விபத்தில் பரிதாபமாக பறிபோன குடும்பஸ்தரின் உயிர்!!

ஹபரனை – கொழும்பு வீதியில் நேற்று (04.05) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில், ஹபரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கிண்ணியா மாலிந்துறையை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது இஸாம் (வயது 43) என்ற குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்
உயிரிழந்தவரின் உறவினரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான செய்யது முஹம்மது முஹம்மது றியாஸ் (வயது 40) என்பவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டுக்கு தொழிலுக்கு செல்வதற்காக அக்குறுனை பகுதி உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சந்திக்க சென்றபோதே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வளைவு ஒன்றில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வானில் பறந்த சப்பாத்தி.. 7 மில்லியன் பார்வையாளர்களை சிலிர்க்க வைத்த காட்சி..!!

சாப்பாத்தி..

சாப்பாத்தி மாஸ்டர் ஒருவர் தான் தயார் செய்யும் சப்பாத்தியை வானில் பறக்கவிட்டு செய்யும் வித்தைக்காட்சி பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது. இன்று சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் ட்ரெண்டிங்காகி வருகின்றது.

நபர்களின் திறமைகள் தற்போது மிக எளிதாக இணையதளங்கள் மூலம் வெளிவந்து விடுகின்றது. இங்கு சப்பாத்தி மாஸ்டராக இருக்கும் நபர் ஒருவர் தனது திறமையினை வெளிக்காட்டி 7 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

குறித்த காட்சியில், இவர் தான் செய்த சப்பாத்தியை உயர பறக்கவிட்ட நிலையில், மீண்டும் பறந்து சென்ற வேகத்தில் தனது கைக்கு வந்துள்ளது. இக்காட்சி காண்பவர்களை நம்பமுடியாத அளவிற்கு நெகிழ வைத்துள்ளது.

தனது படிப்பிற்காக வேலைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

திருவள்ளூரில்..

குடும்ப வறுமை காரணமாக கல்லூரி படித்துக்கொண்டு பகுதி நேர வேலைக்கு சென்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (50). இவரது மகன் சதீஷ் (20).

இவர் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்துவந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாகவும், தனது செலவிற்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து பரிமாறும் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றில், சமையல் பணி செய்து கொண்டிருந்த சதீஷ் எதிர்பாராத விதமாக கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் விழுந்துள்ளார்.

உடல் முழுவதும் வெந்த நிலையில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் வெசாக் தினத்தை முன்னிட்டு 15 கைதிகள் விடுதலை!!

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகள் இன்று (05.05) விடுதலை செய்யப்பட்டனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதற்கமைவாக சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்ற காரணமாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை விடுவித்து வழிஅனுப்பி வைத்தனர்.

வவுனியாவில் தந்தையினை அவமானப்படுத்திய அதிபர் : தற்கொலைக்கு முயன்ற மாணவன்!!

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் தந்தையினை பாடசாலை அதிபர் அவமானப்படுத்தியதாக தெரிவித்து மாணவன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை தன்னை சந்திக்க வேண்டும் என கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தை கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காததுடன் தந்தையை கட்டாயம் தன்னை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தொலைபேசியின் ஊடாக மாணவனின் தந்தை அதிபரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். இதன் பின்னர் மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பூவரசங்குளம் பொலிஸில் அதிபர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இம் முறைப்பாட்டினை அடுத்து இரு பகுதியினரையும் பொலிஸார் அழைத்து பேசி விசாரணை நடத்தியதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே தன்னால் தந்தை அவமானப்படுவதை தாங்க முடியாமல் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவனின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் பாடசாலையில் மாணவனின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் 12 ஆம் திகதி குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்காக அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்படவுள்ளனர். அத்துடன் இச்சம்பவம் தொடர்பான வலயக்கல்விப் பணிப்பாளரும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே சமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த அதிபர் முன்னர் கடமையாற்றிய பாடசாலையில் மாணவி ஒருவருக்கு கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் வழங்க மறுத்தமையினால் அம் மாணவி தற்கொலை செய்து உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்து வருகின்றதா? விசேட வைத்திய நிபுணர்

நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் அளவுக்கு அதில் உண்மையில்லை. தொற்றாளர்கள் இனம் காணப்பட்டாலும் அது எச்சரிக்கையான நிலை என தெரிவிக்க முடியாது.

என்றாலும் கொவிட் தொற்று இன்னும் முழுமையாக உலகில் இருந்து நீங்கவில்லை என்பதால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று 2019இல் உலகளாவிய ரீதியில் பரவிய தொற்றுநாேயாகும். இது இன்னும் முற்றாக உலகில் இருந்து இல்லாமல்போகவில்லை.

