என்னை 57 வயது கிழவன் என்று தப்பு தப்பா பேசுறாங்க.. நடிகர் பப்லு உருக்கம்!!

பப்லு..

என்னை 57 வயது கிழவன் என்று என்னை தப்பு தப்பா பேசுறாங்க என்று நடிகர் பப்லு உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பப்லு என்ற பிரித்திவிராஜ்.

இவர் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்திருக்கிறார். பப்லு வானமே எல்லை, பாண்டிநாட்டு தங்கம், உட்பட பல படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 25 வயதில் அஹத் என்ற மகன் உள்ளார்.

தற்போது பப்லுவிற்கு 57 வயது ஆகிறது. ஆனால், பப்லு 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் இவர் இருவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் இருவரும் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு இவர்களை கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு சேனலுக்கு பப்லு பேட்டி கொடுக்கும்போது ரொம்ப உருக்கமாக பேசியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், என்னை வயசான ஒரு கிழவனாக்கி, அதை குறித்து எல்லா சேனல்களிலும் பேசுவார்கள்.

இந்த ட்ரோல் எல்லாம் எனக்கு பழக்கம். என் மனைவிக்கு அது ரொம்ப புதுசா இருந்தது. ரொம்ப சீக்கிரமா எங்கள் இருவருக்கும் என்ன புரிந்தது என்றால், ஒருத்தர் எங்களை குறித்து ஒரு தவறான கருத்து ரீல் பார்த்தோ அல்லது எங்கள் நடனத்தை பார்த்தோ எழுதினார்கள் என்றால் அது அவங்களுடைய மனநிலை.

சில பாதி கிளாஸில் தண்ணீர் இருந்தால், ஏன் பாதி கிளாஸில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்வார்கள். இதெல்லாம் அவருடைய கண்ணோட்டம் என்று உருக்கமாக பேசினார்.

மொட்டை மாடிக்கு துணி எடுக்கச் சென்ற பெண்.. மின்னல் தாக்கி உயிரிழப்பு!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு வீரசிவாஜி தெருவில் மோகன்தாஸ் – இளவரசி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

அந்த வகையில், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திடீரென மழை வந்ததால் மோகன்தாஸின் மனைவி இளவரசி தனது வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்த துணிகளை எடுக்கச்சென்றார்.

அவர் மொட்டை மாடிக்கு சென்று துணிகளை எடுத்துக்கொண்டிருக்கும்போதே, திடீரென பயங்கரமாக இடிவிழுந்தது. அதோடு மின்னல் தாக்கியதில் இளவரசி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிய மோகன்தாஸ் மயங்கி கிடந்த தனது மனைவி இளவரசியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு இளவரசியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். சம்பவம் குறித்து அறிந்த தாலுகா போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்… கதறி துடித்த பெற்றோர்!!

ஆந்திராவில்..

ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் அமைந்துள்ளது மேட்டவலசா என்ற கிராமம். இங்கு தம்பதி ஒருவருக்கு 18 மாத பெண் சாத்விகா குழந்தை இருந்துள்ளது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை (நேற்றைய முன்தினம்) இரவு நேரத்தில் பெற்றோர் உள்ளே இருக்க, குழந்தை சாத்விகா வீட்டின் வெளியே வந்துள்ளார்.

இதனை வீட்டில் யாரும் கவனிக்கவில்லை. வெளியே வந்த சிறுமி விளையாடி கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 5 தெரு நாய்கள் குழந்தையை சூழ்ந்து குரைத்துள்ளது.

இதில் குழந்தை அழ தொடங்கவே அந்த நாய்கள் ஒன்று சேர்ந்து குழந்தையை கடித்து இழுத்து குதறியுள்ளது. இதில் குழந்தை கத்தி அழவே உள்ளே இருந்த பெற்றோர் பதறி அடித்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது நாய்கள் குழந்தையை கடித்து குதறிக்கொண்டிருந்தது.

