யாழில் 10 வயது சிறுவன் கைது.. வெளியான காரணம்!!

யாழில்..

உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் யாழில் 10 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில்,

உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். விசாரணைகளின் போது வேறு பல சிறுவர்களும் ஹெரோய்னை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் மேற்படி சிறுவன் பயன்படுத்திய நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண் வேடமிட்டு மாமியாரை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற மருமகள்!!

நெல்லையில்..

நெல்லையில் மருமகள் ஆண் வேடமிட்டு மாமியாரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் துலுக்கர்குளம் அருகே உள்ள கிராமம் வடுகன் பட்டி.

இந்தக்கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி சீதாராமலட்சுமி. இவர்களுக்கு ராமசாமி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ராமசாமிக்கு மகாலட்சுமி என்பவருடன் திருமணம் முடிந்து இரு ஆண்குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் ராம்சாமி அம்மாவிற்கும், அதாவது மகாலட்சுமிக்கும் சீதாராம லட்சுமிக்கு ஆரம்பத்தில் இருந்தே முட்டல் மோதல் நிலவி வந்ததாகத் தெரிகிறது.

இவர்களுக்கிடையேயான மோதலை பார்த்த ராமசாமி மனைவியுடன் தனியாக சென்று வாழ விருப்பப்பட அதற்கு அனுமதிக்காத சீதா வீட்டின் பின்பகுதியிலேயே தனியாக வீடு கட்டிக்கொடுத்து அதில் மகனையும் மகளையும் தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார்.

இருப்பினும் இருவருக்கும் இடையேயான கருத்துவேறுபாடும் மோதலும் முடிவுக்கு வந்த பாடியில்லை. ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மகாலட்சுமி மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அண்மையில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில் மாமியார் தனியாக தூங்கிகொண்டிருப்பதை பார்த்த மகாலட்சுமி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

ஆனால் நாம்தான் கொலை செய்தோம் என்பது தெரியக்கூடாது என்பதற்காக வேறு ஒருவர் வந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது போல நாடகம் நடத்த மகா திட்டமிட்டு இருக்கிறார்.

அதன்படி கணவரின் பேன்ட் சட்டையை அணிந்து கொண்ட மகாலட்சுமி இரு சக்கர வாகனத்தின் ஹெல்மெட்டை எடுத்து தலையில் அணிந்து கொண்டார். தொடர்ந்து இரும்புக்கம்பியுடன் மாமியார் படுத்திருந்த அறைக்குள் நுழைந்த அவர் தூங்கிக்கொண்டிருந்த சீதாராம லட்சுமியை சரமாரியாக தாக்கினார்.

இரத்தவெள்ளத்தில் மாமியார் மயக்கமடைய அவர் இறந்து விட்டார் எனக்கருதி மகாலட்சுமி அங்கிருந்து சென்றிருக்கிறார். மேலும் இதனை மர்மநபர்கள்தான் செய்தார்கள் என்பதை காட்சிப்படுத்த சீதாராமலெட்சுமியின் கழுத்தில் கிடந்த ஐந்தரை சவரன் தங்கநகையை அறுத்து எடுத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து சீதாராமலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன்றி சீதா உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் மகாலட்சுமியின் உருவம் பொருந்திய ஒருவர் பேன்ட்.,சர்ட் போட்டு நடந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மகாலட்சுமியிடம் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில் அவர் செய்த தவறை ஒத்துக்கொண்டார்.

டீக்கடையாக மாரிய AUDI கார்.. தினமும் டீ விற்று வரும் 2 இளைஞர்கள்!!

மும்பையில்…

மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் Audi காரில் டீ விற்பனை செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் விலை உயர்ந்த மற்றும் சொகுசு கார்களில் ஒன்றாக Audi கார் கருதப்படுகிறது.

இந்நிலையில் Audi காரில் இரண்டு இளைஞர்கள் டீ விற்பனை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மும்பையைச் சேர்ந்தவர்கள் மன்னு சர்மா மற்றும் அதித் காஷ்யப்.

இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து Audi காரில் லோகந்த்வாலா சாலையின் ஓரத்தில் தினமும் டீ விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் டீ விற்பனை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞர்கள் இரண்டு பேருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “எந்த வணிகமும் ஒரு சிறு வணிகம் அல்ல, கடின உழைப்பை மதிக்கவும்.

