திருமணத்திற்கு தயாரான இளம் தம்பதி நீரில் அடித்து சென்று மாயம்

திருமணத்திற்கு தயாரான இளம்…

வெயாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இளம் காதலர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த இளம் காதலர்கள் நீராடச் சென்ற போதே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் திருமண பந்தத்தில் இணைய எதிர்பார்த்திருந்த 19 வயதுடைய இளம் காதலர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல் போன இளைஞன் வெயங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகவும், யுவதி குடாஓயா லபுதென்ன பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன காதலர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு – 25 பேர் மரணம் – வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு…

இந்த வருடத்தில் சுமார் 300,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகலாம் என மருத்துவ திணைக்களம் எச்சரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

ஒரு நோயாளி கண்டறியப்பட்டால், சமூகத்தில் மேலும் 10 நோயாளிகள் இருப்பதாக அனுமானித்துக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை 30,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் விஜேமுனி தெரிவித்தார்.

கொழும்பு நகர எல்லைக்குள் 1337 பேர் காய்ச்சலுடன் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1138 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இந்நோய் பரவும் தன்மை காணப்படுவதால் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் விசேட கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நிலவும் மூன்றாவது டெங்கு திரிபின் தீவிரத்தை தாங்கும் நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் இல்லை என்பதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்நோய்க்கு பலியாவதைத் தடுக்க முடியாது எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி…

களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாகொட பிரதேசத்தில் வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று முன்தினம் (06.05.2023) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்துள்ளமை சிசிடிவி காட்சி விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்றுமுன் தினம் மாலை 6.30 மணியளவில் குறித்த இடத்திற்கு வந்த குழுவினர் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக இருந்தமையினால் தனது நண்பியின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு அறைகளை முன்பதிவு செய்து ஒரே அறையிலிருந்து நால்வரும் மது அருந்தியதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்ததாக கூறப்படுகின்றது.

மசூதியில் நடத்தப்பட்ட இந்து திருமணம் : இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பாராட்டி பகிர்ந்த வீடியோ!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் மசூதியில் இந்து திருமணம் நடத்தப்பட்ட வீடியோவை, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதன் முன்னோட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மசூதியில் நடத்தப்பட்ட இந்து திருமணம்: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பாராட்டி பகிர்ந்த வீடியோ@twitter இந்த படம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துவது போல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பலரும் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ’காம்ரேட் ஃப்ரம் கேரளா’ என்ற ட்விட்டர் பக்கத்தில், மசூதியில் இந்து திருமணம் நடத்தப்படும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி’ என ட்விட் போட்டுள்ளனர்.

இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் ‘மனித குலத்தின் மீதான அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த ட்விட் இணையத்தில் வைரலாகியுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் இந்து முறைப்படி, ஒரு மசூதியில் திருமணம் நடத்தியிருப்பது அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலிருந்த குடும்பத்தை சேர்ந்த அந்த மணப்பெண்ணுக்கு, மசூதி நிர்வாகம் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்க பணம் கொடுத்துள்ளது.

ஏற்கனவே மத ரீதியான பல பிரச்சனைகள் உண்டாகியிருக்கும் நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏர். ஆர் .ரகுமான் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டகிராம் காதலனுடன் பைக் ரேஸ்.. விபத்தில் காதலி பலி : சாலையிலேயே போட்டு விட்டு தப்பியோடிய காதலன்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் விஜூ. 19 வயதான இவர் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. இவர் ஹை எண்ட் மாடல் பைக் ஒன்றை வைத்து இருக்கிறார்.

இஸ்டாவில் பைக்கை வைத்து அடிக்கடி போட்டோ போடும் இவருக்கு கஞ்சா பழக்கம் தொடங்கி பல போதை பொருள் பழக்கங்கள் இருக்கின்றன. இவர் போடும் பைக் போட்டோக்களை பார்த்து மணவாளக்குறிச்சியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி உள்ளார்.

இவர்கள் அடிக்கடி இன்ஸ்ட்டாவில் பேசி நட்பாகி உள்ளனர். அதன்பின் இவர்கள் காதலிக்கவும் தொடங்கி உள்ளனர். இதையடுத்து அடிக்கடி இவர்கள் நேரில் சந்தித்து வெளியே சுற்ற தொடங்கி உள்ளனர். இவர்கள் சந்திக்கும் போதெல்லாம் பைக்கில் வேகமாக செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர்.

அடிக்கடி கஞ்சா போதையில் இவர் பைக் ஓட்டி வந்துள்ளார். அவரின் காதலியும்.. நான் திருத்துவேன் என்று நம்பிக்கையாக அவருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த விஷயம் ஒரு நாள் அந்த மாணவியின் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.

அதற்கு மாணவி.. நான் காதலிக்க வேண்டாம் என்று சொன்னால் அவன் என் மீது ஆசிட் அடிப்பான். அதனால் நான் சொல்ல மாட்டேன் என்று கூறி உள்ளார். இதற்கு விஜூவை நேரில் அழைத்து வந்து அந்த மாணவியின் அம்மா கண்டித்து உள்ளார்.