இதனை கண்டதும் பதறி போன பெற்றோர், நாய்களை துரத்தி விட்டு, குழந்தையை கையோடு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். இரவு நேரத்தில் அங்கே அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் உடலில் சுமார் 10-கும் மேற்பட்ட நாய் கடித்துள்ள தடங்கள் இருந்துள்ளது. குழந்தை இறந்த செய்தியை கேட்ட பெற்றோர் மருத்துவமனை வாசலிலே துடிதுடித்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே போல் பல சம்பவங்கள் நடந்துள்ளது. கேரளாவில் தெரு நாய்கள் கடித்து குதறி பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அண்மை காலமாக தெரு நாய்கள் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் இதே போல் தெரு நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொடூரமாகத் தாக்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட கர்நாடகாவில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுவனை, திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள் சிறுவனை கடித்து குதறியுள்ளது.

அந்த நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர், நாய்களை துரத்தி இரத்த வெள்ளத்தில் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு!!

தங்கம்..

நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் (26.04.2023) தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 644,166 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,730 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,840 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,890 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,150 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.

விருந்திற்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்.. பரிதாபமாக பலியான மாணவி!!

மாத்தறையில்..

மாத்தறையிலிருந்து காலி நோக்கி ஓடும் தொடருந்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாத்தறை, நுபே தொடருந்து கேட்டிற்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பெந்தோட்டகேவத்த என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேலும் மூன்று நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு தொடருந்து தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

சடலம் மாத்தறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் சோகத்தை ஏற்படுத்திய சகோதரர்களின் மரணம்.!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – வவுணிக்குளத்தில் நீராட சென்ற இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்றைய தினம் (26.04.2023) இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் யாழ். நல்லூர் யமுனா வீதி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சுரேஷ் (27) , ரவிச்சந்திரன் சுமன் (16) ஆகிய இரு சகோதரர்களுமே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து மரண வீடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நீராட சென்ற போது, குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய சகோதரர் நீராடிக்கொண்டிருக்கும்போது நீரில் அவர் தத்தளிப்பதைக் கண்டு, மூத்த சகோதரர் அவரை காப்பாற்ற முற்படும்போதே இருவரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பாரியளவு குறையப்போகும் தங்கத்தின் விலை.. வெளியான புதிய தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் தங்கத்தின் விலை குறைக்க தயாராக இருப்பதாக தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் வைத்து அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இறக்குமதி தடை செய்யப்பட்ட பொருட்களில் தங்கமும் ஒன்று. கடந்த ஐந்து வருடங்களாக தங்க இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உலக சந்தைக்கும், இலங்கையின் தங்க நிலவரத்தையும் பொருத்த வரையில் 10000 வித்தியாசத்தில் தங்க விலை நிலவி வருகிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் தங்க இறக்குமதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

இல்லையெனில் அரசாங்கமாவது இறக்குமதி பொறுப்பை ஏற்க வேண்டும். எனினும் இது நடப்பதற்கான சாத்தியம் இல்லை. அதேபோன்று அண்மையில் இலங்கையில் திடீரென தங்க விலை குறைந்து அடுத்த சில தினங்களிலே மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது.

இதற்கு காரணம் உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருந்ததுடன், இலங்கையிலும் டொலரின் விலையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இதுவே தங்க விலை குறைந்தமைக்கு காரணம்.

இலங்கையில் தங்க தேவை காணப்படுகிறது. எனினும் இதனை அரசாங்கத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை. 24 கரட் தங்கத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கத்தால் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டமையால் 22 கரட் தங்கத்தை கொண்டு வந்து அதை புடம் போட்டு 24 கரட்டாக்கி மீண்டும் 22 கரட்டாக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

நாட்டில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் 100 சதவீதம் தங்க வியாபாரம் நடந்திருந்தால் தற்போது 40 சதவீதமே விற்பனை நடக்கிறது. இலங்கையில் தங்க இறக்குமதி தடை நீக்கப்பட்டால் கட்டாயம் இலங்கையில் தங்க விலை குறையும்.

