வவுனியாவில் பதிவு செய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

வவுனியாவில் பதிவுசெய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்று(13.06.2023) இடம்பெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

அந்தவகையில் தனியார் மருந்தகங்களில் பதிவுசெய்யப்பட்ட மருந்தாளர்கள் இல்லாமல் மருந்துகள் வழங்கபடுகின்ற விடயம் தொடர்பாக பரீசீலிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

வவுனியாவில் 19 தனியார் மருந்தகங்கள் உள்ளது.
அவற்றில் 8 மருந்தகங்கள் பதிவுசெய்யப்படவில்லை.
அவற்றில் 5 மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளோம். ஏனைய மூன்று மருந்தகங்கள் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை எமக்கு வழங்கியுள்ளனர்.

அத்துடன் இங்கு இரண்டு மொத்த வியாபார மருந்தகங்கள் உள்ள நிலையில். அதில் ஒன்று பதிவுசெய்யப்படவில்லை. அதற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றார்.

இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள மருந்தகங்கள் உரிய நேரத்திற்கு முன்பாகவே மூடப்படுவதாக ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்வதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

பாம்பு கடித்து மகளுக்கு நேர்ந்த பரிதாபம்.. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து விபரீத முடிவெடுத்த தாய்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் கணேசன் – நாகலட்சுமி (31) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்ஷினி (10), தேன்மொழி (9), சண்முகப்பிரியா (5), பாண்டி சிவானி (4) என்ற 5 பெண் குழந்தைகள் உள்ளன.

கணேசன் கோவையில் உள்ள பஞ்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள நாகலெட்சுமி, தனக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி வேலைவாய்ப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

அதனை ஏற்று அவருக்கு சொந்த கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டது. தொடர்ந்து அப்பணியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது 2 பெண் குழந்தைகளுடன் மையிட்டான் பட்டியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, ஓடும் அரசு பேருந்தில் இருந்து நாகலட்சுமி குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார், ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோரே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் நாகலட்சுமியின் குழந்தைகள் மதுரையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு பேரை பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

மற்றொரு 9 வயதான குழந்தை விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள் அந்த பகுதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அழிப்பதாக கூப்பிட்ட காதலன்.. நம்பி சென்ற காதலிக்கு நடந்த சோகம்!!

கன்னியாகுமரியில்..

தான் காதலித்தப் பெண்ணைக் கொலைசெய்யும் நோக்கில் சரமாரியாக வெட்டிய இளைஞர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்த சமயத்தில், கல்லுத்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த பெர்ஜின் ஜோஸ்வா (23) என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அவர்கள் இருவரும் காதலித்திருக்கின்றனர். இருவரும் பல இடங்களுக்குச் சென்று சேர்ந்து போட்டோ எடுத்திருக்கின்றனர். அந்தப் பெண் தற்போது மேற்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களாக பெர்ஜின் ஜோஸ்வாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இது பெர்ஜின் ஜோஸ்வாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் லேப்டாப்பில் இருப்பதாகவும், `அவற்றை இருவரும் சேர்ந்து டெலிட் செய்யலாம் வா…’ எனக் கூறி இளம்பெண்ணை போனில் அழைத்திருக்கிறார் பெர்ஜின் ஜோஸ்வா.

இருவரும் மார்த்தாண்டம் அருகே பழைய பெப்சி கம்பெனி பின்புறமுள்ள தென்னை தோப்பில் சந்திப்பதாக முடிவானது. நேற்று மதியத்துக்கு மேல் இளம்பெண் அங்கு சென்றிருக்கிறார்.

அங்கு நின்றிருந்த பெர்ஜின் ஜோஸ்வா, தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் அவரைச் சரமாரியாக வெட்டியிருக்கிறார். இளம்பெண் அலறியதால் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதைத் தொடர்ந்து பெர்ஜின் ஜோஸ்வா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அங்கு திரண்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மார்தாண்டம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து பெர்ஜின் ஜோஸ்வாவைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் முண்டவிளைப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக மார்த்தாண்டம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அது பெர்ஜின் ஜோஸ்வா எனத் தெரியவந்தது. அவருடைய உடலை போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

“காதலியைக் கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த பெர்ஜின் ஜோஸ்வா, இளம்பெண்ணை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் முண்டவிளைப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.

