150 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் அரிய நிகழ்வு.. யாரால் பார்க்க முடியும்.?

சூரிய கிரகணம்..

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில் பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடைபெறும்.

இந்நிலையில் இந்த அரிய நிகழ்வானது அவுஸ்திரேலியாவில் இன்று (20.04.2023) நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நிகழ்வை காண முடியாது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

அதாவது 62 வினாடிகளுக்கு சூரியன் பூமியை மறைக்கப்படும் காட்சி தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கிரகணம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விளக்கமளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து முதன்மை விஞ்ஞானி எபினேசர் கூறுகையில், இன்று (20) நடக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை இதற்கு அடுத்த முழு சூரிய கிரகணம் 2172ஆம் ஆண்டு தான் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பிரித்தானிய தம்பதி!!

ஹிக்கடுவையில்..

ஹிக்கடுவை கடற்பரப்பில் நீரில் அடித்து செல்லப்பட்ட பிரித்தானிய குடும்பம் ஒன்று அதிஷ்டவசமாக உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை கடற்பரப்பில் படகு வகை கப்பலை பயணித்துக் கொண்டி கொண்டிருந்த போது கடலில் விழுந்த வெளிநாட்டு சுற்றுலா தம்பதியரையும் அவர்களது இரண்டரை வயது குழந்தையையும் பொலிஸ் உயிர் காப்பாளர்கள் காப்பாற்றியதாக ஹிக்கடுவ சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆபத்தில் இருப்பதைக் கண்ட உயிர் காப்பாளர்கள் உடனடியாக கடலில் குதித்துள்ளனர். 400 மீட்டர் தூரம் நீந்தி ஆபத்தில் இருந்த பிரித்தானிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழில் 22 வயது யுவதி எடுத்த விபரீத முடிவு… நீடிக்கும் மர்மம்!!

யாழில்..

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (19.04.2023) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா வயது 22 என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் அண்மைக் காலமாக இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் தொடரும் நிலையில் இவற்றிற்கான பின்னணிகள் தொடர்பில் எதுவித உறுதியான தகவல்களும் வெளிப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் இலங்கை குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தும் தம்பதியினர் கைது!!

கோலாலம்பூரில்..

கோலாலம்பூரில் மலேசிய சர்வதேச கடவுச்சீட்டை (MIP) பயன்படுத்தி இலங்கை குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தும் கும்பலை அமபலப்படுத்தியுள்ளதாக மலேசிய குடிவரவு திணைக்களம் இன்று அறிவித்தது.

Bahnu Internationals சிண்டிகேட் என ஒரு உண்மையான நிறுவனம் போல பெயரிடப்பட்ட இந்த குழுவின் மூளையாக செயல்பட்ட 26 மற்றும் 37 வயதுடைய உள்ளூரைச் சேர்ந்த கணவன்-மனைவியை ஏப்ரல் 12-ஆம் திகதி கைது செய்ததாக குடிவரவுத் திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் ரஸ்லின் ஜூசோ (Datuk Ruslin Jusoh) தெரிவித்தார்.

ரஸ்லின் இன்று (ஏப்ரல் 19) வெளியிட்ட ஒரு அறிக்கையில், பாஸ்போர்ட் தயாரிக்கும் போர்வையில் குடிவரவு அலுவலகத்திற்கு தங்கள் 12 வயது குழந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வரும்படி இந்த குழு பெற்றோரை நம்ப வைக்கும் என்று கூறினார்.

பின்னர் “கவுண்டருக்கு வரும்போது, ​​அழைத்துவரப்பட்ட குழந்தைக்கு பதிலாக அதே வயதை ஒத்திருக்கும் இலங்கையிலிருந்து வந்த வேறு குழந்தை புகைப்படம் எடுப்பதற்கும் கைரேகை பதிவுக்கும் அனுப்பப்படும்,” என்று அவர் கூறினார்.

இதன்மூலம் கடவுச்சீட்டை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்ட இலங்கைப் பிள்ளைகளை ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்படுவர். மேலும், அவர்களை அழைத்துச் செல்லும் கடத்தல்காரர்களாகவும் (transporter) இந்த தம்பதியே செயல்படுவார் என்றும் ரஸ்லின் கூறினார்.

எத்தனை குழந்தைகள் இதில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் சிண்டிகேட் எவ்வளவு காலம் செயல்பட்டது என்பதைக் கண்டறிந்து தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பாஸ்போர்ட்டைப் பெற்று ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் 30,000 முதல் 50,000 யூரோக்கள் வரை இந்த கடத்தல் கும்பலுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் வாகன இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் தற்போது புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இறக்குமதி தடை நீக்கம் தொடர்பான சில செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதன்படி இறக்குமதி தடைக்கு உட்பட்டிருந்த சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் வாகன இறக்குமதிக்கான தடையும் நீக்கப்படுமா என பல தரப்பினரும் வினவி வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சின் பேச்சாளரொருவர் கூறுகையில், ஏற்கனவே சொல்லப்பட்டது போல வாகன இறக்குமதிக்கான அனுமதி பல தரப்பினராலும் கோரப்பட்டாலும் கூட அதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாக இருக்கிறது.

எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. ஆனால் சில சில சலுகைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலத்தில் மோதிய பேரூந்து.. 10 பேர் படுகாயம்!!

இலங்கையில்..

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று (20.04.2023) பதிவாகியுள்ளது. குறித்த பேருந்தானது பாலத்தின் பக்கவாட்டு வேலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற லொறியும் குறித்த பேருந்து மீது பின்புறத்தில் மோதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

அன்னை பூபதியின் நினைவுதினம்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் நேற்று (19.4.2023) அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி நிகழ்த்தபட்டது.

தலைக்கேறிய ஆணவம்.. தம்பி என்றும் பார்க்காமல் கங்கை அமரனை அடித்து விரட்டிவிட்ட இளையராஜா!!

சினிமாவில்..

தமிழ் சினிமாவில் இன்று வரை இசையின் சாம்ராஜ்யமாக, தன் இசையால் அனைவரையும் சுண்டி இழுத்து வருபவர் இசைஞானி இளையராஜா. உச்சத்தில் இளையராஜ இருந்தாலும் ஒருசில சமயங்களில் ஆணவத்தில் ஆடி தன் பெயரை கெடுத்துக்கொண்டும் நெருங்கிய நண்பர்கள் உட்பட பலரை பகைத்துக்கொண்டிருக்கும் இருந்திருக்கிறார்.

அதில் முக்கியமாக இருப்பவர் இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர் கங்கை அமரன். பல வருடங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இளையராஜா, கங்கை அமரனை விரட்டி விட்டிருக்கிறார். அதிலிருந்து இருவரும் சந்திக்காமல் இருந்துள்ளனர்.

 

அதுவும் கங்கை அமரன் மனைவி மறைவுக்கு கூட வராமல் ஆணவத்தின் உச்சியில் இருந்திருக்கிறார் இளையராஜா. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு பிரபலம் தான். பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், தன்னைவிட வேறு யாரும் இசையை பற்றி அறியாதவர்கள் என்ற தலைக்கனம் இசைஞானிக்கு இருந்தது தான்.

அதாவது பிரபல பாடகர் மலேசிய வாசுதேவன் ஒரு படத்தை தான் இயக்கி நடித்தும் இருந்திருக்கிறார். அப்படத்தில் இசைஞானியை இசையமைக்க கேட்டால் நிறைய செலவு ஆகும்.

ஏனென்றால் அப்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க பல மடங்கு சம்பளம் வாங்கி வந்ததால், இப்படத்திற்கும் அதிக சம்பளம் கேட்பார் என்று நினைத்திருக்கிறார் மலேசிய வாசுதேவன்.

 

அதனால், அவரது தம்பி கங்கை அமரனை வலுக்கட்டாயமாக இசையமைக்க கேட்டிருக்கிறார் மலேசிய வாசுதேவன். ஒருவழியாக இசையமைக்க ஒப்புக்கொண்ட கங்கை அமரனை பற்றி செய்திதாளில் செய்திகள் வெளியானது.

இதனை அறிந்த இசைஞானி என்னைவிட இசையை பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கூறி கடுமையாக திட்டி என் மூஞ்சில் முழிக்காதே என்று விரட்டிவிட்டிருக்கிறார்.

அதன்பின் சமாதானம் ஆகாத இளையராஜாவை அவரது குரு ஜிகே வெங்கடேஷ், வேறு ஒருவர் இசைமையப்பதற்கு உன் தம்பியே பண்ணட்டுமே என்று கூறியப்பின் தான் சமாதானம் ஆகியிருக்கிறார் இளையராஜா. இதேபோல் தன் இசையை கச்சேரிகளில் பாடுவதிலும் அண்ணன் தம்பிக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பது வேறொரு தகவல்.

தோசை சுட மறுத்த மனைவியை கொடூரமாக கொலை செய்த 60 வயது முதியவர்!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ளது என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் என்ற கிராமம். இங்கு கணேசன் என்ற 60 வயது முதியவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் இவர், தனது மனைவி மாதம்மாள் (50), மற்றும் மருமகள், 2 வயது பேரக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் நேற்றைய முன்தினம் இரவு கணேசன் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது உறங்க பசியில் இருந்த கணேசன், தனது மனைவி மாதம்மாளிடம் தோசை சுட்ட தரும்படி கூறியுள்ளார்.

எனவே அவரும் சுட்டு கொடுத்துள்ளார். முதல் 3 தோசை சுட்டு கொடுத்த மனைவி, 4-வது தோசை சுட்டுக்கொண்டிருக்கும்போதே கேஸ் காலியாகியுள்ளது. இதனால் கேஸ் காலி என்று கணவரிடம் கூறியுள்ளார்.

