“12 வருஷமா பல்லே தேய்க்கல.. பல்லு வெளக்காதீங்க..” : போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்திய மருத்துவர்!!

மருத்துவர்..

மவுத் வாஷ்பொதுவாக உடலில் வரும் சில நோய்களுக்கு காரணம் பல்லை சரியாக தேய்க்காததுதான் என சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனாலே பற்களை நாளுக்கு இரண்டு முறை துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் Brush brush brush your teeth twice a day என்று விளம்பரங்களும் வருகிறது. அதோடு பற்களை துலக்கும் முறை என்று சில உள்ளது. அதன் படி செய்தால் பல்லில் எந்தவொரு கோளாறும் ஏற்பாடாமல் இருக்கும்.

ஆரம்ப காலத்தில் மக்கள் வேப்பங்குச்சிகளை வைத்து விளக்கி வந்தனர். அதன்பிறகு சாம்பல், பற்பொடி, பேஸ்ட்கள் தற்போது திரவ வடிவலான மவுத் வாஷ் என காலப்போக்கில் மாறியது. நாம் பற்களை சுத்தமாக வைக்காவிடில், உடலில் கிருமி தொற்றுகள் ஏற்படும்.

அதோடு நம் உடலும் பலவீனமாக காணப்படும். ஏனெனில், பற்களை சுத்தமாக வைக்காவிடில் பல் பிரச்னை ஏற்படும்; அப்படி பிரச்னை ஏற்பட்டால் நம்மால் உணவு உண்ண இயலாது.

அப்படி உணவு உண்ணாவிடில் உடல் நலம் பாதிக்கப்படும். இது எவ்வளவோ பிரச்னைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. எனவேதான் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இங்கே ஒருவர் சுத்த மருத்துவர் என்ற பெயரில் ‘பல்லு வெளக்காதீங்க’ என்ற விளம்பரங்களை செய்து வருகிறார். மருத்துவர் என்று சொல்லும் புதின் சுரேஷ் என்பவர் இதுபோன்ற விளம்பரங்களை செய்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு இவர் ஒட்டிய போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் “சர்க்கரை முதல் கேன்சர் வரை அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெற பல்லு வெளக்காதீங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இணையத்தில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து புதின் சுரேஷை தனியார் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டியில் நெறியாளர் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இதுகுறித்து பேசிய அவர், “நான் 12 வருடமாக பல்லு விளக்கவில்லை. வெளியில் சென்று யாரிடமாவது பேசும்போது அருமையாக இருக்கும். இதற்கெல்லாம் பேஸ்ட்தான் காரணம்.

பேஸ்ட் என்பது முழுக்க முழுக்க கெமிக்கல். அதில் இருக்கும் கெமிக்கல் ஈறுகளுக்கு பாதிப்பு. அதிலே 2 சிகெரட்டில் இருக்கும் தன்மை இருக்கிறது. எனவே அது மிகவும் ஆபத்து. நான் அந்த போஸ்டரில் கூட ‘பல்லு வெளக்காதீங்க’ என்று பொதுவாகதான் கூறியுள்ளேன்.

நான் பல் விளக்காததை பற்றி எனது குடும்பத்திலும் என்னை கேட்க மாட்டார்கள். ஏனெனில் அது என்னுடைய விருப்பம். அதேபோல் அவர்களையும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். இப்போது கூட சொல்லவே, பல் விளக்காதீங்க என்று.. ஆனால் அவர்கள் அதனை கேட்கமாட்டார்கள். நானும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை.

நல்லது ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம்.. ஆரம்பத்தில் 4 ஆண்டுகள் இதனை நாங்கள் இலவசமாகதான் சொல்லிக்கொடுத்தோம். அதன்பிறகு வாடகை அனைத்தும் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டது. பின்னர்தான் ஒருவருக்கு 300 ரூபாய் என்ற கட்டணம் விதிக்கப்பட்டது.

அந்த கட்டணம் விதிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் பணத்தில் வாடகை செலுத்தி விட்டு, வருபவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு, மூலிகை டீ வழங்கப்படுகிறது. அதிலும் மீதி வருவதை நாங்கள் பிரித்து கொள்வோம். இதுவரை இதில் 5000-க்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர்.

