கடும் வெப்பமான காலநிலை தொடர்பில் வைத்தியர்களால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

வெப்பமான காலநிலை..

தற்போது வெப்பமான காலநிலை நிலவுவதால் நோயாளிகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சூரியன் எமது பிரதேசத்தில் உச்சம் கொடுப்பதால் மத்தியான நேரங்களில் வெளிப்பயணங்களை தவிர்ப்பது நல்லது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (15.04.2023) யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், போதிய அளவு நீராகாரங்கள் அருந்த வேண்டும்.

குறிப்பாக ஒருவர் ஒரு நாளைக்கு 2-3 லீட்டர் அளவு நீரை அருந்துதல் வேண்டும். நீர் தன்மையுள்ள பழங்களான வெள்ளரிப்பழம், கெக்கரி போன்றவற்றை உண்ண வேண்டும்.

நமது சூழலில் காணப்படும் நிழல் தரும் மரங்கள் மிக முக்கியமானதாகும். இவற்றை இத் தருணத்தில் நாங்கள் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை கடந்த சில மாதங்களாக நிலவி வந்த மருந்து தட்டுப்பாடு தற்போது பூரணமாக நீங்கி உள்ளது.

கண்டிப்பாக கிளினிக் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற இன்சுலின் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவியது. தற்போது சுகாதார அமைச்சிலிருந்து எமக்கு அந்த மருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிறுநீரக நோயாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய மருந்துகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனால் நாங்கள் மருத்துவ சேவையை செவ்வனே செய்யக்கூடியதாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கோவிட் தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

இன்றுவரை இவ்வாறு ஐந்து நோயாளிகள் இனங் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுவாசம் தொடர்பான தொற்றுடன் காணப்படுகின்றனர். இந்தத் தொற்றானது சமூகத்தில் பரவலடையாமல் இருப்பதற்கு முகக் கவசம் அணிதல் வேண்டும், சமூக இடைவெளியை பேணுதல் வேண்டும், மக்கள் நெருக்கமாக நடமாடும் இடங்களை தவிர்த்தல் வேண்டும். ஏனென்றால் கொவிட் தொற்று சமூகத்தில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அல்லது தானாகவே இல்லாமல் போகலாம். நாங்கள் ஆரம்ப கட்டத்திலேயே சில முன் காப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவதன் மூலம் சமூக பரவலை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக ஏற்படலாம்.

இதனால் இறப்புக்கள் ஏற்படலாம். ஆகையால் வயது முதிர்ந்தவர்கள் முகக் கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும். அடுத்தபடியாக கர்ப்பிணி தாய்மார்களும் இதனால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடியவர்களாக உள்ளனர். எனவே அவர்களும் முகக் கவசங்களை அணிவது நல்லது.

எனவே இரண்டு வாரங்களுக்கு வாரங்களுக்கு சன நெரிசல் உள்ள இடங்களைத் தவிர்ப்பது நல்லது. அன்டிஜன்ட் பரிசோதனை, பி.சி.ஆர் பரிசோதனை செய்து சுகாதார அமைச்சுக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளோம்.

சுகாதார அமைச்சிலிருந்தும் எமக்கு அறிவித்தல்கள் வரும். கடந்த காலங்களில் கடைப்பிடித்த கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் (17.04.2023) பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

பாடசாலை..

நாளைய தினம் (17.04.2023) அரச பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று,

பகிரப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு பாடசாலை விடுமுறை தொடர்பில் பகிரப்படும் தகவல் வெறும் வதந்தி என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாளை(17.04.2023) வழமைபோன்று அரச பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன.

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தா.க்.கு.த.ல் : காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

வேப்பங்குளம்..

வவுனியா, வேப்பங்குளம், 60 ஏக்கர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து மாணவன் மீது தா.க்.கு.த.ல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கா.ய.ம.டைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (15.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருவேறு பிரபல பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் கடந்த சில நாட்களாக வா.ய்.த.ர்.க்.க.ம் ஏ.ற்பட்டு மு.ரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு மாணவர்களுக்கும் இடையில் கை.க.ல.ப்.பு ஏ.ற்பட்ட நிலையில் மாணவன் ஒருவரின் பெற்றோர் தலையிட்டு சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்பின் நேற்று ( 15.04) மாலை வவுனியா, வேப்பங்குளம், 60 ஏக்கர் பகுதியில் உள்ள மாணவனின் வீட்டுக்குள் பு.கு.ந்.த மற்றைய மாணவன் உள்ளிட்டோர் குறித்த வீட்டில் வசித்த மா.ண.வ.ன் மீது தா.க்.கு.த.ல் ந.ட.த்.திவிட்டு அ.ங்கிருந்து செ.ன்றுள்ளனர்.

