கோவிலுக்கு வந்த பெண்ணுடன் காதல் : திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டிய பூசாரி!!

மகாராஷ்ட்ராவில்..

இந்தியாவின் தெலங்கானாவில் இளம் பெண் ஒருவரை கோவில் பூசாரி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ராவில் 36 வயது மதிக்கத்த இளம்பெண்ணை லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்த 56 வயது நபர் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வீசிய கொடூர சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு பகீர் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோவில் பூசாரி சாய் கிருஷ்ணா. சம்ஷாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் சாய்-க்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கோவிலுக்கு அப்சரா என்ற பெண் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அபோது அப்சராவுக்கும் – சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில்தான் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு பூசாரி கிருஷ்ணாவை அக்சரா வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் சமாளித்து வந்த கிருஷ்ணா, அப்சரா இருந்தால் தன் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு பெண்ணை அழைத்துக்கொண்டு சோரையூர் பகுதிக்கு அழைத்து சென்று ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நற்குடா என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்சராவின் தலையை சுவற்றில் மோதி அடித்துள்ளார்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவரின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார். உடலை அப்படியே விட்டுசென்றால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என எண்ணியவர் தாங்கள் வந்த காரிலே அப்சராவின் உடலை ஏற்றிக்கொண்டு சென்று கடையில் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி அதில் அந்தப்பெண் பெண்ணின் உடலை மூட்டைக்கட்டியுள்ளார்.

அதன் பின்னர் பாதாள சாக்கடையின் மூடியை திறந்து உடலை அதில் வீசிய பின்னர் என்ன நினைத்தாரோ நேராக காவல் நிலையம் சென்று அப்சரா என்ற பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் பெண்ணுக்கு சம்பந்தமில்லாத நபர் ஒருவர் புகார் அளித்த காரணத்தால் போலீசாருக்கு சாய் கிருஷ்ணா மீது சந்தேகம் ஏற்பட்டது.

எனவே சாய் கிருஷ்ணாவிடம் துருவி துருவி விசாரணை நடத்தியபோது அப்சராவை கொலை செய்து உடலை பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றதை சாய் கிருஷ்ணா தெரிவித்தார். கோவில் பூசாரி ஒருவர் பெண்ணை கொலை செய்து உடலை சாக்கடையில் வீசிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலியை வெட்டி வீசி விட்டு ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்த இளைஞன்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கல்லுத்தொட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் பெர்ஜின் ஜோஸ் (23). இவர் கல்லூரியில் பிஏ படித்தபோது, தன்னுடன் படித்த டேன்நிஷா (23) என்ற பெண்ணை காதலித்தார்.

காதலர்களான இருவரும் நெருக்கி பழகி வந்தனர். தற்போது டேன்நிஷா பிஎட் படித்து வருகிறார். இளைஞர் பெர்ஜின் ஜோஸ் அரசு தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் இடையே திடீரென சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், டேன்நிஷா காதலனை தவிர்க்க தொடங்கியுள்ளார். இது பெர்ஜினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பலமுறை பேச முயன்றும் இளம்பெண் பிடிகொடுக்காமல் தவிர்த்து சென்றுள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பெர்ஜின், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து அவர்களுக்குள் பிளவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டேன்நிஷாவுக்கு போன் செய்து பேசிய பெர்ஜின் ஜோஸ், லேப்டாப்பில் உள்ள போட்டோக்கள் அனைத்தையும் உனது முன்னிலையில் டெலிட் செய்து விடுகிறேன், நேரில் வா என்று அழைத்துள்ளார்.

அதை ஏற்று வந்த டேன்நிஷாவை அழைத்துக் கொண்டு பைக்கில் விரிகோடு அருகே காக்கட்டான்குளம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது லேப்டேப்பில் உள்ள படங்களை டெலிட் செய்யுமாறு டேன்நிஷா கூறியுள்ளார்.

ஆனால் அங்கு வைத்து அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெர்ஜின் ஜோஸ் தனது பைக்கில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து டேன்நிஷாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் வரவே, பெர்ஜின் ஜோஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் வெட்டு காயத்துடன் போராடிய டேன்நிஷாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் பெர்ஜின் ஜோஸ், விரிகோடு முண்டவிளை பகுதியில் சென்ற பயணிகள் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பெர்ஜின் உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்துகொள்ள கேட்ட காதலியை கொலை செய்து சாக்கடையில் வீசிய கோவில் பூசாரி!!

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண்ணை கொலை செய்து பாதாள சாக்கடையில் வீசிய கோயில் பூசாரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சம்ஷாபாத் பகுதியில் கோயில் ஒன்றில் பூசாரி ஆக வேலை செய்து வந்தவர் சாய் கிருஷ்ணா.

சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், வேலையை விட்டுவிட்டு பூசாரி ஆகவும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். சாய் கிருஷ்ணாவிற்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமணமாகாத அப்சரா என்ற பெண்ணுடன், பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்சரா, பூசாரி சாய் கிருஷ்ணாவை வற்புறுத்தி வந்துள்ளார். ஏற்கனவே மனைவி இருப்பதால் அப்சராவை விட்டு விலக, சாய் கிருஷ்ணா முடிவெடுத்துள்ளார்.

ஆனால் அப்சராவின் திருமணம் அழுத்தத்தால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 3ஆம் தேதி தனிமையில் பேச வேண்டும் எனக்கூறி அப்சராவை தன்னுடைய காரில் சோரையூர் பகுதிக்கு அழைத்து சென்றார்.

ஆள்நடமாட்டம் இல்லாத நற்குடா என்ற பகுதியில் காரில் இருந்து கீழிறக்கி, அப்சராவின் தலையை அங்குள்ள சுவற்றில் மோதி நிலைக் குலைய வைத்துள்ளார். பின் கீழே கிடந்த கல்லை தூக்கி அப்சராவின் தலையில் போட்டு துடிதுடிக்க அவரை கொலை செய்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த ரகசிய காதலியின் உடலை, காரில் ஏற்றி சரோநகர் பகுதிக்கு எடுத்துச் சென்றார் சாய் கிருஷ்ணா. கடையிலிருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி காரில் வைத்தே அப்சராவில் உடலை காற்று புகாதபடி அடைத்துள்ளார்.

பின்னர், இரவில் அதே பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் மூடியை திறந்து காதலியின் உடலை அதில் வீசி விட்டு சென்றார். அங்கிருந்து ராஜீவ் காந்தி சர்வதேச காவல் நிலையத்திற்கு சென்ற சாய் கிருஷ்ணா, அப்சராவை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

சம்பந்தமில்லாத நபர் ஒருவர் அப்சராவை காணவில்லை என்று புகார் அளித்தது போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்துள்ளது. துருவி துருவி விசாரணை நடத்தியதில் தான் அப்சராவை கொலை செய்து உடலை பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றதை சாய் கிருஷ்ணா ஒப்புக்கொண்டார்.

சாய் கிருஷ்ணாவை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்து, அப்சராவின் உடலை தேடி வருகின்றனர்.

கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணுடன் கோயில் பூசாரி ரகசிய உறவில் இருந்ததுடன் அவரை கொலை செய்து உடலை சாக்கடையில் வீசிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவன், மனைவி சண்டையால் பறிபோன 13 வயது சிறுமியின் உயிர்!!

பழனியில்..

பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8 வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் தேவதர்ஷினி வயது 13. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கணவன் செந்தில்குமாரும், மனைவி கவிதாவும், அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.

நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், கவிதா கோபித்துக் கொண்டு, பொள்ளாச்சி அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

இதனால் சிறுமி தேவதர்ஷினி மனமுடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத பொழுது தனது தாயாரின் சேலையால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பழனி நகர போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்,தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதை பார்த்து மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 வயது மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற கொடூர தந்தை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்!!

கேரளாவில்..

6 வயது பெண் குழந்தையை அவரது தந்தையே கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள மாவேலிக்கரை என்ற பகுதியை அடுத்துள்ளது புன்ன மூடு என்ற கிராமம்.

இங்கு ஸ்ரீமகேஷ் – வித்யா தம்பதி வசித்து வந்தனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான இவர்களுக்கு 6 வயதில் நட்சத்திரா என்ற மகள் உள்ளார். இந்த சூழலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு குடும்ப தகராறு காரணமாக மனைவி வித்யா தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி தற்கொலைக்கு பிறகு தனது தாய், தந்தை, மகள் என வாழ்ந்து மகேஷ் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் தந்தையும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இரயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.

இதனால் 62 வயது தாய் மற்றும் மகளுடன் மட்டுமே வாழ்ந்து வந்த இவர், மீண்டும் 2-வது முறையாக திருமணம் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி பெண் பார்க்க பலமுறை சென்றுள்ளார். ஆனால் இவருக்கு பெண் குழந்தை இருப்பது ஒரு தடையாகவே இருந்துள்ளது.

