யாழ் – கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலக திறைசேரியில் பணியாற்றிய அரச உத்தியோகஸ்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியாற்றிய 36 வயதான ஜெயேந்திரன் நிஜந்தன் என்பவரே திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் மரணமடைந்துள்ளார். குறித்த உத்தியோகஸ்தர் காய்ச்சல் காரணமாக கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற போது,
அங்கு அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரியவருகின்றது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து ரவுடிகள் வர்த்தகரை தாக்கியதில் வர்த்தகர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (21.04.2023) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மூவர் அடங்கிய ரவுடி கும்பல் சிறுநீர் கழித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த வர்த்தக நிலைய வர்த்தகரால் இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காது அருகில் உள்ள பொது கழிப்பறைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரவுடி கும்பலினால் வர்த்தகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது இருகில் உள்ள வர்த்தக நிலையத்தினர் உட்பட பலரும் வேடிக்கை பார்த்த போதிலும்,
எவரும் தடுப்பதற்கு முற்படாத நிலையில் இத்தாக்குதலினால் படுகாயமடைந்த வர்த்தகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், ஏனைய இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வடக்கில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (21.04) தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடும் வெப்ப நிலை நீடித்து வருவதுடன், அவ்வப்போது மாலைவ வேளைகளில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருகின்றது.
அந்தவகையில், நேற்று மாலை (20.08) வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும், சேனைப்புலவு கிராம அலுவலர் பிரிவில் கடையுடன் கூடிய வீடு ஒன்று சேதமடைந்துள்ளதுடன், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன்படி வவுனியா வடக்கில் மொத்தமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இவர்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவித் திட்டங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கோதபட்னாவில் தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். அதன்படி இந்த கல்லூரியில் படிக்கும் அர்ச்சனா தாஸ் என்ற பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவி, விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.
இந்த நிலையில், கல்லூரியில் தேர்வு முடிந்து விடுதிக்கு திரும்பிய பிறகு மாணவி அர்ச்சனா தாஸ், தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி நிர்வாகம் மாணவி மரணம் குறித்த தகவல் அறிந்தவுடன், அவரது உடலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அர்ச்சனா தாஸ், குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அர்ச்சனா தாஸ் குடும்பத்தார், சந்தக காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் புவனேஸ்வரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தி அவரது தோழிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து இறந்து போன மாணவியின் சகோதரி ரெபதி பாதே கூறுகையில், அர்ச்சனா தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவள் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னணியில் சதி உள்ளது. அவள் தேர்வுக்காக நேற்று வீட்டிலிருந்து விடுதிக்கு திரும்பியிருந்தாள். தேர்வு எழுதிய உடனே ஏன் அவள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?, என்று கேள்வி எழுப்பினார்.
தெலங்கானாவில்..தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் நவ்யா ஸ்ரீ. இவர் 2021இல் கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவரது பிரசவம் ஜெகத்தியால் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது.
2021 டிசம்பரில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த இவர், பிரவத்திற்குப் பின் தொடர்ச்சியாக வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். பேறுகாலத்தில் இயல்பாக வரும் வலி என்று நினைத்திருந்த நவ்யா ஸ்ரீ, முதலில் சில அன்றாட சிகிச்சைகள் எடுத்து வந்துள்ளார்.
