பெற்ற மகனை மளிகைக்கடையில் விற்ற தாய்.. தவித்துப் போன சிறுவன்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நோயல் ரோட்ரிக்ஸ்-அல்வாரெஸ் என்ற 6 வயது சிறுவனை அவரது தாயார் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் என்பவர் ஒரு மளிகை கடைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு சென்ற சிறுவனை அப்படியே விட்டுவிட்டு அவரது தாயார் சென்றுவிட்டார். முதலில் எதுவும் தெரியாமல் சிறுவன் தவித்துள்ளான். அதன்பிறகு தான் தன்னுடைய தாய் தன்னை விற்றுவிட்டுச் சென்றிருக்கிறாராம் என்பது தெரியவந்தது.

கடந்த மார்ச் மாதம் நோயல் காணாமல் போனது குறித்து போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் அவர் 2022ஆம் ஆண்டில் இருந்தே மாயானார் என்று பக்கத்து வீட்டார் போலீசாரிடம் கூறினர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. அதன்படி, நோயலின் உடலுக்குள் ஏதோ அமானுஷ்யம் இருப்பதாகவும், தனக்கு புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகள் மீது நோயல் பொசசிவ் ஆக இருப்பதாகவும், எங்கே அவர்களை நோயல் காயப்படுத்திவிடுவாரோ என்ற அச்சத்திலும் தாய் சிண்டி இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து குடும்பத்தார் தரப்பில் முதலில் விசாரிக்கப்பட்டபோது, நோயல் தன்னுடைய தந்தையுடன் இருப்பார் என நம்புவதாக சிண்டி கூறியிருக்கிறார். அதன் பின்னர் சிண்டியின் அந்த குடும்பத்தாரிடம் விசாரித்த போதுதான், சிறுவன் நோயல் சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

சிண்டி தன்னுடைய முதல் கணவரை விட்டு பிரிந்த பிறகு அர்ஷ்தீப் சிங் என்பவரை மணந்திருக்கிறார். சிண்டிக்கும் அர்ஷ்தீப் சிங்குக்கும் பிறந்தவர்கள்தான் அந்த இரட்டை குழந்தைகள்.

அவர்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்த சிண்டி நோயலை அலட்சியப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் நோயல் காணவில்லை என போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் சிறுவன் நோயல் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலே காணாமல் போயிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.

முறையாக சாப்பாடு கொடுக்காததால் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருந்த நிலையிலேயே சிறுவன் அவரது இரண்டாவது கணவர் அர்ஷ்தீப்பும் கைவிட்டிருக்கிறார்கள் மேலும் நோயல் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களிலேயே டல்லாஸ் ஃபோர்ட்டில் இருந்து சிண்டியும் அர்ஷ்தீப் சிங்கும் தங்களது குழந்தைகளுடன் இந்தியாவுக்கு தப்பி வந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் மீது சிறுவன் நோயலை ஆபத்தான நிலையில் கைவிட்ட குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலைக்கு போகாத மகனை கண்டித்த தந்தை… விரக்தியில் சென்ற மகன்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்!!

கரூரில்..

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (46). இவரது மகன் செல்வராஜ் (23). இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

எல்லா நேரமும் மொபைல் போன் பயன்படுத்தி வந்ததால் கோவிந்தராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த செல்வராஜ் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

மகன் செல்வராஜ் இறந்த தகவல் அறிந்த, அவரது தாய் சுமதி( 43) மன வேதனையால் விஷ விதையை குடித்ததாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த அவரை மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக சுமதியை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்தபோது பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோவிந்தராஜ் சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட தாய், மகன் ஆகிய இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு பயந்து 10ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு.. கதறும் குடும்பம்!!

சென்னையில்..

சென்னை மணலி அடுத்துள்ள ஹரி கிருஷ்ணபுரத்தில் ரவிசங்கர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரவி சங்கர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ (வயது 15) மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாணவி கணித தேர்வுக்கு தயாராகி வந்தார். வீட்டில் இருந்து படித்துவந்த அவருக்கு பெற்றோர் உதவினர். இந்த நிலையில் தொடர்ந்து படிக்குமாறு மாணவி ராஜஸ்ரீ யிடம் கூறிவிட்டு பெற்றோர் வெளியில் சென்று விட்டனர்.

