தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம்.. ஏன் தெரியுமா?

தவளை…

இந்தக் காலம் சம்மர் காலம் என்பதால் அடிக்கிற வெயிலைத் தணிப்பதற்கு பலரும் பல வழிகளை யோசித்து வந்தால் இந்தியாவில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

அடிக்கிற வெயிலை சமாளிக்க முடியாத மக்கள் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு, ஒடிசா, வங்காளம், அசாம் மாநிலங்களில் பாரம்பரிய முறைப்படி ஒரு மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கு நடக்கும் திருமணம் போல மேள தாளத்துடன் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.

நாடியாவில் உள்ள சாந்திபூர் ஹரிபூர் பஞ்சாயத்தின் சர்தார் பாரா பகுதியில் ஒரு பழங்கால வழக்கத்தின் படி தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தவளைகள் திருமண விழாவில் மந்திரங்கள் ஓதி அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என நம்பப்பட்டது. வெயில் இல்லாமல் நீர் நிலைகள் எல்லாம் வற்றிப் போய் விவசாயம் செய்யக் கூட தண்ணீர் இல்லாத நிலையில் மக்கள் பெரும் பாடு படுவதால் ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த ஊரில் உள்ள காளி கோவிலில் தான் இந்த வெகு விமர்சையாக இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஊர் மக்களின் நம்பிக்கையின் படி தவளைகள் கருவுறுதல் தான் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தவளைகள் தான் உலகத்தில் முதலில் தோன்றியதாகவும் அவை தண்ணீரில் முட்டையிட்டு பிறகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்து நிலத்திற்கு வந்து வாழ்க்கையை வாழ்கின்றனர். இதனால் தான் இந்த தவளைகளுக்கு திருமணம் செய்து மழைக்காக வேண்டி இருக்கிறார்கள்.

முதல் திருநங்கை பாடி பில்டர் விஷம் குடித்து தற்கொலை செய்த சோகம்!!

கேரளாவில்..

கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டர் என்ற பெருமையை பெற்றவர் பிரவீன்நாத். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பியான பிரவீனும் ரிஷானா ஐஷும் கடந்த காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் பிரிந்து செல்வதாக சில நாட்களுக்கு முன் சில இணைய ஊடகங்களில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து பிரவீன் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் பிரவீன். பிரவீன் சமூக வலைதளங்களில் தங்களுக்கு எதிரான தவறான பிரசாரங்களை மறுத்து பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணம் கேரளாவில் பேரும் அதிர்வையும், பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

பிரவீன்நாத் திருநங்கையாக இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில், பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். பூச்சி மருந்தை உட்கொண்ட ரிஷானா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷானா ஐஷு முன்னாள் மிஸ் மலபார் ஆவார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரவீன் மற்றும் அவரது மனைவி மீதான சமூக வலைதளங்கள் மூலம் வந்த செய்திகள் தற்கொலைக்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். பிரவீன்நாத்தின் தற்கொலை குறித்து திருநங்கைகள் இந்த மரணத்திற்கு ஆன்லைன் ஊடகங்களே காரணம் எனக்கூறி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி முதல் மந்திரி மற்றும் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.

300 கி.மீ வேகம்… இரண்டாக உடைந்த ஹெல்மெட் : சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல YOUTUBER!!

தமிழ்நாட்டில்..

அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் பிரபல யூடியூபர் அகஸ்தியா சவுகான் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த TTF வாசனைப் போன்று பலரும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி அதை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி அதிவேகமாக பைக் ஓட்டி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் அகஸ்தியா சவுகான். இவர் சூப்பர் பைக்குகளை அதிவேகமாக ஓட்டி அதைத் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இவரின் யூடியூப் பக்கத்தை 10 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அகஸ்தியா சவுகான் தனது கவாசாகி பைக்கில் யமுனா விரைவு சாலைவழியாக டெல்லிக்கு சென்று கொண்டிருந்தார்.

இவர் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த தடுப்பு மீது பைக் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர் பலத்த காயம் அடைந்துள்ளார். மேலும் அவரது ஹெல்மெட் இரண்டாக உடைந்துள்ளது.

