தமிழக மாவட்டம் கடலூரில் மனைவியை கிண்டல் செய்ததைத் தட்டிக்கேட்ட கணவனை, 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மணலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு சித்ரா(30) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
நேற்றைய தினம் சித்ரா வீட்டருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் அவரை கிண்டல் செய்துள்ளான். குறித்த சிறுவன் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சித்ரா தன் கணவர் விஜயகுமாரிடம் இதனை கூறியுள்ளார். உடனே சிறுவனிடம் சென்ற விஜயகுமார் ஏன் என் மனைவியை கிண்டல் செய்தாய் என்று கேட்டதுடன், கோபத்தில் கத்தியால் கழுத்தில் கீறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவனும் தன் வீட்டில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து வந்து, விஜயகுமாரின் கழுத்தில் குத்தியுள்ளான். இதில் விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் விஜயகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறித்த சிறுவனை கைது செய்த பொலிஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர்தான், சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாற, இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். முன்னதாக இவர்களிருவரின் திருமணம் குறித்து இவர்களது பெற்றோர்கள் யோசித்து தயங்கியதாக கூறப்படும் நிலையில் பிறகு அனைவரும் சம்மதித்ததாக தெரிகிறது.
சீனா மற்றும் பாங்காங்கில் தொழில் முனைவராக உள்ள பாலச்சர்ந்தருக்கும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோவிற்கும் சமூக வலைத்தள ஆப் மூலம் பழக்கம் ஏற்பட, இந்த பழக்கம் நாளடைவில் நட்பாகவும், பின்னர் காதலாகவும் மாறியுள்ளது.
அதன் பின்னர் இருவரும் மனதளவில் இணக்கம் கொண்டு, இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர், உறவினர் சூழ திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி கடலூர் முதுநகரில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் அனைவரது சம்மதத்துடனும், மணமகன் பாலச்சந்தர் சீன நாட்டைச் சேர்ந்த மணமகள் யீஜியோ கழுத்தில் இந்திய – இந்துத்துவ கலாச்சார முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார்.
இதற்கென மணமகன் பாலச்சந்தர் தமிழ் பாரம்பரிய முறையில் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்துகொள்ள, மணமகள் யீஜியோ முழு தமிழ்ப் பெண்ணாகவே மாறி, பட்டுப் புடவை, தங்க ஆபரணங்கள் அணிந்துகொண்டார்.
பின்னர் அக்னி குண்டம் சாட்சியாக, மந்திரம் ஓத, மங்கள இசை முழங்க, இந்து முறைப்படி இந்திய கலாச்சாரப்படி திருமாங்கல்யம் கட்டி இவர்களது திருமணம் நடைபெற்றது. பின்னர் பெண், மாப்பிள்ளை இருவரின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த திருமணம் குறித்து பேசிய மணமகன் பாலச்சந்தர் இதன் பின்னணியை விளக்கினார். அதில் “திருமணத்திற்கு முன்பான எங்களது அதே காதலுடன் நாங்கள் எங்கள் வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக தொடார்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதில், பாலச்சந்தர் திருமணத்துடன், அவரது சகோதரர் பாலமுருகனுக்கு கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பவித்ராவுடன் இதே முஹூர்த்தத்தில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் அருகே இரு மகள்களை தூக்கில் தொங்கவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் அருகே உள்ள பி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (42). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பெத்தம்மாள் (35).
இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பாண்டிச்செல்வி (6), கார்த்திகாயினி (3) என்ற இரு மகள்கள் உண்டு. மூத்த மகள் பாண்டிச்செல்வி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக பெத்தம்மாள் பயந்தது போலவும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் காணப்பட்டுள்ளார். இதனால், சரவணக்குமார் தனது மனைவி பெத்தம்மாளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அவ்வப்போது அழைத்துச்சென்று கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சரவணக்குமார் இன்று காலை தோட்டத்திற்கு விவசாய கூலிவேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
இதனால், சந்தேகம் அடைந்த சரவணக்குமார் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரு குழந்தைகளுடன் பெத்தம்மாளும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பெத்தம்மாள் சடலத்தையும் இரு குழந்தைகள் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பெத்தம்மாள், தனது இரு மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இருப்பினும், இச்சம்பவத்திற்கு வேறு ஏதும் காரணம் உண்டா என ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடியில் வட்ராபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது சின்ராஜ். இவருடைய மனைவி 32 வயது சூர்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றன.
