ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் யானாமாலா ஆனந்த். இளைஞரான இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் 12 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம் பங்காரு பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த விபத்தில் யானாமாலா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யானாமாலா ஆனந்த் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இது குறித்து அவரது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து யானாமாலா ஆனந்த் இதயம், நுரையீரல் எம்.ஜி.எம் மற்றும் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் இரண்டு சிறுநீரகங்கள் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும், கண்கள் மியாட் மற்றும் அப்போலோ மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது. மகன் இறந்தாலும் மற்றவர்கள் மூலம் வாழ்கிறார் என யானாமாலா ஆனந்த் பெற்றோர் கண்கலங்கப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகில் பல விடயங்கள் நம்மால் நம்ப முடியாத விதத்தில் காணப்படுகின்றது. அந்த வகையில் பார்வையற்றோர் கிராமத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது, ஒரு கிராமத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் என அனைத்துமே பார்வைத்திறனற்றவர்கள். அதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு.
அதாவது, மெக்சிக்கோவில் டில்டெபாக் என்ற கிராமத்தில் வாழும் எந்தவொரு உயிரினத்தாலும் பார்க்க முடியாது. இங்கே ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் கண்கள் நன்றாக இருக்கும். ஆனால், படிப்படியாக கண்கள் பார்வையற்றதாக மாறிவிடும்.
இதற்கு காரணமாக இவர்கள் நினைப்பது, அந்தக் கிராமத்தில் உள்ள சபிக்கப்பட்ட மரமே. அதாவது, லாவாசுலேவா என்ற மரத்தை அந்தக் கிராமத்திலுள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகள் பார்க்கும்போது அனைவரும் பார்வையற்றவர்ககளாக மாறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்தக் கிராமத்மதில் விஷ ஈக்கள் காணப்படுவதாகவும் அந்த ஈக்கள் கடிப்பதனால் ஒரு நபர் பார்வையற்றவராக மாறுகிறார் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்காக மெக்சிக்கோ அரசு அந்த கிராம மக்களுக்காக உதவ முன்வந்தும் அது பலனளிக்கவில்லை.
தென் கொரியாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் மாடியிலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்தவர் பார்க் சூ ரியன் (Park soo ryun).
29 வயதாகும் இவர் 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன டெனர் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கொரிய மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஜெஜு தீவிற்கு சென்றுள்ளார்.
அங்கு மாடியிலிருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் குறித்த நடிகைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவியை இழந்துள்ளார். பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மூளைச்சாவு ஏற்பட்ட பின்பு உயிரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால், பார்க் சூ ரியனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
புகழ்பெற்ற கொரிய நடிகையான பார்க் சூ ரியன், 29 வயதில் மரணமடைந்து இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
சேலம், எடப்பாடி அருகே திடீரென உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நீதி விசாரணை கோரியும், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குளம் கிராமம், செம்மண் காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 29), சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கார்த்திக் ராஜாவிற்கும், கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் சுரேகா என்கிற சுந்தரேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், அண்மையில் அந்த குழந்தை வீட்டில் இருந்து தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. குழந்தை இறந்தது முதல் சுந்தரேஸ்வரிக்கும் அவரது கணவர் கார்த்திக் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த சுந்தரேஸ்வரி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர், அவரை எடப்பாடி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், சுந்தரேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரியின் பெற்றோர்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தங்களது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் புகார் அளித்ததின் பேரில், சுந்தரேஸ்வரியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடைபெறவில்லை எனவும், சுந்தரேஸ்வரியின் உடலை சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி, எடப்பாடி – சேலம் பிரதான சாலையில் சுந்தரேஸ்வரியின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சுந்தரேஸ்வரியின் உறவினர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதுடன், மீண்டும் சுந்தரேஸ்வரியின் உடல் சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் என உறுதி அளித்ததால், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பட்டதாரி பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும் சுந்தரேஸ்வரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில், அவரது இறப்பு குறித்து சங்ககிரி கோட்டாட்சியர் லோகநாயகி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பட்டப்பகலில் இளம்பெண் தன் சொந்தத் தாயையே கொன்று சூட்கேசிஸ் அடைத்து எடுத்துச் சென்று போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன சம்பவம் பெரும் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூருவில் திங்கள்கிழமை பெண் ஒருவர் ஒரு சூட்கேஸுடன் காவல் நிலையத்திற்குள் சென்று, தன் தாயைக் கொன்று உடலை எடுத்து வந்திருப்பதாகக் கூறி சரண் அடைந்ததுள்ளார். மதியம் 1 மணி அளவில் அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு வந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்தாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பெங்களூரில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். அவர் கொண்டுவந்த சூட்கேஸில் கொலை செய்யப்பட்ட அவரது தாயின் உடலும், தந்தையின் பிரேம் செய்யப்பட்ட படமும் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் சொல்கின்றனர்.