ஈரோடு, கோவை, திருநெல்வேலி என பல இடங்களில் இந்த வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. சிலர் இதனை கூறும்போது ஒருமாதிரி பார்ப்பர்; சிலர் சரி என்று கேட்டுக்கொள்வர். இப்படி செய்வதால் எனக்கு பலமுறை மிரட்டலும் வந்துள்ளது. வகுப்பில் இருக்கும்போதே 5 பேர் கொண்ட கும்பல் என்னை மிரட்டியும் உள்ளனர்.

சுத்த மருத்துவம் என்றால் சுத்தம். 5 சுத்திகள் சைவர்கள் காலத்தில் இருந்தே உள்ளது. இதனை தொடர்ச்சியாக செய்தால் உடலில் எந்த நோயும் ஏற்படாது. நான் 12 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறேன்” என்றார்.

இவரது இந்த போஸ்டர் கடந்த 2018-ல் சென்னையில் ஒட்டப்படுவதற்கு முன்பே 2013-ல் ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்போதே இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

சுத்த மருத்துவம் என்ற பெயரில் இவரது இந்த முறை மருத்துவ ரீதியான எந்த கருத்துக்களுக்கும் உட்படாதவை. இப்போதும் கூட மருத்துவர்கள் அனைவரும் பல் விளக்க வேண்டும் என்றுதான் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடத்தையில் சந்தேகம்.. மனைவி, இரு பிள்ளைகளையும் கொ.ன்.று எ.ரி.த்.த க.ணவர்!!

ஜார்கண்ட்டில்..

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திரா ராம். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் மம்தா தேவி என்று பெ.ண்ணுடன் தி.ருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஆர்யன் குமார் மற்றும் யஷ் ராஜ் என்ற இரு கு.ழந்தைகள் இருந்துள்ளனர்.

இதற்கிடையே கணவர் விஜேந்திரா மற்றும் மனைவி இடையே நீண்ட நாள்களாக க.ருத்து வே.றுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ம.னைவிக்கு வே.று ந.பருடன் தொ.டர்பு இருப்பதாக ச.ந்தேகம் கொண்டு கணவர் விஜேந்திரா தொ.டர்ந்து து.ன்.பு.று.த்.தி தொ.ல்.லை கொ.டுத்து வ.ந்துள்ளார்.

த.னது குடும்பத்தாருடன் சே.ர்ந்து ம.னைவி மம்தாவை தீ.ர்த்துகட்ட ச.தி தி.ட்டமும் தீ.ட்டியுள்ளார். அதன்படி, கடந்த புதன்கிழமை அன்று தனது வீட்டில் வைத்தே ம.னைவியை கொ.லை செ.ய்துள்ளார் விஜேந்திரா.

இந்த கொ.லை.யை விஜேந்திராவின் கு.ழ.ந்.தை.க.ள் இ.ருவரும் பா.ர்த்து அ.ழத் தொ.டங்கியுள்ளனர். நா.ம் மா.ட்டிக்கொள்வோம் எ.ன்.ற அ.ச்.ச.த்தில் த.ன.து இ.ரு ம.கன்களையும் கொ.லை செ.ய்.த விஜேந்திரா, மூ.வரின் உ.ட.லை.யு.ம் கா.ட்டுப் ப.குதிக்குள் எ.டுத்து செ.ன்று தீ.வை.த்.து எ.ரி.த்.து.ள்.ளா.ர்.

அடுத்த நாள் காலை அப்பகுதிக்கு வந்த உள்ளூர் மக்கள் க.ரு.கி.ய நி.லையில் இருந்த மூ.ன்.று உ.ட.ல்.க.ளை பா.ர்த்து அ.தி.ர்.ச்.சி அ.டைந்து கா.வல்துறையிடம் பு.கா.ர் அ.ளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து போ.லீசார் ந.டத்திய தீ.வி.ர வி.சா.ரணையில் உ.ண்மை அ.ம்பலமானது. கு.ற்ற ச.ம்பவத்தின் முக்கிய நபரான விஜேந்திரா, அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோரை காவல்துறையினர் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டைத்தனர்.

