தில் வளர்ந்ததாக கூறியதுடன் சந்தேக நபர் தனக்கு பெற்றோர், சகோதர, சகோதரிகள் இல்லை என்றும், ஏதாவது வேலையும் தருமாறும் கெஞ்சியுள்ளார்.

அவரது கதையைகேட்டு இரங்கிய பெண் தனது கடையில் சந்தேகநபரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். பின்னர் சந்தேக நபரை வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டிலேயே தங்க வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தன்று, பெண் தனது இளைய மகளை சந்தேக நபருடன் விற்பனை நிலையத்திற்கு அனுப்பிவிட்டு புறக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அதன்படி நேற்று (27) காலை 9 மணியளவில் மகளும், சந்தேகநபரும் விற்பனை நிலையத்தை திறந்துள்ளனர்.

பின்னா் மகள் உணவருந்துவதற்காக வௌியில் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் பெண் தனது மகளுக்கு தொலைபேசியில் அழைத்துள்ள நிலையில், மகள் பதிலளிக்காததால் சந்தேக நபரின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்ததாகவும் , எனினும் அதற்கும் எந்த பதிலும் வராததால், அருகில் உள்ள விற்பனை நிலையத்திற்கு அழைப்பெடுத்து மகளிடம் கொடுக்குமாறு கோாியுள்ளாா்.

விற்பனை நிலைய உரிமையாளர், பெண்ணின் விற்பனை நிலையத்திற்கு சென்று தேடியபோது, ​​அங்கு யாரும் இல்லை என தகவல் தெரிவித்த நிலையில், , சந்தேகமடைந்த பெண் விரைந்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது ​​மகள் மட்டும் இருந்ததை அவதானித்துள்ளார்.

சந்தேகநபரை காணாததால் , கடையை சோதனையிட்ட போது, ​​கடையின் ஒரு அறையில் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாாிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கொள்ளையிட்ட பணங்களின் மொத்த பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய் என்று அந்த பெண் கூறியுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாடொன்றில் கோர விபத்தில் சிக்கி இலங்கையர் மரணம்!!

கட்டாரில்..

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டாரில் நேற்றையதினம் (27) இடம்பெற்ற விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் அம்பாறை- கல்முனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனத்தில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஃபேஸ்புக் நேரலையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

ஐதாரபாத்தில்..

அத்தனை வருஷங்கள் பாசமாக வளர்த்த அம்மா, அப்பாவை எதிர்த்து, காதலிச்சவன் நல்லா பார்த்துப்பான்னு நெனைச்சு தான் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்கறாங்க. அப்படி காதலிச்சு கரம் பிடிச்சவனே வேறொரு பெண்ணுடன் தொடர்பு வெச்சிருந்தால் பெண் மனசு சுக்குநூறாய் உடைந்து தானே போகும்?

ஆனால், பல இடங்களில் பெண்கள் இப்படி இருந்தாலும், சிலர் தைரியமாக அவன் முன்பு கெத்தாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் முன்னேறுகிறார்கள். தற்கொலை என்பது தீர்வாகாது. அது, ஏமாற்றுபவர்களை மேலும் அடுத்தவர்களை ஏமாற்றவே வழி வகுக்கும்.

எத்தனைக் கனவுகளுடன் பெற்றோரை எதிர்த்து, காதலித்தவனைக் கல்யாணம் செய்திருப்பார் சனா. இன்று பரிதாபமாக உயிரை இழந்துள்ளார். ஐதாரபாத் நகரில் உள்ள புகழ் பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சனா கான் (32).

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு சனாவுக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், ஹேமந்த்தின் பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

சனாவுக்காக வீட்டை விட்டு வெளியேறிய ஹேமந்த், மதம் மாறி சனாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில காலம் ராஜஸ்தானில் வாழ்ந்த நிலையில், சனா கானின் வேலை நிமித்தமாக சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் குடியேறியுள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இசை கலைஞரான ஹேமந்த், வீட்டிலேயே இசைப்பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தார். சமீப காலமாகவே ஹேமந்திடம் இசை வகுப்புக்கு வரும் வேறு ஒரு பெண்ணுடன் ஹேமந்த் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இவர்களது காதல் சனாவிற்கு தெரிய வரவே இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்படத் தொடங்கியுள்ளது.

