மத்ரிகிரி – பிசோபுர பிரதான வீதியின் சந்தி பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மித்ரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய பாடசாலையொன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நவநகர பிரதேசத்தில் பயிற்சி வகுப்பிற்கு செல்வதற்காக குறித்த மாணவியும் அவரது நண்பர்கள் ஐவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஏனைய மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொஹொம்படமன பிரதேசத்தில் இருந்து நவநகர நோக்கி பயணித்த போது, பிசோபுர பிரதேசத்தில் இருந்து மெதிரிகிரிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் முச்சக்கரவண்டி குன்றொன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வெலிசர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பிறந்து 29 நாளே ஆன பெண் குழந்தையை தாயே மணலில் புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த மூர்த்திகுப்பம் – புதுகுப்பம் கடற்கரையில் இன்று பச்சிளம் குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து கிருமாம்பாக்கம் போலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அதனை தோண்டி பார்க்கையில் குழந்தை புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிஞ்சு குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே புதுக்குப்பம் குளத்துக்கு அருகே குடும்பத்துடன் வசிக்கும் நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த குமரேசன் (32), அவரின் இரண்டாவது மனைவி சங்கீதா (24) ஆகியோர் தங்கள் குழந்தையை காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.
அந்த புகாரில், குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தை உள்ளது. இந்த சூழலில் சங்கீதாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
கடந்த சில மாதம் முன்பு கர்ப்பிணியான சங்கீதா, தனது தம்பி குடும்பத்துடன் கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் குளக்கரைக்கு அருகில் வந்து வசித்துள்ளனர்.
கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய தினம் குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்து கொண்டிருந்தார். குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாகவும் அதன்பின் குழந்தை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த குழந்தை குறித்து அந்த தம்பதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஓடி வந்து பார்த்தபோது மணலில் புதைத்து இறந்து கிடந்த குழந்தை தங்களுடையது என தெரிந்து கதறி அழுதனர்.
தொடர்ந்து போலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புகாரில் கூறியதை போலவே கூறி வந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படவே கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தன் குழந்தையை தானே உயிரோடு புதைத்ததாக தாய் சங்கீதா அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்தார். மேலும் போலிசாரின் விசாரணையில் சம்பவத்தன்று இரவு கணவன் – மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதோடு குடிபோதையில் இருந்த கணவன், இந்த குழந்தை யாருக்கு என மனைவியை தகாத வார்த்தைகளால் கூறி வசைபாடியுள்ளார். இதனால் மிகுந்த விரக்தியடைந்த சங்கீதா பிறந்த 29 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை உயிரோடு மணலில் போட்டு புதைத்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து தாய் சங்கீதவை கைது செய்த போலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே 29 நாட்களான பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்து கொன்றுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பெண் ஒருவர், இத்தாலி இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வீணா (Veena) என்பவர் தனது மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றுள்ளார்.
அப்போது தன்னுடன் விமானத்தில் பயணித்த இத்தாலியை சேர்ந்த டேரியோ(deriyo) என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து போனில் பேசி கொண்டிருந்திருக்கிறார்கள்.
இதனிடையே நட்பாக தொடங்கிய அவர்களது உறவு பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது சந்தித்து கொண்டு இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த வீணா தனது காதலனான டேரியோவுடன் பதிவு திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
இருவரும் சில தினங்களுக்கு முன்னர், அவர்களது நண்பர்களின் உதவியுடன் அமெரிக்காவில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் ஊருக்கு சென்ற தம்பதியினர் இருவரும் கேரள காலச்சார முறைப்படி திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளனர்.
தனது விருப்பத்தை வீணா தனது வீட்டில் தெரிவிக்க , வீணாவின் பெற்றோர் மற்றும் சுற்றத்தின் முன்னிலையில் இருவருக்கும் கேரள காலச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலானதால், பலரும் இந்த தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி 8 மாதங்களே ஆனநிலையில் மனைவியை கொலை செய்த கணவன் வீட்டின் முன்பு மனைவியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் கட்டிட ஒப்பந்தக்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ஜெனிலா ஜோபி (23).
கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் ஜெனிலா ஜோபிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.சேம் மரியதாஸ் பெங்களூருரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆடம்பரமாக நடைபெற்ற திருமணத்திற்குப் பின்னர் ஜெனிலா ஜோபி கணவருடன் பெங்களூருவில் கணவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். புதுமண தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு ஜெனிலா ஜோபிக்கும் கணவர் சேம் மரியதாசுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் ஜெனிலா ஜோபி படுக்கை அறையில் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் ஜெனிலா ஜோபி தூங்கிக் கொண்டிருந்த போது கணவர் சேம் மரியதாஸ் தனது இளம் மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து உள்ளார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் தொட்டாபள்ளபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேம் மரியதாசை கைது செய்ததுடன்mஜெனிலா கோபியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ஜெனிலா ஜோபியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடலைப் பெற்றுக் கொண்ட ஜெனிலா ஜோபியின் உறவினர்கள் பெங்களூருவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு ஜெனிலாவின் உடலைக் கொண்டு வந்துள்ளனர்.
சேம் மரியதாஸ் செய்த கொடூர செயலுக்கு பழிவாங்கும் விதமாக, அவருடைய வீட்டிலேயே ஜெனிலா ஜோபியின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்து கணவரின் வீடு அமைந்துள்ள கருங்கல் திப்பிரமலை பகுதிக்கு உடலைக் கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து புதுப் பெண்ணின் உடல், சேம் மரியதாஸ் வீட்டின் வளாகத்தில் வாசல் முன்பு குழி தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் கன்னியாகுமரியில் கணவரின் வீட்டின் முன்பு அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சேம் மரியதாசுக்கு பெங்களூருவில் வேலை பார்க்கும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால் தான் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கொலை நடந்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது ஒவ்வொருவரும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள தங்களுக்கென ஒரு யூடியூப் சேனல்களை ஆரம்பித்து புது புது விடயங்களையும், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளுவார்கள்..
அப்படி இன்னும் பிரபலமான யூடியூப் ஜோடிகளான கண்ணன் மற்றும் பகவதி தம்பதிகள் தங்களது காதல் கதையை எம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். பள்ளிக் காலத்தில் விடுமுறை சென்றபோது மலர்ந்த இந்த காதல் ஆரம்பத்தில் இது காதலா? இல்லை வயசுக் கோளறா?
என்ற பல தடவை எண்ணிப் பார்த்து இறுதியில் இவர் தான் என் வாழ்க்கை வாழ்ந்தாலும், இறந்தாலும் இனி எல்லாம் இவருடன் தான் என்று ஒரு முடிவெடுத்து பல முயற்சிகளை செய்து காதல் கை கூடி அதற்கு ஆதாரமாக ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறது.
இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் எதை எதையோ வீடியோவாக எடுத்து வெளியிட அது கொஞ்சம் கொஞ்சம் வைரலாக ஆரம்பித்தது. பிறகு நாளடைவில் அதையோ தொழிலாக செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
அப்படி படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது எமது நிகழ்ச்சி ஒரு நேர்காணல் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்கள். இவர்களின் சுவாரஸ்யமான காதல் கதையை தொடர்ந்து கேட்க கீழுள்ள காணொளியை முழுமையாக காணுங்கள்.
கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவி வைஷ்ணவியின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே மசநல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவரது மகள் வைஷ்ணவி (13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி வைஷ்ணவி 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் வைஷ்ணவியைப் பல இடங்களில் தேடி வந்தனர். அப்போது அவர்களது வீட்டின் அருகே இருந்த தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே வைஷ்ணவியின் செருப்பு மட்டும் தனியே கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வைஷ்ணவி அந்த கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக இது குறித்து திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினார்கள். பின்னர் மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவி வைஷ்ணவி உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி வைஷ்ணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது வேறு யாரும் கிணற்றில் தள்ளி கொலை செய்தனரா? என்று தெரியவில்லை.
பள்ளி மாணவியின் மரணத்தில் மர்மம் நீடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் மரணத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் டைட்டானிக் கப்பல் வடிவிலான கனவு இல்லத்தை மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கட்டி வருகிறார். மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மிண்டு ராய்(52) 3 மாடிகள் கொண்ட டைட்டானிக் கப்பல் வடிவிலான கனவு இல்லத்தை கட்டி அசத்தி வருகிறார்.
