திடீரென்று மயக்கமடைந்து சுருண்டு விழுந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்த 11 வயது மாணவிக்கு, அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஃபலாக் பாபர் என்பவரே பரிதாபமாக மரணமடைந்தவர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளியலறையில் திடீரென்று மயக்கமடைந்தவர், சுருண்டு விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு முன்னெடுத்த Catherine McKenna என்பவர், நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச காலமே தங்களுடன் வாழ்ந்தாலும், ஃப்லாக் எங்களுக்கு அருமையான பல நினைவுகளையும் அன்பையும் விட்டுச் சென்றுள்ளார் என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் அவளை இதயத்தில் இருந்து நேசித்தோம், அவள் எப்போதும் எங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் என்றென்றும் இருப்பாள் எனவும் தாயார் ஷாஸியா தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது சிறுமி ஃபலாக் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சில முறை வாந்தியெடுக்கவும் பின்னர் நினவு திரும்பாத நிலையில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி, பின்னர் மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட காயமே அவர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

சின்னத்திரை இயக்குனரின் மனைவி தற்கொலை.. தவிக்கும் குழந்தைகள்!!

சின்னத்திரையில்..

இல்லத்தரசிகளின் முழு நேர பொழுதுபோக்கே சிரியல்கள். முன்பெல்லாம் சண்டிவியில் மட்டும் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகும். தற்போது செய்தி தொலைக்காட்சி தொடங்கி பல தனியார் சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன.

அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று வாணி ராணி. இந்த சீரியலை இயக்கியவர் இயக்குநர் ஓ.என். இவர் மிகவும் பிரபலமான சீரியல்களான வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, செவ்வந்தி போன்ற சீரியல்களை இயக்கியவர்.

குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவரின் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன. இயக்குநர் ஓ.என். ரத்னம் காதலித்து பல எதிர்ப்புகளையும் மீறி போராடி பெற்றோரின் சம்மதத்துடன் பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 மகன்கள். இருவருக்குமே பொள்ளாச்சியில் ஒரே கிராமத்தில் வசித்து வந்தவர்கள் தான். தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் மகன்கள் இருவரும் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர்.

கணவன் மனைவி மட்டும் தனியாக சென்னையில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ரத்னம் – பிரியா தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு , சண்டை ,சச்சரவு ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இவர்களது மகன்கள் இன்று காலை தான் சென்னை திரும்பினர்.

அவர்களை அழைத்து வருவதற்காக காலையில் ரத்னா பேருந்து நிலையம் சென்ற போது ப்ரியா மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர்கள் வருவதற்குள் வீட்டில் தூக்கிட்டு பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

மகன்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிய ரத்தினம் மற்றும் அவரது குழந்தைகள் தூக்கில் தொங்கிய பிரியாவை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக மனைவியை இறக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்தார். அவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருவரும் கடும் எதிர்ப்புக்களையும் மீறி திருமணம் செய்து கொண்டவர்கள்.

பிரியா அவர்களின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என அடம்பிடித்து தான் ரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார்.

அப்படி போராடி கல்யாணம் செய்து கொண்டவர் இன்று சிறு சிறு பிரச்சனைகளுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை’ என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரியாவின் இந்த தற்கொலை முடிவு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் மீது தீராத காதல்… இறந்த மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்!!

விருதுநகரில்..

உயிரிழந்த மனைவியின் நினைவாக சிலிக்கான் சிலையை வடிவமைத்து நினைவு தினத்தை அனுசரித்த சிவகாசி தொழிலதிபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேஷனல் காலனியை சேர்ந்தவர் நாராயணன். 70 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கும் நிலையில், இவரது மனைவி ஈஸ்வரி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உடல் நல குறைவால் காலமானார்.

மனைவி மீது தீராத அன்பு கொண்டுள்ள நாராயணன், அவர் இறந்த பிறகும் அவரது நினைவாலே இருந்துள்ளார். மேலும் இவரது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், இவர் மட்டும் தனிமையில் தனது மனைவி நினைவாக இருந்துள்ளார்.