இது குறித்து சனா ஹேமந்திடம் கேட்டதில் இருந்து, சனாகானைக் கொடுமைப்படுத்தி, தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார் ஹேமந்த்.இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜூன் 22ம் தேதி இரவு சனா கான், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில், தனது கணவரின் தொடர்பு குறித்து தெரியப்படுத்திய சனாகான், அது குறித்து கேட்டதும், தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதாக, அவரது கொடுமைகளை எல்லாம் விவரித்தபடியே வீடியோவில் லைவ்வாக சென்று கொண்டிருந்த போதே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஐதராபாத்தில் வசிக்கும் சானாவின் வீட்டில் இருந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சனாவின் செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கதிரையில் அமர்ந்து போராடிய முதியவரை தள்ளி கதிரையை தூக்கியெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி!!

வவுனியா, கணேசபுரத்தில் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து கதிரையில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவரை தள்ளிவிட்டு கதிரையை பொலிஸ் பொறுப்பதிகாரி பற்றைக்குள் வீசிய சம்பவம் ஒன்று இன்று (28.06) இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இத் திட்டத்திற்கான தெரிவில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து,

பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்கள் காலை கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக வவுனியா – மன்னார் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அவ்வீதியூடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

இந்நிலையில் போராட்ட இடத்திற்கு வருகை தந்த பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். எனினும் மக்கள் கிராம சேவையாளர் அவ்விடத்திற்கு சமூகளிக்கும் வரை தாம் செல்ல மாட்டோம் என தெரிவித்த நிலையில்,

பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை பலவந்தமாக தள்ளி வெளியேற்ற முயன்றதுடன், கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவர் ஒருவரை எழுப்பி அவரை தள்ளியதுடன், அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றைக்குள் வீசினார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறினர்.

எனினும் கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவரை எழுப்பி அவரை தள்ளியதுடன் அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றையில் வீசிய பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என மக்கள் தெரிவித்தமையினையடுத்து பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோரினார்.

எனினும் பாதிக்கப்பட்ட நபர் பொறுப்பதிகாரியின் மன்னிப்புக்கு உடன்படவில்லை என்பதுடன் நான் தலமைக்காரியாலயத்தில் முறைப்பாடு செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

தனக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விசேட தேவைக்குட்பட்ட நபர் மீது பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னெடுத்த மனிதாபிமானமற்ற செயற்பாடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஏரியில் தவறி விழுந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

ரஷ்யாவில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் ரஷ்யாவில் உள்ள ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் முழபிலாங்காடு பகுதியில் குரும்ப பகவதி கோவில் அருகே வசிக்கும் ஷெர்லியின் ஒரே மகள் இ. பிரத்யுஷா (E. Pratyusha).

24 வயதாகும் இவர், ரஷ்யாவில் ஸ்மோலென்ஸ்க் மாநில மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவி ஆவார்.

பிரத்யுஷா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது தவறுதலாக ஏரியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக, அவருடன் படிக்கும் மலையாளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது, விபத்தில் சிக்கிய சக மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டதாகவும், ஆனால் பிரத்யுஷாவை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரத்யுஷா ஆகஸ்ட் மாதம் வீடு திரும்பவிருந்த நிலையில், இப்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மும்பை வழியாக உடல் கொண்டு வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டது.

குறித்த இளைஞரின் பெற்றோர் இன்றுகாலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடுதிரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அஜந்தன், வயது 23 என்ற இளைஞரே சாவடைந்துள்ளார். அவர் இன்று காலை தொழிலிற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமண நாளில் கணவனும் மனைவியும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!!

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் 34 வயது ஈஸ்வரன். இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 29 வயது சங்கீதா.

இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர்களுக்கு மூன்றரை வயது மற்றும் ஒரு வயதில் 2 மகன்கள். நேற்று ஜூன்26ம் தேதி ஈஸ்வரன் – சங்கீதா தம்பதிக்கு திருமண நாள் ஆகும்.