இதனால் காயமடைந்த 16 வ.ய.து மா.ண.வ.ன் வவுனியா வைத்தியசாலையில் சி.கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குறித்த இரு பகுதியினரும் 16 தொடக்கம் 17 வயதான மா.ணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!

புளியங்குளம்..

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை இரவு (15.04) புளியங்குளம், புதூர் பகுதியில் உள்ள தனது வயல் காவலுக்கு சென்றுள்ளார்.

இன்று (16.04) காலை விடிந்தும் குறித்த இளைஞர் வீடு திரும்பாமையால் அவரது குடும்பத்தினர் குறித்த இளைஞரைத் தேடிச்சென்ற போது வயல் பகுதியில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் சடலத்தை மீட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என்பவராவார்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குறித்த இளைஞனின் மூத்த சகோதரர்,

புதூர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் உழவு இயந்திரத்தில் கடக்கின்ற போது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு புகையிரதத்தில் உழவு இயந்திரம் மோதி அவரது நண்பருடன் மரணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

தாயிற்கு வயது 40 தான் ஆனால் 44 குழந்தைகள் : பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய கணவன்!!

உகண்டாவில்..

உகண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 44 குழந்தைகள் இருக்கிறதாம் அதுவும் 40 வயதில், இதெப்படி என பலரும் குழம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்.

ஆப்பிரிக்கா, உகாண்டாவில் வசிக்கும் மரியம் நபதன்சி என்ற 40 வயதுப் பெண் ஒருவர் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். அதனால் உகாண்டா மக்களிடையே ‘உகாண்டாவின் தாய்’ என்று அழைக்கப்படுகிறார்.

மரியம் 12 வயதில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மரியத்தின் பெற்றோர் அவளை விற்று விட்டனர். 13 வயதில் இவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து குழந்தைகளைக் பெற்றெடுத்திருக்கிறார். இவருக்கு 44 குழந்தைகள் பிறந்தாலும், அதில் 6 குழந்தைகள் தற்போது உயிரோடு இல்லை.

தற்போது 20 ஆண் குழந்தைகளையும், 18 பெண் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இவர் தனது பிரசவத்தில் பல குழந்தைகளை பெற்றெடுக்கும் தனித்துவமான உடல் நிலையை கொண்டுள்ளார்.  ஒவ்வொரு முறையும் இரட்டையர்கள், மூவர் என்ற அடிப்படையில் தான் கருவுற்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மரியம் 44 குழந்தைகளையும் பெற்றெடுத்த பின்னர் அவர்களைப் பார்த்துக் கொள்ளாமல் அவரின் கணவன் வீட்டிலிருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். ஆனால் மரியம் இருக்கும் பிள்ளைகளை எல்லாம் இரவு பகல் பாராது அயராமல் உழைத்து வளர்த்து வருகிறார்.

நதிக்கரையிலிருந்து வீசிய துர்நாற்றம் : நாய்கள் சுற்றி வந்த இடத்தைத் தோண்டியபோது தெரியவந்த பயங்கரம்!!

ஈக்வடாரில்..

ஈக்வடார் நாட்டில் நதிக்கரையிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும், ஒரு குறிப்பிட்ட இடத்தை நாய்கள் மோப்பம் பிடித்தபடி சுற்றி வருவதையும் கண்ட அப்பகுதி மீனவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் அந்த இடத்தைத் தோண்டச் செய்தபோது கண்ட காட்சி அப்பகுதியில் நின்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மூன்று அழகிய இளம்பெண்கள், வாய்களில் துணி அடைக்கப்பட்டு,

கழுத்தறுபட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், ஆழமற்ற மண்ணில் புதைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

மொடலாகிய Nayeli (22), மாணவிகளாகிய Yuliana (21) மற்றும் Denisse (19) ஆகிய அந்த மூன்று இளம்பெண்களும் கடற்கரைக்குச் செல்வதாக தத்தம் வீடுகளில் கூறிச்சென்ற நிலையில் வீடு திரும்பாததால் அவர்களுடைய பெற்றோர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் அவர்களைத் தேடிவந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறக், மணலில் புதைக்கப்பட்டிருந்த அவர்களுடைய உடல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு மொபைலும்,