உலக சந்தையை விட 2000 ரூபா வித்தியாசத்திலேயே தங்கத்தை பெற்றுக்கொள்ள முடியுமானதாக இருக்கும். அதாவது 145000 ரூபா வரை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை குறைவதற்கான சாத்தியம் இருக்கிறது.

இலங்கையின் நாணய பெறுமதியை வைத்து தான் இலங்கையில் தங்கத்தின் பெறுமதி நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக தங்க இறக்குமதி தடை நீக்கப்படுமாக இருந்தால் தங்கத்தின் பெறுமதியில் மிகப்பெரிய வித்தியாசத்தை பார்க்க முடியும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்.. மெட்டா நிறுவனத்தின் புதிய அப்டேட்!!

வாட்ஸ்அப்..

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை 4 கைபேசிகளில் திறக்க முடியும் என மெட்டாவுக்கு சொந்தமான செய்திகள் தெரிவிக்கின்றன.

“ஒரு வாட்ஸ்அப் கணக்கு, இப்போது பல ஃபோன்களில் பயன்படுத்தலாம்” என்பது இந்த சேவையை விவரிக்கும் அம்சமாகும்.

இது எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு தயாரான இளம் யுவதிக்கு நேர்ந்த சோகம்.. காதலன் வெளியிட்ட தகவல்!!

களுத்துறையில்..

களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பில் யுவதியின் காதலன் சாட்சியமளித்துள்ளார். உயிரிழந்தவர் அடுத்த மாதம் திருமணத்திற்கு தயாரான பட்டதாரி மாணவி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தோம். களுத்துறையில் இருந்து வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தரையில் விழுந்து முனங்கினார்.

நிமேஷாவை நான் மடியில் தூக்கிக் கொண்டு உதவிக்காக கதறினேன்” என உயிரிழந்த யுவதியின் காதலனான மத்துகம எல்ல சிறிகந்துர வீதியை சேர்ந்த மதுஷ கலன்சூரிய என்ற 28 வயதான இளைஞன் தெரிவித்துள்ளார்.

களுத்துறை, கொஹொலன, செருபிட்ட – கந்தமுல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய உதேனி நிமேஷா கருணாதிலக்க என்ற யுவதியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி தீபால் சகரத்ன முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது. இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட இளைஞன், “இவர் இறந்து போன என் காதலி.

தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி. இவரை எனக்கு ஒன்றரை வருடங்களாகத் தெரியும்.. புகையிரதம் ஒன்றிலேயே அறிமுகமானோம். பெற்றோர் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது.

சம்பவத்தன்று நிமேஷாவுடன் அவர்களது வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் களுத்துறைக்கு சென்றேன். பிறகு மாலை நான்கு மணியளவில் கடற்கரைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தோம்.

மாலை 6 மணியளவில் வங்கியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பணத்தை எடுத்தோம். பின்னர் பாலத்தோட்ட வீதியில் இருந்து வீட்டுக்கு வந்தோம். மீன் வாங்க நினைத்து நாகொட சந்திக்கு வந்தோம்.

அங்கு மீன்கள் இல்லை. அதன் பின்னர் அருகில் உள்ள சந்தியில் உள்ள மீன் கடைக்கு சென்றேன். இந்த கடை வீதியின் இடது பக்கத்தில் உள்ளது. மீனைக் கொடுக்க நிமேஷா அதனை திறக்கத் தயாரானார்.

அப்போது ஒரு சத்தம் கேட்டது. வாகனம் ஒன்று மோதி இருவரும் நடு வீதி நோக்கி வீசப்பட்டோம். நான் பார்க்கும் போது நிமேஷா முனங்கினார். காதில் இருந்து இரத்தம் வந்தது. நான் அவரை என் மடியில் எடுத்துக்கொண்டு உதவிக்காக கத்தினேன்.

