காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட புத்தி பிரபோத கருணாரத்ன என்ற இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். போராட்ட களத்தில் கணிசமான பங்கு வகித்து, முன்னணியில் நின்று போராட்டத்திற்கு பலமாக விளங்கிய அவர், கடிதம் மூலம் தனது கடைசி ஆசையை குறிப்பிட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும் அவர் இறப்பதற்கு முன் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புத்தி பிரபோதாவின் திடீர் மரணம் குறித்து அமைச்சர் சனத் நிஷாந்த தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“முதல் போராட்டக்காரர் மரணம்! காலி முகத்திடல் போராட்டத்தை ஆரம்பிப்பதில் முக்கிய பங்காற்றியவரும், கோட்டா கோ கிராமத்தின் ஸ்தாபக உறுப்பினருமான புத்தி பிரபோத கருணாரத்ன (முதல் போராட்டக்காரர்) தற்கொலை செய்து கொண்டார்.
கோட்டா கோ கிராமத்தில் முதல் சிறிய குடிசையை கட்டியவர் போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரே புத்தி பிரபோத. புத்தி பிரபோத கருணாரத்ன மே 9 தாக்குதலின் போது நாட்டைப் பற்றவைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
புத்தி பிரபோத கடந்த காலமாக மகிந்தவின் மரணத்திற்காக பிரார்த்தனை செய்தார். மகிந்த இறக்கும் வரை காத்திருந்தார். எனினும், அவர் நீண்டகாலமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
பின்னோக்கிப் பார்த்தால், மனநோயால் பாதிக்கப்பட்ட பலரால் காலி முகத்திடல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் மற்றுமொரு தலைவரான நிர்மணி லியனகே, இதற்கு முன்னர் உயிரிழந்தார். அவர் கோட்டா கோ கமவின் முதலாவது கூடாரம் அமைப்பதற்குப் பங்களிப்புச் செய்தவர்.
மகிந்த ராஜபக்ச இறக்கும் வரை காத்திருந்த புத்தி பிரபோத போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு வருடத்திற்குள் தற்கொலை செய்து கொண்டார். முதல் போராளியான புத்தி பிரபோத கருணாரத்னவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்” என சனத் நிஷாந்த தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தம்புல கோமாகவ என்ற பகுதியில் நேற்று (18.04.2023) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதுண்டு ஏற்பட்ட இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அரச பேருந்தில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகின்றது.
கிருஷ்ணகிரியில் மூன்று வாரங்களுக்கு முன்பு, சொந்த சாதியில் திருமணம்செய்த இளைஞரை, சொத்து இல்லை என்பதற்காக மாமனாரே கழுத்தறுத்து கொலைசெய்த சம்பவத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை.
அதற்குள், கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே, பட்டியலினப் பெண்ணை திருமணம்செய்ததற்காக, ஈவு இரக்கமின்றி தன்னுடைய மகனையும், தாயையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, மருமகளைக் கொல்ல முயன்ற தந்தையின் வெறிச்செயல், பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தந்தையின் வெறியாட்டம் குறித்து, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் பார்த்திபன் நம்மிடம், ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கதவணி ஊராட்சிக்குட்பட்ட அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (50). தையல் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.
மகன் பெயர் சுபாஷ் (25). தண்டபாணி குடும்பத்துடன், 6 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்துவருகிறார். அவருடைய, தாய் கண்ணம்மா (62), அருணபதி கிராமத்திலுள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். தண்டபாணி பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்.
எம்.காம் பட்டதாரியான சுபாஷ் (25), திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தபோது, அவரது வீட்டுக்கு அருகில் வாடகை வீட்டில் தங்கியிருந்த, அரியலூரைச் சேர்ந்த பட்டியலினப் பெண் ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். மாற்றுச் சாதி என்பதால், இவர்களது காதலுக்கு தண்டபாணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், பெண் வீட்டார் சம்மதத்துடன், இருவரும் மார்ச் 27-ம் தேதி, திருமணம் செய்துகொண்டனர். மாற்றுச் சாதியில் மகன் திருமணம் செய்ததால், ஆத்திரமடைந்த தண்டபாணி மகன், மருமகளைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார்.
