சுற்றுலா சென்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

பதுளையில்..

பதுளை – கொஸ்லந்தை பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இளம் ஜோடி தங்கியிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி 23 வயதான தருஷி கவீஷா என்ற யுவதி உயிரிழந்திருந்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 23 வயதான தனுஷ்க என்ற இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், யுவதியின் மரணம் தொடர்பில் சாட்சியமளித்துள்ளார்.

நாங்கள் திருமணம் முடிக்கவில்லை. எனது காதலி மாத்தறை, குருநாகல் தாதியர் இல்லத்தில் கல்வி கற்று வருகின்றார்.நேற்று காலை குருநாகலிலிருந்து வந்து அப்புத்தளையில் உள்ள எனது நண்பரின் வீட்டிற்கு சென்று மதியம் மூன்று மணியளவில் மலைப்பகுதிக்கு சென்றோம்.

பிரதான வீதியில் இருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தோம். இரவு 10.30 மணியளவில் யானை வந்தது. சத்தம் இல்லாமல் கூடாரத்திற்குள் பதுங்கியிருந்தோம். யானை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

உடனே வந்து கூடாரத்தை யானை மிதித்து விட்டு சென்றது. நாங்கள் இருந்த பகுதியில் தொலைபேசிக்கு சிக்னல் இல்லை. நண்பருக்கு அழைப்பினை மேற்கொள்ள பலமுறை முயற்சித்தேன். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

கவீஷாவின் வயிற்றையும் நெஞ்சையும் பலமாக யானை மிதித்துவிட்டது. அவள் தண்ணீர் கேட்டு கஷ்டப்பட்டு பேசிக்கொண்டிருந்தாள்.எனது இடது கை உடைந்துவிட்டது. கையை குணப்படுத்த முடியுமா என்றும் கேட்டாள்.

இதன்பின்னர் மெதுவாக நகர்ந்து சென்று நண்பர்களுக்கு அழைப்பினை எடுத்தேன். சுமார் 11.59 மணியளவில், சிக்னல் கிடைத்ததும் யானை வருவதாக தெரிவித்தவுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் வந்து பார்த்த போது அவள் உயிரிழந்துவிட்டாள். யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

அடுத்த நாள் ( 12.05.2023) காலை 6:30 மணியளவில், கிராம மக்களும் 1990 களில் வந்தவர்களும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவள் என்னை விட்டுச்சென்றுவிட்டாள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் யுவதியை காட்டு யானை தாக்கியதில் நெஞ்சு மற்றும் வயிற்றில் பல இடங்களில் காயம் ஏற்பட்டமையினால் திடீர் மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்தியர் சானக ரொஷான் பத்திரன தெரிவித்துள்ளார்.

குறித்த ஜோடி நாட்டின் பல இடங்களுக்கு சென்று அந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதனால் பிரபல்யம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திருமணமாகி 2 மாதங்கள்… விபத்தில் பலியான இளம் தம்பதி!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி, திரிவானாகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்த ஓபாத பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களோயான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக இரத்தினபுரி மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

நேற்று காலை ஏழு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அவர்கள் இருவரும் இரத்தினபுரி திரிவானாகெட்டிய விகாரைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்தை முந்திச் செல்லச் முயன்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளுடன் மோதிய டிப்பர் வண்டியின் சாரதி 40 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள உடவல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

வவுனியாவில் இளம் குடும்ப பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் மீட்பு!!

வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் இன்று (13.05) காலை மீட்கப்பட்டுள்ளதாக பறையனாலங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கிராம மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த இரு சடலங்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் குடும்ப பெண் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் வாசல் பகுதியில் இடியன் துப்பாக்கி சூட்டு காயத்துடன் இளைஞர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் இடியன் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்பட்டுள்ளது.

சம்பவத்தில் நீலியாமோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பிள்ளை ஒன்றின் தாயாரான நியூட்டன் தர்சினி (வயது 26), சிவபாலன் சுஜாந்தன் (வயது 24) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பறையானாலங்குளம் பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!!

வவுனியாவில் நேற்று இரவு (12.05.2023) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்தானது வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியிலே நாயுடன் மோதுன்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மகாறம்பைக்குளத்தை சேர்ந்த டனுஜன் (வயது 20) என்ற இளைஞர் பலியாகியுள்ளார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இளம் ஜோடிக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி : பரிதாபமாக உயிரிழந்த யுவதி!!

கொஸ்லாந்தை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இரவுப் பொழுதை கழித்த இளம் ஜோடியை காட்டு யானை தாக்கியதில், யுவதி உயிரிழந்துள்ளார். 23 வயதான கவிசா இயூஜின் என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 23 வயதான தனுஷ்க மற்றும் இயூஜின் நாட்டின் பல இடங்களுக்கு சென்று அந்தக் காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருதால் பிரபலயம் அடைந்துள்ளனர்.

