எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்பு – குழப்பத்தில் டுவிட்டர் பயனர்கள்!!

டுவிட்டர்..

சமூக வலைத்தளமான டுவிட்டரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது வலி நிறைந்தாக உள்ளதென அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டரை செயற்படுத்துவது ரோலர் கோஸ்டரை போன்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் பிபிசி செய்தி சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சரியான நபர் வந்தால் டுவிட்டர் நிறுவனத்தை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கார் தயாரிப்பாளரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் என்ற ரொக்கெட் நிறுவனத்தையும் நடத்தி வரும் மஸ்க், ஒக்டோபரில் 44 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்திருந்தார்.

ஆனால் ஒரு நீதிபதி டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்யுமாறு தன்னை வற்புறுத்தியதால் தான் அதன் உரிமைகளை பெற்றுக் கொண்டதாக எலோன் மஸ்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

காணாமல்போன காத்தான்குடி பாடசாலை மாணவி யாழ் காதலனுடன் மீட்பு!!

பாடசாலை மாணவி..

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காணமல்போன 10 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியை , யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தனது காதலனுடன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து பொலிஸார் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி தனது காதலன் சகிதம் இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவி தற்போது மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதான காதலன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த காதலன் காத்தான்குடியில் கைத்தொழில் நிலையமொன்றினை நடாத்திவருகின்றார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ஆம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி வீட்டில் படித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருந்தார்.

அதேவேளை மாணவி காணாமல்போனமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் நேற்று முன்தினம் (10) முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களுக்கு இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொடர்பில் விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!!

இன்ஃப்ளூயன்ஸா..

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B வைரஸ்கள் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றன.

2 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

மேலும் இருமல், சளி எதிர்வினை, தலைவலி, அதிக காய்ச்சல், வாந்தி, கண்களில் நீர் வடிதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும் என விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

நான்கு வயது குழந்தையின் இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டிருந்த பெற்றோர்கள்.. அதிர்ச்சியூட்டும் காரணம்!!

இறுதி சடங்கில்..

இழப்பிலேயே மிகப்பெரிய இழப்பு என்றால் அதுபெற்றோர்கள் தங்களின் குழந்தையின் இ.ழப்துதான் என்று தான் கூறுவார்கள் அப்படி ஒரு இழப்பு எதிரிக்கு கூட வர கூடாது என்று தான் நம் அனைவரும் சிந்திப்போம்.

நான்கு வயது குழந்தையின் இறுதி சடங்கில் பெற்றோர்கள் முதல் வந்திருந்த உறவினர்கள் வரை அனைவருமே சிரித்து மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே இருந்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா,

ஆம் இது ஒரு உண்மை சம்பவம் தான் அதற்கான காரணத்தை கேட்டால் நீங்களும் ஆடிப்போவீர்கள்.

மரணத்தை தைரியமாக எதிர்கொண்ட இளம் மருத்துவர் : முன்கூட்டியே மனைவிக்கு விவாகரத்து.. இறப்புக்கு முன்பே சவப்பெட்டி தயாரிப்பு!!

தெலங்கானாவில்..

திருமணமான சில நாட்களிலேயே, தான் புற்றுநோய் காரணமாக இறந்துபோவதை முன்கூட்டியே அறிந்த இளம் மருத்துவர், தனது மனைவி மற்றும் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான சில நாட்களிலேயே தான் நுரையீரல் புற்றுநோய் காரணமாக இறந்துபோவதை முன்கூட்டியே அறிந்த இளம் மருத்துவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் செய்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். 34 வயதுடைய இளைஞரான இவர் MBBS படித்து முடித்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த சூழலில் இவருக்கு வீட்டில் இருந்து பெண் தேடியுள்ளனர். அப்போது உறவினர் பெண்ணை பெற்றோருக்கு பிடித்து போகவே கடந்த 2020-ம் ஆண்டு ஹர்ஷவர்தனுக்கும், உறவுக்கார பெண்ணான ஹேமா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால் திருமணமான 9 நாட்களிலேயே ஹர்ஷவர்தன் மீண்டும் ஆஸ்திரேலியா புறப்பட்டார். அங்கே சென்ற பிறகு விசா ஏற்பாடு செய்து விட்டு மனைவி ஹேமாவை அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள்ளும் விபரீத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதாவது ஹர்ஷவர்தனுக்கு தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில், அதே ஆண்டு அக்டோபர் மாதத்திலும் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹர்ஷவர்தன், உடனே மருத்துவரை அணுகியுள்ளார். அங்கே அவருக்கு பல ஸ்கேன்கள் எடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் மனதை கல்லாக்கி கொண்டு தெரிவித்தனர்.