அதையடுத்து, தாய் கண்ணமாவிடம் போனில் பேசிய தண்டபாணி, ‘பையனுக்கு கறி சோறு ஆக்கிப்போடலாம், வீட்டுக்கு வரச்சொல்லு’ எனக் கூறியிருக்கிறார். அதை கண்ணம்மா தன்னுடைய பேரனிடம் கூற, அப்பா தனது திருமணத்தை ஏற்றுக்கொண்டார் என்ற எண்ணத்தில், சுபாஷ், தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு, பாட்டி வீட்டுக்கு கடந்த 14-ம் தேதி வந்திருக்கிறார்.
கறி விருந்து முடிந்து அன்று இரவு, மகன் சுபாஷ், மருமகள், தாய் கண்ணம்மா வீட்டுக்குள் உறங்க, தண்டபாணி அந்த வீட்டுக்கு வெளியில் படுத்திருந்தார். 15-ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, பனை மரத்தில் நுங்கு சீவப் பயன்படுத்தும் அதீத பதம் உள்ள அரிவாளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த தண்டபாணி, முதலில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை, அரிவாளால் கழுத்தில் பலமாக இருமுறை வெட்டியிருக்கிறார்.
சத்தம் கேட்டு எழுந்த தன்னுடைய தாய் கண்ணம்மாவையும் கழுத்தில் சரமாரியாக வெட்டியிருக்கிறார். மரண ஓலம் கேட்டதும், தூக்கத்திலிருந்து எழுந்த சுபாஷின் மனைவி, தண்டபாணியின் செயலைப் பார்த்து அதிர்ந்து, அங்கிருந்த தப்ப முயன்று வீட்டைவிட்டு வெளியே ஓடியிருக்கிறார்.
அப்போது, அவரையும் துரத்திச்சென்று கழுத்து, முகத்தில் வெட்டியதும், அந்தப் பெண் நிலை தடுமாறி விழுந்திருக்கிறார். மூவரும் இறந்துவிட்டனர் எனக் கருதி, தண்டபாணி அங்கிருந்து, நடந்தே ஊத்தங்கரை – திருப்பத்தூர் ரோட்டுக்கு வந்திருக்கிறார்.
இந்தக் கோர கொலைவெறித் தாக்குதலில், சுபாஷ், கண்ணம்மா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், உயிர் பிழைத்திருந்த இளம்பெண் தன்னுடைய கணவரின் சட்டையை எடுத்து, கழுத்தைச் சுற்றி கட்டிக்கொண்டு உதவி கேட்டு, அவர்களின் வீட்டுக்கு அருகில், 400 மீட்டர் தொலைவிலுள்ள உலர் களத்துக்கு நடந்து சென்று அங்கு மயங்கி விழுந்திருக்கிறார். அந்த வழியாக வந்த மக்கள் அவரை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
அங்குள்ள மெயின் ரோட்டுக்கு வந்த தண்டபாணி, பஸ் பிடித்து, மக்கள் திதி கொடுக்கும் அனுமன் தீர்த்தம் கேயிலுக்குச் சென்று, தலைமுழுகிவிட்டு, மீண்டும் அங்கிருந்து தீர்த்தமலை கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கும் தலை முழுகியிருக்கிறார்.
பிறகு, மனவிரக்தியில் அரிவாளால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் தண்டபாணி. காயங்களுடன் ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்டு அருகே இருந்தபோது, அவரைக் கைதுசெய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறோம்.
கழுத்தில் படுகாயம், மூன்று விரல்கள் துண்டான நிலையில் சேலம் மருத்துவமனையில் இளம்பெண்ணும், காயங்களுடன் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தண்டபாணியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்ததும், இருவரிடமும் முழு விசாரணை நடத்தப்படும். மாற்றுச் சாதி என்ற ஒற்றை காரணத்துக்காக, மகன், தாயைக் கொன்றிருக்கிறார் தண்டபாணி’’ என்றார், விரிவாக.