என்றாலும் நாடு என்றவகையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். 2021 ஆரம்பத்தில் எமது நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் நாளாந்தம் 6ஆயிரம் பேர்வரை தொற்றுக்குள்ளாகி வந்தனர்.

என்றாலும் குறித்த வருட இறுதியாகும்போது அதனை 5பேர் வரை குறைத்துக்கொள்ள முடியுமாகியது. 2022 பெப்ரவரியாகும் நாளாந்தம் 20பேர் வரையே தொற்றுக்குள்ளாகி வந்தனர்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முறையாக மேற்கொண்டதாலே அதனை எமக்கு கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமாகியது.

அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 70வீதமானவர்கள் கொவிட் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டுள்ளனர்.

அதனால் கொவிட் மரணங்களையும் தற்போது எமக்கு குறைக்க முடியுமாகி இருந்தது. தற்போதும் வாரத்துக்கு இரண்டு அல்லது 3 கொவிட் மரணங்கள் இடமபெறும் நிலையே இருந்து வருகிறது. உலகளாவிய ரீதியில் பார்க்கும்போதும் கொவிட் எச்சரிக்கை இன்னும் முற்றாக நீங்கவில்லை.

என்றாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று கொவிட் தொற்றாளர்கள் இனம் காண்பது முற்றாக நீங்கவில்லை. எமது நாட்டிலும் ஒருசில மாதங்களில் காலநிலை மாற்றத்துக்கு ஏற்பட தொற்றாளர்கள் இனம் காணும் எண்ணிக்கை கூடும் குறையும் வகையில் இருக்கிறது.கடந்த இரண்டு வாரங்களில் 6,7 பேர்வரை தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர்.

என்றாலும் இது ஆபத்தான நிலை என தெரிவிக்க முடியாது. இருந்தபோதும் தொடர்ந்தும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி வரவேண்டும். குறிப்பாக இந்த காலப்பகுதியில் இருமல், தடிமல் நாேய் அதிகரித்து காணப்படுகிறது.

அதற்காக கொவிட் என தீர்மானிக்க முடியாது. இருந்தபோது சமுக பொறுப்பு என்றவகையில் இவ்வாறான நோயுடையவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ளல், சன நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ந்துகொள்ளவேண்டும் என்றே மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோன்று கொவிட் மரணம் கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்திருப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவ்வாறு எதுவும் இல்லை. சாதாரணமாக வேறு நோய்களுக்குள்ளாகி அவர்களுக்கு கொவிட் நிலையும் ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மரணங்களே இடம்பெற்றிருக்கின்றன.

அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் என வைத்தியசாலைகளிலில் அனுமதிக்கப்படும் நிலையும் இதுவரை அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்படவில்லை. அதனால் இது தொடர்பாக வீணாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை. என்றாலும் மக்கள் எப்போதும் சுகாதார வழிகாட்டில்களை பேணிவந்தால் இவ்வாறான நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் இந்திய முட்டைகள்

பல நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2 மில்லியன் முட்டைகள் இன்னும் தேவையான அனுமதியின்றி கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வக சோதனைகளுக்காக கையிருப்பில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பல நாட்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட போதிலும், திணைக்களம் இன்னும் அனுமதி வழங்கவில்லை என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முட்டைகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் பல விளைவுகளை ஏற்படுத்தும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து இதுவரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமான முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

விலைவாசி உயர்வு மற்றும் உள்ளூர் சந்தையில் முட்டை தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு முன் அனுமதியைப் பெறுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளிலிருந்து மாதிரிகளை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு தொடர்ந்து அனுப்புவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் போதுமான முட்டைகள் கிடைக்கும் வரை, அமைச்சரவையின் ஒப்புதலுடன் முட்டைகளை இறக்குமதி செய்வது தொடரும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு போதுமான அளவு எம்ஓபி மற்றும் யூரியா உரம் வழங்க தீர்மானம்!!

மியூரேட் ஒஃப் பொட்டாஷ் உரம் மற்றும் யூரியா உரங்களை போதிய அளவில் விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கிய உர மானியங்களை முன்னர் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்ய ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.

எனவே, யூரியா உரத்தை இந்த ஆண்டு பெரும்போகத்திற்கு விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பல அதிகாரிகளுக்கு இடமாற்றம்!!

