ஹோட்டல் அறைக்குள் நடந்தது என்ன? மாணவியின் மரணம் தொடர்பில் வெளியான வாக்குமூலம்!!

களுத்துறையில்…

களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை நடத்திய மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் இருந்த போது தனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், “இன்று வீட்டுக்கு சென்றால் கதை முடிந்துவிடும்” என்று கூறிவிட்டு ஓடி சென்று குதித்துவிட்டதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல பிரிவுகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர், சந்தேக நபர் குறித்த ஹோட்டலில் தங்கியிருப்பதாக தனியார் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வழங்கிய பணிப்புரையின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பல உத்திகளை கையாண்டுள்ளனர்.

அதற்கமைய, சந்தேக நபர் ஹிக்கடுவையில் இருந்து வாடகை அடிப்படையில் கார் ஒன்றைப் பெறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, பொலிஸார் ஒரு உளவாளியை நியமித்து வாடகைக்கு காரைக் கொடுத்துள்ளனர்.

அந்த கார் மூலம் காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​வீதித் தடையினால் வாகனம் நிறுத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டில் சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரும் படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் சில நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் நண்பர் மற்றும் அவரது காதலியின் உதவியுடன் குறித்த விடுதிக்கு பாடசாலை மாணவியுடன் சென்றதாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு யுவதியின் அடையாள அட்டையை காட்டி ஹோட்டலில் இரண்டு அறைகளை பெற்றுக்கொண்டதாகவும், அதன் பின்னர் நால்வரும் மது அருந்தியதாகவும் பிரதான சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது உயிரிழந்த மாணவியின் நண்பரும், காதலரும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர். போதையில் அமைதியின்றி நடந்து கொண்டதாகவும், பின்னர் மேல் மாடியில் இருந்து குதித்ததாகவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவரது வாக்குமூலங்கள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், சந்தேகநபர் ஏற்கனவே தெற்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி 48 மணி நேர காவலில் வைக்க உத்தரவிட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்மாவின் உடலை வெட்டாது மீட்டுத் தாருங்கள் : இலங்கை மகனின் உருக்கமான வேண்டுக்கோள்!!

குவைத்தில்..

குவைத் நாட்டில் பணிபுரிந்த 50 வயதுடைய பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து 2 வாரங்கள் கடந்துள்ள போதும், இதுவரை அவரது உடல் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தனது தாயாரின் உடலை வெட்டி பரிசோதனை செய்யாமல் பெற்று தருமாறு மகன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாத்தளை – உடஸ்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய தாய் கடந்த 07 வருடங்களாக குவைத் நாட்டில் பணியாற்றியதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு வருவதாக கூறியதுடன் அங்குள்ளவர்களிடம் வீடியோ போன் மூலம் பேசிவிட்டு, பின்னர் அவர் பணிபுரிந்த வீட்டில் உயிர்மாய்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், தனது தாயார் இறந்து 2 வாரங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் மகன் கவலை வெளியிட்டுள்ளார்.

ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் காதலன் தோல்வி.. ப்ளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியாகின. இந்தாண்டு பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்ததால் உற்சாகம் அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மாணவ, மாணவிகள் வெற்றியை கொண்டாடினர்.

இந்நிலையில், சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் டில்லி- சாந்தி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் நந்தினி (16), அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

மாணவி நந்தினி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தொங்குவதை பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்துசென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவி எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் என பெற்றோர், போலீசார் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது.

நீண்டநேர விசாரணைக்கு பிறகே மாணவியின் இறப்புக்கு காரணம் தெரியவந்தது. அதாவது, ஆவடி கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்த தேவா (17) என்பவர், பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் நேற்று விரக்தியில் தேவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர் தேவாவும், மாணவி நந்தினியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த நந்தினி,

அந்த விரக்தியில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் மாணவி நந்தினி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரே நாளில் 5 மாணவ மாணவிகள் எடுத்த விபரீத முடிவு!!

விழுப்புரத்தில்…தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தற்கொலைச் செய்து கொண்ட மாணவன், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால், தேர்ச்சியடைந்த பின்பும் தற்கொலைக்கு முயன்ற மாணவி என்று நேற்று தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் ப்ளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 5 மாணவ, மாணவிகள் தற்கொலைச் செய்து கொண்டு தங்கள் உயிரை போக்கிக் கொண்டனர்.

தோல்வி பயத்தால் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். சென்னை ஆவடியில் பாரதி நகரில் வசித்து வரும் கனகராஜ் மகன் 17 வயது தேவா.

