களுத்துறை மாணவி உயிரிழப்பு : சந்தேக நபரின் அதிரவைக்கும் பின்னணி!!

களுத்துறையில்…

களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் நேற்று முன் தினம் (08.05) பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கைதாகியிருந்த நிலையில், சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தின் சந்தேக நபர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. களுத்துறை இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே மாணவியுடன் ஹோட்டலில் தங்கியிருந்தவர் ஆவார்.

சந்தேக நபரான தனுஷ்க கயான் சஹபந்து டிக்டொக் சமூகவலைத்தளமூடாக பிரபலமானவராவார். இந்நிலையில் டிக்டொக் சமூக வலைத்தளமூடாக பல மாணவிகள் சந்தேக நபருக்கு அறிமுகமாகியுள்ளனர்.

29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து மூன்று திருமண முடித்தவர் என கூறப்படும் நிலையில் , இவரது வலையில் விழுந்த பல மாணவிகள் அவருடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவது எத்தனை ஆபத்தானது என்பதை கண்டுகொள்வதில்லை.

சமூகவலைத்தளகளின் அறிமுகமில்லாத நபர்களுடன் இளம் பிராயத்தினர் தொடர்புகளை பேணி வருவதால் அவர்களது வாழ்வும் திசைமாறி செல்வதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகின்றது.

குறித்த நபருடன் நெருக்கமாக நின்று பல இளம் பெண்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேவேளை கழுத்துறையில் உயிரிழந்த மாணவி எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்றும், ஆண் நண்பர்களுடன் தனது மகள் பழகுவதில்லை எனவும் உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் சந்தேகநபருடன் பல மாணவிகள் நெருக்கமாக எடுத்துகொண்ட புகைபடங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்.. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

களுத்துறையில்..

களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

களுத்துறையில் மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை இன்றைய தினம் (10.05.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்றைய தினம் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது சிக்கியிருந்தார்.

இதனையடுத்து அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், “தன்னுடன் இருந்த போது குறித்த சிறுமிக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அத்துடன் தான் இன்று வீட்டிற்கு சென்றால் மாட்டிக் கொள்ள போவதாகவும் சிறுமி கூறியதாக” சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

என்ற போதும் சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால், பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

+2 தேர்வில் வரலாற்று சாதனை.. 600/600 மதிப்பெண் பெற்ற கூலி தொழிலாளியின் மகள்.. குவியும் பாராட்டுகள்!!

திண்டுக்கல்லில்..

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் நந்தினி 600/600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 – 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் அடங்குவர். தமிழ்நாட்டில் மொத்தம் 94% பேர் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

இந்த சூழலில் 6 பாடங்களிலும் 100-க்கு 100 என்று 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு உதவி பெரும் பள்ளியான அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சிறு வயதில் (LKG) இருந்து 12-ம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வரும் மாணவி நந்தினி படிப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார்.

இந்த வெற்றிக்கு காரணம் குறித்து மாணவி கூறுகையில், “கல்விதான் சொத்து என்றுகூறி என் பெற்றோர் என்னை வளர்த்தனர். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உந்துதலே என்னை சாதிக்க வைத்தது. நான் சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில் படித்து வருகிறேன்.

எனது பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, மரிய சாந்திராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆசிரியர்கள் தான் என்னை ஊக்கப்படுத்தினர்.

எனது வெற்றிக்கு உறுதுணையாக பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு பி.காம். சி.ஏ. படிக்க வேண்டும் என்று விருப்பம்” என்றார். மாணவி நந்தினியின் தந்தை ஒரு கூலி தொழிலாளி ஆவார்.

”எனது திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த வெற்றி”.. +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி ஸ்ரேயா நெகிழ்ச்சி.!!

தமிழ்நாட்டில்..

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.

மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்து மாணவர்கள் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது.

அதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் அடங்குவர்.

இந்த தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் 97.05% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பெற்றது. 96.61% பெற்று திருப்பூர் மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 95.96% பெற்று பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிதொழிலளியின் மகள் நந்தினி அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பபெண்கள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மேலும் தமிழ்ப்பாடத்தில் 2 மாணவிகள் 100க்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் தமிழ்ப் பாடத்தில் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிகவியல் 54, கணக்குப்பதிவியல் 58, கணினி பயன்பாடு 59 என மொத்தம் 337 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உட்படப் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய மாணவி ஸ்ரேயா, “தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எனது வெற்றிக்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. எனது திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த பெற்றி இது. திருநங்கைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். எனது உயர்கல்விக்கு அரசு உதவினால் நான்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்!!