இதனை கேட்டு ஆடிப்போன ஹர்ஷவர்தன், நொறுங்கி போய்விட்டார். சில நேரங்களுக்கு அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்துள்ளார். ஆனால் அவரும் ஒரு மருத்துவர் என்பதால் எதார்த்தத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

இதற்கு ஏதேனும் சிகிச்சை உள்ளதா என்பது குறித்து விசாரிக்கையில், இது இறுதிக்கட்டம் என்பதால் இன்னும் சில ஆண்டுகளில் இறந்து விடுவீர்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார். இது அவருக்கு பேரிடியாக அமைந்தது.

பின்னர் மனதை திடப்படுத்தி கொண்டு முதலில் இதனை தன்னுடைய பெற்றோருக்கு தெரிவித்துள்ளார் ஹர்ஷவர்தன். அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகவே, தான் சிகிச்சை எடுத்துவருவதாக கூறி சமாதானம் செய்துள்ளார். இருப்பினும் பெற்றோர்கள் மனம் பரிதவித்துள்ளது. தொடர்ந்து இதனை தன்னுடைய மனைவிக்கும் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி சில மாதங்களில் கணவருக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழவே பெரும் அதிர்ச்சிக்குள்ளானார் மனைவி ஹேமா. இது சொல்லி முடித்த சில நிமிடங்களிலேயே தான் விவகாரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டதும் மேலும் நொறுங்கி போன ஹேமாவை, ஹர்ஷவர்தன் நிலைமையை எடுத்து கூறி சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இருப்பினும் விவாகரத்து தொடர்பாக ஹேமா சம்மதம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து நிலைமையை எடுத்துக்கூறி சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளார் ஹர்ஷவர்தன்.

மேலும் தன் மனைவிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்த ஹர்ஷவர்தன், தான் இல்லை என்றாலும் அவர் கஷ்டப்பட கூடாது என்பதற்காக அவருக்கு தேவையான பொருளாதார தொடர்பான விஷயங்களையும் செய்துகொடுக்க தொடங்கினார்.

அதோடு தான் இறப்பதற்கு முன்பு எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்து குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர், பெற்றோர் இந்தியாவுக்கு அழைத்த பிறகும் கூட அவர் இங்கே வரவில்லை. ஏனெனில், தம்மை கண்டு பெற்றோரும் தின்தோறும் வேதனை படுவதை பார்க்க முடியாது என்பதால்.

அதுமட்டுமின்றி தான் இறந்துபோவதை குறித்து தன்னுடைய வக்கீல் ஒருவர் மூலம் ஆஸ்திரேலியா அதிகாரிகளுக்கு தெரிவித்த ஹர்ஷவர்தன், தான் இறந்தபின் தன்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கினார்.

அதன்படி சட்ட ரீதியான விஷயங்களையும் ஆரம்பத்தில் சரி கட்டி, சவப்பெட்டி, விமான கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் முன்கூட்டியே செய்து விட்டார்.

கண்ணீருடன் இவை அனைத்தையும் ஹர்ஷவர்தன் செய்தார். சாவு தன்னை நெருங்க நெருங்க அதற்கு தயாராக ஹர்ஷவர்தன் இருந்து வந்துள்ளார். அதன்படி தான் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

தான் இன்னும் சில நேரங்களில் இறந்து விடுவதை அறிந்த அவர், இரண்டு மணி நேரம் முன்பு தன்னுடைய நண்பர்களுக்கு தான் இறக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பதறிப்போன அங்கிருக்கும் சில நண்பர்கள் உடனே அவரை ஓடோடி சென்று பார்த்துள்ளனர்.