வாழ்த்துக்கள் சகோதரரே” என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர் ‘இது ஒரு சாத்தியமான வணிகம் அல்ல’ என்றும், “அவரால் Audi கார் வாங்கமுடிந்தாலும் இன்னும் டீ விற்க வேண்டும் என்றால் அவர் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் புகழ் மட்டுமே விரும்புவோர் அல்லது கல்வியில் ஏதேனும் தவறு உள்ளது” என மற்றொரு பயனர் விமர்சனம் செய்துள்ளார்.

இப்படி Audi காரில் டீ விற்பனை செய்து வரும் இளைஞர்களுக்கு ஒரு புறம் பாராட்டும் மற்றொரு புறம் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

“அவ்வளவுதான் உயிர் போயிடுச்சினு நினைச்சோம்”.. ஒடிசா ரயில் விபத்தில் உயிர் தப்பியவர்கள்!!

ஒடிசாவில்..

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

இதனால் ரயிலின் சில பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தின் வழியாக வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதியது. அதேபோல் அடுத்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலும் தடம்புரண்டு இருந்த ரயில் வெட்டிகள் மீது மோதியது.

நேற்றிலிருந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒடிசா, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் மற்றும் ஒன்றிய அரசுகளும் ஒத்துழைப்புடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கோர விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் 1000க்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தவறான சிக்னல் கொடுத்தால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளைத் தவிர்க்க ‘Kavach’ என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP Automatic Train Protection) அமைக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பயணிகள் புவனேஸ்வரிலிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்துள்ளனர்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சரியான சிக்னல் கிடைக்காததால் சரக்கு ரயில் மீது மோதியது. ரயில் ஓட்டுநர் உடனே பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தியதால்தான் நாங்கள் இப்போது உயிரோடு இருக்கிறோம். இல்லை என்றால் சரக்கு ரயில் மீது வேகமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருக்கும்.

அதிகமான இளைஞர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அனைவரும் வேலைக்குச் சென்றவர்கள். நான் பயணித்த பெட்டியும் விபத்தில் சிக்கியது. அப்போது அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தேன். ஆனால் இப்போது அதிர்ஷ்டவசமாக உயிரோடு இருக்கிறேன்.

ஒவ்வொரு பெட்டியும் தனித்தனியே சிதறிக் கிடந்தது. எங்கள் கண் முன்னாடி பலரின் சடங்கள் இருந்தது. விபத்து நடந்த 10,20 நிமிடத்திற்கு பிறகுதான் மீட்புப் பணிகள் நடக்கத் தொடங்கியது. பலர் ரத்த காயங்களுடன் இருந்தனர்” என தெரிவித்துள்ளனர்.

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை : முழு விபரம் வெளியானது!!

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. எனவே சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,281 ரூபாவாகும். 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும்.

இன்று (04.06.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இச் செய்தி எரிவாயு பாவனையாளர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது.

வவுனியா சிறையில் இருந்து 5 பேர் விடுவிப்பு!!

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 5 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று (03.06.2023) பொசன் போயா தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர். மேலும் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலையில் முடிந்த 2K கிட்ஸ் திருமணம்… இளம் மனைவியை கொல்ல 20 வயது கணவர் நடத்திய நாடகம் : அதிர்ச்சி சம்பவம்!!

கோவையில்..

கோவையில் இளம் மனைவியை கொலை செய்த கணவர், கொலைக்கு உடந்தையாக நாடகமாடிய பெண்ணின் மாமியார், மாமனார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20) தனது கல்லூரியில் உடன் படித்த ரமணி (வயது 20) என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார்.

பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து, சஞ்சய் வீட்டில், சஞ்சயின் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சஞ்சய் கல்லூரியில் உடன் படிக்கும் மற்றொரு பெண்ணிடம் செல்போனில் பேசியது தொடர்பாக மனைவி ரமணிக்கு கோபம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ரமணியை சஞ்சை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

கொலையை மறைப்பதற்காக தனது அம்மா, அப்பாவுக்கு போன் செய்ததையடுத்து, இருவரும் வீட்டுக்கு வந்து இறந்து போன ரமணியின் உடலில் அணிந்திருந்த உடையை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்கவைத்து துணிகளை மாற்றிவிட்டு,

சாணிப்பவுடர் குடித்தது போல மற்றவர்களை நம்பவைக்க, அக்கம்பக்கம் உள்ளவர்களை கூவி அழைத்து புளியைக் கரைத்து ஊற்றியும் பின்பு ஆலாந்துறை தனியார் மருத்துவமனைக்கு ரமணி உடலை தூக்கிசென்று மருத்துவரிடம் காண்பித்து, பின்பு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அலுவலில் இருந்த பெண் மருத்துவர் ரமணி உடலை பரிசோதித்து இறந்து விட்டதாக கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து காருண்யா நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ரமணி இறந்தது தெரிய வந்தது.

பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்மூலம் அனுப்பி வைத்துள்ளனர். சஞ்சய் தனது தந்தை, தாய் உதவியுடன் ரமணி தற்கொலை செய்துகொண்டது போல் நாடகமாடி உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரமணி தந்தை அளித்த புகாரில் காருண்யா நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ரமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

29ஆம் தேதி சம்பவம் நடந்தபோது முதலில் சந்தேக மரணம் பதிவு செய்யப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்த நிலையில், விசாரணைக்கு பின் கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தொடர்ந்து, கணவர் சஞ்சய், மாமியார் பக்ருநிஷா, மாமனார் லட்சுமணன் ஆகியோரை காருண்யா நகர் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்தியாவை உலுக்கிய கோரவிபத்து : உயிர் தப்பியவரின் திக் திக் அனுபவம்!!

கொல்கத்தாவில்..

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் கோரவிபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணியொருவர் தனது திக் திக் அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கைகால் அற்ற உடல்கள் – தண்டவாளத்தில் இரத்தக்களறி ஹவ்ராவிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கொரமன்டல் ரயிலின் ஒரு பயணி என்ற அடிப்படையில் இந்த விபத்திலிருந்து உயிர்பிழைத்தமை குறித்து நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன்.

வரலாற்றில் மிகப்பெரிய ரயில்விபத்தாக இது இருக்கலாம் மூன்று புகையிரதங்கள் இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளன கொரமண்டல்எக்ஸ்பிரஸ்- ஹெவ்ரா எஸ்எவ் மற்றுமொரு சரக்குரெயில்.

கொரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்குரயிலுடன் மோதியதாகவே ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தடம்புரண்ட ரயில்கள் அருகில் உள்ள தண்டவாளத்தில் பயணித்துக்கொண்டிருந்த யெஸ்டவன்பூர் எக்ஸ்பிரசுடன் மோதியுள்ளன.

யெஸ்டவன்பூர் எக்ஸ்பிரசின் 3 பெட்டிகள் முற்றாக சேதமடைந்து தடம்புரண்டுள்ளன,கொரமண்டல் எக்ஸ்பிரசின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

உயிரிழப்புகள் – நான் மிகைப்படுத்தவிரும்பவில்லை,200 முதல் 250 உயிரிழப்புகளை பார்த்தேன் – குடும்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன,கைகால் அற்ற உடல்கள் தண்டவாளத்தில் இரத்தக்களறி நான் பார்த்ததை என்னால் என்றும் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

இரு பெட்டிகளில் பயணித்தோர் அனைவரும் பலி : விபத்தில் தப்பித்த தமிழக பயணி அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒடிசாவில் இடம்பெற்ற கோரவிபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இதுவரை238 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இந்த கோர விபத்தில் 900 மேற்பட்டோர் காயடைதுள்ளதாவும் இந்திய தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை ரயிலில் பயணித்த 32 பேரின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய சென்னை கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழக பயணி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த சூழலில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழக பயணி கூறுகையில், 2 பெட்டிகளி நான் வெங்கடேசன் பேசுகிறேன். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன்.

பாலசோர் ரயில் நிலையத்திற்கு மாலை 6 மணி 15 நிமிடத்திற்கு வந்தது. பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிராசான 15 நிமிடங்களில் டெல்லியில் இருந்து தூரந்திரோ எக்ஸ்பிரஸ் எதிர் திசையில் வந்தது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது பக்கத்தில் ஒரு கூட்ஸ் வண்டியும் வந்தது. இரண்டு ரயிலுக்கு நடுப்புறம் கூட்ஸ் வண்டி புகுந்ததால், இந்த இரண்டு ரயில்களும் விபத்தில் சிக்கின. கிட்டத்தட்ட இந்த விபத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏராமானனோரை மீட்கும் பணி நடந்து வருகிறது. நான் பி 7 இல் இருந்தேன். பி 6 வரை அனைத்து பெட்டிகளும் முழுமையாக விபத்தில் சிக்கியது. இரண்டு பொதுப்பெட்டியில் இருந்த அனைவருமே இறந்துடாங்க.. யாருமே தப்பிக்கல. நான் உடனே எங்க டீம் (ராணுவத்திற்கு)க்கு போன் பண்ணி சொல்லிட்டேன்.