இருப்பினும் வயிற்று வலி நிற்காமல் தொடர்ந்த நிலையில், நிசாமாபாத் பகுதியில் உள்ள ஸ்கேன் பரிசோதனை நிலையில் தனது வயிற்றை பரிசோதித்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் கட்டி போல பாதிப்பு இருப்பதாக முடிவுகள் தெரிவித்ததை அடுத்து, ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மருத்துவர்கள் பரிசோதித்த போது தான் வயிற்றில் பஞ்சுத்துணி வைத்து தைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. பின்னர் மருத்துவர்கள் உடனடியாக பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து பஞ்சை வெளியேற்றினர்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து பெண் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். இது தொடர்பாக தவறு செய்த மருத்துவமனை மீது பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். மேலும், பெண்ணின் வயிற்றில் சீல் உருவாகியுள்ளதால் உரிய சிகிச்சை ஓய்வு தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட காதலியின் இறப்பை, வீடியோ காலில் ரசித்த இளைஞரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மருதூரை சேர்ந்த அர்ச்சனா(24) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் வடகாட்டை சேர்ந்த சத்யராஜ் என்ற இளைஞரை 2 வருடமாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சத்யராஜ்(26) வேறொரு பெண்ணை காதலிக்க ஆரம்பிக்க அந்த விடயம் அர்ச்சனாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் அர்ச்சனா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சத்யராஜுக்கும், அர்ச்சனாவிற்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி காலை வழக்கம் போல் அர்ச்சனா வீட்டிலிருந்து கிளம்பி தோழியுடன் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
மதிய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பே வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அர்ச்சனாவின் தோழி மதிய உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு சென்று பார்த்த போது அர்ச்சனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தொங்கியபடி இருந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, அர்ச்சனா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 45 நிமிடம் சத்யராஜுடன் அவர் செல்போனில் பேசியுள்ளார். அந்த உரையாடலில் சத்யராஜ் நீ தொலைந்து விடு என்று கூறியதாகவும், வீடியோ காலில் வரும்படி வற்புறுத்தி உள்ளார்.
அதற்கு அர்ச்சனா தொலைந்து போக சொல்லிவிட்டு பிறகு வீடியோ கால் எதற்கு என்றும் கேட்டுள்ளார். தொடர்ந்து வீடியோ கால் வந்த சத்யராஜ் அர்ச்சனா தூக்குப் போடுவதை பார்த்து ரசித்துள்ளார்.
மேலும், ‘தூக்கு மாட்டுவதற்கு முன்பு எனக்கு டாட்டா காட்டி விட்டு மாட்டிக்கொள்’ என்று சத்யராஜ் கூறியதாக காவல்துறையினர் அர்ச்சனாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் சத்யராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தனது காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ காலில் ரசித்த இளைஞரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் பல பிரபலங்கள் தனது உடலை அழகாக காட்டிக் கொள்ள தான் நினைப்பார்கள். அந்தவகையில் அமெரிக்காவை சேர்ந்த ஜெசிக்கா புர்கோ என்ற மொடல் அழகி தனது உதட்டை சத்திர சிகிச்சை மூலம் பெரிதாக்கியுள்ளார்.
இதுவரை 6 முறை அந்த சிகிச்சையை எடுத்துள்ளார். திடிரென்று ஒரு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தற்போது புதிதாக ஒரு லிப் பில்லர் வந்துள்ளது. அதை இலவசமாக தருகிறேன் என்று கூறியுள்ளார்.
டாக்டர் லிப் பில்லரை ஜெசிகாவுக்கு செலுத்தி உள்ளார். அதை செலுத்தி ஒரு சில வினாடிகளில் உதடுகள் வீங்கத் தொடங்கி அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசிகா தனது சோகத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
யாராவது, இலவசம் தருகிறேன் என கூறினால் தயவு செய்து அதை நம்பி யாரும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருடைய மனைவி பெனாசீர் சித்திகா (வயது 24). திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று இரவு திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
காவல் துறையினர் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இது குறித்து தற்கொலை செய்து கொண்ட பெணாசீர் சித்திக்காவின் தாயார் அரக்காஸ் அம்மாள் கூறுகையில், எனது மகளுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன.
மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று காலை எனது மகளை சந்தித்தபோது மூன்று மாதம் கர்ப்பிணியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சாகுல் அமீது அடிக்கடி பணம் கேட்டு மாமனார்,
மாமியார் தொந்தரவு செய்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், மாமனாருக்கு அடிக்கடி கால் வலி ஏற்படுவதால் தனது மகளை கால்களை அழுத்தி விடசொல்லி தொந்தரவு செய்வதாகவும், அடிக்கடி என் மகள் கூறிவந்தார்.
இந்நிலையில் மருமகனின் உறவினரான பரிதா என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சில விஷயங்கள் பேசுவதாக கூறி சாகுல் அமீதை தனியாக அழைத்து சென்று பேசுவதும், இதனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு கூறிக்கொண்டே வந்தார்.
இந்நிலையில் எனது மகள் நேற்று இரவு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள். என் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,
மாமனார், மாமியார், மருமகன் மூன்று பேரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார். பழனியில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (வயது 24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணேசனுக்கு தெரிய வர, நிவேதாவை கண்டித்ததாக தெரிகிறது.
கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காமல் நிவேதா தொடர்ந்து முருகனுடன் தவறான எண்ணத்துடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பணி முடித்து கணேசன் வீடு திரும்பியபோது, நிவேதாவுடன் முருகன் தனிமையில் இருந்ததாகவும், கணேசனைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேசன், நிவேதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு கணேசன் தனது காதல் மனைவியை உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது நிவேதா உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர், நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பியோடிய நிவேதாவின் கணவர் கணேசனை தேடி வருகின்றனர். திருமணம் கடந்த உறவால் காதல் மனைவியை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டிவிட்ட மாப்பிள்ளையை திடீரென மணப்பெண் தாக்கிய காணொளி வைரலாகி வருகின்றது. தற்போது திருமணம் தொடர்பான காணொளிகள் அதிகமாக இணையத்தில் பரவிவரும் நிலையில், தற்போது மணப்பெண் மணமகனிடம் சரமாரியாக அடிவாங்கும் காட்சியும் வைரலாகி வருகின்றது.
திருமணத்தில் மணமகன் மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டி விடுகின்றார். உடனே கோபத்தில் மணப்பெண் மாப்பிள்ளையை தாக்க மாப்பிள்ளையும் திரும்ப மணப்பெண்ணை தாக்குகின்றார்.
இறுதியில் இவர்களின் சண்டை சரமாரியாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேசன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு கவின் (வயது 2) என்ற மகன் இருக்கிறார்.
இன்று காலை கவின் வீட்டுக்கு அருகே மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரைக் காணவில்லை. இதையறிந்த சிறுவனின் பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால், வாழப்பாடி காவல் நிலையத்தில் `தங்களுடைய மகன் காணவில்லை’ என்று நேற்று மாலை புகாரளித்தனர்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தையை மீட்க உத்தரவிட்டார்.
அதன் மூலம் போலீஸார் சிறுவன் மாயமான பகுதியில் விசாரணை நடத்தியபோது, சிறுவன் வீட்டிலிருந்து 10 அடி தூரத்தில் லெட்சுமி என்பவர் வசித்துவருவதும், அவருக்கு இரண்டு வயதில் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
அந்த இரண்டு சிறுவர்களும் அவ்வப்போது விளையாடச் செல்வதும் தெரியவந்தது. இதற்கிடையே, நேற்று முதல் நாள் சம்பந்தப்பட்ட லெட்சுமி வீட்டுக்கு சேலத்தைச் சேர்ந்த உறவினர் பெண் வந்து சென்றிருக்கிறார்.
அதே பெண் நேற்றும் சிறுவன் காணமல் போன நேரத்தில் அங்கு வந்திருப்பதை அருகிலிருந்தவர்கள் கவனித்திருக்கின்றனர். ஆனால், வந்த உறவுக்கார பெண் லெட்சுமி வீட்டுக்குச் செல்லாமல் சென்றிருக்கிறார்.
இதனால் போலீஸார் சந்தேகமடைந்து, லெட்சுமியை விசாரித்து அவரின் உறவுக்காரப் பெண்ணின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, அவரிடம் போலீஸார் பேசி சம்பவ இடத்துக்கு வரவழைத்திருக்கின்றனர்.
பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கவே, தன்னுடைய பெயர் பழனியம்மாள் என்றும், திருமணமாகி கணவனைப் பிரிந்து வாழ்வதாகவும், தான் சேலம் 5 ரோடு பகுதியிலுள்ள (ஐநாக்ஸ்) திரையரங்கில் தூய்மைப் பணியாளராக வேலை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் அயோத்தியாபட்டினம் அக்ரஹாரம் பகுதியில் தான் ரூ. 20 லட்ச ரூபாய்க்கு கடன் வாங்கி வீடு கட்டியிருப்பதால், அதை அடைக்க வேறு வழிதெரியாமல் சிறுவனைக் கடத்தியதாகக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் அந்தப் பெண், கடத்தப்பட்ட சிறுவனைத் தன்னுடன் வேலை பார்க்கும் 5 ரோடு பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரின் வீட்டில் வைத்திருப்பது தெரியவந்து, போலீஸார் சிறுவனை மீட்டனர்.