நிமேஷாவை சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் முச்சக்கரவண்டியில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றேன். அவர் சுயநினைவில் இல்லை.

ஒட்சிசன் குழாய்கள் வைக்கப்பட்டன. காயங்கள் காரணமாக நானும் வேறு அறையில் அனுமதிக்கப்பட்டேன். மறுநாள் காலை நிமேஷா இறந்துவிட்டதை அறிந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொலைபேசி வெடித்ததில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. எச்சரிக்கை செய்தி!!

கேரளாவில்…

மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரளா திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் .

இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு கைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மோசமான மின்கலம் (Battery) காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

தற்காலத்தில் பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் கைபேசி பயன்படுத்துகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அவர்களின் உயிரை பறித்து விடுகின்றது . எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் மொபைல் கொடுப்பதை கூடுமானவரை தவிர்த்தல் ந்ன்று.

தண்டவாளத்தில் படுத்திருந்த 3 இளைஞர்கள்.. புகையிரதம் மோதி உடல் நசுங்கி பலியான சோகம்!!

திருவாரூரில்..

திருவிழாவுக்கு வந்த போது, இரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த 2 இளைஞர்கள் இரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் திருவாரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உப்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு அமைந்திருக்கும் ஆலங்காடு மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே இந்த திருவிழாவை காண சுற்றி இருக்கும் கிராம புறங்களில் இருந்து பலரும் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் இரவு இந்த திருவிழாவை காண நாகை மாவட்டம் தெற்குபிடாகை மேலமருதூரைச் சேர்ந்த முகேஷ் என்ற முருக பாண்டியன் (22), அருள் (24) மற்றும் பரத்குமார் (17) ஆகிய மூவரும் சென்றுள்ளனர். திருவிழாவில் நன்றாக சுற்றி ஜாலியாக இருந்துள்ளனர்.

பின்னர் நன்றாக சுற்றிய பின்னர் 3 பேரும் களைப்பாக உள்ளது என்று ஒரு இடத்தில் அமர்ந்திருந்து பின்னர் தங்கள் ஊருக்கு செல்ல இரயில் நிலையம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அனைவருக்கும் மிகவும் சோர்வாக இருந்தது என்பதால் அருகில் இருந்த ஒரு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது இரயில் எதுவும் வரவில்லை என்பதால் அப்படியே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்திருந்தனர்.

அந்த சமயத்தில் அங்கு தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் வேகமாக வந்துள்ளது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த 3 பேரில், இருவர் மீது இரயில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற ஒருவரான பரத் என்பவர் மட்டும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த திருவாரூர் ரயில்வே போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த மற்ற இருவரின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதோடு இது தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவுக்கு வந்த போது, இரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த 2 இளைஞர்கள் இரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்… தந்தை கண் முன்பே ஆற்றில் மூழ்கி 6 வயது சிறுமி பலி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், குடும்பத்துடன் திருச்சி முக்கொம்பு பகுதிக்கு சுற்றுலா சென்ற இடத்தில், தந்தையின் கண் முன்னாலேயே, காவிரி ஆற்றில் மூழ்கி 6 வயதான மகள் உயிரிழந்த சம்பவம் கொண்டாட்டமாக சுற்றுலா கிளம்பியவர்களை பெரும் சோகத்திற்குள்ளாக்கி உள்ளது.

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது ஆறு வயதான மகள் ரிஸானா தஸ்ரின். கோடை விடுமுறை விடப்பட்டிருந்ததால், ஞாயிற்றுக்கிழமை சதான் உசேனுக்கும் விடுமுறை என்பதால், தனது குடும்பத்துடன் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமையன்று சென்றார்.

முக்கொம்பில், காவிரி ஆற்றின் நடுவில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் குடும்பத்தினருடன் அவர்கள் குளித்தனர். கோடை வெய்யிலுக்கு இதமாக தண்ணீரில் ஆட்டம் போட்டப்படியே சிறுமி ரிஸானா தஸ்ரினும் அவர்களுடன் சேர்ந்து குளித்து கொண்டிருந்தாள்.

