இறப்பிலும் இணைபிரியா தம்பதி… இறந்த கணவரை பார்த்துக்கொண்டே நெஞ்சை பிடித்த மனைவி!!

செங்கல்பட்டில்..

இருவரது உடல்களும் அடக்கம் செய்வதற்காக ஒரே வாகனத்தில், எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில், அருகருகே வைத்து அடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராம் வயது 75. இவர் கடந்த 2001 முதல் 26 ஆம் ஆண்டு வரை செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.

ராமுவின் மனைவி தங்கமணி வயது ( 65). இவர்கள் இருவரும் அப்பகுதியில் இணைபிரியாத தம்பதிகளாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ராமு கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார். இதனை அடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கிராம மக்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் தன்னை விட்டு கணவர் பிரிந்து சென்ற துக்கத்தை தாங்க முடியாமல், ராமுவின் மனைவி தங்கமணி தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென அழுது கொண்டிருந்த பொழுது நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தங்கமணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தங்கமணியும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடலும் செம்பாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகளை உறவினர்கள் செய்துள்ளனர்.

கணவன் இருந்த சோகத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இருவரது உடல்களும் அடக்கம் செய்வதற்காக ஒரே வாகனத்தில், எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில், அருகருகே வைத்து அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டம் எடுக்கும் போது 30 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுவன்.. சோகத்திலும் பெற்றோர்கள் செய்த செயல்!!

சென்னையில்..

சென்னையில் பட்டம் பிடிக்க முயன்ற போது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் உடலை பெற்றோர்கள் தானமாக வழங்கியுள்ளனர். சென்னை சூளைமேடு பாரதி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி.

இவரது இரண்டாவது மகன் பிரசன்னா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பிரசன்னா தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பட்டம் ஒன்று அறுந்து காற்றில் பறந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த பிரசன்னா, பட்டத்தைப் பிடிப்பதற்காக அதன் பின்னே ஓடியுள்ளார். பிறகு அந்த பட்டம் பெரியார் பாதை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்டது. அதை எடுப்பதற்காகப் பிரசன்னா மாடியின் மீது ஏறி உள்ளார்.

அப்போது ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்குத் தாவ முயன்ற போது 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலைப் பெற்றோர் தானமாக வழங்கியுள்ளது. மகன் இறந்த போதும் யாருக்காவது உதவியாக மகன் இருக்கட்டும் என பெற்றோர்கள் உடல் உறுப்புகனை தானமாக வழங்கியது அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம்!!

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட இருவரும் ஆண்களாவர்.

வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டத்தில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் சிகிச்சைக்கு பிந்திய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.

ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐந்து வருட காதல்… பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி!!

சென்னையில்..

சென்னை பெரம்பூர் சேர்ந்தவர் கோபி என்பவரின் மகள் ஆர்த்தி. இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்த மாணவி வழக்கம்போல் தனது பணிகளை செய்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீ பற்றியதால் வலியால் அவர் அலறிதுடித்தார்.

ஆர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு பதறி துடித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறைக்குள் சென்று மகளை மீட்க போராடினர். சிறிது நேரத்துக்கு பிறகு ஆர்த்தி மீது பற்றிய தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், உடலில் 65 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், காதல் விவகாரத்தில் இளம்பெண் ஆர்த்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்ட ஆர்த்தியும், ஆகாஷ் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலிக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

6 வயது மகளை வெட்டிக் கொலை கொடூர தந்தை.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே புன்னமூடு பகுதியில் ஸ்ரீமகேஷ் (38) – வித்யா தம்பதி வசித்து வந்தனர். இதில் ஸ்ரீமகேஷ் துபாயில் பணி புரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் நக்‌ஷத்ரா என்ற ஒரு மகள் இருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீமகேஷின் மனைவி வித்யா 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய ஸ்ரீமகேஷ், அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை.