இவர்களுக்கு 4 வயதில் லக்சன், 1 வயதில் உதயன் என 2 மகன்கள். இந்நிலையில் சின்ராஜ் கனலாபாடி ஊராட்சி செயலாளராகவும், சூர்யா சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே கணவன் , மனைவிக்கிடையில் குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர் பிரச்சினைகள், வாக்குவாதங்கள், சர்ச்சைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று மீண்டும் சின்ராஜ் சூர்யாவிற்கும் இடையே தகராறு முற்றிவிட்டது. இரவு சின்ராஜ் திண்டிவனத்தில் நடைபெற்ற தனது நண்பர் திருமணத்தில் கலந்துகொண்டு இரவு 12 அணிக்கு பிறகு வீடு திரும்பினார்.
வீட்டின் கதவு திறந்தே இருந்ததை கண்டு சின்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்த பொழுது தனது மனைவி மற்றும் இரு மகன்களையும் காணவில்லை. அனைத்து இடங்களிலும் தேடினார். உறவினர்கள் , நண்பர்கள் வீடுகளில் விசாரித்தார்.
அதன் பிறகு அவர்களின் உதவியுடன் கிராமம் முழுக்க தேடி அலைந்த சின்ராஜ் கிணற்றின் அருகே மொபைல் ஒலிப்பதை கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் குதித்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சூர்யா மற்றும் 4 வயது மகனுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு வயது குழந்தையின் உடலை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சின்ராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் இரண்டு மகன்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நர்மதா ஆற்றில் வயதான பெண் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நர்மதா ஆற்றில் தண்ணீரில் மேல் மூதாட்டி நடந்து சென்ற நிலையில் இதை அதிசயம் என்று நம்பி அந்த மூதாட்டியை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் ஆற்றங்கரையில் திரண்டனர்.
அந்த மூதாட்டி தான் நர்மதா தேவி என மக்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் . இந்த வீடியோ சுற்றியுள்ள கிராமங்களில் பரவியதால் நர்மதா தேவி என நினைத்து அந்த மூதாட்டியை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.
நர்மதா தேவியின் தரிசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் மூதாட்டியின் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கானோர் காத்திருந்து தரிசித்தனர். மத்திய பிரதேசத்தில் ஆற்று தண்ணீர் மேல் நடக்கும் பெண் தெய்வம் என இவரை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ஜோதி ரகுவன்ஷி. இவர் தண்ணீரில் நடப்பதையோ அல்லது எந்த ஒரு தெய்வத்தின் அவதாரமாக இருப்பதையோ அவர் மறுத்துள்ளார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர், நர்மதாபுரத்தில் வசிப்பதாக தெரிவித்துள்ளார். ஜோதி ரகுவன்ஷி, நர்மதா நதியைச் சுற்றி நடப்பதன் மூலம் அவர் ஒரு அதிசய பெண் என நம்பி அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு,
தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர். போலீசார் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியில் ஏழுமலை (32) – பிரமிளா (29) தம்பதி வசித்து வந்தனர். இதில் பிரமிளா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த மூன்றாம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த நான்காம் தேதி அரசு மருத்துவமனையில் வைத்து பிரமிளாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் மூலம் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அதனைத் தொடர்ந்து தாய் மற்றும் சேய் இருவரும் வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மறுநாள் மாலை சுமார் 4 மணியளவில் பிரமிளாவிற்கு திடீரென வயிறு வீங்கி உள்ளது.