இருப்பினும் தொடர்ந்து இவர் பெண் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் தாய் பக்கத்துக்கு வீட்டில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென சிறுமி நட்சத்திராவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனை கேட்டு பதறி வந்த அவர் பார்க்கையில் மகேஷ், தனது கையில் கோடாரியை வைத்து நின்றுள்ளார்; சிறுமி இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ந்த பாட்டி, உடனே தனது பேத்தியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கே சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் தந்தை மகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மகள் இருப்பதால் தனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை என்ற ஆத்திரத்தில் தனது மகளை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அவரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 வயது பெண் குழந்தையை அவரது தந்தையே கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த இளைஞர் கொலை… மனமுடைந்த காதலி விபரீத முடிவு!!

கோவையில்..

கோவையில் பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன் கொல்லப்பட்டதால், மனமுடைந்த அவரது காத0லி தற்கொலை செய்து கொண்டார். கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(21).

லோடுமேனாக பணியாற்றி வந்தார். இவரும், செட்டிபாளையம் அருகேயுள்ள மயிலாடும்பாறையைச் சேர்ந்த தன்யா(18) என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் சில ஆண்டுகளுக்கு காத்திருக்கும்படி இருவரையும் அறிவுறுத்தியுள்ளனர். மதுபோதையில் வந்தார்: கடந்த 5-ம் தேதி தன்யாவுக்கு பிறந்தநாள்.

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக, அன்று அதிகாலை பிரசாந்த் தன் நண்பர்களுடன் மதுபோதையில் தன்யாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், தன்யாவின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தன்யாவின் உறவினர் விக்னேஷ் அரிவாளால் பிரசாந்தை வெட்டினார். இதில் படுகாயமடைந்த பிரசாந்த் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

பிறந்தநாள் வாழ்த்து கூறவந்த காதலன் உயிரிழந்த சோகத்தில் இருந்த தன்யா மறுநாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர், அவர் வீடு திரும்பினார்.

2-வது முறையாக..: இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தன்யா மற்றும் அவரது பாட்டி மட்டுமே இருந்துள்ளனர். காதலன் உயிரிழந்த சோகத்தில் இருந்த தன்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செட்டிபாளையம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ணத்தை வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா!!

உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாம்பியன் ஆனது.

லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 445 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 4வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடைசி நாளான இன்று இந்திய அணி தனது ஆட்டத்தை தொடர்ந்தது. அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் போலன்ட் ஒரே ஓவரில் இந்திய அணிக்கு செக் வைத்தார்.

அவரது ஓவரில் விராட் கோலி 49 ஓட்டங்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா தனது 2வது பந்திலேயே அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கோலியைத் தொடர்ந்து ஸ்டார்க் பந்துவீச்சில் அஜிங்கிய ரஹானே 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி ஏறக்குறைய தோல்வியடைந்து விட்டது என பலரும் கருதினர்.

ஆனாலும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் நம்பிக்கை அளிக்கும் வகையில் பொறுமையுடன் ஓட்டங்கள் சேர்த்தார். எனினும் நாதன் லயன் அவரை 23 ஓட்டங்களில் வெளியேற்றினார்.

அதன் பின்னர் கடைசி விக்கெட்டாக லயன் ஓவரில் சிராஜஜ் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

மட்டக்களப்பில் மீன் உணவினை சாப்பிட்டு உயிரிழந்த பெண் : மரணத்தின் காரணம் குறித்து அதிர்ச்சி!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் மீன் உணவினை சமைத்து சாப்பிட்ட பின் உயிரிழந்த இளம் தாயின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பாஃபர் என்ற மீனினை சமைத்து உண்ட நிலையில் இவை விசமாகி உடல் முழுவதும் பரவி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை களவாஞ்சிகுடி பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். நச்சு தன்மையான மீனினத்தை உட்கொண்டமையினால் உயிரிழப்பு சம்பவித்திருக்கலாம் எனவும் இந்த மீனில் ட்ரெற்றோட டோக்சின் எனும் ஒரு வகையான நச்சு தன்மையும் உள்ளமை குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே (08.06.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கனடாவிற்கு அடுத்த மாதம் செல்லவிருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதிய உணவை உட்கொண்ட பின்னர் அவரது 4 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும், அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்து மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்திலே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான தாத்தா நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபா் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் தங்கியிருந்த இடத்தில் புல் வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்த கொட்டாவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே (09) முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய சிறுமி.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

மத்தியப்பிரதேசத்தில்..

மத்தியப்பிரதேசம், முங்காவல்லி என்ற கிராமத்தில் கடந்த 6 ஆம் திகதி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்கு போராடிய குழந்தை உயிரிழந்துள்ளது.

வீட்டு வாசலில் இரண்டரை வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் அருகே தோண்டப்பட்டிருந்த 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளடுனதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தேசிய மீட்புப் படையினரை வரவழைத்துள்ளனர்.