இதில் எரிச்சலைடைந்த கணேசன், தனக்கு மேலும் 3 தோசை வேண்டும் என்று கேட்கவே, அவர் இல்லை என்று மறுத்துள்ளார். அதோடு விறகு அடுப்பி வைத்து சுட்டுக்கொடுக்கும்படியும் கூறியுள்ளார். அதற்கு மனைவி மாதம்மாள் தனக்கு களைப்பாக உள்ளதாகவும், அதனால் முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் தனது அருகில் இருந்த கத்தியை கொண்டு மனைவியின் தலையிலும், கைகளிலும் வெட்டியுள்ளார்.

இதனை தடுக்க வந்த மருமகள் மற்றும் 2 வயது பேத்தியையும் கணேசன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அனைவரும் கத்தி கூச்சலிடவே அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

அப்போது அனைவரும் இரத்த காயங்களுடன் காணப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே அனைவர்க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி 60 வயதுடைய கணேசனை அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மனைவி மாதம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இதனை அதிகாரிகள் கொலை வழக்காக மாற்றி அவரை சிறையில் அடைத்தனர். தற்போது 2 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு தோசை சுட்டு தரவில்லை என்ற ஆத்திரத்தில் 60 வயது கணவர், 50 வயது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு, தடுக்க வந்த மருமகள், 2 வயது குழந்தையையும் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இட்லி தட்டு ஓட்டைக்குள் சிக்கிய விரல்.. பரிதவித்த 4 வயது சிறுமி!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரியில் அமைந்துள்ள லூர்து மாதா தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கிய செல்வியஸ். இவர் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் ஜாபி என்ற மகள் உள்ளார்.

இந்த சிறுமி வழக்கமாக எதையாவது வைத்து விளையாடி வந்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று சிறுமி, சமயலறையில் இருக்கும் இட்லி தட்டை வைத்து விளையாடியுள்ளார்.

அப்போது அவர் அதில் இருக்கும் ஓட்டையில் தனது விரலை விட்டு, பின்னர் அதனை வெளியே எடுத்து விளையாடியுள்ளார். அந்த வகையில் இட்லி தட்டுக்குள் விரலை விட்ட சிறுமி, அதனை எடுக்க முயன்றபோது வரவில்லை.

இதனால் பெரும் பதற்றப்பட்ட சிறுமி கத்தி கூச்சலிட்டார். இதனை கேட்டு பதறிப்போன பெற்றோர், சிறுமியின் விரலை வெளியே எடுக்க முயன்றார். அப்படியும் அது தோல்வியிலேயே முடிந்தது.

உறவினர்கள் முயன்றும் வரவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் முதலில் விரலை எடுக்க முயன்றனர்.

அப்படியும் அது முடியவில்லை என்பதால் கட்டிங் பிளேடு மூலம் இட்லி தட்டை வெட்டினர். சிறிது சிறிதாக பொறுமையாக வெட்டி சில மணி நேர முயற்சிக்கு பிறகு சிறுமியின் விரலை பத்திரமாக மீட்டனர்.

இதனிடையே சிறுமியின் விரல் உள்ளே சிக்கி கொண்டதில் வலியால் அலறி துடித்தார். இதனை கண்டு பெற்றோர் பெரும் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் இட்லி தட்டின் ஓட்டைக்குள் மாட்டிக்கொண்டிருந்த சிறுமியின் விரலை பத்திரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவுக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இதே போல் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் வீட்டில் இருக்கும் சமையல் பாத்திரங்களை வைத்து விளையாடும்போது அதன்மூலம் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பாத்திரத்தை தலையில் வைத்து விளையாடும்போது, அதில் மாட்டிக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது.

இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுபோன்ற பொருட்களை விளையாட கொடுக்க கூடாது என்று பலரும் எச்சரித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடித்தக்கது.

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

உத்தரப் பிரதேசத்தில்..

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு எத்தகைய கொடூர நிலையில் இருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம். உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் மக்களின் அடிப்படை விருப்பங்களைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத லட்சணத்தில்தான் சட்டம் – ஒழுங்கு இருக்கிறது.

மேலும் சிறுபான்மையினர், பெண்கள், எதிர்க்கருத்து சொல்பவர்கள், தலித்துகள் எனப் பலர் மீது பா.ஜ.க அரசு அராஜகப் போக்கைக் கையாண்டுள்ளது. இந்நிலையில் ரவுடிகளின் அராஜகங்களும் உ.பியில் தலைவிரித்தாடுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒருமுறை எம்.பியாகவும் பதவி வகித்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரஃப் அகமது ஆகியோர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அத்திக் அகமதுவும், அவரது சகோதரர் அஸ்ரஃபும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவியை இரண்டு பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் மேலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ரோஷ்னி அஹிர்வார் என்பவர் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கல்லூரி மாணவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கை மற்றும் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரோஷ்னி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் துப்பாக்கியால் சுட்ட நபர்களை அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்றபோது அவர்களை அச்சுறுத்தி அவர்கள் மீது துப்பாக்கியை வீசிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர்.