இவர் ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்த தேவா, தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல் சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவில் வசித்து வரும் தனியார் பள்ளி மாணவி 17 வயது தாருண்யா ப்ளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தில் வசித்து வரும் 19 வயது ரமணி. ஏற்கனவே கடந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு தனித் தேர்வராக ஆங்கில தேர்வை எழுதினார்.

இதில் மீண்டும் தோல்வி அடைந்ததில் மனமுடைந்த மாணவி ரமணி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல் வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் 18 வயது அருந்ததி, 600க்கு 500 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என எதிர்பார்த்த நிலையில், 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.

இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை நாராயண குப்பம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயது ஹரி, 11ம் வகுப்பில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அதற்கும் தேர்வு எழுதி இருந்தார்.

இந்நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாக தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட ஹரி 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் 17 வயது சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர் . இவர் 5 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!!

களுத்துறையில்..

களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணிதம் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் ஆசிரியரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று மாலை (09.05.2023) வரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் மாணவிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது காரில் அழைத்துச் சென்று காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சூம் தொழில்நுட்பம் மூலம் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த இணைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் இல்லாத நேரத்தில் ஆடைகளை அகற்றுமாறு அச்சுறுத்தி, அவற்றை தனது கைத்தொலைபேசியிலும் அவர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தனது மடிக்கணினியில் அனைத்து காணொளிகளையும் சேமித்து வைத்திருந்ததை அவரது மனைவி கண்டுபிடித்து மாணவிகளின் பெற்றோருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பகுதி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் பிரிவு குற்றத்தடுப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை கடத்த வருவதாக கூறிய மகள் : புகைப்படத்தை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை!!

மினுவாங்கொடையில்..

மினுவாங்கொடையில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த மாணவியின் தாயார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தயார் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி எனது மகள் வீட்டில் இருந்தார். எனது மகளுக்கும் அவரை கடத்திச் சென்ற இளைஞருக்கும் முன்னதாக காதல் தொடர்பு காணப்பட்டது.

எமது வீட்டாரும், நானும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் இளைஞரின் வீட்டால் தொடர்ச்சியாக பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சம்பந்தத்தை எவ்வாறாவாது நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி எட்டாம் திகதி தீக்சன என்ற குறித்த இளைஞரின் அத்தை மற்றும் அத்தையின் மகள், மகன் ஆகியோர் மகளை கடத்திச் செல்ல வந்தனர். நான் அந்த நேரம் வெளிநாட்டில் வசித்தேன். இதன்போது மகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார்.

“அம்மா என்னை சிலர் கடத்த வருகின்றனர்” என தெரிவித்தார். வீட்டிலிருந்த பணிப்பெண்ணை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெல்லவாய செல்லுமாறு கூறினேன். வெல்லவாய வீட்டில் வசித்த நிலையிலேயே மகள் கடத்தப்பட்டுள்ளார்.

வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்ணையும் தாக்கி விட்டு மகளை கடத்திச் சென்றுள்ளனர். குறித்த இளைஞரின் வீட்டாருக்கு பல தடவைகள் நான் அறிவித்தேன். அதனையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

“நாங்கள் பணத்திற்காக மனித கொலை செய்பவர்கள். சட்டம் தொடர்பில் நாங்கள் நன்கு அறிவோம்” என அச்சுறுத்தினார்கள். மகளும் பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தி இந்த தொடர்பிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

எனது மகளை வீட்டுக் காவலிலேயே அவர்கள் வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய மகளை பார்த்தால் தகவல் வழங்குமாறு மகளின் புகைப்படத்தை வெளியிட்டு குறித்த தாய் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளார்.

இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

இலங்கையில்..

நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் (10.05.2023) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 647,706 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,850 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 182,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 167,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,000 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,950 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.

15 வயது சிறுமியின் கடத்தல் சம்பவத்தில் மூவர் கைது!!

மினுவாங்கொடையில்..

மினுவாங்கொடையில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள் நேற்றைய தினம் மினுவாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர், அவரின் தந்தை மற்றும் ஒரு பெண் கைது செய்யப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றின் பதில் நீதவானிடம் முன்னிலை படுத்திய போது அவர்கள் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி எனது மகள் வீட்டில் இருந்தார். எனது மகளுக்கும் அவரை கடத்திச் சென்ற இளைஞருக்கும் முன்னதாக காதல் தொடர்பு காணப்பட்டது.

எமது வீட்டாரும், நானும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் இளைஞரின் வீட்டால் தொடர்ச்சியாக பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சம்பந்தத்தை எவ்வாறாவாது நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி தீக்சன என்ற குறித்த இளைஞரின் அத்தை மற்றும் அத்தையின் மகள், மகன் ஆகியோர் மகளை கடத்திச் செல்ல வந்தனர். நான் அந்த நேரம் வெளிநாட்டில் வசித்தேன்.

