சைக்கோ என கூறி கழற்றி விட்ட காதலி : நியாயம் கேட்க சென்ற காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கல்லூரி செல்லும் போது இருவரும் இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிவதோடு ஷாப்பிங்,டேட்டிங், என பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்துள்ளனர் ஜெபின் காதலிக்கு விலையுயர்ந்து பொருட்களை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்

ஒரு கட்டத்தில் இன்ப சுற்றுலா செல்லும் இவர்கள் தமிழகம், கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கழிந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெபின் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில் ஆனி ரெனிஷா வும் தக்கலையில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்

இருவரும் இரவு நேரங்களில் வீடியோ காலில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், ஐ .டி. கம்பெனிக்கு வேலைக்கு சென்று வரும் ஆனி ரெனிஷா சக நண்பர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார்.

இதை அறிந்து ஜெபின் அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ஆனி ரெனிஷா ஜெபினுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜெபின் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு வெளிநாட்டில் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊருக்கு திரும்பி ஜெபின் ஆனி ரெனிஷா வீட்டிற்கு உறவினர்களை அனுப்பி பெண் கேட்டுள்ளார்.

ஆனால் அவரின் பெற்றோர் பெண் கொடுக்க சம்மதிக்காமல் உறவினர்களை திருப்பி அனுப்பிய நிலையில், ஆனி ரெனிஷா ஜெபினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீ ஒரு சைக்கோ உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது என்னை மறந்து விடு எனது வீட்டிற்கு பெண் கேட்டு யாரையும் அனுப்பாதே என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்து விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஜெபின் இன்று காதலியின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் காதலியுடன் சேர்ந்து செல்போனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி நியாயம் கேட்டதோடு அவரை வெளியே வருமாறு அழைத்து வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்று அடாவடியில் ஈடுபட்டார்

தட்டி கேட்ட ஒருவரிடம் என்னை சைக்கோ என்கிறாள், அப்பா தூங்கிட்டாங்க என இரவு 11-மணிக்கு வீட்டிற்கு அழைத்தவர்,என காதலிக்கும் போது நடந்ததையெல்லாம் ஒப்பித்துள்ளார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்ட போது, ஆனி ரெனிஷா தரப்பில் வந்த வழக்கறிஞர் ஒருவர் ஜெபின் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஒரு கட்டத்தில் ஜெபினை போலீசார் தக்கலை காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில் இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனி ரெனிஷா காதலனை ஏற்க மறுத்த நிலையில் அவரின் தந்தை விஜயராஜ் தக்கலை காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்தார்.

அதில் எனது மகள் ஆனி ரெனிஷா வை ஜெபின் காதலித்து வந்ததாகவும் தற்போது இருவரும் போசுவதை நிறுத்திய நிலையில் இன்று எனது வீட்டிற்கு வந்த ஜெபின் வீட்டின் கேட்டை திறந்து அத்துமீறி நுழைந்து எனது மகள் ஆனி ரெனிஷாவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லை என்றால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரளித்தார்.

இதனையடுத்து ஜெபின் மீது ஆபாச படங்களை பொது வெளியில் அத்துமீறி வீட்டில் நுழைவது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் ஜெபின் ஐ கைது செய்து தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சைக்கோ என கூறி கழற்றி விட்ட காதலியின் வீட்டிற்கு ஆவேசமாக சென்று நியாயம் கேட்டு இஞ்சினியர் வேலையையும் பணத்தையும் இழந்து சிறையில் சென்று கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் உயிரை காப்பாற்ற முதலையின் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டிய சிங்கப் பெண்!!

ராஜஸ்தானில்..

ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்திற்குட்பட்ட மந்தராயல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னே சிங். இவரது மனைவி விமல் பாய். இந்த தம்பதிகள் ஆடுகளை வைத்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தம்பதி தங்களது ஆடுகளைக் கிராமத்தின் அருகே இருந்த ஆற்றுக்கு ஆடுகளுக்குத் தண்ணீர் குடிப்பதற்காக கூட்டிச் சென்றனர். அப்போது பன்னே சிங் ஆற்றில் இறங்கியபோது திடீரெ ஒரு முதலை ஒன்று அவரது காலை கடித்து இழுத்துள்ளது.

இதனால் அவர் நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்து அலறியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கொஞ்சம் கூட பயப்படாமல் அங்கிருந்து குச்சியை எடித்து முதலையில் கண்ணில் குத்தியுள்ளார்.