இவர் கொல்கத்தாவில் வாழ்ந்து வந்த போதே, கப்பல் வடிவிலான வீட்டை கட்ட வேண்டும் என்று கனவுடன் இருந்துள்ளார். இதற்காக பல்வேறு பொறியாளர்களை அவர் அணுகியும், யாரும் அதற்கு ஒத்து வராத நிலையில், தனது கட்டுமான அனுபவத்தை வைத்து தானே களத்தில் இறங்கி அவரது கனவு இல்லத்தை 2010ம் ஆண்டு கட்டத் தொடங்கி உள்ளார்.
ஆனால் கட்டிட பணி தொடங்கிய சிறிது காலத்திலேயே அவருக்கு பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாளத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டுமான வேலை செய்ய மீண்டு ராய் சென்றுள்ளார்.
அதில் கிடைத்த பணம் மற்றும் அனுபவத்தை கொண்டு அவர் மீண்டும் அவரது கனவு இல்லத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார். மீண்டு ராயின் கனவு கப்பல் இல்லம் 39 அடி நீளமும் 13 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்டுள்ளது.
மீண்டு ராயின் வீடு தற்போது அந்த பகுதியின் முக்கியமான சுற்றுலா தளமாக மாறியுள்ளது. இந்த டைட்டானிக் கப்பல் வடிவிலான வீட்டிற்கு சுமார் 15 லட்சம் வரை செலவு செய்து இருக்கும் நிலையில், மீண்டு ராய் வீட்டுக்கு அவரது தாயின் பெயரை வைத்துள்ளார்.
கட்டிடப் பணிகளை அடுத்த வருடம் முடிக்க திட்டமிட்டு இருக்கும் மீண்டு ராய், இந்த வீட்டின் மேல் தளத்தில் உணவகம் ஒன்றை அமைத்து அதன் மூலம் வருமானம் ஈட்ட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பிரேசில் மொடல் ஒருவர் தனது வியர்வைத் துளிகள் அடங்கிய வாசனை திரவியத்தை ஒன்லைனில் விற்பனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது ஆண்களை ஈர்க்கிறது மற்றும் “கவர்ச்சியாக” மணக்கிறது என்று அவர் கூறுகிறார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 29 வயதான மொடல் மற்றும் ஒன்லைன் செல்வாக்கு பெற்ற வனேசா மௌரா (Wanessa Moura), தனது புதிய வாசனை திரவியத்தின் காரணமாக அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார். அதில் அவரது உடல் வியர்வை ஒரு மூலப்பொருளாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
சாவோ பாவ்லோவைச் சேர்ந்த வனேசா மௌரா, தற்போதைய காதலன் மற்றும் முன்னாள் துணை இருவரும் தனது இயற்கையான உடல் வாசனையை ‘கவர்ச்சியான மற்றும் உற்சாகமானவை’ என்று பாராட்டியதாகவும், இதுவே, தனது வியர்வையைப் பயன்படுத்தி பிரத்யேக வாசனை திரவியத்தை உருவாக்க தூண்டுதலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த வியர்வை கலந்த வாசனை திரவியத்திற்கு அவர் ‘Fresh Goddess’ என்று பெயர் வைத்துள்ளார். ஒவ்வொரு வாசனை திரவிய போத்தலிலும் அவரது உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட 8 மில்லி லிட்டர் வியர்வை இருப்பதாக கூறுகிறார்.
இது டேட்டிங் செய்வதற்கும் நீங்கள் விரும்பும் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்கும் சிறந்த நறுமணமாக அமையம் என்று அவர் கூறுகிறார். Fresh Goddess வாசனை திரவியத்தின் காரணமாக இரண்டாவது முறையாக டேட்டிங் செய்ய அழைக்கப்பட்டதாக, அவரைப் பின்தொடரும் நபர் ஒருவர், இந்த வாசனை திரவியத்தின் ஈர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தியதாக வனேசா மௌரா கூறுகிறார்.
“எனது இயற்கையான வாசனை ஆண்களை கவர்ந்திழுக்கிறது, அதனால் நான் என் வியர்வையின் துளிகளை வாசனை திரவியத்தின் நறுமணத்திற்கு அடித்தளமாக பயன்படுத்தினேன்,” என்று மௌரா மேலும் கூறினார்.