நுவரெலியாவில்..

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டியிலிருந்து நுவரெலியாவிற்கு கோழி உரத்தை ஏற்றி சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் விழுந்துள்ளது.

இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர். எனினும் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பல வீதித்தடைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவியின் மர்ம மரணத்திற்கு மத்தியில் மற்றுமொரு இளம் மாணவி கடத்தல்!!

கம்பஹாவில்..

கம்பஹாவில் இளவயது மாணவி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கும் இளைஞருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும்,

சிறுமி அந்த உறவை முறித்துக் கொண்டதால் குறித்த இளைஞர் தொடர்ந்தும் அவரை மிரட்டி வந்துள்ளார். அதன் காரணமாக சிறுமியை மொனராகலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தநிலையில் குறித்த இளைஞர், சிறுமி தங்கவைக்கப்பட்டிருந்த உறவினரின் வீட்டுக்குச் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல்!!

இரத்தினக்கல்..

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கற்களின் உண்மையான மதிப்பு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. 200 மில்லியன் அமெரிக்க டொலர் என ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த இரத்தினக் கல்லின் பெறுமதி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 இலட்சம் ரூபா) எனத் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது தெரியவந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இரத்தினக் கொத்து என கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும், ஆனால் இது ஒரு தொல்பொருள் மதிப்பை மட்டுமே கொண்டுள்ளது என்றும் குழுவுக்கு வந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரத்தினக் கற்களுக்கு கிடைத்த விளம்பரத்தின்படி, உரிமையாளர் பத்து மில்லியன் டொலர்களை எதிர்பார்த்ததாகவும், விசாரணை நோக்கங்களுக்காக இரத்தினக் கொத்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல்போன கல்முனை மாணவன் கொழும்பில் மீட்பு : விசாரணை முன்னெடுப்பு!!

கொழும்பில்..

காணாமல்போன அம்பாறை- கல்முனை மாணவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள்.

துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு திங்கட்கிழமை மாலை சகோதரியினால் மீட்கப்பட்ட குறித்த காணாமல் சென்ற மாணவன் தற்போது பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கல்முனை தலைமையக பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் தரம்-10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய உடையார் வீதியைச் சேர்ந்த துஸ்யந்தன் டேவிட் தக்சிதன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோரினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(7) மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

காணாமல் சென்ற மாணவன் சக மாணவர்களிடம் பாடசாலையை விட்டு பிற்பகல் 1 மணியளவில் பிஸ்கட் வாங்குவதாக கூறி துவிச்சக்கரவண்டியுடன் வெளியேறி செல்வது சிசிடிவி கமரா காணொளிகளில் அவதானிக்கப்பட்ட நிலையில் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சமூக ஊடகங்களிலும் காணாமல் சென்ற மாணவன் தொடர்பான தகவலுடன் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் காணாமல் போன மாணவனது சகோதரி திங்கட்கிழமை மாலை கல்முனை பகுதிக்கு வருவதற்கு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கு சென்ற நிலையில் அங்கு தனது சகோதரன் தனிமையில் இருப்பதை உறுதிபடுத்தி உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய உறவினர்கள் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து மேலதிக விசாரணைக்காக கொழும்பு நோக்கி உறவினர்களுடன் கல்முனை தலைமையக பொலிஸார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாணவியின் மர்ம மரணம்.. பிரதான சந்தேகநபர் தொடர்பில் நாடாளுமன்றில் புதிய தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவியின் மர்ம மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் அரகலயவின்(போராட்டம்) களுத்துறை மாவட்ட பிரதான அமைப்பாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்றையதினம்(09.05.2023) நாடாளுமன்றத்தில் வைத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று காலை ஹிக்கடுவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது களுத்துறை தெற்கு பொலிஸ் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறந்த நாள் அன்று இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்.. கதறி அழுத நண்பர்கள்!!

சென்னையில்..

சென்னையில் தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சேவிகா. இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் சேவிகாவுக்கு இன்று பிறந்தநாள். இதனால் நேற்று இரவு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சேவிகாவின் தோழிகள் அவர்களது அறைக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து அவர் தி.நகரில் உள்ள தோழிகள் அறைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, ராபிடோ பைக்கில் வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை ஆனந்தன் என்பவர் ஓட்டியுள்ளார்.