மருத்துவமனையிலுள்ள தண்டபாணியிடம் போலீஸார் பேசியபோது, ‘‘அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஆகாதுனு, நான் ரொம்ப நாளா சொல்லியும் என் பையன் கேட்கல. ஊருக்குள்ள எல்லாரும் ஒரு மாதிரி பேசுனாங்க, அதான் கோபத்துல கொன்னுட்டேன்” என வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஊரிலுள்ள மக்களிடம் நாம் பேசியபோது, ‘‘ஏரிக்கரையோரம் இருக்கும் கண்ணம்மா வீட்டைச் சுற்றி, 400 மீட்டருக்கு வேறு வீடுகள் இல்லாததால், கொலை நடந்தது யாருக்கும் தெரியவில்லை. தண்டபாணி குடும்பம் ஊருக்குள் அமைதியாக வாழும் குடும்பம். அமைதியாகவே இருக்கும் தண்டபாணி, மாற்று சாதியில் திருமணம் செய்ததால் தன்னுடைய மகனையே கொலைசெய்தது அதிர்ச்சியாகவே இருக்கிறது.
ஆனால், சுபாஷின் தங்கை சமீபத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள ஒருவரை காதல் திருமணம் செய்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட தண்டபாணி, மகன் பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ளாமல் கொலைசெய்தது ஆச்சர்யமாக இருக்கிறது’’ என்றனர்.
கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவரது மகள் நேத்ராவதி (வயது 36). நேத்ராவதிக்கும் கார்த்திக் லட்சுமி நாராயணன் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
கார்த்திக் லட்சுமி நாராயணன் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். திருமணத்தின் போது 15 லட்சம் ரூபாய் பணம் 100 சவரன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
திருமணத்திற்கு பிறகு கார்த்திக் லட்சுமி நாராயணன் வேறு நிறுவனத்திற்கு பணிக்கு மாறியதால் பெங்களூருக்கு மனைவி நேத்ராவதியுடன் குடி பெயர்ந்து வசித்து வந்தார்.
பின்னர் 2020 ஆம் ஆண்டு ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கி அதில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு முன்பு கார்த்திக் லட்சுமி நாராயணன் நடத்தி வந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க வழக்குகளுக்காக நேத்ராவதியின் குடும்பத்தார் 10 லட்ச ரூபாய் வரை செலவு செய்தனர்.
திருமணம் ஆகி 6 ஆண்டுகளாகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையத்தில் நேத்திராவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .ஆனாலும் கரு கலைந்து போனது .
இந்நிலையில் கார்த்திக் லட்சுமி நாராயணனுக்கு பெங்களூரில் உள்ள சுவாமி நித்தியானந்தாவின் பிரசங்க கூட்டத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளது.
அந்த சமயத்தில் மகேந்திரன் என்பவர் மூலம் பிரபுதாநந்தா என்ற சாமியார் மத்திய பிரதேச மாநிலம் தட்டுவாடா என்ற இடத்தில் ஆசிரமம் நடத்தி வருவதாக தெரியவந்தது .
தொடர்ந்து பிரபுதாநந்தாவை மத்திய பிரதேசத்திற்கு சென்று கார்த்திக் லட்சுமி நாராயணன் நேரில் சென்று சந்தித்து அவர் கூறிய பூஜை முறைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
கார்த்திக் லட்சுமி நாராயணன் இரவு நேரங்களிலும் நவராத்திரி போன்ற முக்கிய தினங்களிலும் ஆக்ரோஷமான பூஜை முறைகளை செய்து வருவதை பார்த்த நேத்ராவதிக்கு அவருடைய நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
தொடர்ந்து இதுகுறித்து நேத்ராவதி தனது கணவரிடம் கேட்ட போது குழந்தை வேண்டும் என்பதற்காக தான் பூஜைகள் செய்து வருவதாக கூறியிருக்கிறார் மேலும் பிரபுதாநந்தா சாமியாரிடம் குழந்தை வேண்டுமென முறையிடு அப்போதுதான் நமக்கு குழந்தை கிடைக்கும் என கூறியிருக்கிறார்.
