யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மாணவரான மகன் வர்த்தகரின் 3 லட்சம் ரூபா பணத்தை ஏரிஎம் இயந்திரம் மூலம் எடுத்து, சங்கிலி வாங்கி அயல் வீட்டு இளம் குடும்பப் பெண்ணிற்கு பரிசளித்த சம்பவம் பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது.
தனது வங்கி அட்டையிலிருந்து தனக்கு தெரியாது 3 லட்சம் ரூபா பணம் எடுக்கப்பட்டுள்ளதை அவரது போனில் வந்த குறுந்தகவல்களை பார்த்த வர்த்தகர் அதிர்ந்துள்ளார்.
அவர் வங்கி அட்டை மனைவியிடமே வர்த்தகர் கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் மனைவியிடம் கொடுக்கப்பட்ட அட்டையை மகன் எடுத்தே இந்த திருவிளையாடலை புரிந்துள்ளான்.
இதனையடுத்து வர்த்தகர் மனைவியிடம் விசாரணை நடத்தி அவருக்கு எதுவும் தெரியாது என சொல்ல பொலிசாரிடம் பணம் களவாடப்பட்டமை தொடர்பில் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து வங்கி சிசிரிவி கமராவைப் பரிசோதனை செய்த போது மகனே குறித்த பணத்தை எடுத்துள்ளதை பொலிசார் அறிந்துள்ளனர். மகன் பணம் எடுத்ததை பொலிசார் மூலம் அறிந்த வர்த்தகர் உடனடியாக தனது முறைப்பாட்டை ரத்து செய்ய முயன்றார்.
ஆனாலும் பொலிசார் சம்மதிக்காது குறித்த பணத்தை மகன் எடுத்து போதைப் பொருள் போன்ற நடவடிக்கைக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன் பின்னர் மகனிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பணத்தை அட்சயதிருதியை அன்று எடுத்து யாழில் நகைக் கடை ஒன்றில் தங்கச் சங்கிலி வாங்கியதாக கூறியுள்ளார். சங்கிலி எங்கே? என பொலிசார் விசாரணை செய்த போது அந்தச் சங்கிலியை அயல் வீட்டுப் பெண்ணிடம் இரவலாக கொடுத்ததாக கூறியுள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண்ணும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது தனது வீட்டுக்கு வரும் மாணவன் கழுத்தில் ஏன் ஒரு நகைகளும் அணிவதில்லை என கேட் பின் தனக்கு நகை வாங்கி தருவதாக கூறி சங்கிலியை தந்ததாக கூறியுள்ளார்.
அந்த சங்கிலியை வங்கி ஒன்றில் அடைவு வைத்து தனிநபர் ஒருவரின் கடனை கொடுத்தாக பெண் கூறினார். பெண்ணை கைது செய்யுமாறு வர்த்தகர் அழுத்தம் கொடுத்த போதும் குறித்த பெண்ணை கைது செய்யாது பொலிசார் விடுவித்துள்ளதாகத் தெரியவருகின்றது. அதேவேளை 27 வயதான இரு குழந்தைகளின் தாயாரான பெண்ணின் கணவர் மதுவுக்கு அடிமையானவர் எனவும் தெரியவருகின்றது.
பெண் ஒருவர் முகப்புத்தகம் வைத்திருப்பதால் அவருடைய திருமணம் குழம்பிப்போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞன் ஒருவனுக்கு திருமண தரகர் மூலம் பெண் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த மணமகன் வீட்டாரும் பெண்ணை பார்த்து பிடித்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
திருமணத்திற்கான திகதி எடுக்கப்பட்ட நிலையில் மணமகளின் பெயரில் முகப்புத்தகம் இருப்பது மணமகனுக்கு தெரியவர இவ்விடயம் குறித்து மணமகன் மணமகளிடம் கேட்டுள்ளார். மணமகளும் முகப்புத்தகம் பொழுது போக்கிற்காக வைத்துள்ளேன் எனப் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் மணகமன் தன் பெற்றோரிடம் குறித்த திருமணம் தனக்கு வேண்டாமெனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த திருமணம் நின்று போயுள்ளது. திருமணம் செய்யும் நிலைக்கு வந்தும் பேஸ்புக்கால் குறித்த திருமணம் குழம்பிபோயுள்ளது.
வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார்.
இதன் போது வயரியில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கைப்பட்டமையினையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் 29 வயதுமதிக்கத்தக்க நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால், உடலநல குறைவால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள பல்வேறு எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில், மிகவும் எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. எனினும் இந்த வாழ்க்கை ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இந்நிலையில் பீட்டர் பால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீர் என அவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ளது. பீட்டர் பால் ஒரு விஷுவல் எபெக்ட் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா Youtube சேனல் ஒன்று துவங்குவதற்கு பீட்டர் பாலின் உதவியை தேடி சென்ற போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, அது திருமணத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04) மதியம் இடம்பெற்றது.
வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் அமையத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தராக்கி சிவராமின் படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின் ஊடகவியலாளர் ந.கபிலநாத் மற்றும் வவுனியா ஊடக அமையத்தின் செயலாளர் கி.வசந்தரூபன் ஆகியோரினால் தராக்கி சிவராம் தொடர்பில் நினைவுரைகளும் இடம்பெற்றன.
இதன்போது, தராக்கி சிவராம் கொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை எனவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நீதியான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பாராளுமன்றம் ஊடாக அழுத்தம் கொடுக்க வேண்டும் ஊடகவியலாளர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.
அத்துடன், தற்போது நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் ஊடகவியலாளரின் செயற்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அறிகின்றோம். அதற்கு எதிராகவும் ஊடகவியலாளர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது. புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஊடகவியலாளர்கள் இதன்போது கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த ஏலாகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தாரா, தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
இதில் மூன்றாவது மகள் ஷீபா (24) குன்னவாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஷீபா பின்னர் வீடு திரும்பவில்லை.
எங்கு தேடிபார்த்தும், தோழிகளிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாயார் தாரா ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் வாலாஜாபாத் அடுத்த கோவல வீடு ஏரிக்கரை கால்வாயில் இளம் பெண் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரித்தபோது, அது காணாமல்போன இளம்பெண் ஷீபா என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பண்ருட்டி கிராமத்தை சேர்ந்த சாமுவேல் (25) என்ற இளைஞர்தான் காரணம் என்பது தெரியவந்தது. சொந்தமாக லாரி வைத்து ஒட்டி வந்த சாமுவேல்- ஷீபாவும் ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சாமுவேல் பெற்றோர்கள் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய பெண் பார்த்து வந்த நிலையில், இந்த விவகாரம் ஷிபாவுக்கு தெரியவந்தது. இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து ஷீபா வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் ஷீபாவை சாமுவேல் கொலை செய்துவிட்டு கோவலமேடு ஏரிக்கரை கால்வாயில் உடலை போட்டுவிட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சாமுவேலை ஒரகடம் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகள் விமானம் ஒன்றைக் கடத்தியபோது, துணிந்து நின்று பயணிகளைக் காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த இந்தியப் பெண்ணின் கதை இது. Neerja என்றொரு இந்தித் திரைப்படம் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது? அந்த திரைப்படம் உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
நீர்ஜா (Neerja Bhanot)க்கு 23ஆவது பிறந்தநாள் வருவதற்கு இரண்டு நாட்கள்தான் இருந்தன. Pan Am Flight 73 என்ற விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றிவந்தார் நீர்ஜா.
1986ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, அன்று பாம்பே என்று அழைக்கப்பட்ட மும்பையிலிருந்து, பாகிஸ்தானின் கராச்சி வழியாக அமெரிக்கா செல்லும் அந்த விமானத்தில் நீர்ஜா பணிப்பெண்ணாக பணியிலிருந்தபோது, கராச்சியில் இறங்கிய விமானத்திற்குள் 5 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தார்கள்.
அவர்களுடைய குறி அமெரிக்கர்கள். ஆகவே, தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்துவதற்காக, இந்திய அமெரிக்கரான ராஜேஷ் குமார் (29) என்பவரை சுட்டுக்கொன்றார்கள் தீவிரவாதிகள்.
விமானத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்கள் என்பதை இரகசியமாக விமானிகளுக்குத் தெரிவித்து, விமானம் புறப்படாமல் தடுத்துவிட்டார் நீர்ஜா. விமானிகள் தப்பியோடிவிட்டார்கள்.
விமானத்துக்குள் இருந்த அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்களை சேகரிக்குமாறு தீவிரவாதிகள் உத்தரவிட நீர்ஜாவும், Sunshine Vesuwala என்னும் பணிப்பெண்ணும், அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்களை ஒளித்துவைத்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தபோது 17 மணி நேரம் நீடித்த அந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தபோது, 22 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள், 120 பேர் வரை காயமடைந்திருந்தார்கள்.
நடந்தது என்னவென்றால், விமானிகள் தப்பியோடியிருக்க, விமானத்தில் விளக்குகள் பேட்டரியின் திறன் போதாமல் அணைய, தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுடத்துவங்கியுள்ளார்கள்.
அப்போது, நீர்ஜாவும் Sunshineம் பயணிகளை வெளியேற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளார்கள். ஆகவே, நீர்ஜாவை தீவிரவாதி ஒருவன் சுட்டுவிட்டான். சற்று நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார்.
ஆனாலும், ஏராளமானோரை காப்பாற்றியபின்னரே உயிரிழந்துள்ளார் நீர்ஜா. தப்பிக்க வாய்ப்பிருந்தும் பயணிகளைக் காப்பாற்ற உயிரை தியகாம் செய்த நீர்ஜாவுக்கு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் பல விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன.