அவர்கள் பயணம் செய்த வாடகை வாகனமும் கிடைத்துள்ளதால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அவை பெரிதும் உதவக்கூடும் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

நிற்காமல் சென்ற பேருந்து.. கல்லூரிக்கு நேரமானதால் மாணவி செய்த பயங்கர செயல்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்திலுள்ள ஹோலாலுஎன்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்வேதா (வயது 20) என்பவர் அங்கில்லை அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு கர்நாடக அரசு பேருந்தில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் படிக்கும் கல்லூரி அருகே பேரூந்துநிலையம் இல்லாத நிலையில், சற்று தொலைவில்தான் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதனால் அங்கு இறங்கி கல்லூரிக்கு சென்றுவந்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கிளம்பு நேரம் ஆனா நிலையில் கல்லூரி செல்லவும் தாமதம் ஆகியுள்ளது.

இதனால் காலதாமதம் ஆகிவிட்டதால் கல்லூரி அருகில் பேருந்தை நிறுத்துமாறு ஸ்வேதா பேருந்து நடத்துனரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதனை ஏற்காத நடத்துனர் கல்லூரி அருகே பேருந்து நிற்காது என கூறியுள்ளார்.

கல்லூரிக்கு தாமதம் ஆவதால் பதறிய அந்த மாணவி பேருந்து சென்றுகொண்டிருக்கும்போதே அதிலிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் தலையில் படுகாயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த செய்தி அறிந்ததும் ஸ்வேதாவின் மரணத்துக்கு நீதி கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி அருகே பேருந்து நிலையத்தை அமைக்கவேண்டும் என பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும் அதனால்தான் இந்த சம்பவம் நடைபெற்றது என்றும் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கை அனைத்தும் ஏற்கப்படும் என உறுதியளித்த நிலையில், போராட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகம் வீங்கிய நிலையில் பார்க்கவே பரிதாபமாக மாறிய நடிகை : சிகிச்சையிலும் மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை!!

மாளவிகா அவினாஷ்..

நடிகை மாளவிகா அவினாஷ் அண்மையில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைக் பெற்றுக்கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு ஏற்பட்டதை விபரமாக கூறியிருக்கிறார்.

தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஆதி, பைரவா, கைதி மாஸ் ஹிட் கொடுத்த கே.ஜி.எப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் என பழ மொழித்திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியிருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்.

அண்ணி, சிதம்பர ரகசியம் ராஜராஜேஸ்வரி, அரசி போன்ற சீரியல்களிலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமாகியிருக்கிறார். நடிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் இணைந்து மக்களுக்கு சிறந்த தொண்டாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒற்றைத் தலைவலியால் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது மக்களுக்கு எச்சரித்து அறிவுரை ஒன்றையும் கூறியிருக்கிறார்.

ஒற்றைத் தலைவலி என்பது இப்போது மக்களிடையே ஏற்படும் மிக மோசமான தலைவலிகளில் ஒன்றாகும். நீரிழப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிகரிக்கும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

ஒற்றைத் தலைவலி அதிகரிக்கும் போது, குமட்டல், தலைச்சுற்றல், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது வழக்கமான தலைவலியைக் காட்டிலும் அதிக வலியை ஏற்படுத்தும். நம்மை பலவீனமாகவும் சோர்வாகவும் உணர வைக்கும். கடுமையான வலி, குமட்டல், வாந்தி, அசௌகரியம் ஆகியவை இதன் அறிகுறியாகும்.

ஒற்றைத் தலைவலி என்பது உலகளவில் 148 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் ஒரு பொதுவான பாதிப்பாகும். பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஒற்றைதலைவலியால் தான் பாடாத பாடுவதாகவும் இது தொடர்பில் எப்போது எச்சரிக்கையாக இருக்கும் படியும் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

திருமணமான 8 மாதத்தில் மனைவி கொலை… பெண்ணின் உடலை கணவர் வீட்டு வாசலில் புதைத்த உறவினர்கள்!!

குமரியில்..

குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஜான்சன் என்பவரது மகள் ஜெனிலா கோபிக்கும் (23), கருங்கல் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கு 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சேம் மரியதாஸ் பெங்களூரூவில் தங்கி பணியாற்றி வந்ததால், மனைவி ஜெனிலாவும் கணவருடன் பெங்களூரூவுக்கே சென்று விட்டார். இதனிடையே, சேம் மரியாதாஸுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 11ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெனிலா ஜோபியை கணவர் சேம் மரியதாஸ் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் தொட்டாபள்ளபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேம் மரியதாசை கைது செய்தனர்.

