வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப் பகுதியில் தற்போது வசித்து வரும் தமிழர் ஒருவர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று (09.04) புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது நேற்று (09.04) மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் (10.04) குறித்த நபர் தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொலிசில் முறையிட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த புத்தர் சிலையை அவர் தனது காணிக்கு முன்னால் உள்ள அரச காணியில் வைத்துள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பெங்களுருவில் இருந்து 1,300 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தங்கள் சொந்த கிராமத்துக்கு நடந்தே சென்ற தொழிலாளர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் காலஹண்டியின் ஜெயபாட்னா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் தரகர் ஒருவர் மூலமாக அதிக சம்பளம் தருகிறோம் என பெங்களூருவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் பிரிக்கப்பட்டு 3 தொழிலாளிகள் மட்டும் ஒரு கட்டிடம் கட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால்,அங்கு முதலில் வாரத்துக்கு 100 ரூபாய் மட்டுமே சம்பவம் தரப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாரம் 200 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் சம்பளம் கொடுப்பது நிறுத்தப்பட்டு வெறும் உணவு மட்டுமே கொடுக்கப்பட்டு அதிக வேலை செய்ய நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் முதலாளி அவர்களை அடித்து கொடுமையும் படுத்தியுள்ளார். இதனால் அங்கிருந்து வெளியேறி தங்கள் சொந்தஊருக்கு செல்ல அந்த 3 தொழிலாளிகளும் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் கையில் பணம் இல்லாத நிலையில் நடந்தே தங்கள் ஊருக்கு செல்ல தீர்மானித்துள்ளனர். அதன்படி 1,300 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தங்கள் சொந்த கிராமத்துக்கு நடந்தே சென்றுள்ளனர்.
மார்ச் 26-ம் தேதி பெங்களூருவில் இருந்து நடக்கத் தொடங்கிய அவர்கள் ஒரு வாரம் முழுவதும் நடந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தங்கள் கிராமத்தை அடைந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 60 கிலோமீட்டர்களுக்கு மேல் அவர்கள் நடந்துள்ளனர்.
இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவ்ர்களிடம் பல்வேறு செய்தி நிறுவனங்களும் சந்தித்து பேட்டியெடுத்தனர். ஆனால் போதிய படிப்பறிவு இல்லாததால் எங்கு வேலை செய்தோம் என்றோ, அவர்களின் முதலாளி மற்றும் தரகர் யார் என்பது கூட அவர்களுக்கு தெரியாத நிலை இருந்துள்ளது.
மேலும், சாலையில் லாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்ததாகவும், ஆனாலும் பெரும்பாலும் நடந்தே சொந்த கிராமத்துக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இவ்ர்களை ஏமாற்றிய முதலாளி குறித்து விசாரணை நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கோட்டீஸ்வரன் (31)- ஜனகவள்ளி (28) தம்பதி வசித்து வந்தனர். கோட்டீஸ்வரன் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார்.
இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், மீண்டும் கருவுற்ற ஜனகவள்ளி 2ஆவது பிரசவத்துக்காக புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மகப்பேறு மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஜனகவள்ளிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜனகவள்ளி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தாய், குழந்தை இருவரும் இறந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது, புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததும், உரிய சிகிச்சை அளிக்காததால் தான் ஜனகவள்ளி மற்றும் அவரது குழந்தை இறந்ததாக கூறி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற போலீசார் அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஜனகவள்ளியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் புளியந்தோப்பு காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கர்ப்பிணி இறப்பு குறித்து விசாரணை நடத்தும்படி மருத்துவ கல்வி இயக்குனருக்கு துணை கமிஷனர் பரிந்துரை கடிதம் கொடுத்தார். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
கர்நாடக மாநிலம் சோனப்பா லே-அவுட் பகுதி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு சாக்லேட் வாங்கி தராததால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கர்நாடக மாநிலம் பெங்களூரு எண்ணூர் அருகே சோனப்பா லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (30). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த கெளதம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கு 5 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
லே-அவுட் பகுதியில் சலூன் கடை வைத்து கெளதம் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே தம்பதிகளுக்குள் அடிக்கடி சின்னச்சின்ன சண்டை வந்ததாகக் கூறப்படுகிறது.