சொத்து தகராறு : இரும்பு கம்பியால் மருமகளை கொலை செய்த மாமானார்!!

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி(28).

தங்கராஜின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து அவர் 2வது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இதற்காக தனது மகனிடம் வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது மகனிடம் வீட்டை கேட்டு தங்கராஜ் தகராறு செய்து வந்தார். ஆனால் இதற்கு தமிழரசன் மறுத்து வந்ததாக தெரிகிறது.

மேலும் தமிழரசன் மற்றும் மருமகள் முத்துமாரி ஆகியோர் சேர்ந்து தங்கராஜை 2வது திருமணம் செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளனர். இதனால் தங்கராஜ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

இதையடுத்து, தமிழரசன் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த தங்கராஜ், இரும்பு கம்பியை எடுத்து முத்துமாரி தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் தங்கராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து காவல் நிலையம் மட்டும் 108க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்கள் முத்துமாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் அங்கு திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மாமனாரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மருத்துவமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் உறவினர்கள் வீட்டிலிருந்த முத்துமாரி உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து தங்கராஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சியில் நாட்டு மக்கள்… வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கும் வரி!!

இலங்கையில்..

வீதி பராமரிப்பு நிதிக்காக அனைத்து வகையான டீசல் மற்றும் பெட்ரோலுக்கும் ஒரு லீட்டருக்கு பத்து ரூபாய் என எரிபொருள் வரியை விதிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளது.

இந்த வரியானது மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வருமான உரிமம் பெறும் போது அறவிட திட்டமிடப்பட்ட 100 ரூபாய்க்கு மேலதிகமாக இந்த வரி அறவிடப்படவுள்ளது.

இந்த வீதி பராமரிப்புக் கட்டணத்தின் மூலம் வருடாந்தம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 80 கோடி ரூபா எனவும் வீதிப் பராமரிப்புக்கான வருடாந்த செலவு சுமார் 2200 கோடி ரூபாய் எனவும் அமைச்சினால் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து ரூபாய் எரிபொருள் வரி விதிப்பதன் மூலம் வருடாந்தம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானத்தைப் பெற முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டும் இதே போல் எரிபொருள் வரி விதிக்கப்பட்டது, ஆனால் சில காரணங்களால் அது இறுதிக்கட்டத்தில் கைவிடப்பட்டது.

புதிய வரியை நிர்வகிக்க நிர்வாக குழு அமைக்க வேண்டும் என்றும் அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதிகள் மற்றும் மாகாண, நிர்வாக மற்றும் கிராமிய வீதிகளின் பராமரிப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவினை எட்டும் : கலாநிதி தனவர்தன குருகே!!

டொலர்..

அமெரிக்க டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவினை எட்டும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த மத விவகாரப் பிரதானி கலாநிதி தனவர்தன குருகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு டொலர் திரட்டிக் கொள்வதற்கான சரியான முறைகள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக உயர்வடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் மறைகரமாக ராஜபக்சர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் கைப்பாவையாக இயங்கி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் ஆட்சி செய்தாலும் ராஜபக்சர்களுக்கு தேவையான வகையில் ஆட்சி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலாநிதி குருகே, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கம் வாங்குபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!!

தங்கம்..

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் பதிவாகியுள்ளது. அதன்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 0.16 சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 2007.66 அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவின் நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 177,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 162,800 ரூபாவாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஹீரோவான இளைஞன் : தவிர்க்கப்பட்ட பாரிய புகையிரத விபத்து!!

இலங்கையில்..

ஹப்புத்தளைக்கும் இதல்கஸ்ஹின்னவிற்கும் இடையில் நேற்று இரவு பயணித்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் வீதியில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்து ரயில் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உடனடியாக செயற்பட்ட ஒருவர் வழங்கிய எச்சரிக்கை காரணமாக பாரிய விபத்தை தவிர்க்க முடிந்ததாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த விசேட ரயிலின் சாரதி உதவியாளர் எம்.பி.நிரோஷன் தெரிவித்துள்ளார்.