இதை கேட்டுக்கொண்டது போல நடித்த விஜூ மறுநாளே மாணவியின் பள்ளிக்கு சென்று அவரை பிக் அப் செய்துவிட்டு பின்னர் லேட்டாக வீட்டிற்கு வந்து விட்டுள்ளார். இவர்களின் காதல் அந்த மாணவியின் அம்மாவின் அனுமதியை மீறி இப்படியே தொடர்ந்து உள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மாணவியை திடீரென பைக்கில் அழைத்துக்கொண்டு விஜூ சென்றுள்ளார் .குளச்சல் மேற்கு கடற்கரை சாலை பகுதியில் மிக வேகமாக விஜூ சென்றுள்ளார். 120 கிமீக்கும் அதிக வேகத்தில் இவர் பைக் ஓட்டி உள்ளார்.

இவர் கடுமையான கஞ்சா போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அப்போது கட்டுப்பாட்டை இழந்தவர் சாலை தடுப்பில் மோதி பறந்து இருக்கிறார். பின்னால் இருந்த காதலி சாலை தடுப்பில் இருந்த கம்பியில் படார் என்று மோதி உள்ளார்.

இதில் சம்பவ இடத்தில் அவரின் காதலி உயிருக்கு போராடி உள்ளார். ஆனால் அவரை கண்டுகொள்ளாதது போல.. அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக எஸ்கேப் ஆகி உள்ளார் விஜூ.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற விஜூ.. அங்கே தனது காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு ஏற்பட்டது விபத்து என்பதால் முறைப்படி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் முடிவில் போலீசார் எப்ஐஆர் பதவி செய்தனர்.

இன்னொரு பக்கம் நெடுஞ்சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மாணவியை அப்பகுதி மக்கள் காப்பாற்றி குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து இரண்டு விபத்தும் ஒரே இடத்தில் நடந்ததை வைத்து விஜூவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது. இதையடுத்து விஜூ மீது விபத்து ஏற்படுத்துதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இயற்கை உபாதைக்காக சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

மருதூரில்..

மருதூரில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பள்ளி மாணவி விரைவு ரயில் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவரது மகள் கனிமொழி வயது 15. இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

தற்போது பள்ளி விடுமுறைக்காக தனது கிராமத்திற்கு வந்துள்ளார். பள்ளி மாணவி கனிமொழி இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில்வே பாதையில் சென்றபோது சென்னையில் இருந்து மங்களூர் சென்ற விரைவு ரயில் மோதியதில் பள்ளி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலன் வெளியிட்ட புகைப்படத்தால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்..

இந்தியாவில் காதலன் தன்னுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் 22 வயதான ஆதிரா. இவர் அதே பகுதியை சேர்ந்த அருண் வித்யாதர் என்பவரை காதலித்தார். 2 ஆண்டுகளாக காதலித்த இவர்கள் பல இடங்களுக்கு சென்று நெருக்கமாக சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

அண்மையில் இருவரும் பிரிந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அருண் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆதிரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆதிராவின் பெற்றோர் கொடுத்த புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு மீண்டும் காத்திருக்கும் பாரிய நெருக்கடி.. பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில்…

எதிர்காலத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி 567 ரூபாவாக குறையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான இலங்கை ரூபாவின் பெறுமதியை ஒப்பிடும்போது, ​​2022 ஆம் ஆண்டில் 1000 ரூபாவின் பெறுமதி 2028 ஆம் ஆண்டு அளவில் 567 ரூபாவாக குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டு ஒருவரின் வருமானத்தை 43 சதவீதம் அதிகரிக்காமல் இந்த நிலையை எதிர்கொள்ள முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், இவ்வாறு வருமானத்தை பெருக்குவது ஒருபோதும் சாத்தியமில்லை எனவும், இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இக் காலகட்டத்தில் 119% வரிச்சுமையை மக்கள் மீது திணிக்க அரசு திட்டமிட்டுள்ளதால் நிலைமை மேலும் மோசமாகும். 2023 ஆம் ஆண்டு 27,871 பில்லியன் ரூபாவாக இருந்த வரிச்சுமை 2028ஆம் ஆண்டில் 44,601 பில்லியன் ரூபாவாக உயரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையைச் சமாளிக்க, ஒருவரது உணவு நுகர்வு அளவை பாதியாகக் குறைக்க வேண்டும். இது நடந்தால், பெரும்பாலான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பார்கள் என அவர் எச்சரித்தார்.

இந்த பேரிடரில் இருந்து மக்களை மீட்பதற்கு அரசு அதிக முயற்சியையும் கூடுதல் செலவையும் செய்ய வேண்டியிருக்கும். நாட்டின் தற்போதைய பொருளாதாரம் 3 – 4 சதவீதம் வரை சுருங்கி வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது கடினம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்படவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்… ஜனாதிபதியின் தீர்மானம் வெளியானது!!

அரச ஊழியர்களின் சம்பளம்..

இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நாம் தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு இறுதி காலாண்டில் சம்பள உயர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

அதனால்தான் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசாங்கம் எதிர்ப்பார்க்கும் இலக்கை எட்ட முடியுமானால் அரச ஊழியர்களுக்கும் அதன் நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. காலநிலை தொடர்பான அவசர அறிவிப்பு!!

வங்காள விரிகுடாவில்..

தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை சுற்றி கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கடல் கொந்தளிப்பு நிலை அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் சூறாவளியாக மாறும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, 5 – 10 வடக்கு அட்சரேகைகள், 90 – 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 1 – 4 வடக்கு அட்சரேகைகள், 85 – 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களுக்கு பயணிக்க வேண்டாம் என மீனவ மற்றும் கடற் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை உடனடியாக நிலம் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆட்டுக்குட்டிகளை காப்பாற்ற தன் உயிரை விட்ட மாணவன்.. யாழில் இடம்பெற்ற சோகம்!!

யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை பகுதியில் மின்சாரம் தாக்கி கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் (07.05.2023) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 18 வயதான கண்ணதாசன் இராகுலன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

வீட்டில் வளர்க்கப்படும் ஆடொன்று குட்டி ஈன்றதனால், குறித்த மாணவர் அதனை வேறோர் இடத்துக்கு மாற்ற முற்பட்டுள்ளார்.

அப்போது அருகில் இருந்த பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழியில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் மாணவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மழை பெய்துகொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு மின்சார தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பதுளையில் 12 வயது மாணவிக்கு நேர்ந்த கதி… ஆசிரியர் கைது!!

பதுளையில்..

பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் 12 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (06.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட மாணவி பாடசாலையின் கழிவறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வீராங்கனை நிகழ்த்திய சாதனை.!!

இலங்கை..

இலங்கை – பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கை வீராங்கனை5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

கடந்த 20 வருடங்களில் மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட் வீழ்த்தியமை இதுவே முதல் தடவை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 04.05.2023 அன்று எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 58 ஓட்டங்களால் வென்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவி சாமரி அத்தபத்து 60 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களைக் குவித்தார். ஹிர்ஷிதா சமரவிக்ரம 48 பந்துகளில் 45 ஓட்டங்களையும் கவீஷா தில்ஹாரி 15 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 29.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவி நிகார் சுல்தானா 51 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ஓஷதி ரணசிங்க 6 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட்களை வீழ்த்தியமை இது 3ஆவது தடவையாகும்.

ஓஷதி ரணசிங்க சிறப்பாட்டக்காரர் என்ற விருதையும் பெற்றுள்ளார். 2002ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் சுதர்ஷினி சிவானந்தன் 2 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

2003ஆம் மார்ச்சில், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக சந்தமாலி தோலவத்த 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதன்பின் 20 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கை சார்பில் ஓஷதி ரணசிங்க 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 3ஆவது போட்டி எஸ்எஸ்சி மைதானத்தில் இன்றைய தினம் (07.05.2023) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்களுக்கு நேர்ந்த கதி!!

கடற்கரையில்..

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரையில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் (06.05.2023 மாலை வீட்டிலிருந்து வகுப்புக்குச் செல்வதாகக் கூறி சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த 16 வயதான டானியல் றோகித் மற்றும் இருதயபுரத்தினை சேர்ந்த 16 வயதான நிரோசன் பிரவீன் ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் (06.05.2023) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்குச் செல்வதாகக் கூறி விட்டு கடற்பகுதியில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குப் பிரேதப் பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையப்படுத்தி விடுமுறை நாட்களில் வேலி அடைப்பு : பொலிசில் முறைப்பாடு!!

வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி தொடர்ந்தும் விடுமுறை நாட்களிலும், இரவு வேளைகளிலும் வேலி அடைக்கப்பட்டு வரும் நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் குருமன்காட்டுக்கு அண்மித்த மன்னார் வீதி ஓரமாகவுள்ள நீரேந்து பிரதேசத்தை ஆக்கிரமித்து குறித்த சில நபர்களால் தூண்கள் போடப்பட்டு கடந்த 30 ஆம் திகதி வேலி அடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து குறித்த வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

வெசாக் தினத்தை முன்னிட்டு அரச திணைக்களங்களுக்கு விடுமுறை விட்டுள்ள நிலையில் நேற்று (05.05) மாலை முதல் இரவிரவாக குறித்த பகுதியில் மேலும் குளத்து நீரேந்து பிரதேச நிலத்தை கையகப்படுத்தி வேலி அடைக்கப்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு விவசாய அமைப்புக்கள் கொண்டு சென்றதையடுத்து, அரச நிலத்தை அத்து மீறி கையகப்படுத்தி வேலி அடைத்தமைக்கு எதிராக கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சமட்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த நீரேந்து பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை அண்மித்தே குறித்த வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

 

வவுனியாவில் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு!!

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (06.05.2023) வவுனியாவில் இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் வவுனியா அலுவலகத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.