இந்த சூழலில் தனது மனைவி இறந்த பிறகு அவரது நினைவாக சிலை ஒன்றை செய்ய எண்ணியுள்ளார். மேலும் சிலிக்கான் சிலையை செய்தால் தன்னுடனே வீட்டுக்குள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அதனை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சிலிக்கான் சிலை செய்ய பெங்களூரு தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளார். தனது மனைவியின் நினைவு உலுக்கு முன்பாகவே அதனை செய்ய கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அவரது நினைவு நாளை அவரது வீட்டில் சிலையை வைத்து அனுசரித்து நினைவுகூர்ந்தார்.

இந்த சிலை தத்ரூபமாக அவரது மனைவி ஈஸ்வரியின் உண்மையான உருவம் போல இருந்துள்ளது. நினைவு நாளான இன்று அவரது வீட்டில் அமைத்து நாராயணன் நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து சிலையை வழிபட்டனர். எளிதில் தூக்கிச் செல்லும் வகையிலான அந்த சிலையை, வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வைத்துள்ளார். மேலும் வாசலில் 2 லட்சம் ரூபாய் செலவில் மனைவியின் வெண்கல சிலையையும் வைத்துள்ளார்.

மனைவியின் நினைவு தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக 9 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலையை செய்துள்ளதாகவும், அவர் உயிருடன் இருப்பது போன்ற மன நிறைவு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷ நிகழ்ச்சிகளிலும் மனைவி பங்கேற்பது போல் இருக்கிறது என்ற மன நிறைவு ஏற்படுவதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

வவுனியாவில் வெடிகுண்டு அச்சுறுத்தல்… மாவட்ட பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலையடுத்து பாடசாலைகளுக்கு கோட்டக்கல்வி பணிப்பாளரினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது

வவுனியா மற்றும் செட்டிக்குளத்திலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் , ஆசிரியர்களும் தங்களது பாடசாலையில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பூரண ஏற்பாடுகளை முன்னெடுப்பதுடன்,

வெளி ஆட்கள் பாடசாலைக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாணவர்களை பாடசாலை முடிவடைந்த நேரத்தில் மாணவர்களை பகுதி பகுதியாக அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவட்டத்தினுள் குண்டுதாரிகள் உள்நுழைந்துள்ளதாக தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளமையினால் பாடசாலைகளில் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டமையினையடுத்தே இவ் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிணற்றினுள் வீழ்ந்த யானைக் குட்டி!!

வவுனியா மடுக்கந்த பகுதியில் யானைக்குட்டி ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த நிலையில் அதனை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத கிணற்றினுள் யானைக்குட்டி ஒன்று தவறி வீழ்ந்தமையை அவதானித்த கிராமவாசிகள் இது தொடர்பாகவனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதேவேளை குறித்த குட்டியின் தாய்யானை அந்தபகுதியில் உலாவித்திரிவதால் மீட்பு பணியில் தொய்வுநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபல இளம் நடிகை கார் விபத்தில் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

வைபவி..

சினிமா எனும் மாய உலகம் எல்லோருக்கும் எல்லாம் கதவைத் திறப்பதில்லை. கதவின் வாசலிலேயே வருடக் கணக்கில் காத்திருப்பவர்கள், வெறுங்கையுடனே தங்களது காலத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

கதவுக்கு அருகே வரை கையில் சாவியுடன் செல்பவர்கள் திறக்க தெரியாமல் திரும்பி விடுகிறார்கள். எங்கோ வேடிக்கைப் பார்த்து கொண்டு இந்த விளையாட்டில் இல்லாமல் இருப்பவன், உள்ளே நுழைந்து சிம்மாசனத்தில் அமர்கின்றான்.