தொடர்ந்து சில மாதங்களில் ஸ்ரீமகேஷின் தந்தையும் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார். இதனால் தாய் சுனந்தா (62), மகள் நக்‌ஷத்ராவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று அவர்களின் வீட்டில் தந்தை ஸ்ரீமகேஷ் மற்றும் மகள் நக்‌ஷத்ரா இருந்துள்ளனர். தாய், சுனந்தா அருகில் உள்ள வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்து திடீரென நக்‌ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டது.

இதனால் பதற்றத்துடன் சுனந்தா மற்றும் உறவினர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். வீட்டு சோபாவில் கழுத்தில் வெட்டு பட்டநிலையில் ரத்த வெள்ளத்தில் நக்‌ஷத்ரா கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதேநேரத்தில் அங்கு கையில் கோடாரியால் ஸ்ரீமகேஷ் ஆவேசமாக நின்று கொண்டு இருந்தார். திடீரென சுனந்தாவையும் அவர் கோடாரியால் வெட்டினார். இதற்கிடையே அங்கு பொதுமக்கள் திரண்டதால் மகேஷ் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்த நக்‌ஷத்ராவை மீட்டு சிகிச்சைக்காக மாவேலிக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகேஷின் தாயார் சுனந்தாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்த நிலையில் 2ஆவது திருமணம் செய்ய ஸ்ரீமகேஷ் பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால் ஸ்ரீமகேசுக்கு இருக்கும் மகளை காரணம்காட்டி பலரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இந்த ஆத்திரததில் கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளம் யுவதி : கைதான முன்னாள் காதலன்!!

மொனராகலையில்..

மொனராகலையில் வீட்டில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் செவனகலை பிரதேசத்தில் நேற்று (09.06.2023) பகல்வேளையில் இடம்பெற்றுள்ளது.

எஸ்.லக்சிகா என்ற 22 வயது யுவதியை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த யுவதியின் 22 வயதுடைய முன்னாள் காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து நேற்று மாலை பேருந்தில் தப்பிச் செல்ல முயற்சித்த வேளை பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட யுவதியும், கைதான இளைஞரும் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது காதலிக்க ஆரம்பித்தார்கள் எனவும், கடந்த வருடம் இளைஞருடனான காதலை யுவதி நிறுத்திக்கொண்டார் எனவும் தெரியவருகிறது.

அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே யுவதியை இளைஞர் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று மதியம் யுவதியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர், யுவதியின் தாயாரின் கண் முன்னால் இந்த கொலையை புரிந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதியின் தந்தை கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் குழு மோதல் ஒன்றில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை : மீண்டும் இரண்டு இலட்சத்தை எட்டுமா?

தங்கம்..

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (10.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 146000 ரூபா என்ற நிலை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிகரிப்பு பதிவாகி, இவ்வளவு நாட்களாக 150,000 ரூபாவிற்கு குறைந்தளவாகவே நிலவி வந்த தங்கத்தின் விலை இன்று 150,000 என்ற மட்டத்தை தொட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 150,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 162,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த நிலையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறான சூழலில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 286 வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் நேற்று இரவு முதல் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த மாணவர்களின் செயல்!!

இலங்கையில்..

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று தென்னிலங்கையில் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளில் இருந்து வந்த ஐரோப்பிய பல்கலைக்கழக இளைஞர்கள் அக்குரள சுற்றுலா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு கடற்கரையில் உள்ள பெருமளவிலான கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர். இலங்கை மக்களால் அசுத்தமடைந்த கடற்கரைகளை சுத்தப்படுத்துவதற்காக இந்த வெளிநாட்டு பல்கலைக்கழக இளைஞர்கள் தன்னார்வத்துடன் அங்கு வந்துள்ளனர்.

இதில் கலந்து கொண்ட வெளிநாட்டு இளைஞர்கள் கூறுகையில், இவ்வளவு அழகான கடற்கரையை கொண்ட இலங்கையின் கடற்கரைகளை கழிவுகளை கொட்டாமல் பாதுகாப்பது இலங்கை குடிமக்களின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்: சந்தேக நபரின் அதிர்ச்சி தரும் வாக்குமூலம்!!

