கும்புக்கன் ஓயாவில் மூழ்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு பொசன் போயா தினத்தன்று உயிரிழந்துள்ளார்.
மொனராகலை றோயல் தேசிய பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திரந்த டில்ஷான் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர்கள் குழுவொன்று இந்த மாணவனின் வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவர்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் நீராடச் சென்றுள்ளனர்.
குறித்த குழுவினர் நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த போது, பாடசாலை மாணவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியாமல் போயுள்ளது. பின்னர், பிரதேச மக்களின் ஆதரவுடன், இறந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டது. இதற்கு முன்னரும் இந்த இடத்தில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் முச்சக்கர வண்டியில் மாடு திருடிய இருவரை பாராளுமன்ற உறுப்பினரும், ஊர் மக்களும் இணைந்து மடக்கிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று (04.06) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டியை மறித்த மக்கள், குறித்த முச்சக்கர வண்டிக்குள் நான்கு கால்களும் கட்டப்பட்டு தலைகீழாக மாட்டை வைத்து அதனை ரபர் சீற்றால் சுற்றி கடத்திச் செல்வதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக பொலிசாருக்கும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களும் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரு பகுதியினரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
மாட்டை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொடுப்பதற்கு கொண்டு சென்றதை அவர் மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து இரவு ஒன்றரை மணிவரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊர்மக்களுடன் இணைந்து மாடு திருடுவதற்கு துணை நின்ற மற்றும் ஒரு நபரை மடக்கிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து கொண்டு செல்லப்பட்ட மாடு நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து 648 வெற்று காஸ் சிலிண்டர்களுடன் கடத்தப்பட்ட வாகனம் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (05.06) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர் காஸ் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் வர்த்தக நிலையப்பகுதிக்கு வந்த காஸ் விநியோக வாகனம் 648 வெற்றுக் காஸ் சிலிண்டர்களுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, அங்கு வந்த குறித்த பெண்ணின் மூத்த மகன் வெற்றுக் காஸ் சிலிண்டருடன் அங்கு நின்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தனது மகனுக்கு எதிராக நெளுக்குளம் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த வாகனத்தை வெற்று சிலிண்டர்களுடன் மீட்டுள்ளதுடன், குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரையும் வாகனத்தையும் நீதிமன்றில் முற்படுத்த நெளுக்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒடிசாவில் விபத்திற்குள்ளான ரயிலில் பயணம் செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியில் சரக்கு ரயிலும், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அத்துடன் தடம்புரண்ட பெட்டிகளின் மீது யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயிலும் மோதி மூன்றாவது ரயிலாக விபத்தில் சிக்கியது. இதில் 288 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்திற்குள்ளான ஹவுரா ரயிலில் ஆன்மிக பயணம் செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். இவர்கள் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள சம்மேட் ஷிகர்ஜி ஜெயின் கோவிலுக்கு ஆன்மீக பயணம் சென்று கொண்டு இருந்தனர்.
இவர்கள் பெங்களூருவில் இருந்து ஹவுரா விரைவு ரயிலில் கிளம்பும் போது விபத்திற்குள்ளான ரயிலின் பின்புற பெட்டிகளில் இருந்துள்ளனர், ஆனால் விசாகப்பட்டினத்தில் ரயிலின் என்ஜின் மாற்றப்படும் போது 110 பக்தர்கள் பயணம் செய்த 3 ரயில் பெட்டிகளும் முன்வரிசைக்கு வந்தது.
பாலாசூர் ரயில் விபத்தின் போது ஹவுரா விரைவு ரயிலில் 2 பொதுப் பெட்டிகளும் ஒரு பிரேக் வேனும் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது, நல்லவேளையாக கடவுளை தரிசிக்க சென்ற 110 பக்தர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்தியாவின் ஒடிசா மாகாணத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 288 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கோர விபத்து தொடர்பில் பலர் தங்கள் அனுபவங்களை தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
சூர்யவீர் என்ற இளைஞர் தெரிவிக்கையில், தொடர்புடைய ரயில் ஒன்றில், தமது தாயாரும் பாட்டியும் மருந்து வாங்கும்படி டவுனுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரயில் விபத்து தொடர்பான தகவல் வெளியாக, சில மணி நேர தேடுதலுக்கு பின்னர் பாட்டியை கண்டுபிடித்ததாகவும், ஆனால் தாயாரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களுடன் இணைந்து சம்பவம் நடந்த பகுதியில் மொத்தமாக தேடியதாகவும், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது என சூர்யவீர் தெரிவித்துள்ளார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தவித்துப்போன நொடியில், தமது தாயாரின் புகைப்படம் ஒன்றை அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து தேடச் சொன்னதாக சூர்யவீர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி தாயாரின் அலைபேசி இலக்கமும், அவர் உடுத்தியிருந்த உடையின் வண்ணம் உள்ளிட்ட தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால் இன்று பகல் அந்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாகவும், நண்பர் ஒருவர் அனுப்பிய புகைப்படம் ஒன்றில், தமது தாயாரின் சடலமும் காணப்பட்டதாக இளைஞர் சூர்யவீர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சடலத்தை மீட்டு, பத்திரமாக வீட்டுக்கு எடுத்துச் சென்று உரிய முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும். ஆனால் விபத்து நடந்த பகுதியில் பெரும் கூச்சல் குழப்பமாக உள்ளது.