பலரது வாழ்க்கை இப்படி இருக்க, வைபவிக்கு திறமை, அதிர்ஷ்டம் வாய்ப்பு என எல்லாமும் ஒரே நேரத்தில் சரியாய் அமைந்தது. அழகு தேவதையாக இந்தி சீரியல்கள் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை வைபவி உபாத்யாய், 32 வயது கூட இன்னும் நிரம்பாத நிலையில், கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரபல ஸ்டார் ஒன் சேனலில் ஒளிபரப்பான ‘சாராபாய் vs சாராபாய்’ தொடரில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர். இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் வைபவி தான் ஹிட்டு, ஹாட் எல்லாமே.

இந்த சீரியல் விசிட்டிங் கார்டு மூலமாக பல சீரியல்களிலும், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். போகும் இடங்களில் எல்லாம் நம்ம தமிழ் பட ஜெனிலியா மாதிரி வைபவியின் துறுதுறு நடவடிக்கைகள் ரசிகர்களிடையே பிரபலமானது.

இந்நிலையில், நேற்று தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு காரில் சுற்றுலா சென்றிருந்த போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் கார் விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நடிகை வைபவி பரிதாபமாக உயிரிழந்தார்.

வைபவியின் வருங்கால கணவரின் நிலை குறித்து எந்த தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. நடிகை வைபவியின் குடும்பத்தினர் அவரது உடலை மும்பைக்கு கொண்டு சென்று அங்கு இறுதிச் சடங்குகளை நடத்த இருக்கின்றனர்.

வைபவியின் மறைவுக்கு அவருடன் நடித்த சக நடிகர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளம் நடிகை சாலை விபத்தில் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொதிக்கும் தண்ணீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும், பிறந்த ஆறு மாதமேயான பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று தாய் சத்யா மகளைக் குளிக்க வைப்பதற்காக அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துள்ளார். பிறகு கொதிக்கும் தண்ணீரை எடுத்து வீட்டின் கழிவறையில் உள்ள பாத்திரத்தில் ஊற்றியுள்ளார்.

பிறகு வீட்டின் முன் கதவை அடைப்பதற்காகக் கழிவறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது கழிவறையிலிருந்த குழந்தை ரித்திகா கொதித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். பிறகு குழந்தையை மீட்டு அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இங்குக் குழந்தை ரித்திகா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் 6 வயது மாணவியை காட்டுக்குள் கடத்திச் சென்று துஸ்பிரயோகம் செய்த இராணுவ அதிகாரி.. நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான தீர்ப்பு!!

வவுனியாவில்..

ஆறு வயது பாடசாலை மாணவி மதிய நேரம் பாடசாலை விட்டு வந்த போது அவரை காட்டுக்குள் கடத்தி சென்று துஸ்பிரயோகம் செய்த நெடுங்கேணி இராணுவ முகாமின் இராணுவக் கோப்ரலுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (25.05.2023) வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14.05.2013 அன்று பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை ஆட்கடத்தல் புரிந்த குற்றச்சாட்டும், சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் செய்த இரண்டாவது குற்றச்சாட்டும் என சட்டமா அதிபரினால் இரு குற்றச்சாட்டுகள் நிரம்பிய குற்றப் பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

மாணவி வெள்ளை சீருடையில் இரத்தம் படிந்த நிலையில் காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டமை, விசேட சிஐடி பொலிஸ் அணி இராணுவ சிப்பாயை கைது செய்தமை, கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை அடையாள அணி வகுப்பில் அடையாளம் காட்டியமை, நெடுங்கேணி விஜயபாகு இராணுவ முகாம் கட்டளை அதிகாரி நீதிமன்றிற்கு சாட்சியமளித்தமை,

காட்டுக்குள் இருந்து சிறுமியின் சப்பாத்துக்கள் மீட்கப்பட்டமை, இறுதியாக சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட வைத்திய அறிக்கை என்பவற்றை வைத்து கைது செய்யப்பட்ட நெடுங்கேணி விஜயபாகு இராணுவ முகாமின் இராணுவக் கோப்ரலை குற்றவாளி என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் அவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கவும், அதனை கட்டத்தவறின் இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படவும் மற்றும் தண்டப்பணம் பத்தாயிரம் ரூபா கட்டத்தவறின் இரு மாதம் கடூழிய சிறைத்தண்டனை எனவும் இன்று வவுனியா மேல் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை குற்ற புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க தலைமையிலான குழுவினர் கொழும்பிலிருந்து வவுனியா சென்று குற்றவாளியான இராணுவ கோப்ரல் அதிகாரியை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் அக்காவின் திருமணத்தில் தம்பிக்கு நேர்ந்த சோகம் : கண்ணீரில் உறவினர்கள்!!