குளித்து கொண்டிருந்த நிலையில், திடீரென ரிஸானா தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளாள். சிறிது நேரத்தில் மகளைக் காணாவில்லை என்பதனை உணர்ந்த சதாம் உசேன், பதறி போய், தண்ணீரில் மகளைத் தேடினார்.

அப்போது ரிஸானா தஸ்ரின் தண்ணீரில் மூழ்கி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள், ரிஸானா தஸ்ரின் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வாத்தலை போலீசார், ரிஸானா தஸ்ரினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரிஸானா தஸ்ரினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு ரிஸானா தஸ்ரினின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவளது உடலை எடுத்து செல்ல முயன்றனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அரசு மருத்துவமனை போலீசார் ரிஸானா தஸ்ரினின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சமாதானம் அடைந்த உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெற்ற மகனை வீதியில் விட்டுவிட்டு புதிய கணவருடன் தப்பிச் சென்ற தாய்!!

எம்பிலிபிட்டிய..

தாயினால் வீதியில் கைவிடப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை எம்பிலிபிட்டிய – குட்டிகல பொலிஸார் மீட்டுள்ளனர். குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று அவரது தாய் மற்றும் மாற்றாந்தந்தை ஆகியோர் நெடுஞ்சாலையில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சிறுவனின் தாய், தனது கணவனை விட்டு பிரிந்து மறுமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தாய் அந்த சிறுவனை அடித்து காயப்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் குறித்த சிறுவன் சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,சட்ட வைத்தியரிடமும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இரு உலக சாதனைகளை படைத்த 04 வயது தமிழ்ச் சிறுமி!!

கல்முனையில்..

கல்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட துறைவந்தியமேடு கிராமத்தைச் சேர்ந்தவரான ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் 04 வயதுடைய சிறுமி இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இவர் தனது இரண்டு கைகளினாலும் A தொடக்கம் Z வரை குறுகிய நேரத்தில் ஆங்கில எழுத்துக்களை எழுதி அவர் ஏற்கனவே படைத்த சாதனையினை தாமே முறியடித்துள்ளார்.

அதாவது முதலாவது சாதனையாக A தொடக்கம் Z வரையான ஆங்கில எழுத்துக்கள் 3.30 நிமிடங்களில் எழுதப்பட்டது. இரண்டாவது சாதனையாக A தொடக்கம் Z வரையான ஆங்கில எழுத்துக்கள் 2.38 நிமிடங்களில் எழுதப்பட்டது.

இந்நிலையில் இவற்றை இந்தியா கல்கத்தாவில் இருக்கும் Netaji world record ஆகிய உலக சாதனை புத்தக நிறுவனங்களின் ஊடாக இச் சாதனை பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சாதனை படைத்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் 04 வயதுடைய சிறுமிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தையுடன் பயணித்த தாய்க்கு நேர்ந்த சோகம்.!!

அம்பலாங்கொடயில்..

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொட நகர் காலி வீதியில் இன்று (25) காலையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொட ஊரவத்த பிரதேசத்தில் வசிக்கும் அம்பலாங்கொடை மாநகர சபையின் ஊழியரான லகீஷா யசஸ்வி என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை மாநகர சபையில் வருவாய் நிர்வாகியாக கடமையாற்றுவதுடன் தனது குழந்தையை முன்பள்ளிக்கு விடுவதற்காக அம்பலாங்கொட உரவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மடுவில் மின்னல் தாக்கி வயோதிப பெண் பரிதாபமாக பலி!!

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இ்ன்று (25.04.2023) பிற்பகல் மின்னல் தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாலை நேரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது மின்னல் தாக்கியதில் 62வயதுடைய பத்மநாதன் தெய்வானை என்ற வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மடு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.