இந்தச் சம்பவம் மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்தில் நடந்துள்ளது. கொலை செய்த பெண் 30 வயதுக்கு உட்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பெண் காவல் நிலையத்தில் சரணடைந்ததும் கைது செய்யப்பட்டார்.
கணவருடன் வசித்து வருகிறார். தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக ஊட்டிவிட்டு தாயைக் கொன்றதாகவும் அந்தப் பெண் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குடும்பத்தில் தாய்க்கும் மகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவந்ததாகவும், ஆத்திரம் அடைந்தது தாயைக் கொல்லும் அளவுக்குத் துணிந்துவிட்டதாகவும் காவல்துறையினரிடம் அந்தப் இளம்பெண் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக பெங்களூரு மைக்கோ லேஅவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்கின்றனர். பரபரப்பான பெங்களூரூ மாநகர் பகுதியில் பட்டப்பகலில் இளம்பெண் தன் சொந்தத் தாயையே கொன்று சூட்கேசிஸ் அடைத்து எடுத்துச் சென்று போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், சாமராஜ நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுதா ராணி. இவர்கள் இருவரும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றி வந்தனர்.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இவர்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளது. அப்போது அவர்கள் வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டு இருந்தது.
மேலும் எவ்வளவு நேரம் அழைத்தும் வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் இவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது கழிவறைக்குள் இருவரும் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் இறந்து ஒருநாட்களுக்கு மேல் இருக்கும். இதையடுத்து இருவரது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் திருமணத்திற்கு முன்பு லீவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கழிவறையில் விஷவாயு தாக்கி உயிரிழந்து இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறையில் தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது பாடசாலை மாணவிகள் இருவர் அவர்களது 17 வயது காதலர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காதலர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இரண்டு சம்பவங்களிலும் கைதான இருவரும் (வயது 17) அண்மையில் நடைபெற்ற சாதாரணப் பரீட்சையில் தோற்றியிருந்தார்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 14 வயது மாணவி பாடசாலைக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு தனது காதலனுடன் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் – கலாசார சீர்கேடுகள் அதிகம் இடம்பெறுவதாகப் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு மாணவியைக் காதலன் வன்புணர்ந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவியைக் காணவில்லை என்று தாயார் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாகத் தேடுதல் நடத்திய பொலிஸார் மாணவியை மீட்டுள்ளனர்.
அவர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனது காதலனால் வன்புணர்வுக்குப்படுத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனையிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து 17 வயதுடைய காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது பாடசாலை மாணவி 17 வயது காதலனுடன் வெளியில் சென்றுள்ள நிலையில், மாணவியின் பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவர் காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்துக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.தென்மராட்சி பகுதியில் பாடசாலை மாணவியுடன் அங்க சேட்டை புரிந்த அயல் வீட்டு நபர் ஒருவரை சாவச்சேரிப் பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் இடம்பெற்றபோது தாய் கூலி வேலைக்காக வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் அயல் வீட்டு நபர் ஒருவர் சிறுமியுடன் சேட்டை விட்டமையை வீடு சென்ற தாயார் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சாவைச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை வைத்தியப் பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் சாவாச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாதாரண தர பரீட்சை முடிவடைந்த அன்று, பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மாணவர்கள் சிலர் செயற்பட்ட விதம் சமூகத்தில் பேசுபொருளாக மாறியிருந்தது.