அதன் காரணமாக அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி மருத்துவர்கள் அறுவை அரங்கத்திற்கு அவரை அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தொடர்ந்து ஆறாம் தேதி பிரமிளாவை அவரது உறவினர்கள் பார்க்க சென்றபோது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
அது குறித்து மருத்துவர்களிடம் அவரது உறவினர்கள் கேட்டபோது உரிய பதில் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மேல் அவர் கண் விழிக்கவில்லை. தொடர்ந்து நேற்று பிரமிளா உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு கதறி அழுதனர். பலரும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் பயிற்சி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் அந்த பெண் உயிரிழந்து விட்டதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறி வாக்குவாதம் செய்தனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து பிரமிளாவின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் வெகு நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக திகழ்ந்து வைகைப்புயல் என்ற அங்கீகாரத்தை பெற்று புகழப்பட்டு வருபவர் வடிவேலு. சில ஆண்டுகளுக்கு முன் ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
அதன்பின் பல பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு, திரும்பவும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் வடிவேலுவின் தலைக்கனமும் ஆணவமும் தான் என்று அவருடன் நடித்த நடிகர்கள் கூறி வருகிறார்கள்.
அப்படி சிங்கமுத்து, போண்டா மணி உள்ளிட்ட நடிகர்களும் அவரால் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்தவகையில் நடிகர் போண்டா மணி, சிங்கமுத்துவும் வடிவேலுவும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
இது வடிவேலுவுக்கு பிடிக்காமல் போக, உடனே போண்டா மணி அவருக்கு கால் செய்து பேசியிருக்கிறார். போனில் போண்டா மணியை அசிங்கமாக திட்டியதோடு நேரில் மன்னிப்பு கேட்க வந்தபோதும் திட்டி எட்டி உதைத்து வெளியில் தள்ளியிருக்கிறாராம். இதனை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் போண்டா மணி தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
முன்னதாக எதிர்வரும் மே 15ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் தற்போது க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மே 29ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திரு்நதது.
இதனையடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணையை மே மாதம் 29ஆம் திகதி வரை தொடர்வதென இப்போதைக்கு தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் அடங்கிய புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இதன் அடிப்படை அறிகுறிகளாகும் என விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் கடந்த மூன்றரை மாதங்களில் எலிக்காய்ச்சல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டினுள் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க சில நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் கூறுகையில், நாட்டில் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த வருடம் ஜூன் மாதம் முதல் தொழில்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளன.
குறித்த மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடல் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் நிறைவுறுத்தப்படும். தற்போதைய விலையை விட குறைந்த விலையில் அந்த நிறுவனங்களுக்கு நாட்டினுள் எரிபொருளை விநியோகிக்க வாய்ப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவின் – சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
20 வருடங்களுக்கு நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு, களஞ்சியப்படுத்துவதற்கு மற்றும் விநியோகிப்பதற்கு குறித்த நிறுவனங்களுக்கும் அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டிலுள்ள அனைத்து பிரதான மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளையும் கட்டணச்சாலைகளாக மாற்றுவதற்காக, வீதிப் பராமரிப்பு நிதியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிதியாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முறையான வீதிப் பராமரிப்பை உறுதி செய்வதற்கும் வீதி நிர்மாணம் மற்றும் பராமரிப்பிற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய செலவினங்களைக் குறைப்பதற்கும் ஏனைய நாடுகளுக்கு இணையாக ஆர்.எம்.எப்.ஐ நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்திய மயக்க மருந்தினால் ஏற்பட்ட பிரச்சினையால் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலருக்கு அந்த மருந்தினால் ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவால், இந்திய மயக்க மருந்து பயன்பாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மியன்மார் அரசிடம் இருந்து அரசு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்து குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