இதனால் வலிதாங்காமல் பன்னே சிங்கின் காலை முதலை விடுத்து அங்கிருந்து ஓடியது. பிறகு உடனே தனது கணவனைக் கரைக்கு இழுத்து வந்துள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்துள்ளார்.

இது குறித்துக் கூறிய விமல் பாய், “தனது கணவரை முதலை கடித்தபோது, எனது வாழ்க்கையைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன்” என தெரிவித்துள்ளார்.

தற்போது முதலையிடம் இருந்து கணவனை மனைவி காப்பாற்றிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மனைவி விமல் பாய்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

போதையில் பெற்ற மகள்களுக்கு தீ வைத்த நபர் எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியருக்கு 11-வயது மற்றும் 9-வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

எலக்ட்ரிசன் வேலை பார்த்து வரும் நாகராஜன் குடி போதைக்கு அடிமையானதால் குடும்ப வறுமையாலும் இரு குழந்தைகளையும் படிக்க வைக்கவும், குடும்ப தேவைக்காகவும் மனைவி அனிதா அருகில் உள்ள பேக்கரி கடையில் வேலைக்கு சென்று வருகிறார்.

பேக்கரி கடையில் வேலை பார்க்கும் அனிதா நேற்றிரவு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு கடையில் போளி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் வீட்டிற்கு வர தாமதமாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாகராஜன் மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது இரு குழந்தைகளும் கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

குடிபோதையில் இருந்த நாகராஜன் மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் வீட்டை பூட்டி விட்டு கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்த தனது இரு குழந்தைகள் மீதும் பீரோவில் இருந்த புடவை மற்றும் ஆடைகளை குழந்தைகள் மீது தூக்கி போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளார். மேலும் தானும் உடலில் மண்னெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டிருந்ததைத் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது நாகராஜன் உடல் முழுவதும் கருகி உயிரிழந்த நிலையிலும், இரு குழந்தைகளும் உடல் கருகி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக இரு குழந்தைகளையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இரு குழந்தைகளும் 80-சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவுஸ்திரேலிய பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த இளைஞன்!!

நூர்பூரில்..

இந்தியாவின் நூர்பூரில் உள்ள ரமேஷ் ராஜ் என்ற இளைஞர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரிஜிட் என்ற இளம்பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் நூர்பூரில் உள்ள பஞ்சாரா கிராம பஞ்சாயத்தின் கானோஹ் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ராஜ் என்ற இளைஞர் அவுஸ்திரேலிய பெண்ணான பிரிஜிட்டை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கனோஹ் கிராமத்தில் மணமகளின் தாய் கேப்ரியல் மற்றும் சகோதரர் ரோமன் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணப்பெண் பிரிஜிட், இந்திய திருமண ஆடைகளை அணிந்து, விழாவின் போது ஒவ்வொரு உள்ளூர் வழக்கத்திலும் பங்கேற்றார்.

ரமேஷ் ராஜ் குடும்பம் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சொந்த கிராமத்திற்குச் செல்வதாகவும் மணமகனின் தந்தை தேஸ் ராஜ் கவுண்டல் கூறினார்.

மணமகன் ரமேஷ் வியன்னாவில் தனியார் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில், மணமகள் பிரிஜிட் உடன் பணிபுரிந்துள்ளார். பிரிஜிட்டின் தோழி ஒருவர் ரமேஷை அவளுக்கு அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

மணப்பெண்ணின் தந்தை லியோனார்ட் ரிச்சர்ட்ஸ் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது தாயும் சகோதரரும் மணமகனின் கிராமத்திற்கு திருமணத்தை நடத்த வந்தனர்.

முதல் மனைவியை பிரிய இதுதான் காரணம்… 2ஆம் திருமணத்திற்குப் பின் மனம் திறந்த பப்லு!!

பப்லு..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். நான் சிகப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்த ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.

அதன்பின் சின்னத்திரையில் மர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான் வாணி ராணி சிரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, ஹகமது மோகன் ஜாஃபர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார்.

25 வயதான மகன் ஹகமது ஆட்டிஸம் குறைபாடு இருப்பதால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்துவிட்டார். தனியாக மகனை வளர்த்து வரும் பப்லு 23 வயதான ஷீடல் என்ற மலேசிய இளம்பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஷகீலா எடுத்த பேட்டியில் பங்கு பெற்ற பப்லு, முதல் மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை கூறியிருக்கிறார். விவாகரத்து செய்ய ஷீடல் காரணம் கிடையாது. விவாகரத்து செய்யாமல் பிரிந்து 6 வருடம் மகனுடன் தனியாக இருந்தேன்.