பின்னர் பழனியம்மாளைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட பழனியம்மாளை போலீஸார் கஸ்டடியில் எடுத்து, சிறுவனைக் கடத்தி வேறு யாருக்கும் விற்க முற்பட்டாரா, சிறுவனைக் கடத்தி பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட திட்டம் வைத்திருந்தாரா…
மேலும், இது போன்ற குற்றச்சம்பவத்தில் ஏற்கெனவே ஏதும் ஈடுபட்டிருக்கிறாரா… இவர் பின்னணியில் ஏதும் கடத்தல் கும்பல் உள்ளதா… என்ற கோணத்தில் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் சசிதர ரெட்டி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சாய் தேஜஸ்வி கொம்மரெட்டி, இங்கிலாந்தில் விண்வெளி துறையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
குடும்பத்தினர் தெலங்கானாவில் இருக்கும் நிலையில், அவர் மட்டும் இங்கிலாந்தில் தங்கியிருந்து படித்து வருகிறார். தேஜஸ்வி தனது தோழிகளுடன் சேர்ந்து அங்குள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் அனைவரும் கடற்கரையில் குளித்து உற்சாகமாக விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலையில் தேஜஸ்வி சிக்கியுள்ளார்.
அவர் உள்பட 3 பேர் கடுமையான அலையில் சிக்கி கடலுக்குள் இலுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்து உள்ளனர். இவர்களில் தேஜஸ்வியின் உடலை மீட்பு குழுவினர் முதலில் மீட்டனர். அதற்கடுத்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழு தெரிவித்துள்ளது.
தனது மகள் இறப்பு அறிந்து தெலங்கானாவில் உள்ள பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தேஜஸ்வியின் தந்தை சசிதர ரெட்டி கூறுகையில், தேர்வு எழுதிய பின்னர் ஓய்வாக இருப்பதற்காக அவர்கள் கடற்கரைக்குசென்றுள்ளனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசத்தில் கடல் அலையில் சிக்கி அவர்கள் உயிரிழந்துவிட்டனர். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் சிலர் எங்களுக்கு நிறைய உதவிகளை செய்தனர், என்றார்.
தேஜஸ்வியின் உடலை இந்தியா கொண்டு வர இருந்த நடைமுறை சிக்கல்களை தீர்க்க உதவினர் என கூறியுள்ளார். இதன்படி, தேஜஸ்வியின் உடல் நாளை (வெள்ளி கிழமை) ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.
வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1500 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பதற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்று மாலை (20.04) திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.
இதன்போது, வவுனியா வடக்கு ஓடைவெளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காய்த்து அறுவடைக்கு சில வாரங்களே இருந்த 1500 பப்பாசி மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து அழிவடைந்துள்ளது.
அத்துடன், ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள விவசாயிகள் பலரின் வாழ்வாதாரமாக இருந்த பப்பாசி, வாழை, புகையிலை, கத்தரி உள்ளிட்ட பயன்தரு மரங்களும் காற்றில் முறிந்து அழிவடைந்துள்ளன. தமது வாழ்வாதரமாக மேற்கொண்ட பயிர்கள் அழிவடைந்தமை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட திமிங்கில அம்பர் எனப்படும் திமிங்கல வாந்தியை வைத்திருந்த நபரொருவர் கொழும்பின் புறநகர் பகுதியான, நியதகல – பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்றைய தினம் (20.04.2023) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 14.3 கிலோகிராம் எடையுடைய அம்பர் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. திமிங்கல வாந்தியானது உலகின் மிக விலையுயர்ந்த வாசனை திரவியத்தை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிபோதையில் பேருந்திற்குள் நுழைந்த நபர் பாலியல் துஷ்பியோகத்தை மேற்கொள்ள முயன்ற போது குறித்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல், பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவி ஒருவர் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில் பெற்றோர் பாடசாலை அதிபரை நேரில் சந்தித்து ஆசிரியரின் செயற்பாடு குறித்து எடுத்து கூறி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
எனினும் அதற்கு அதிபர், சாதகமாக நடந்து கொள்ளாது. முறையிட்ட பெற்றோருடன் முரண்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவியின் பாடசாலை விலகல் பாத்திரத்தை வாங்கி கொண்டு மாணவியை வேறு பாடசாலையில் இணைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை சம்பவம் தொடர்பில், மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் அவதானம் செலுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.