இந்த விபத்து பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி அகஸ்தியா சவுகான் உயிரிழந்தார். இவர் உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (20) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ப்ளஸ் டூ வரைபடித்துள்ள இவர் கடந்த இரண்டு மாதங்களாக மல்ல சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் .

நாள்தோறும் பேருந்துகளில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அவரின் தங்கையை அழைத்துக் கொண்டு பணிக்கு சென்று விட்டு, மாலையில் பேருந்து மூலம் வீடு திரும்பினார். அதற்காக ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பயணித்தார்.

பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம் தங்கையே பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அவர் நின்றபடி பயணித்தார். அப்போது பேருந்து படிக்கட்டின் அருகே அவர் நின்றதாக தெரிகிறது.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே சந்திர திரையரங்கு வளைவில் பேருந்து திரும்பிய போது, படியின் ஓரம் நின்றிருந்த கௌசல்யா, பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி தவறி கீழே விழுந்தார்.

பேருந்து வேகமாக சென்றபோது அவர் கீழே விழுந்ததால் அதே வேகத்தில் சாலையோரம் இருந்த கல்லில் கவுசல்யாவின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி தரையில் விழுந்த கவுசல்யாவின் இறுதி நிமிடங்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வெடுக்குநாறி ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் விஜயம்!!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலமையிலான குழுவினர் இன்று (06.05.2023) விஜயம் செய்துள்ளனர்.

வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலமையிலான குழுவினர் விஜயம் செய்து வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தையும், அதன் சூழவுள்ள பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர். இதன்போது, நெடுங்கேணி பொலிசார் மற்றும் சிங்கள மக்களும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம்.. விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!!

தாழமுக்கம்..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் இன்று (06.05.2023) மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு உட்பட பல பிரதேசங்களில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக நீர்கொழும்பில் 31.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்தை வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மக்களை வினோத முறையில் ஏமாற்றும் நபர் : மோசடி குறித்து எச்சரிக்கை!!

இலங்கையில்…

இலங்கையில் மக்களை இலக்கு வைத்து இடம்பெறும் நூதன மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நபர் ஒருவர் நீண்ட காலமாக மக்களின் அனுதாபங்களை பெற்று தமக்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகிறார்.

சனநெரிசல் உள்ள பகுதிகள், வாகன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசியை திட்டமிட்டு கீழே கொட்டி விட்டு, அதனை அள்ளுவது போன்று நடித்து வருகிறார். இதனை பார்கும் மக்கள் ஏமாற்றம் அடைந்து அவர் மீது அனுதாபம் கொண்டு பெருந்தொகை பணத்தை வழங்குகின்றர்.

கடந்த காலங்களின் கொழும்பை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெற்று வந்தன. தற்போது நாட்டில் பல பகுதிகளுக்கு செல்லும் தொடருந்துகளில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை தெரிய வந்துள்ளது. இது குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கிய 13 வயதுச் சிறுமி : சகோதரன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

தலவாக்கலையில்..

முகத்துக்கு பூசம் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தரம் 08 இல் கல்வி கற்கும் 13 வயதாகிய அச் சிறுமி தூக்கில் தொங்கி தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தலவாக்கலை ட்றூப் தோட்டத்தில் நேற்று (05) மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போயா தினமாகிய நேற்று அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆகிய மூவரும் ஆலயத்திற்கு செல்ல தயாராகும் போது அண்ணன் பயன்படுத்தும் கிரீமை தங்கை பயன்படுத்தியுள்ளார்.

இதன் போது அண்ணன் தங்கையிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பாட்டியுடன் குறித்த மாணவன் ஆலயத்திற்கு செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள வருவதற்கு மறுத்துள்ளார்.