என்னால் அவருடன் ஒன்னா இருக்க முடியல, எதுவாக இருந்தாலும் ரெண்டு பேரும் பேசும் போது ஆர்கியூமெண்ட் ஆகி, இதனால் என் பையனும் பாதிப்படைகிறான். அது போகப்போக இருவருக்கும் செட்டாகாமல் போனது.

அதைவிட ஒரே ஒரு ரீசன், எனக்கு மரியாதை இல்லை. கல்யாணத்திற்கு பின் பெஸ்ட் ப்ரெண்ட், மனைவியாகினார். ஆனால் அவர் அதற்கு பின் பிரெண்ட்டாகவே இருந்தார். மேலும், ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர், என்னா ஹான்சம் என்று குறிப்பிட்டு பேசிய போது, என் எக்ஸ் மனைவி, இவன் ஹான்சமா என்று அசிங்கப்படுத்தினார்.

அதெல்லாம் போக, அவங்க வீட்டிற்கு காரில் போகவிடாமல் ஆட்டோவில் போவோம் என்று மரியாதை இல்லாமல் மட்டம் தட்டி நடந்து கொண்டது. சாப்பிட்டியா என்று அவர் கேட்டதே இல்லை. இது தான் விவாகரத்துக்கு காரணமாகிவிட்டது என்று பப்லு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் மரணம்.. கதறும் பெற்றோர்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் நான்கு வயதுடைய சிறுவன் நிமோனியா காச்சலால் இன்று உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (12) இரவு சிறுவன் சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

இந் நிலையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறுவன் நிமோனியா காச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பலே மூளை.. மோசமான வேலை.. குடும்பத்தையே கம்பி எண்ண வைத்த போலீஸ்காரர்!!

காஞ்சிபுரத்தில்..

ஆன்லைன் சூதாட்டத்தில் கைதேர்ந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த போலீஸ்காரர், பெரிய அளவில் முதலீடுகளைப் பெற்றுக்கொண்டு கம்பிநீட்டியதால், அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தோடு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அருண். போக்குவரத்துக் போலீஸ்காரர் ஆவார். இவர் ஆன்லைன் சூதாட்டங்களில் கைதேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை சர்வ சாதாரணமாக வென்றாராம். இதனால் இவரை காசு கட்டி பலரும் விளையாட வைத்திருக்கிறார்கள். அப்படி விளையாட வைத்தவர்களுக்கு நிறைய பணத்தை சம்பாதித்து கொடுத்தாராம்.

இதனால் இவரை நம்பி பலரும் கோடிகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். இதனிடையே தன்னுடைய மனைவி மகாலட்சுமி, சகோதரர்கள் சகாய பாரத், இருதயராஜ், கசாய பாரத்தின் மனைவி சவுமியா, இருதயராஜ் மனைவி ஜெயஸ்ரீ மற்றும் பெற்றோர்கள் என ஒவ்வொருவருவரும் வெவ்வேறு தொழில் செய்து வருகிறோம் என்று நட்பு வட்டத்தில் கூறியிருக்கிறார்.

குறிப்பாக தன்னுடைய மனைவி மகாலட்சுமி தொழில் செய்து அதிக லாபம் பெறுகிறார் என்றும் இதில் முதலீடு செய்தால் 5 சதவீதம் தொகையை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாகவும் கூறியிருக்கிறார்.

