காது துளையின்றி பிறந்த குழந்தை : மகளின் சிகிச்சைக்காக 10 ஆண்டுகள் போராடிய பெற்றோர்!!

கேரளாவில்..

கேரளாவில் காது துளையின்றி பிறந்த மகளின் அறுவை சிகிச்சைக்காக, கடந்த 10 ஆண்டுகளாக போராடி சிறுமியின் பெற்றோர், அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

கேரளாவின் திருச்சூரை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் மற்றும் சங்கிதா ஆகிய தம்பதிகளுக்கு, அக்‌ஷிதா என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்தது முதலே காது துளையில்லாமல் இறந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து அக்‌ஷிதாவின் பெற்றோர் தொடர்ந்து பல மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள். தற்போது 10 வயதை நெருங்கிய அக்‌ஷிதாவிற்கு, கடந்த 10 ஆண்டுகளாக முயன்றும், அறுவை சிகிச்சை செய்ய முடியாதென மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ராணுவ பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ராஜீவ், தமிழகத்திலுள்ள வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை செய்தால் முகத்தில் நரம்பியல் பிரச்சனை வர வாய்ப்பிருக்கதாக கூறி, 10 சதவீதம் காது கேட்கும்படி அறுவை சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

காது துளையின்றி பிறந்த குழந்தை: 10 ஆண்டுகள் மகளின் சிகிச்சைக்காக போராடிய பெற்றோர்@ommanaroma ஆனால் அக்‌ஷிதாவின் பெற்றோர் தொடர்ந்து சிகிச்சைக்காக போராடி BAHA(Bone-Anchored Hearing Aid) என்ற புதிய தொழில் நுட்பத்தின் மூலம், சிகிச்சை அளிக்கலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதால், அவர் ராணுவத்திலிருந்த மருத்துவ உதவியை நாடியிருக்கிறார். ஆனால் இவ்வளவு பெரிய செலவில் சிகிச்சைக்கு உதவ முடியாதென ராணுவ மருத்துவ காப்பீட்டு மையம் தெரிவித்துள்ளது.

ராணுவ மருத்துவ உதவி கிடைக்காததால் மனமுடைந்து போன ராஜீவ் , அரசு பணியிலுள்ள தனது மனைவியின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கான இயந்திரமே 7 லட்சத்திற்கும் மேல் இருந்ததோடு, மேற்கொண்டு 5 லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து மகளுக்கு கேட்கும் திறனை பெற்றுள்ளனர்.

BAHAஎன்ற இந்த சிறப்பு அறுவை சிகிச்சை இந்தியாவில், சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. இதன் மூலம் பிறவியிலே காது துளையில்லாத குழந்தைகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கும் மிசினை பொருத்தும் முறை ஆகும்.

இம்முறையில் தோலுக்கு உள்ளே இந்த கருவிகள் பொருத்தப்படுவதால், வெளியே பார்வைக்கு தெரியாது என்பதோடு, கேட்கும் திறனும் துல்லியமாக இருக்குமென, திருச்சூர் மிஷின் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ராணுவத்துறையில் பணியாற்ற ராஜீவிற்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால், எழுந்த சர்ச்சையை அடுத்து கடைசியாக சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

கொடுமைப்படுத்திய கணவன் : முகமூடி அணிந்து மாமியாருக்கு மருமகள் செய்த மோசமான செயல்!!

திருவனந்தபுரத்தில்..

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் வாஸந்தி (63). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் பக்கத்து வீட்டில் பால் வாங்கப் பாத்திரத்துடன் சென்றிருக்கிறார்.

பால் வாங்கிவிட்டு திரும்பிய வாஸந்தி முன், முகமூடி தரித்து வந்த நபர் ஒருவர், இரும்புக் கம்பியால் வாஸந்தியின் தலையை குறிவைத்து அடித்திருக்கிறார். சுதாரித்துக்கொண்ட வாஸந்தி, பால் பாத்திரத்தால் தடுத்திருக்கிறார்.