ரயில் தண்டவாளத்தின் மீது டோர்ச் லைட்டுடன் நின்ற ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ரயிலை நிறுத்துமாறு சைகை காட்டியதால் ரயிலை நிறுத்த முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் விபத்தை தடுக்க உதவிய காவலாளியான எச்.எம். விஜேரத்னனவின் துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு விழா!!

புலமைப் பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு..

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2022 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி 98% சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு கடந்த 06.04.2022 ( வியாழக்கிழமை) காலை 9.00 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் விழா ஏற்பாட்டு குழுவின் தலைவர் ந.ஜனகதீபன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் அவர்களும் முதன்மை விருந்தினராக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முதல்வர் ஆ.லோகேஸ்வரன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக கோட்டக்கல்வி பணிப்பாளர் ந.ச.செல்வரத்தினம், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினரும் வவுனியா தொழில்நுட்ப கல்லூரியின் விரிவுரையாளருமான ச.கிருஸ்ணகுமார், வவுனியா தெற்கு வலய ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் செ.வியகாந்த்தன் அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர்களான கு.முல்லைக்குமரன், த.சிறிகாந்தன், வை.விஜேந்திரன், திருமதி. ச.இரவீந்தின் ஆகியோரும் உதவி அதிபர்களான திருமதி.யோ.சிறிரங்கநாதன், தா.உதயராஜன் ஆகியோரும்,

ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள், மக்கள் வங்கியின் பிரதிநிதி, பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணம், பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

உயிருடன் இருப்பவரை பாடையில் கட்டி விநோத வழிபாடு.. ஆச்சரியமூட்டும் பின்னணி!!

சேலத்தில்..

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி அவரை ஆயிரக்கணக்கான மக்கள் இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு நடத்திய விநோத சம்பவம் ஒன்று தமிழகத்தின் சேலத்தில் இடம்பெற்றுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பலப்பட்டறை மாரியம்,காளியம்மன் கோவிலில் கிராம மக்கள் உடல் நலத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என வேண்டி திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அங்கு ஒருவர் இறந்த உடன் பாடை கட்டி இடுகாட்டு வரைக்கும் கொண்டு சென்று இறுதி சடங்கு நடத்தும் முறை அனைத்தும் விழாகவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம்- சந்தைப்பேட்டையைச் சேர்ந்த ஜெயம் மணி என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குணம் அடைந்தால் உயிரோடு இருக்கும் போதே இறுதிச் சடங்கு செய்து நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டியுள்ளார்.

அதன்படி அவர் குணமடைந்ததால் 7வது ஆண்டாக சவ வேடிக்கை நேர்த்திக்கடன் செலுத்தினார். பிணமாக வேடம் அணிந்த ஜெயமணிக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள்,கிராம மக்கள் சடங்குகளை செய்து பெண்கள் ஒப்பாரி வைக்க உறவினர்கள் பாடை கட்டி நடனமாடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

திருமணம் நடக்க, குழந்தை பேறு கிடைக்க கோவிலில் வழிபாடு நடத்திய உடன் பட்டாசு வெடித்தவாறு வீதி வீதியாக இறுதி ஊர்வலமாக இடுகாட்டிற்கு சென்று அங்கு கோழிகளை பலியிட்டு புதைத்துவிட்டு வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.

மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும், நோய்கள் குணமடையவும், திருமணம் நடக்க, குழந்தை பேறு கிடைக்க, குடும்ப சண்டைகள் நீங்க அம்மனை வேண்டி கொண்டு இந்த விநோத திருவிழா நடத்தப்படுகின்றதாம்.

கோர விபத்தில் நால்வர் வைத்தியசாலையில்!!

பஸ்யாலயில்..

பஸ்யால – கிரியுல்ல பிரதான வீதியின் மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இப்பகுதியில் 8 முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது தடுப்பான் செயலிழந்ததால் பூம் ட்ரக் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூம் ட்ரக்கின் தடுப்பான் செயலிழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. மேலும், டிரக்கின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் தமிழ் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் ஷாப்பிங் மாலுக்கு வெளியே படிக்கட்டுகளிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேவேந்திரன் சண்முகம் எனும் 34 வயது இளைஞர், கடந்த மாதம் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கான்கார்ட் (Concorde) ஷாப்பிங் மாலில் படிக்கட்டுகளிலிருந்து மற்றோரு நபரால் கீழே தள்ளிவிடப்பட்டார்.