மருந்துகளை ஆய்வக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
எனவே உடனடியாக மருந்துகளை ஆய்வக ஆய்வுக்கு உட்படுத்துமாறு சுகாதார அமைச்சகத்திடம் ஆய்வக அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய அரசிடமிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மயக்க மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மியன்மார் அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட மருந்துகள் விநியோகிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் இரசாயன பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அந்த மருந்துகள் இலங்கையின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை, மியன்மார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மருந்துகள் என்றாலும், அவை பங்களாதேஷில் தயாரிக்கப்பட்டவை என்றும், இந்த மருந்துகள் மியன்மாரிலும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரசாயனப் பரிசோதனையின்றி வழங்கப்பட்ட இந்திய மயக்க மருந்தின் சிக்கலால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இரசாயனப் பரிசோதனையின்றி எந்த அடிப்படையில் இதேபோன்ற மருந்தைப் பயன்படுத்துவது என அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. எனவே இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த மார்ச் 06, 2021 அன்று ஜப்பானின் நகோயா தடுப்பு மையத்தில் விஷ்மா சந்தமாலி ரத்நாயக்க (33) முறையான சிகிச்சை கொடுக்கப்படாமல் இறந்த விதத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் முதன்முறையாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதே சமயம் இதுகூட தணிக்கை செய்யப்பட்டது என பிந்திய தகவல்கள் வழி தெரிவிக்கப்படுகிறது. சந்தமாலி, தன்னால் சுவாசிக்க சிரமமாக இருப்பதாக தெரிவித்த போதும், தடுப்பு மைய அதிகாரிகள் அதை பெரிதுபடுத்தவில்லை என காட்சிகள் மூலம் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் சந்தமாலி இறந்து போனார்.
அப்போது அவருக்கு வயது 33 . விஷ்மா சந்தமாலி ரத்நாயக்க 2017 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து மாணவர் வீசாவின் கீழ் ஜப்பான் சென்றுள்ளார். விசா காலாவதியான பிறகு, புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் அவருக்கு ஜப்பானிய அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 2020ல் கைது செய்யப்பட்ட , விஷ்மா சந்தமாலி , ஜப்பானில் உள்ள நகோயா தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார். அவர் பல மாதங்களாக முகாமில் இருந்த சமயம், ஜனவரி 2021 இல் நோய்வாய்ப்பட்டுள்ளார்.
வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்ட அவரது உடல்நிலை, முறையான மருத்துவ சிகிச்சை இல்லாததால் மோசமானதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இச்சமயத்தில், விஷ்மா சந்தமாலியின் எடை 19 கிலோ குறைந்து, அவரால் தனியாக நிற்கவோ அல்லது உடை மாற்றவோ முடியாத அளவுக்கு பலவீனமாகியுள்ளார். இறுதியாக முகாமில் தற்காலிக மருத்துவர் ஒருவர் பரிசோதித்த போதும் அங்கு விஷ்மா சந்தமாலிக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
விஷ்மா சந்தமாலிக்கு நோய் இருப்பதாக போலியாக நடிப்பதாக எண்ணிய அதிகாரிகள், மார்ச் 4-ம் தேதி மனநல மருத்துவரை சந்திக்க பரிந்துரைத்துள்ளனர். விஷ்மா சந்தமாலிக்கு மனநோய் எதுவும் இல்லை என்பது தெரியவந்தாலும், மனநோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகள் விஷ்மா சந்தமாலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மார்ச் 06, 2021 அன்று, விஷ்மா சந்தமாலி சரியான மருத்துவ சிகிச்சை இல்லாததால் இறந்து போனார், அதன்பின் அவரது உடலை அடையாளம் காண அவரது குடும்பத்தினர், ஜப்பானுக்கு அழைக்கப்பட்டனர்.
விஷ்மா சந்தமாலியின் உடலை அடையாளம் கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரிகள் , வரவேற்பு மையத்தின் தலைவர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக நகோயா மாவட்ட நீதிமன்றத்தில் நவம்பர் 2021 இல் வழக்குத் தாக்கல் செய்தார்கள்.