தடுத்த வேகத்தில் தரையில் சாய்ந்திருக்கிறார் வாஸந்தி. அப்போதும்விடாத முகமூடி அணிந்த நபர், கீழே விழுந்த வாஸந்தியின் காலில் கம்பியால் பலமுறை தாக்கியிருக்கிறார்.

வாஸந்தியின் அலறல் சத்தம்கேட்டு அந்தப் பகுதியினர் ஓடிவந்திருக்கின்றனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். வாஸந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் வாஸந்தியின் கால் எலும்பு முறிந்திருக்கிறது. வாஸந்தி இப்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். வாஸந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சாலைப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வுசெய்தனர்.

அப்போது பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு, முகமூடி அணிந்துவந்து வாஸந்தியைத் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் வாஸந்தியைத் தாக்கியது, அவரின் இரண்டாவது மகனின் மனைவி என்பது தெரியவந்தது.

இது குறித்துப் பேசிய போலீஸார், “வாஸந்தியின் இரண்டாவது மகன் ரதீஸ்குமாரின் மனைவி சுன்யா (36). ரதீஸ்குமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி சுகன்யாவை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார்.

ரதீஸ்குமார் தன்னைக் கொடுமைப்படுத்துவதற்கு மாமியாரின் தூண்டுதல்தான் காரணம் என நினைத்தார் சுகன்யா. மேலும் தாயின் சொல்கேட்டு தன்னைத் தாக்கும் கணவரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்திருக்கிறார்.

எனவே மாமியாரை பழிவாங்கத் திட்டமிட்டார். அதன்படி சுகன்யா ஆண் வேடமிட்டு, முகமூடி அணிந்து மாமியாரைத் தாக்கி யிருக்கிறார். அவர்மீது வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்

பஸ் சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்… வெளியான சிசிடிவி காட்சி!!

நெல்லையில்..

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, வீட்டிற்கு தனது டூ வீலரில் திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ரம்யா (25) மினி பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஒரே வண்டியில் மூன்று இளம்பெண்கள் பயணித்துள்ளனர். யாருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த விபத்து குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. டூ வீலரில் சென்று கொண்டிருந்த பெண்கள், பேலன்ஸ் இல்லாமல் அருகிலேயே வந்து கொண்டிருந்த மினி பஸ் மீது விழுகிறார்கள்.

இதில் வண்டியை ஓட்டிச் சென்ற ரம்யா, பேருந்து சக்கரத்தில் சிக்கி,பேருந்து ரம்யா மீது ஏறி இறங்குகிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள அடையக்கருங்குளத்தில் வசித்து வருபவர் குமார்.

இவரது மகள் ரம்யா (25). ரம்யாவும், அவரது அண்ணி பிலோமீனா, அண்ணி மகள் ஹென்சி ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் அம்பையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த மினி பேருந்து பைக்கை முந்தி செல்லும் போது எதிர்பாராத விதமாக பைக்கின் மீது மோதியதில் மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் ரம்யா மீது மினி பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது.

அங்கிருந்தவர் உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் நடந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அம்பையில் பெரும்பாலான மின் பேருந்துகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதும் இல்லை, இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதால் இது போன்று விபத்துக்கள் நடக்கின்றன என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் போலீஸ்!!

திருச்சியில்..

மணப்பாறை அருகே திருமணமான நான்கு மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருக்கும், வடக்கிப்பட்டியைச் சேர்ந்த கவிபிரியா என்ற பெண்ணிற்கும் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கணவன் வீட்டிலிருந்த கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தார் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து, பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆகியுள்ளதால் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்திய பின்னரே உண்மை நிலை தெரியவரும்.

திருமண நிச்சயமான காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை!!

மத்திய பிரதேசத்தில்..

இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமனம் செய்து வைப்பதற்கு நிச்சயம் எல்லாம் செய்த நிலையில், காதல் ஜோடி, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஹோட்டலிலேயே அறையில் விஷம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், போலீசார் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

காதல் ஜோடிகள் இருவரின் செல்போன்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தும், இருவரின் தற்கொலைக்கான காரணங்கள் தெரியாமல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சன்வர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கபில் சாகு (23). இவருக்கும் நிஷா என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கபில் தனது பெற்றோரிடம் விஜய் நகர் பகுதிக்கு செல்கிறேன் என கூறி விட்டு காலை நேரத்தில் சென்று உள்ளார்.

ஆனால், மதியம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கபில் விஷம் குடித்த தகவலை, அவருடன் இருந்த நிஷா தெரிவித்து உள்ளார். அவரும் விஷம் குடித்திருக்கிறார். தங்களை காப்பாற்றும்படியும் அவர் கோரியுள்ளார்.

அவர்கள் இருவரும் ஓட்டலில் தங்கி இருந்து உள்ளனர். ஆனால், எந்த ஓட்டல் என தெரியாமல் கபிலின் உறவினர்கள் பல இடங்களில் தேடி மாலையில் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஓட்டல் பணியாளர்கள் உதவியுடன் மாற்று சாவி அறையை உடைத்து உள்ளே சென்ற போது, கபில், நிஷா இருவரும் சுயநினைவற்று கிடந்து உள்ளனர். அவர்களை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அதில் பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டனர் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். பொதுவாக, திருமணம் செய்வதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது இது போன்ற தற்கொலை முடிவை காதல் ஜோடிகள் எடுப்பது வழக்கம்.

ஆனால், திருமண நிச்சயம் செய்த ஜோடி ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மனைவி கொலை.. கணவர், மாமனார், மாமியார் செய்த சித்ரவதை!!

மதுரையில்..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சதீஷ்குமார்- (31), தேனி மாவட்டம் கடமலைகுண்டைச் சேர்ந்த ரம்யா (25) ஆகியே இருவரும் திருப்பரங்குன்றம் அருகே ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தனர். அங்கு இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சதீஷ்குமார் – ரம்யா திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள், விளாச்சேரி முனியாண்டிபுரம் குறிஞ்சி நகர் 2-வது தெருவில் வசித்து வந்தனர். இதையடுத்து ரம்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சதீஷ்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினமும் சதீஷ்குமார், ரம்யாவுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து ரம்யாவை தாக்கியுள்ளதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த ரம்யா சரிந்துவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த கொலை ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் அங்கு சென்றனர். மேலும் அவர்கள் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு ரம்யாவின் மாமனார், மாமியாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அரசு மருத்துவமனையில் ரம்யாவின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்தனர். இதையடுத்து சதீஷ்குமார் (31), சதீஷ்குமாரின் தந்தை செல்வம் (55), தாயார் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் மே18 இனப்படுகொலை நாள் ஊர்திப் பவனி : மக்கள் அஞ்சலி!!

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை – தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவில் இருந்து நேற்றையதினம் ஆரம்பாகிய ஊர்திப் பவனியானது நேற்றிரவு வவுனியாவை வந்தடைந்து இன்று (13.05.2023) காலை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகியிருந்ததுடன் மக்கள் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர். அதன் பின்னர் குறித்த ஊர்திப்பவனியானது நகரை வலம்வந்ததுடன் மன்னார் நோக்கி பயணமானது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.

தமிழ் இனப் படுகொலையின் நினைவாக இந்த ஆண்டு பல பகுதிகளிலும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு பல தரப்பினராலும் ஒழுங்கமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன.

நேற்றைய தினம் வடக்கு , கிழக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் இந்தக் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் மற்றொரு அங்கமாக முல்லைத்தீவில் இருந்து குறித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனி தொடங்கப்பட்டிருந்தது.

மன்னார் , கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் செல்லும் இந்த ஊர்தி மீண்டும் கிளிநொச்சி மாவட்டம் ஊடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை மே 18 வந்தடையும் என்று இதன் ஏற்பாட்டாளாகிய தாயக நினைவேந்தல் அமைப்பினர் தெரிவித்தனர்.

தமிழகம் சென்று முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மாணவி படைத்த சாதனை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி உதயராஜ் – திரித்துஷா 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்து காட்டியுள்ளார். மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500 ற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

அங்குள்ள 50 ற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். 2022-23 கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.