இதையடுத்து இருசக்கர வாகனம் இன்று அதிகாலை அண்ணா சாலை காமராஜர் அரங்கம் அருகே வந்து அடையாளம் தெரியாத டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்த விபத்தில் ரேபிடோ ஒட்டுநர் ஆந்தன் மற்றும் சேவிகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சேவிகாகை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரேபிடோ ஓட்டுநர் ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்த நாள் அன்று சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த சில நாட்களில் சூறாவளிக்குச் சாத்தியம்.. மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில்..

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை படிப்படியாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைவதுடன், அடுத்த சில நாட்களில் சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான (08.05.2023) காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 – 35 கிலோ மீட்டர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 – 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்படும் இலங்கை பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஓமானில்..

ஓமானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணிப்பெண்களை காப்பாற்றி நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு தடுத்து வைக்கப்பட்டோர் உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர்.

இலங்கை முகவர்கள் ஊடாக ஒமானுக்கு பணிப்பெண்களாகச் சென்ற 75 பணிப் பெண்கள், அங்கு பணிபுரிந்து வந்த வீடுகளின் உரிமையாளர்களால் அடித்து மற்றும் நெருப்பால் சூடு வைத்தும் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் 9 மாதங்களாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் வெளியிட்ட காணொளி பதிவில் கூறியுள்ளதாவது, தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களை (சேவ் கவுஸ்) என்ற இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேலும், தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியாதளவிற்கு அடைத்து வைத்துள்ளனர். பலர் பல நோய்களினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றதுடன், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போல எங்களை நடத்துகின்றனர்.

இங்கு நடக்கும் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையிலுள்ளதுடன், இங்கிருந்து நாட்டுக்குச் செல்லுகின்ற பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் நாங்கள் உரையாடி அவரிடம் இதனை வெளியிடுமாறு தெரிவித்துக் கதைத்து அனுப்பியுள்ளோம்.

எனவே எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள் கைகூப்பி கேட்கின்றோம். என கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள காணொளியில் பதிவிட்டுள்ளனர்.

வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அடைப்பு – அகற்றுமாறு கட்டளை பிறப்பிப்பு!!

2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா கோவில்குளம் கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பட்டானிச்சூர் கமநலசேவை நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டானிச்சூர் புளியங்குளத்திற்குள் உள் நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதோத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83(1) இன் பிரகாரம் அடைக்கப்பட்டவர்களாலே சட்ட விரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்படுகின்றது.

அவர்களால் அகற்ற தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்,

அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர், அரசாங்க அதிபர், கொழும்பு கமநல திணைக்கள ஆணையாளர் நாயகம், பொலிஸ் அத்தியஸ்தகர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாவும்,

கட்டிடங்கள் அனுமதி வழங்காமல் இருப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வவுனியா நகரசபை செயலாளருக்கும், பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வவுனியா பொலிஸ் நிலை பொருப்பதிகாரிக்கும்,

குறித்த வேலியினை அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கமநல சேவை நிலையம் கோவிற்குளத்திற்கும் , பட்டானிச்சூர்புளியங்குளம் கிராம சேவையாளருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.

கடன் வாங்கி விட்டு காணாமல்போன காதல் கணவர்… மன உளைச்சலில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

கோவிலம்பாக்கத்தில் காதல் கணவர் வாங்கிய கடனை கேட்டு வந்த தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகரை சேர்ந்த கோபியும், சிந்துஜாவும் காதலித்து பெற்றோர் சம்மத்துடன் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.

கோபி ஆடிட்டராக பணிபுரிந்து வருவதாகவும், இதற்கு முன்பு பலரிடம் கடன் பெற்று அரிசி மண்டி, டூவீலர் ஷோரூம், எண்ணை கடை , ஏலச்சீட்டு போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதில் அதிகளவு நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபிக்கு கடன் தொல்லை அதிகரித்து குடும்பத்தில் நிம்மதியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேடவாக்கம் வடக்குப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் கோபி கடந்த 13ம் தேதி தனது மனைவி சிந்துஜாவை அழைத்துக் கொண்டு கோவிலம்பக்கத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டுவிட்டு ஆந்திரா செல்வதாக கூறி சென்றுள்ளார்.