அப்போது அந்த வழியாக வந்த கோட்டயம் – நாகர்கோவில் ரயில் மோதியதில், பெர்ஜின் ஜோஸ்வா தலை துண்டாகி இறந்துவிட்டார்” என்கிறார்கள் போலீஸார். போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நடக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

ஜார்கண்ட்டில்..

ஜார்கண்ட் மாநிலம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு டக்கென்று நினைவுக்கு வருவது சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிதான். தோனியின் சொந்த ஊர் அதுதான் என்பதால் ஒரு பிணைப்பு. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் முடிவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஸ்வேதா (23) என்ற இளம்பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் முடிக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். இவரை 3க்கும் அதிகமான மாப்பிள்ளை வரனாக பார்த்துசென்றும் திருமணம் முடிவாகவில்லை.

மேலும், பெண்மணி குள்ளமாக இருந்த காரணத்தால், மணமகன்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஸ்வேதாவுக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்த ஸ்வேதா விபரீத முடிவை எடுத்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தமது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீடு திரும்பிய பெற்றோர் மகளின் நிலையை பார்த்து கதறி அழுதனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஸ்வேதா தற்கொலை முடிவுக்கு வேறுஏதும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடத்துகின்றனர்.

வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குள நீரேந்து பிரதேச ஆக்கிரமிப்புக்கு நடவடிக்கை!!

வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளம் பகுதியின் நீரேந்து பிரதேசம் ஒரு சிலரால் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்துததுடன் இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று முறைப்பாட்டையும் பெற்றிருந்தனர்.

இது தொடர்பாக இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த ஆக்கிரமிப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியருந்தார்.

இதற்கு பதில் கூறிய மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றிற்கு முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

வவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை.. ஒருவர் அதிரடியாக கைது!!

வவுனியாவில்..

வவுனியா கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் ‘Pregabalin’ மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 300 போதை மாத்திரைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியாவை சேர்ந்த 41 வயதுடையவர் என்றும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

வவுனியா நெளுக்குளம் பகுதியில் மாடுகள் கடத்தல் : பொலிசார் மீது குற்றச்சாட்டு!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச்செல்லப்படுகின்ற சம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று கலந்துரையாடப்பட்டதுடன் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது,

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், குறித்த பகுதியில் அதிகளவாக மாடுகள் கடத்திச்செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

அத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே அவரை இடமாற்றி ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மாடுகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றயதினம் கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளோம்.

அத்துடன் இச் சம்பவங்கள் தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால். அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம் என்றார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று பதிவான நிலவரம்.. நகை வாங்கவுள்ளோருக்கான செய்தி!!

தங்கம்..

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (13.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த சில கிழமைகளாக தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், சில நாட்களாக 146000 ரூபா என்ற நிலை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து அதிகரிப்பு பதிவாகி வருகிறது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 153,500 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 166,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த நிலையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறான சூழலில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 286 வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து, ரூபாவின் பெறுமதியில் சிறியளவு வீழ்ச்சி நிலை அடுத்தடுத்து பதிவாகி வரும் அதேநிலையில் தங்கத்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கோர விபத்தில் சிக்கி பலி.. விபத்திற்கான காரணம் வெளியானது!!

துல்ஹிரியவில்..

