கனடாவில் ஆற்றில் நீராடச் சென்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

கனடாவில்..

கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞரே இவ்வாரு உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார். மேலும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா புளியங்குளத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

புளியங்குளம் – மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று (31.05) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

புளியங்குளம் – மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றையதினம் இரவு தனது தோட்டத்திற்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.

தூக்கில் தொங்குவதை அவதானித்த பொதுமகனொருவர் புளியங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரான்ஸில் யாழ் இளைஞனின் விபரீத முடிவு : சோகத்தில் குடும்பம்!!

பிரான்ஸில்..

யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன் தினம் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33 வயதான இளைஞரே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிர்பிழைக்க பிரான்ஸ் சென்ற யாழ் இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அகதிகளின் புகலிட கோரிக்கைகளை நிராகரிக்கும் நாடுகள்
அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்போர் காரணமாக ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் , அகதி தஞ்சம் கோரும் இலங்கையர்ளுக்கு அடைகல வழங்கி வந்த நிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், இவ்வாறு செல்லுபவர்களின் புகலிட தஞ்சக்கோரிக்கைகளை வழங்காது இழுத்தடிப்பு செய்து வருகின்றன.

எனினும் முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பல லட்சங்களை செலவு செய்து இன்னும் இலங்கையர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு வருகின்றனர்.

அங்கு சென்ற பின்னர் முகாம்களில் அடைக்கப்படும் அவர்களின் அகதி தஞ்ச கோரிக்கைகளும் அண்மைக்காலமாக நிராகரிக்கப்படுவருவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழக்கும் சம்பங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாமரை கோபுரத்தை அலங்கோலப்படுத்திய தம்பதிக்கு நேர்ந்த கதி.!!

கொழும்பில்..

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் தம்பதியொன்று கோபுரத்தின் சுவரில் எழுதிய போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை கோபுரத்தின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்கள் அதன் உடைமைகளை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்த அதன் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தாமரை கோபுர பராமரிப்புக்கு பாரிய செலவு ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சொத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் வர்த்தக நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!!

இலங்கையில்..

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (31) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கேரட்” தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக குறைந்துள்ளது.

அதேவேளை கடந்த வாரம் புதன்கிழமை இது 154,500 ரூபாவாக பதிவாகி இருந்தது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 167,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் “24 கேரட்” தங்கத்தின் விலை தற்போது 161,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படலாம்!!

எரிபொருள்..

எரிபொருள் விலை இன்று(31.05.2023) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இம்முறையும் எரிபொருள் விலையை குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, தற்போது QR அமைப்பின் ஊடாக வெளியிடப்படும் எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய 7 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீட்டராக அதிகரிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிக்கான 15 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 22 லீட்டராகவும், சாதாரண முச்சக்கரவண்டிக்கு 08 லீட்டராக இருந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீட்டராக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

30 லீட்டராக இருந்த காருக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீ்ட்டராகவும், வான் ஒன்றிற்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் ஒதுக்கீடு 30 லீட்டரில் இருந்து 40 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், பேருந்துகளுக்கு 60 லீட்டராக இருந்த எரிபொருள் ஒதுக்கீடும் இன்று நள்ளிரவு முதல் 125 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 75 லீட்டராக இருந்த லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 125 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் கைது!!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நேற்று (30.05) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் வவுனியாவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வவுனியா பொலிசார், தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர்,

சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த காரியாலயம் முன்பாக இரவில் ஒன்று கூடி நின்றோர் என சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கணவனும் மனைவியும் நடுவீதியில் பலியான சோகம்!!

பெரம்பலூரில்..

அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று படுபயங்கர வேகத்தில் மோதி விட்டு, நிற்காமல் சென்றதில், நிலைத்தடுமாறிய கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமம் வடக்கு மாதவி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பிரபு (29). இவரது மனைவி காந்திமதி (29). இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன் – மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எளம்பலூர் கிராமத்தில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு மின் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கணவன் – மனைவி இருவர் மீதும் அந்த வாகனம் ஏறிச் சென்றதில் அவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனே மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு போலீசார் பிரபு, காந்திமதி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவன்-மனைவி உடல் நசுங்கி பலியான சம்பவம் எளம்பலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதல் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரைச் சேர்ந்தவர் துரை என்கிற திருமூர்த்தி. கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மாலதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன் துரை அடிக்கடி மது போதையில் வந்து சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி மாலதி தலையில் கணவன் துரை கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் தப்பி ஓடிவிட்டார்.

அருகில் வசித்து வந்தவர்கள் இரவு நேரமாகியும் வீட்டில் மின் விளக்குகள் எரியாததை கண்டு வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மாலதி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாலதியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் துரை இரண்டு குழந்தைகளுடன் தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து பழனி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் கைது செய்யப்பட்டார். பழனியில் குடும்ப பிரச்சனையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணக்கோலத்தில் அண்ணன்- அண்ணி.. தம்பி கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் தன்னுடைய அண்ணன் திருமணத்திற்காக தம்பி கொடுத்த பரிசுப்பொருள் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. மதுரையின் திருமங்கலம் அருகே சுந்தரகுண்டு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள்- கலைவாணி.