பின்னர் அவர் நண்பர்கள் கண்முன்னே மரணம் அடைந்தார். ஹர்ஷவர்தன் ஏற்கனவே தனது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அனுமதி பெற்றதால் எந்த வித சிக்கலும் இன்றி, அவரது உடல் ஆஸ்திரிலேயாவில் இருந்து விமானம் மூலம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது சொந்த கிராமத்தில் அவரது இறுதி சடங்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.

திருமணமான சில நாட்களிலேயே தான் நுரையீரல் புற்றுநோய் காரணமாக இறந்துபோவதை முன்கூட்டியே அறிந்த இளம் மருத்துவர், தனது மனைவி மற்றும் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த இளம்பெண்.. 11 மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்ட உடல்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருவண்ணாமலையில்..

குடும்ப தகராறு காரணமாக மகன்களை கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை அடுத்துள்ளது வட்ராபுத்தூர்.

இங்கு சின்னராசு (36) என்பவர் வசித்து வருகிறார். கனலாபாடி கிராம ஊராட்சி செயலாளராக இருக்கும் இவருக்கும், அதே பகுதியை சூர்யா (32) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. சூர்யா நர்ஸாக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு லட்சன் (4), உதயன் (1) என்ற 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்த சூழலில் வழக்கம்போல் கணவன் – மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அது கடந்த சில நாட்களாக கூடுதலாக காணப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அடிக்கடி மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அதே போல் சம்பவத்தன்றும் காலையில் கணவன் – மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் சின்னராசு, தனது மனைவியை திட்டியுள்ளார்.

மேலும் இவர்களுக்குள் நீண்ட நேரமாக வாக்குவாதம் சென்றுள்ளது. சண்டையை தொடர்ந்து சின்னராசு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு நேரத்தில் சுமார் 10 மணியளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மனைவி, மகன்கள் யாருமில்லை. எனவே இவர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அதோடு தொடர்ந்து பல இடங்களில் தேடியும் உள்ளார்.

தொடர்ந்து அவரது மொபைல் போனை தொடர்பு கொண்டபோதும் கூட, அதனை யாரும் எடுக்கவில்லை. இதனால் மேலும் பதறிப்போன சின்னராசு தொடர்ந்து தீவிரமாகி தேடி வந்தார். அப்போது அவர் வீட்டுக்கு சிறிது தூரம் உள்ள கிணறு பக்கத்தில் மனைவி சூர்யாவின் மொபைல் போன் இருந்துள்ளது. இதனை கண்டு பதறிய கணவர், உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

மேலும் போலிஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்தவர்கள் உடனே கிணற்றை இறங்கி தேடினர். சுமார் 3 மணி நேரம் முயற்சிக்கு பிறகு மனைவி சூர்யா, 2-வது மகன் உதயன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டது.

தொடர்ந்து மூத்த மகன் சடலத்தை தேடுவதற்காக தண்ணீர் முழுவதையும் மின்மோட்டார் மூலம் வெளியேற்றி, 11 மணி நேரத்துக்கு பிறகு லட்சன் சடலமும் மீட்கப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மகன்களை கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைத்துனனால் அனுபவித்த கொடுமை… நடுத்தெருவில் பழி தீர்த்த பெண்!!

துருக்கியில்..

துருக்கியில் பட்டப்பகலில் தமது கொழுந்தனை நடுத்தெருவில் துப்பாக்கியால் பெண் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் தம்மை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், நெருக்கமாக இருந்த போது ரகசியமாக பதிவு செய்த காணொளியை இணையத்தில் வெளியிட இருப்பதாக அச்சுறுத்தி வந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

33 வயதான மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான ஹுல்யா பாலிகன் தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஃபெர்தி பாலிகன் என்பவரை நடுத்தெருவில் வைத்து சுட்டுள்ளார்.

ஏப்ரல் 3ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் ஃபெர்தி பாலிகன் உயிருக்கு போராடுவதை வழிபோக்கர் ஒருவர் காணொளியாகவும் பதிவு செய்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட பின்னர் இவன் என்னை ப.லா.த்.கா.ர.ம் செய்துவிட்டான், இவன் சகோதரரின் மனைவி நான், இவனை கொல்வதால் எனது மரியாதையை நான் மீட்டெடுத்தேன் என ஹுல்யா சத்தமாக கத்தியுள்ளார்.