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதேச செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள் உட்படப் பலருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ள இடமாற்றப் பட்டியலின்படி, சங்கானை பிரதேச செயலர் பி.பிரேமினி கிழக்கு மாகாண சபைக்கும், கிழக்கு மாகாண சபையில் பணியாற்றும் கே.உதயகுமார் சங்கானை பிரதேச செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகன், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராகவும், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபையில் பணியாற்றும் ந.இன்பராஜ் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் ந.திருலிங்கநாதன் வடக்கு மாகாண சபைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராகப் பணியாற்றும் சி.கிருஷ்நேந்திரன் வடக்கு மாகாண சபைக்கும், யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.”

திருகோணமலை நகரப் பிரதேச செயலர் பி.தனேஸ்வரன் ஊர்காவற்றுறை பிரதேச செயலராகவும், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் எஸ்.மஞ்சுளாதேவி திருகோணமலை நகரப் பிரதேச செயலராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

கரைச்சிப் பிரதேச செயலர் பி.ஜெயகரன் வடக்கு மாகாண சபைக்கும், வடக்கு மாகாண சபையில் பணியாற்றும் பற்றிக் டிறைஞன், கரைச்சிப் பிரதேச செயலராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த கொடுமை!!

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை யுவதி ஒருவர் பல்வேறு துன் புறுத்தல்களின் பின்னர் நேற்று (04.05.2023) நாடு திரும்பியுள்ளார்.

மஹியங்கனை, தம்பனை பகுதியை சேர்ந் 24 வயதுடைய ஸ்வர்ணா மல்காந்தி என்ற யுவதியே பல்வேறு கொடுமைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, அவர் தனது கிராமத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் சவூதி அரேபியா சென்று பணிப் பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் இன்று நாடு திரும்பிய ஸ்வர்ணா, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

”நான் அதிகாலையில் எழுந்து இரவு வரை வேலை செய்வேன். அந்த வீட்டுப் பெண் மிகவும் கண்டிப்பானவர். அவர் எப்போதும் விரைவாக வேலை செய்ய வேண்டும் என என்னிடம் கூறுவார்.”

”அந்த மேடம் என்னை அடிக்கடி அடிப்பார். எப்போதும் உ தைப்பார். என் தலைமுடியைப் பி டித்து இழுத்து தரையில் தள்ளிவிடுவார்.

கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் மேலும் இரண்டு வீடுகளில் நான் வேலை பார்க்க நேர்ந்தது. இதற்கிடையில், நான் மேடத்தின் அம்மா வீட்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

அப்போது அவரது சகோதரர் எனக்கு பல்வேறு து ன்புறுத் தல்கனைச் செய்தார். ஐந்து முறை நான் சுயநினைவை இழந்தேன். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் என்னிடமிருந்து தனது தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை!!

44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

123 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

மஹரகம, தம்ம மாவத்தையை சேர்ந்த துசித குமார சதரசிங்க என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மஹரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 123 கிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டார்.

அவரது முச்சக்கரவண்டியின் இரகசியப் பெட்டியில் இலத்திரனியல் தராசு மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

காதலியை படுகொலை செய்த காதலன் – கண்டியில் நடந்த கொடூரம்!!

கண்டி – பல்லேகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியை வெட்டிப் படுகொ லை செய்துவிட்டு காதலன் தப்பியோடியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் பல்லேகல காவல்துறை பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து – 23 பேர் மருத்துவமனையில்!!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம், கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று விடுதலையாகவுள்ள 988 கைதிகள்!!

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று (5) மற்றும் நாளை (6) இவ்வாறு சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கைதிகளின் உறவினர்கள் அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளை பொதிகளை கைதிகளுக்கு வழங்க முடியும் எனவும் சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2023 ஏப்ரலில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2,755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது மார்ச் 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு 2,694 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2.2வீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.

எனினும் இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியினது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இடமாற்று வசதியும் அடங்கியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொதிக்கும் ரசத்தில் விழுந்த மாணவன்… துடிதுடித்து பலியான சோகம்.!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சதீஷ் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.

சதீஷ் பகுதி நேர வேலையாக அவ்வப்போது கேட்டரிங் சர்வீஸ் பணிக்கு சென்று வந்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும் சிறிய தொகை மூலம் தனது செலவையும் அவர் சென்னையில் ஓட்டியுள்ளார்.

அந்த வகையில், கடந்த 23ஆம் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் தூக்கிச்சென்றார்.

அந்த பெரிய பாத்திரத்தை தூக்கிக்கொண்டு அவர் பின்னோக்கி நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவுக்கும் சதீஷ் நிலை தடுமாறி உள்ளே விழுந்தார்.

இதில் உடல் வெந்து அலறி துடித்த அவரை தொழிலாளர்கள் மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசம் அண்டாவுக்குள் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.