காலை மூத்தமகன் கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஈஸ்வரன், சங்கீதா, இளைய மகன் தஸ்வந்த் மூவரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு அருகே உள்ள புதுபாடி பச்சையம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் கடப்பந்தாங்கல் அருகே சென்றபோது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த தஸ்வந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தனியார் பேருந்து டிரைவரின் அலட்சியம், கவனக்குறைவு மற்றும் அதிவேகத்தால் தான் இரு உயிர்கள் பலியாகி உள்ளனர்.

இதற்கு ஒரு முடிவு தெரியாமல் உடலை இங்கிருந்து அகற்றக்கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருமண நாளன்று கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் சாலை விபத்தில் பலியானது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான அடுத்த நாளே புதுமண தம்பதி உட்பட 5 பேர் கொலை… தானும் தற்கொலை செய்து கொண்ட சகோதரன்!!

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் வசித்து வருபவர் 28 வயது ஷிவ் வீர். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் ஷிவ் வீரின் சகோதரனுக்கு சோனுவுடன் நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கச் சென்று விட்டனர். புத்தம் புதுமணத் தம்பதியரான ஷிவ் வீரின் சகோதரன், சோனு இருவரையும் அதிகாலை 5மணிக்கு ஷிவ் வீர் கோடாரியால் வெட்டி கொலை செய்தார்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மற்ற உறவினர்களான சகோதரர் பஹ்லன், சோனியின் சகோதரன் சவ்ரவ், நண்பன் தீபக் மொத்தம் 5 பேரை ஷிவ் வீர் கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

அத்துடன் அவரது ஆத்திரம் ஓயவில்லை. தொடர்ந்து ஷிவ் வீர் தனது மனைவி, அத்தை, தந்தை ஆகியோரையும் கொலை செய்ய முயற்சி செய்தார். அவர்கள் படுகாயங்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.

அதன் பிறகு இவர்கள் அனைவரையும் கொலை செய்த ஷிவ் வீர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை சுட்டுக்கொன்ற ஷிவ் வீர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த காவல்துறையினர் பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது

58 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 58 வயதான மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள சிறப்பு மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் ஷேரா படு(வயது 58).

IVF சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா நியூரோஸ்பைன் மற்றும் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் டாக்டர் ஷைஃபாலி தாதிச் துங்கேரியன் அளித்த சிகிச்சையின் மூலமே இது நடந்துள்ளது.

தற்போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா ஆசிகுளத்தில் வீதியினை மறித்து மக்கள் போராட்டம்!!

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.

இன்று (27.06) காலை 9.30 மணி தொடக்கம் 11 மணிவரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியுடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இருநேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல்,

வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இக் கவனயீர்ப்பு வீதிமறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னர் பேரணியாக சென்று வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து ஒரு மணிநேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகைதந்த சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிகுளம் கிராம சேவையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன்,

மேல் முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் அதற்குரிய உதவிகளை பெற்றுத்தருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் மேலும் இறுதிப்பட்டியல் வரும்வரை காத்திருக்குமாறும் ஆசிகுளம் கிராம சேவையாளர் தெரிவித்தமையினையடுத்து காலை 11 மணியளவில் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கைபேசியால் தற்கொலை செய்த கல்லூரி மாணவி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருப்பூரில்..

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. பள்ளிக்குழந்தைகள் தொடங்கி கல்லூரி மாணவ, மாணவிகள் வரை மன அழுத்தம் என்கின்றனர். தனிக்குடும்பங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஒற்றை பிள்ளைகள். கேட்பதற்கு முன் தேவைகள் கிடைத்து விடுகின்றன.

பெற்றோர்களும் வீட்டில் செல்லமாக திட்டாமல் வளர்க்கின்றனர். இந்த பிள்ளைகள் ஓரளவு வளர்ந்து விட்ட பிறகு யார் திட்டினாலும் , கேட்டது கிடைக்காமல் போனாலும் பெரும் மன அழுத்தம் வந்து விடுகிறது. அத்துடன் விபரீத முடிவுகளுக்கும் சென்று விடுகின்றனர்.

எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்வுகள் இதுகுறித்து நடத்தப்பட்டாலும் இவர்களின் முடிவால் பெற்றோர்களின் வாழ்க்கையும் அர்த்தமற்றதாக்கி விடுகின்றனர் . திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாளையங்கோட்டை சாலை பகுதியில் வசித்து வரும் தர்மலிங்கத்தின் மகள் 22 வயது ஸ்ரீகவி .

இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறைக்குள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதியில்லை.

ஆனால் மாணவி ஸ்ரீகவி மறந்துபோய் தேர்வு அறைக்குள் தனது செல்போனை எடுத்துச் சென்று விட்டார். இதனை கவனித்த தேர்வு அறையின் கண்காணிப்பாளர், ஸ்ரீகவியிடம் இருந்த மொபைல் போனை பிடுங்கினார். அத்துடன் நில்லாமல் அது குறித்து விளக்க கடிதம் ஒன்றையும் எழுதி தரச் சொல்லியிருக்கிறார்.

15 நாட்கள் கழித்து மொபைல் போனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஸ்ரீகவியின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. மற்ற மாணவ, மாணவிகள் எதிரில் அவரை கண்டித்ததால் அவருக்கு மிகுந்த அவமானமாகி விட்டது.

இதனால் ஸ்ரீகவி மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார் . இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் ஸ்ரீகவி துணிகளை துவைத்து விட்டு அதை அவரது தாயாரிடம் கொடுத்து கீழே காய போட்டு வருமாறு சொல்லியுள்ளார்.

தாயார் துணிகளை எடுத்துக்கொண்டு கீழே சென்று காய போட்டுவிட்டு மேலே வந்து ஸ்ரீகவியை அழைத்தார். சத்தம் எதுவுமே கேட்கவில்லை. உடனே ஸ்ரீகவியின் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தபோது அங்கு ஸ்ரீகவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட அவரது தாயார் அலறி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீகவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருவாரூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் பிரகதீஸ்வரி(18). கல்லூரியில் படித்துவரும் இவர் தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணிகளை துவைத்து குளித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுதி எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மின்கம்பத்தில் சென்று கொண்டிருந்த மின்கம்பங்கள் குளித்துக் கொண்டிருந்த பிரகதீஸ்வரி மீது விழுந்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார். பின்பு தகவலறிந்த பொலிசார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், இந்த சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கத்தில் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை.. சுயநலமான பெற்றோர்களுக்கு எச்சரிக்கை காட்சி!!

குழந்தை..

குழந்தை ஒன்று தூக்கத்தில் அழுதுகொண்டு கையில்Tablet வைத்து விளையாடுவது போன்று காணப்பட்ட காட்சி ஒட்டுமொத்த அம்மாக்களையும் அதிர வைத்துள்ளது. இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கையில் செல்போன் மற்றும் டேப்லெட் இவற்றினைக் கொடுத்துவிட்டு தனது வேலையை தடையில்லாமல் செய்து வருகின்றார்.

இவ்வாறு கையில் எதாவது ஒன்று கிடைத்துவிட்டால் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் குழந்தைகள் அதிலேயே மூழ்கி விடுகின்றனர். பெற்றோர்கள் தங்களது சுயநலனுக்காக செய்யும் இந்த செயல் பாரிய விளைவினை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக காட்டியுள்ளது இந்த காட்சி.

குறித்த காட்சியில் சிறுவன் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அழுதுகொண்டு தனது கையில் டேப்லெட் வைத்து விளையாடுவதாக நினைத்து தன்னை அறியாமல் ஆக்ஷன் செய்கின்றார். இந்த அதிர்ச்சி காணொளி ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

அலட்சியத்தால் பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!!

விழுப்புரத்தில்..

`20 நாள்களுக்கும் மேலாக மின்கம்பி அறுந்து கிடந்தபோதும், மின்துறை அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டதால், இளைஞரின் உயிர் அநியாயமாகப் பறிபோய்விட்டது’ என இறந்தவரின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், அறுந்துவிழும் மின்கம்பிகளால் நிகழும் உயிரிழப்புச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி வரை மட்டும் மூன்று மனித உயிர்களும், ஒரு கால்நடையின் உயிரும் பரிதாபமாகப் பறிபோயிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து கோடை வெயில் சுட்டெரித்துவந்த நிலையில், ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பொழிந்துவருகிறது.