இவர்களது மூத்த மகன் ராஜாராம் என்பவருக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த அருண்மொழி என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இதன்படி நேற்று சொந்த பந்தங்கள், நண்பர்கள் சூழ திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில், மணமகனின் தம்பி சுப்புராஜ் அவரது நண்பர்கள் இணைந்து மிக வித்தியாசமான பரிசை கொடுத்தனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு காளை ஒன்றையும், ஆட்டுக்கிடா இரண்டையும், சேவல் இரண்டையும் பரிசாக கொடுத்தனர். இந்த பரிசு அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க மணமக்கள் காளையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தந்தை தற்கொலை செய்து கொண்டதை வீடியோ எடுத்த 4 வயது மகன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, ஆந்திரா கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தூக்கில் தொங்குவதை படமாக்கும்படி கூறிய தந்தை ஷேக் ஜமால் தனது 3 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். அவரின் மனைவி குவைத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

ஷேக் ஜமால் நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக அவரின் சகோதரி தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு முன்பு அவரின் தந்தை மாதர் சாஹேப் உயிரிழந்ததில் இருந்து அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஷேக் ஜமால் தனது மகனை அழைத்து, தான் தூக்கில் தொங்குவதை செல்போனில் படமாக்கும் படி கூறியுள்ளார்.

தந்தை கூறியபடியே 4 வயது மகனும் தந்தை தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்து செல்ல, வீடியோ முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருவரை கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்!!

வவுனியா சமளங்குளம் பகுதியில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடொன்றினுள் புகுந்து இருவரை கொலை செய்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

வவுனியா சமளங்குளத்தில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட 24 வயது நபரொருவருக்கெதிராக 11 குற்றச்சட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது 38 வயதாகும் குறித்த நபருக்கு இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் 9 குற்றச்சாட்டுகளுக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் 10000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கிய நீதிபதி 10 ஆம் மற்றும் 11 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்டனையும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.

இலங்கையில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நாய்.!!

திருகோணமலையில்..

திருகோணமலையில் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்த தனது எஜமானரின் உடலை வேறு எவருக்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்காத நாய் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் மஹாந்தரவெவ தல்கஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மஹாந்தரவெவ பாடசாலைக்கு அருகில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய A.H.M சமந்த அபேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது நண்பர்கள் இருவருடன் வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிரே காட்டுயானை ஒன்று வந்துள்ளது. நண்பர்களில் ஒருவர் மரத்தின் மீது ஏறிக்கொண்டுள்ளார். மற்றைய நண்பர் புதரில் ஒழிந்து கொண்டுள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையும் நாயும் தனியாக இருந்ததால் நாய் தனது எஜமானரைக் காப்பாற்ற குறைத்துக்கொண்டு பலமுறை யானையை நோக்கி முன்னோக்கி பாய்ந்துள்ளது. நாயைத் தாக்க முயன்ற காட்டுயானை குறித்த குடும்பஸ்தரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், அவரது சடலத்தை எடுக்க நாய் யாரையும் அனுமதிக்காது காவல் காத்துள்ளது. இறுதியாக நெருங்கிய உறவினர்கள் வந்த பின்னரே, சடலத்தை எடுத்துச் செல்ல நாய் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

22 வயது இளைஞனின் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

வட்டவலையில்..

வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கார்மென் தோட்டப் பகுதியில் உள்ள பாரிய குளம் ஒன்றில் இருந்து 22 வயது இளைஞன் ஒருவரின் சடலம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 மணி அளவில் மீட்கப்பட்டள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் பேருந்து ஒன்றில் வந்து குறித்த குளத்தில் பாய்ந்தததை பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் கண்டுள்ளார். இதை அடுத்து குறித்த நபர் கூச்சலிட்டதை தொடர்ந்து பிரதேச மக்கள் குறித்த இளைஞனை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் வட்டவலை கார்மென்ட் தோட்டப் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய தோமஸ் செபஸ்டியன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு தடவியல் பொலிஸார் வரவழைக்கபட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோத​னைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புகைப்படத்தை வெளியிட்டு பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்!!

இலங்கையில்..

குற்றச்செயலொன்றுடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் நபரொருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் புகைப்படத்தில் இருக்கும் அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்த லங்கா ஏகநாயக்க என்ற (33 வயது) நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் காதலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி – குடும்பத்தினரால் நேர்ந்த துயரம்!!

கட்டுகஸ்தோட்டையில்..

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வீதி ஓரத்தில் பேசிக் கொண்டிருந்த காதலர்களில், காதலனை வீட்டுக்கு அழைத்துச் சென்று காதலியின் தந்தை உள்ளிட்ட குழுவினர் தாக்கியுள்ளனர்.

இந்த ஜோடியில் காதலனுக்கு 17 வயது எனவும் காதலிக்கு 18 வயது எனவும் குறிப்பிடப்படுகின்றது. நேற்று கடுகஸ்தோட்டை நகருக்கு அருகில் உள்ள வீதியொன்றில் இளம் காதலர்கள் பேசிக் கொண்டிருந்த போது யுவதியின் தந்தையும் அவரது நண்பரும் இணைந்து காதலனை தாக்கியுள்ளனர்.

பின்னர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் இளைஞனை இவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். தமது மகன் தாக்கப்பட்டதை அறிந்த அவரது பெற்றோர், அவரை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் காதலியின் தந்தை, தாய், தந்தையின் நண்பர் ஆகியோரையும் கைது செய்துள்ளதுடன் அவர்கள் மூவரையும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.