இதன்போது மகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார். “அம்மா என்னை சிலர் கடத்த வருகின்றனர்” என தெரிவித்தார். வீட்டிலிருந்த பணிப்பெண்ணை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெல்லவாய செல்லுமாறு கூறினேன்.

வெல்லவாய வீட்டில் வசித்த நிலையிலேயே மகள் கடத்தப்பட்டுள்ளார். வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்ணையும் தாக்கி விட்டு மகளை கடத்திச் சென்றுள்ளனர். குறித்த இளைஞரின் வீட்டாருக்கு பல தடவைகள் நான் அறிவித்தேன். அதனையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

“நாங்கள் பணத்திற்காக மனித கொலை செய்பவர்கள். சட்டம் தொடர்பில் நாங்கள் நன்கு அறிவோம்” என அச்சுறுத்தினார்கள். மகளும் பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தி இந்த தொடர்பிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

எனது மகளை வீட்டுக் காவலிலேயே அவர்கள் வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய மகளை பார்த்தால் தகவல் வழங்குமாறு மகளின் புகைப்படத்தை வெளியிட்டு குறித்த தாய் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளார்.

களுத்துறை மாணவி உயிரிழப்பு : சந்தேக நபரின் அதிரவைக்கும் பின்னணி!!

களுத்துறையில்…

களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் நேற்று முன் தினம் (08.05) பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கைதாகியிருந்த நிலையில், சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தின் சந்தேக நபர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. களுத்துறை இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே மாணவியுடன் ஹோட்டலில் தங்கியிருந்தவர் ஆவார்.

சந்தேக நபரான தனுஷ்க கயான் சஹபந்து டிக்டொக் சமூகவலைத்தளமூடாக பிரபலமானவராவார். இந்நிலையில் டிக்டொக் சமூக வலைத்தளமூடாக பல மாணவிகள் சந்தேக நபருக்கு அறிமுகமாகியுள்ளனர்.

29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து மூன்று திருமண முடித்தவர் என கூறப்படும் நிலையில் , இவரது வலையில் விழுந்த பல மாணவிகள் அவருடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவது எத்தனை ஆபத்தானது என்பதை கண்டுகொள்வதில்லை.

சமூகவலைத்தளகளின் அறிமுகமில்லாத நபர்களுடன் இளம் பிராயத்தினர் தொடர்புகளை பேணி வருவதால் அவர்களது வாழ்வும் திசைமாறி செல்வதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகின்றது.

குறித்த நபருடன் நெருக்கமாக நின்று பல இளம் பெண்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேவேளை கழுத்துறையில் உயிரிழந்த மாணவி எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்றும், ஆண் நண்பர்களுடன் தனது மகள் பழகுவதில்லை எனவும் உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் சந்தேகநபருடன் பல மாணவிகள் நெருக்கமாக எடுத்துகொண்ட புகைபடங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்.. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

களுத்துறையில்..

களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

களுத்துறையில் மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை இன்றைய தினம் (10.05.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்றைய தினம் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது சிக்கியிருந்தார்.

இதனையடுத்து அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், “தன்னுடன் இருந்த போது குறித்த சிறுமிக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அத்துடன் தான் இன்று வீட்டிற்கு சென்றால் மாட்டிக் கொள்ள போவதாகவும் சிறுமி கூறியதாக” சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

என்ற போதும் சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால், பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

+2 தேர்வில் வரலாற்று சாதனை.. 600/600 மதிப்பெண் பெற்ற கூலி தொழிலாளியின் மகள்.. குவியும் பாராட்டுகள்!!

திண்டுக்கல்லில்..

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் நந்தினி 600/600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 – 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் அடங்குவர். தமிழ்நாட்டில் மொத்தம் 94% பேர் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

இந்த சூழலில் 6 பாடங்களிலும் 100-க்கு 100 என்று 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு உதவி பெரும் பள்ளியான அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சிறு வயதில் (LKG) இருந்து 12-ம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வரும் மாணவி நந்தினி படிப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார்.

இந்த வெற்றிக்கு காரணம் குறித்து மாணவி கூறுகையில், “கல்விதான் சொத்து என்றுகூறி என் பெற்றோர் என்னை வளர்த்தனர். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உந்துதலே என்னை சாதிக்க வைத்தது. நான் சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில் படித்து வருகிறேன்.