இதை நம்பி காஞ்சீபுரம் விளக்கடி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் சங்கரன் (29) என்பவர் 10 தவணைகளில் ரூ.3 கோடியே 10 லட்சம் ஆரோக்கிய அருணிடம் கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதேபோல் காஞ்சீபுரத்தை சேர்ந்த சுகுமார் என்பவரிடம் ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கி தருவதாக கூறி ரூ.3 கோடியும், ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் யுவராஜ் என்பவரிடம் இருந்து ரூ.5 கோடியே 5 லட்சம், போலீஸ்காரர் மனோகர் என்பவரிடம் இருந்து ரூ.11 கோடியே 5 லட்சம், காஞ்சீபுரத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் இருந்து ரூ.2 கோடியே 5 லட்சம் என சுமார் ரூ.22 கோடிக்கு மேல் பலரிடம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு வகையான தொழில் செய்வதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டாராம்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாணையில் இதேபோன்று பலரிடம் பணமோசடியில் ஆரோக்கிய அருண் ஈடுபட்டதும், அதற்கு உறுதுணையாக அவரது குடும்பத்தினர் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பணமோசடியில் ஈடுபட்டதாக இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத், அவரது மனைவி சவுமியா, தாய் மரியா செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, தந்தை ஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சாதாரண போக்குவரத்து போலீஸ்காரர் எப்படி இத்தனை கோடி வசூலித்திருக்க முடியும் என்று சந்தேகமாக விசாரித்த போலீஸார், முதலீட்டாளர்களுடன் அவர் பேசிய கான்ஃபரன்ஸ் காலின் ஆடியோ ஒன்றைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த ஆடியோவில் அருண் கூறுகையில், “உங்களுக்கே நன்றாக தெரியும்… எனக்கு 20 சதவிகிதம் வட்டி வந்தப்ப உங்களுக்கு 17 சதவிகிதம் வரைக்கும் வட்டி கொடுத்ததிருக்கிறேன். இப்ப இன்கம்டாக்ஸ், இ.ஓ.டபிள்யு எல்லாம் ரொம்ப ‘டைட்’ செய்யுறாங்கள். ஒரு செக்கை மாத்துறதுக்கே அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. நேத்துக்கூட ஒரு கோடி ரூபா செக் கொடுத்தேன்.

பேங்க் மேனேஜர் என்ன காரணம் என்று கேட்கிறார். அவர் கேட்கிறது நியாயம்தானே… ஆயுசு முழுக்க வேலை பார்த்தாலும் ஒரு போலீஸ்காரனால ஒரு கோடிகூடச் சேர்க்க முடியாது.

ஆனா, நாங்க இதுவரைக்கும் ரிட்டர்ன் பேமென்ட் மட்டுமே கிட்டத்தட்ட 200 – 300 கோடி கொடுத்துருக்கோம். அதனால, முதலீடு செய்தவங்ககிட்ட எக்ஸ்ப்ளெயின் பண்ணுங்க. ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ் மாதிரி நான் இதுவரை யாரையும் ஏமாத்தலை… ஏமாத்தவும் மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் சூதாட்டம் மட்டுமன்றி பிட்காயின், மணி எக்ஸ்சேஞ்ச் என பலவிதமான ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகச் சொல்லியே இத்தனை கோடி முதலீடு பெற்று மோசடி செய்தாராம்.

இதனிடையே போலீஸ்காரர் ஆரோக்கிய அருண் 2021-லிருந்தே அவர் முதலீடு பெற்று வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம்தான் பிரச்னை ஏற்பட்டதாம். பலருக்கும் பணம் தரவில்லையாம்.

2021, டிசம்பர் மாதம் முதல் காவல்துறையினரிடமும் பொதுமக்களிடமும் முதலீடு எனக் கூறி அருண் பணம் வசூலிக்கத் தொடங்கியதாகவும், கைதுசெய்யப்பட்ட அருணின் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த மோசடிக்கு அவரின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்திருப்பதால், அவர்களையும் கைதுசெய்து, அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து போலீசார் ஆய்வுசெய்துவருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பணம் எப்படியாவது கிடைக்கும் என்று நம்பி போராடி வருகிறார்கள்.

பேயை திருமணம் செய்த பெண்.. விவாகரத்து கோரும் வினோதம்!!

பிரித்தானியாவில்..

பேயை திருமணம் செய்த பிரித்தானிய பெண் ஒருவர் தற்போது அதிலிருந்து விவாகரத்து கோரியுள்ளார். ராக்கர் ப்ரோகார்ட் (Rocker Brocarde) எனும் பிரித்தானிய பெண், 2022 ஹாலோவீன் அன்று, கைவிடப்பட்ட தேவாலயத்தில் எட்வர்டோ (Edwardo) என்ற பேயை மணந்தார்.

பாடகியான ராக்கர் ப்ரோகார்ட், அந்த பேயுடன் ஐந்து மாதங்களுக்கு டேட்டிங் செய்த பிறகு திருமணம் செய்துகொண்டார் என கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அவரது திருமண வாழக்கை நன்றாக அமையவில்லை.