“எனது வாசனை திரவியமாக மாறிய இந்த காதல் மற்றும் பாலியல் பானத்திற்கான சூத்திரத்தில் எனது வியர்வை மிக முக்கியமான மூலப்பொருள். டேட்டிங் செய்வதற்கும், உங்கள் துணையுடன் இனிமையான அனுபவங்களை அனுபவிப்பதற்கும் அல்லது நீங்கள் விரும்புபவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது சிறந்த வாசனை திரவியமாகும்” என்று அவர் விளம்பரப்படுத்திக்கொள்கிறார்.
மௌரா தனது வியர்வை கலந்த வாசனை திரவியம் ஒரு சக்திவாய்ந்த பாலுணர்வை ஏற்படுத்தும் என்றும், 50மிலி போத்தலுக்கு 138 டொலர் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 45,000 ரூபா) என்ற விலையில் விற்கிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக தினமும் வாழ்வில் நடக்கும் செயல்களை 2 மணிநேரத்திற்குள் மறந்துவிடுகின்றாராம் ஒரு இளம் பெண். அமெரிக்காவை சேர்ந்த ரிலே ஹார்னர் என்ற மாணவி கல்லூரியில் கல்வி பயின்று வரும் இளம் வயதினர்.
இவரது வயது 16. இவர் நடனம் ஆடுவதில் சிறப்பு பெற்றவர். அந்த மாணவி நடனம் ஆடிக் கொண்டிருந்த வேளையில் தனது சமநிலையை இழந்த ஒரு நபர் இந்த மாணவி மீது தவறுதலாக விழுந்ததால் இவர் மயக்கம் அடைந்துள்ளார்.
பின் ரிலேயின் தாயார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வேளையில் 30 தொடக்கம் 40 வரையான எண்ணிக்கையில் அந்த மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
மறுநாள் காலையில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றும் நினைவில் இல்லாமல், அனைத்தையும் மறந்துள்ளார். அன்றைய நாள் ஜூன் 11. அந்த திகதியில் இவர் நடனம் ஆட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதே போலவே விடியும் ஒவ்வொரு நாளையும் இரண்டு மணி நேரத்திற்கு நினைவுப்படுத்திக் கொள்கின்றார்.
ஆகவே தனக்கு விபத்தில் தான் இவ்வாறு நடந்துள்ளது என்று நினைவுப்படுத்திக் கொள்வார். ஆனால் மீண்டும் இரண்டு மணிநேரத்திற்குள் அதை மறந்து, ஜூன் 11ம் திகதிக்கே வந்துவிடுவாராம்.
அந்த மாணவிக்கு, விசித்திரமான மூளை நோய் ஏற்பட்டுள்ளது. ஆகவே மூளையதிர்ச்சி சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது டிபிஐ (TBI)இன்னும் முழுமையாக மாற்றப்படவில்லை. ஆகவே அவரது நினைவுகள் தற்போது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும்.
இவர் மருந்து எடுத்துக் கொண்டு வருவது தான் சிறந்த ஒன்றாக கூறிகின்றனர். எவ்வாறு இருப்பினும் இவர் மீண்டும் பழைய நிலைமைக்கு வரமாட்டார் எனவும் கூறிகின்றனர். இவ்வாறு பலர் பலவற்றை கூறினாலும் ரிலேயின் குடும்பத்தினர் அவருக்கு ஊக்கமளித்து அவருக்கு உதவியளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெலியத்தயில் இருந்து மருதானை நோக்கிச் சென்ற காலி குமாரி விரைவு தொடருந்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். கடந்த 10ஆம் திகதி காலை,
காலி பிங்கேயவுக்கு அருகில் இளைஞர் ஒருவர் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி மொரிஸ் வீதி, அம்பலன்வத்தையில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவன்,
நிமல மதுஷன் தஹநாயக்க என்ற 25 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த காரொன்று கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. எனினும் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான காரை கனரக வாகனத்தின் உதவியுடன் கடலுக்குள் இருந்து மீட்கும் நடவடிக்கையினை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போக்குவரத்து சட்ட விதிமுறைகளுக்கு அமைய வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தம்பதி உள்ளடங்களாக 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.