தற்போதைய சூழலில் அந்த வழியாக அனைத்து ரயில் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாலைகளும் ஜனங்களாலும் மீட்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவைகளாலும் நிரம்பியுள்ளது. தாயாரின் சடலத்தை எப்போது இனி மீட்க முடியும் என்பது தெரியவில்லை என நொறுங்கிப்போய் தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.
வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளத்தில் நேற்று (04.06.2023) மதியம் தமிழ் – முஸ்ஸிம் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட முறுகல் நிலமை பொலிஸாரின் தலையீட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் கடந்த 08.05.2023 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா கோவில்குளம் கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பட்டாணிச்சூர் கமநலசேவை நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டாணிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.
2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டாணிச்சூர் புளியங்குளத்திற்குள் உள்நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83(1) இன் பிரகாரம் அடைக்கப்பட்டவர்களாலே சட்டவிரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்பட்டதுடன்.
அவர்களால் அகற்றத் தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் , கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்,
அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் குறித்த பகுதியில் நேற்று காலை பள்ளிவாசல் சமூகத்தினர் இணைந்து சட்டவிரோதமான முறையில் வேலி அமைக்கப்பட்ட பகுதியினுள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது வவுனியா மாவட்ட கமக்கார சம்மேளங்களின் தலைவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையடுத்து குறித்த பகுதியின் சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை நிறுத்துமாறு தெரிவித்திருந்தார். எனினும் தொடர்ந்தும் சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமையினால் தமிழ் இளைஞர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
இதனால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியதுடன் சில மணிநேர குழப்பநிலமையினையடுத்து நிலமையினை வவுனியா பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் இரு தரப்பினனரயும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று இருவரிடமும் முறைப்பாட்டினை பெற்றமையுடன் இவ்விடயத்தினை நீதிமன்றிக்கு எடுத்துச்செல்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
வித்தியாசமான முறையில் போட்டோ ஷீட் செய்த ஜோடிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் தங்களின் திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய துணையுடன் ப்ரீ வெட்டிங் ஷூட் செய்து கொள்கிறார்.
இதனை திருமணம் நடந்து முடிந்த பின்னரோ அல்லது விருந்துபசாரங்களின் போதோ உறவினர்கள் முன்னாள் போட்டு காட்டுவார்கள். மேலும் ப்ரீ வெட்டிங் ஷூட்டை அவர்கள் பிடித்தவாறு வித்தியாசமான முறைகளில் செய்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் வீட்டிற்கு ஒரு பாம்பு வருவதாகவும் அப்போது அதனை பிடிக்க வரும் போது தன்னுடைய துணையை பார்த்து செல்போனில் உரையாடுவது போன்றும் ஒரு தம்பதியினர் போட்டோ ஷீட் நடத்தியுள்ளார்கள்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள்,“ உங்களின் அலப்பறைகள் வர வர தாங்க முடியவில்லை.” என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டதில், படுகாயமடைந்த காதலியை பயத்தில், காப்பாற்ற முயற்சி செய்யாமல் சாலையோரம் வீசி விட்டு சென்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
வேறொரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலியைக் காப்பாற்றாமல் அப்படியே சாலையில் காதலன் வீசி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநயா(23).
இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவரைக் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பார்த்திபனுக்கு வீட்டில் வேறொரு பெண் பார்த்து திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள நிலையில், திருமண பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு, அபிநயா வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே தகராறு எழுந்துள்ளது. பார்த்திபன் கோபமாக கிளம்பி விட்டார். பின்னர், பார்த்திபனுக்கு போன் செய்த அபிநயாவிடம், உடையார்பாளையம் வந்து விடுமாறு பார்த்திபன் கூறியுள்ளார்.
இருவரும் உடையார்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்து, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியுள்ளனர். அதன் பின்னர், இரவு அபிநயாவை வீட்டில் விடுவதற்காக திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பொட்டக்கொல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த பார்த்திபனின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
இதில், உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அபிநயா படுகாயமடைந்தார். இந்நிலையில், அபிநயா இத்தனைக் காயங்களுடன் பிழைப்பாரா என்று பயத்தில், பார்த்திபன், அபிநயாவை அங்கிருந்து சாலையின் ஓரத்தில் தூக்கி வீசி விட்டு, எதுவும் தெரியாதவராய் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டார்.