அதில், உதயராஜ் – திரித்துஷா கூடல்நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில் பயின்று 591 மதிப்பெண் எடுத்துள்ளார்.

தமிழில் – 97, ஆங்கிலத்தில் – 96 ,எக்கனாமிக்ஸ் – 99 , வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் – 100 என மொத்தம் 591 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு நிறைவடைந்தவுடன் அறிவியல் பிரிவை கற்று மருத்துவராக வேண்டும் என்று தான் ஆசை என கூறிய ஆனால், அகதிகள் முகாமில் இருப்பதால் எங்களால் படிக்க முடியாது என்பதனால் வணிகவியல் படித்து ஆடிட்டராக வேண்டும் என்பது எனது விருப்பம்” எனவும் உதயராஜ் – திரித்துஷா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் பேசு பொருளான யாழ் பல்கலைக்கழக காதல் கதை!!

தென்னிலங்கையில்..

யாழ் பல்கலைகழ்கத்தில் ஆரம்பித்த ஒரு காதல் கதை சிங்களப் பகுதியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவோரும் உண்டு. ஏனெனில் உண்மையான காதலுக்கு இனம், மதம் , மொழி என்பவற்றை தாண்டி மனங்களை மட்டுமே அவர்கள் நேசிக்கின்றனர்.

அவர்கள், சிங்களவர்கள், இவர்கள் தமிழர்கள் என்பதை தாண்டி நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்கின்ற உணர்வு கடந்த கால குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுடெண்ழுந்து சர்வாதிகாரமாக மக்களை ஆண்டவர்களை வீட்டுகளுக்குள் பதுங்கிக்கொள்ளவைத்த சம்பவமும் நம் நாட்டில் அரங்கேறியுள்ளது.

அதேபோலவே 2016 ஆண் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் இன, மத மொழி கடந்து இதயத்தைக் கொள்ளைகொண்ட காதல் ஓர் காதல் கதைதான் இது. தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள இளைஞன் யாழ் பல்கலைக்கு கற்கவந்தபோது தமிழ் யுவதி மீது காதலில் விழுகின்றார்.

தென்னிலங்கை இளஞருக்கு தமிழ் தெரியாது தமிழ் யுவதிக்கு சிங்களம் புரியாது . அவளுக்காக அவன் தமிழ் கற்றுக்கொள்கிறான். ஒரு நாள் நான் உன்னை காதலிக்கிறேன் என தமிழிலேயே தன் இதயத்தைத் திறந்து காட்டினான் அந்த சிங்கள இளைஞன்.

அதன் பின்னர் அவனும் அவளும் ஒருவாரம் பேசிக்கொள்ளவில்லை மீண்டும் ஒருவாரத்தின் பின்னர் இருவரும் பேசிக்கொண்டார்கள். அப்போது நான்உன்னை காதலிக்கிறேன் என்று மீண்டும் சொன்னான் அந்த இளைஞன். அவள் பதிலாக ஒரு புன்னகை மட்டுமே அவனுக்கு கிடைத்தது.

அந்த நட்பு ,அந்தக் காதல்,அந்த சிங்கள தமிழ் இளைஞர் யுவதிகளை கிடையிலான அந்தஉறவு தொடர்கிறது. ஒரு நாள் அவன் அவளுடன் பேசாமல் உறங்கச் சென்று விடுகிறான். திடீரென ஏதோ ஒரு உந்துதல் அதிகாலையில் கண் விழித்து அவர் கைபேசியை பார்க்கிறான். அங்கே அவள் அனுப்பிய குறுஞ்செய்தி,

அதிலே நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனாலும் எப்படியும் என் உறவினர்களுக்கு உன்னை பிடிக்காது. ஆனால் என் பெற்றோரை தாண்டி உன்னிடம் என்னால் வந்து விடவும் முடியாது.வீணாக உன் இதயத்தில் ஆசைகளை ஏற்படுத்திவிட எனக்கு பயமாகஇருக்கிறது என அவள் தனது ஆதங்கத்தை அனுப்பி இருந்தாள்.