எல்லாவற்றிற்கும் மேல், நீர்ஜாவால் காப்பாற்றப்பட்ட ஏழு வயது சிறுவன் ஒருவன், அவர் கொல்லப்பட்டதைப் பார்த்த அந்த குழந்தை, வளர்ந்து இப்போது பிரபல விமான நிறுவனம் ஒன்றில் விமானி ஆகியுள்ளார். நீர்ஜாவால்தான் தான் இப்போது உயிர் வாழ்வதாக தெரிவிக்கிறார் அந்த விமானி.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மாமனார், மாமியார் கொடுமையால் கர்ப்பிணி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நான்கு மாத கர்ப்பிணி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம்.
நம்மிடம் பேசியவர்கள், “சாத்தூரை அடுத்த மல்லைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மனைவி சோலையம்மாள். இந்தத் தம்பதியின் மகன் உத்தண்டுகாளை (வயது 35), கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக சாத்தூர் தாலுகா முதலிப்பட்டியைச் சேர்ந்த வர்ஷினி (22) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார்.
உத்தண்டுகாளை-வர்ஷினி தம்பதிக்கு அபிநயா என்ற 11-மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், வர்ஷினி இரண்டாம் முறையாக கர்ப்பமடைந்திருக்கிறார்.
நான்கு மாத கர்ப்பிணியான வர்ஷினியை மாமனார் கருப்பசாமி, மாமியார் சோலையம்மாள் இருவரும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் வர்ஷினி மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துவந்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று வீட்டில் தனியாக இருந்த வர்ஷினி தனது செல்போனில், “என்னுடைய மரணத்துக்கு மாமனார், மாமியார்தான் காரணம்” என ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வேலையில் கிடைத்த சிறிய இடைவேளை நேரத்தில் உத்தண்டுகாளை எதார்த்தமாக வர்ஷினியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பார்த்திருக்கிறார்.
மனைவியின் தற்கொலை குறித்தான ஸ்டேட்டஸ் பார்த்து அதிர்ந்துபோன அவர், வீட்டுக்கு விரைந்து வந்து கதவைத்தட்டி திறக்க முயன்றிருக்கிறார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் பதற்றமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்.
அப்போது வர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்த தகவல் அப்பையநாயக்கன்பட்டி காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று, வர்ஷினியின் உடலை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம்.
இது குறித்து வழக்கு பதிவுசெய்து, உத்தண்டுகாளை, கருப்பசாமி, சோலையம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். திருமணமாகி இரண்டாண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.
ஆசையாசையாய் எதிர்காலம் குறித்த கனவுகளோடு காத்திருந்த சசிகுமார், மன அழுத்தத்தில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார். தற்கொலைச் செய்வதற்கு முன்பாக காதலிக்கு, உருக்கமாக வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஆனாலும், இறப்புக்கு கூட காதலி உட்பட பெண் வீட்டார் யாருமே எட்டிப் பார்க்கவில்லை என்பதால், சசிகுமாரின் உறவினர்கள் கொந்தளித்து, தங்கள் மகனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தான் காதலித்து வந்த பெண்ணுடன் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், காதலியின் தாய் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதால், மனமுடைந்த காதலன், வாட்ஸ் அப்பில் காதலிக்கு உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
காதலிக்கு மெசேஜில் “நான் பிறந்திருக்கவே கூடாதுடா… நானே செத்து போய்டறேன் மா… நீ சந்தோசமா இரு” என தற்கொலைக்கு முன்பாக மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார்.
காதலியின் தாயாரிடம் செல்போனில் மூன்று முறைகள் பேசிய பின்னர் தான் அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளதால் போலீசார் இது குறித்து விசாரிக்க வேண்டுமென சசிகுமாரின் பெற்றோர் கூறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டப்ப நாயனப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் மாது. இவரது மகன் சசிகுமார். தனியார் செல்போன் விற்பனை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த சசிக்குமாருக்கு அதே கடையில் பணிபுரிந்த ஜோன் சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் காதலிக்க துவங்கினார்கள்.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால் இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும், மகனின் காதல் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த சசிகுமாரின் பெற்றோர், பெண் வீட்டாரிடம் பேசி சம்மதம் வாங்கினார்கள்.
அதே சந்தோஷத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்துள்ளது. தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், காதல் ஜோடிகள் சந்தோஷமாக சுற்றி திரிந்தனர்.
இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சசிகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கதறி அழுது துடித்தனர்.
‘இறப்பதற்கு முன் தனது மகன், காதலியின் தாயாரிடம் மூன்று முறைகள் போனில் பேசியுள்ளார். அதன் பிறகே தற்கொலைச் செய்து கொண்டார். அவனது இறப்புக்கு கூட காதலி உட்பட யாருமே வராதது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.