அவ்வாறு காணொளி ஒன்றை பதிவு செய்யும் நோக்கில் நேற்று மாலை 6.30 மணியளவில் உடதியலுமை பகுதிக்கு இந்த இளம் ஜோடி சென்றிருந்தது.

எனினும், இந்த பயணம் இயூஜினின் இறுதிப் பயணமாகவே அமைந்தது. காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம மக்கள் இன்று காலை சென்று பார்த்த போது தனுஷ்க மதுஷான் காயமடைந்த நிலையில் இருந்துள்ளார்.

மாத்தறை – கெக்கனதுர பகுதியை சேர்ந்த இவர் மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திருமணமாகி 2 மாதங்கள் : விபத்தில் பலியான இளம் தம்பதி!!

இரத்தினபுரி, திரிவானாகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்த ஓபாத பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களோயான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக இரத்தினபுரி மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இன்று காலை ஏழு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அவர்கள் இருவரும் இரத்தினபுரி திரிவானாகெட்டிய விகாரைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் தனியார் பஸ்ஸை முந்திச் செல்லச் முயன்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளுடன் மோதிய டிப்பர் வண்டியின் சாரதி 40 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள உடவல பொலிஸ் நிலையத்தில் சரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

வவுனியாவில் விதிமுறைகளை மீறி ஆடுகளை ஏற்றிச்சென்ற சந்தேக நபர் கைது : 54 ஆடுகள் மீட்பு!!

வவுனியாவில் விதிமுறைகளை மீறி ஆடுகளை 54 ஆடுகளை கூலர் ரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற சந்தேக நபரை பொலிஸார் நேற்றிரவு (11.05.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கல்கிசைக்கு விதிமுறைகளை மீறி ஆடுகள் ஏற்றிச்செல்வதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பதில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலமையிலான குழுவினர் தாண்டிக்குளம் பகுதியில் குறித்த வாகனத்தினை மறித்து சோதனைக்குட்படுத்தினர்.

இதன் போது விதிமுறைகளை மீறி 54 ஆடுகள் குறித்த கூலர் ரக வாகனத்தில் இருந்தமை உறுதி செய்யப்பட்டமையினையடுத்து குறித்த வாகனத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றமையுடன் வாகனத்தின் சாரதியான 42வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்து விளக்கமறியளலில் வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் போன யுவதி படுகொலை செய்யப்பட்டாரா.?

கம்பளையில்..

கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அப்பகுதி பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Fathima Munawwara என்ற இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரமடைந்துள்ள மொக்கா சூறாவளி.. மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மொக்கா..

மொக்கா சூறாவளியானது தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வடமேற்கு திசையை நோக்கி நகரவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

‘மொக்கா’ புயல் (14.05.2023) ஆம் திகதிக்குள் தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இந்த சூறாவளியானது அடுத்து வரும் 6 மணித்தியாலங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடாவின் மத்திய பிரதேசத்தை நோக்கி நகரும்.

இதன்பின்னர், படிப்படையாக திசையை மாற்றி நாளை மறுதினம் அளவில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியன்மாரை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாட்டில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு கூடுதல் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுகங்கை, களனி கங்கை, நில்வலா கங்கை மற்றும் கின் கங்கை என்பனவற்றின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த நீர்மட்ட உயர்வானது வெள்ள நிலைமையாக மாற்றமடையாது என நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் எஸ்.பீ.சீ சுகேஸ்வர தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு விடுமுறை… கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

விடுமுறை..

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இலங்கை தமிழ் இளைஞனுக்கு ஆயுள்தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

லண்டனில்..

மேற்கு லண்டனில் ஆப்கான் அகதியொருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் கடந்த 2021 ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி மேற்கு லண்டனில் சவுத்ஹாலில் உள்ள சாலையில் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயது ரிஷ்மீத் சிங் என்பவர் பூங்காவில் நண்பர்களுடன் இருந்த போது குறித்த இளைஞர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் இலங்கைத் தமிழரான 18 வயது வனுஷன் பாலகிருஷ்ணன் (Vanushan Balakrishnan) மற்றும் இல்யாஸ் சுலைமான் (Ilyas Suleiman) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, வனுஷன் பாலகிருஷ்ணனுக்கு 24 ஆண்டும், சுலைமானுக்கு 21 ஆண்டும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ரிஷ்மீத்தும் அவரது தாயாரும் பிரித்தானியாவில் தஞ்சம் கோரி இருந்தமை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை உயிரிழந்த ரிஷ்மித் சிங் சட்டவிரோத குழுக்களில் தொடர்புடையவர் அல்ல எனவும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் சிக்கிக்கொண்டதால், பரிதாபமாக கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

யாழ்ப்பாண பகுதியில் கிணற்றில் சடலமாக காணப்பட்ட இளம் குடும்பப் பெண்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் (10-05-2023) இடம்பெற்றுள்ளது.

