வவுனியாவில் மாணவர்களை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல் : வெளியான தகவலால் பாடசாலைகளுக்கு தீவிர பாதுகாப்பு!!

வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய காவலாளியிடம் தெரிவிக்கப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலத்திற்கு இன்றையதினம் சென்ற இருவர் தம்மை பொலிசார் என அடையாளப்படுத்தியதுடன்,

பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்குவைத்து இப் பகுதிக்குள் இரண்டு குண்டுதாரிகள் நடமாடித்திரிவதுடன், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர்.

குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார். எனினும் குறித்த விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் கேட்டபோது…

பொலிசார் என அடையாளப்படுத்திய இருவர் மேற்குறித்த தகவலை காவலாளியிடம் கூறிச்சென்றதை உறுதிப்படுத்தியிருந்தார். எனினும் உத்தியோகபூர்வமாக குறித்த தகவல் வவுனியா பொலிசாரால் எனக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறித்த தகவல் காரணமாக நகரப்பாடசாலைகளுக்கு முன்பாக பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காதலுக்கு எதிர்ப்பு… காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி!!

தென்காசியில்..

கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்துவந்த சப்-இன்ஸ்பெக்டர்களின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வடிவம்மாள். அவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.

அதேபோல், ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம். இவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.

காவல்துறையில் இருவருமே சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றிவரும் நிலையில், இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பழகிவந்த நிலையில், காதலுக்கு எதிர்ப்பு பெற்றோர் வடிவில் வந்திருக்கிறது.

இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் குடும்பத்தினரும் காதலை ஏற்க மறுத்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்த நிலையில், அதற்குக் குடும்பத்தினர், உறவினர்களிடையே எதிர்ப்பு வலுவாகக் கிளம்பியிருக்கிறது.

இரு தரப்பிலும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அச்சமடைந்த காதலர்கள், பெற்றோருக்குத் தெரியாமலேயே திருமணம் செய்துகொண்டதுடன், இருவரும் பாதுகாப்பு கோரி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி, தென்காசி டி.எஸ்.பி-யான நாகசங்கரிடம் அழைத்துச் சென்று விவரத்தைத் தெரிவித்தார்.

உடனடியாக இரு குடும்பத்தினரையும் வரவழைத்த போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரு குடும்பத்தினரும் எந்தப் பிரச்னையும் செய்ய மாட்டோம் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்னுடைய அப்பாவால் ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்.. நடிகை வடிவுக்கரசி வேதனை!!

நடிகை வடிவுக்கரசி.

80. 90 களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் தான். இவர் 350ம் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது வடிவுக்கரசி சீரியல்களில் நாயகி, வில்லி, அம்மா என பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வடிவுக்கரசி தனது வாழ்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், என்னுடைய அம்மா மற்றும் சித்தப்பா சினிமாவில் பணியாற்றி வந்தார்கள். ஒரு நாள் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்.

ஆரம்பத்தில் எனக்கு நடிக்க சரியான வாய்ப்பு வரவில்லை, அந்த சமயத்தில் எனக்கும் நடனம் மற்றும் காதல் காட்சிகளில் நடிக்க வராது. இதனால் நான் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

ஒரே மேடையில் சகோதரிகளை மணந்த இளைஞன்!!

ராஜஸ்தானில்..

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உனியாரா உட்பிரிவில் உள்ள மோர்ஜாலா கிராமத்தை சேர்ந்த ஹரி ஓம் என்ற இளைஞர் சகோதரிகள் இருவரை திருமணம் செய்து கொண்டார்.

அந்த இளைஞர் முதலில் காந்தா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதனைத் தொடர்ந்து காந்தாவின் சகோதரி சுமனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காந்தா தங்கை சுமனையும் திருமணம் செய்து கொள்ள கேட்டார்.

சமீபத்தில் ஹரி ஓம் சகோதரி இருவரையும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

பச்சிளங் குழந்தையை தெருவில் வீசிச் சென்ற தாய் கடித்துக் குதறிய நாய்கள்!!

தமிழகத்தில்..