சண்டை வந்த பிறகு சமாதானம் செய்ய மனைவிக்கு, கெளதம் ஏதாவது பொருள் அல்லது சாக்லேட் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல் கணவர் கெளதமிடம் சண்டை நடந்து முடிந்தபிறகு, சாப்பிட சாக்லேட் வேண்டும் என மனைவி நந்தினி கேட்டுள்ளார். வேலை செல்லும் அவசரத்தில் கணவர் கெளதம் அதனைக் கண்டுக்காமல் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். இதனையடுத்து கடைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே கெளதம் செல்போனுக்கு, நந்தினி ஒரு மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார்.
அதில், I am going to deep sleep – குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கெளதம், 20 முறைக்கு மேல் போன் செய்து, நந்தினி போனை எடுக்காமல் இருந்துள்ளார். பின்னர் பதற்றத்தில் வீட்டிற்கு வேகமாக சென்ற கெளதம் வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்படுள்ளது கண்டுள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு கெளதம் உள்ளே சென்றார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கியவாறு நந்தினி கிடந்துள்ளார்.
இதனால் பதறிப்போன கெளதம் உடனே நந்தினியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நந்தினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட கெளதம் அங்கேயே கதறி அழுத சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு சாக்லேட் வாங்கி தராததால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மகள் பிரபாவதி (20). இவர் சீர்காழியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பயிற்சி வகுப்பில் பயின்று வந்தார்.
இந்நிலையில் பிரபாவதி இன்று ( ஏப். 09 ) அதிகாலை தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் தற்கொலை செய்தபடி இறந்து கிடந்தார்.இதனை கண்ட அவரது குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இது குறித்து திருவெண்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து திருவெண்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
தொடர்ந்து, உயிரிழந்து கிடந்த பிரபாவதியின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் பிரபாவதி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் பிரபாவதி, தான் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (26) என்பவரை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தான் மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இது குறித்து ஆனந்தராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் அர்ஜுனன், அலெக்சாண்டர், அவரது அண்ணி ரஞ்சனி ஆகியோர் திருமணம் செய்து வைக்க முடியாது என கூறி மிரட்டியாதகவும், நீ செத்து விடு எனக் கூறியதாகவும் கடிதத்தில் பிரபாவதி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து திருவெண்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் அலெக்சாண்டர், ஆனந்தராஜ், ரஞ்சனி ஆகிய மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய அர்ஜுனனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கேரளாவில் சாதாரண விஷயத்திற்காக ஏற்பட்ட சண்டை ஒன்று கொலையில் முடிந்துள்ளது. அம்மாநிலத்தின் திருச்சூரில் உள்ள கோடனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான ஜாய்.
இவருக்கு ரீனா என்ற மனைவியும், அலீனா என்ற மகளும் உள்ளனர். 25 வயதில் ரிஜோ என்ற மகனும் உள்ளார். இளைஞர் ரிஜோ வெல்டிங் கடையில் வேலை செய்பவர்.
சம்பவ நாளான கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார் ரிஜோ. தன்னை இரவு 8.15 மணிக்கு எழுப்ப வேண்டும் என தந்தையிடம் கூறிவிட்டு படுத்து உறங்கியுள்ளார்.
ஆனால் தந்தை ஜோய் சிறிது தாமதாமாக இரவு 8.30 மணிக்கு மகனை எழுப்பிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் ரிஜோ ஏன் என்னை தாமதமாக எழுப்பினீர்கள் என தந்தையுடன் வாக்குவாதம் செய்து பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
இது ஒருகட்டத்தில் கோர சண்டையாக மாறியதில் தந்தையை அடித்து கொலை செய்துள்ளார் ரிஜோ. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறை ரிஜோவை கைது செய்துள்ளது.
ஜாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. தாமதமாக எழுப்பியதற்கு தந்தையை மகன் அடித்து கொலை செய்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரை பின்னோக்கி இயக்கிய போது வீட்டு வாசலில் நின்றிருந்த சிறுவன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது எண்ணமங்கலம் என்ற கிராமம். இங்கு முத்துசாமி என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் தருண் அந்த பகுதி பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் கடைசி மகன் தனீஷ் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று முத்துசாமியின் 2 மகன்களும், அவரது பாட்டியான ஜோதிமணியுடன் அந்தியூர் தேர் வீதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்க காரில் சென்றுள்ளனர். அப்போது அந்த காரை முத்துசாமியின் மைத்துனரும் சிறுவர்களின் மாமாவுமான கனகராஜ் ஓட்டி வந்துள்ளார்.