இதனிடையே, குற்றுயிராக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட 41 வயதான ஃபெர்தி பாலிகன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அத்துடன் ஹுல்யா காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் துருக்கி ஊடகங்கள் வெளியிட்ட தகவலில், ஃபெர்தியுடன் பல ஆண்டுகளாக ஹுல்யா ரகசிய உறவில் இருந்ததாகவும், ஒருகட்டத்தில் ஃபெர்தி தாம் ரகசியமாக பதிவு செய்த காணொளிகளை வெளியிடுவதாக மிரட்டல் விடுக்க தொடங்கியதும் சுதாரித்துக் கொண்ட ஹுல்யா அவரை பழி தீர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

விடாமல் துரத்திய காதலன்.. நண்பர்கள் மூலம் க.ட.த்.தி நி.ர்.வா.ண.ப்.ப.டு.த்.தி பெண் செய்த கொ.டுமை!!

கேரளாவில்..

புது காதலுக்காக தனது காதலனை பிரிய நினைத்த காதலியை விடாமல் துரத்தியதால் நண்பர்கள் மூலம் க.ட.த்.தி அவரை நி.ர்.வா.ண.ப.டு.த்.தி கொ.டு.மை செ.ய்துள்ள காதலியின் செயல் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ளது வர்கலா என்ற பகுதி. இங்கு வசிக்கும் இளைஞர் ஒருவர் அந்த பகுதி கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி பிரியா என்பவரும் இடையே காதல் இருந்துள்ளது.

இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்து வந்ததில் இருந்தே நண்பர்களாக பழகி காதலித்து வந்துள்ளனர். தற்போது காதலி கல்லூரி படித்து வருகிறார். இந்த சூழலில் திடீரென அந்த இளைஞரை பிரிய எண்ணியுள்ளார் காதலி லட்சுமி. இதனால் அவரிடம் சரிவர பேசாமல் தவிர்த்துள்ளார்.

தொடர்ந்து காதலன் இதுகுறித்து விசாரிக்கையில், காதலிக்கும், அவரது கல்லூரியில் படிக்கும் வேறு இளைஞருக்கு காதல் இருந்ததாக காதலனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் காதலியிடம் ச.ண்.டையிட்டுள்ளார்.

இதனால் கோபம் கொண்ட லட்சுமி பிரியா தனது நண்பர்களுக்கு இதுகுறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் உதவியோடு அனைவரும் சேர்ந்து இந்த இ.ளை.ஞ.ரை க.ட.த்.தி சி.த்.தி.ர.வ.தை செ.ய்.துள்ளனர்.

அதுமட்டுமின்றி அ.வ.ரை நி.ர்.வா.ண.ப்.ப.டு.த்.தி கொ.டு.மை செ.ய்.து அ.தனை வீ.டியோவாகவும் எ.டுத்துள்ளனர். பின்னர் எர்ணாகுளம் பகுதியுள்ள சாலையில் தூ.க்.கி வீ.சிவிட்டு சென்ற அவர்கள், இளைஞரிடம் இருந்த ந.கை ப.ணத்தையும் கொ.ள்.ளை.யடித்துள்ளனர்.

இதையடுத்து பா.தி.க்கப்பட்ட இளைஞர் இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் வி.சாரணை மே.ற்கொண்டனர்.

இதில் 8 பேர் கு.ற்.ற.வாளிகளாக இருக்கும் நிலையில், அதில் முதல் குற்றவாளியான லட்சுமி பிரியா, மற்றும் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த அமல் (24) ஆகியோரை கைது செய்துள்ளனர். மீதம் இருக்கும் 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புது காதலுக்காக தனது காதலனை பிரிய நினைத்த காதலியை விடாமல் து.ர.த்தியதால் நண்பர்கள் மூலம் கடத்தி அ.வ.ரை நி.ர்.வா.ண.ப.டு.த்.தி கொ.டு.மை செ.ய்.து.ள்.ள கா.த.லியின் செயல் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூங்க மறுத்த கைக்குழந்தைக்கு பணிப்பெண் செய்த கொடுமை.. இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் ஒருபெண் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். பின்னர் அந்த குழந்தைகளை கவனித்துக்கொள்ள 33 வயதான மசிதா கொரிடாதுரோச்மா என்ற இளம்பெண் பணியமர்த்தப்பட்டார்.