கள்ளக்காதலிலோ, திருமணம் ஆகாமல் முறை தவறியே பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பள்ளி கழிவறையில் மாணவி குழந்தைப் பெற்றெடுத்து பின்னர் யாருக்கும் தெரியாமல் சாக்கடையில் வீசிச் சென்றது அதிர்வலையை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில், பிறந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் உள்ள பச்சிளங்குழந்தையை யாரோ தொப்பிள் கொடி கூட சரியாக அறுக்காத நிலையில் வீசிச் சென்றுள்ளனர். இந்த குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பாதி உடலைக் காணாத நிலையில், பச்சிளங்குழந்தை ஒன்றின் உடலை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, நாய்களை விரட்டியடித்தனர். பின்னர், இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சோழவரம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை அழுகிய நிலையிலும், முகம் அழுகி சிதைந்த நிலையிலும் காணப்பட்டது. நாய்கள் கடித்துக் குதறியதில் குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது.

குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தகாத முறையில் குழந்தை பிறந்ததால் தாய், அதனை வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமிராக்கள், சுற்றி உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போன்ற இடங்களில் கடந்த 10 நாட்களில் முன்பாக குழந்தை பெற்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். குழந்தையின் தாயைக் கண்டுப்பிடிக்கும் பணி குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

விளம்பரத்தில் நடித்துவிட்டு வீடு திரும்பிய நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!!

சுசந்திரா தாஸ்குப்தா..

பெங்காலி டி.வி நடிகை சுசந்திரா தாஸ்குப்தா (29). நேற்று இரவு கொல்கத்தா புறநகர்ப் பகுதியில் சோப் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காகச் சென்றிருந்தார். அவர் படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்புவதற்கு கார் இல்லாத காரணத்தால், ஆன்லைனில் பைக் டாக்ஸி புக் செய்தார்.

அவர் சொதேபூரிலிருக்கும் தனது வீட்டுக்கு பைக் டாக்ஸியில் வந்துகொண்டிருந்தபோது, பாராநகர் என்ற இடத்தில் திடீரென பைக் முன்பு ஒரு சைக்கிள் வந்துவிட்டது. உடனே சைக்கிள்மீது மோதாமலிருக்க, பைக் டிரைவர் சட்டென பிரேக் பிடித்தார்.

இதில் பின்னால் அமர்ந்திருந்த தாஸ்குப்தா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அதேநேரத்தில் எதிர்த் திசையிலிருந்து வந்த லாரி தாஸ்குப்தா மீது மோதியது. தாஸ்குப்தா ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் லாரியின் எடை தாங்காமல் ஹெல்மெட் உடைந்துவிட்டது. தாஸ்குப்தா உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பைக்கை ஓட்டிய நபரும், பிரேக் பிடித்த வேகத்தில் கீழே விழுந்து லேசான காயமடைந்தார்.

விபத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் போலீஸார் வரும்வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர். தாஸ்குப்தாவின் மரணம் பெங்கால் டி.வி உலகை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

அவர் ஏராளமான டி.வி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இது குறித்து தாஸ்குப்தாவின் கணவர் தெப்ஜோதி பேசுகையில், “என்னுடைய மனைவிக்கு நடிப்பின்மீது அதிக ஈடுபாடு உண்டு. அவருக்குச் சிறு வயதிலிருந்து, நடிகையாக வேண்டும் என்று கனவு இருந்தது. நடிப்புக்காக வேலையைக்கூட ராஜினாமா செய்திருந்தார்” என்று தெரிவித்தார்.

வவுனியாவில் எட்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!

வவுனியா கோவில் குஞ்சுக்குள கிராமத்தில் மக்களை அதிசயிக்க வைக்கும் வகையில் மாடு, கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.

வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம் கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று எட்டு கால்களுடன் கன்று ஒன்றினை ஈன்று மக்களை அதிசயிக்க வைத்துள்ளது.

குறித்த கிராமத்தில் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர் வருமானத்தினை ஈட்டுவதற்கு மாடுகளை வளர்த்து வருகின்றார். குறித்தநபர் வளர்த்து வரும் மாடு எட்டு கால்களுடன் கன்று ஒன்றினை பிரசவித்த நிலையில்,

குறித்த கன்று தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் இன்றைய தினம் கன்றினை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிராம மக்கள் சென்று அதிசய கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதோடு குறித்த கன்று நன்றாக பால் அருந்தியும், ஓடி விளையாடியும் வருகின்றது.