கணித பாடம் சரியாக ராஜஸ்ரீக்கு வராததால் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொண்டார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது வீட்டில் தீபிடித்து எரிவதும், சிறுமி அலறுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் சிறுமியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கனித தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 3வது நாளில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி அருகே திருமண முடிந்த 3வதுநாளில் புதுமணத் தம்பதி நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மேல ஆத்தூரை சேர்ந்த வெற்றிலை வியாபாரி மாணிக்கராஜ். இவரது மூத்த மகன் பழனிகுமார் (29).

இவர், கேரளாவில் இரும்பு விற்பனை செய்யும் டீலராக உள்ளார். இவருக்கும், தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த ராமையா-மாடத்தி தம்பதியின் மகள் முத்துமாரிக்கும் கடந்த 10 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

பெற்றோர்கள் வரன் பார்த்து நடத்திய இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், புதுமணி தம்பதிகள் இருவரும் நேற்று வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டு வருவதாக கூறிவிட்டு சென்று உள்ளனர்.

கோயிலுக்கு சென்றவர்கள் நள்ளிரவு வரை வீடு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேட தொடங்கினர். இதுதொடர்பாக முத்துமாரி வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பழனிகுமார் வீட்டிற்கு பின்புறம் உள்ள கோயில் அருகே உள்ள குளத்தில் இன்று காலையில் மணமக்கள் இருவரும் பிணமாக மிதந்தது கண்டறியப்பட்டது.

இதனால் இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் முடிந்த மூன்று நாட்களில் மணமக்கள் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் மணமகன்,மணமகள் வீட்டார் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இந்த சம்பவம் குறித்த தகவல் தெரிந்ததும் ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு மணமக்கள் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. இதிற்கிடையே, போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், 10 அடிக்கு மேல் ஆழமான குளத்தின் கரையை சுற்றி வரும்போது அவர்களில் ஒருவர் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் அவரை காப்பாற்ற முயன்றபோது மற்றொருவரும் இறந்திருக்கலாம் என்றும் தகவல் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த மூன்றாவது நாளில் புதுமண தம்பதி இருந்ததால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணம் நடைபெற்ற வீட்டின் முன்பு இருந்த பந்தல் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்படாத நிலையில் மூன்றே நாட்களில் மணமக்கள் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்க்கி உள்ளது.

இலங்கையை அச்சுறுத்தும் நோய் : பாடசாலை மாணவி பரிதாபமாக மரணம்!!

தொம்பஹவெலவில்..

தொம்பஹவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலைமைக்குள்ளாகியுள்ளார்.

அதன் பின்னர் மொனராகலை சிறிகல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மிகவும் சிரித்த முகத்துடன் இருக்கும்,

அந்த மாணவியின் மரணம் நண்பர்களை மிகவும் மனரீதியாக பாதித்துள்ளது. இது போன்ற மரணங்கள் இனிமேலும் ஏற்பட கூடாதென அவரது நண்பர்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்

நீ.ரில் மூ.ழ்கி 17 வ.ய.து பா.டசாலை மா.ணவனுக்கு ந.டந்த சோ.க.ம்!!

அம்பலாங்கொடையில்..

நீ.ரி.ல் அ.டி.த்.து.ச்.செ.ல்.ல.ப்.ப.ட்.டு கா.ணா.ம.ல்.போ.ன பா.டசாலை மா.ணவனின் ச.ட.ல.ம் இ.ன்று (14) அக்குரலை க.டற்கரையில் க.ண்.டெ.டு.க்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொ.லிஸார் தெ.ரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொட தர்மசோக வி.த்தியாலயத்தில் 11ஆம் ஆ.ண்டில் க.ல்வி க.ற்கும் 17 வ.ய.து.டை.ய பா.ட.சா.லை மா.ண.வ.னே இ.வ்வாறு உ.யி.ரி.ழந்துள்ளதாக பொ.லிஸார் தெ.ரிவித்துள்ளனர்.

நே.ற்று (13) பி.ற்பகல் நீ.ராடச் செ.ன்று நீ.ரி.ல் அ.டி.த்.து.ச் செ.ல்.ல.ப்.ப.ட்.டு கா.ணா.ம.ல்.போ.ன நி.லை.யி.ல் மா.ண.வ.னி.ன் ச.ட.ல.ம் இ.ன்.று (14) அ.க்குரலை க.ட.ற்கரையில் க.ண்.டெ.டு.க்.க.ப்.பட்.டு.ள்.ள.து.