இந்தோனேசியாவை சேர்ந்த மசிதா, 2021 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டார். அவரது முதன்மைக் கடமைகளில் அவரது முதலாளியின் இரட்டைக் குழந்தைகளைப் பராமரிப்பது, பின்னர் வீட்டு வேலைகளும் அடங்கும்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு மே 26, மசிதாவின் முதலாளி தனது மூத்த மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் 14 மாத வயதுடைய இரட்டைக் குழந்தைகளுடன் பணிப்பெண் வீட்டில் இருந்தார்.

அப்போதுதான் பணிப்பெண் குழந்தைகளை தூங்க வைக்க முயன்றார். இருப்பினும், சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னரும், ஒரு குழந்தை தூங்க மறுத்ததால் மசிதா அந்த குழந்தையின் கையில் கடித்து வைத்தார்.

குழந்தையின் தாய் வீடு திரும்பியதும், குழந்தையின் கையில் கடித்த அடையாளத்தின் வடிவத்தில் காயம் இருப்பதை தாய் பார்த்தார். இது குறித்து கேட்டபோது முதலில் மறுத்த மசிதா, பின்னர் ஒப்புக் கொண்டார்.

பணிப்பெண் மசிதா தனது முதலாளியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார், ஆனால் குழந்தையின் தாய் இந்த விஷயத்தை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்டவர் கைக்குழந்தை என்றும், மசிதா வேண்டுமென்றே காயப்படுத்தினார் என்றும் தாயாரின் வழக்கறிஞர் வாதாடினார். அதைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி, குழந்தையை கடித்ததால் பணிப்பெண்ணுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண் தான் ‘மவுஸ்’.. பார்வைதான் ‘கர்சர்’.. தமிழக பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

தஞ்சாவூரில்..

டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தினால், இளைய தலைமுறை இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்பதற்கு உதாரணமாய் தமிழக பள்ளி மாணவர் ஒருவர் சாதித்திருக்கிறார்.‌

தஞ்சாவூர் அருகே உள்ள படுகோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் கிஷோர். 16 வயதே உடைய கிஷோர், தற்போது கண்டுபிடித்திருக்கும் புதிய கணினி தொழில்நுட்பம் அவருடைய வயதுக்கும் படிப்புக்கும் அப்பாற்பட்டது என்று சொல்ல வேண்டும்.

எனினும் அறிவுக்கு வயது தடை இல்லை; வயது பெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்து சாதித்துக் காட்டியிருக்கிறார் கிஷோர். ஆம், மௌசின் உதவியின்றி கண்களாலேயே கணினியை இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தைத்தான் கிஷோர் கண்டுபிடித்திருக்கிறார்.

இதுவரை கண்களை ரெக்கக்னைஸ் செய்து கணினி அல்லது செல்போன்களில் லாகின் செய்யக்கூடிய ரெட்டினா ஸ்கேன் முறை பரவலாக இருந்தது. ஆனால், இம்முறை கிஷோர் கண்டுபிடித்திருப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய கண்களால் கணினியை இயக்கும் தொழில்நுட்பம் தான்.

தந்தை வெளிநாட்டில் பணிபுரிய, அம்மா தையல் பணிகளை செய்ய, படிப்பில் ஆர்வமிக்க கிஷோர் இப்படி ஒரு கண்டுபிடிப்ப கண்டுபிடித்தார். இதற்கு பெரிதும் காரணமானவர்கள் கிஷோரின் மாற்றுத்திறனாளி நண்பர்கள்தான். அது பற்றி யோசிக்கும் போது கிஷோர் தன் வகுப்பு மாணவன் சிவமாரிமுத்துவுடன் இதுபற்றி தொடர்ந்து விவாதித்திருக்கிறார். அதன் பிறகுதான் இவர்கள் பைதான் கோடிங் பற்றி அறிந்திருக்கின்றனர்.