சரி பேய் தானே என அதனை அப்படியே கடந்து செல்ல முயற்சித்தபோது, அந்த பேய் தன்னைப் பின்தொடர்ந்து தன் வாழ்க்கையை ஒரு துயரமாக மாற்றியுள்ளதாக கூறுகிறார் ராக்கர் ப்ரோகார்ட்.

அந்த பேய் அவரைப் பின்தொடர்வதாக குற்றம்சாட்டிய ராக்கர் ப்ரோகார்ட், இப்போது எட்வர்டோவை தனது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறினார்.

‘நான் என் பந்தத்தின் முடிவில் இருக்கிறேன். நான் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை, ஆனால் ஒரு பேயை திருமணம் செய்துகொள்வது வேலை செய்யாது என்று உணர்கிறேன்” என்று அந்த பெண் கூறினார்.

மேலும், மறைந்த நடிகை மர்லின் மன்றோவைப் பற்றி எட்வர்டோ கூறிய கருத்து, அவரது திருமண நாளில் தன்னை கோபப்படுத்தியதாக கூறினார். ப்ரோகார்ட் அவர்கள் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன், தங்கள் திருமண வாழ்க்கையை தீவிரமாக நடத்துமாறு எட்வர்டோவிடம் கெஞ்சியதாகவும், ஆனால் அவருடைய கோரிக்கை வீணானது என்று கூறுகிறார்.

இந்நிலையில், எப்படியாவது பேயோட்டும் சடங்கு செய்து தனது பேய் கணவனை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார்.

சுற்றுலா சென்ற இடத்தில் அனுமதி மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் விடுதி கட்டடத்தில் இருந்து குதித்த கணவன்!!

குமரியில்..

கேரள மாநிலத்தின் ஆலப்புழாவை சேர்ந்தவர் ரதீஸ். இவர் தனது மனைவி, 2 பெண் பிள்ளைகள் உள்பட குடும்பத்தினருடன் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர்கள் கன்னியாகுமரியில் காவல் நிலையம், தபால் அலுவலகம் இடையேயுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்த இடத்தில் பார்கள் அதிகமாக உள்ளன. இதைப் பார்த்த ரதீஸிற்கு குடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அவர் பணம் கொடுக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார். டூர் வந்த இடத்தில் குடிபோதையில் தகராறு செய்தால் தப்பாகிவிடும் என காரணம் கூறி மனைவி மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரதீஸ் காலை விடுதி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார். இதனால் அவருடன் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மட்டுமின்றி அந்த விடுதியில் தங்கியிருந்த அனைவரும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இதை அங்கிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கீழே இறங்கிவருமாறு குடும்பத்தினர் கெஞ்சினர். தீயணைப்பு வீரர்கள் ரதீஸிடம் சமாதானம் செய்த நிலையில், ஒரு கட்டத்தில் ரதீஸ் கீழே குதித்தார். எனினும் தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.

அவருக்கு உடலில் சில காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதற்கு பேசாமல் ரதீஸ் மது குடிக்க அனுமதித்திருக்கலாம் என குடும்பத்தினர் புலம்பினர்.

இதனிடையே, ரதீஸ் மீது தற்கொலைக்கு முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணி ஒருவர் கட்டடத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 பெண் குழந்தைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு… வெளியான பரபரப்பு கடிதம்!!

திருமங்கலத்தில்..

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கோவையில் பிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி(31).

இவருக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிஷிவானி என 5 பெ.ண் கு.ழந்தைகள் உள்ளனர். இவருக்கு மாவட்ட ஆட்சியர் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கி ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்ற போது மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோர் நாகலட்சுமியை இப்பணியினை உனக்கு தர இயலாது எனக் கூறியும் ஒழுங்காக வேலையை விட்டு சென்று விடு எ.ன மி.ர.ட்.டி.ய.தா.க கூ.ற.ப்படுகிறது.

இ.தனால் ம.னம் உ.டைந்த நாகலட்சுமி இந்த வி.வகாரம் தொ.டர்பாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். தங்கள் மீது காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்ததை தெ.ரிந்து கொ.ண்ட மூ.வரும் வீட்டிற்கு செ.ன்று நாகலட்சுமி மி.ர.ட்.டி.ய.தா.க சொ.ல்.லப்படுகிறது.