அ.தே வ.ய.துடைய மே.லும் இ.ரு மா.ண.வர்களுடன் உ.யி.ரி.ழ.ந்.த மா.ண.வ.ர் க.ட.லி.ல் நீ.ரா.டி.க்கொண்டிருந்த வே.ளையில், மூ.வரும் க.ட.லில் அ.டி.த்.து.ச் செ.ல்.லப்பட்டதுடன், ஏ.னைய இ.ருவரையும் பி.ரதேசவாசிகள் கா.ப்.பா.ற்.றி.யு.ள்.ள.ன.ர்.

இ.ரு மா.ணவர்களும் ப.லப்பிட்டிய வை.த்தியசாலையில் சி.கி.ச்.சைக்காக அ.னுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இ.ருவரின் நி.லை.மை க.வ.லை.க்.கி.டமாக உ.ள்ளதாகவும் வை.த்தியசாலை வ.ட்டாரங்கள் தெ.ரிவிக்கின்றன.

இ.ந்த மூ.ன்று மா.ணவர்களும் பு.த்தாண்டு வி.டுமுறை கா.ரணமாக ந.ண்பர் ஒ.ருவரின் வீ.ட்டுக்குச் செ.ல்வதாக வீ.டுகளுக்குத் தெ.ரிவித்துவிட்டு க.டலில் கு.ளிக்கச் செ.ன்று கொ.ண்டிருந்த போ.தே தி.டீ.ர் அ.லை.யி.ல் அ.டி.த்.து.ச் செ.ல்.ல.ப்.ப.ட்.ட.தா.க.க் கூ.றப்படுகின்றது.

யூடியூப்பில் வீடியோ பார்த்து கர்ப்பத்தை கலைத்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

நெல்லூரில்..

நெல்லூரில் யூடியூடிப்பில் காணொளி பார்த்து தனது 6 மாத கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பொறியியல் கல்லூrரில் 2ஆம் ஆண்டு படித்து வந்த மரிபாடு மண்டலத்தை சேர்ந்த 19 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளதுடன், அதனை யாரும் அறிந்து கொள்ளவில்லை. அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்துள்ள நிலையில் ஒரு நாள் வகுப்பு இடைவேளையின் போது கல்லூரி மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல இவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் மாணவியை காணாமையால் அவரது நண்பர்கள் அழைத்துவர வகுப்பறைக்கு சென்ற போது கதவு தாழிட்டு இருந்துள்ளது. அதிக நேரமாகியும் கதவு திறக்கப்படாமையால் சந்தேகமடைந்து கதவை உடைத்துள்ளனர்.

அங்கு பலத்த ரத்தப்போக்குடன் மாணவி மயங்கிய நிலையிலும் மாணவியின் அருகில் 6 மாத சிசுவும் கிடந்துள்ளது. அதையடுத்து மாணவியையும் கருவையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரும், சிசுவும் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த நெல்லூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றதுடன் சிறுமியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது மாணவி வகுப்பறையில் யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்தமை தெரிய வந்ததுள்ளது.

அப்போது ரத்தபோக்கு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று பொலிஸார் கூறினார். குறித்த மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் கார் டிரைவர் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததுள்ளதுடன் அவர் மூலம் மாணவி கர்ப்பமாகியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கபட்டுள்ளது. பின்னர் பொலிசார் கார் டிரைவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சக்கர நாட்காலியில் வந்த மகனை கண்டு கதறி அழுத தாய்!!

விபத்தில்..

வேலை நிமித்தம் காரணமாக வெளிநாடு ஒன்றிற்கு சென்ற மகன் அங்கு விபத்தில் சிக்கி ஆளே உருக்குலைந்த நிலையில் வருவதை கண்ட தயார் மகனை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மத்திய கிழக்கு நாடான பஹ்ரேன் நாட்டிற்கு குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்று விபத்தில் சிக்கிய புதுக்கோட்டை இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தனது தாயாரின் போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்பியுள்ளார்.

பொன்னமராபதி பெரியார் பகுதியை சேர்ந்த சுப்பையா அழகி தம்பதியரின் மகனான வீரபாண்டி கடந்த வருடம் ஜனவரி மாதம் பஹ்ரேன் நாட்டிற்கு சென்று சூப்பர் மாக்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வாகன விபத்தில் சிக்கியதால் அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், குறித்த விபத்தினால் எழுந்து நடக்க முடியாத அளவிலும் ஆட்களை அடையாளம் காண முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கும் தள்ளபட்டுள்ளார்.