இந்த பைதான் கோடிங் பற்றி யூடியூபிலும் நிறையத்தேடி அதுபற்றி மென்மேலும் இவர்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். அதன் விளைவாக மாற்றுத்திறனாளிகள் யார் உதவியும் இன்றி தாங்களே கணினிகளை இயக்குவதற்கான ஒரு தொழில்நுட்பமாக, வெப் கேமராவை நோக்கி கண்களால் பார்க்கும்பொழுது அது அங்கிருந்து ஒரு பைதான் கோடின் மூலமாக கர்சராக மாறுகிறது. இப்போது மௌசை வைத்து கர்சரை நகர்த்துவது போல பயனரின் கண்கள் எங்கெல்லாம் பார்க்கிறதோ அங்கெல்லாம் கர்சர் நகரும்.

அதன்பிறகு கூகுள் தேடுபொறிக்குச் சென்று எதை வேண்டுமானாலும் தேடிக்கொள்ளலாம் என்கிற அளவில் தற்போது இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக்கின்றனர்.

தொடர்ந்து இந்த கோடிங்கில் பல மாற்றங்களை செய்து புதிய விஷயங்களையும் அப்டேட் செய்து வருகின்றனர் இந்த மாணவர்கள். இவர்களின் இந்த போற்றத்தக்க சாதனையை தஞ்சாவூர் வல்ஹல்லாவில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில் அண்மையில் தனது கண்டுபிடிப்பை அரங்கேற்றினார். இவர்களுக்கு சான்றிதழ்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.

வவுனியாவில் சூறாவளியால் முறிந்தமரம் அகற்றப்படாமையால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்!!

சூறாவளியால் முறிந்தமரம்..

வவுனியாவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி மினிசூறாவளியுடன் கூடிய கடும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் பாரிய மரங்களும் முறிந்து வீழ்ந்திருந்தன.

இந்நிலையில் வவுனியா மாவட்டசெயலக வாயிலில் அமைந்துள்ள மரத்தின் பாரியகிளை ஒன்று மின்சார இணைப்பின் மீது முறிந்து வீழ்ந்தது.எனினும் சூறாவளி வீசி 20 நாட்கள் கடந்த நிலையிலும் குறித்த மரக்கிளை அகற்றப்படாமையினால் பொதுமக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த பகுதி பொதுமக்களின் நடைபாதையாக இருப்பதுடன், மாவட்டசெயலகம், பொது வைத்தியசாலை என்பன அருகில் இருப்பதால் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு இடமாக காணப்படுகின்றது.

அத்துடன் மரக்கிளை மின்சார இணைப்பின் மீது வீழ்ந்துள்ளமையால் அது அறுந்து விழும் நிலையும் ஏற்ப்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த மரக்கிளையை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை அந்த பகுதியை தினமும் பயன்படுத்தி வரும் மாவட்ட அரச அதிபரின் கண்களில் இது படவில்லையா. என கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், அந்த மரக்கிளை முறிந்து உயிரிழப்பு ஏற்ப்பட்ட பின்னரா அதனை அகற்றுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியாவின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!!

பொன்னையா மாணிக்கவாசகம்

ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரையாசிரியராகவும் செயற்பட்டுவந்த பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் இன்று நள்ளிரவு (12.04.2023) 12.40 மணியளவில் காலமானார்.

நாட்டின் நெருக்கடியான காலகட்டங்களில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த காலத்தில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தி சேகரித்து சர்வதேசமெங்கும் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை வெளிப்படுத்திவந்தார்.

அன்றைய நாட்களில் இரவு 9.15மணிக்கு ஒலிபரப்பாகும் பிபிசியின் தமிழோசை கேட்காமல் குறிப்பாக இலங்கை செய்திகளில் வடமாகாண செய்தியாளர் மாணிக்கவாசகத்தின் செய்திகளையும் பெட்டகங்களையும் கேட்காமல் பலர் உறங்குவதில்லை.

கடந்த 01.04.2023 அன்று தனது 76ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடியவர் இன்று அதிகாலை காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.04.2023 வியாழனன்று நடைபெறும்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் ஊடக நண்பர்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வவுனியாவில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் பரிதாபமாக பலி : ஒருவர் கைது!!

சின்னடம்பன்..

