காதல் மனைவி தற்கொலையால் கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. திருமணமாகி 6 மாதத்தில் சோகம்!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் சின்னபொலமடா கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா. இவரது மனைவி ஓபுலம்மா. இந்த தம்பதியின் மகன் மஞ்சுநாத். இவருக்கு வயது 27.

புட்லூர் மண்டலம் கருச்சிந்தலப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் 24 வயது ரமாதேவியை காதலித்தார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் முதலில் சம்மதிக்கவில்லை. வேறுவழியின்றி இருவீட்டாரும் சம்மதித்து கடந்த பிப்ரவரியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

கடந்த திங்கள்கிழமை மாலை சலவாரிப்பள்ளி கிராமம் அருகே ரயில் முன் பாய்ந்து ரமாதேவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் கணவருடன் மொபைலில் பேசி உள்ளார்.

மனைவி ரமாதேவி இறந்த செய்தியறிந்த மஞ்சுநாத்தும் திங்கட்கிழமை இரவு 2 முறை ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை 3 மணிக்கு மஞ்சுநாத் வீட்டில் இருந்து வெளியே வந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மருமகன் மஞ்சுநாத் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக ரமாதேவியின் பெற்றோர் ஜிஆர்பி போலீசில் புகார் அளித்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முகநூல் நண்பன் வீட்டுக்குச் சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

முல்லேரியாவில்..

முல்லேரியாவில் முகநூல் மூலம் அறிமுகமான இளைஞன் வீட்டுக்குச் சென்ற மாணவியொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பதினைந்து வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு அவ் இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்கா நகரப் பகுதியிலேயே இச் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அளுத்கம பொலிஸில் மாணவி தனியாக வீட்டை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தேடித்தருமாறு மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி அளுத்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான இளைஞரும் மாணவியும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கைதுசெய்யப்பட்ட இளைஞன் முல்லேரிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

“நான் சாக போகிறேன்” தனது காதலியிடம் தெரிவித்து உயிரை மாய்த்த மாணவன்!!

ஹொரனையில்..

ஹொரனை பிரதேசத்தில் மாணவன் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.17 வயதுடைய பாடசாலை மாணாவனே இவ் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.“நான் வாழ்ந்து பலன் இல்லை, நான் சாக போகிறேன்” என தனது காதலியிடம் தொலைபேசியால் தொடர்பு கொண்டு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுவிட்ட வடக்கில் உள்ள வீடொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்து ஹோட்டல் கற்கைநெறியை பயின்று வந்த தினேத் தஷ்மிகா தேவ் ஷி விக்கிரமசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தனது தாயாரின் தோழியின் வீட்டில் தங்கியிருந்து சுமார் ஒன்றரை மாதங்கள் புலத்சிங்கல பிரதேசத்திற்கு சென்று கற்கை நெறிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி வழமை போன்று பாடநெறிக்காக சென்று தனது வீட்டுக்குச் திரும்பிய இளைஞன் அன்று இரவு உறங்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மறுநாள் அவ் இளைஞனை எழுப்ப வீட்டின் உரிமையாளரின் சகோதரி அறைக்குச் சென்றதாகவும் இளைஞனின் சடலம் கட்டிலில் தொங்குவதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

2000 ரூபாய் பணத்திற்காக 14 வயது மகளை விற்ற தாய் : தென்னிலங்கையில் நடந்த கொடுமை!!

திவுலபிட்டியவில்..

பதினான்கு வயது மகளை விற்பனை செய்த தாய் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அத்துடன் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரான தாய்க்கு நான்கு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒருவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க இடமளித்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமி 10ஆம் ஆண்டு படித்து வருவதாகவும் இந்த சட்டவிரோத செயலை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் சிறுமி நடந்த சம்பவத்தை ஆசிரியை ஒருவரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமியை பல மாதங்களாக தாய் பணத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளதாக சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் மாயமான தமிழர் : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!!

கனடாவில்..

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போன விடயம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல்களை வெளியிட்ட்டுள்ளனர்.பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி “54 வயதான சிவதாஸ் இறுதியாக கனடா – ஒண்டாறியோவின் விண்ட்சர் நகரில் ஜூலை 31ஆம் திகதி காணப்பட்டார்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காணாமல் போனவரின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவலை கொண்டுள்ளதாக குறித்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நபர் தொடர்பில் தெரியுமாக இருந்தால் 416-808-4100-ஐ தொடர்பு கொள்ளலாம் டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவரின் செயலால் விரக்தியடைந்த இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

வெல்லம்பிட்டியவில்..