இதை அடுத்து பாட்டியும் மாணவனும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து கொண்ட ஆலயத்தில் வழங்கப்பட்ட ‌ அன்னதானத்தினை தங்கைக்கும் எடுத்துகொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அயலவர்கள் சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞன் மற்றும் பாட்டியும் வீட்டுக்கு வந்த பார்த்த போது தனது தங்கை தூக்கில் தொங்கி தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலவாகலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது எனது தங்கையிடம் அன்பாக இதனை கூறியதாகவும் இவ்வாறு செய்து கொள்ளுவார் என தனக்கு தெரியாது எனவும் எப்போதும் பேசுவது போல் பேசியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

இறந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் தாய் தந்தை கொழும்பில் தொழில் புரிவதாகவும் மாணவியும் , சகோதரரும் பாட்டியின் அரவணைப்பிலேயே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளையர்கள் – பெருந்தொகை தங்கம் மீட்பு!!

கொழும்பில்..

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் உட்பட கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கும்பலிடமிருந்து சிறியளவிலான போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி பொரளை கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிற்குள் புகுந்த கபர சுரேஷ் என்ற சந்தேக நபர், தங்கப் பொருட்களையும் பணத்தையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பண்டார மற்றும் மதுரங்க ஆகியோருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிருலப்பனை மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 42, 46 மற்றும் 53 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அம்மன் ஆலயம் ஒன்றை நோக்கி படையெடுக்கும் பெரும் திரளான பக்தர்கள்!!

கொழும்பில்..

கொழும்பு மாவட்டம் – பரடைஸ் பகுதியில் அமைந்துள்ள மகாகாளி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பெருமளவு குவிந்து வருகின்றனர்.

கொழும்பிலுள்ள பழமையான கோவில்களில் இந்த கோவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கான காரணம், வேறெந்த கோவில்களிலும் இல்லாத ஓர் சிறப்பு தன்மையும் சூழலும் அந்த கோவிலில் காணப்படுகின்றது.

இந்த கோவிலுக்கு ஒரு முறை செல்பவர்கள் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்றே எண்ணுவதாகவும், கேட்கும் வரங்கள் அனைத்து கிடைப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடவுள் கூறியதால் ஆசிரியை வேலையை விடுத்து ஆபாச நடிகையானேன்.. அதிர்ச்சியை கிளப்பிய பெண்!!

அமெரிக்காவில்..

கனவில் கடவுள் கூறியதால் ஆபாச நடிகையாக மாறியதாக முன்னாள் அமெரிக்க ஆசிரியை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரபல ஆபாச நடிகையாக அறியப்படுபவர் கர்ட்னி டில்லியா (35). இவர் கூறியுள்ள விடயம் தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது, கர்ட்னி டில்லியா இதற்கு முன்பு ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். ஆனால் ஆபாச நடிகையாக மாறுவதற்கு கடவுள் தான் காரணம் என பகீர் கிளப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் ஆபாச நடிகையாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அது ஒரு கனவு. நான் அப்போது ஆசிரியையாக இருந்தேன். ஆனால் கடவுள் வந்து என்னை ஆபாச நட்சத்திரமாக மாறுமாறு கூறினார். இன்று அவர் விருப்பப்படி இந்தத் தொழிலில் ஈடுபட்டு முழு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் கடவுளுடன் தொடர்பில் இருக்கிறேன். கடவுள் உலகளாவியர், எனவே கடவுளுடன் இணைவதற்கும், கடவுளின் செய்திகளைப் பெறுவதற்கும், அவரை புரிந்துகொள்வதற்கும் எந்த குறிப்பிட்ட மத அமைப்பும் தேவையில்லை’ என தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த கர்ட்னி டில்லியா மூன்று ஆபாச இணையதளங்களை நடத்தி வருகிறார். அவருக்கு 25,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெறும் வெசாக் கொண்டாட்டம் : பார்வையிட படையெடுக்கும் தமிழ் மக்கள்!!

வவுனியாவில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருவதுடன், அதனை பார்வையிட பெருமளவான தமிழ் மக்கள் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது.