தென்னிலங்கையில்..

களுத்துறை, ஹந்தபாங்கொட பிரதேசத்தில் தனது ஒரே சகோதரியின் திருமண தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹந்தபாங்கொட கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் தலைவர் பிம்சர பிரபோத் ரணசிங்க என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மணப்பெண்ணுக்கு இவர் ஒரே சகோதரன் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திருமண நிகழ்வில் வைக்க புகைப்படம் எடுத்துக் கொண்டு மணமகனின் தந்தையுடன் திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தவறி பள்ளத்தில் விழுந்தது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரத்தில் முன்னோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பலா மரத்தில் மோதி நின்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் தெரிவித்தார்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவனும் மற்றைய நபரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை : வெளியான அறிவிப்பு!!

விடுமுறை..

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி அனைத்து அரச பாடசாலைகளுக்கும் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இதன்காரணமாகவே நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஊடான வடக்கு ரயில் சேவை விரைவில்… வெளியான முக்கிய அறிவிப்பு!!

வடக்கு ரயில் சேவை..

ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கசந்துறைக்கு இயக்கப்படும் ரயில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக,

தற்போது வடக்கு ரயில்வே கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பில் இருந்து காங்கசந்துறை வரை மீண்டும் புகையிரத சேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தே புகையிரத திட்ட பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார்.

திருகோணமலையில் குடும்பத்தகராறால் நேர்ந்த விபரீதம்.. பரிதாபமாக பறிபோன உயிர்!!

திருகோணமலையில்..

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ராசதுரை சுதாகரன் (27வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பிள்ளையுடன் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தொலைபேசியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் குறித்த சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மரணத்திற்கான காரணத்தை சடலம் தொங்கி இருந்த இடத்தில் எழுதி வைத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடிக்கொண்டு ஓடும் போது கிணற்றில் வீழ்ந்த திருடன் : பாதுகாப்பாக மீட்ட பொலிஸார்!!

வலகும்புரவில்..

வீடு ஒன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிய பின்னர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் அலவ்வ பஹல வலகும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டிற்குள் திருடன் பிரவேசித்த வேளை அனைவரும் உறக்கத்தில் இருந்துள்ளனர்.

அதனால் திருடன் பணத்தையும் பொருட்களையும் திருடும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளான். அந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக வீட்டு உரிமையாளர் கண் விழித்து கொண்டுள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த அந்த திருடன் தப்பி செல்வதற்காக ஓடியுள்ளான். அதன் போது வீட்டின் பின் புறத்தில் வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளான். இதனையடுத்து அலவ்வ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு பொலிஸார் விரைந்து வந்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸாரும் , ஊர் மக்களும் இணைந்து ஏணியின் உதவியுடன் திருடனை பத்திரமாக மீட்டெடுத்துள்ளதுடன் கைது செய்துள்ளனர். திருட சென்ற இடத்தில் கிணற்றில் வீழ்ந்த திருடன் காப்பாற்றபட்டமை பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

மூன்றே வாரங்களில் 12 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை!!

இலங்கையில்..

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மிக வேகமாக உயர்ந்த அமெரிக்க டொலரின் பெறுமதி கடந்த இரு மாதங்களாக தொடர் சரிவையும் தளம்பல் நிலையையும் சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதியில் கடந்த இரு மாதங்களாக தொடர் உயர்வு பதிவாகி வருவதுடன் ஒரு சில சமயங்களில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட கடந்த வருடம், பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் டொலரின் பெறுமதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்திருந்தது, 371 ரூபாவாக அதன் விற்பனை பெறுமதியும், கொள்வனவு பெறுமதி 370 ரூபாவையும் அண்மித்திருந்தது.