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் சிக்கி பலியாகியிருந்த நிலையில் விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பகுதியில் நேற்று (12.06.2023) டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த விபத்தில் ரம்புக்கன, கொத்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

தனுஷ்க கயான் பின்னவல, சின்ஹாசன வடு கம்லத்கே தினேஷா ஸ்ரீநானி கம்லத்கே, பின்னவல ஹேவயல கீத்மா தட்சர பின்னவல ஆகிய மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் மூவரும் காலி பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​வரக்காபொல துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி திடீரென வீதியை கடந்து கொழும்பு நோக்கி சென்ற மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விபத்தை ஏற்படுத்திய 39 வயதான டிப்பர் வாகனத்தின் சாரதியை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையெனவும், தனது நண்பனின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை வைத்து வாகனத்தை செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் கடந்த மாதம் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வருதை தந்ததாகவும், எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் தொழில் நிமித்தம் கட்டார் செல்ல தயாராகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பில் தந்தை கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு – சித்தாண்டியில் தந்தையின் தாகம் தீர்க்க இளநீர் பறிக்க தென்னைமரத்தில் ஏறிய மகன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள தனது உறவினர் ஒருவரது மரக்கறி விற்பனை நிலையத்தில் தொழில் நிமிர்த்தம் நின்ற வேளை கடந்த (09.06.2023) ம் திகதி மதிய நேரம் தனது தந்தைக்கு உடற்சோர்வு மற்றும் களைப்பாக இருந்ததால் தாகத்தை தணிக்க அருகிலுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் இளனி ஆய்ந்து கொடுப்பதற்காக ஏறிய போது தந்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மகன் தவறி விழுந்துளார்.

கீழேவிழுந்து உணர்விழந்த நிலையில், மகனை உடனடியாக மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் (11/06/2023) நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய விஜயகுமார் தனுஷன் என்ற இளைஞன் ஆவார். சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் சடலத்தை பார்வையிட்ட துடன், உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனை முடிவில் தலையும் கழுத்தும் பலமாக அடிபட்டு மூளை வீக்கமடைந்துள்ளதாகவும் இரத்தக்கசிவும் ஏற்பட்டதால் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தந்தையின் களைப்போக்கமுயன்ற மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் கஜமுத்து மீட்பு : இருவர் கைது!!

வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்ட போது அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்க்கப்பட்டது.

இதனையடுத்து காரில் இருந்த 26 மற்றும் 23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தெஹியந்தர, ஹக்மன பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தனியாக அழைத்து காதலியை அரிவாளால் வெட்டிய காதலன்.. தானும் ஓடும் இரயில் முன் பாய்ந்து விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

காதலியை வெட்டி விட்டு, ஓடும் இரயிலின் முன் பாய்ந்து காதலனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்துள்ளது கல்லுத்தொட்டி என்ற கிராமம்.

இங்கு பெர்ஜின் ஜோஸ் என்ற 24 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அந்த பகுதியில் அமைந்திருக்கும் கல்லூரியில் பி.ஏ படித்து கொண்டிருந்தபோது, மடிச்சல் காட்டுவிளையைச் சேர்ந்த டேன் நிஷா (23) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரே கல்லூரி என்பதால் முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள், நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். அப்படி இருவரும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது நிஷா, பி.எட் படித்து வருகிறார்.

இந்த சூழலில் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காதலன் ஜோஸுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மேலும் இருவருக்குள்ளும் சண்டை வர, ஜோஸ் கோபத்துடன் நிஷாவிடம் பேசியுள்ளார். இதனால் நிஷா அவருடன் இருந்த காதலை முறித்துக்கொள்ள எண்ணியுள்ளார்.

இதில் எரிச்சலடைந்த ஜோஸ், அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இப்படியே தொடர்ந்து மிரட்டல் விடுத்த நிலையில், அதனை டெலிட் செய்யுமாறு நிஷாவும் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடைசியாக உன்னை பார்த்துவிட்டு உனது கண் முன்னே அனைத்தையும் டெலிட் செய்கிறேன் என்று ஜோஸ் கூறவே, அதனை நம்பிய நிஷாவும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கேயும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது பெரிதாக முற்றியதால் ஆத்திரமடைந்த ஜோஸ், தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து நிஷாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் அலறி துடித்த அவரது சத்தத்தை கேட்டு அந்த வழியே சென்றவர்கள் வந்து பார்க்கையில் அந்த பெண் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். மேலும் ஆட்களை கண்டதும் அங்கிருந்து ஜோஸும் தப்பியோடியுள்ளார்.