இ.தனால் அ.ச்.ச.ம.டை.ந்.த நாகலட்சுமி தன்னுடைய கடைசி 2 பெ.ண் கு.ழ.ந்.தைகளை அ.ழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக மையிட்டான்பட்டியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சிவரகோட்டை அருகே உள்ள அனுமான் கோயில் அருகே பேருந்து வந்த பொழுது நாகலட்சுமி தன்னுடைய இ.ரண்டு கு.ழ.ந்தைகளை அ.ருகில் இ.ருந்த அதை ஊரைச் சேர்ந்த பெ.ண் ஒ.ருவரிடம் கொ.டுத்துவிட்டு தி.டீரென பே.ரு.ந்தில் இ.ரு.ந்து கு.தி.த்.து.ள்ளார்.

தி.டீரென்று பெ.ண் பே.ருந்தில் இருந்து கு.தி.த்.ததை க.ண்ட ச.க ப.யணிகள் கூ.ச்.சலிடவே உ.டனடியாக பே.ருந்தை நி.றுத்தி நாகலட்சுமியை செ.ன்று பா.ர்த்த போது ப.ல.த்.த கா.ய.த்.து.ட.ன் ம.ய.ங்.கி.ய நி.லை.யி.ல் கி.ட.ந்.தா.ர்.

உ.டனடியாக அ.ருகில் இ.ருந்தவர்கள் அ.வரை மீ.ட்.டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு ம.ருத்துவமனைக்கு சி.கிச்சைக்காக அ.னுப்பி வை.த்தனர். தொடர்ந்து உ.யி.ரு.க்.கு ஆ.ப.த்.தா.ன நி.லை.யி.ல் அ.னு.ம.திக்கப்பட்டிருந்த நி.லையில் ம.ருத்துவர்கள் சி.கி.ச்சை அ.ளித்தும், சி.கிச்சை ப.லனின்றி நாகலட்சுமி உ.யி.ர் இ.ழ.ந்தார்.

இ.ந்த ச.ம்பவம் கு.றித்து க.ள்ளிக்குடி போ.லீசாருக்கு த.கவல் அ.ளிக்கப்பட்டது. த.கவல் அ.றிந்து வ.ந்த போ.லீசார் ச.ம்பவம் கு.றித்து வி.சாரணை மே.ற்கொண்டனர். வி.சாரணையில் இ.ற.ந்.த நாகலட்சுமியின் கைப்பையில் க.டிதம் ஒ.ன்று இ.ருந்தது க.ண்.டுபிடிக்கப்பட்டது.

க.டிதத்தில் 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் பணி ஆணை வழங்கியதாகவும், அந்த வே.லையை த.னக்கு வ.ழங்க மா.ட்டேன் என்று மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோர் த.வ.றா.க பே.சி த.ன.து ம.னதை கா.யப்படுத்தியதாக எ.ழுதப்பட்டு இருந்தது.

மே.லும் இது கு.றித்து கா.வ.ல் நி.லையத்தில் பு.கா.ர் அளித்ததால் வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி செயலாளரும் த.கா.த வா.ர்.த்தைகளால் தி.ட்.டி.ய.தா.ல் த.ற்.கொ.லை மு.ய.ற்.சி.க்.கு ஈ.டு.ப.டு.வ.தா.க.வு.ம் இவர்களை ப.ணியிலிருந்து நீ.க்கம் செய்ய வேண்டும் எனவும் தனது க.டிதத்தில் கு.றிப்பிட்டுள்ளார்.

ப.ணிக்கு செ.ல்ல வி.டாமல் மி.ர.ட்.டி.ய.தா.ல் இ.ள.ம்.பெ.ண் ஓ.டு.ம் பே.ருந்தில் இருந்து கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வ.ம் அ.ந்த பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏ.ற்படுத்தி உ.ள்ளது. மேலும் நடந்த ச.ம்பவம் ஏதும் அறியாமல் நாகலட்சுமியின் கைக் கு.ழந்தைகள் அ.ழுதது பார்ப்போர் க.ண்களில் கண்ணீர் வரவழைத்தது. இதுதொடர்பாக மதுரை ஆட்சியர் வி.சாரணைக்கு உ.த்.தரவிட்டுள்ளார்.

இறந்த தந்தை கனவில் தோன்றியதால் மகனுக்கு அடித்த ஜாக்போட்.. லட்சாதிபதியான மகன் : எவ்வளவு தெரியுமா?

கனடாவில்..