அப்படி, கெடார் அருகேயுள்ள சிறுவாலை கிராமத்தில் கடந்த 1-ம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்திருக்கிறது. அப்போது செல்வராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து மின்துறை ஊழியர்களுக்கு அந்தப் பகுதியினர் தகவல் தெரிவித்த நிலையிலும், மின்கம்பி சரிசெய்யப்படாமல் இருந்துவந்ததாம். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணுபதி என்ற இளைஞர் நேற்று முன்தினம் முதல் காணாமல்போயிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோரும் உறவினர்களும், பல்வேறு இடங்களில் அவரைத் தேடிப் பார்த்திருக்கின்றனர். ஆனால், அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருந்துவந்த நிலையில், செல்வராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியில் சிக்கி விஷ்ணுபதி உயிரிழந்துகிடப்பது நேற்றைய தினம் தெரியவந்திருக்கிறது.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கெடார் போலீஸார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.

மேலும், காட்டுப்பன்றி ஒன்றும் இவருக்கு முன்பாகவே அதே மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துகிடந்திருக்கிறது. இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் உயிரிழந்துகிடந்த பன்றியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இது தொடர்பாக கெடார் காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த விஷ்ணுபதியின் குடும்பத்தார், “மின்கம்பி அறுந்து 20 நாள்களுக்கு மேலாக அதே இடத்தில் கிடக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், மின்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

கேட்கும்போதெல்லாம், இங்கு வேலை இருக்கிறது, அங்கு வேலை இருக்கிறது என்று சொன்னார்களே தவிர… இந்த மின்கம்பியைச் சரிசெய்திருந்தால் இன்று ஓர் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

இந்த உயிரிழப்புக்கு இந்த மின்சாரத்துறையும், தமிழக அரசும் என்ன பதில் சொல்லும் எனத் தெரியவில்லை. எனவே இந்த மின்துறையில் ஒழுங்காகப் பணி செய்யாமலிருந்த அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்புக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், விஷ்ணுபதியின் உடலை வாங்க மாட்டோம்” என்றனர்.

அவர்களின் புகாரை ஏற்ற கெடார் போலீஸார், மின்சாரத்துறை ஊழியர்களான பாலு, மணிகண்டன், சரவணன் ஆகியோர்மீது 304/2 பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

`மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க, விழுப்புரம் மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திர விஜய்யிடம் பேசினோம்.

“மின்கம்பி அறுந்து விழுந்து 20 நாள்களாகவெல்லாம் கிடந்திருக்காது. ஏனெனில், அது போன்று அறுந்து விழுந்தால் விபத்து ஏற்படும் என்பதால், அதிகாரிகள் கட்டாயம் சென்று சரிசெய்துவிடுவார்கள். மூன்று நாள்களாக அந்தப் பகுதியில்தான் வேலை செய்துவந்திருக்கின்றனர்.

அங்கிருந்து யாரும் தகவல் சொல்லவில்லை. தகவல் தெரிந்திருந்தால், ஊழியர்கள் போகாமல் இருந்திருக்க மாட்டார்கள். இந்தச் சம்பவம் குறித்து துறைரீதியாகச் சம்பந்தப்பட்ட மக்களிடமும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்று மின்கம்பிகள் அறுந்துவிழுவதைத் தடுப்பதற்காக, பழைய மின்கம்பிகளைக் கண்டறிந்து, புதிதாக மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

காதலியின் பிரிவினால் 22 வயது காதலன் செய்த விபரீத செயல் : பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

பலாங்கொடையில்..

பலாங்கொடை பிரதேசத்தில் காதலி இறந்து சில நாட்களின் பின்னர் தன்னால் வாழ முடியாது என இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பலாங்கொட வெலிகேபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த இளைஞனின் காதலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடும் விரக்தியுடன் பொழுதை கழித்து வந்த இளைஞன் காதலியின்றி தன்னால் வாழ முடியாது என கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னர் தனது காதலியின் பிரிவு குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றினையும் பதிவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.