அவர்கள் அடுத்த அரை மணி நேரத்தில் மீட்பு பணியில் இறங்கினர். இந்த பணி விடிய விடிய நடக்கும். நிலைமை சரியாக இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும் எனத் அந்த பயணி தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் கடன் அட்டை பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சித் தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து கடன் அட்டைகளுக்கான வட்டி் வீதங்களும் குறைவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால், கடன் அட்டைகளின் வட்டி வீதத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை உலுக்கிய கோர விபத்து : 30 ஆண்டுகளில் நிகழ்ந்த 3வது பாரிய விபத்து!!

இந்தியாவில்..

இந்திய நாட்டை முழு சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து, கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துக்களில் மூன்றாவது மிகப் பெரிய ரயில் விபத்து என கூறப்படுகின்றது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒடிசா விபத்து 3-வது மிகப் பெரிய விபத்து இது என்றும் கூறப்படுகிற நிலையில் நாடுமுழுவதையும் ஒடிக்ஷா ரயில் விபத்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாப்பின் அமிர்தசரஸில் தசரா பார்வையாளர்களின் மீது ரயில் மோதிய விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள புக்ராயனில் இந்தூர் – ராஜேந்திரா நகர் விரைவு ரயிலில் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 152 பேர் உயிரிழந்தனர், 250-க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்.

ஹவுரா – லோகமானிய திலக் டெர்மினஸ் ஞானேஸ்வரி அதி விரைவு வண்டி, மகாராஷ்டிராவின் ஹமாசுலி மற்றும் சர்திகா இடையே சென்றபோது எதிரே வந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 140 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், வாலிகொண்டா நகரத்தில் திடீர் வெல்லத்தால் சிறிய ரயில்வே பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதால், டெல்டா பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 144 உயிரிழந்தனர், 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பிஹாரின் கயா மற்றும் டெஹாரி ஆன் சோன் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்றுப்பாலத்தில், ஹவுரா ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்டு இரண்டு பெட்டிகள் ஆற்றினுள் விழுந்ததில் 140 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தின் கைசால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் விரைவு ரயில் மீது பிரம்மபுத்ரா மெயில் வந்து மோதிய விபத்தில் குறைந்தது 285 பேர் உயிரிழந்தனர். சுமார் 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலம் கன்னாவில், ஃப்ரன்டியர் கோல்டன் டெம்பிள் ரயிலின் தடம்புரண்ட மூன்று பெட்டிகளின் மீது ஜம்மு தாவி-சீல்டா விரைவுரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 212 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் பிரம்மாபுர் இடையே இரண்டு கோரமண்டல் விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு ரயில் ஹவுராவில் இருந்தும், மற்றொன்று சென்னையில் இருந்தும் வந்து கொண்டிருந்தன.

துசி கிராஸிங் அருகே நாகவல்லி ஆற்றில் கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் அருகே, நின்று கொண்டிருந்த காளிந்தி விரைவு ரயில் மீது புருஷோத்தம் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 350 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலன பயணிகளில் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

கேரளா மாநிலம், கொல்லம் அருகில் உள்ள அஷ்டமுடி ஏரியில் உள்ள பெருமான் பாலத்தில் சென்ற விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 106 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ரயிலின் 10 பெட்டிகள் நீரில் மூழ்கின. பிஹார் மாநிலத்தில் பாக்மதி ஆற்றுபாலத்தை கடக்கும் போது ரயில் ஒன்று தடம்புரண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 300 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி செலுத்த வேண்டுமா? வெளியான அறிவிப்பு!!

இலங்கையில்..

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு வரி அறவிடப்படும் என்பதல்ல.

வருமான வரிக் கணக்கின் கீழ் நலன்புரிப் பலன்களை விநியோகிக்கவே 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்களின் பதிவு அவசியம். எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உள்ளூர் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரிக் கணக்கின் விவரங்களின் அடிப்படையில் தனிநபர்களுக்கான சலுகைகள் குறித்து அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கட்டடக் கலைஞர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நேற்று முன் தினம் (01.06.2023) முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும், 2023 டிசம்பர் 31ஆம் திகதி 18 வயதை நிறைவு செய்தவர்கள் அல்லது 2024 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு 18 வயதை அடையும் அனைத்து நபர்களும் இந்த புதிய விதிக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்றைய தினம் நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனால் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என கருதக்கூடாது. வரி செலுத்தும் வரம்புக்குள் இருப்பவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும். வரிக் கணக்கினை திறப்பது என்பது வரி செலுத்துவதை கட்டாயப்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

லிட்ரோ..