தன்னிடம் கடன் பெற்றவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக கூறி சென்ற கோபி கடந்த 24ம் தேதி மனைவிக்கு போன் செய்துள்ளார். அதன் பின்னர் கோபியை தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோபிக்கு கடன் கொடுத்தவர்கள் சிந்துஜாவை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுக்கவே மனஉளைச்சலுக்கு ஆளான சிந்துஜா தனது மாமனார் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று சிந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபியைத் தேடி வருகின்றனர்.

அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை.. மணமேடையில் அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தங்கை!!

பீகாரில்..

அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை மணமேடையில் வைத்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி தங்கை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சப்ரா பகுதியில் முபராக்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ரிங்கு என்ற இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்கு வரண் பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரை வரணாக பார்த்துள்ளனர்.

மாப்பிள்ளை மாற்றும் பெண் வீட்டாருக்கு பிடித்து போகவே, ரிங்குவிற்கும் ராஜேஷிற்கும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அதன்படி திருமணம் கடந்த 2-ம் தேதி கோலாகலமாக நடைபெற இருந்தது.

மணமகனும் – மணமகளும் மணமேடைக்கு வந்து மாலையை மாற்றிக்கொண்டனர். அந்த சமயத்தில் திடீரென வந்த ரிங்குவின் தங்கையான புதுல், ராஜேஷை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.

இதனை கேட்டு இரு வீட்டாரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனர். மேலும் தனக்கு அவரை கட்டாயம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தங்கை அடம்பிடித்துள்ளார்.

அதற்கு பெண் வீட்டாரோ மாலையெல்லாம் மாற்றியாச்சு. எனவே அது முடியாது என்று எவ்வளவோ எடுத்து கூறியும் சமாதானம் செய்து வைக்க முயன்றனர்.ஆனால் தங்கை புதுலோ தனக்கும் ராஜேஷுக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து பிரச்னை மேலும் மேலும் அதிகரிக்கவே அக்கா ரிங்கு, ராஜேஷை விட்டு கொடுத்தார். இருப்பினும் இதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்னை பூதாகரமான நிலையில், போலீசார் அந்த இடத்துக்கு வந்தனர்.

அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் புதுல் படிக்க வெளியூருக்கு சென்ற சமயத்தில் ராஜேஷிடம் பழகியுள்ளார். இருவரும் மணி கணக்காக போனில் உரையாடி பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவருமே காதலித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை கேட்டு இருவீட்டாரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மாப்பிள்ளை ராஜேஷ், ரிங்குவிற்கு பதில் அவரது தங்கை புதுலின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

நண்பனின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய இளைஞன்.. கடனை திரும்ப கேட்டதால் நடந்த விபரீதம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலக்கடவு பகுதியில் சனல்- ஆதிரா (27) தம்பதி வசித்து வந்தனர். சனலின் நண்பர் அகில் (31) மற்றும் ஆதிரா இருவரும் அங்கமாலியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தனர்.

அகிலுக்கு பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் ஆதிரா பணம் மற்றும் நகை கொடுத்து உதவி வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல் பெரும் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக திரும்ப வழங்காததால் ஆதிரா, தான் கொடுத்த பணத்தை அகிலிடம் திருப்பி கேட்டு உள்ளார்.

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் பணம் கொடுக்காமல் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் வேலைக்கு சென்ற ஆதிராவை காணவில்லை என்பதால், அவரை கணவர் மற்றும் உறவினர்கள் தேடினார்கள்.

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனைவி ஆதிராவை கண்டுபிடித்து தரக்கோரி சனல் அங்கமாலி போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆதிராவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது ஆதிரா கடைசியாக அகிலுடன் பேசியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டனர். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 29ம் தேதி ஆதிராவை, அகில் காரில் அழைத்து சென்றதாக தெரிவித்தார்கள்.

தொடர்ந்து போலீசார் அகிலை தேடி வந்த நிலையில் நேற்று காலை அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகில் கூறியதாவது, ஆதிராவை நான் தான் கடத்திச் சென்று அதிரப்பள்ளி அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றேன். அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டேன், என தெரிவித்தார்.

மேலும் ஆதிரா தன்னிடம் கடனாக தந்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதால் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அதிரப்பள்ளி ஆற்றுக்கு சென்று ஆற்றின் கரையில் கிடந்த ஆதிராவின் கால் மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றினர்.

எனினும் சில பாகங்களை தேடி வருகிறார்கள். கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.