பின்னர், பிரேத பரிசோதனைக்கு பிறகு ஜெனிலா ஜோபியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊருக்கு உடலை எடுத்து வந்த உறவினர்கள், பெற்றோர் வீட்டில் புதைக்காமல், கணவரின் வீட்டின் முன்பகுதியில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, கருங்கல் திப்பிரமலை பகுதிக்கு உடலை கொண்டு சென்று, சேம் மரியதாஸின் வீட்டின் வளாகத்தில் வாசல் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. இதையறிந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

மகளின் கணவன் செய்த செயலுக்கு பழிவாங்கும் விதமாக அவருடைய வீட்டிலேயே புதுப்பெண்ணின் உடலை உறவினர்கள் புதைத்ததாக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டிஷன் கல்யாணம்.. ஒப்பந்த பத்திரத்துடன் நண்பனின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள்.. அதிர்ந்துபோன உறவினர்கள்!!

திருமணத்தில்..

திருமணத்தின் பின்னர் மணமகள் எப்படி இருக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திருமணங்கள் எல்லாம் பெரியவர்களின் தீர்மானத்திற்கமைய இரண்டு குடும்பத்தினர் ஒன்றிணைந்து செய்யும் ஒரு சடங்காகும்.

இந்த பந்தத்தில் இரு தம்பதியினர் மற்றவர்கள் போற்றும் அளவிற்கு பல ஆண்டு காலங்கள் சேர்ந்து வாழ்ந்து அவர்களின் பரம்பரையினருக்கு பெறுமை சேர்க்க ஆசைப்படுவார்கள்.

மேலும் தற்போது திருமணங்கள் வித்தியாசமான முறையில், ஆண் பெண் பேதம் இல்லாமல் இடம்பெற்றுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் திருமணத்திற்கு பின்னர் நண்பனை எவ்வாறு பார்த்து கொள்ள வேண்டும் என்பதனை ஒரு ஒப்பந்தமாக தயார் செய்து மணமகளுக்கு கொடுத்துள்ளார்கள்.

இதனை சரியாக படித்து காட்டி இதற்கு சம்மதம் என்றால் என்னுடைய நண்பனை திருமணம் செய்து கொள்ளலாம் என நண்பர்கள் சேர்ந்து கலாய்த்துள்ளார்கள். மேலும் குறித்து மணப்பெண்ணும் ஒப்பந்தத்திற்கு சரி என தலையாட்டியப்படி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் திரைபடங்களில் பார்த்திருப்போம். மாறாக நிஜ வாழ்க்கையில் இவ்வாறு நடப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் அங்கிருந்த உறவினர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள், “ என்னடா பண்ணுறீங்க” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

கணவன், மனைவி மீது சீமெந்து கலவையை ஊற்றி அடாவடி.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!!

கரூரில்..

கரூர் மாநகராட்சி ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதியில், சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெஜெ நகர் குடியிருப்பு பகுதியில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி இருக்கிறார்கள்.

இதனால் அந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவர் விரிசல் விட்டுள்ளது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் ஒப்பந்ததாரரிடமும், நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அந்த வீட்டின் படுக்கை அறை சமையல் அறை, ஹால் உள்ளிட்ட இடங்களில் இரும்பு ஜாக்கியை கொண்டு முட்டு கொடுத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சாக்கடைக்கும், அவர்களது பக்கவாட்டு சுவருக்கும் உள்ள இடைவெளியில் காங்கிரிட் போட வேண்டும் என்றால் 43 ஆயிரம் கொடுத்தால் தான் போடுவோம் என ஒப்பந்ததாரர் வீட்டின் உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்தும் வீட்டின் உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். எனினும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனினும் குடியிருப்புகளில் பள்ளம் தோண்டப்பட்டும், கம்பிகள் கட்டப்பட்டும் பணிகள் அப்படியே கிடந்ததால் மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் மக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் கான்கிரீட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

பாதிக்கப்பட்டவர் வீட்டின் முன்பு பணம் கொடுக்காமல் கான்கிரீட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறியிருக்கிறார். இடிந்த வீட்டின் சுவரை கட்ட தம்பதியிடம் ரூ.43,000 நிதி கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வீட்டின் உரிமையாளர்களான பாலச்சந்தர் மற்றும் கோமதி தம்பதிகள் இருவரும் கழிவுநீர் வடிகால் குழியில் இறங்கி போராடினார்கள். அதனை பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அவர்கள் மீது கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் தம்பதிக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டது. இதனிடையே கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவையைக் கொட்டும் வீடியோ வெளியானதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்தனர்.