இதையடுத்து தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் செஞ்சி மிஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறாக விபத்தில் சிக்கி ஆளே உருக்குலைந்த நிலையில் சென்னை விமானம் நிலையம் வந்த வீரபாண்டியை அவரது தாயார் ஓடிச் சென்று கண்ணீர் மல்கியபடி வரவேற்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகனிடம் சென்றவர் மகனது கையினை இறுக பிடித்து “அம்மாவை தெரிதா ஐயா? அழகி அம்மா வந்து இருக்கன், இனி பயப்பிடாத ராசா அம்மா பார்த்துப்பேன், எப்புடி அனுப்பி வைச்சேன் ” என்று கூறி மகனை பிடித்து அழுத வார்த்தைகள் காண்போரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

வவுனியா ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா!!

தேர்த் திருவிழா..

வவுனியாவில் தமிழ் சித்திரைப் புத்தாண்டு வழிபாடும், தேர்த் திருவிழாவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. சோபகிருது தமிழ் புத்தாண்டு இன்று (14.04) பிறந்த நிலையில் புத்தாண்டை வரவேற்று வவுனியா இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில், வவுனியா வைரபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், ஆலயத் தேர்த் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றது.

மருத்து நீர் வைத்து புத்தாண்டை அணிந்துவந்த பக்தர்கள் புடைசூழ மங்கள வாத்தியங்கள் முழங்க ஆதி விநாயகப் பெருமான் உள் வீதி வலம் வந்து அதனைத் தொடர்ந்து வெளிவீதிக்கு வருகை தந்து தேரில் உலா வந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

இதன்போது பக்த அடியார்கள் காவடி எடுத்தும், தீச் சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும் தமது நிவர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், புத்தாண்டு வாழத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

வவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்!!

புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்..

நாடு முழுவதும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (14.04.2023) காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் குட்சைட் வீதி கருமாரி அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். அத்துடன் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் இரதோற்சவமும் இடம்பெற்றிருந்தது.

புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கலந்து கொண்டோர் தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை.. நீங்கள் ஏமாற்றப்படலாம்!!

பண்டிகைக் காலத்தில்..

புத்தாண்டு தினங்களில் போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். புத்தாண்டு காலங்களில் போலி நாணயத்தாள்கள் கைமாறக் கூடும் என்பதால் இவ்வாறு பணத்தைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை சந்தையில் கைமாற்றுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது குறித்த பிரதேச பொலிஸாலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் புத்தாண்டு வர்த்தக கண்காட்சிகளை நடத்துவதற்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவைத் தொழிலதிபருடன் கூட்டுக்களவு : யாழில் சிக்கிய இளம் பெண் : பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

யாழில் சிக்கிய இளம் பெண்..

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதான இளம் யுவதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபாய் பணத்தினை கறந்துள்ளார்.

தொலைபேசியில் உரையாடி காசு வாங்கும் போது தன்னை அச்சுவேலி பகுதியை சேர்ந்தவர் என அப்பெண் அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். பணம் கொடுத்து நீண்ட காலமாகியும் பயண ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல், பணம் வாங்குவதில் மாத்திரமே குறித்த பெண் கவனம் செலுத்தியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பணம் கொடுத்தவர் அது தொடர்பில் பெண்ணுடன் கடுமையாக பேசிய போது பெண் தொடர்பை துண்டித்துள்ளார். அதை அடுத்து அப்பெண் தனது விலாசமாக கூறிய அச்சுவேலி பகுதிக்கு விசாரித்த போதே , அப்படியொருவர் அங்கு இல்லை எபது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து , தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனும் விடயமும் பணம் கொடுத்தவருக்கு தெரியவந்துள்ளது. அதனை அடுத்து பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்து பொலிஸார் தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையிலும் , வங்கி கணக்கு இலக்கத்தின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து பெண்ணை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாக கோடிக்கணக்கான ரூபாய் பண பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் , குவைத் நாட்டில் வசிக்கும் தொழிலதிபரின் வழிகாட்டலில் தான் அப்பெண் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புத்தாண்டுக்கு உறவினர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

ராகம பிரதேசத்தில்..

இன்று (14) புத்தாண்டை முன்னிட்டு உறவினர் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது தீயினால் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். ராகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அகலவத்தை பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில் விபத்துகான காரண்ம் குறித்து பொலிஸார் ஆராய்து வருகின்றனர்.