ஜப்பானிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், மருத்துவ சிகிச்சை வழங்குவது தடுப்பு மையங்களின் தலைவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இருப்பினும், விஷ்மாவின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்புக்கான குறிப்பிட்டதொரு காரணம் இல்லாதது சிக்கலாக உள்ளது. அங்கு வழக்குத் தாக்கல் செய்த சகோதரிகளான வயோமி ரத்நாயக்க மற்றும் பூர்ணிமா ரத்நாயக்க ஆகியோரின் சட்டத்தரணிகள் , விஷ்மா சந்தமாலி தங்கியிருந்த அறையின் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றில் வழங்குமாறு கோருகின்றனர்.
இதனடிப்படையில் 2021 பிப்ரவரி 22 முதல் மார்ச் 6 வரை விஷ்மா சந்தமாலி தங்கியிருந்த அறையின் சிசிடிவி காட்சிகளை ஜப்பான் அரசு , நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் முதன்முறையாக ஊடகங்களில் வெளியாகியதால், விஷ்மா சந்தமாலியின் மரணம் குறித்து உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள நகோயா தடுப்பு முகாமில் உணவு மற்றும் உரிய சிகிச்சைகள் இன்றி உயிரிழந்த விஷ்மா சந்தமாலி ரத்நாயக்கவுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த சி.சி.டி.வி காட்சிகள் , விஷ்மா சந்தமாலி சார்பாக வாதிடும் சிவில் ஆர்வலர்கள் , ஜப்பானிய அரசாங்கம், நீதித்துறை போன்றவற்றை மீண்டும் செயல்பட வைக்க ஊன்றுகோலாகியுள்ளது.
இதுகுறித்து விஷ்மா சந்தமாலியின் சகோதரி வயோமி நிசன்சாலா கூறுகையில், இந்த வீடியோவை பார்த்து “எங்கள் குடும்பத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் முடிவெடுப்பார்கள் என்றும், எனது சகோதரிக்கும் பெரிய அநீதி இழைத்திருப்பதை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோக்கள் ஊடகங்கள் வழியாக வெளியாகியுள்ள நிலையில் , ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்த விஷ்மா சண்டமாலியின் மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் எடிட்டிங் செய்யப்பட்டு அனுமதியின்றி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக ஜப்பான் நீதி அமைச்சர் கென் சைத்தோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜப்பானிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த வியாழன் அன்று ஜப்பானில் அவரது குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முதன்முறையாக ஊடகங்களுக்கு இக் காட்சிகளை வெளியிட்டபோது அது பரவலான சமூக கவனத்தைப் பெற்றது.
இந்தக் காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியான நிலையில், நேற்று பிற்பகல் ஜப்பானிய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஜப்பானிய நீதி அமைச்சரிடம் ஊடகங்கள் வினவியபோது, “இந்த வீடியோக்கள் அரசாங்கத்தால் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டவை.
இந்த வீடியோக்கள் சுமார் 5 மணி நேரம் கொண்டவை, அந்த வீடியோக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன. இந்த வீடியோக்களில் ஒரு பகுதி புகார்தாரரால் , அனுமதியின்றி எடிட் செய்யப்பட்டு, அந்த வீடியோக்கள் மீடியாக்களுக்கு வழங்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.” என ஜப்பான் நீதித்துறை அமைச்சரான கென் சைத்தோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஹன்சா பள்ளத்தாக்கில் பிறக்கும் மக்கள் 80 வயதிலும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாக அச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஹன்சா பள்ளத்தாக்கு.
பலுசிஸ்தானின் ஹன்சா-நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு. “ஹன்சா பள்ளத்தாக்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக செல்கிறது.
இந்த கிராமம் இளைஞர்களின் சோலை என்றும் அழைக்கப்படுகிறது. புவியியல் ரீதியாக, ஹன்சா பள்ளத்தாக்கு மூன்று பகுதிகளை உள்ளடக்கியது: மேல் ஹன்சா (கோஜல்), மத்திய ஹன்சா மற்றும் கீழ் ஹன்சா (ஷினாகி). என அழைக்கப்பட்டுகின்றது.
உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக் காண இங்கு வருகிறார்கள். இந்த பள்ளத்தாக்கில் ‘ஹன்சா’ சமூகத்தினர் வாழ்கின்றனர்.