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தால் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.  அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு,

சிலிண்டரின் விலை நாளை (04.06.2023) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 300 ரூபா வரையில் இந்த விலை குறைப்பை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வவுனியாவில் வங்கி அட்டையை திருடி நகைகள் வாங்கிய 24 வயதுப் பெண் கைது!!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் கார்டை திருடி அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர், வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது குறித்த பெண் குறித்த அட்டையைத் திருடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 2 வளையல்கள், 1 சங்கிலி மற்றும் 2 காதணிகள் உட்பட பல தங்க நகைகள் மற்றும் பல பொருட்களை அடகு வைத்த ரசீது என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் பெற்றோர்!!

சென்னையில்..

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ பட்டதாரியான பசிலத்காத்தூன் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜமீல் அகமது (36) என்பவரை கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 1) இரவு பசிலத்காத்தூனின் சகோதரர் முகமது கான் செல்போனில் தொடர்பு கொண்டபோது, பசிலத்காத்தூன் கதறி அழுதியபடி பேசி உள்ளார். இதனால் அவரை சகோதரர் சமாதானம் செய்து போனை வைத்துள்ளார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் பசிலத்காத்தூனின் மாமியர் ஷகிலா ‘உங்களின் மகள் தற்கொலை செய்து கொண்டார். வந்து பிணத்தை எடுத்துச் செல்லுங்கள்’ என பசிலத்காத்தூனின் தாயார் ஹசினாவிடம் தொலைபேசியில் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பசிலத்காத்தூனின் தாயார் ஹசினா தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், “பசிலத்காத்தூனிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் கணவர் ஜமீல் அகமதும் மற்றும் அவரது மாமியார் ஷகிலாவும் தினமும் அடித்து சித்திரவதை செய்து வந்தனர்.தற்கொலை தவிர்தற்கொலை தவிர்மேலும் ஜமீல் அகமது சுமார் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதனை அடைப்பதற்காக பசிலத்காத்தூனிடம் அவரது தாயார் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு சித்ரவதைபடுத்தினர்.

எனவே, இவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.பசிலத்காத்தூனின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், பசிலத்காத்தூனின் கணவர் ஜமீல் அகமது மற்றும் மாமியார் ஷகிலா ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும் திருமணமான ஆறு வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரனைக்கு உட்படுத்தபட்டுள்ளது.மேலும், திருமணமான ஆறு வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

12 வயது தம்பியை கழுத்தை நெரித்து கொன்ற 15 வயது அக்கா.. நெஞ்சை உலுக்கும் காரணம்!!

அரியானாவில்..

அரியானாவில் தம்பியை கழுத்தை நெரித்து கொன்ற அக்காவின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சர்மா. இவருக்கு 15 வயதில் ஒரு பெண்ணும், 12 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர்.

இருவரும் தங்கள் பாட்டி வீட்டில் வசித்து படித்து வந்தனர். தற்போது மே மாதம் என்பதால் விடுமுறையை தங்களது பெற்றோருடன் செலவழிக்க இருவரும் தங்கள் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது பெற்றோர் தனது மகன் மீது அதிகமாக பாசம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை விட தனது தம்பி மீது அதிக பாசம் காட்டி வந்துள்ளதாக அந்த 15 வயது சிறுமிக்கு மனதில் எண்ணம் தோன்றியுள்ளது.

இதன் காரணமாக அக்காவுக்கு தம்பி மேல் பெரிய அளவில் பொறாமை எழுந்துள்ளது. சம்பவத்தன்று அந்த சிறுவன் தனது பெற்றோரின் மொபைல் போனை எடுத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவனின் அக்கா அங்கு வந்து தம்பியிடமிருந்து போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், இதற்கு அந்த சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அக்கா தம்பியின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதில் அவரின் தம்பி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு பெற்றோர் வீட்டுக்கு வந்து சிறுவனை தேடியுள்ளனர். அப்போது போர்வைக்கடியில் சிறுவன் கிடப்பதை அறிந்து அவரை எழுப்பச் சென்றபோது சடலமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்பின் இது குறித்து அந்த சிறுமியின் கேட்டபோது ஏன் என்னை விட தம்பி மேல் அதிக பாசம் வைத்தீர்கள்.அதனால் நான் அவனை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் அங்கு வந்த போலீசார் சிறுமியை சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.