மதுபோதையில் வாகனமோட்டிய பொலிஸ் சாரதியால் குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த விபரீதம்!!

கொழும்பில்..

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திச் சென்று காருடன் மோதியதில் ஒன்றரை வயது சிறுமி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த தந்தையும் 8 வயது மகளும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் ஒன்றரை வயது மகளும் தாயும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாய், தந்தை மற்றும் மகள்கள் இருவர் புத்தாண்டுக்கு தேவையான உடைகள் மற்றும் உணவுகளைப் பெற்றுக் கொண்டு காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். இதன்போது எதிரே வந்த வேன் ஒன்று திடீரென சாலையை விட்டு விலகி எதிரே வந்த குறித்த கார் மீது மோதியது.

மீகொட பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற இந்த விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி மதுபான விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார் என கூறப்படுகின்றது.

விபத்தை ஏற்படுத்தியவர் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட கேக் வாங்க சென்ற இளைஞர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம்!!

அரூரில்..

அரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (23), மற்றும் +2 தேர்வு எழுதி முடித்த மாணவன் அம்பேத் செல்வன் ஆகிய இருவரும் அவருடைய உறவினர்களுக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக் கொண்டு, ரவுண்டானாவில் இருந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது அரூர் பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

அதன் பின்னர் இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். பின் தகவலறிந்த விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டனர்.

பின்னர் முதலுதவிக்காக பரிசோதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. பின்பு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடலும் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலைப் பார்த்த பெற்றோர்கள் கதறி கதறி அழுத காட்சி காண்போரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


பின்னர் இந்தச் சம்பவம் அறிந்து வந்த அரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட இருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை!!

கோவையில்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் பட்டுராஜன். இவரது மகள் சசிகலா (24). இவர் கடந்த 2013- ஆம் ஆண்டு மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது அங்கு வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த வினோத் (28) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் சசிகலாவிற்கு, அவரது உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இதை அறிந்த வினோத், சசிகலாவை தனியாக பேச மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலைக்கு அழைத்துச் சென்று, கொ.டூ.ர.மா.க தா.க்.கி.யு.ம், க.ழு.த்.தை இ.று.க்.கி.யு.ம் கொ.லை செ.ய்.தா.ர். பின்னர் உடலை அருகே தனியார் கல்லூரி அருகே புறவழிச்சாலையில் புதைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வினோத்தை கைது செய்தனர். விசாரணையில் சசிகலாவை கொலை செய்த வினோத், அவரது நகைகளை திருச்சியில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் விற்பனை செய்துள்ளார்.

அதை தொடர்ந்து சசிகலாவின் செல்போனில் இருந்து அவரது பெற்றோர் மற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி மூலம் வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டு வேறு மாவட்டத்திற்கு சென்றுவிட்டதாக அனுப்பி உள்ளார்.

இருப்பினும் போலீசார் சந்தேகத்தின் பேரில் கண்காணித்து வந்த நிலையில் வினோத் போலீசிடம் பிடிபட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் கூறிய அடையாளங்களை வைத்து சசிகலா புதைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த போது, வெறும் எழும்பு கூடுகள் மட்டும் கிடைத்துள்ளது.

அதனை கைப்பற்றிய போலீசார் ஆய்வகத்திற்கு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இறந்தது சசிகலா தான் என்பதும் உறுதியானது. மேலும் சசிகலாவின் உடலை வெறும் 2 அடி பள்ளம் தோண்டி புதைத்ததாகவும்,

ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் நாய் எழும்புகளை எடுத்து சென்றால் தப்பிவிடலாம் என நினைத்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட வினோத், அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கோவை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி வினோத், முதல் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது. பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் மதுரை,

கிணத்துக்கடவு, பேரூர், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி ஆகிய இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து அப்போதைய மாவட்ட செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கடந்த 2021ல் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இளம் பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்தது வினோத் என்பது உறுதியானதால் அவரை குற்றவாளி என்றும், கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை நோக்கத்துடன் கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கோவை மாவட்ட போலீசார் மற்றும் மகிளா நீதிமன்றத்திலும் விரைவில் வி.சாரணை செய்து கு.ற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி வரும் நிலையில் சினிமா பாணியில் இளம் பெண்ணை கொலை செய்த வழக்கில் கு.ற்றவாளிக்கு த.ண்டனை வ.ழங்கப்பட்டுள்ளது.