கணவரின் போதைப்பொருள் பாவனையால் விரக்தியடைந்த மனைவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்!!

தங்கம்..

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபா சரிவடைந்துள்ளது. அந்தவையில் இன்றையதினம்(11.08.2023) இலங்கை ரூபாவின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 613,831 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 158,850 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 173250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் தங்கத்தின் விலை நிலையானதாக காணப்படுவதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக காணப்படுகிறது.

யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் புங்குடுதீவு 10 வட்டாரத்தை சேர்ந்த குடுபஸ்தரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், குடும்பஸ்தரின் விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய சாக்லேட் விவகாரம் : நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!

சாக்லேட்..

கண்டோஸ் சாக்லேட் தயாரிப்பாளரான ‘சிலோன் சாக்லேட்ஸ் லிமிடெட்’ அதன் சாக்லேட் உற்பத்தி ஒன்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிறுவனம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதேவேளை மருத்துவமனை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சாக்லேட்டில் மனித விரல் ஒன்று இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சொக்லட் ஒன்றில் மனித எச்சங்கள் : அதிர்ச்சியில் மக்கள்!!

இலங்கையில்..

மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி நேற்று காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் உணவகத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி காணப்பட்டதாக வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணையின் போது அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த விரலின் உரிய பகுதியையும், அதில் இருந்ததாக கூறப்படும் சொக்லட் பொதியையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொறுப்பேற்றுள்ளது. அத்துடன், நாளைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்படவுள்ளது.

மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகள்கள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில் ..

சென்னையில் தண்டவாளத்தில் ரயில் வருவதை அறியாமல் கடக்க முயன்ற தனது இரு மகள்களை காப்பாற்றச் சென்ற தாய், மகள்களை காப்பாற்றிவிட்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பழைய கட்டத் தொட்டி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா மற்றும் ஏழுமலை தம்பதியினர். இவர்களுக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் பார்மசி சார்ந்த பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.

சித்ரா மெடிக்கல் ஒன்றில் கணக்காளராகவும், அவரது கணவர் ஏழுமலை ஆட்டோ ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் இரண்டு மகளும் பார்மசி சார்ந்த பட்டப் படிப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் தனது இரண்டு மகள்களுக்கும் புதிய ஆடைகள் எடுப்பதற்காக சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தி.நகர் பகுதிக்குச் சென்று உள்ளனர்.

ஆடைகள் எடுத்துவிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது வீட்டுக்கு செல்வதற்காக மூவரும் தி.நகரில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வந்து, பின் வேளச்சேரி மார்க்கம் செல்லும் பறக்கும் ரயிலில் ஏறுவதற்கு அடுத்த பிளாட்ஃபார்ம் நோக்கி சென்று உள்ளனர்.

சரியாக 5.30 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை தனது இரண்டு மகளுடன் சித்ரா கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. தண்டவாளத்தில் ரயில் வருவதனைக் கவனிக்காமல் மகள்கள் சென்றதை சித்ரா கவனித்து பதறிபோயுள்ளார்.

தனது உயிரை பற்றி சற்றும் கவலைக்கொள்ளாமல் தண்டவாளத்தில் ஓடிச் சென்று அவரது இரு மகள்களையும் தண்டவாளத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டு உள்ளார் தாய் சித்ரா.இதில் மகள்கள் இருவரும் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்து விழுந்து உள்ளனர்.

இரண்டு மகள்களும் ரயிலில் அடிபடாமல் நூலிழையில் தப்பித்த நிலையில் தாய் சித்ரா ரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த எழும்பூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு உடற் கூராய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது இரண்டு மகள்களின் உயிரை காப்பாற்ற தனது உயிரை தாய் ஒருவர் தியாகம் செய்திருக்கும் சம்பவமானது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபகாலமாக சென்னையில் ரயில் தண்டவாளங்களில் அதிகளவில் விபத்து நடைபெற்று வருவதனால் இதனை தடுக்க ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னதாக சென்னை கிண்டி பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை வழக்கமாக பராமரிப்பு பிரிவை சார்ந்தவர்கள் தண்டவாளத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

பின்னர் இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் தாம்பரத்தை நோக்கி செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது.பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் பணிக்கு பிறகு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து ரயில் சேவையும் பாதிப்படைந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்த பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சென்னை புறநகர் மின்சார ரயில் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஊழியர்கள் முன்கூட்டியே கண்காணித்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று நேரத்திற்கு பெரும் பரபரப்பு நிலவியது.

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 3 வீடுகள் சேதம் : 10 பேர் பாதிப்பு!!