வவுனியா மாவட்டத்தின் பிரதான வெசாக் கொண்டாட்ட நிகழ்வு கண்டி வீதியில் அமைந்துள்ள போதிதட்ஷணராமய விகாரையில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

இந்நிகழ்வை விசேட வழிபாட்டை தொடர்ந்து மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

விகாரையைச் சூளவும் ஏ9 வீதியிலும் புத்தரின் பல்வேறு வடிவங்களையும் போதனைகளையும் தாங்கிய வெளிச்சக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பெரும்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அதனை பார்வையிட்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியாவில் பல இடங்களிலும் வெசாக் கூடுகளும் பௌத்த கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதுபானம் கேட்டு அடம் பிடித்த மனைவி… ஆத்திரத்தில் கொன்று புதைத்த கணவன்!!

இந்தியாவில்..

இந்தியாவின் மூன்று பக்கமும் கடல் போல தமிழகத்தின் நான்கு பக்கமும் சாராய ஆறு ஓடும் அளவிற்கு டாஸ்மாக் வியாபாரம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மது விற்பனை சாதனைப் படைக்கும் அளவுக்கு டார்க்கெட் நிர்ணயம் செய்து திட்டமிட்டு வருகிறது அரசு.

இது ஏதோ தமிழகத்தில் மட்டும் நிகழ்கிற சம்பவமாக இல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களும் இப்படி ‘குடி’யின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில், சரக்கு வாங்கி தர சொல்லி தகராறு செய்து வந்ததால், ஆத்திரத்தில் இளம்பெண்ணை கணவன் அடித்து கொன்ற சம்பவம் கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மய்யா (25). இவரது மனைவி லட்சுமி (22). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மாந்தோப்பில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு தர்மய்யா தனது குழந்தையோடு சென்றார். அப்போது மனைவி லட்சுமி குறித்து தர்மய்யாவிடம் அவரது சகோதரி கேட்ட போது கடந்த 23- தேதி கோபத்தில் மனைவியை அடித்து கொன்று விட்டு, வேலைச் செய்து வந்த மாந்தோப்பிலேயே புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த தகவலை கரடிபுத்தூரில் உள்ள மற்றொரு மாந்தோப்பு காவலாளியான சுதா என்பவரிடம் தர்மய்யாவின் சகோதரி தெரிவித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில், கடந்த 27ம் தேதி பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி முன்னிலையில் லட்சுமியின் உடலை மாந்தோப்பில் இருந்து தோண்டி எடுத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தர்மய்யாவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திராவில் தர்மய்யாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கணவன்-மனைவி இருவருக்கும் குடி பழக்கம் இருந்ததாகவும், கடந்த 22ம் தேதி மனைவி லட்சுமிக்கு மது வாங்கி கொடுக்காததால் அவர் கோபத்தில் மறுநாள் சமைக்காமல் இருந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

தகராறில் ஆத்திரமடைந்த தர்மய்யா மண்வெட்டியால் மனைவி லட்சுமியை தாக்கினார். இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மனைவியை குழி தோண்டி புதைத்ததாக தர்மய்யா தெரிவித்தார். போலீசார் அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைந்தனர்.

வவுனியாவில் வெசாக் தினத்தை முன்னிட்டு 1000 பேருக்கு உணவு வழங்கிய பொலிசார்!!

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிசாரால் 1000 பேருக்கு உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது. வெசாக் தினமானது இன்றும் நாளையும் நாடு பூராகவும் பௌத்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் வெசாக் தினத்தில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தால் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் காத்தார் சின்னக்குளம் சிவில் பாதுகாப்பு அமைப்பு ஊடாக ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

ஏ9 வீதியால் பயணித்த பலரும் தமது வாகனங்களை நிறுத்தி உணவினைப் பெற்றுச் சென்றனர். வவுனியா தலைமை பொலிசிஸ் நிலையம் முன்பாக பௌத்த, இந்து மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன், இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமுதாய பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, காத்தார் சின்னக்குளம் கிராம அலுவலர், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், காத்தார் சின்னக்குளம் சமுதாய பொலிஸ் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

காவல் நிலையத்தில் கதறியழுத தாய்.. காதலனுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த மகள்!!

தமிழகத்தில்..

காதல் திருமணம் என்பது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகி வருகிறது. ஆனால் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வதால் பெற்றவர்களின் மனம் எத்தனை பாதிக்கப்படும் என்பதை பிள்ளைகள் யோசிப்பதே இல்லை.