37 வயதான ஆர்.நியாளினி என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. உயிரிழந்த பெண் நேற்று முன்தினம் நித்திரைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவரது குடும்பத்தார் நேற்று காலை எழுந்து பார்த்த வேளை குறித்த பெண்ணை காணவில்லை. இந்த நிலையில் குடும்பத்தினர் குறித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து இன்றைய தினம் (11-05-2023) காலை வீட்டுக்கு அருகே உள்ள கிணறு ஒன்றில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதுதொடர்பில் உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் உடுவில் பிரதேச செயலகத்தில் கடந்த ஆறு மாத காலமாக காணி பிரிவில் கடமையாற்றி வருகின்றார் என அறிய முடிகின்றது.

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி.. பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

களுத்துறையில்..

களுத்துறையில் பாடசாலை மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊகங்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய பிரதான சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை வழங்கியமைக்காகவும் பொலிஸார் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். கடந்த (06.05.2023) ஆம் திகதி களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் புகையிரத பாதைக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவர் நிர்வாணமாக சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியெனவும் விசாரணையில் தெரியவந்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில், மாணவியுடன் ஹோட்டலுக்கு வந்ததாக கூறப்படும் இளைஞனும், மற்றுமொரு யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மாணவியுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

16 மாணவிகள் துஷ்பிரயோகம் : கணித ஆசிரியர் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!!

களுத்துறையில்..

களுத்துறையில் 16 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பிரதேசத்தை விட்டு ஓடி ஒளிந்திருந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். `

களுத்துறை வடக்கு காலி வீதியிலுள்ள இடமொன்றில் கணித ஆசிரியராக வகுப்புகளை நடாத்திய இவர், சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் போது அனைத்தையும் கைத்தொலைபேசியில் பதிவு செய்து மடிக்கணினியில் சேமித்து வைத்துள்ளார்.

இதனிடையே, ஆசிரியருக்கு தகாத தொடர்பு இருப்பதாக சந்தேகித்த அவரது சட்டத்தரணி மனைவி, களுத்துறை வடக்குப் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், சந்தேகநபரின் மடிக்கணினியை இரகசியமாகப் பரிசோதித்துள்ளார்.

இதன் போது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளைக் கண்டு, சிறுமிகளின் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த சம்பவம் முதன்முறையாக தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபரின் பதிவான காட்சிகளுக்குகமைய, 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெளிவாகத் தெரியவருவதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளைக் கண்டுபிடித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் குழுக்களாக வகுப்புகளை நடத்தியுள்ளார், மேலும் சம்பந்தப்பட்ட சிறுமிகள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்கள் என்பதைக் கண்டறிய பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக விசாரணையில், சந்தேகநபர் வகுப்புகளுக்குப் பிறகு மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனது காரில் ஏற்றிச் சென்று, காட்டுப் பகுதியில் உள்ள வெறிச்சோடிய பகுதிகளில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சில சிறுமிகளின் பெற்றோர் வீட்டில் இல்லாத போது, ​​ஆசிரியர், zoom தொழில்நுட்பம் மூலம் சிறுமிகளை தொடர்பு கொண்டு, சிறுமிகளை ஆடைகளை கழற்றச் சொல்லி, காட்சிகளை கூட பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிகளில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

வவுனியாவில் ஆசிரியரின் பெயரை எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவன்!!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11.05.2023) தற்கொலை செய்துள்ளார்.

கோவிற்குளம் இந்து கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

என் சாவிற்கு காரணம் வவுனியா இந்து கல்லூரி ஆசிரியர் சுரேன் என எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் மேலதிக விசாரணைக்காக குறித்த ஆசிரியரிடமும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா இ.போ.ச சாலையினர் பூவரசங்குளம் பொலிஸாருக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு போராட்டம் – பயணிகள் அவதி!!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி மற்றும் நடத்துனர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு எதிராகவும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று (12.05.2023) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பேரூந்து வழித்தட அனுமதிப்பத்திரமின்றி இ.போ.ச வவுனியா சாலை பேரூந்து நேரசூசியில் வவுனியா சாலம்பைக்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிச்செல்வது தொடர்பில்,

பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டும் பூவரசங்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாவில்லை எனவும் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை இடமாற்றக்கோரியும்,

இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனர்கள் மீது தனியார் பேரூந்தினர் தாக்குதல் மேற்கொள்ளப்படுவது தற்போது அதிகரித்து காணப்படுவதுடன் இதற்கு எவ்வித தீர்வுமின்றி நீதிமன்றில் பல வழக்குகள் தீர்வின்றி காணப்படுகின்றது.

எனவே ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் போன்ற இரு கோரிக்கைகளையும் முன்வைத்து இ.போ.ச வவுனியா சாலையினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இ.போ.ச வவுனியா சாலையின் பணிப்புறக்கணிப்பு காரணமாக அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், மக்கள் பேரூந்து இன்றி நீண்ட நேரம் காத்திருந்தமையும் காணக்கூடியதாகவிருந்தமையுடன் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டிருந்தன.