இதை நம்பிய நேத்ராவதி தனது கணவருடன் மத்திய பிரதேசத்தில் உள்ள பிரபுதாநந்தா சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்று 20 நாட்கள் தங்கி இருந்து கணவனின் கட்டாயத்தின் பேரில் சேவை செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவைக்கு நேத்ராவதி வந்திருந்தார். அதன் பிறகு அவரது தந்தைக்கு விபத்து ஏற்பட்டதால் தொடர்ந்து கோவையிலேயே அவர் இருந்துள்ளார்.
மீண்டும் ஏப்ரல் மாதம் பெங்களூருக்கு கணவர் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் கார்த்திக் லட்சுமி நாராயணன் தனது மனைவி நேத்ராவதியை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு வந்திருந்த பிரபுதாநந்தா சுவாமிகளை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது நேத்ராவதியிடம் தனிமையில் பேசிய சாமியார் பிரபுதாநந்தா தனது ஆசைகளை நிறைவேற்றினால் தான் உனக்கு குழந்தை பிறக்கும் என்றும் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னையும் கணவனையும் பிரித்து விடுவேன் என கூறி இருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நேத்ராவதி தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். அப்போது அவரது கணவர் குருஜி சொல்படி நடந்து கொள் என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையே கார்த்திக் லட்சுமி நாராயணனின் நண்பர் ஒருவரின் மனைவி பிரதீபா என்பவர் செல்போன் மூலம் நேத்ராவதியை தொடர்பு கொண்டு உள்ளார். அவரும் பிரபுதாநந்தா சுவாமிகள் சொல்வதை கேட்டு நடக்காவிட்டால் குழந்தை பெற வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறார் .
இதற்கு நேத்ராவதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கார்த்திக் லக்ஷ்மி நாராயணன் குருஜி நந்தாவின் ஆசைகளை நிறைவேற்றாவிட்டால் விவாகரத்து செய்து விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.
பின்னர் நேத்ராவதியை கோவையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு விட்டு சென்று விட்டார். இந்நிலையில் கார்த்திக் லட்சுமி நாராயணன் அனுமதி இல்லாமல் நேத்ராவதி உள்ளே நுழையக்கூடாது என பெங்களூரில் உள்ள அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நேத்ராவதி தனது கணவர் கார்த்திக் லக்ஷ்மி நாராயணன், பிரபுதாநந்தா சுவாமிகள் மற்றும் அவரது தோழி பிரதீபா மீது பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் அவர் கோவைக்கு மீண்டும் திரும்பி வந்தார். தொடர்ந்து தனது கணவரிடம் போனில் பேச முயன்ற போது கார்த்திக் லஷ்மி நாராயணன் தனது குருஜி பிரபுதாநந்தா சுவாமிகள் உன்னுடன் வாழக்கூடாது என சொல்லிவிட்டார் என கூறியுள்ளார்.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நேத்ராவதியுடன் போன் மூலம் பேசிய பிரபுதாநந்தா சாமிகள் என்னுடைய ஆசைகளை நிறைவேற்றினால் மட்டுமே உன்னை கணவனுடன் சேர்த்து வைக்க பூஜைகள் செய்வேன் என கூறி மிரட்டியுள்ளார் .