அந்த பகுதியில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு அந்த வழியே சென்றவர்கள் தகவல் தந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையிலான போலீசார், அபிநயாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அபிநயா குறித்து விசாரித்து வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், விபத்துக்குள்ளாகி, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அபிநயாவை காப்பாற்ற முயற்சிக்காமல் அப்படியே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து பார்த்திபன் தப்பி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சிக்காமல் சாலையோரம் வீசிச் சென்ற பார்த்திபனை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இலங்கையில் இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக அனைத்து வகையான பழங்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. இதன்படி, இலங்கையில் பொருளாதார மையங்களில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலையை உயர்ந்து காணப்படுகின்றன.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாகங்களில் 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 75 ரூபா தொடக்கம் 100 ரூபாவாக இருந்தது. தற்போது 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 350 ரூபாவாக உள்ளது. அதாவது 1 கிலோ ஆப்பிள் பழத்தின் விலை 1350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு தோடம் பழத்தின் விலை 600 ரூபா, ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 தொடக்கம் 750 ரூபாவாகவும், ஒரு கிலோ கொய்யாவின் விலை 750 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மேலும், ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் 250 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிராம் தோடம்பழத்தின் விலை 817 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பச்சை ஆப்பிள் பழத்தின் விலை 836 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. மேலும் பழச் சந்தையில் பப்பாசிபழம் ஒரு கிலோ 3830 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 1,572 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள பகுதியொன்றில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை கால்களை கட்டிவிட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு மூன்று நபர் தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் சுமார் 13 இலட்சம் ரூபாவிற்கும் பெறுமதியான தங்க மோதிரங்கள், தங்க நெக்லஸ்கள், தங்க வளையல்கள் மற்றும் கைத்தொலைபேசியை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைகளில் கோப்பு அட்டைகள் மற்றும் ஆவணங்களுடன், நல்ல நேர்த்தியான உடை அணிந்த மூவரும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதா என அவதானிப்பதைப் போன்று நடித்துள்ளனர்.
இதன் பின்னர் மூதாட்டி இருந்த வீட்டிற்கு அவர்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய இரண்டு வீடுகளிலும் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்ததை அவதானித்த கொள்ளையர்கள் இந்த வீட்டிற்கு வந்து வயோதிப பெண்ணிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்த போது இந்த சம்பவத்தை நடத்தியுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை – ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தின் இடம்பெற்றுள்ளது.
போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 75 பந்துகளில் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். துமித் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 33 ஓட்டங்களையும் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் பரீட் அஹமட் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா இர்ண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதனையடுத்து, பதிலுக்கு 324 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுக் கொண்டுள்ளன.
எகிப்து நாட்டில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மனகை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என குற்றம்சாற்றப்பட்டு கைதுசெய்யப்படுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை கொலை செய்து கொதிக்கும் நீரில் சமைத்து சாப்பிட்டதாக அவரது உறவினர்கள் புகார் செய்துள்ளனர். மேலும் அந்த சிறுவனின் உடற்பாகங்கள் வீட்டில் உள்ள வாலியில் இருந்ததாகவும், அதை புதைப்பதற்குள் பொலிஸார் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை செய்த தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது. தனது மகன் காலம் முழுவதும் என்னுடைய மகன் என்கூடவே இருக்க வேண்டும் என்று தான் அவனை கொலை செய்து தலையை சாப்பிட்டேன் என்று தனது கருத்தை அந்த பெண்மணி கூறியுள்ளார்.
வாக்குமூலம், கொலை செய்த தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது. தனது மகன் காலம் முழுவதும் என்னுடைய மகன் என்கூடவே இருக்க வேண்டும் என்று தான் அவனை கொலை செய்து தலையை சாப்பிட்டேன் என்று தனது கருத்தை அந்த பெண்மணி கூறியுள்ளார்.
காதலித்தவளையே திருமணம் செய்து கொண்ட பின்னரும், காம வெறி அடங்காமல், மனைவியின் தோழியுடன் கள்ளக்காதல் செய்து வந்த காதலன், மனைவி எதிர்த்ததால், கழுத்தை நெரித்துக் கொலைச் செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைக்கு மொத்த குடும்பமும் உடந்தையாக இருந்துள்ளது துயரத்தின் உச்சம். பெற்றோர் பேச்சைக் கேட்காமல், காதல் பெயரில் இது போன்ற சைக்கோக்களை நம்பி வீட்டை விட்டு வெளியேறும் இளம்பெண்களுக்கு இது படிப்பினை என்று சொல்லி புலம்புகிறார்கள் ரமணியின் கல்லூரி ஆசிரியர்கள்.