பின்னர் மருத்துவமனைக்கு சென்று 3 பேரையும் இறக்கிவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை சந்திக்க உள்ளே சென்ற 3 பேரில், பாட்டியை மட்டும் விட்டுவிட்டு, சிறுவர்கள் இருவரும் வெளியே வந்துவிட்டனர்.
அந்த சமயத்தில் கனகராஜ் தான் வந்த காரை பின்னோக்கி இயக்கவே அப்போது வெளியே நின்றிருந்த சிறுவன் மீது மோதியது. அந்த சமயத்தில் இந்த காருக்கும் சிறுவனுக்கும் பின்னால் இருந்த காருக்கும் இடையே சிறுவனின் உடல் நசுங்கியது.
இதனை கண்ட அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்த ஓடி வந்து சிறுவனை தூக்கினர். பின்னர் மருத்துவமனை வாசலில் இந்த சம்பவம் நடந்ததால் உடனே அங்கேயே உள்ளே தூக்கி சென்றனர். அங்கே சிறுவனை சோதித்து பார்த்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து அந்தியூர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்த அவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை பின்னோக்கி இயக்கும்போது சிறுவன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான மில்கோ நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் ஹைலேண்ட் யோகர்ட் லாபம் ஈட்டுவதற்காக அதன் எடையை 10 கிராம் குறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்களை தவறாக வழிநடத்தி நுகர்வோர் சட்டத்தை மீறி செயற்படுவதாக நுகர்வோர் கருத்து வெளியிட்டுள்ளனர். முன்னதாக, ஒரு கோப்பை ஹைலேண்ட் யோகர்ட்டின் எடை 90 கிராம் என பதிவாகியிருந்தது.
தற்போது யோகர்ட் கோப்பையை சிறியதாக மாற்றாமல் அடிப்பாகத்தை பெரிதாக்கி 10 கிராம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது ஒரு கப் ஹைலேண்ட் யோகர்ட்டில் 80 கிராம் தயிர் மட்டுமே உள்ளதென தெரியவந்துள்ளது.
இப்படி 10 கிராம் குறைப்பதன் மூலம் ஒரு கப் யோகர்ட்டில் சுமார் 11.50 ரூபாய் வரை நிறுவனம் இலாபம் ஈட்டுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் மாற்றமடைந்து வருகின்றது.
அந்தவகையில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 639,082 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,850 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
தென்னிலங்கை பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு அந்த ஊர் மக்கள் வகுப்பறை அமைத்து கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு வகுப்பறை இன்மையால் மர தடிகள், களிமண் என்பவற்றை பயன்படுத்தி ஊர் மக்கள் வகுப்பறை அமைத்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது அரசாங்கமும் அரசியல்வாதிகளும் தமது மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
காலி மாவட்டத்தில் 23 வயதுடைய மனைவியை த.டி.யா.ல் அ.டி.த்.து க.ணவன் கொ.லை செ.ய்.து.ள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் உ.யிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற் பிள்ளையின் தாயார் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் பார்த்த போது, குறித்த இளம் கு.டும்ப பெ.ண் சமையல் அறையில் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் உ.யி.ரிழந்து கி.டந்துள்ளார்.
பின்னர் அரநாயக்க பொலிஸார் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, தா.க்.கு.த.லு.க்.கு ப.ய.ன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் த.டி இ.றந்த பெ.ண்ணுக்கு அ.ரு.கில் க.ண்டுபிடிக்கப்பட்டது.
கொ.லை.யை செ.ய்.த ச.ந்தேக நபரின் க.ணவர் பொலிஸில் ச.ரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இ.ந்த கொ.லை சம்பவத்திற்கு கு.டும்ப த.கராறே காரணம் என அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் கா.தலனுக்கு கை.வி.ல.ங்.கி.ட்.டு அ.வரது மு.ன்பே கா.தலியை முழு நி.ர்.வா.ண.மா.க்.கி பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.த்.து.க்.கு உ.ட்படுத்திய ச.ம்பவம் ஒ.ன்று இ.டம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் இரத்தினபுரி – சமனலவெவ பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை (06-04-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சனிக்கிழமை (08-04-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சமனலவெவவை பார்வையிடுவதற்காக குறித்தன்காதல் ஜோடி, மோட்டார் சைக்கிளில் வந்துள்ளது. ஓரிடத்தில் நின்றிருந்த அந்த நபர், மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கூறியுள்ளார்.