இதக்போது பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மின் விசிறிகள், மேசைகளை சேதப்படுத்தி நாற்காலிகளை தொங்கவிட்ட நிலையில் மாணவர்கள் சென்றிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்று மீது குற்றஞ்சாட்டப்பட்டு, நேற்று (15.06.2023) அவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு அதிபராலும் பொலிஸாரினாலும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாணவர்களின் செலவில் சேதமாக்கப்பட்ட வகுப்பறை மற்றும் தளபாடங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொனராகலை தொம்பகஹாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் குகைக்குள் பதுங்கியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 13 வயதுடைய சிறுமி காதலனுக்கு அஞ்சி காட்டுப்பகுதிக்கு சென்ற குகையில் தனியாக இரவைக் கழித்துவிட்டு வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி வீட்டிற்கு வந்த அவரது காதலன் சிறுமியையும் அவரது தாயையும் அச்சுறுத்தியதாகவும், இதனால் இவ்வாறு சிறுமி அங்கு சென்று ஒழிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குகைக்குள் இரவைக் கழித்த சிறுமி, பசி தாங்க முடியாமல் மறுநாள் வீடு திரும்பியதாகவும், யாராலும் துன்புறுத்தப்படவில்லை என்றும் சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தனது மகள் காணாமல் போனதாக தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
தியத்தலாவை பகுதியில், பாடசாலை பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி விபத்தொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொரலந்தையில் இருந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பண்டாரவளை நோக்கி பயணித்த பேருந்துடன், மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சிறு காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களும், பாடசாலை பேருந்தின் சாரதியும், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அமில சந்தகெலும் திஸாநாயக்க என்ற இந்த மருத்துவரின் மரணத்திற்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் இன்சுலின் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எரிந்த ஊசிகளை தம்புத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஊசிகள் பாதி எரிந்த நிலையில் வீட்டின் பின்னால் காணப்பட்டதாகவும், அவை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் இந்த வைத்தியர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், கடந்த ஜனவரி 13ஆம் திகதி முதல் இருவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறவில்லை எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மருத்துவரின் மரணம் குறித்து மனைவிக்கு தெரிவித்ததையடுத்து அவரும் மருத்துவரின் சகோதரரும் வந்து சடலத்தை அடையாளம் கண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் வைத்தியரின் சடலம் அவரது மனைவி மல்காந்தி மெனிகே திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட இந்த வைத்தியர் 3 நாட்களாக பணிக்கு வராத காரணத்தினால் வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கொண்ட விசாரணையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16.06) மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் இன்று (16) அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது இதனை கண்டு அச்சமடைந்து ஏனையோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து மற்ற மாணவர்களும் வந்து மாணவர் உயிருடன் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதன் அதிகாரிகள் வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதவான் விசாரணையும் நடத்த திட்டமிடப்பட்டது.
இச் சடலத்தின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. மேலும் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மஹரகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சேலக ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (16.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் திடீர் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 159 ஆயிரம் என்ற மட்டத்திலிருந்தது.
இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நிலையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறான சூழலில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 286 வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து, ரூபாவின் பெறுமதியில் சிறியளவு வீழ்ச்சி நிலை அடுத்தடுத்து பதிவாகி வரும் அதேநிலையில் தங்கத்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகி வந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நேற்றையதினம் (15.06.2023) மாலை மறவன்குளம் பகுதியில் உள்ள தனது வீடுநோக்கி குறித்த பெண் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி அருகில் இருந்த பாலத்தினுள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது. விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சம்பவத்தில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 61 வயதான பெண்ணே மரணமடைந்தார். விபத்து தொடர்பான விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
அம்மா இறந்ததால் அவரை நினைவாக மகன் தாஜ்மஹால் வடிவில் நினைவு சின்னம் ஒன்றை அமைத்து உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
தாயின் நினைவால் தவித்து வந்த அம்ருதீன் அவருக்கு தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என திருச்சியிலுள்ள கட்டிட வடிவமைப்பாளரை வரவழைத்து கட்டியுள்ளார்.
இதன்படி, ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தாஜ்மஹால் வடிவில் அழகிய நினைவாலையம் கட்டப்பட்டது. அதனுள் ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.