கோவை குறிஞ்சி நகரைச் சேர்ந்த சஞ்சய்(20) தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த ரமணியைக்(20) காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் தெரிய வர, ரமணியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோரின் அறிவுரையை நிராகரித்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, கடந்த மாதம் 6ம் தேதி சஞ்சயைக் கல்யாணம் செய்து கொண்டார் ரமணி. இருவரும் ஒன்றாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், ரமணி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லி, மூச்சு பேச்சில்லாமல் கடந்த 29ம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார் சஞ்சய்.
ரமணியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே ரமணி உயிரிழந்ததாக சொல்லி, காருண்யா நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர்.
ரமணியின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக, ரமணியின் தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆர்டிஓ விசாரணைக்கு பின்னர் ரமணியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ரமணியின் கணவர் சஞ்சய், மாமனார் லட்சுமணன், மாமியார் பக்ருநிஷா ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மூன்று பேருமே முன்னுக்கு பின் முரணான கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் விசாரணையில் சஞ்சய் அடிக்கடி செல்போனில் அவருடன் படித்த ரமணியின் தோழியும், கல்லூரி மாணவியுமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதை ரமணி தட்டி கேட்டு இனி அந்த பெண்ணுடன் தனிமையில் சந்திக்க கூடாது, பேச கூடாது என்று கணவனிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த 29ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கோபத்தில் சஞ்சய், ரமணியை அடித்து கழுத்தைப் பிடித்துள்ளார். அதன் பின்னர், கீழே தள்ளி ரமணியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததாகவும் தெரிகிறது. இதனால் ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
பின்னர், தனது தாய், தந்தையிடம் சஞ்சய் ரமணியைக் கொன்றது குறித்து கூறியுள்ளார். இதனால் கொலையை மறைப்பதற்காக ரமணியின் உடலில் இருந்த ஆடைகளை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து, சாணிப்பவுடரை குடித்து இறந்தது போல் செட்டப் செய்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க புளியை கரைத்து ஊற்றி, உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல் நாடகமாடியது தெரிய வந்தது. விசாரணையில், குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். 20 நாட்களில் ஆசையாக திருமணம் செய்து கொண்ட காதலியை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கூட்டியில் செல்லும் போது சிறுவர்கள் இருவர் முத்தம் கொடுத்து கொண்டு செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது இருக்கும் இளைஞர்கள் பொது இடத்தில் நடந்து கொள்ளும் விதங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றது.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுவர்கள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது முன்னாள் இருந்த சிறுவனின் தலையை திருப்பி பின்னாள் இருக்கும் சிறுவன் முத்தம் கொடுக்கிறான்.
இதனை அந்த வண்டிற்கு பின்னாள் வாகனத்தில் செல்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் குறித்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இது குறித்து அப்பகுதியில் இருக்கும் போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இதனை பார்த்த இணையவாசிகள்,“ தவறான முன்னுதாரணங்களை ஆரம்பத்தில் கண்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீதி விபத்துக்களையும் சமூக சீர்கேடுகளையும் தடுக்கலாம்.” என கருத்துக்களையும் ஆதங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் தொடர்ந்து செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்த 2வது மனைவியை குத்தி கொலை செய்த கணவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவருக்கும் வீரம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் வீரம்மாள் வெறு ஒருவருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இவர் கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்ரா இவர் வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சித்ரா வேலை செய்யும் உணவகத்தில் சாப்பிடச் செல்லும்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு தடாகம் பகுதியில் குடியிருந்து வந்துள்ளனர். மதுரைவீரன் மட்டும் வேலைக்கு சென்று வர சித்ரா வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கேட்டபோது உறவினருடன் பேசுவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மதுரை வீரன் சித்ராவிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். சித்ராவும் போதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் மதுரைவீரன் சித்ராவை காலால் மிதித்து அருகில் கிடந்த கத்தரிக்கோலை எடுத்து சித்ராவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் சித்ரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து நிலக்கோட்டைக்குச் சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அங்கு மதுரை வீரன் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து தடாகம் காவல் துறையினர் அவர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாணந்துறை கடற்கரையில் உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று இன்று (03) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இலங்கை கடற்பரப்பில் இவ்வாறான விலங்குகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் காவற்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பாணந்துறை கடற்கரையில் இந்த ஆமை சுமார் 06 அடி 07 அங்குல நீளம் கொண்டது. இது குறித்து ஆமை பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கடல் ஆமை நிபுணர் துஷான் கபுருசிங்க கூறுகையில்,
“உலகின் மிகப்பெரிய ஆமை இனம் அழிவின் விளிம்புகளை கொண்டுள்ளன. வட இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து இலங்கை மற்றும் இந்திய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே இவை முட்டையிட வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.