தான் பொலிஸ் அதிகாரி என்றும் போ.தை.ப்.பொ.ரு.ள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் சோ.தனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறி பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
இருவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனக்கூறி, மோட்டார் சைக்கிளுடன் அவ்விளைஞனுக்கு கைவிலங்கு இட்டுள்ளார். அதன்பின்னர், அந்த யுவதியை பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.துள்ளார்.
அதன்பின்னர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் அந்த 18 வயதான யு.வ.தி.யை நி.ர்.வா.ண.மா.க ப.ட.ம்.பி.டி.க்.க மு.யற்சித்துள்ளார். இருப்பினும், அதற்கு அந்த யு.வதி இடமளிக்கவில்லை என வி.சாரணைகளின் ஊடாக அறியமுடிந்துள்ளது.
இந்த நிலையில், பொலிஸ் அதிகாரியென தன்னை கூறிக்கொள்ளும் நபரொருவர், சுற்றிதிரிவதாகவும் அவர், இளம் ஜோடிகளை இலக்குவைத்து கைவரிசையை காண்பித்து வருவதாகவும் சமனலவெல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஸ்தலத்துக்கு விரைந்து யு.வதியை மீட்டதுடன், கைவிலங்கு போடப்பட்டிருந்த இ.ளைஞனையும் மீ.ட்டு பலாங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதும் பிள்ளையொன்றின் தந்தை என்றும் வி.சாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09.04) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் – மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக,
வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பகுதியில் தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வருவதுடன், குறித்த சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு அண்மித்ததாக செட்டிகுளம் முருகன் கோவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியாராக இருந்த நபர் மாரடைப்பில் இறந்ததால் அவரின் மேலே அவரது அக்காவும் துக்கம் தாளாமல் உயிர் விட்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமாரியில் தக்களை அருகே காந்தி நகர் பகுதியை சேர்ந்த பள்ளியில் ஆசிரியாக பணிபுரிந்தவர் வேணுகோபால். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த வேணுகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஒருநாள் திடீரென மாரடைப்பு ஏற்பட மயக்கம் ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இதனை கேள்வியுற்ற தேரூர் பகுதியிலிருந்து வந்த அவரின் அக்கா, அவரை காண வந்து, தம்பியின் சடலத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுதுள்ளார்.
திடீரென இறந்த தம்பியின் மார்பில் மயங்கி விழவே, உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கியுள்ளனர். அப்போது தான் தம்பியின் மார்பில் சாய்ந்தபடி அக்காவும் உயிரிழந்தது தெரியவந்தது, இச்சம்பவம் அக்குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.
தூங்கினால் மூச்சு நின்று உயிரிழந்து விடும் மிகவும் ஆபத்தான அரிய வகை நோயால் பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுமி பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த ஸ்டார் போயர்(48) மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரூ போயர் (44) ஆகியோருடைய 6 வயது மகள் சேடி (sadie) மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் (Central Hypoventilation Syndrome) என்ற அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் ஸ்டார் பேசிய போது, சேடி(sadie) ஒவ்வொரு நாள் இரவும் எந்த நிமிடமும் இறப்பதற்கான வாய்ப்புடன் இருக்கிறாள், அவளது மூளை சுவாசிப்பது மற்றும் இதயம் துடிப்பதற்கு தேவையான சிக்னல்களை அனுப்ப மறந்து விடுகிறது.
சேடி மிகவும் உன்னிப்பாக எதையாவது கவனித்தால், அவள் சுவாசிப்பதை நிறுத்தி விடுவாள், இதனால் கார்பன் மோனாக்சைட் உடலில் தங்கி அவள் சோர்வடைந்து விடுவதுடன், அவளது உடலும் நீல நிறமாக மாறத் தொடங்கி விடும்.
ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் பெப்பா பன்றி(Peppa Pig) நிகழ்ச்சியை சேடி பார்க்கும் போது, இவ்வாறு அதை உன்னிப்பாக கவனித்து மூச்சு நின்று மயங்கி விடுவாள். நாங்கள் உடனடியாக அவளை வென்டிலேட்டரில் வைக்க நேரிடும்.