இவ்வாறு ஆரம்பித்த அவருடைய காதல் படிப்படியாக வளர்ச்சி அடைந்து பல சவால்களுக்கு மத்தியில் அவர்களுடைய காதல் பயணிக்கிறது. இவர்கள் நட்பால் தொடர்ந்த கட்டுக்கதைகள்,அவதூறுகள், வதந்திகள் என அவருடைய காதலை பாதிப்படையச் செய்கிறது.

இந்த நிலையிலே நாக விகாரையின் படிக்கட்டுகளில் அமர்ந்து இருவரும் கைகோர்த்தபடி அழுகின்றனர். அதன் பின்னர் நாட்கள் செல்லசெல்ல சில ஆதரவுகள் பல எதிர்ப்புகள் என அத்தனையும் கடந்து 2023ஆம் ஆண்டு நான்காம் மாதம் 25ஆம் திகதி நண்பர்கள் உறவினர்கள் ஆதரவுடன் அந்தகாதல் கதை திருமணத்தில் முடிவடைகின்றது.

இந்த காதல் ஜோடியின் கதைதான் தென்னிலங்கை மக்களிடையேயும் இணையவாசிகளின் இதயத்தைக் கொள்ளை கொண்ட ஒரு நிகழ்வாக பதிவுசெய்யப்படுகிறது. தற்போது அந்த தென்னிலங்கை இளைஞர் தமிழ் மக்களுக்கு சிங்களமும் சிங்கள மக்களுக்கு தமிழும் படிப்பிக்கின்றாராம்.

சினிமாவில் மட்டுமே இப்படியான சம்பவங்களை நாம் பார்த்து மகிழ்ந்திருப்போம். பல சவால்களை தாண்டி இன்று தம்பதிகளாய் இணைந்துள்ள அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்தவர் கைது : 263 போத்தல் சீனிப் பாணி கைப்பற்றல்!!

வவுனியாவில் சீனிப்பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் இன்று (13.05.2023) காலை சுற்றிவளைத்துடன் அவரிடமிருந்து 263 போத்தல் சீனிப்பாணியினையும் கைப்பற்றியுள்ளனர்.

தேன் என சீனிப்பாணியினை விற்பனை செய்கின்றமை தொடர்பில் வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்களான தா.வாகீசன், த.சிவரஞ்சன், அ.விதுசன், ஞா.ஞானப்பிரதாப், ர.கிஷோஷான் ஆகியோர் வேப்பங்குளம் 8ம் ஒழுங்கை ஊர்மிளாகோட்டம் பகுதியிலுள்ள குறித்த வீட்டினை சுற்றிவளைத்தனர்.

இதன் போது குறித்த வீட்டில் விற்பனைக்கு தயாரான முறையில் காணப்பட்ட 263 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணியினை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியதுடன் சீனிப்பாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.

சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 263 போத்தல்களில் (750 மில்லிலீற்றர் போத்தல்) அடைக்கப்பட்ட சீனிப்பாணி பொருட்கள் என்பன வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபடுத்தப்பட்ட சமயத்தில் சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

வவுனியா நகரில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!!

வவுனியா நகர மத்தியில் இன்று (13.05.2023) மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் அதில் பயணித்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி உயிர்தப்பியிருந்தனர்.

ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த TVS சாம் ரக மோட்டார் சைக்கில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மித்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

அதில் பயணித்த கணவன், மனைவி, பிள்ளைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்பதுடன் தீப்பற்றிய மோட்டார் பொதுமக்களின் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளில் எரிந்து நாசமாகியுள்ளது.

மோட்டார் சைக்கிலில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 

காண்போரை கண்கலங்கவைத்த அப்பா மகள் பாசம்.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த வைரல் வீடியோ!!

இணையத்தில்..

திருமணத்துக்கு பின் மகளை பிரியமுடியாமல் தவிக்கும் தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சி பூரண வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர்.

முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும். தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.

பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.

மாதுளம்பழம் சாப்பிட்டு மயங்கிய ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

தென்காசியில்..

மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்கள் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியம் என்றாலும், சில தருணங்களில் உயிர் பலியையும் ஏற்படுத்துகின்றது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாலிக் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா அனீஸ், பாத்திமா என்ற தம்பதியினிரின் ஒன்றரை வயது மகன் முகமது அர்ஷத். குழந்தைக்கு மாதுளம் பழத்தினை சாப்பிட கொடுத்துள்ள நிலையில், சாப்பிட்ட குழந்தை திடீரென வாந்தி எடுத்ததுடன் மயங்கியுள்ளது.

மயங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சம்பவத்தினால் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

பொன்னியின் செல்வன் பார்க்க சென்ற இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!!

சென்னையில்..

சென்னை பொழிச்சலூர் கமிஷனர் காலனியில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 33 வயது ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 மகள்கள்.

கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் ஐஸ்வரியா சென்னையில் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மருத்துவரிடம் சிகிச்சையும், மன நல ஆலோசகரிடம் ஆலோசனையும் பெற்று வந்தார்.

பொன்னியின் செல்வன் 2 படம் வெளியான நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க 2 குழந்தைகளை அழைத்து சென்றார். தன் இரு குழந்தைகளிடம் பாத்ரூம் சென்று விட்டு வருவதாக கூறி விட்டு தியேட்டரை விட்டு வெளியே சென்றார்.

விறுவிறுவென உள்நாட்டு முனையம் வழியாக பன்னடுக்கு கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றார். அங்கு 4வது மாடிக்கு ஏறியவர் திடீரென கார் பார்க்கிங்கின் 4வது தளத்தில் இருந்து ஐஸ்வர்யா கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து விட்டார்.

அதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனுக்கு புருவத்தில் ஏற்பட்ட காயம்.. தையலுக்கு பதில் பெவிகுயிக் போட்டு ஒட்டிய மருத்துவமனை!!

தெலுங்கானாவில்..

காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் பெவிகுயிக்கை பூசி ஒட்டிய மருத்துவமனையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா.

விவசாயம் செய்து வரும் இவருக்கு பிரணவ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளார். இதில் பிரணவ்க்கு தலையில் அடிபட்டு புருவத்தில் தசை கிழிந்துள் ரத்தம் கொட்டியுள்ளது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அங்குள்ள ரெயின்போ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் ரத்தத்தை துடைத்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் பெவிகுயிக்கை பூசி ஒட்டியுள்ளனர்.

மகனின் காயத்தில் தையல் இல்லாமல் ஒட்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த பிரணவ்வின் தந்தை வம்சி தனது மகனை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார்.

அங்குள்ள மருத்துவர்களிடம் நடந்ததை கூறிய நிலையில், அவரின் காயத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காயத்தை பெவிகுயிக்காய் வைத்து ஒட்டியதை கண்டு பிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றவேண்டும் என்று வம்சியிடம் கூறியுள்ளனர். அதற்கு வம்சி ஒப்புக்கொண்டதும் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரின் காயத்தில் இருந்த பெவிகுயிக்கை மருத்துவர்கள் அகற்றினர்.

இதன் பின்னர் தன் மகனுக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை வம்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெயின்போ மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பளையில் 22 வயது யுவதி கொலை.. வாக்குமூலத்தின் அடிப்படையில் மீட்கப்பட்ட சடலம்!!

கம்பளையில்..

கம்பளையில் காணாமல் போயுள்ள 22 வயது யுவதி பாத்திமா முனவ்வராவினுடையது என கூறப்படும் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கம்பளையில் காணாமல் போயுள்ள 22 வயது யுவதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரது சடலத்தை தேடுவதற்கான நடவடிக்கை இன்று எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் அடையாளம் காட்டிய இடத்தில் கம்பளை நீதவான் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கம்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியொருவர் கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த யுவதியை கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் கைதான 24 வயது சந்தேகநபர் நேற்றைய தினம் வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.