தொடர்ந்து நிஷாவை மீட்டவர்கள், அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தப்பிச்சென்ற ஜோஸ், ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து இரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியை வெட்டி விட்டு, ஓடும் இரயிலின் முன் பாய்ந்து காதலனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் கன்னியாக்குமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் மாடுகளை திருட முயன்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!!

வவுனியா சமயபுரம் கிராமத்தில் மாடுகளை திருட முயன்ற இருவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் குறித்த இருவரையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்தனர்.

குறித்த பகுதியில் இன்று (12.06.2023) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் திருடப்படுகின்றமை அதிகரித்த வண்ணமே காணப்பட்டதுடன்,

கால்நடைகளை களவாடுபவர்கள் பொதுமக்களினால் கையும் களவுமாக பிடித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும் கையளித்துள்ளனர். எனினும் அப்பகுதியில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயிருந்தது.

இந்நிலையில் இன்று (12.06.2023) காலை 6.00 மணியளவில் சமயபுரம் விநாயகர் வித்தியாலய வீதியில் மாட்டினை களவாட முயன்ற இருவரை பொதுமக்கள் நையப்புடைத்து வாகனம் ஒன்றில் கட்டி வைத்ததுடன்,

அவர்களை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் வழங்குவதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்திருந்தமையுடன் மாட்டினை களவாட முயன்ற இருவரையும் வாகனத்தில் ஏற்றி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைத்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் , எமது கிராமத்தில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளமையுடன் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு கூட முடியவில்லை.

பல தடவைகள் கால்நடைகளை களவாடுகளை பிடித்துக்கொடுத்தும் நெளுக்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. எனவே நாங்கள் இந்த தடவை திருடர்களை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்துள்ளோம் என தெரிவித்தனர்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!!

துல்ஹிரியவில்..

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் 40, 39 மற்றும் 13 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவத் துறையில் கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவி!!

ஹர்ஷி..

கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மருத்துவராகி சாதனை படைத்துள்ளார் ஹர்ஷி எனும் மாணவி. கடந்த யுத்த காலத்தின் பின்னர் மிகவும் விரும்பத்தகாத நினைவுகளைக் கொண்ட பாடசாலையாகக் கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியானதுகாணப்பட்டது.

எனினும் , 2009 ஆண்டுக்குப் பின்னர் அந்தக் கல்லூரிக்கு நல்ல காலம் உதயமானது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மிக மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதுடன் உயர் நிலை பதவிகளை அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்று மாணவி ஒருவர் அந்தப் பாடசாலையின் முதல் பெண் மருத்துவராக பதவி நிலையை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை (10) ஹர்ஷி என்ற மாணவி, மருத்துவராகி தனது வைத்திய தொழிலை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

போர்கால சூழ்நிலையால் பல இன்னல்களை எமது மக்கள் தாயகத்தில் அனுபவித்திருப்பினும், எமது சந்ததிகள் இன்று அந்த கஸ்ரங்களையும் தாண்டி சாதனைகள் படைத்து எம்மினத்துக்கும் எமது மண்ணுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரி மாணவி மருத்துவராகி சேவையினை ஆரம்பித்துள்ளமை பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

நாக்கால் கின்னஸில் இடம்பிடித்த நாய்!!

அமெரிக்காவில்…

அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்த ‘ஷோயி’ என்ற லாப்ரடோர் – ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்,தன் நாக்கால் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 12.7 சென்றி மீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நீளமான நாக்கை இந்த ஷோயி கொண்டுள்ளது.

இதனை கால்நடை மருத்துவர் அளந்து பார்த்ததன் பின்னரே கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைத்தார். சாதனை தொடர்பில் ஷோயின் உரிமையாளர்களான சாடியும் ட்ரூவும் கூறுகையில்,

“ஷோயி’ 6 வாரமாக இருக்கும் போது அதனை வாங்கினோம். அது குட்டியாக இருக்கும் போதே ஷோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அது நீளமாக வளரும் என நாம் நினைத்த நிலையில் இப்போது சாதனை படைத்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.