இந்தநிலை, இவ்வருடம் பெப்ரவரி மாதம் வரையில் நீடித்திருந்தது. இந்த மாற்றமானது, இலங்கையில் பல்வேறு துறைகளில் சாதகமான மாற்றங்களை கொண்டுவரத் தொடங்கியது.

குறிப்பாக பொதுச் சேவை கட்டணங்கள் குறைப்பு, எரிவாயு, எரிபொருள் விலை குறைப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு போன்ற பொதுமக்களுக்கு சாதகமான மாற்றங்களை சிறிதளவில் ஏற்படுத்தியிருந்தது.

அதேசமயம், பொருளாதார நெருக்கடி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடி வந்த காலப்பகுதியில் தங்கத்தின் விலையும் கடுமையான உயர்வை அடைந்திருந்தது. கிட்டத்தட்ட 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலையானது 2 இலட்சம் ரூபாவை அடைந்திருந்தது.

எனினும், அதன் பின்னரான காலப்பகுதியில் ஏற்ற இறக்கங்களுடன் 1 இலட்சத்து 80 ஆயிரம் என்ற அளவில் 22 கரட் தங்கப் பவுனொன்றின் விலை பதிவாகியிருந்தது. இவ்வாறான நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதி மிக வேகமாக வலுவடைய ஆரம்பித்தது.

அதன் பின்னரான நாட்களில் தங்கத்தின் விலையும் பாரிய அளவில் சரியத் தொடங்கியது. கிட்டத்தட்ட 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், தொடர்ந்து வந்த நாட்களிலும் இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்பட தங்கத்தின் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வந்தன. மேலும், எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையக் கூடும் என கொழும்பு செட்டியார்த் தெரு தங்க சந்தை நிலவரம் குறிப்பிடுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில், இலங்கையில் கோவிட் தொற்று பரவலோடு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய காலப்பகுதியில் மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் காட்டிய ஆர்வம் இப்போது இல்லை எனலாம்.

கிட்டத்தட்ட, திருமணம் போன்ற அத்தியாவசிய மங்கள நிகழ்வுகளுக்கு மாத்திரம் தங்க நகை கொள்வனவு செய்யும் மக்கள் தொகையே தற்போது இலங்கையில் உள்ளது.

இவ்வாறான சூழலில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் உயருமிடத்து தங்க நகைகளுடைய விலைகளும் மேலும் குறையக் கூடும் என்று சொல்லப்படுகின்றது.

ஆனால், இது மக்கள் மனங்களில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது தங்க நகை கொள்வனவு செய்வதில் மீண்டும் ஆர்வம் காட்டக் கூடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதேவேளை, கடந்த 3 வாரங்களில் இலங்கையில் 22 கரட் தங்கப் பவுனொன்றின் விலையானது கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளது. இதற்கு ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுப்பெற்றமையும் காரணமாகும்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நேற்றையதினம்(24.05.2023) தங்க அவுன்ஸின் விலை 602,923 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,270 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 170,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 156,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,620 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 148,900 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!

வெல்லவாயவில்..

வெல்லவாய பிரதேசத்தில் வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே, அவர் இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்தார்.

இவர் வீரசேகரகம பிரதேசத்தில் வசிப்பவராகும். எனினும் குறித்த மாணவன் தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற பெண் உயிரிழப்பு!!

மலேசியாவில்..

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அங்கு பணியாற்றிய 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொபேகன் பகுதியில் வசித்து வந்த மகலந்தானையைச் சேர்ந்த திருமணமான மற்றும் ஒரு பிள்ளையின் தாயான டொன் ரேணுகா நிலாந்தி பண்டார என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாஎல பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குநர் மூலம் சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுள்ளார்.