அதேபோல பிரதீபாவும் வாட்ஸ் அப் மெசேஜ்கள் அனுப்பி குருஜி சொல்வதை கேட்டுக் கொள் என மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து நேத்ராவதி தனது கணவர் கார்த்தி லஷ்மி நாராயணன் ,பிரபுதாநந்தா சுவாமிகள் மற்றும் கார்த்திக் லட்சுமி நாராயணனின் தோழி பிரதீபா ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் விக்னேஷ் –(20) தம்பதியினர் வசித்து வந்தனர். விக்னேஷ் சரக்கு ஆட்டோ டிரைவர். பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்த துர்கா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தான் காதலித்த விக்னேஷை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அப்போது மகளை காணவில்லை என துர்காவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் துர்கா – விக்னேஷ் காதல் ஜோடினர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் துர்காவின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
அதன்பின்னர் திருபுவனத்தில் தனது கணவருடன் குடும்பம் நடத்தி வந்த துர்கா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதற்கிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த துர்கா தூக்கு போட்டு தொடங்கியுள்ளார். வீட்டில் சத்தம்கேட்டு நச்தேகம் அடைந்த உறவினர்கள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக துர்காவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் துர்கா பரிதாபமாக இறந்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் கும்பகோணம் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.
Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.
இவ்வாறு செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு புரட்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதனை வைத்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாவதை போன்று செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படம் உண்மை என்றே பலரால் பரப்பப்பட்டது.
இந்த நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவை வைத்து பெரிய அளவில் மோசடிகள் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண்ணுக்கு ஒரு மொபைலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் அவரின் மகள் என்னை காப்பாற்றுங்கள் என்ற குரல் கேட்டுள்ளது.
அதோடு அந்த அழைப்பில் பேசிய நபர் மகள் உயிரோடு வேண்டும் என்றால் 30 நிமிடத்தில் 50 ஆயிரம் டாலர் தருமாறு கூறியுள்ளனர். அது மகளின் குரல் என்பதால் மகளை அந்த நபர் கடத்திவைத்திருப்தாக நம்பிய அந்த பெண் இதனால் பல்வேறு நபர்களிடம் பணம்கேட்ட நிலையில், தனது தோழிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது அந்த தோழியின் வீட்டில் தான் மகள் இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. உடனே இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த போன்காலில் மகள் குரல் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்பதும், சமூக வலைத்தளத்தில் இருந்து மகளின் குரலை எடுத்த நபர்கள் அதன்மூலம் போலியாக மகளின் குரலை உருவாக்கி அதன்மூலம் மோசடி செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சஞ்சீவ் குமார் (18), என்ற இளைஞர் திருப்பூரில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள தன்னுடைய காதலியுடன் கொண்டாடுவதற்காக கடந்த 7 ம் தேதி திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.
சென்னையில் காதலியுடன் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு 7ம் தேதி இரவு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றார். அவரது காதலியான 16 வயது சிறுமி வாங்கி வந்த குளிர்பானத்தை சஞ்சீவ் குமார் குடித்துள்ளார்.
அதனை குடித்து முடித்ததும், என்னை மன்னித்து விடு உன்னை பழி வாங்குவதற்காகவே சென்னைக்கு வரவழைத்து குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்தேன், என காதலியான சிறுமி சஞ்சய் குமாரிடம் அழுது கொண்டே தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரிப்பதற்குள் அடுத்த அதிர்ச்சி நடந்தது.
அதாவது, சிறுமி, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருப்பதை அறிந்த அவரது தாயார் மற்றும் மூத்த சகோதரி ஆகிய இருவரும் அங்கு வந்து சஞ்சீவ் குமாரை கடுமையாக தாக்கி செல்போனையும் உடைத்துள்ளனர்.
இதனால் பயந்து போன சஞ்சய் குமார் இரவு முழுவதும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி விட்டு மறுநாள் காலை ஆவடியில் உள்ள தனது மாமா செல்வராஜ் என்பவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர், தான் காதலித்த பெண் தனக்கு விஷம் கொடுத்து விட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதன் பின்னர் உடல்நிலை மோசமடையவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சிகிச்சையில் இருந்த சஞ்சீவ் குமார், தன்னுடைய காதலி, தனக்கு குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்து விட்டதாகக் காவல் துறையினரிடம் மரணம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார்.