இறந்த தந்தை கனவில் வந்து லொத்தர் இலக்கம் கூறியதால் பல இலட்சம் ரூபாய் பணபரிசு பெற்ற நபரின் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக வீடுகளில் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்கள் கனவில் வந்து சில முடிவுகள் கூறினார்கள் என்று பலரும் கூறி மகிழ்ந்ததை பார்த்திருப்போம்.

அந்த வகையில் கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் பகுதியையைச் சேர்ந்த மைக்கல் டேய்லர் என்ற 50 வயதான ட்ரக் சாரதி என்பவரின் தந்தை ஒருவர் கனவில் வந்துள்ளார்.

அவர் கனவில் வந்தது மட்டுமல்ல லொத்தர் சீட்டிற்கான ஒரு இலக்கத்தை கூறியுள்ளார். இதனை ஞாபகம் வைத்து குறித்த இளைஞரும் லொத்தர் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நபர் சுமார் கடந்த 30 ஆண்டுகளாக இவர் லொத்தர் சீட்டிலுப்பு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றாராம். ஆனால் அவருக்கு பெரியதாக இலாபம் ஏதும் வராமல் இருந்த காரணத்தினால், தந்தையின் பேச்சை கேட்டு வொத்தர் சீட்டை எடுத்த காரணத்தினால் இவருக்கு ஒரு லட்சம் டொலர் பணப்பரிசு கிடைத்துள்ளது.

அவரின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் தந்தைக்கு நன்றி கூறிய பகிர்ந்துள்ளார். மேலும் இவரின் செய்தி பார்த்த பலரும்,“ எங்கள் கனவில் யாரும் இது போல் வருவது இல்லையே” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.

மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை.. நெஞ்சை உலுக்கிய கோர சம்பவம்!!

மகள்..

மகளின் தலையில் தந்தை ஒருவர் அசிட் ஊற்றிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு இச் சம்பவத்தில் மகள் மற்றும் தந்தை பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் அதிக மதுபானம் அருந்துபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் அடிக்கடி மதுபான அருந்திவந்து மகள் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் 25 வயதுடைய மகள் எனவும் இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன், சந்தேகநபரான தந்தை 52 வயதுடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருபவரென தெரியவந்துள்ளது. மேலும் இந்த இறப்பர் தொழிற்சாலையில் இருந்து அவர் அசிட் போத்தலை திருடியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இலங்கையில் நம்ப முடியாத விலையில் விற்பனையாகும் இளநீர் : மக்கள் விசனம்!!

இளநீர்..

இளநீர் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டின் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலை காரணமாக, தாகத்தை தீர்ப்பதற்கு மக்கள் பல்வேறு வகையான பானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது மக்கள் இளநீரை தேடி செல்லும் நிலையில், அதன் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்ட இளநீர் விலை தற்போது 200 ரூபாவை தாண்டியுள்ளது. மேலும் ஒரு இளநீர் வெளிநாட்டவருக்கு 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : நிறை மாத கர்ப்பிணி மனைவியை சுட்ட கணவன்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் குடும்ப தகறாறு தீவிரமடைந்ததில் கணவன் மனைவி மீது வெடி வைத்ததில் மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (11-04-2023) கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரையான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்பத்தறாறு காரணமாக கணவன் மனையி இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு தீவிரமடைந்ததில் கணவன், மனைவி மீது இடியன் துப்பாக்கி மூலம் வெடி வைத்துள்ளார். இதன்போது கால்பகுதியில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மனைவி நிறை மாத கர்ப்பிணி எனவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலிஸார் மெற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

காணமல்போன மாணவர்களின் சடலங்கள் மீட்பு!!

மாணவர்களின் சடலங்கள்..

நீராடச் சென்று காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலாங்கொடை வளவை கங்கை வெலிஹரனாவ நீர் இறைக்கும் நிலையத்திற்கு அருகில் நான்கு மாணவர்கள் நீராடச்சென்ற மாணவர்களில் இருவர் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் இன்று (12.04.2023) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய மாணவனும் மற்றும் 15 வயதுடைய மாணவனும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

பலாங்கொடை தேசிய பாடசாலை மற்றும் பலாங்கொடை CC தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் நேற்று நீராட சென்றிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் நீரில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் பலியான சோகம்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தையும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். 59 வயதுடைய நபரும் 21 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் மற்றொரு குழுவுடன் அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அங்கு குளிப்பதற்குச் சென்ற தந்தை முதலில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவரைக் காப்பாற்ற மகளும் மகனும் முயற்சித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.