வவுனியா வடக்கில் வேலிக்கு பாய்ச்சிய மின்சாரத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு பதில் நீதிவான் தி.திருவருள் இன்று (11.04) சென்று பார்வையிட்டிருந்தார்.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு வேலி போடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த வேலிக்கு வீட்டில் இருந்து முறையற்ற வகையில் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மரம் வெட்டுவதற்காக குறித்த வேலி ஊடாக சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் கனராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பவராவார். குறித்த பகுதியில் மரம் வெட்டுவதற்காக மரணமடைந்த இளைஞருடன் சிலர் சென்ற போது குறித்த காணி உரிமையாளரிடம்,

வேலிக்கு மின்சாரம் செலுத்தப்பட்டுள்ளதா எனக் கேட்டதாகவும், இதன்போது அவர் இல்லை எனத் தெரிவித்த நிலையிலேயே குறித்த இளைஞன் வேலியால் சென்ற போது மின்சாரம் தாக்கி மரணித்ததாக இறந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கனராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் வவுனியா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் தி.திருவருள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், இது தொடர்பான முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், முறையற்ற வகையில் மின்சாரம் செலுத்தியமை மற்றும் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு,

வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையால் குறித்த வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் 78 வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சோதனை : 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு!!

திடீர் சோதனை..

வவுனியாவில் 78 வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நிறுவை, அளவைப் பிரிவின் உதவி அத்தியட்சகர் எஸ்.இராஜேஸ்வரன் இன்று (11.04) தெரிவித்துள்ளார்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எமது அமைச்சின் உத்தரவுக்கமைய வவுனியா வர்த்தக நிலையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா இலுப்பையடி, சந்தை உள்வட்ட வீதி, கண்டி வீதி, பழைய பேரூந்து நிலையம், நெளுக்குளம், பசார் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 78 வர்த்தக நிலையங்கள் மீது இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது நிறுத்தல் தராசுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா, நிறுத்தல் அளவைகள் சரியாக உள்ளனவா, பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறுத்தல் அளவைகள் சரியானவையா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதனை முறையாக செய்யாத 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

வவுனியாவில் புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!!

மக்கள் எதிர்ப்பு..

கிராமத்திற்கு செல்லும் பாதையை மறித்து அனுராதபுரம் – வவுனியா புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு விஜயபாகு கம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, திருத்த வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்று (11.04) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம கிராமத்தில் 50 வரையிலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கடந்த 32 வருடங்களாக பயன்படுத்தி வந்த வீதியை மறித்து புகையிரதப் பாதை நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கிராம மக்களை அப் பாதையில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களத்தினர் கூறியிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 32 வருடங்களாக பயன்படுத்தி வரும் பாதையை தாம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் போக்குவரத்திற்கு ஏற்றதாக புதிய தண்டவாளங்களை அமைக்குமாறு அப் பகுதி மக்கள் புகையிரத திணைக்களத்தினரிடம் கோரினர். அதற்கு அவர்கள் இணங்காமையால் புகையிரதப் பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

பொலிசார் தலையிட்டு குறித்த விடயம் தொடபில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், அம் மக்களிள் கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்குமாறும் கோரினர்.

இதனால் அனுராதபுரம் – வவுனியா வரையிலான புகையிரதப் பாதை திருத்தப் பணிகள் ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம பகுதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களும் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, தமக்கான தீர்வு கிடைக்காவிடின் தாம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மணமேடையில் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்ட மணப்பெண்.. வீடியோ வைரலானதால் தலைமறைவு!!

உத்தர பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மணமேடையில் மணப்பெண் துப்பாக்கியை மேல் நோக்கி சுட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

திருமண நிகழ்வில் துப்பாக்கியை பயன்படுத்திய மணமகள்
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சலீம்பூரில் திருமண நிகழ்ச்சி நடந்தது.

அப்போது மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அப்போது திருமணத்திற்கு வந்த நபர் மணமகளின் கையில் கைத்துப்பாக்கி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதனை வாங்கிய மணமகள் மேல்நோக்கி நான்கு முறை சுட்டுள்ளார். அச்சமயம் மணமகன் எதுவும் தெரியாதது போல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து அறிந்த பொலிஸார் மணமகள் மீதும், துப்பாக்கியை கொடுத்த நபர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

பொலிஸார் அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மணமகள் தலைமறைவானதால் மணமகன் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.