ஐந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் நான்காவது தளத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்திற்கு, மின் கசிவே காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பலியான இந்தியர்களில், தமிழகத்தை சேர்ந்த அப்துல் காதர், குடு சாலியாகுண்ட் , கேரள மலப்புரம் வெங்கரையை சேர்ந்த ரிஜேஷ் கலங்காடன் , அவரது மனைவி ஜெஷி கண்டமங்கலத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கேரளாவினை சேர்ந்த தம்பதியினரான மலப்புரத்தைச் சேர்ந்த வெங்கரா ரிஜேஷ் (வயது 38) மற்றும் அவரது மனைவி ஜெஷி (32) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதிக வெப்பத்தை உள்ளீர்த்தலால் ஏற்படக்கூடிய நீர்ச்சத்து குறைபாடானது மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் இந்திக கருணாதிலக எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று (17.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அதிகளவில் வெயிலில் அன்றாட செயற்பாடுகளில் அல்லது தொழிலில் ஈடுபடக் கூடியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
எனவே இந்த குழுவினர் அநாவசியமாக வெயிலில் செல்வதை நிச்சயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் உள்ளிட்ட ஏனைய அனைவரும் அதிக வெப்பத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்து கொள்வதற்காக ஆடைகளை அணியும் போதும் இள நிறத்தில் அணிவது பொறுத்தமானதாகும்.
அத்தோடு அதிகளவில் நீர் அருந்துதல் மிக முக்கியமானதாகும். எனவே நாளொன்றுக்கு சுமார் இரண்டரை லீட்டர் நீர் அருந்துதல் பொறுத்தமானது. நீர் ஆகாரங்கள் அல்லது நீர் தன்மையுடைய உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமே தவிர, குளிர் பானங்களை அளவுக்கதிகமாக அருந்துவது பொறுத்தமற்றது.
இதன் காரணமாக ஏனைய பாதிப்புக்கள் ஏற்படக் கூடும். அதிக வெப்பம் காரணமாக மயக்கம், சோர்வு மற்றும் வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்படக் கூடும். திடீரென இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக வைத்தியர்களை நாட வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிக வெப்பம் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் போது மரணம் ஏற்படக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. எனவே குழந்தைகள், முதியோர், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சகலரும் தமது சுகாதார நிலைமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா நையினாமடு பகுதியில் இன்று (16.05) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியானதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். நெடுங்கேணி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த,
செட்டிகுளம் கப்பாச்சியை சேர்ந்த 23 வயதுடைய ராமலிங்கம் அனுசன் மற்றும் அவரது மனைவி இருவரும் முன்னாள் சென்றுகொண்டிருந்த பட்டா ரக வாகனத்தில் பின்புறமாக மோதுண்டுள்ளனர்.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய அனுசன் பலத்த காயமடைந்து மரணமடைந்ததுடன், மனைவி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். இவ் விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில்,
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) அதிகாலையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயல் வேலைக்காக சென்று கொண்டிருந்த இரு மாட்டு வண்டிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தத நபர் மோதியுள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஒரு வண்டிலின் சக்கரம் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் மற்றுமொரு வண்டியின் மாட்டினது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சாய்ந்தமருது 12 ஐச் சேர்ந்த ஜமால்தீன் ஹாறூன் (வயது 42) என்பவரே மரணமடைந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டார். இதன்பின்னர் மரணமடைந்தவரின் பிரேதம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு,
பிரேத பரிசோதனையின் பின்னர் மாலை சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விபத்துக் குறித்து நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி – நெலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலவத்த, பாமன்கட பிரதேசத்தில் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயிருந்த இரண்டரை வயது குழந்தையின் சடலம் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தை இருந்த வீட்டுக்கு அருகில் ஓடும் கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மதியம் முதல், காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் வீட்டின் அருகில் உள்ள ஓடையில் இருந்து குழந்தையின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். புத்தாண்டுக்காக பெற்றோருடன், நெலுவ பிரதேசத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு வந்த இரண்டரை வயது குழந்தை நேற்று முதல்(15/04/2023) காணாமல் போயுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர் கெகுலுந்தல லியனகே, டொன் நிவேன் தேவ்மிர என பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழந்தை புத்தாண்டுக்காக அளுத்கம, தர்காநகரை சேர்ந்த தனது பெற்றோருடன் தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளது.
தனது மனைவி வீட்டில் இருந்த குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நெலுவ கினியாவல வீதியில் குழந்தை நடந்து சென்றதாக வீதியில் பயணித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன குழந்தை தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க நெலுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.