சேடி திடீரென தூங்கிவிட்டாலும் அவளது மூளை செயல்பாடுகளை நிறுத்தி விடும், இது சேடியின் உயிருக்கு ஆபத்தான நிலை என்பதால், கடந்த 6 வருடங்களாக சரியான தூக்கம் இன்றி சேடியை கவனித்து வருகிறோம் என அவரது தாயார் ஸ்டார் தெரிவித்துள்ளார்.
சேடி பிறந்த முதல் ஆறு மாதங்கள் சுவாச பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், இரண்டாவது மாதத்தில் சேடிக்கு மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த அரிய வகை நோய் காரணமாக அவள் மூச்சு விடுவதற்கு உதவியாக கழுத்தில் துளை போடப்பட்டு சுவாச குழாய் ஒன்று அவளது சுவாச பாதையில் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரிய வகையான நோய் பாதிப்பு இதுவரை 1000 பேருக்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
பகலில் சேடி மிகவும் சாதாரண குழந்தை ஆனால் அவள் தூங்கிவிட்டாள் சுவாசிப்பதை நிறுத்தி விடுவாள், மேலும் சேடி தன்னிச்சையான மற்றும் தனிமையை விரும்பும் குழந்தை, அவள் அறையில் செவிலியர்கள் யார் இருப்பதையும் அவள் விரும்ப மாட்டாள் என்று அவரது தாயார் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சேடியின் பெற்றோர், வென்டிலேட்டர் இல்லாமல் சுவாசிக்க உதவும் பேசர்களை (Diaphragmatic Pacers) சேடிக்கு பொருத்த தேவையான பண உதவியை திரட்டி வருகின்றனர்.
சேடியின் இந்த சிகிச்சைக்கு £1,60,000 பவுண்ட்கள் தேவைப்படுகிறது, இது அவளது வாழ்க்கையை மாற்றலாம் என்றும் குழந்தையின் தாயார் ஸ்டார் போயர் தெரிவித்துள்ளார்.
கனடாவை சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய மகளுடன் பேசிய பிறகு சுமார் 78 கிலோ உடல் எடையை குறைத்து அசத்தியுள்ளார். பொதுவாகவே பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் எடையை குறைக்க மிகுந்த போராட்டம் நடத்துகின்றனர்.
பலருக்கு அதற்கான உத்வேகமும் இருந்தும், சரியான மன ஊக்கம் மற்றும் அதனை தொடர்வதற்கான காரணமும் கிடைக்காமல் போய் விடுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கும் எண்ணம் கடைசி வரை பலருக்கு கனவாகவே போய்விடுகிறது.
ஆனால் கனடாவை சேர்ந்த தந்தை ஒருவர், தன்னுடைய மகளுடன் பேசிய பிறகு, தன்னுடைய விடாமுயற்சியால் 78 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். தன்னுடைய உடல் எடை குறைப்பு பயணம் குறித்து கனேடிய தந்தை ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “ஐந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய மகள் 4 வயது சிறுமியாக இருந்தாள், அப்போது விளையாட்டு மைதானத்தில் இருந்து வீடு வரை இருவரும் ஓட்டப் பந்தயம் வைத்து கொள்வோமா என்று கேட்டாள்,
“அந்த நேரத்தில் நான் 181 கிலோ எடை இருந்தேன், எனவே என்னை மன்னித்து விடு, தந்தையால் ஓட முடியாது என்று உனக்கு தெரியும் அல்லவா” என்று கூறினேன். அப்போது சோகத்தில் வாடிய எனது மகளின் முகம், எனக்குள் இதுவரை இல்லாத ஒரு தீயை எரிய வைத்தது.
அந்த ஒரு தருணத்தினாலேயே தற்போது 78 கிலோ உடல் எடையை குறைத்து இருக்கிறேன். இப்போது நாங்கள் அனைத்து நேரங்களிலும் ஓட்டப்பந்தயம் வைத்து கொள்கிறோம், ஒன்றாக விளையாட்டு மையத்திற்கு செல்கிறோம், ஜும் செல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதில் மகள் தந்தை இருவரும் விளையாட்டு மைதானத்தில் ஒன்றாக நேரம் செலவழிக்கும் தருணங்கள் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது 3.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரல் ஆகி வருகிறது.