எனது பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, மரிய சாந்திராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆசிரியர்கள் தான் என்னை ஊக்கப்படுத்தினர்.

எனது வெற்றிக்கு உறுதுணையாக பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு பி.காம். சி.ஏ. படிக்க வேண்டும் என்று விருப்பம்” என்றார். மாணவி நந்தினியின் தந்தை ஒரு கூலி தொழிலாளி ஆவார்.

”எனது திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த வெற்றி”.. +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி ஸ்ரேயா நெகிழ்ச்சி.!!

தமிழ்நாட்டில்..

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.

மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்து மாணவர்கள் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது.

அதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் அடங்குவர்.

இந்த தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் 97.05% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பெற்றது. 96.61% பெற்று திருப்பூர் மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 95.96% பெற்று பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிதொழிலளியின் மகள் நந்தினி அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பபெண்கள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மேலும் தமிழ்ப்பாடத்தில் 2 மாணவிகள் 100க்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் தமிழ்ப் பாடத்தில் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிகவியல் 54, கணக்குப்பதிவியல் 58, கணினி பயன்பாடு 59 என மொத்தம் 337 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உட்படப் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய மாணவி ஸ்ரேயா, “தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எனது வெற்றிக்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. எனது திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த பெற்றி இது. திருநங்கைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். எனது உயர்கல்விக்கு அரசு உதவினால் நான்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்!!

நுவரெலியாவில்..

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டியிலிருந்து நுவரெலியாவிற்கு கோழி உரத்தை ஏற்றி சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் விழுந்துள்ளது.

இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர். எனினும் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பல வீதித்தடைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவியின் மர்ம மரணத்திற்கு மத்தியில் மற்றுமொரு இளம் மாணவி கடத்தல்!!

கம்பஹாவில்..

கம்பஹாவில் இளவயது மாணவி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கும் இளைஞருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும்,

சிறுமி அந்த உறவை முறித்துக் கொண்டதால் குறித்த இளைஞர் தொடர்ந்தும் அவரை மிரட்டி வந்துள்ளார். அதன் காரணமாக சிறுமியை மொனராகலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தநிலையில் குறித்த இளைஞர், சிறுமி தங்கவைக்கப்பட்டிருந்த உறவினரின் வீட்டுக்குச் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல்!!

இரத்தினக்கல்..

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கற்களின் உண்மையான மதிப்பு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. 200 மில்லியன் அமெரிக்க டொலர் என ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த இரத்தினக் கல்லின் பெறுமதி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 இலட்சம் ரூபா) எனத் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது தெரியவந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இரத்தினக் கொத்து என கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும், ஆனால் இது ஒரு தொல்பொருள் மதிப்பை மட்டுமே கொண்டுள்ளது என்றும் குழுவுக்கு வந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரத்தினக் கற்களுக்கு கிடைத்த விளம்பரத்தின்படி, உரிமையாளர் பத்து மில்லியன் டொலர்களை எதிர்பார்த்ததாகவும், விசாரணை நோக்கங்களுக்காக இரத்தினக் கொத்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல்போன கல்முனை மாணவன் கொழும்பில் மீட்பு : விசாரணை முன்னெடுப்பு!!

கொழும்பில்..

காணாமல்போன அம்பாறை- கல்முனை மாணவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள்.

துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு திங்கட்கிழமை மாலை சகோதரியினால் மீட்கப்பட்ட குறித்த காணாமல் சென்ற மாணவன் தற்போது பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கல்முனை தலைமையக பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் தரம்-10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய உடையார் வீதியைச் சேர்ந்த துஸ்யந்தன் டேவிட் தக்சிதன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோரினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(7) மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

காணாமல் சென்ற மாணவன் சக மாணவர்களிடம் பாடசாலையை விட்டு பிற்பகல் 1 மணியளவில் பிஸ்கட் வாங்குவதாக கூறி துவிச்சக்கரவண்டியுடன் வெளியேறி செல்வது சிசிடிவி கமரா காணொளிகளில் அவதானிக்கப்பட்ட நிலையில் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சமூக ஊடகங்களிலும் காணாமல் சென்ற மாணவன் தொடர்பான தகவலுடன் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் காணாமல் போன மாணவனது சகோதரி திங்கட்கிழமை மாலை கல்முனை பகுதிக்கு வருவதற்கு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கு சென்ற நிலையில் அங்கு தனது சகோதரன் தனிமையில் இருப்பதை உறுதிபடுத்தி உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய உறவினர்கள் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து மேலதிக விசாரணைக்காக கொழும்பு நோக்கி உறவினர்களுடன் கல்முனை தலைமையக பொலிஸார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.