இதனால் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, 10 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்லார். இந்த நிலையில், தேவேந்திரனை தள்ளிய முஹம்மது அஸ்ஃபரி அப்துல் கஹா (27) என்பவர் வேண்டுமென்றே படிக்கட்டிலிருந்து அவரை கீழே தள்ளியதாக்க கூறப்படுகிறது.

சந்தேக நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முஹம்மது அஸ்ஃபரிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படி அல்லது அபராதமும் விதிக்கப்படலாம்.

அதேசமயம் சந்தேக நபர் அவர் ஏற்கெனெவே வேறொரு குற்றத்திற்காக சிறையில் இருந்தவர் என்பதால், இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 178 நாட்கள் வரை கூடுதல் சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

இலங்கையில்..

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 647,221 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,840 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,940 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,990 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையில் கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு!!

இலங்கையில்..

எல்பிட்டிய எத்கதுர திவித்துரவத்த ஏரியில் உள்ள கட்டுபொல பயிர்ச்செய்கை வயலில் இளைஞன் ஒருவர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

திவித்துரவத்தை வீட்டில் வசிக்கும் சாந்தகுமார சரத் குமார என்பவரின் சடலமே நேற்று பிற்பகல் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்கள் குழுவுடன் சென்ற இந்த இளைஞன் இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் உற்ற நண்பனையும் காணவில்லை எனவும், அவரது தொலைபேசி இயங்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போன நண்பரின் வீட்டில் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் பாதி புதைக்கப்பட்ட இடத்தில் அவரது பணப்பை காணப்பட்டதாகவும், அதற்கமைய, சடலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தவத்தவின் பணிப்புரையின் பிரகாரம் எல்பிட்டிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் அனுர விஜேசிங்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வயிற்று வலியால் துடித்த 2 தோழிகள்.. சிகிச்சைக்கு சேர்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இரண்டு இளம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்திற்குட்பட்ட பட்ரமே கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டரு பாபு. அவரது மகள் ரக்ஷிதா. அதேபோல் இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ஆச்சார்யா. இவரது மகள் லாவண்யா.

இந்நிலையில் ஏப்ரல் 4ம் தேதி லாவண்யாவுக்கும், ரக்ஷிதாவுக்கும் கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரது குடும்பத்தினரும் அவர்களை மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லியாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் தோழிகள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்களா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது உடற்கூறு ஆய்வு அறிக்கைக்குப் பிறகு தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இரண்டு இளம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் எடை குறைக்க முயன்ற இளம்பெணுக்கு நேர்ந்த பரிதாபம்.. சிகிச்சையின் போது நேர்ந்த சோகம்!!

ஸ்காட்லாந்தில்..

சிக்கென சிண்ட்ரல்லா பேபியாக இருக்க எந்த பொண்ணுக்கு தான் ஆசை இருக்காது? அது உலகம் பூரா இருக்கிற பெண்களின் இயல்பான அக்கறையில் முக்கியமானது தானே? ஆனா, அதுக்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பதுல தான் பெண்கள் ரொம்பவே கவனமா இருக்கணும்.

பாவம்… 28 வயசு தான் ஆகுது. இத்தனைக்கும் பலரைப் போல அத்தனை பருத்த உடம்பெல்லாம் கிடையாது. ஆனாலும் உடல் எடையைக் குறைத்து, இடையைத் தூக்கலாக காட்ட சிகிச்சை எடுத்துக் கொண்ட துருக்கியைச் சேர்ந்த இளம்பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஷானன் போவ் (28). இவர் தன்னுடைய உடல் எடையைக் குறைப்பதற்காக, துருக்கியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். இவருக்கு இரைப்பை பேண்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சிகிச்சையில் உணவு உண்ணும் அளவைக் குறைக்க, வயிற்றின் மேல் பகுதியைச் சுற்றி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேண்ட் பொருத்தப்படுகிறது. இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள ஒரு மணிநேரம் மட்டுமே ஆகும்.