இத்தனை நாள் வளர்த்த தாய், தந்தையை விட்டு ஒரு வருடம் கூட பழகிப் பார்க்காத ஒருத்தரை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பது வயது காலத்தில் இன்றைய இளைய சமூதாயம் அறிவதே இல்லை.

சரியான புரிதலும், திட்டமிடலும் இல்லாத திருமணம் நாளடைவில் சண்டையும், சச்சரவுமாகிப் போகும். பின்னர் கண்ணீர் வடித்து பிரயோசனமில்லை என்பதை பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை.

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பென்னாகரம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன். இவரது மகள் ஸ்ரீபவானி. இவர் அதே ஊரில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மாயமான நிலையில், பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன் நில்லாமல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தனர்.

அதன் பிறகு காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இவர்களின் மகள் ஸ்ரீபவானி, கார்த்திக்குடன் திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதில் கார்த்திக் திருமண வயதை எட்டாததால் பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிடித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கார்த்திக் திருமண வயதை எட்டாத நிலையில் அது குறித்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபவானியின் பெற்றோர் தங்கள் மகளைத் தங்களுடன் அனுப்பி வைக்கும்படி கதறி அழுதனர். அப்போது கார்த்திக் பெண்ணின் தாய் சுமதியின் கையை பலமாக தாக்கினார். இதனால் பெண்ணின் தாயாரின் கையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது.

அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் காவல் நிலையத்திலேயே மயக்கம் அடைந்து சுமதி கீழே விழுந்தார். சுமதியின் கணவர் அதாவது பெண்ணின் தந்தை சுந்தர்ராஜன் காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் கொடுத்தார். பின்னர் சுமதி 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

காதல் திருமணம் செய்த மகள் மீது மண்ணை அள்ளி வீசி தாய் சாபமிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

தாய் சோகத்தில் அரற்றிக் கொண்டிருந்த போது, அவரது மகள் ஸ்ரீபவானி, தனது காதல் கணவன் கார்த்திக்குடன் சிரித்தப்படியே பேசுகிற காட்சி, சினிமாவில் மட்டுமல்ல… நிஜத்திலும் அரங்கேறியது அங்கே கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காதலுக்கு கண்கள் இல்லை தான் போல!

ஏழு மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு.. கணவர் வீட்டு வாசலில் அடக்கம் செய்த உறவினர்கள்!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டி மேட்டுக்களம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (26) என்பவருக்கும், அதேபகுதியை சேர்ந்த நாகேஸ்வரி (22)என்ற பெண்ணுக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அரவிந்த் சென்னையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்ததால் நாகேஷ்வரி தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் நாகேஸ்வரி 7மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவருக்கு ஓரிரு நாட்களில் வளைகாப்பு நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இதற்காக அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

திருமணம் ஆனதிலிருந்து நாகேஸ்வரியிடம் அரவிந்த் மற்றும் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடிக்கடி நாகேஸ்வரி தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

மீண்டும் சமாதானம் பேசி கணவருடன் சேர்த்து வைத்திருந்தனர். தொடர்ச்சியாக அரவிந்த் மற்றும் அவரது தாய், தந்தை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, கர்ப்பிணி நாகேஷ்வரிக்கும் அவரது கணவர் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகேஷ்வரி, தனது கணவர் வீட்டில் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகேஸ்வரி விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரவிந்த் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம் நாகேஸ்வரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ஆனால் கர்ப்பிணியின் பெற்றோர், உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இது தற்கொலை அல்ல, அப்பெண்ணின் கணவர் வீட்டார் கொலைச் செய்து விட்டதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் நேற்று மாலை நாகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றோர், நேராக அன்னவாசல் அருகே உள்ள கணவர் அரவிந்த் வீட்டு வாசலில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே நாகேஸ்வரியின் தற்கொலைக்கு காரணமான அரவிந்த் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலையில் கீரனூர் அருகே குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் உரிய விசாரணை நடத்தி கர்ப்பிணி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.