காதலி மீது சந்தேகம்… காதலிக்கு கேக் ஊட்டிவிட்டு கழுத்தை அறுத்த காதலன்!!

பெங்களுருவில் ..

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே இருக்கும் லாகரே என்ற பகுதியில் வசித்து வந்தவர் நவ்யா.24 வயதுடைய இளம்பெண்ணான இவர், கல்லூரி முடித்துவிட்டு காவல் துறையின் உள் பாதுகாப்பு பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நவ்யாவுக்கு, பிரசாந்த் குடும்பம் உறவினர் ஆவார்.

எனவே இவர்கள் காதல் விவகாரத்துக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பாது என்ற நம்பிக்கையில் காதலித்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த செவ்வாய்கிழமை நவ்யாவுக்கு பிறந்தாநாள் வந்துள்ளது.

அப்போது அவரது பிறந்தநாளை கொண்டாட பிரசாத்துக்கு நவ்யா குடும்பத்தினர் அழைப்பு விடுத்தனர். அப்போது தான் பிசியாக இருப்பதாக பிரசாந்த் கூறியதால் நவ்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று (ஏ.14) நடைபெற்றது.

எனவே பிரசாந்தும் காதலி நவ்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்தார். அப்போது இரவு நேரத்தில் கேக் வெட்டிய நவ்யாவுக்கு காதலன் பிரசாந்த் கேக் ஊட்டி விட்டுள்ளார்.

அப்போது கேக்கை வாங்க வாயை திறந்த நவ்யாவின் கழுத்தை சட்டென்று அறுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ந்து போன பெண் வீட்டார் கத்தி கூச்சலிட்டனர். அதோடு இதுகுறித்து உடனே காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

நவ்யாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் அதுக்குள்ளேயே துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நவ்யாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்த காதலன் பிரசாந்தையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது காதலி நவ்யா, வேறு ஒருவருடன் இரகசியமாக பேசி வந்ததாகவும், இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும், நவ்யா மீதுள்ள சந்தேகத்தினால்தான் அவரை கொலை செய்ததாவும் காதலன் பிரசாந்த் வாக்குக்கமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காதலி மீது சந்தேகத்தினால் அவரது பிறந்தநாளில் கேக் ஊட்டிவிட்டு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனின் வெறிச்செயல் பெங்களுருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோர விபத்தில் சிக்கி 24 வயது இளைஞன் பரிதாபமாக பலி!!

மிஹிந்தலையில்..

மிஹிந்தலை பகுதியில் துவிச்சக்கர வண்டியொன்று நாயின் மீது மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மிஹிந்தலை நாமல் ஏரியைச் சேர்ந்த அசென் இசுரா (24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும்,

படுகாயமடைந்த நிலையில் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக இளைஞர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பயங்கர விபத்து : குழந்தைகள்-பெண்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

விபத்து..

எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று (15.04.2023) மாலை 4.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 6 குழந்தைகள், 4 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வீதியில் சென்ற தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த விபரீதம் : நகைகளும் அபகரிப்பு!!

பம்பைமடு பகுதியில்..

வவுனியா, பம்பைமடு பகுதியில் வீதியில் சென்ற தாய் மற்றும் மகள் மீது வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.ல் ந.ட.த்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் என்பனவும் கொ.ள்.ளை.யி.ட.ப்.ப.ட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் நேற்று (15.04) தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் வசிக்கும் தாயும், எட்டு மாத கர்ப்பிணியான அவரது மகளும் புத்தாண்டு தினத்தன்று (14.04) மோட்டர் சைக்கிளில் வவுனியா நகரில் இருந்து பூவரசன்குளம் நோக்கி சென்றுள்ளனர்.