இந்நிலையில் இந்தச் சிகிச்சையின் போது அந்த இளம்பெண் உயிரிழந்து உள்ளார். எந்தச் சிக்கலால் மரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. போவின் காதலன், ரோஸ் ஸ்டிர்லிங், தனது காதலிக்கு ஃபேஸ்புக்கில் அஞ்சலி செலுத்தி உள்ளார். அதில் “என் தேவதையை தூங்கு, என்றென்றும் எப்போதும் உன்னை நேசிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார்.துருக்கியில் இறந்த ஒரு பிரிட்டிஷ் நாட்டவரின் குடும்பத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தாய் மீது கூலிப்படையை ஏவிய பள்ளி சிறுமி.. பிளாஸ்டிக் கவரில் சுற்றப்படட தாயின் உடல்!!

ரஷ்யாவில்..

தாயை கொன்ற வழக்கில் 14 வயது பள்ளி மாணவியை ரஷ்ய போலீசார் கைது செய்தனர். ரஷ்யாவின் மாஸ்கோ அருகே தாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தாயின் உடல் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்ட நிலையில் கிடந்தது.

15 வயது சிறுவனுடன் சேர்ந்து தன் ஒற்றைத் தாயை கூலிப்படையை ஏவி கொன்றதாக பள்ளிச் சிறுமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் செய்தித்தாள் தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுவன், சிறுமியின் குடும்ப வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தான், அவன் அவளுடைய காதலனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 3,650 பவுண்டுகளுக்கு (ரூ. 3,72,202) தாயை கொல்வதற்கு டீனேஜ் சிறார்கள், இரண்டு வாலிபர்களுக்கு பணம் கொடுத்ததாக ரஷ்ய போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தனது மகளுக்கு மோசமான பழக்கங்களை பழக்கி கொடுத்ததால் சிறுவனை ப்ரேக் அப் செய்யுமாறு தாய் கூற முயன்றதாக கூறப்படுகிறது. தொழிலில் ஒரு எஸ்டேட் முகவரான 38 வயதான அனஸ்டாசியா (கொலை செய்யப்பட்டவர்) வீட்டிற்கு வந்தபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் பிளாஸ்டிக் மற்றும் மெத்தையில் சுற்றப்பட்டு மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள பாலாஷிகா நகரில் குப்பைக் குவியலில் வீசப்பட்டது.

குப்பையில் கிடந்த உடலைக் கண்டு ஒரு செக்யூரிட்டி போலிசாருக்கு தகவல் கொடுத்தார். கொலை செய்யப்பட்டவர் முகம் முழுவதும் சிவந்து வீங்கியிருந்ததால், அவள் அடித்து கழுத்தை நெரிக்கப்பட்டாள் என்பது தெரிகிறது என காவலாளி கூறினார்.

இந்த கொலையை செய்ய சதித்தீட்டிய இருவரும் 14 மற்றும் 17 வயதுடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ரஷ்ய போலீசார் விசாரணையை துரிதபடுத்தியுள்ளனர்.

மகளும் பையனும் கூலிப்படையை தங்களுடைய பிளாட்டுக்குள் அனுமதித்ததாகவும், கொலையின் போது உடனிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுமியும் அவரது ஆண் நண்பரும் தனது தாயின் 3 லட்சத்தில் அதிகமான சேமிப்பில் வாழ எண்ணியதாக விசாரணைக் குழு கூறியது.

மகளின் தோழி ஒருவர் கூறும்போது, “அவள் தன் தாயை நேசித்த ஒரு நல்ல மகளாக இருந்தாலும், அவள் தன் தாயை வெறுப்பதாக பலமுறை பேசினாள்” என்றார். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் அதிகபட்ச தண்டனை, ஆரம்பத்தில் இளைஞர் சீர்திருத்த காலனியில் 10 ஆண்டுகள் பணியாற்றிவார் என்று தி சன் தெரிவித்துள்ளது.