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் சாதனை படைத்த ஈழத்தமிழன்!!

அமெரிக்காவில்..

ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளது.

அது மட்டும் அன்றி அமெரிக்காவில் உள்ள Texas மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருப்பதுடன் அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் தாயகத்திலிருந்து தனது பெற்றோருடன் அனைத்தையும் இழந்து அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார். இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அர்ச்சிகனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்!!

புத்தளத்தில்..

புத்தளம் பகுதியில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குறித்த பாடசாலையில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியரை சரமாரியாக தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத்தோடு சம்பத்துடன் தொடர்புடைய மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் – தில்லையடி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை முடிவடைந்த உடன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை கிழித்து பாதையில் வீசியுள்ளனர்.

இதனையடுத்து புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக கல்வி கற்பிக்கும் எச்.எம் அஸ்கி என்ற ஆசிரியரை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களில் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தில்லையடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டதன் பின்னர் ஆசிரியரின் வீட்டின் நுழைவாயிலுக்கு கற்களினால் வீசியுள்ளனர்.

இதனையடுத்து ஆசிரியர் வெளியில் வந்து குறித்த இடத்தை விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். இதன்போது மாணவர்கள் கற்களை கையில் பொத்தி வைத்த நிலையில் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது ஆசிரியரைத் தாக்கிய சில மாணவர்களில் 4 பேர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து சாதனை படைத்த புறா!!

யாழில்..

யாழில் இருந்து மாத்தறைக்கு பறந்து வரலாற்ரு சாதனையை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறீதர் என்பவரின் புறா சாதனை படைத்துள்ளது.

யாழ்ப்பாணம் பபுகயா கழகம் நடத்திய பந்தய புறாக்களின் பந்தய வரலாற்றில் அதிகூடிய தூரமான 437 KM யாழ்ப்பாண புறா சாதனை படைத்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இந்த சதை நிகழ்த்தப்பட்டுள்ளது. 6 மணித்தியாலங்கள் 6 நிமிடங்களில் பறந்து இந்த சாதனைனையை புறா படைத்துள்ளது.

அதேவேளை இதுவே இலங்கையின் அதி கூடிய பந்தையத்தின் தூரம் என கூறப்படுகின்றது.

10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறியழுத பெற்றோர்!!

காடம்பாடியில்..

நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கோபால் – இந்திரா தம்பதி வசித்து வந்தனர். மீனவரான கோபால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.

இதனால் இந்திரா, அவரது மகள் குணவதி( 15) ஆகியோர் வசித்து வந்தனர். இதில் சிறுமி குணவதி தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சிறுமி குணவதி அறிவியல் பாடத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் பெற்று தோல்வியடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமி பெரும் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய தாய் மகளின் நிலையை கண்டு கதறி அழுதார்.

இது குறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பிறந்த நாளுக்கு முந்தைய நாள் இறந்த சிறுவன்.. சிறுவனின் ஆசையை நிறைவேற்ற திரண்ட நண்பர்கள்!!

தெலங்கானாவில்..

தெலங்கானா ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் குணவத் ராவ் மற்றும் லலிதா தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் சச்சின் என்ற மகன் ஒருவர் உள்ளார். நன்றாக படிக்கும் இந்த மாணவர் அதிகமான நண்பர்களையும் கொண்டுள்ளார்.

இந்த சூழலில் சிறுவனுக்கு கடந்த வியாழக்கிழமை பிறந்தநாள் வந்துள்ளது. எனவே சிறுவன் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட எண்ணியுள்ளார். அதன்படி சிறுவனின் பெற்றோர், அவருக்கு பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி கேக், நண்பர்களுக்கு அழைப்பு என எல்லாம் தயார் நிலையில் இருந்துள்ளது. ஆனால் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் மாலை நேரத்தில், சிறுவனுக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  அவரது உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், சிறுவனை பார்த்து கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து சிறுவனின் பிறந்தநாள் அன்று காலை, அவருக்கு வாங்கி வைத்திருந்த புது துணியை அவருக்கு அனுவித்து, வாங்கி வைத்திருந்த கேக்கை அவரது முன்வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அனைவரும் கைதட்ட, சிறுவனின் கைபிடித்து பெற்றோர் கேக்கை வெட்டி கொண்டாடினர்.