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 3 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று (09.08.2023) மாலை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பாவற்குளம் படிவம் 6 பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும்,

பிரமனாலங்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும், முதலியார்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 அங்கத்தவர்களும் என 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன், குறித்த மூன்று குடும்பங்களும் வசித்து வந்த 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி சண்டையிட்ட காதலர்கள்!!

சத்தீஸ்கரில்..

சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரா பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.

சில நாட்களில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலனின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த காதலி ஆத்திரத்தில் அருகில் இருந்த 150 உயர மின் கோபுரத்தில் ஏறிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் மின்கோபுரத்தில் காதலியின் பின்னாலேயே ஏறினார். அப்போது தனது காதலி எந்த விபரீத முடிவும் எடுத்து விடக்கூடாது என அவரிடம் பேசிக் கொண்டே பின்னாலேயே சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 150 அடி உயர மின்கோபுரத்தில் காதல் ஜோடிகள் இருவரும் சண்டை போட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உங்களுக்கு சண்டை போடுவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா என காவல்துறையினர் வசை பாடினர். பின்னர் இருவரையும் கீழே இறங்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

அரை மணி நேரமாக காதல் ஜோடிகள் மின் கோபுரத்திலிருந்து கீழே இறங்கவே இல்லை. அதன் பிறகு கீழே இறங்கினர். இதில் காதலன் கீழே இறங்கியதும் காதலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காதலியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியதொரு அம்சத்தை அறிமுகப்படுத்திய வட்ஸ்அப்!!

வாட்ஸ்அப்..

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் வாரம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அம்சம் வாட்ஸ்அப் தளத்தில் வெளிவந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் வீடியோகால்(Video call) பேசும் போது உங்கள் சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.இந்த அம்சம் ஸ்கிரீன் ஷேர் (screen share) என அழைக்கப்படுகின்றது.

ஸ்கிரீன் ஷேர் (screen share) என்பது ஒரு திறன்பேசியிலுள்ள திரையை மற்றொரு நபருடன் பகிர்வதாகும். அதாவது ஒரு நபருடைய திரையில் என்ன தோன்றுகிறதோ அதை மற்றொரு நபர் அவதானிக்க முடியும்குறிப்பாக இந்த புதிய அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்.!!

பிரகாஷ்ராஜ்..

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் கட்சியான பாஜக மற்றும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் தான் கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரிக்கு சிறப்புரை ஆற்ற சென்றிருந்தார். அவரது உரை முடிந்து கிளம்பியதும் தயாராக வைத்திருந்த கோமியத்தை அவர் நின்று சிறப்புரை ஆற்றிய இடம் மற்றும் அவரது காலடி பட்ட அனைத்து இடங்களிலும் மாணவர்கள் கோமியம் தெளித்து சுத்தம் செய்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ் இந்துத்துவா அமைப்பினரையும், அவர்களின் கொள்கைகளையும் பொது மேடைகளில் தாக்கி பேசி வருகிறார் இதற்கிடையே தான் கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரியில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இதற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கல்லூரி அருகே போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பிரகாஷ்ராஜ் சிறப்புரை ஆற்றினார். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்கு நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மாணவர்களில் ஒரு தரப்பினர் கோமியம் எடுத்து சென்று நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.

மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என முத்திரை குத்தி உள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கோமியம் கொண்டு சுத்தம் செய்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதே போல் பல சம்பவங்கள் அரங்கேறி பெரும் பேசுபொருளானதும் குறிப்பிடத்தக்கது.

உயர்தர மாணவனின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பத்தினர்!!

அம்பாறையில்..

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த துயர சம்பவம் நேற்றையதினம் (09) புதன்கிழமை பதிவாகியுள்ளது.

உயர்தர பரீட்சை முடிவுக்காக காத்திருந்த மாணவன்
சம்பவத்தில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி புள்ளிகளுக்காக காத்திருக்கும் தனுஷன் இன்றும் மாணவன் தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மாணவனின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் 12 வயது சிறுமி எடுத்த முடிவால் அதிர்ச்சி.. அம்பலமான உண்மை!!

யாழில்..

யாழில் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும் சிறுமி ஊரவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு , சிறுமி உடல்நலம் தேறிய பின்னர் , சிறுமிக்கு உளவள சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்போது, தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி குறுந்தகவல்கள் ஊடாக ஆபாச குருஞ்செய்திகளை அனுப்புவதாகவும், தவறான தொடுகைகள் மூலம் பாலியல் தொந்தரவு தந்ததலும் , தான் கடும் விரக்தியடைந்ததால் உயிர் மாய்க்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து சம்பம் தொடர்பில் வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்