இரவு 8.30 மணியளவில் பம்பைமடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அப் பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக் கழகத்திற்கும், பம்பைமடு இராணுவ முகாமிற்கும் இடைப்பட்ட சிறிய பற்றைக் காட்டுக்குள் இருந்து,

முகத்தினை துணியினால் மூ.டி க.ட்டியவாறு வந்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வ.ழிமறித்து அவர்கள் மீ.து வா.ளா.ல் வெ.ட்.டி தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.யு.ள்.ள.ன.ர். அத்துடன், அவர்கள் அணிந்திருந்த சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 6 அரைப் பவுண் நகைகளை கொ.ள்.ளை.ய.டி.த்.து.ள்.ள.து.ட.ன்,

அவர்களது பையில் இருந்த ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தொலைபேசிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் 8 மாத கர்ப்பிணி பெண் ஆகிய இருவரும்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சோக தினமாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்… 4 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

சேலத்தில்..

சந்தோஷமாக தன்னுடைய பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டவர்களுக்கு பர்த்டே பார்ட்டி துக்க தினமாக மாறி உயிரையும் பறிக்கும் என்பது தெரியாமலேயே அன்றைய பொழுது விடிந்தது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆனைப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சரவணன் (21).

எடப்பாடி கோணமோரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சரவணன், பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று சரவணனுக்கு பிறந்த நாள் என்பதால், தன்னுடைய கல்லூரி நண்பர்கள் 7 பேரையும், மேட்டூர் அரசு கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் சேர்த்துக் கொண்டு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டிருந்தார்.

இதையடுத்து 10 மாணவர்களும் ஒன்றாக நேற்று காலை 11 மணியளவில் கல்லூரிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து கொண்டு, நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தேவூர் கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காகச் சென்றனர்.

அங்கு ஆற்றில் சுமார் 2 மணி நேரம் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குளித்து, ஆற்று தண்ணீரில் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர். அதன் பின்னர் அனைவரும் பிற்பகல் 1 மணியளவில் மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினர்.

அந்த மாணவர்கள் ஆற்றில் மேடான இடத்தில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் அனைத்து இடமும் ஒரே மேடாக தான் இருக்கும் எனக் கருதி 5 மாணவர்கள் தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்திற்கு ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு தண்ணீருக்குள்ளேயே நடந்து சென்றனர்.

அப்போது கல்வடங்கம் காவிரி ஆற்றின் மறுகரையான ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூர் பகுதி காவிரி கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் அந்த மாணவர்களைப் பார்த்து இங்கே வர வேண்டாம் ஆழமான பகுதி என்று சத்தம் போட்டுள்ளனர். இந்த சத்தத்தை கேட்ட உடன் தப்பிக்க முயற்சிக்கும் போது அந்த 5 மாணவர்களும் கைகளை பிடித்தவாறு ஆற்றில் திடீரென மூழ்க தொடங்கினார்கள்.

இதைப் பார்த்த அவர்களுடன் வந்தவர்களில் கரையில் நின்ற மாணவர்கள், கூச்சல் போட்டு ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அலறினார்கள். அப்போது தண்ணீரில் மூழ்கிய மாணவர்களில் ஒருவர் மட்டும் கைகளை விடுவித்துக் கொண்டு கரைக்கு தப்பி ஓடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆற்றில் மூழ்கிய மாணவர்களில் ஒருவரான சேலம் மாவட்டம், இளம்பிள்ளை இ.காட்டூரைச் சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (20) என்ற மாணவரின் உடல் மதியம் 2.30 மணியளவில் மீட்கப்பட்டது. தொடர்ந்து 3 மணியளவில் கொங்கணாபுரம் எருமைப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் முத்துச்சாமி (20) என்ற மாணவரின் உடலும் மீட்கப்பட்டது.

பின்னர் மாலை 5 மணிவரை தீயணைப்பு படையினரும், மீனவர்களும், போலீசாரும் தீவிரமாக தேடி ஆற்றில் மூழ்கிய மாணவர்களான எட்டிகுட்டை மேடு பகுதியை சேர்ந்த சித்தன் மகன் பாண்டியராஜன் (20), கன்னந்தேரி கோசேரிப்பட்டியை சேர்ந்த மாது மகன் மணிகண்டன் (20) ஆகியோரின் உடல்களை அடுத்தடுத்து மீட்டனர்.

இறந்த மாணவர்களின் உடல்களைப் பார்த்து ஆற்றின் கரையில் கூடியிருந்த மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

இறந்த மாணவர்களுடன் குளிக்க சென்ற மாணவர்களும் அந்த நிமிடம் வரையில் தங்களுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த நண்பனின் உயிரற்ற உடலைக் கண்டு கதறி அழுதனர். இதனால் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையே சோக மயமாக காட்சி அளித்தது.

பின்னர் ஆற்றில் மூழ்கி பலியான மாணவர்களின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.