சிலர் இந்த மக்களை ஐரோப்பிய இனத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள். ஹன்சா பள்ளத்தாக்கு மக்கள் மற்ற மக்களை விட மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்கள். ஹன்சா சமூகத்தின் மக்கள் 150 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்த சமூகத்தின் பெண்கள் 90 வயதிலும் தாயாக முடியும், 80 வயது வரை இளமையாக காட்சியளிக்கிறார்கள். உடல் ரீதியாக இந்த சமூக மக்கள் மிகவும் வலிமையானவர்கள். இவர்கள் மருத்துவமனைக்கு செல்வதில்லை. இங்குள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள். இந்த சமூகத்தின் பெண்களும் உலகின் மிக அழகான பெண்களில் இடம்பெற்று உள்ளார்கள்.
இச்சமூகப் பெண்களின் வயது சுமார் 60-70 ஆக இருக்கும் போது கூட அவர்களின் வயது 20-25 ஆக மதிப்பீடில் இருக்கும். இந்தப் பெண்கள் அழகாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் இமயமலைப் பனிப்பாறையிலிருந்து உருகிய தண்ணீரைக் குடித்து, அதில் குளிப்பதுதான்.
இந்த நீரில் மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். “ஹுன்சா மக்கள் தேன் அதிகம் சாப்பிடுகிறார்கள்.” ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘புருஷோ’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்குள்ள மக்களின் முக்கிய மொழி ‘புருஷாஸ்கி’.
பாகிஸ்தானின் மற்ற சமூகங்களைக் காட்டிலும் ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் படித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை ஹன்சா பள்ளத்தாக்கில் 87 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
இந்த சமுதாய மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுவார்கள். இது தவிர, இங்குள்ள மக்கள் சைக்கிள் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை, பெரும்பாலும் கால்நடையாகவே நடந்து செல்கின்றனர்.
நாளாந்தம் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை நடைபயிற்சி மற்றும் ஜாகிங் செய்வது அவரது வாழ்க்கைமுறையில் அடங்கும். அவர்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள், அதிகமாக நடக்கிறார்கள்.
இங்குள்ள மக்கள் இறைச்சியையும் சாப்பிடுகிறார்கள், ஆனால் மிகக் குறைந்த அளவில், அவர்கள் சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே இறைச்சியை உட்கொள்கிறார்கள்.” இந்த சமூகத்தைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்த புத்தகங்களில் ‘தி ஹெல்தி ஹன்சாஸ் (The Healthy Hunzaz) மற்றும்தில் லூஸ்ட் கிங்டம் ஆப்தி ஹிமாலயாஸ் (The Lost Kingdom of the Himalayas) போன்ற முக்கிய புத்தகங்கள் அடங்கும். இந்நூல்களில் இச்சமூகத்தின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் யானை வேலி மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு யானை வேலி போடப்பட்டிருந்தது.
குறித்த வேலிக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவதானிக்காது குறித்த வேலி ஊடாக நேற்று மாலை (10.04) இளைஞன் ஒருவர் பயணித்துள்ளார். இதன்போது யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கனராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பராவார். இது தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமைச்சின் உத்தரவுக்கமைய வவுனியா வர்த்தக நிலையங்களில் நிறுவை, அளவைப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையை இன்று (10.04) முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா இலுப்பையடி, சந்தை உள்வட்ட வீதி, கண்டி வீதி, பழைய பேரூந்து நிலையம், நெளுக்குளம், பசார் வீதி ஆகிய பகுதிகளிலேயே இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக வவுனியாவில் உள்ள சதோச விற்பனை நிலையம், காகில்ஸ் பூட்சிற்றி மற்றும் தனியார் பல்பொருள் விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் என்பவற்றில் இவ் விசேட சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது நிறுத்தல் தராசுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா, நிறுத்தல் அளவைகள் சரியாக உள்ளனவா, பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறுத்தல் அளவைகள் சரியானவையா என்பது குறித்து அதிகாரிகளினால் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.