முல்லேரியாவில்..

முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் 5 வயது சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த விசாரணையில், குழந்தை உண்மையில் வெட்டுக் காயங்களால் இறக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடரில் கைதுசெய்யப்பட்ட 51 வயதான புல் வெட்டும் தொழிலாளியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் புல் வெட்டும் இயந்திரத்தின் கத்திகள் தவறுதலாக சிறுவனைத் தாக்கியதால் குழந்தை இறந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அச்சமயத்தில் பீதியடைந்த சந்தேக நபர் உடைந்த கண்ணாடி பாட்டிலின் துண்டுகளை சிறுவனின் உடலுக்கு அருகில் வைத்துள்ளார், இது குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களுக்கு வெளிப்படையான காரணமாக இருக்கும் என அதனை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் விசாரணையில் தெர்வித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை ( 08-06-2023) ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்து ஐந்து வயதுடைய ஜொனாதன் மார்க் பொன்சேகா என்ற சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, இன்று (ஜூன் 09) சந்தேகநபர் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் படுகாயம்!!

யாழில்..

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் இன்று (10) காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் பிக்கப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன எதிர் எதிரே மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பயணம் செய்த அல்லைப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் விவசாயின் அசாத்திய திறமை.. வியப்பில் பொதுமக்கள்!!

யாழில்..

வெங்காய செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். அச்சுவேலி பகுதிகளை சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களை குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தினை 18 வெற்றி கண்டுள்ளார்.

இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக வடமாகாண விவசாய பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இன்றைய தினம் நடிகை செய்யும் முறை காண்பிக்கப்பட்டது.

அத்துடன் குறிந்த இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது அதன் மூலம் எப்படி நடுகையினை மேற்கொள்வது போன்ற விடயங்கள் பயனாளிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

இதன்போது குறைத்த நடுகை முறை வெற்றி அளிக்கும் முறையாக விவசாய அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டால் அதனை அனைவருக்கும் பரிந்துரைப்பதற்கு முன்வரவுள்ளனர்.

இந் நிகழ்வில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி முன்னாள் விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் விவசாய அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தங்கத்தின் விலையில் திடீரென இன்று பதிவான மாற்றம்!!

தங்கம்..

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (09.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் சிறியதொரு அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 146000 ரூபா என்ற நிலை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் சிறியதொரு அதிகரிப்பு பதிவாகியுள்ள போதும் தொடர்ந்தும் தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த நிலையில் இலங்கையில் டொலரின் வீழ்ச்சியானது இன்னும் சில நாட்களுக்கே பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் சில பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கப் போவதாக கடந்த கிழமை முதல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என குறிப்பிடுகின்றனர்.

இப்படியான நிலைமை பார்க்கும் போது இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் தங்கப் பவுணொன்றின் விலையானது இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்து : இருவர் காயம்!!

வவுனியா மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இன்று (09.06.2023) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திலிருந்து ஏ9 வீதியூடாக வைத்தியசாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நீதிமன்றிக்கு அருகே வீதியின் மறுபக்கம் சென்று வீதி தடுப்புச்சுவரில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகியதுடன் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் கைது செய்யப்பட்ட விலைமாதுக்கள் 7 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிப்பு!!

வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இன்று (09.06) தெரிவித்துள்ளனர்.

இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 விலைமாதுக்களும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்!!

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார்.

அதோடு அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS), GIC இன் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் பதவியில் அவர் ஆற்றி வரும் பிற பொறுப்புகளில் இருந்து விலகுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

களுத்துறையில்..

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறையில் ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறையில் மேலதிக வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர், நீதிமன்றில் இன்று (09) மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி குறித்த உத்தரவை களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமலி பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் களுத்துறையைச் சேர்ந்த 30 வயதான திவங்க ஜயவிக்ரம எனும் கணித ஆசிரியராவார். மேலும் இந்த வழக்கு ஜூன் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.