பின்னர் சஞ்சீவ் குமாரின் உடல் அவருடைய சொந்த ஊரான பரமக்குடிக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை கொலை வழக்காக பதிவு செய்திருப்பதால், போலீசாரின் உத்தரவின்பேரில் சஞ்சீவ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோயம்பேடு போலீசார் கொலை, கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவ் குமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக காதலி சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில், கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோருக்கு இந்த விவகாரம், தெரியவந்ததை அடுத்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். அதன்பேரில் சஞ்சீவ் குமாரை (17) கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள்.
அவர் வெளியே வந்தபிறகும் காதல் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் காதலியான சிறுமி சஞ்சீவ் குமாருக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்ததாக புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இன்றைக்கும் தொடருது மூட நம்பிக்கை. இந்தியாவில், ஒடிசா மாநிலத்தில் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் நாய்களுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
இப்படி நாய்களுக்கு சிறுவர், சிறுமிகளைத் திருமணம் செய்து வைப்பதால் அவர்களிடமிருந்து தீய சக்திகள் விலகி, அந்த தீய சக்திகள் நாய்களுக்கு சென்று விடும் என்று அந்த கிராம மக்கள் இன்றளவிலும் தீவிரமாக நம்புகின்றனர்.
இந்த சடங்குகளைத் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் சோரா என்கிற பகுதியில் பந்த்சாகி பழங்குடியின கிராமம் உள்ளது.
இந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் இருக்கும் சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கும் நாய்களுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
அப்படி, நேற்று கிராமத்தில் உள்ள 11 வயது சிறுவனுக்கும் பெண் நாய்க்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார்கள். அதே போன்று 7 வயது சிறுமிக்கும் ஆண் நாய்க்கும் சீர் வரிசையுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அந்த கிராமத்தில் வளர்கிற குழந்தைகளின் மேல் தாடையில் முதல் பற்கள் வளர்ந்த பின்னர், இந்த திருமண சடங்குகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 280 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியை பெற்றுள்ளது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் தற்போது முன்னிலையில் இருக்கிறது. திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம ஆகியோரின் சதங்களும் ப்ரபாத் ஜயசூரியவின் 10 விக்கெட்டுகளுமே இலங்கையின் வெற்றியை உறுதியாக்கியுள்ளன.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 448 பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸால் தோல்வி அடைந்தது.
அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 6 விக்கெட்டுக்களை இழந்து 591 ஓட்டங்களைப் பெற்றதுடன் அயர்லாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
போட்டியின் 3ஆம் நாளான இன்று(18.04.2023) தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அயர்லாந்து மொத்தமாக 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணியைச் சேர்ந்த ப்ரபாத் ஜயசூரிய 52 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை ஒரு கட்டத்தில் அயர்லாந்து 5 விக்கெட்களை இழந்து 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் அவ்வணி 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது.
ஆனால், ஹெரி டெக்டர் (42), கேர்ட்டிஸ் கெம்ஃபர் (30), ஜோர்ஜ் டொக்ரல் (32), அண்டி மெக்ப்றைன் (10), மார்க் அடயார் (23 ஆ.இ.) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அயர்லாந்து 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனிடையே தனது 11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரொமேஷ் மெண்டிஸ் 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்தார்.
இதுவரை அவர் 51 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் தனது 6ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ப்ரபாத் ஜயசூரிய இரண்டாவது தடவையாக 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.
இதன்போது ப்ரபாத் ஜயசூரிய இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 43 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அடுத்த டெஸ்ட் போட்டியில் மேலும் 7 விக்கெட்களைக் கைப்பற்றினால் அதிவேகமாக 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்த இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவத்தில் யாழ் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான விஜிதா என்ற குடும்பப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண் யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என கூறப்படுவதுடன் , பெண்ணுக்கு 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ளது.
அதேவேளை சுகிர்தன் தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவரும் நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகியவர் எனவும் அவரது மகன் ஒருவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.