இ தனையடுத்து, தன்னார்வலர்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டதுடன் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமிக்கு ஆக்சிஜன் வாயு தொடர்ந்து செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பெரிய குழி தோண்டப்பட்டு சிறுமியை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடந்து வந்த நிலையில் முதலில் 50 அடியில் சிக்கியிருந்த குழந்தை, குழி தோண்டப்படும் இயந்திரங்களின் அதிர்வால் 100 அடி ஆழத்திற்கு சென்றுள்ளது.

இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணி பொலிஸாருக்கு கடும் சவாலாக இருந்ததனையடுத்து, 55 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நேற்று குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பேருந்து விபத்தில் சிக்கி பாடசாலை மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்.. 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

இலங்கையில்..

பதுரலிய – கெலிங்கந்த மத்துகம வீதியில் மகேலியல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர் கெலின்கந்த காலனி அகலவத்தை என்ற முகவரியில் வசிக்கும் 16 வயதுடைய தில்ஷான் என்ற பாடசாலை மாணவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து கெலிங்கந்தவிலிருந்து மத்துகம நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த அணையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் புலத்சிங்கல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!!

லசித் மாலிங்க..

சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க போன்று பந்து வீசும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது.

இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

வீரவில பகுதியை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் தினித் என்ற சிறுவனே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,சிறுவனின் திறமையை பாராட்டி சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தரவுள்ளதாகவும்,மற்றுமொரு சிறந்த பாடசாலையில் சேர்க்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதன்படி, தெபரவெவ தேசிய பாடசாலைக்கு சிறுவன் வரவழைக்கப்பட்டு மூத்த வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மாலின் பயிற்றுவிப்பாளர் முன்னிலையில் பந்து வீசியுள்ளார்.

இதன்போது குறித்த சிறுவனின் பந்து வீச்சினை பார்த்து தான் ஆச்சரியமடைந்ததாக சுரங்கா லக்மாலின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

பலவந்தமாக பெண்ணை தூக்கிச் சென்று அரங்கேறிய கொடுமை.. தப்பிக்க முடியாமல் கதறிய இளம்பெண்!!

ராஜஸ்தானில்..

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இளம்பெண்ணை கடத்தி, கட்டாய திருமணம் செய்துள்ளார் புஷ்பேந்திர சிங் எனும் நபர்.

இவர் பாலைவனம் ஒன்றில் தீ மூட்டி, குறித்த இளம்பெண்ணை பலவந்தமாக தூக்கிக்கொண்டு, நெருப்பை சுற்றி வரும் சடங்கினை செய்துள்ளார்.இந்த சடங்கின் போது குறித்த பெண் கதறி அழுதுள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து புஷ்பேந்திர சிங்கை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இறப்பிலும் பிரியாத நண்பர்கள்.. ஒன்றாக நடந்த இறுதிச் சடங்கு… சோகமயமான கிராமம்!!

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் (80) மற்றும் ராமலிங்கம் (82) ஆகிய இருவர் வசித்து வந்தனர். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர்.

மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர்.

ஆண்டுகள் பல ஓடிய பிறகும், சிறுசிறு சண்டைகளைக் கடந்தும் அவர்களின் நட்பு பெரும் பினைப்புடன் இன்றளவும் தொடர்ந்தது. அந்த கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களின் நட்பு இருந்தது.

இதில், சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி, இரண்டு மகன், ஒரு மகளும், ராமலிங்கத்திற்கு மனைவி மற்றும் இரண்டு மகன், இரண்டு மகள்களும் உள்ளனர். இருவரும் மன்னார்குடி அருகே உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்தனர்.

அதன் பின்னர் சிவராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஒரே நாளில் பணி ஓய்வும் பெற்றுள்ளனர். அடிக்கடி குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா சென்று வந்துள்ளனர். இந்நிலையில், சிவராமகிருஷ்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், சிவராமகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். நண்பர் உயிரிழந்த தகவலை கேட்ட ராமலிங்கம் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

மேலும் அடுத்த சில நிமிடங்களில் ராமலிங்கம் அதே இடத்தில் மயங்கிய நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களது இறுதிச் சடங்கும் ஒன்றாக நடைபெற்றது.

இறப்பிலும் இணை பிரியாமல் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதி சடங்கில், மொத்த ஊரே திரண்டு வந்து இருவருக்கும் அஞ்சலி செலுத்தி, அவர்களது நட்பைப் போற்றினார்கள்.

2023ம் ஆண்டில் உலகம் சந்திக்கப்போகும் அடுத்த பேரழிவு : பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு!!