பின்னர் அன்று முழுவதும் சிறுவனின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, மறுநாள் சிறுவனின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது. பிறந்தநாளுக்கு முந்தைய நாள் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக இது போல் சிறுவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வரும் செய்திகள் வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் கொடுமை : மகள்களை துர்நடத்தைக்குள் தள்ளிய தந்தை!!

யாழில்..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளான 11 வயதுச் சிறுமிமையைப் பாலியல் வன்புணர்வும், அவரது சகோதரியான 8 வயதுச் சிறுமியைப் பாலியல் துர்நடத்தைக்கும் உட்படுத்திய சந்தேகத்தில் தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளான சிறுமிகளின் நடத்தைகளில் மாற்றம் தென்பட்டதையடுத்து பாடசாலை ஆசிரியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விடுமுறையில் வீட்டிற்கு சென்ற சிறுமிகளுக்கு கொடுமை
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களது தந்தையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் பாடசாலையில் தங்கி கற்று வரும் நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது என்று விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமிகளின் தாய் கூலி வேலைக்குச் செல்பவர் என்றும், அவர் காலையில் சென்றால் இரவே வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலேயே சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

யாழில் உள்ளாடைக்குள் ஹெரோயினுடன் சிக்கிய சிறுமி!!

யாழில்..

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் 55 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். முகாமில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிறுமி கைது செய்யப்பட்டார்.

பருத்தித்துறை, காந்தியூர் பகுதியில் உள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. இதன்போது விசேட அதிரடிப்படையின் பெண் உத்தியோகத்தர்கள், வீட்டிலிருந்த 16 வயதுடைய சிறுமியை சோதனையிட்ட போது, அவர் உள்ளாடைக்குள் சூட்சுமமாக ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் சிறுமி பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிறீம் பூசினால் அழகாய் இருப்பீர்கள் : யாழில் ஆசிரிய ஆலோசகரால் வாயடைத்துப்போன ஆசிரியை!!

யாழில்..

யாழ். வலய ஆசிரிய ஆலோசராக கடமையாற்றும் ஆண் ஒருவர் பாடசாலை ஒன்றிற்கு கடமையின் நிமித்தம் சென்றுள்ளார். குறித்த ஆண் ஆசிரியர் பாடசாலைக்குள் திடீரென சென்று ஆசிரியர்களுடன் ஏதோ பேசி உள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை இதுவரை காலமும் யாரென அறியாத அப்பாடசாலை ஆசிரியர்கள் யார் நீங்கள் என சில ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர். இதன் போது பாதிலளித்த குறித்த ஆசிரிய ஆலோசகர் , நான் தீபக வலயத்தில் இருபது வருடங்கள் கடமையாற்றி விட்டு யாழ். வலையத்திற்கு வந்த ஆசிரியர் ஆலோசகர் நான் தான் என்றாராம்.

திடீரென ஒரு வகுப்புக்கு சென்று அங்கிருந்து ஆசிரியரிடம் வினாக்களை கொடுத்தபோது சில ஒவ்வாத வார்த்தை பிரயோகங்களை பிரியோகித்ததுடன் நீங்கள் கிறீம் பூசுவது இல்லையா? பூசினால் அழகாய் இருப்பீர்கள் என புது டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அண்மைக்காலமாக யாழ். வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து பல முறைப்பாடுகள் வெளிவரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளரை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த ஆசிரிய ஆலோசகர் பாடசாலை சென்ற போது தமக்கு அறிவிக்காமல் சென்றதாகவும் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தமக்கு செவி வழி மூலமான முறைப்பாடு கிடைத்ததாகத் தெரிவித்தார்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் தங்கத்தின் விலையிலும் கடும் வீழ்ச்சி!!

இலங்கையில்..

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த மூன்று வாரங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இன்றைய தினம்(23.05.2023) தங்க அவுன்ஸின் விலை 601,435 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,220 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 169,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 155,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,460 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,570 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 148,550 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.