சுகிர்தனின் மனைவி கடந்த 2020ம் ஆண்டு தனது இரு பிள்ளைகளுடன் வெளிநாடு சென்று தனித்து வாழ்ந்துவருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலிருந்து பெற்றோலுடன் சுகிர்தன் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் நகை, பணம் இருக்குமிடங்களை மகளிடம் காண்பித்து விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
சுகிர்தனின் வீட்டிற்குள் சென்று வாக்குவாதப்பட்ட பின்னர் தனது உடலில் பெற்றோல் ஊற்றி எரித்த விஜிதா கிண்றுக்குள் குதித்த நிலையில் மீட்கப்பட்டு யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில் தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான சாட்சியங்கள் தென்பட்டதையடுத்து தவிசாளர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேவேளை இலங்கை சட்டங்களின்படி தற்கொலை ஒரு குற்றச்செயல், தற்கொலை செய்தது உறுதியானால் அதன் பின்னணி காரணங்களை தேடி ஆராய்வதில்லை. அதனால் இந்த வழக்கு இத்துடன் நிறைவடைந்து விடும் என சட்டம் கூறுகிறதாம்.
இது இவ்வாறிருக்க தனது இணைப்பாளரை காப்பாற்றுவதில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தீவிர பிரயத்தனம் எடுத்ததன் காரணமாகவே சுகிர்தன் விரைவாக வெளியில் வர முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் புஸ்ஸலாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (18.04.2023) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்குள்ளான நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதிக இரத்தபோக்கு ஏற்பட்டதால் குறித்த மூதாட்டி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது கம்பளை பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 640,371 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,590 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 180,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 165,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,770 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 158,150 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.
யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு நகை செய்வதற்காக அவற்றின் பெறுமதி 12 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது , அவரது கடை மூடப்பட்டு இருந்தது. திகைத்த மாப்பிளைவிட்டார் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது , தொலைபேசியும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
அதனை அடுத்து மணமகன் வீட்டார் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருணாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், குறித்த மாவட்டங்களில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகறிது.
எனவே மக்கள் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தம்பதி உள்ளடங்களாக 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்த கேரள தம்பதி, இஸ்லாமிய அண்டை வீட்டி நண்பர்களுக்காக இப்தார் விருந்து தயாரித்துக் கொண்டிருந்ததாக ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
துபாயில் உயிரிழந்த கேரள தம்பதி குறித்து வெளியான தகவல்
மேலும் கேரளாவினை சேர்ந்த தம்பதியினரான மலப்புரத்தைச் சேர்ந்த வெங்கரா ரிஜேஷ் (வயது 38) மற்றும் அவரது மனைவி ஜெஷி (32) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் நோன்பு துறக்கும் நேரத்தில், தங்கள் இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இப்தார் விருந்து கொடுப்பதற்காக வாழை இலையில் பரிமாறப்படும் பாரம்பரிய உணவை தயார் செய்து வந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஐந்து மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தின் நான்காவது தளத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்திற்கு, மின் கசிவே காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
15 வயதுடைய சிறுமி தனது முகநூல் பக்கத்தில் இளைஞனுடன் ஏற்பட்ட தொடர்பு காதலாகி மாறிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் கனிஷ்ட கல்லூரி ஒன்றில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்று வந்த இந்த சிறுமி ஒருவரிற்கே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அச் சிறுமி அவனது வீட்டிற்கு வந்த போது மனிதாபிமானமற்ற துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சிறுமி கதிர்காமம் காவல்துறையினரால் நேற்று முன்தினம் (16) மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 27 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இந்த சிறுமியிடம் கணவன் மனைவியாக வாழ முன்வந்தபோது அவர் மறுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்ததாக கூறப்படும் சந்தேகநபர் வெற்று பீர் போத்தலை சிறுமியின் உடலில் செருகி கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தவிர சந்தேக நபர் சிறுமியின் கழுத்தை நெரித்து ,இரத்தம் வரும் வரை மூக்கில் வாயை வைத்து சித்திரவதை செய்ததாக சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். காவல்துறை 119 அவசர அழைப்புப் பிரிவிற்கு செய்யப்பட்ட அறிவித்தலின் பேரில் கதிர்காமம் காவல்துறை அதிகாரிகள் குழு சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.