பாபா வாங்கா..

உலகில் மிகவும் முக்கிய நபராக கருத்தப்பட்டவர்களில் ஒருவரான பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வாங்கா கடந்த 1996- ஆம் ஆண்டு தன்னுடைய 84வது வயதில் காலமானார்.

பாபா வாங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை கணித்துள்ளார். இவரது கணிப்புகளில் 85% சரியானவையாக இருக்கு என்று கூறப்படுகிறது. இவரது கணிப்புகள் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இவரது பெரும்பாலான கணிப்புகள் நிகழ்ந்துள்ளதே இந்த அதிர்ச்சிக்கு காரணம். உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004 சுனாமி, பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவி மற்றும் சோவியத் யூனியன் கலைப்பு ஆகிய இவரது கணிப்புகளும் உண்மையாகின என குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் 2023 ஆம் ஆண்டில் அணு ஆயுத அச்சுறுத்தல் நடக்கப்போவதை பாபா வாங்கா தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அணு ஆயுதப் பேரழிவு இந்த ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ளப்படலாம் எனும் பாபா வாங்காவின் கணிப்பு தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர் ஒராண்டை கடந்த நிலையிலும் தீவிரமடைந்து வருகின்றது, இரு நாடுகளும் அணு ஆயுத பாவனை தொடர்பில் செய்திகளை வெளியிட்டு வரும் வகையில் பாபா வாங்காவின் இந்த அதிர்ச்சிகர கணிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

மேலும், 2023இல் அணுமின் நிலையம் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனில் ஒரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாகவும், “அணு ஆயுத அச்சுறுத்தல்” விடுப்பதாக உக்ரைன் ரஷ்யாவை குற்றம் சாட்டி வரும் நிலையில், இவரது கணிப்பு அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, மக்கள் மீது உயிரியல் ரீதியான போரை உலகின் மிகப்பெரிய நாடு மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வாங்கா கணிப்பு எச்சரிக்கிறது.

இதனால் 2023ஆம் ஆண்டிலும் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்பு தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதில், உலகில் உள்ள அணு உலைகள் உருகுவதால் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படுமாம்.

ஒருவேளை பாபா வாங்காவின் கணிப்பு படி பூமியில் சிறிய மாற்றம் நடந்தால்கூட அது கால நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதேபோன்று சூரியனை விட்டு பூமி விலகினால் பனி யுகத்திலும் அடர்ந்த இருளிலும் மூழ்கக் கூடிய கதி நேரலாம்.

அடுத்தபடியாக, இயற்கை முறையிலான குழந்தை பெற்றெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் ஆய்வகங்களில் பெற்றோர்கள் தங்களுக்கான குழந்தைகள் எந்த நிறத்தில் உருவ அமைப்பில் இருக்க வேண்டும் என தெரிவு செய்துக்கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் பாபா வாங்கா கணிப்பில் கூறப்பட்டிருக்கிறதாம்.

வாங்கெலியா குஸ்டெரோவ் -ஆகப் பிறந்த இந்த பாபா வாங்கா பல்கேரியாவைச் சேர்ந்தவராவார். பாபா வாங்கா என்ற இந்தப் பெண் தனது 12 வயதில் பார்வையை இழந்திருக்கிறார். அதன் பிறகு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததாகவும், இவர் கணித்தால் 85 சதவிகிதம் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது.

1996ஆம் ஆண்டே இறந்திருந்தாலும் 5079ஆம் ஆண்டு வரைக்குமான எதிர்காலத்தை பாபா வாங்கா கணித்திருக்கிறாராம். இதன் மூலம் உலகம் 5079ஆம் ஆண்டு வரை இயங்கும் என்பது அறிய முடிகிறது.

4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இளம்பெண் விபரீத முடிவு.!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை தோணுர் கிராமத்தில் அழகேசன் – சந்தியா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அழகேசன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

அழகேசன் – சந்தியா தம்பதிக்கு திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, லாரி ஓட்டும் பணியை விட்டுவிட்டு, விவசாய பணிக்கு செல்லும்படி கணவரிடம் சந்தியா கூறிவந்துள்ளார். எனினும் போதிய பணி இல்லாததால் அவரும் லாரி ஓட்டுவதற்கு அவ்வப்போது சென்றுள்ளார்.

இந்த நிலையில் லாரி ஓட்டுனரான அழகேசன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். லாரி ஓட்டுவதற்கு செல்லவேண்டாம் என கூறியபோதும், அங்கு செல்வதாக கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது. சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முசிறி கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் பெண் இறந்து போன சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.