போலீசார் அவர்களிடம் விசாரித்து உண்மையைக் கொண்டு வர வேண்டும். கடந்த 3 வருடங்களாக பெண் வீட்டாரின் அனைத்து தேவைகளையும் என் மகன் தான் பார்த்துக் கொண்டான்’ என்று போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கி காயப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் காதலி என கூறப்படும் யுவதியுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் காதல் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகநபர் தவறாக புரிந்து கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு, மருதானை பிரதேசத்தில் மகன் தனது சொந்த வியாபாரத்தில் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமையால் தாயும் தந்தையும் அதிகளவு இன்சுலின் ஊசி செலுத்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி தம்பதியரின் மகளால் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தம்பதி பல ஆண்டுகளாக சீட்டு மூலம் பணம் மாற்றும் தொழில் செய்து வந்தனர். இரண்டு ரூபாயில் தொடங்கிய இவர்களின் தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கணவனுக்கு ஏற்பட்ட புற்று நோயினால் பணம் வசூலிக்கும் பொறுப்பு மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து பிள்ளைகளின் தாயான இவர், தனது மகன் ஒருவரை பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சூதாட்டத்திற்கு அதிக அடிமையான மகன், வியாபாரத்தில் கிடைத்த பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அவர்களின் சீட்டு தொழில் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பணம் வழங்கியவர்கள் அதனை கேட்கும் நிலை ஏற்பட்டது. பணம் கேட்டு வீட்டுக்கு வந்தவர்கள், தம்பதியிடம் கடும் வார்த்தைகளால் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மனவிரக்தி அடைந்த இருவரும் கடிதம் எழுதிவிட்டு அதிகளவான இன்சுலினை பயன்படுத்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளனர். இதனால் கணவர் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.எம்.சேனநாயக்க, உயிரிழந்தவர் அதிகளவு இன்சுலின் எடுத்துக் கொண்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் இன்றையதினம் பிரதிஸ்டை செய்யப்பட்டது.
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் கடந்த மாதம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து அழிக்கப்பட்டதுடன் சிலைகளும் களவாடப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆலயத்தில் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் ஏற்பாடுகள் பல தரப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் நீதிமன்ற வழக்கினை காரணம்காட்டி தொல்பொருட்திணைக்களம் மற்றும் பொலிசார் அதற்கு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த இருதினங்களிற்கு முன்னர் இடம்பெற்றிருந்ததுடன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு நீதின்றம் அனுமதி வழங்கியது.
உடைக்கப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் வைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. இதனையடுத்து இன்றையதினம் காலை சுபநேரத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தும் மீண்டும் வைக்கப்பட்டது.
பல சிரமங்களுக்கு மத்தியில் புதிய விக்கிரகங்கள் மலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஆலயத்தின் நிர்வாகத்தினர், பூசாரியார்,சமூக ஆர்வலர்கள், வேலன் சுவாமிகள், அகஸ்தியர் சுவாமிகள், அரசியல் தரப்பினர் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கனடா – ரொறன்ரோவில் ஆட்டிஸம் பாதித்த மாணவனின் தலை முடியை வெட்டிய சம்பவத்தில் பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவில் கிழக்கு யார்க்கில் உள்ள ஜார்ஜ் வெப்ஸ்டர் தொடக்கப் பாடசாலையில் 4ஆம் வகுப்பு மாணவனின் முடியையே வெட்டியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மாணவனுக்கு பிடித்தமான ஒன்று அவனது தலை முடி எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், கடந்த 4ம் திகதி (04-04-2023) பாடசாலை நேரத்தில் தொடர்புடைய மாணவனின் தலை முடியில் ஒட்டக்கூடிய, சிவப்பு நிறப் பொருள் காணப்பட்டதாகவும், அதை நீக்க தலை முடியை கத்தரிக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் பாடசாலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும், பெற்றோருடன் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு முறையானது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பாடசாலை அளித்த விளக்கம் ஏற்கும் வகையில் இல்லை எனவும், இனி அந்த பாடசாலையில் தமது மகனை அனுப்புவது பாதுகாப்பானதாக இருக்காது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதுவரையான சந்தர்ப்பங்களில் தமது மகன் ஒருமுறை கூட முடி கத்தரிக்கும் போது சகஜ நிலையில் இருந்ததில்லை எனவும், தங்களை அவன் எட்டித்தள்ளியிருப்பதையும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். அப்படியான சூழலில், பாடசாலை நிர்வாகம் அளித்துள்ள அந்த விளக்கம் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா குழுமாட்டுச் சந்தியில் இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து வீதியில் சென்றவரை மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழுமாட்டுச்சந்தியில் வீதியினை மாறமுற்பட்ட நபரை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மோதித்தள்ளியுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் சாரதியினை கைது செய்துள்ளமையுடன் பேரூந்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.