மதிய வேளையில், கூட்டம் நெரிசலான சாலையில் இந்த சம்பவம் நடத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் சிசிடிவு காட்சிகளை கொண்டு ஆய்வு செய்துவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து யோகி அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.

கம்பத்தில் தூக்கில் தொங்கிய இளைஞன் : சந்தேகிக்கும் உறவினர்கள் : நடந்த விபரீதம்!!

செஞ்சியில்..

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தணிகைவேல். வெல்டிங் கடை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். இவர் நேற்று இரவு வீட்டுக்கு வராமல் இருந்தாராம்.

இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்திருக்கின்றனர். இந்த நிலையில், காரை கிராம விளையாட்டு மைதானத்தில் உள்ள வாலிபால் கம்பத்தில், தணிகைவேல் தூக்கில் தொங்கியபடி இருப்பதாக இன்று காலையில் அப்பகுதியினர் பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்திற்குச் சென்ற செஞ்சி டி.எஸ்.பி பிரியதர்ஷினி தலைமையிலான காவல்துறையினர், தணிகைவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவர்களை முற்றுகையிட்ட தணிகைவேலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தணிகைவேலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரைக் கொலைசெய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டி.எஸ்.பி பிரியதர்ஷினி, இது குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இளைஞரின் உடல் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இளைஞரின் தந்தை சர்க்கரை, அனந்தபுரம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவுசெய்த போலீஸார், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நுரை தள்ளிய நிலையில் கர்ப்பிணி மரணம்.. தூக்கில் தொங்கிய கணவன்!!

சென்னையில்..

வாயில் நுரை தள்ளியபடி கீழே இறந்து கிடக்கும் கர்ப்பிணி மனைவி. மின்விசிறியின் ஊக்கில், தூக்கில் தொங்கியபடி கணவன். என்ன செய்வது என தெரியாமல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அப்பார்ட்மெண்ட் வாசிகள்.

சென்னை வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியிருந்தது இந்த மரணம். இது கொலையா? தற்கொலையா? இருவரின் இறப்புக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம்(24) என்பவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது காதல் மனைவி கமலா(18).

இவர்கள் இருவரும் அதே அபார்ட்மெண்டில் கீழே உள்ள அறையில் வசித்து வந்தனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த மாதம் தான் வானகரம் பைபாஸ் சாலையோரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பிரேம் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. பிரேம் மனைவி கமலா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பின் கேட் திறக்காமல் இருக்கவே, பிரேம் வசித்த அறையின் கதவு திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்த போது, மின்விசிறியில் தூக்கு மாட்டி பிரேம் இறந்து கிடந்தார்.

கமலா வாயிலும், மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் தரையில் படுத்த நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு பிரேம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவருமே தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பிரேமின் தாயார் சொப்னாதேவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்லைன் செயலியில் கடன் பெற்ற 22 வயது இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

கிருஷ்ணகிரியில்..

தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் ஒன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர், விடுதியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பொறியாளர் வசந்த். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பள்ளியகரம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் வசந்த் தங்கியிருந்த விடுதியில் அறையில் திடீரென தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி வி.சாரணையை தொடங்கினர்.

அப்போது அவர் தனது சிம்கார்டை உடைத்து இருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர் விடுதியில் தங்கியிருந்த நபர்களிடம் நடத்தப்பட்ட வி.சாரணையில், வசந்த் ஒன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியிருந்தது தெரிய வந்தது.

அதனை செலுத்த முடியாமல் தவித்த வசந்த், தனது குடும்பத்தினரிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளார். இவ்வாறாக ஒரு லட்சம் ரூபாய் வரை அவர் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டுள்ளார். வசந்த்தின் செல்போனில் உள்ள தகவல்களை டிராக் செய்து அதில் இருக்கக்கூடிய தகவல்களை சேகரிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு நாட்களை விட தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

தங்கம்..

இன்றையதினம் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களை விட ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளதாக தங்க தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 644,546 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,740 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,200 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் மக்களுக்கு இருதய நோய்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிப்பு!!

இலங்கையில்..

இலங்கையில் மக்களுக்கு இருதய நோய்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்க ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சேனக கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட திறந்த வெளியில் கடமையாற்றுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் அநேக பகுதிகளில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையில் திறந்த வெளியில் போட்டிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இளநீர், தேய்காய் நீர் உள்ளிட்டவற்றை அதிகளவில் பருகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.